Pictures are from newspapers
Written by London Swaminathan
Date: 12 JANUARY 2018
Time uploaded in London 19-33
Post No. 4610
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
நரி முகத்தில் முழித்தால் அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை உண்டு. அட! பனங்காட்டு நரி பணம் தருகிறதோ இல்லையோ நாய் பணம் தரும்; அதுவும் லண்டன் நாய் பணம் தரும்!
உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையங்களில் ஒன்று லண்டன் ஹீத்ரோ விமான நிலையம். அங்கு ஜெஸ்ஸி என்ற பெயருள்ள ஒரு நாயை கள்ளப் பணத்தைக் கண்டு பிடிக்கப் பயன்படுத்துகிறார்கள்; அதாவது பணம் அடிக்கப் பயன்படுத்தும் மையை (INK) முகர்ந்து பார்க்கும் சக்தி இதற்கு உண்டு. இதனால் யார் பணம் கடத்தி வந்தாலும் இது கண்டு பிடித்து வாலாட்டும். கடத்தல்காரர்களின் வாலை ஒட்ட நறுக்கிவிடும்.
ஹீத்ரோ விமான நிலையத்தில் ஐந்தே மாதங்களுக்குள் இது பத்து லட்சம் ஸ்டெர்லிங் பவுண்டு (Sterling Pounds) மதிப்புள்ள கரன்ஸி நோட்டுகளைக் கண்டு பிடித்துவிட்டது. இந்த நாயின் வயது — குட்டி நாயின்- வயது இரண்டுதான்!
ஒருமுறை சரக்குப் பிரிவில் அனுப்பப்பட்ட மூன்றரை லட்சம் பவுன்களைக் கண்டுபிடித்தது. யாரேனும் கைப் பைகளில் அதிகம் பணம் வைத்திருந்தால் கண்டு பிடித்துவிடும். அதற்கு நியாயமான விளக்கம் கிடைக்கவில்லை என்றால் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்படும்.
இது தவிர வேறு வழிகளிலும் கள்ளக் கடத்தல் பணம் கண்டு பிடிக்கப்படுவதால் கடந்த ஓராண்டில் மட்டும் 80 லட்சம் பவுன்களை பார்டர் ஸெக்யூரிட்டி ஃபோர்ஸ் (Border Security Force) கண்டுபிடித்துள்ளது. ஒருவர் பெருந்தொகையைக் கைப் பையில் கொண்டு சென்றார்; ஜெஸ்ஸி பார்த்து விட்டது; அந்தப் பயணியிடம் விளக்கம் கேட்டபோது லாட்டரிப் பரிசு விழுந்தது என்றார். அது பொய் என்று தெரிந்தவுடன் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெஸ்ஸியின் புகழ் பரவத் துவங்கிவிட்டது; லண்டன் பத்திரிக் கைகளின் முதல் பக்கத்தில் ஜெஸ்ஸிக்கு பிரதான இடம்;
நாய்க்கு அடித்தது யோகம்!
–சுபம்–