கழுதை வைத்தியம்! (Post No.7066)

WRITTEN by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 7 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 7-56 am
Post No. 7066

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Egyptian Beauty Cleopatra

கழுதை, நாய், புழு, பூச்சி– ஆகப் பிறக்கும் மாணவர் யார்? மநு பதில் (Post No.4971)

Guru Puja by Good Students

கழுதை, நாய், புழு, பூச்சி– ஆகப் பிறக்கும் மாணவர் யார்? மநு பதில் (Post No.4971)

 

Written by London Swaminathan 

 

Date: 2 May 2018

 

Time uploaded in London – 21-49 (British Summer Time)

 

Post No. 4971

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

மநு நீதி நூல்- Part 16 (Post No 4972)

 

மநு தர்ம ஸ்ம்ருதியின் இரண்டாவது பாகத் தொடர்ச்சி……

 

குரு பக்தி (Chapter Two)

Guru Puja by Vedic Pundits

 

2-175 குரு குல வாசத்தில் புலனடக்கி மறுமைப் பயன்களை அடைய பின்வரும் நோன்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும்

 

2-176.அதி கலையில் எழுந்திருக்க வேண்டும்; குளித்துவிட்டு காலையிலும் மாலையிலும் ஹோமம் வளர்க்கவேண்டும். முன்னோர்களுக்கு நீர்க்கடன் செலுத்த வேண்டும்; இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டும்

 

177,178,179. குருகுல வாசத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை: தேன், சந்தனம், பூ, இனிப்பு, தயிர், பால், நெய், மோர், எண்ணை தேய்த்துக் குளித்தல், கண்ணுக்கு மை இடல், செருப்பு, குடை, காமம், கோபம், கூத்து, பாட்டு, சூதாட்டம், வம்பளத்தல், கோள் சொல்லுதல், பெண்களை காமத்துடன் பார்த்தல், பொய் சொல்லுதல்,துரோகம் செய்தல், கொலை,  (இவை அனைத்தும் தவிர்க்கப்ப டவேண்டியவை. யாரையும் அடிக்கக் கூடாது; வாசனைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது

 

2-180. நோன்புக் காலத்தில் காம இச்சையால் விந்துவை வெளியேற்றக் கூடாது. பிரம்மசர்யத்தைக் காத்தல் வேண்டும்.தனியாகப் படுத்துறங்க வேண்டும்.

2-181.காம எண்ணம் இல்லாமலேயே விந்து வெளியேறினால் அதிகாலையில் குளித்துவிட்டு மூன்று முறை சூரியனை நோக்கி, எனக்கு என் புலன்களை அதன் கட்டுப்பாட்டுக்குள் வரச் செய் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 

2-182.குருவுக்குத் தேவையான நீர், தருப்பை, சாணம், மலர் ஆகியவற்றைக் கொண்டு தரவேண்டும்; பிக்ஷை எடுத்து உண்ண வேண்டும்.

 

2-183.வேதம், ஹோமம், சந்தியாவந்தனம் செய்யும் கிரஹஸ்தன் வீட்டில் பிக்ஷை எடுத்து சாப்பிட வேண்டும்.

 

2-184.குருவின் இல்லத்திலோ அவரது உறவினர் இல்லங்களிலோ பிக்ஷை எடுக்கக் கூடாது. வேறு எவரும் இல்லாத காலத்தே குரு அல்லது தாயாதி அல்லது அவரது உறவினர் இல்லங்களில் பிக்ஷை  எடுக்கலாம்

 

2-185. நல்ல அற ஒழுக்கம் இல்லாத ஊர்களில் மௌனமாகத் திரிந்து, பெரும் பாவிகள் அல்லாத அந்தணர் வீடுகளில் பிக்ஷை எடுக்கலாம்.

 

2-186.காட்டில் தேடிக் கொணர்ந்த சமித்துக் குச்சிக்ளை வெயிலில் அல்லது வீட்டுத் தாழ்வாரத்தில் உலர்த்தி சமிதாதானம் செய்ய வேண்டும்.

2-187.நோய் காரணமாக ஏழு நாட்கள் சமிதாதானம் முதலியவற்றைச் செய்ய முடியாவிட்டால்,  பிக்ஷை எடுக்க முடியாவிட்டால், நோன்பு முறிந்ததாக அர்த்தம்; அத்தகையோர் 11-ஆம் அத்தியாயத்தில் சொல்லப்பட்ட அவகீர்ணி நோன்பை நோற்க வேண்டும்.

 Salute to Gurus by good students

  1. பிக்ஷை எடுக்காமல் பிரம்மச்சாரிகள் பிறருடைய உணவை உண்ணக்கூடாது; அது நோன்பை முறிப்பதாகும்.

189.வேள்வி, திவசம் ஆகியவற்றுக்கு அழைத்தால் கள், மாமிசம் தவிர்த்த உணவுகளை முனிவர்கள் போல சாப்பிடலாம். அது நோன்பை முறித்ததாகாது.

 

  1. பிரம்மசாரிகள் தவிர வேறு யாருக்கும் இப்படிச் செய்ய அனுமதி இல்லை.

 

191.குரு கட்டளை இட்டாலும் இடாவிட்டாலும் வேதம் ஓதுதலும், குருவை வணங்குதலும் பிரம்மச்சாரிகளின் கடமை ஆகும்.

 

192.குருவை நோக்கி கை கூப்பி நிற்க வேண்டும்; அப்போது மனம் மொழி மெய் ஆகிய மூன்றும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

193.மேலாடைக்கு வெளியே வலக்கரம் தெரியுமாறு மேலாடை அணிய வேண்டும். குரு கட்டளையிட்டால் ம றைக்க வேண்டிய உறுப்புகளை மறைத்து அடக்கத்துடன் அமர வேண்டும்.

 

  1. குருகுல வாசத்தில் சுவையான உணவை நாடி ஓடக்கூடாது. அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது. குருவுக்குப் பின் தூங்கி முன் எழுதல் வேண்டும்.

 

195.குருவின் கட்டளைகளை நடந்து கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ,  கவனக் குறைவாகவோ கேட்கக் கூடாது. பதில் பேசக் கூடாது.

196.குரு உட்கார்ந்து இருக்கையில் மாணவன் நின்று கொண்டும், அவர் நிற்கும் போது அருகில் நின்றும்,   அவர் அருகில் வந்தால் அவரை நோக்கியும், அவர் நடந்தால் அவர் பின்னால் ஓடியும்,

  1. அவர் வேறு சிந்தனையில் இருந்தால் அவர் அருகில் சென்றும், அவர் படுத்துக் கொண்டிருந்தால் அவரை வணங்கி நின்றும், தொலைவில் இருந்து பேசினால் அருகே சென்றும் கட்டளையைக் கேட்டு பதில் தர வேண்டும்.

Guru’s Blessings

198.குருவின் படுக்கை, ஆசனம் ஆகியவற்றை விடத் தாழ்வாக இருக்குமாறு அமர வேண்டும். அவர் பார்வையில் படுமாறு விருப்பப்படி உட்காரக்  கூடாது.

199.அவர் இல்லாத போது அவர் பெயரை சொல்லுதலோ, மரியாதைக்கான அடைமொழி இன்றி வாத்தியார் என்று இளப்பமாகவும் பேசுதல் கூடாது; அவரைப் போல நடந்தும் பேசியும் பரிஹாசம் செய்யக் கூடாது.

200.குருவைக் கண்டிக்கும் இடத்திலும் குறை கூறும் இடத்திலும் காதுகளை மூடிக்கொள்ள வேண்டும் அல்லது அவ்விடத்தில் இருந்து அகல வேண்டும்.

201.குருவிடம் உண்மையாகவே பிழை இருந்தாலும் அதை விமர்சித்துக் கண்டிப்பவன் கழுதையாகவும், வேண்டுமென்றே தவறு கற்பிப்பவன் நாயாகவும், குருவின் உடமைகளை அனுபவிப்பவன் புழுவாகவும், அவர்  மீது பொறாமைப்படுபவன் பூச்சியாகவும் பிறப்பான்.

202.தான் ஒதுங்கிக்கொண்டு பிறரை ஏவி குருவுக்குப் பணிவிடை செய்யப் பணித்தல் கூடாது. தான் வாஹனத்தில் இருந்தால் இறங்கி அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும். அவர் மனைவியுடன் இருந்தால் அவரை அணுகக்கூடாது; தனக்கு கோபம் இருந்தால் குருவை அணுகக் கூடாது

 

எதிர்க் காற்றிலோ பின்னால் இருந்து வரும் காற்றிலோ குருவுக்கு முன்னர்  அமரக் கூடாது. அவர் கேளாத விஷயங்களை எடுத்துச் சொல்லக் கூடாது.

204.மாடு, குதிரை, பூட்டிய வண்டிகள், ஒட்டகம், படகு ஆகியவற்றில் செல்லுகையில் குருவுடன் அமரலாம்.

  1. குருவுக்கும் குருவானவர் வருகையில் அவரையும் குருபோலக் கருதல் வேண்டும்

தாய் தந்தையரே வந்தாலும் குருவின் அனுமதியின்றி பெற்றோர்களை வணங்குதல்  கூடாது.

 

Great Guru Swami Vivekananda

எனது கருத்து:

 

கழுதை, நாய், புழு, பூச்சியாகப் பிறப்பவன் யார்?

 

குருகுலத்தில் வசிக்கையில்  என்ன செய்யக்கூடாது?

 

குருவிடம் எவ்வளவு மரியாதை, பணிவு காட்ட வேண்டும்?

 

என்பன உலகில் வேறெங்கும் காணாத விஷயங்கள் ஆகும்.

 

திருப்பாவையில் நோன்புக் காலத்தில் பெண்கள் என்ன செய்ய மாட்டார்களோ அதை ஆண் மாணவர்களுக்கும் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Vedic Guru and Sishyas (disciples)

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவை 2

 

அந்தக்காலத்தில் மாணவர்களும் அலங்காரப் பிரியர்களாக இருந்தது கண்ணுக்கு மை இட்டுக்கொண்டது, சென்ட், perfume ‘பெர்ப்யும்’ பயன்படுத்தியது தெரிகிறது

தொடரும்……………

 

–Subham–

 

வரவர மாமியார் கழுதை போல ஆனாளாம்- பழமொழிக் கதை (Post No.4588)

வரவர மாமியார் கழுதை போல ஆனாளாம்- பழமொழிக் கதை (Post No.4588)

 

 

Written by London Swaminathan 

 

Date: 6 JANUARY 2018

 

Time uploaded in London- 8-18 am

 

 

 

Post No. 4588

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் — என்ற தமிழ்ப் பழமொழியைப் பலரும் அறிவார்கள்; ஆனால் இதன் பின்னாலுள்ள சுவையான கதையை அறிந்தோர் சிலரே. இதோ கதை:-

 

அம்மாஞ்சி என்ற பிராஹ்மணன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி வல்லாள கண்டி மற்றும் அவனுடைய அம்மா, மற்றும் மாமியார் ஆகியோருடன் கூட்டுக் குடும்பம்.

 

வல்லாள கண்டியின் பெயரைக் கேட்டாலேயே அவள் எப்படிப்பட்டவள் என்பதைக் கண்டுகொள்ளலாம்;  சரியான சிடுமூஞ்சி; அடங்காப்பிடாரி.

 

வீட்டில் தினமும் ரணகளம்தான்;  த்வஜம் கட்டிக் கொண்டு ஒருவருக்கொருவர் மோதல்; சண்டை சச்சரவு அன் றாடக் காட்சிகள்! குறிப்பாகச் சொல்லப் போனால் அதிகம் பாதிக்கப்பட்டது அம்மாஞ்சி பிராஹ்மணனின் அம்மாதான்

 

அசட்டு அம்மாஞ்சியால் ஒன்றும் சமாளிக்க முடியவில்லை. அவனுடைய அம்மாவும் பார்த்தாள்; இனி வீட்டை விட்டு ஓடுவதே ஒரே வழி என்று சிந்தித்தாள்; செயல் பட்டாள்;

 

ஆந்தைகள் அலறும், நாய்கள் ஓலமிடும் நள்ளிரவில் வீட்டை விட்டு ஓடினாள்.

 

 

‘ஓடினாள், ஓடினாள், கிராமத்தின் எல்லைக்கே ஓடினாள்’

அங்கே ஒரு காளி கோவில். அதில் ஓய்வு எடுத்தாள்.

 

நள்ளிரவுக்குப் பின்னர் ‘’கிலிங் கிலிங்’’ என்ற சப்தம். கிழட்டு அம்மணி நிமிர்      ந்து பார்த்தாள். அங்கே ஸ்வரூப சுந்தரியாக காளி தேவி காட்சி தந்தாள்.

‘அம்மணி! ஏது வெகுதூரம் வந்துவிட்டீர்? என்ன சமாச்சாரம்?’ என்று வினவ, கிழட்டு அம்மணியும் செப்பினாள் தன் துயரக் கதைகளை.

 

காளி மொழிந்தாள்:

கவலைப் படாதே! ஒரு மாம்பழம் தருகிறேன்; அதைச் சாப்பிடு; ‘’பெரிய மாற்றம்’’ ஏற்படும் என்றாள்.

அவளும் கவலையை மறந்து விடிவு காலத்தை (பொழுது விடியும் காலத்தை) எதிர் பார்த்துக் காத்திருந்தாள்.

 

இதற்குள்  அம்மாஞ்சி வீட்டில் ஒரே களேபரம்;அம்மாவைக் காணாது அம்மாஞ்சி- அசட்டு அம்மாஞ்சி–துடியாய்த் துடித்தான்

 

இதென்னடா கலிகாலம்! ‘பெத்த மனசு கல்லு, பிள்ளை மனசு பித்து’ என்று பழமொழி மாறிவிட்டதே.

 

ஓடினான் ஓடினான் ஊரின் எல்லைக்கே ஓடினான். அங்கே பராசக்தி அமர்ந்திருந்தாள்- அதான் அவனுடைய கிழட்டு அம்மா!

 

‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே. அன் புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே’,  என்று பாடி அவளை நமஸ்கரித்தான்.

வீட்டிற்குத் திரும்பி வருமாறு இறைஞ்சினான்.

அவளும் ‘நான் பெற்ற செல்வம்; நலமான செல்வம்’ என்று பாடி மாம்பழத்தைக் காட்டி சாப்பிடு என்றாள்.

அம்மா, அது அரிய பெரிய கனி; நீயே உண்ணு என்று சொல்லி அவளைத் தோளின் மீது போட்டுக்கொண்டான். அவளும் மாம்பழத்தைச் சாப்பிட்டாள்.

 

அம்மாஞ்சிக்கு கொஞ்சம் ஆச்சர்யம்; அம்மாவின் சொர சொர தோல் வழு வழு என்பது போல ஒரு உணர்வு; ஓஹோ! களைப்பின் மிகுதியால் வந்தது என்று எண்ணினான். மேலும் மேலும் குமரிப் பெண்ணின் கைகள் போட்ட உணர்வு தோன்,,,ரவே திரும்பி அம்மாவின் முகத்டைப் பார்த்தான; அவள் சொர்ண சுந்தரியாக மாறி ஸ்வர்ணம் போல ஜொலித்தாள்; வீட்டில் போய் இறக்கும் போது அவனுடைய கிழட்டு அம்மா  இளம் குமரி  ஆக மாறி இருந்தாள். அவனுக்கும் அவளுக்கும் மகிழ்ச்சி. எல்லாக் கதைகளையும் வல்லாள கண்டி கேட்டாள்; பொறாமைத் தீயில் சதித்திட்டம் தீட்டினாள்.

இரவு நேரத்தில் தனது அம்மாவை- அதாவது அசட்டு அம்மாஞ்சியின் மாமியாரை- வீட்டை வீட்டு ஓடும்படி துர் புத்திமதி சொன்னாள்; அவளும் இசைந்தாள் காளி கோவிலில் தஞ்சம் புகுந்தாள்; காளியும் தோன்றினள்; ஏன் அம்மா இங்கு வந்தாய் என்று கேட்க, அவளும் உரைத்தாள்– வீட்டில் துக்கம் தாளவில்லை என்று.

 

எதிர்பார்த்தது போலவே காளியும் மாம்பழம் தந்து உரைத்தாள்: இதைச் சாப்பிடு ‘’பெரிய மாற்றம்’’ வரும் என்று.

 

அந்தக் கள்ளியும் அவசரம் அவசரமாக மாம்பழத்தை உண்டாள். இதற்குள் வல்லாள கண்டி தனது அம்மாவைத் தேடிக் கண்டு பிடிக்கும்படி அம்மாஞ்சியை எஃகினாள். அவனும் விரைந்தான்.

மாமியாரைக் காளி கோவிலில் கண்டான்

கண்டேண் மாமியாரை! என்று ஆனந்தித்தான். தோளின் மீது சவாரியும் கொடுத்தான். அவள் தோல் சொர சொர என்று மாறிக்கொண்டு வந்து எடையும் கூடியது.

திரும்பிப் பார்த்தான்; சிரிப்பை அடக்க முடியவில்லை; மாமியார் அரைக் கழுதையாக மாறி இருந்தாள்; வீட்டிற்குள் ஓடிப் போய் அவளை தொப் என்று போட்டான்; அவள் முழுக் கழுதையாகக் காட்சி தந்தாள்

‘’கண்டேன் கண்டேன் கண்டேன்

கண்ணுக்கினியன கண்டேன்

ஊர் மக்கள் அனைவரும் வாரீர்

அரிய காட்சியைப்  பாரீர்’’ —

 

என்று ‘மனதுக்குள்’ பாடிக்கொண்டான்.

 

அம்மாஞ்சிக்கு சந்தோஷம்; அவன் அம்மாவுக்கும் சந்தோஷம்! ஆனால் மாமியாருக்கு துக்கம்; வல்லால கண்டிக்கு பெரும் துயரம்.

 

ஊர் முழுதும்– குறிப்பாக குழாய் அடியில் பெண்களிடையே ஒரே பேச்சு– வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்- என்று.

 

தமிழில் 20000–க்கும் மேலாகப் பழமொழிகள் உள; அவைகளில் சுமார் 2000 வரை எனது ‘பிளாக்’கில் சப்ஜெக்ட் வாரியாகக் – தலைப்பின் படி — கொடுத்துள்ளேன்; நிறைய பழமொழிக் கதைகளையும் தந்துள்ளேன்; ஆங்கிலத்திலும் வரைந்துள்ளேன்; கண்டு மகிழ்க- களிப்பு அடைக!!

 

-சுபம், சுபம் —

சமயோசித புத்தி! நறுக்கென பதில்கள்!! (Post No 2821)

politics-clipart

Translated by London swaminathan

 

Date: 18 May 2016

 

Post No. 2821

 

Time uploaded in London :– 8-32 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

(இந்த சம்பவங்கள் ஏற்கனவே இங்கு ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டன. மொழி பெயர்ப்பளர்- லண்டன் சுவாமிநாதன்)

அமெரிக்காவில் சென்ற நூற்றண்டில் பிரபல வணிகராக இருந்தவர் மார்க் ஹன்னா. அவர் அரசியலிலும் மிகவும் செல்வாக்கு பெற்றவர்.

 

ஒரு நாள் தனது கம்பெனியில் நடந்துசென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு இளம் தொழிலாளி இப்படிச் சொன்னார்:

“இதோ போகிறானே, நம்ம முதலாளி; இவன் நம்மைப் போல குடிசையிலும், நாம அவனைப் போல பங்களாவிலும் வாழனும்; நமக்கு அவனைப் போல நல்ல பணம் இருக்கனும்; அப்பத்தான் இந்தப் பயலுக்கு நாம படற கஷ்டமெல்லாம் தெரியும்”.

 

இது முதலாளி காதில் விழுந்திருக்காது என்று நினைத்து அவன் சொல்லிவிட்டான். ஆனால் இது மார்க் ஹன்னா காதிலும் விழுந்துவிட்டது.

 

மார்க் ஹன்னா தனது அலுவலகத்தில் உட்கார்ந்தபின்னர் அந்த இளைஞனை அலுவலகத்துக்கு அழைத்தார். அவன் நினைத்தான், “இன்றோடு நம்ம ‘சீட்டு’ கிழிந்துவிட்டது; வீட்டுக்கு அனுப்பப்போகிறார்” என்று.

முதலாளி: “நீ என்னைப் பற்றி சொன்னதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அது சரி, நான் உன் குடிசையில் வாழத் தயார்; நீ என் பங்களாவுக்கு வா; அந்தப் பணம் எல்லாம் எடுத்துக்கொள். அப்படிக் கிடைத்தால் என்ன செய்வாய்?”

இளைஞன்: “உங்களை முதலில் குடிசை வாழ்விலிருந்து உயர்த்தி மேலிடத்துக்கு வர வைப்பேன்”.

இதை கேட்டவுடன் முதலாளி மார்க் ஹன்னாவின் மனம் நெகிழ்ந்தது. உடனே அவனுக்கு சம்பள உயர்வு அளித்தார்.

 

சமயோசிதமான பதில்கள், ஒருவரின் அடி மனத்திலுள்ள நல்ல எண்ணத்தையோ கெட்ட எண்ணத்தையோ பளிச்செனக் காட்டிவிடும்.

 

Xxx

speech-clipart-1

கழுதை அல்ல; நீ ஒரு மிருகம்!

அமெரிக்க காங்கிரஸில் (பார்லிமெண்டின் ஒரு சபை) சாம்ப் கிளார்க் என்பவர் சபாநாயகராக இருந்த போது இந்தியானா மாகாண உறுப்பினர் ஜான்சன், மற்றொரு உறுப்பினர் பேசுகையில் குறுக்கிட்டு, “சீ, கழுதை, பேச்சை நிறுத்து” என்றார்.

 

கழுதை என்று திட்டுவது பார்லிமெண்டில் சொல்லக்கூடாத தகாத சொல் என்று அவர் உடனே ஆட்சேபனை எழுப்பினார். உடனே சபாநாயகர் அதைச் சபைக்குறிப்பிலிருந்து நீக்கினார். ஜான்சனும் மன்னிப்புக் கேட்டார். அப்படியும் விடாமல் தாக்குதலைத் தொடர்ந்தார்.

அந்த உறுப்பினரிடத்தில் கோளாறு இருக்கிறது; குறைபாடு இருக்கிறது என்றார்.

 

உடனே தாக்குதலுக்குள்ளான உறுப்பினர்,

என்ன கோளாறு, குறைபாட்டைக் கண்டீர்? தைரியம் இருந்தால் சொல்” – என்றார்.

உடனே ஜான்சன் சூடாக பதில் தந்தார், “அது எப்படி எனக்குத் தெரியும். மிருக வைத்திய சாலைக்குப் போய்ப் பார்; அவர் சொல்லுவார்” – என்றார்.

இப்பொழுது அந்த உறுப்பினரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முதலில் கழுதை என்பதை நீக்குவதில் வெற்றி பெற்றார். ஆனால் அவர் மிருக (கால்நடை) மருத்துவ மனைக்குப் போய்ச் சோதனைக்குள்ளாக வேண்டும் – என்பதை நீக்க வைக்க முடியவில்லை. அப்படியே சபைக் குறிப்பேட்டில் பதிவாகியது.

கழுதை என்று நேரடியாகத் திட்ட காங்கிரஸ் (அமெரிக்க பார்லிமெண்ட்) அனுமதிக்காவிட்டாலும் ஒருவரை மிருக வைத்தியசாலைக்குப் போய் உன்னைச் சோதித்துக் கொள் என்று சொல்லுவதை அனுமதித்தது. இதுதான் சமயோசிதம்! அரசியல்வாதிக்கே உரித்தான பேச்சுத் திறமை!!

–சுபம்–

 

 

 

ஆப்ரஹாம் லிங்கன் சொன்ன கதை: பதவிக்காக அலையும் கழுதைகள் (Post No.2630)

415-Abraham-Lincoln-Block-of-4

Written by london swaminathan

 

Date: 14 March 2016

 

Post No. 2630

 

Time uploaded in London :–  8-57

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(Already posted in English by me under the title: Every jackass wants an office;post no. 2628)

jackass (1)

அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்த ஆப்ரஹாம் லிங்கன் சொன்ன கதை; தமிழ் மொழியாக்கம்-லண்டன் சுவாமிநாதன்

 

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் மந்திரியுடன் சேர்ந்து வேட்டைக்குப் போனார்.

“மந்திரியாரே! இன்று மழை வருமா?”

“மன்னனே! இன்று கட்டாயம் மழை வராது.”

 

இந்த உரையாடலுக்குப் பின்னர், ராஜா, ஒரு விவசாயியைப் பார்த்தார். அவன் ஒரு கழுதை மீது சவாரி செய்து கொண்டிருந்தான். “என்ன, வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறாய்?” என்று ராஜா கேட்டார்.

“ஐயோ, ராஜா, மழை கொட்டப்போகிறதே! அதனால்தான் வேகமாகப் போகிறேன்” – என்றான்.

“அது எப்படி உனக்குத் தெரியும்?” என்று ராஜா கேட்டார்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. என் கழுதையின் காதுகளைப் பார்த்துத்தான் நான் கண்டு பிடித்தேன். இதோ பருங்கள்! காதுகளை நன்றாக நீட்டி வைத்துக்கொண்டுள்ளன. இப்படியிருந்தால் மழை கொட்டப்போகிறது என்று அர்த்தம்” – என்றான்.

 

ராஜாவும் , மந்திரியும் காட்டுக்குள் வேட்டையாடப் போனார்கள். மழை கொட்டித் தள்ளிவிட்டது. ராஜாவுக்குப் பயங்கர கோபம். மந்திரியைப் பதவி நீக்கம் செய்தார். அந்த விவசாயியைக் கண்டுபிடித்து, அவன் கழுதையை விலைக்கு வாங்கி, அதற்கு மந்திரி பதவி கொடுத்தார்.

 

எல்லோரும், ஆப்ரஹாம் லிங்கன் சொன்ன கதையைச் சுவையாகக் கேட்டனர்.

“அந்த ராஜா பெரிய தப்புச் செய்துவிட்டார்” ….. என்று லிங்கன் கதையைத் தொடர்ந்தார். எல்லோருக்கும் சந்தேகம். ராஜா என்ன தப்பு செய்தார்? கூட்டத்தில் ஒருவன் எழுந்து “ராஜா, என்ன தப்பு செய்தார்?” – என்று கேட்டான்.

“அவர் ஒரு கழுதைக்கு மந்திரி பதவி கொடுத்ததிலிருந்து, இப்பொழுது எல்லா கழுதைகளும் மந்திரி பதவிக்காக அலைந்து கொண்டிருக்கின்றன” – என்று போட்டாரே ஒரு போடு!

 

Xxx

 

jackass

கர்னல், இடத்தில் என்னைப் போடுங்கள்!

ஒரு ராணுவத்தில் பெரிய கர்னல் பதவி வகித்தவர் இறந்து போய்விட்டார். இன்னும் இறுதிச் சடங்கு கூட நடந்த பாடில்லை. அதற்குள் அந்த மாகாண கவர்னரிடம் அந்த பதவிக்காக பல மனுக்கள் குவிந்தன. இறுதிச் சடங்கு ஊர்வல நாளும் வந்தது. பெரிய ராணுவ மரியாதையுடன் ஊர்வலம் துவங்கியது. சவப்பெட்டிக்குள் கர்னலின் சடலம் இருந்தது. ராணுவ அதிகாரிகளில் ஒரு ‘முந்திரிக்கொட்டை’, கவர்னரிடம் போய், “கர்னலின் இடத்தில் (பதவியில்) என்னைப் போடுங்களேன்”. என்று சொன்னார். கவர்னருக்கு ஒரே கோபம்! “கர்னலின் இடத்திலா? அதோ, அந்த சவப்பெட்டியைத் துக்கிக்கொண்டு போகிறார்களே, அவர்களிடம் போய்க்கேளுங்கள்” – என்றார்.

-சுபம்-

 

 

 

 

 

இரண்டு சாமியார்கள் இடையே அடிதடி!

(I have already posted this article in English: London swaminathan)

இந்தக் கதையை ஆனதாஸ்ரமம் ஸ்ரீ சுவாமி ராம்தாஸ் கூறினார். ‘சுவாமி ராமதாஸ் சொன்ன கதைகள்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தில் இது உள்ளது.

 

“ இரண்டு சாமியார்கள் ஒரே நேரத்தில் ஒரு ஊருக்கு வந்தார்கள். ஒருவர் அரச மரத்துக்கு அடியில் உகார்ந்தார். பக்தர்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. மற்றொருவர் ஆலமரத்துக்கு அடியில் உகார்ந்தார். அங்கும் கூட்டம் குவிந்தது. கடவுள் நம்பிக்கை உடைய ஒருவருக்கு சாமியார்களைப் பார்கத்து ஆசி பெற வேண்டும் என்று ஆசை வரவே முதலில் அரச மர சாமியார் இடத்துக்குப் போனார்.

 

“சுவாமிஜி, இந்த ஏழை எளியேன் மீது உங்கள் அருள் பார்வை படவேண்டும” என்று இறைஞ்ச, அவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்றார். அத்துடன் நிறுத்தி இருக்கக் கூடாதோ?

“சுவாமிஜி, உங்களுக்குத் தெரியுமா? ஊரின் மேற்குப் பக்கத்தில் ஆல மரத்துக்கு அடியில் ஒரு சாமியார் வந்து அமர்ந்து இருக்கிறார். அங்கும் கூட்டம் அலை மோதுகிறது. உங்களுக்கு அவரைத் தெரியுமோ?”

சுவாமிஜி பட்டெனப் பதில் கொடுத்தார். “அவனா? அவன் ஒரு எருமை!” என்று இளப்பத்துடன் சொன்னார்.

 

அந்த பக்தன் ஒரு வைக்கோல் கட்டை வாங்கிக் கொண்டு ஆலமர சாமியாரிடம் சென்றான். வைக்கல் கட்டுடன் சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்தான்.

“பக்தா எழுந்திரு. உன் பக்தியை மெச்சினோம். இது என்ன வைக்கோல்  கட்டு. வயலிலிருந்து நேரடியாக வந்தாயா?” என்றார். “இல்லை, சுவாமிஜி. நீங்கள் எருமை அல்லவா? நீங்கள் சாப்பிடவே கொண்டு வந்தேன்” என்றான் பக்தன்.

வந்ததே கோபம் சுவாமிஜிக்கு! மடையா, மூளை பிறண்டுவிட்டதா? என்று கத்தினார்.

 

“மன்னிக்கவேண்டும் சுவாமிஜி. உங்களைப் போலவே ஊரின் கிழக்கு பக்கத்தில் ஒரு சுவாமிஜி வந்திருக்கிறார். அவரிடம் உங்களைப் பற்றிக் கேட்ட போது நீங்கள் எருமைச் சாமியார் என்று சொன்னார். அன்போடு உங்களுக்காகக் கொண்டுவந்தேன்” என்றான்.

“ஓ, அவன் சொன்னானா? அவன் கழுதை அல்லவா!” என்றார்.

 

பக்தன் மெதுவாக பின்னோக்கி வந்தான். நேராகக் கடைக்குப் போய் இரண்டு கிலோ பருத்திக் கொட்டை வாங்கிக் கொண்டு அரச மர சாமியாரிடம் வந்து நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து நமஸ்கரித்தான். “சுவாமிஜி ,உங்களுக்குப் பிடித்த பருத்திக் கொட்டை கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் உடனே சாப்பிட்டு என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதிக்க வேண்டும்” என்றான்.

“மடையா, நான் என்ன குதிரையா, கழுதையா ,மாடா? இதை எல்லாம் தின்பதற்கு? எடுத்துக்கொண்டு ஓடு” என்றார்.

“சுவாமிஜி , சொன்னால் கோபிக்க மாட்டீர்களே. நீங்கள் சொன்ன எருமைச் சாமியாரிடம் போனேன். உங்கள் பெருமை பற்றிக் கேட்டபோது அவன் ஒர் கழுதை என்று உங்களைப் பற்றிச் சொன்னார். அதனால்தான் இப்படிச் செய்தேன்”.

 

பக்தன், இதைச் சொல்லி முடிப்பதற்குள்,, எழுந்தார் கழுதைச் சாமியார். “எங்கே அந்த எருமை? அவன் இருக்கும் இடத்தைக் காட்டு”, என்று புறப்பட்டார்.

பக்தன், பயபக்தியுடன் அவரைப் பின் தொடர்ந்து ஆல மரத்துக்கு அழைத்துச் சென்றான். இருவரும் ஒருவரை ஒருவர் “ஏ, கழுதை, ஏ எருமை” என்று ஏசிய சப்தத்துடன் மின்னலும் இடிச் சப்தமும் தோன்றின.

 

பக்தன் என்ன முட்டாளா, பக்கத்தில் போக!! மரத்துக்குப் பின்னால் நின்று ரசித்தான்!! அவனுக்கோ ஒரே சிரிப்பு” !!

Contact : swami_48@yahoo.com