இந்தியாவின் வளர்ச்சி: கவலை அடையும் உலக நாடுகள்! (10,171)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,171

Date uploaded in London – 4 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்தியாவின் வளர்ச்சி: கவலை அடையும் உலக நாடுகள்!

ச.நாகராஜன்

இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக அழகுற இருப்பதைக் கண்டு உலக நாடுகள் கவலைப் படுகின்றன. தங்களின் ஆதிக்கம் உலகில் குறைந்து விடுமோ என்ற பயம் பல வளர்ச்சியுற்ற நாடுகளுக்கு இருக்கின்றன.

இந்த நிலையில் வரலாற்றைக் கவனித்தால் ஒரு உண்மை நன்கு நமக்குப் புரியும் – “எப்பொழுதெல்லாம் தர்ம வழியில் இந்தியா செழித்து ஓங்குகிறதோ அப்போதெல்லாம் அது தலை நிமிர்ந்து உலகிற்கு வழி காட்டி இருக்கிறது”

.

இந்தியாவை எல்லை ரீதியாக ஆக்கிரமித்துக் குழப்பம் விளைவிக்க சீனா துடிக்கிறது.

காஷ்மீரில் பிரச்சினை உருவாக்கி ஆதாயம் தேட நினைக்கிறது பாகிஸ்தான்.

தீவிரவாதத்தின் மூலம் ஆப்கானிஸ்தானை அக்கிரமாக ஆக்கிரமித்திருக்கும் தாலிபான்கள் தங்கள் பங்கிற்கு தீவிரவாத சக்திகளை இந்தியாவில் ஊக்குவிக்கின்றனர்.

கோவிட் வைரஸ் மூலமாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு இந்தியா சங்கடத்தில் ஆழ்ந்து விடாதா என்ற அரை மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் பல உலக நாடுகள் உள்ளன.

இந்து மதத்தை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டுமென்று மதமாற்ற வெறியர்களான கிறிஸ்தவ பாதிரிகள் இந்தியாவில் செய்யும் அக்கிரமத்திற்கு ஒரு எல்லையே இல்லை.

எல்லை ஓரமாக இருக்கும் மாநிலங்களில் இவர்களின் ஜரூர் வேலைக்கும் , கடற்கரை ஓரமாக உள்ள மீனவர் குடியிருப்புகளில் கன்னிக் குமரியிலிருந்து கடல் எல்லை நெடுகிலும் இவர்கள் செய்கின்ற ஜரூர் வேலைக்கும் கோடி கோடியாக பல நாடுகள் பணத்தை அள்ளிக் கொட்டுகின்றன.

மதமாற்றத்திற்கு பெண் ஆசை, மண் ஆசை, அதிகாரம், பதவி ஆசை, பண ஆசை என பல விதங்களிலும், ‘தீண்டாமை எங்களிடம் கிடையாது’ என்ற பொய் வார்த்தை மூலமும் கிறிஸ்தவ மத மாற்றப் பிரசாரம் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

பிரபல நடிகர்களுக்கு ஏராளமாகப் பணம் கொடுத்து இந்து மதத்தை இழிவு படுத்தும் காட்சிகள் ஒரு புறம்;

டைரக்டர்களுக்குப் பணம் கொடுத்து கிறிஸ்தவத்திற்கு ஆதரவாக காட்சி அமைக்கச் சொல்வது ஒரு புறம்;

விளம்பரக் கம்பெனிகளுக்குப் படம் கொடுத்து இந்து மத சின்னங்களை இழிவு படுத்தி விளம்பரத்தில் காட்டுவது ஒரு புறம்;

அழகிகளான நடிகைகளை கண்டபடி ட்வீட் செய்ய வைத்து இந்திய இறை ஆண்மை ஆட்சியை அசைக்க நினைப்பது ஒரு புறம்.

ஓய்வு பெற்ற அதிகாரிகள், கல்லூரி ஆசிரியர்கள் செல்லாக் காசான நிலையில் அவர்களுக்குப் பணம் கொடுத்து யூடியூப் மூலம் கண்டபடி பேசச் சொல்வது ஒரு புறம்:

இப்படி ஏராளமான வழிகளை மிஷனரிகள் கடைப்பிடிக்கின்றன.

தீவிரவாதிகளோ தமிழகத்தில் நன்கு காலூன்றி பிரிவினை வாதத்தை விதைக்க நினைக்கின்றன.

திராவிடம் என்று பேசும் நாத்திகர்களும், கொள்ளைக் கும்பலும் கோவில்களை அழித்து ஒழித்து அதன் சொத்துக்களை சூறையாட நினைக்கின்றன.

மொழி வெறியைத் தூண்டி விட்டு மொத்த இந்துப் பண்பாட்டை அழிக்க நினைப்பதும் இவர்களின் பல வழிகளில் ஒன்று.

உதாரணத்திற்கு ஒன்று மட்டும் காட்டலாம் இங்கு:-

ஒரு பேராசிரியர் – ரிடயர்டு ஆசாமி – விவேகானந்தரைப் பற்றிக் கூறுகிறார் மிக சீரியஸாக –

“விவேகானந்தர் கீதையைப் படிக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.

கால் பந்து விளையாடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.” இதை மாற்றி மாற்றி வெவ்வேறு விதமாக அவர் சொல்வதைப் பார்த்தால் போப்பை விட விவேகானந்தர் தான் கீதையின் முதல் விரோதி என்று தோன்றும். அவர் சொல்கின்ற தொனியில் திராவிட நாத்திகர்களின் தலைவர் விவேகானந்தர் தான் என்பதை இளம் பிஞ்சு உள்ளங்கள் நம்பி விடும்!

கீதையைப் படிப்பதை விட கால்பந்து விளையாடுங்கள்; உடலில் உரம் ஏற்றுங்கள்; அப்போது தான் கீதை நன்கு புரியும் ; எதிரிகளை ஒழிக்கலாம் -க்லைப்யம் மாஸ்ம கம: உத்திஷ்டோத்திஷ்ட பரந்தப – பேடித்தனத்தை அடையாதே; எழு. புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடு – இதுவே விவேகானந்தரின் மெஸேஜ். இதை மாற்றி கீதையைப் படிக்காதே கால் பந்து விளையாடுங்கள் என்று கால்பந்து வெறியராக அவரை மாற்ற முனைவது எவ்வளவு அயோக்கியத் தனம்.

புத்தர் கூறினார் -“நூறு ஆண்டுகள் சோம்பேறியாக, சுணங்கி அறிவற்றவனாக வாழ்வதை விட ஒரு நாள் வீரனாக அறிவு பெற்றவனாக வாழ்வது மேல்”

இதை இந்த முட்டாள் எப்படிச் சொல்வான்? புத்தர் அனைவரையும் ஒரு நாள் வாழ்ந்தால் போதும் ; நூறு ஆண்டுகள் வாழவே வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் என்றல்லவா திரித்துப் புளுகுவான். அதாவது ஒரு நாள் வாழ்ந்து அடுத்த நாள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். இந்த முட்டாள் பேராசிரியரிடம் புத்தர் இதுவரை மாட்டிக் கொள்ளவில்லை!!!

இந்த பேராசிரிய முட்டாளின் உரையைக் கேட்டு நான் கொஞ்சம் குழம்பிப் போனேன். ஒரு பேராசிரியர் விவேகானந்தரைப் பற்றி இப்படிப் பேசுவாரா என்று. பிறகு தான் பல யூ டியூப் பதிவுகளைப் பார்த்து வரும் போது இவர் ஒரு கிறிஸ்தவ வெறியர் என்று தெரிந்து கொண்டேன். அங்கு இவர் ‘மாட்டிக் கொண்டார்’- அவருக்கு வரவேண்டிய பணம் வரவே அதற்காகப் பேசுகிறார்!

இதே போல, ஊடகங்களில் இன்னின்னாருக்கு இவ்வளவு பணம் என நிர்ணயிக்கப்பட்டு கட்டிங் கரெக்டாக போகப் போக அவர்கள் பதிவிடும் பதிவுகள் காணொளியில் காண்பதற்குச் சகிக்க முடியவில்லை.

கருத்து சுதந்திரமென்ற பெயரில் எதை வேண்டுமானாலும் வெளியிடலாமா?

இதற்கு ஒரு கட்டுப்பாடு கிடையாதா? தவறு செய்பவர்களை இனம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு அமைப்பு சட்ட ரீதியாக கிடையாதா? இருக்கிறது என்றால் அவர்கள் செயல்பட வேண்டும்.

இல்லையென்றால் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

செகுலரிஸம் என்பது ஹிந்து விரோதம் என்ற நிலை மாற்றப்பட வேண்டும்.

இதுவே ஒட்டு மொத்த ஹிந்துக்களின் இன்றைய கோரிக்கை!

***

tags- இந்தியா, வளர்ச்சி, கவலை ,உலக நாடுகள்!

மஹாத்மா காந்திஜி : கவலை இல்லாத மனிதன் (Post 9921)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9921

Date uploaded in London –  2 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாத்மா காந்திஜி : தன்னைப் பற்றிய தவறான விமரிசனத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்!

ச.நாகராஜன்

1

மஹாத்மா பற்றிய தவறான விமரிசனங்கள் அவர் வாழ்ந்த காலத்திலேயே ஏராளம் உண்டு. அதைப் பற்றி அவர் கொஞ்சமும் கவலைப்பட்டதில்லை. அத்தோடு தனது பக்கம் பேசும் யாரையும் அவர் ஊக்குவிக்கவும் இல்லை. ஒருவரின் நடத்தையின் மூலமே அவரைப் பற்றிச் சமூகம் அறிய வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு.

சாதாரணமான ஒரு அடிமை சமூகத்தில் வெள்ளையர் ஆட்சியில் இந்த எதிர்பார்ப்பு சற்று அதிகம் தான் என்றாலும் அவர் அதைத் தான் எதிர்பார்த்தார்.

இரு சம்பவங்களை இங்கு காணலாம்.

வட்டமேஜை மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் கப்பலில் இங்கிலாந்துக்குச் சென்று கொண்டிருந்தார்.

கப்பலின் பெயர் எஸ்.எஸ். ராஜபுதனா.

கப்பலில் இருந்த பயணிகள் பெரும்பாலானோர் ஐரோப்பியரே. அவர்கள் கப்பலிலேயே ஒரு கிளப்பைக் கொண்டிருந்தனர். கிளப்பின் பெயர் வில்லிகோட்ஸ். அவர்களுக்கென ஒரு டைப் அடிக்கப்பட்ட பத்திரிகையும் கப்பலிலேயே வெளியாகிக் கொண்டிருந்தது. அதன் பெயர் ஸ்காண்டல் டைம்ஸ் (Scandal Times). பெயருக்குத் தகுந்தாற் போல அதில் வரும் செய்திகளும் ஸ்காண்டலாகத் தான் இருக்கும். மக்களைப் பற்றிய பல தவறான அபத்தமான செய்திகள் அதில் வெளியிடப்பட்டிருக்கும்.

காந்தியடிகள் கப்பலில் பயணம் செய்வதை ஒட்டி அவரைப் பற்றிய தவறான செய்திகளும் அதில் இடம் பெற்றன. இதில் சிறப்பான விஷயம் என்னவெனில் அவருக்கெனவே ஒரு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது தான்!

அந்த சிறப்புமலர் பிரதி ஒன்றை எடுத்துக் கொண்டு ஒரு ஆங்கிலேயர் காந்திஜியிடம் வந்தார்.

“மிஸ்டர் காந்தி! இந்த இதழில் அஞ்சலி உங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து உறுப்பினர்களின் நல்லெண்ணத்துடன் இதை உங்களுக்குத் தருகிறேன். நீங்கள் இதைப் படியுங்கள். படித்தபின் தங்களின் மேலான அபிப்ராயத்தைத் தெரியப்படுத்துங்கள்” என்றார் அவர்.

அவர் சாராயமும் அருந்தி இருந்தார். அவர், “மிஸ்டர் காந்தி! நான் எனது காபினில் இரண்டாவது கிளாஸ் அருந்து முன் உங்களது பதில் எனக்கு வேண்டும்” என்றார்.

மஹாத்மா அந்த பத்திரிகையை ஒரு நோட்டம் விட்டார். அது எப்படிப்பட்ட பத்திரிகை என்பதை ஒரு கணத்தில் அவர் புரிந்து  கொண்டார். அந்த “சிறப்பிதழில்” பேப்பர்களைக் கோர்த்து அதன் மேல் வைக்கப்பட்டிருந்த கிளிப்பை அவர் எடுத்துக் கொண்டார்.

பிறகு அந்தப் பத்திரிகையை அந்த ஆங்கிலேயரிடம் திருப்பிக் கொடுத்தார். திருப்பிக் கொடுக்கும் போதே, “ இதில் வேலைக்கு ஏற்ற தேவையான பொருளை நான் எடுத்துக் கொண்டேன். மீதியை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.

அந்த ஆங்கிலேயர் வெட்கத்தினால் தலை குனிந்து வந்த வழியே திரும்பினார்.

2

இன்னொரு சம்பவம் இது:

வருடம் 1928. ஷ்ரத்தானந்த் என்று ஒரு வாரப் பத்திரிகை வெளியாகிக் கொண்டிருந்தது. அதில் விநாயக் ராம் சவர்கார் எழுதிய கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அவர் காந்திஜியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

கான்பூரிலிருந்து வெளியாகும் ப்ரதாப் என்ற பத்திரிகை அந்தக் கட்டுரைக்குப் பதில் சொல்லும் விதத்தில் இரு தலையங்களை எழுதி வெளியிட்டது. அதில் அதன் ஆசிரியரான  கணேஷ் சங்கர் வித்யார்த்தி, மிகக் கடுமையாக சவர்க்காரை விமர்சித்திருந்தார். இதைப் படித்த காந்தியவாதிகளே சற்று திகைத்தனர். அப்படி ஒரு விமரிசனம் அது!  உடனே காந்திஜியின் தொண்டரான ராம்நாராயண் சௌத்ரி தனது அபிப்ராயத்தை எழுதி அந்த ஆசிரியருக்கு எழுதினார். அதை காந்திஜிக்கும் அனுப்பினார். உடனே ராம்நாராயணுக்கு காந்திஜியிடமிருந்து பதில் வந்தது.

அன்புள்ள ராம்நாராயண்,

உங்களது கடிதம் கிடைத்தது. ஷ்ரத்தானந்த் இதழில் என்னைப் பற்றி என்ன வெளியாகி இருக்கிறது என்பதை நான் கவனிக்கவில்லை. ஓரிரு இதழ்களை சில நிமிடங்கள் மட்டுமே நான் பார்வையிடுகிறேன். யாரும் எனக்காக பதில் சொல்லவேண்டும் என்பதில் எனக்கு விருப்பம் இல்லை. இந்தக் கடிதத்தை நீங்கள் விரும்பும் வண்ணம் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் ‘ப்ரதாப்’புக்கும் எழுதுகிறேன்.

 உங்கள்

மோஹன் தாஸ்

மஹாத்மா தன்னைத் தாக்கி எழுதுபவர்களைப் பற்றிச் சற்றும் கவலைப்படுவதில்லை. அதற்கு அவரும் பதில் எழுதுவதில்லை, மற்றவர்கள் எழுதுவதையும் விரும்புவதில்லை. ஒருவரின் நல் நடத்தையே அவருக்கான சிறந்த தற்காப்பு என்பது அவரது கொள்கை. அவரது நேரம் இவர்களுக்குப் பதில் சொல்லி வீணடிக்கப்படாமல் இன்னும் நல்ல விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அவர் விருப்பம். அப்படி எழுதுபவர்களை அவர் எப்போதுமே மன்னித்து விடுவார். அது அவரது பன்முகம் கொண்ட பரிமாணங்களில் ஒரு அம்சமே.

3

இந்த 2021இல் யூடியூபர்களைச் சற்றுப் பார்ப்போம். விஷமி ஊடகங்களைச் சற்று நோக்குவோம். அற்புதமான அறிவியல் முன்னேற்றத்தை எப்படி எல்லாம் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்த்தால் மனம் மிகவும் நோகிறது இல்லையா. பொய், பொய், பொய்! விஷமத் தனமான பிரசாரம்! தூற்றுதலுக்கு ஒரு எல்லையே இல்லை! ஆபாசமான வார்த்தைகள்!

நாம் எங்கே செல்கிறோம் – கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இப்படிச் செய்யலாமா? இதற்கு ஒரு முடிவை எடுக்க மக்கள் அரசைத் தூண்ட வேண்டுமல்லவா! இப்படிப்பட்ட ஊடகங்களை காந்திஜியின் பாணியில் ஒதுக்குவது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்! செயல்படுவோம்!!

***

Inded

Mahatma Gandhiji

Round Table conference, Travel by Ship, typed magazine, scandal times, Gandhiji removed Clip.

Savarkar, Shraddhanda magazine, Pratap magazine, Ram Narayan, Gandhiji – don’t defend me, time to be used for better purposes

Many Youtubers’ wrong presentation, Medias’ lies, Freedom of Expression should be safe guarded safely and not to be used wrongly

***

tags- மஹாத்மா காந்திஜி , கவலை,  தவறான , விமரிசனங்கள்

எலி கடிக்குது நெசவு நூலை ! கவலை கடிக்குது என் மனதை ! –ரிக்வேதம் ( Post No. 9474)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9474

Date uploaded in London – –9  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எலி கடிக்குது நெசவு நூலை ! கவலை கடிக்குது என் மனதை !

TRUE HINDUS AND TRUE TAMILS NEVER DELETE THE AUTHOR’S NAME AND BLOG’S NAME

BY LONDON SWAMINATHAN

உலகிலேயயே பழமையான நூல் ரிக்வேதம் ; ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்கா தர திலகரும் கி.மு 4500 க்கு முந்தையது என்று வான சாஸ்திர ரீதியில் காட்டினார்கள். வில்சன் முதலானோர் கி.மு.2000 என்றனர். மாக்ஸ்முல்லர் முதலில் கி.மு 1200 என்று சொல்லி மற்ற அறிஞர்களிடம் செமை அடி வாங்கிய பின்னர் இது கி.மு. 1500 க்கு முந்தையது; எவரும் இதன் காலத்தைக் கணிக்கவே முடியாது என்று சொல்லி ‘ஜகா’ வாங்கினார்.

துருக்கி-சிரியா எல்லையில் பொகஸ்கொய்  (Bogazkoy Inscription) என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட களிமண் படிவ கியூனிபார்ம் கல்வெட்டும் ரிக் வேத தெய்வங்களை அதே வரிசையில் குறிப்பிடுவதால் தொல்பொருட் துறை ஆதாரமும் கிடைத்துவிட்டது. இப்போது சந்தேகப் பேர்வழிகளும் , இந்து மத விரோதிகளும் கூட  கி.மு 1700 என்று கதைக்கத் துவங்கியுள்ளனர்!

ரிக் வேதம் அற்புதமான கவிதைத் தொகுப்பு ஆகும். அதிகமான உவமைகள் தாய்க்கும் தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள அன்பு, பாசம், நேசம் குறித்துப்  பேசுகின்றன .

ஒரு சில உவமைகளை இப்போது படித்து ரசிப்போம்.

***

புலவர்/ ரிஷி காதினன் விசுவாமித்திரன் பாடுகிறார் :–

நதிகள் இடையே உரையாடலாகவும் , இந்திரன் மீதான துதியாகவும் இந்தப் பாடல் அமைந்துள்ளது

“ஏய் , புலவா ! மறந்துவிடாதே;, நீ எங்களுடன் நடத்திய உரையாடலை மறந்து விடாதே! வருங்கால சந்ததியினர் இதைப் போற்றி பாடப்போகிறார்கள் .

“புலவரே , கவிதைகள் /சூக்தங்கள் மீதுள்ள உன் ஆர்வத்தை எங்களுக்கும் சொல் ; மனிதர்களுக்கு இடையில் எங்களைத் தாழ்த்தி, மட்டம்தட்டிப் பாடி விடாதே ; உனக்கு வணக்கம்” . இவ்வாறு நதிகள் சொல்கின்றன.

உடனே விசுவாமித்திரர் பாடுகிறார் …

நதி சகோதரிகளே! உங்களைப் பாடுகிறேன் ; அன்போடு கேளுங்கள்; நான் தொலை தூரத்திலிருந்து தேரில் வந்து இருக்கிறேன். நீங்கள் தாழ்ந்து வணங்குங்கள்  சுலபமாய் உங்களைத் தாண்ட உதவுங்கள் . உங்கள் நீரோட்டம் என் தேர்ச் சக்கரத்தின் அச்சுக்கும் கீழே இருக்கட்டும்.”

உடனே நதிகள் பதில் சொல்கின்றன

“புலவா , நீ சக்கரம் உடைய தேரோடு வந்திருப்பதை நாம் அறிவோம். . நீ தொலைவிலிருந்து வந்ததாகச் சொன்னதையும் நாங்கள் செவி மடுக்கிறோம்

நாங்கள் குழந்தைக்கு  பாலூட்டும் தாய் போலவும் , காதலன் கட்டி அணைக்க வசதியாக தாழத்தணியும் இளம் அழகி போலவும் உனக்கு உதவி செய்வோம்”.

ரிக் வேதம் 3-33-8/9

இப்படி உரையாடல் நீடிக்கிறது

இதுபற்றி வேதங்களுக்கு பாஷ்யம் எழுதிய சாயனர் ஒரு கதையும் சொல்கிறார் :-

இங்கே விபாஸா , கதுத்ரி என்ற இரண்டு நதிகள் பாடப்படுகின்றன. விசுவாமித்திரர் ஒரு மன்னர். அவர் நிறைய செல்வத்தை ஈட்டிக்கொண்டு இவ்விரு நதிகளும் கூடும்  இடத்திற்கு வந்தபோது இதைப் பாடினார் . இது கவிதை அழகு மிகவும் நிறைந்தது .

விபாஸ என்பது இப்போது பியாஸ் என்று அழைக்கப்படுகிறது. இதை வியாஸ நதியின் மரூஉ என்றும் செப்புவர். கதுத்ரி என்பது அமிர்தசரஸ் நகரின் தெற்கில் பாயும் நதியாக இருக்கலாம் என்றும் யூகிப்பர்

கவிதையை முழுதும் படித்து அனுபவியுங்கள் !

***

என் கருத்துக்கள் :–

என்ன அற்புதமான கவிதை ! இயற்கை பற்றிய வருணனையும் காதலன்-காதலி அன்பும், தாய்ப்பால் ஊட்டும் தாயின் அன்பும் உவமைகளாக வருகின்றன. எந்த அளவுக்கு   வேத கால இந்துக்கள் பாசமும் நேசமும் கொண்டனர் என்பதை இந்தப் பாடல் நமக்குத் தெரிவிக்கிறது.

அது மட்டுமல்ல; வேத கால இந்துக்களை நாடோடிகள் என்று எழுதிய அழுக்கு மூஞ்சிகளின் முகத்தில் கரி பூசுகிறது . எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கவிதையை “எதிர்கால மக்கள் பாடப்போகிறார்கள்” என்று நதியின் கூற்றாக புலவன் சொன்னது எவ்வளவு உண்மையாயிற்று! ஹெர்மன் ஜாகோபி, திலகர் கணக்குப்படி 6500 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தக் கட்டுரையை நாம் ரசித்துக் கொண்டு இருக்கிறோம். ‘பொய்யா நாவுடையோர் புலவர்’ என்பது மெய்யாகிப் போயிற்று . இதற்கு இணையான கவிதையை நான் எங்கும் படித்ததில்லை ( லண் டன் சாமிநாதனாகிய நான் 27,000+++ வரிக ளையுடைய 18 சங்க கால நூல்களையும், எட்டு ஆண்டுகளுக்கு, இரு முறை வாசித்துள்ளேன். அவற்றின் மீது நூற்றுக் கணக்கான கட்டுரைகளை இதே பிளாக்கில் எழுதியுமுள்ளேன்)

‘பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்றும், ‘அம்மையே அப்பா ! ஒப்பிலா மணியே’ என்றும் மாணிக்கவாசகர் பாடியது இந்த வேத மந்திரத்தைப் பயின்றதால் தானோ!

xxxx

ஐயோ ஐயோ எலி கடிக்குது நெசவு நூலை !

இன்னொரு கவிதையையும் பார்ப்போம். இது நெசவாளர் உவமையைத் தருகிறது. வேத கால இந்துக்கள் என்ன தொழில் செய்தனர் என்பது மிக நீண்ட பட்டியல். ஆனால் அவர்களை நாடோடி என்று சொன்னவர்களுக்கு ‘செமை அடி, மிதி அடி’ கொடுக்கும் பாடல் இது. கவலையில் வாடிய ஒரு புலவனின் புலம்பல். நம்மில் எவருக்கேனும் கவலை இல்லாத வாழ்வு இருந்து இருக்கிறதா ?

கவசன்  ஐலுசன் என்ற புலவர் விஸ்வே தேவர்களை — பல கடவுளரை — நோக்கிப் பாடுகிறார் …

ரிக் வேதம் 10-33-3

“என்னுடைய இருபுற விலா எலும்புகளும் சக்களத்திகளைப் போல ( இரட்டை மனைவி) நோவு கொடுக்கின்றன. என் மனமோ வேடனால் அச்சுறுத்தப்பட்ட பறவை போல படபடக்கிறது நோயும் பசியும், வெறுமையும் என்னை வாட்டுகின்றன.; கவலைகள் நூலைக் கடித்துக் குதறும் எலிகளைப் போல என்னை தின்கின்றன. இந்திரனே, மகவானே, சதக்ரதுவே! ; எங்களுக்கு நிறைய செல்வத்தைத் தந்து ஒரு தந்தை போல கவனித்துக்கொள்.” 

இதைப் படிக்கும்போது சங்க காலக் கவிதைகளில் வரும் வறுமையில் வாடிய பாணர்கள் நினைவுக்கு வரும். எல்லா காலங்களிலும் மனித குலத்தில் ஏற்ற தாழ்வுகள் இருந்தன. கிருஷ்ண பரமாத்மா மாளிகையில் வசித்தபோது, அவருடைய கிளாஸ்மேட்  classmate குசேலர்/ சுதாமா குடிசையில் வறுமையில் சோற்றுக்கு ‘லாட்டரி அடித்ததை’ , ‘தாளம் போட்டதை’ நாம் அறிவோம். அதே போல இந்த நெசவாளர்  காலனி குடும்பமும் வறுமையில் வாடிற்று ; அப்பாவைப் போல  என்னைக் கவனித்துக் கொள் என்ற உவமை அக்கால குடும்பங்களில் நிலவிய  பாச பந்தங்களை எடுத்துக் காட்டுகிறது .

இப்படி எவ்வளவோ கவிதைகள் உள்ளன  கவிதை வேட்டையைத் தொடர்வோம் .

நெசவாளர் இடையே, வறுமையில் வடிய புலவர் போலும் அல்லது அவர்களுடைய வறுமையை பிரதிநிதித்வப் படுத்த(to represent the poor weavers)  பாடினார் போலும் !

கவலைங்களும் வறுமையும் மறையட்டும்!!

–subham–

TAGS- எலி, கடிக்குது ,நெசவு, கவலை ,ரிக்வேதம், நூல், மனது ,

சிதையும், சிந்தையும்; சுவையான பாடல் (Post No.2828)

problems

சிதையும், சிந்தையும்; சுவையான பாடல் (Post No.2828)

 

Article written by London swaminathan

 

Date: 21 May 2016

 

Post No. 2828

 

Time uploaded in London :–  7-34 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

bee happy

நம் எல்லோருக்கும் தெரிந்த சொற்கள் சிதை, சிந்தை; இரண்டும் சம்ஸ்கிருதச் சொற்கள்; இவைகளை வைத்து ஒரு கவிஞன் அழகான பாடல் யாத்துள்ளான்.

சிதைத் தீ, ஒருவர் இறந்த பின்னர் வெறும் உடலை மட்டும்தான் எரிக்கும்; சிந்தனையில் சோகமிருந்தால் அது நீங்கள் உயிருடன் இருக்கும்போதே உங்களை எரித்துக் கொன்றுவிடும்!

சிதா சிந்தா சமாக்ஞேயா சிந்தா வை பிந்துநாதிகா

சிதா தஹதி நிர்ஜீவம், சிந்தா தஹதி சஜீவகம்

பொருள்:–

சிதை, சிந்தனை பற்றி அறிந்துகொள்ளுங்கள்; இரண்டும் அழிக்கக்கூடியதே. ஆனால் சிதைத் தீயைவிட, சிந்தனை ஒரு சொட்டு (கொஞ்சம்) அதிகம்தான். ஏனெனில் சிதைத் தீ, செத்த பிறகு நம்மை எரிக்கும்; சிந்தனையோ/ கவலையோ உயிருள்ளபோதே நம்மை அழிக்கும்!

 

கொன்றழிக்கும் கவலை: பாரதி

இப்போது இதை பாரதி பாடலுடன் ஒப்பிடுவோம்:–

 

சென்றது இனி மீளாது மூடரே! நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்

தீமை எல்லாம் அழிந்து போம், திரும்பி வாரா.

 

இதற்குப் பொருள் எழுதத் தேவையே இல்லை; தூய தமிழ்; எளிய தமிழ்; போனதைப் பற்றி கவலைப் படாதே; ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறந்த்து போல எண்ணி அனுபவி (பழைய கஷ்டங்களை எண்ணி கவலைப் படாதே; பயப்படாதே)

 

கவலை – ஒரு பகைவன்!

 

மொய்க்கும் கவலைப் பகை போக்கி

முன்னோன் அருளைத் துணையாக்கி

எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி

உடலை இரும்புக் கிணையாக்கி

பொய்க்கும் கலியை நான் கொன்று

பூலோகத்தார் கண் முன்னே

மொய்க்கும் கிருதயுகத்தினையே

கொணர்வேன் தெய்வ விதியிஃதே.

positive-quotes-61

பாரதி பாடல் முழுதும், வேதங்களைப் போல பாஸிட்டிவ்/ ஆக்கபூர்வ எண்ணங்களே இருக்கும்.

கவலையை ஒழித்து, உள்ளத்தையும் உடலையும் எஃகு போல வலிமைப் படுத்தி, கிருத யுகத்தையே உண்டாக்குவேன் என்று சொல்கிறான் பாரதி. அவன் உடல் எரிக்கப்பட்டுவிட்டது; ஆனால் அவனது சொற்கள் நமக்கு ஒளியூட்டுகின்றன.

 

சங்கடம் வந்தால்

ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு – கெட்ட

சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;

சக்தி சக்தி சக்தியென்று சொல்லி – அவள்

சந்நிதியிலே தொழுது நில்லு

ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு

சங்கடம் வந்தால் இரண்டு கூறு;

சக்தி சில சோதனைகள் செய்தால் – அவள்

தண்ணருளென்றே மனது தேறு.

 

கவலையைக் கொல்; அப்படியும் சங்கடம் நீடித்தால், ஏதோ ஒரு நன்மைக்காகத்தான் இதுவும் என்று உணருங்கள் என்கிறான்.

 thinking

சஞ்சலக் குரங்குகள்

கவலை, யோஜனை, பயம் ஆகியன குரங்குகள் போல ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குத் தாவித்தாவி நம்மை கலக்கும் என்பதால்,கலைமகளை வேண்டுதல் என்ற பாடலில் ‘சஞ்சலக் குரங்குகள்’ (மனம் ஒரு குரங்கு) என்ற அருமையான பதப் பிரயோகம் செய்கிறான். அவன் ஒரு சொல் தச்சன்!

 

கவலையைக் கொல்லுவோம்; எல்லா நலன்களையும் வெல்லுவோம்; அனைவருக்கும் இதைச் சொல்லுவோம்!

 

–சுபம்–