


Post No. 10,119
Date uploaded in London – 21 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
14 குழந்தைகள்! ஆங்கிலக் கவிஞர் , நாடக ஆசிரியர் ஜான் ட்ரைடன் (Post No.10,119)
எராஸ்மஸ் ட்ரைடன், மேரி பிக்கரிங் தம்பதிகளுக்குப் பிறந்த 14 குழந்தைகளில் மூத்தவர் ஜான் ட்ரைடன் JOHN DRYDEN. அந்தக் குடும்பத்தில் 14 குழந்தைகள்!. இங்கிலாந்தின் குசேலர் குடும்பத்தில் உதித்தவர்! 1660-ம் ஆண்டில் இங்கிலாந்தில் மீண்டும் முடியாட்சி MONARCHYY ஏற்பட்டது. அப்போது நாடகங்களுக்குப் புத்துயிர் கிடைத்தது. அந்தக் காலத்தில் ட்ரைடன் பிறந்தார்.
400 ஆண்டுகளுக்கு முன், ட்ரைடன் கிராப்புறத்த்தில் வாழ்ந்த செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தார் . அவர் லண்டனில் பள்ளிப்படிப்பையும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பையும் முடித்தார். விஞ்ஞானம், கலை, வரலாறு ஆகிய பாடங்களைப் பயின்றார். அவர் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது இங்கிலாந்தில் உள்நாட்டு யுத்தம் நடந்தது. அவர்களுடைய குடும்பத்தினர் முடியாட்சிக்கு எதிராகப் போரிட்டு, குடியரசை RUPUBLIC நிறுவிய ஆலிவர் க்ராம்வெல்லுக்கு ஆதரவு அளித்தனர். முதலாவது சார்லஸின் (CHARLES I ) மன்னர் ஆட்சிக்கு முடிவுகட்டியவர் ஆலிவர் க்ராம்வெல் OLIVER CROMWELL.
ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, நாட்டில் அமைதி நிலவுவதே முக்கியம் என்று கருதினார் ட்ரைடன். மன்னர் ஆட்சியை ஒழித்து குடியரசை நிறுவிய க்ராம்வெல் இற ந்தபோது , க்ராம்வெல் ஆட்சியைப் பாராட்டி கவிதை இயற்றினார்.அப்பொழுது ட்ரைடனுக்கு வயது 28. ஓராண்டுக்குப் பின்னர் மீண்டும் முடியாட்சி ஏற்பட்டு இரண்டாம் சார்ல்ஸ் மன்னராகப் பதவி ஏற்றார். அவரை வரவேற்றும் ட்ரைடன் கவிதை புனைந்தார்.
க்ராம்வெல் ஆட்சி கொடுங்கோலன் DICTATORSHIP ஆட்சியாக இருந்தது. பல நாடகக் கொட்டகைகள் மூடப்பட்டன. ஆனால் இரண்டாம் சார்லஸ் பதவி ஏற்ற பின்னர் நா டக மறுமலர்ச்சி காலம் தோன்றியது 1663ல் ட்ரைடன் தனது முதல் நாடகத்தைப் படைத்தார். கவிதை எழுதிக் கிடைக்கும் காசை விட நாடகம் எழுதிக் கிடைக்கும் காசுதான் அதிகம் என்பது அவருக்குத் தெரிந்தது . அடுத்த 20 ஆண்டுகளில் 20 நாடகங்களை எழுதிக் குவித்தார்.
அவர் இன்பியல், துன்பியல் நாடகங்கள் ஆகிய இரண்டு (TRAGEDIES AND COMEDIES) வகையிலும் எழுதினார். அவர் எழுதிய ALL FOR LOVE ஆல் ஃ பார் லவ் , ஆன்டனி அண்ட் க்ளியோபாட்ரா ANTONY AND CLEOPATRA வின் சோக முடிவைக் காட்டும் நாடகம் ஆகும். இது வெற்றிக்கொடி நாட்டியது. அதைவிட அதிகம் புகழ் பரப்பியது MARRIAGE A LA MODE மேரியேஜ் எ லா மோட் என்னும் இன்பியல் நாடகம் ஆகும். அது இன்றும் பலராலும் விரும்பிப் படிக்கப்படுகிறது. ஜான் ட்ரைடன் பல மொழிபெயப்புகளையும் செய்துள்ளார்.
பிறந்த தேதி – ஆகஸ்ட் 9, 1631
இறந்த தேதி – மே 1, 1700
வாழ்ந்த ஆண்டுகள் – 68
எழுதிய கவிதைகள், நாடகங்கள்
1659 – HEROIC STANZAS ON THE DEATH OF CROMWELL
1660 – ASTRAEA REDUX
1663 – THE WILD GALLANT
1667 – ANNUS MIRABILIS
1667 – SECRET LOVE
1672 – MARRIAGE A LA MODE
1677- ALL FOR LOVE
1681-82 ABSOLOM AND ACHITOPHEL
1687 – THE HIND AND THE PANTHER
ஜான் ட்ரைடன் எழுதிய கவிதைகளில் மிகவும் நீண்டது தி ஹிண்ட் அன்ட் தி பந்தர் THE HIND AND THE PANTHER கவிதையாகும் . இது சுமார் 2600 வரிகளைக் கொண்ட நீண்ட கவிதை. அவர் பிராடஸ்டண்ட் PROTESTANT கிறிஸ்தவ மதத்திலிருந்து கத்தோலிக்க CATHOLIC கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதை குறிக்கும் கவிதை இது. இதில் மூன்று பகுதிகள் உள்ளன. எல்லா மிருகங்களையும் கிறிஸ்தவ மதத்தின் உட்பிரிவுகளாக உருவகிக்கும் ALLEGORY உருவகக் கவிதை இது. இதில் ஹிந்த் என்னும் சொல் தூய வெள்ளையானது; மாறாதது; சாகா வரம்பெற்றது என்ற சொற்களை கதோலிக்க மதத்துக்கு உருவகமாகக் கொடுக்கிறார். பாந்தர் PANTHER என்னும் சிறுத்தையை சர்ச் ஆப் இங்கிலாந்துக்கு CHURCH OF ENGLAND (பிராடெஸ்ட்டண்ட் )உருவாக்கப்படுத்துகிறார். இது போல பல பிராணிகளை கிறிஸ்தவ மத உட்பிரிவுகளுக்குப் பயன்படுத்துகிறார்.
என்னுடைய கருத்து MY OPINION
THE HIND AND THE PANTHER SHOWS THE INFLUENCE OF INDIA ON JOHN DRYDEN . DRYDEN, PROBABLY, USED THE SANSKRIT FABLES PANCHATANTRA FOR HIS ALLEGORICAL POEM, WHICH IS THE LONGEST POEM IN HIS WORKS. HE USED THE WORD ‘THE HIND’ FOR PURE, IMMORTAL AND CHANGELESS. IT SHOWS THAT HE HAD HIGH OPINION AND RESPECT FOR HINDUISM, INDIA AND THE ANMAL FABLE PANCHATANTRA. IN HIS POEM ALSO, THE LION IS THE KING, WHICH S A HINDU CONCEPT.
THE HIND AND THE PANTHER கவிதை, பஞ்ச தந்திரக் கதையின் தாக்கத்தால் ஏற்பட்டது. அதனால்தான் ‘ஹிந்த்’ என்பதை தனக்குப் பிடித்த (CATHOLIC) மதத்துக்குப் பயன்படுத்துகிறார். இதை இந்தியா அல்லது இந்துமதம் பற்றிய அவருடைய நல்ல எண்ணத்தைக் காட்டுகிறது என்றே நான் நினைக்கிறேன் .


XXXXX SUBHAM

XXXX



tags- ஜான் ட்ரைடன், ஆங்கில நாடகம், கவிஞர், ஆலிவர் க்ராம்வெல், முடியாட்சி
You must be logged in to post a comment.