
tags — ஹிந்தி படப் பாடல்கள் – 38 , கவிதை
tags — ஹிந்தி படப் பாடல்கள் – 38 , கவிதை
Posted by Tamil and Vedas on May 16, 2020
https://tamilandvedas.com/2020/05/16/%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-38-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf/
Post No.7948
Date uploaded in London – – – 10 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ச.நாகராஜன்
சம்ஸ்கிருதத்தில் பல்லாயிரக்கணக்கான காதல் கவிதைகள் உள்ளன. அவற்றை ரசிக்காதோர் இல்லை – (சம்ஸ்கிருதத்தின் பால் வெறுப்பில்லாதவர்கள் நிச்சயம் படித்து அல்லது கேட்டு ரசித்திருப்பர்)
இந்தக் காதல் கவிதைகளின் தொகுப்புகள் பலவும் பல்வேறு அறிஞர்களால் தொகுக்கப்பட்டு வேறு இருக்கின்றன.
போஜ மன்னன் தான் எழுதிய சரஸ்வதி கண்டாபரணம் நூலில் சிறந்த பாடல்களை எடுத்துக் காட்டாகக் காட்டுவது வழக்கம்.
உக்தி என்ற கவிதை இலக்கணத்தை விளக்க வந்த போஜ ராஜன் அருமையான கவிதை ஒன்றை எடுத்துக் காட்டாக காட்டுகிறான்.
கவிதை இது தான் :
குஷலம் தஸ்யா ஜீவதி
குஷலம் ப்ருஷ்டாஸி ஜீவதீத்யுக்தம் |
புனரபி ததேவ கதயஸி
ம்ருதாம் நு கதயாமி யா ஸ்வசிதி ||
குஷலம் – அவள் நன்றாக இருக்கிறாளா? (Is she well and cheerful?)
தஸ்யா ஜீவதி – அவள் உயிரோடு இருக்கிறாள்! (She lives)
குஷலம் – நான் கேட்டது அவள் நன்றாக இருக்கிறாளா என்று! (“I ask you, “is she well?”)
ப்ருஷ்டாஸி ஜீவதீத்யுக்தம் – நான் பதில் சொன்னேன் – அவள் உயிரோடு இருக்கிறாள் என்று (I have replied , “She lives”)
புனரபி ததேவ கதயஸி – நீ சொன்னதையே திருப்பிச் சொல்கிறாய்! (You are saying again the same thing)
ம்ருதாம் நு கதயாமி யா ஸ்வசிதி – அவள் இன்னும் சுவாசித்துக் கொண்டிருக்கும் போது அவளை இறந்து விட்டாள் என்று சொல்லச் சொல்கிறாயா?
(“Am I to say she is dead when she still breathes?”)
(English Translation : A.A.R)
ஆர்யா சந்தத்தில் அமைந்துள்ள இது காலத்தை வென்ற ஒரு காதல் கவிதை.
தோழியிடம் அவன் காதலியைப் பற்றி தலைவன் ஆவலுடன் நலம் விசாரிக்கிறான்.
தோழியோ அவள் மூச்சு மட்டும் நிற்கவில்லை – உன்னைப் பிரிந்து என்பதை அழுத்தம் திருத்தமாக, “தஸ்யா ஜீவதி” என்று சுருக்கமாகச் சொல்லி விடுகிறாள்.
அவளுடைய எல்லா நலன்களும் அழிந்தொழிந்தன; நடைப்பிணமாக இருக்கிறாள் (கோமா ஸ்டேஜிலோ?!) – மூச்சு மட்டும் ஓடுகிறது என்று இப்படிச் சிறப்பாகச் சொல்வது காவிய சொற்குணங்களில் உக்தி என்ற பெயரை அடையும்.
இப்படி 24 சொற்குணங்கள் உள்ளன. 23ஆவதாக அமைவது உக்தி. எப்படிப்பட்ட மஹா ரஸிகனாக இருந்திருந்தால் போஜன் தான் இதை ரஸித்ததோடு காலம் காலமாக உலக மக்கள் அனைவரும் ரஸிக்கத் தக்க ஒரு உதாரணக் கவிதையாகக் காட்டி இருப்பான்?!
கவிதா ரஸிகர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல் போஜ மஹாராஜனின் சரஸ்வதி கண்டாபரணம்!
tags — போஜ மன்னன் , காதல், கவிதை
Posted by Tamil and Vedas on May 10, 2020
https://tamilandvedas.com/2020/05/10/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9c-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4/
WRITTEN BY London swaminathan
swami_48@yahoo.com
Date: 22 SEPTEMBER 2019
British Summer Time uploaded in London – 10-17 am
Post No. 7000
Pictures are taken from various sources;
beware of copyright rules; don’t use them without permission; this is a non-
commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 11,000.
உலகில் ஸம்ஸ்க்ருத மொழி பரவிய அளவுக்கு வேறு எந்த மொழியும் பரவியதில்லை என்பதற்கு கல்வெட்டுகளே சான்று பகர்கின்றன. அலெக்ஸாண்டர் படையெடுப்பால் பரவிய கிரேக்க மொழியையும் விட சம்ஸ்க்ருத மொழியின் தாக்கம் அதிகம். ஏனெனில் துருக்கியில் உள்ள பொகைஸ்கான் களிமண் படிவக் கல்வெட்டுகள் முதல் வியட்நாம் கம்போடியா, இந்தோநேஷியா வரை சம்ஸ்க்ருதக் கல்வெட்டுகளும் இலக்கியங்களும் உள்ளன. துருக்கி கல்வெட்டு முழுதும் சம்ஸ்க்ருதம் இல்லாவிடினும் 3400 ஆண்டுகளுக்கு முன்னர் வேத கால தெய்வங்களின் பெயரில் கைச்சாத்திட்ட களிமண் கல்வெட்டு உளது. கிக்குலி எழுதிய குதிரை சாஸ்திரம் ஸம்ஸ்க்ருத எண்களுடன் உள்ளது. ஆகையால் காலத்தால் முந்தியவை. அளவிலும் ஸம்ஸ்க்ருத்தைத் தோற்கடிக்க எந்தக் கல்வெட்டும் இல்லை. சம்பா எனப்படும் வியட்நாம், காம்போஜம் எனப்படும் கம்போடியா, சாவகம் எனப்படும் இந்தோநேஷியாவில் சுமார் 1000 ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் உள்ளன. உப்பு, புளி, எண்ணைக் கணக்கு எழுதிய சுமேரிய கல்வெட்டுகள் எண்ணிக்கையில் அதிகம் எனினும் அவை ஒரே இடத்தில் குவிந்துள்ளன. மேலும் இலக்கிய நயமற்றவை.
கல்வெட்டுகளில் உள்ள 800 ஸம்ஸ்க்ருத புலவர்களின் பெயர்கள் அடங்கிய புஸ்தகம் பற்றி சென்ற மாதம் எழுதினேன். இப்போது கம்போடியக் கல்வெட்டுகளில் இருந்து வடித்தெடுத்த அழகிய கவிதைகளைக் காண்போம். இவை சென்னை பல்கலைக்கழக ஸம்ஸ்க்ருதத் துறை ரீடர் சி.எஸ். சுந்தரம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம்.
இவை வழக்கமாகக் கல்வெட்டுகள் தரும் தகவலுடன் வேறு பல புராண இதிஹாசக் கதைகளையும் உவமைகளையும் தருகின்றன. மேலும் சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கம்போடியாவில் ஸம்ஸ்க்ருதம் புழங்கியதையும் புலமை பரவியதையும் காட்டும். காம்போஜ கல்வெட்டுகள் என்ற பெயரில் ஆர்.சி.மஜூம்தார் எழுதிய நூலிலிருந்து சுந்தரம் எடுத்தாண்டுள்ளார். ஆகையால் பக்க எண்கள் அந்தப் புஸ்தத்தைக் குறிக்கும். செம்மையான ஸம்ஸ்க்ருதத்தில் அமைந்த அற்புதக் கவிதைகள் அவை-
1.கம்போடிய மன்னர்களின் மேதாவிலாசம்
மன்னரின் மனதில் ஒரு பெட்டிக்குள் பொக்கிஷம் போல அறிவு பாதுகாக்கப்பட்டதாம். அதைக் காப்பாற்றும் பொருட்டு ஸரஸ்வதி தேவி வாயிலில் ( அம்மன்னரின் வாயில்) காத்து நிற்கிறாளாம். அதாவது மன்னர் கற்ற விஷயம் எல்லாம் தொலைந்து போகாமல் இருக்க சரஸ்வதி தேவி அருள் பாலிக்கிறாள்.
இதோ கவிதை:-
நயஸ்தம் ஞானதனம் யஸ்ய மனஹ கோசே ஸரஸ்வதீ
நித்யம் ரக்ஷிதுகாமேவ முகத்வாரே ஸ்திதா பவத் (P.63, v,23)
மன்னருக்குப் புகழ்மாலை
ஆதிபகவான் போல சாஸ்திரங்களிலும், சில்ப சாஸ்திரத்திலும், மொழி, லிபி, நாட்டியம், சங்கீதம், விஞ்ஞானம் ஆகியவற்றிலும் மன்னர் வல்லவராம்.
யஸ் ஸர்வசாஸ்த்ரேஷு சில்ப பாஷா லிபிஸ்வபி
ந்ருத்த கீதாதி விஞ்ஞானேஷ்வாதிகர்தேவ பண்டிதஹ (P.83, v.51)
XXX
மற்றொரு கவிதை சைவ சமயத்தில் மன்னருக்குள்ள ஈடுபாட்டைக் காட்டுகிறது. இதை வருணிக்கும் அழகே தனி.
தேன் போல சைவ சாஸ்திரத்தைப் பருகுவார். அதை புத்தி என்னும் மத்தைக் கொண்டு கடைவார். அதுமட்டுமல்லாமல் அதை எல்லோருக்கும் பகிந்தளிப்பார்
சிவசாஸ்த்ராம்ருதம் பீத்வா புத்திமந்தரேண விமத்ய யஹ
ஸ்வயம் ஞானாம்ருதம் பீத்வா தமயா அன்யானபாயயத் (P.153, v.20)
–SUBHAM — லோகா சமஸ்தா சுகினோ பவந்து
Posted by Tamil and Vedas on September 22, 2019
https://tamilandvedas.com/2019/09/22/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf/
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Compiled by London swaminathan
Date: 30 September 2015
Post No: 2200
Time uploaded in London :– 5-50 (காலை)
(Thanks for the pictures)
1920 ஆம் ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான செய்யுள் தொகுப்பில் வழக்கமான தமிழ் செய்யுட்களுடன் தனியாரின் சில கவிதைகளும் இடம் பெற்றன. அதில் ஒன்று சாலைகளில் காணப்படும் மைல் கல் பற்றியது. இப்பொழுது வெளிநாடுகளைப் போல உயரத்தில் தொங்கும் போர்டுகள் வந்துவிட்டதால் அடுத்த தலை முறைக்கு மைல் கல் என்றால் என்ன என்றே தெரியாது. ‘கூகுள்’ மூலம் கிடைத்த சில படங்களை இணத்துள்ளேன். அவை தற்காலத்தியவை. அந்தப் பழைய நூலுக்கும் இவைகளுக்கும் தொடர்பு இல்லை.
கவிதையை இயற்றியவர் ஆனைமலை ஸ்ரீ ஸ்ரீநிவாச முதலியார் . ஷேக்ஸ்பியரின் ரோமியோ அண்ட் ஜூலியட்டைப் பாடல் வடிவில் தமிழில் மொழிபெயர்த்தவர்!! இப்போது பெரிய பல்கலைக்கழகங்களும் சாதிக்க முடியாத பணிகளைப் பல தமிழ் ஆர்வலர்கள் 1900- 1940 ஆண்டுகளில் சாத்தித்துள்ளனர். புத்தகம் இருப்பிடம்: பிரிட்டிஷ் லைப்ரரி, லண்டன்.
–சுபம்—
Posted by Tamil and Vedas on September 30, 2015
https://tamilandvedas.com/2015/09/30/%e0%ae%ae%e0%af%88%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-1921-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/
Article No. 2042
Written by London swaminathan
Swami_48@yahoo.com
Date : 4 August 2015
Time uploaded in London : –13-04
கனவுகள் பற்றி எவ்வளவோ அதிசயச் செய்திகள் உள்ளன. கணித மேதை ராமானுஜம் கனவில் கடவுளிடமிருந்து பெற்ற கணித விஷயங்கள் முதல் பென்ஸீன் அமைப்பை கனவில் கண்ட விஞ்ஞானிகள் வரை எழுதிவிட்டேன். இப்பொழுது கனவில் கதைகளையும் கவிதைகளையும் பெற்ற ஓரிரு சம்பவங்களைப் பார்ப்போம்.
திருமதி அமோஸ் பிஞ்சொட் என்பவர் ஒரு கவிஞர். ஒரு நாள் அவருக்கு கனவில் ஒரு கவிதை வந்தது. அது பலதார திருமணம் பற்றிய கவிதை. கனவில் கவிதை வந்தவுடன் பக்கத்தில் மேஜை மீதிருந்த பென்சிலையும் பேப்பரையும் எடுத்து அவசர அவசரமாகக் கிறுக்கி வைத்தார். காலையில் எழுந்தபோது மறந்தே போய்விட்டார். பின்னர், மேஜை மீது காகிதக் கிறுக்கலைப் பார்த்தபோது அதை எடுத்துப் படித்தார். அசந்தே போனார்.
அவர் எழுதிய கவிதை
ஹோகமஸ் ஹைகமஸ்
மென் ஆர் பாலிகமஸ்
ஹைகமஸ் ஹோகமஸ்
விமன் ஆர் மானொகமஸ்
பாலிகமஸ்=பல மனைவியரை மனத்தல்
மானோகமஸ் = ஒருவரை மட்டும் மணத்தல்
“Hogamus Higamus
Men are Polygamous
Higamus Hogamus
Women Monogamous.
(நான் நினைவில் கண்டவை: மறுநாள் காலையில் எழுத வேண்டிய கட்டுரைத் தலைப்பு பற்றி எண்ணியவாறே நான் தூங்குவேன். இரவில் முழிப்பு வரும்போது திடீரென்று சில புதிய ஐடியாக்கள்- அதாவது அந்தக் கட்டுரைக்குத் தொடர்புடைய விஷயங்கள் – மனதில் தோன்றும். உடனே படுக்கைக்கு அருகில் வைத்திருக்கும் சிட்டையில் எழுதிவைப்பேன். காலையில் அவைகளைத் தொகுத்து எழுதுவேன். ஆனால் இதுவரை கனவில் எதுவும் கிடைக்கவில்லை!!)
மேலை உலகத்தில் மிகப்பெரிய உளவியல் நிபுணர்கள் என்று கருதப்படும் பிராய்ட், யங் ஆகியோர் கனவுகளைப் பற்றி சொல்லும் கொள்கைகள் சரியென்று தோன்றவில்லை. அடி மனதில் புதைந்து கிடக்கும் நிறைவேறாத ஆசைகள்தான் இரவில் கனவுகளாக பரிணமிப்பதாக அவர்கள் கூறுவர். ஆனால், புத்தர், மஹாவீரர் ஆகியோரின் தாய்மார்கள் கண்ட சுபக் கனவுகள் பற்றி அவர்களுடைய சாத்திரங்கள் சொல்லுகின்றன. இந்து மத நூல்களிலும் ரிக் வேத காலம் முதல் கனவுகளின் பொருள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.
கனவுகளின் விளக்கம் என்ற நூல் சம்ஸ்கிருததில் உள்ளது. இது வியாழ பகவான் எழுதியது. இது தவிர, பொன்னவன் எழுதிய கனா நூல் ஒன்றுளது. தமிழ் என்சைக்ளோபீடியாவான சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணியில் ஏழு பக்கங்களுக்கு கனவுகள் பற்றி விளக்கங்கள் உள்ளன.
கனவில் வந்த கதை
ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் என்ற கதாசிரியரை, ஆங்கிலம் படித்த எல்லோருக்கும் தெரியும். அவர் எழுதிய ‘ட்ரெஷர் ஐலண்ட்’, ‘கிட்நாப்ட்’ – முதலிய கதைகள் மிகவும் பிரசித்தமானவை. ஒரு நாள் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது பயத்தில் ஓலமிட்டார். அவருக்கு ஏதோ பயங்கரக் கனவு எற்ற்பட்டிருக்கிறது என்று எண்ணி, அவருடைய மனைவி, லூயிஸைத் தட்டி எழுப்பினார். அவருக்கு ஒரே கோபம்; ஏன் என்னை எழுப்பினாய்? அருமையான ஒரு பயங்கரக் கதையைப் பார்த்துக்கொண்டிருந்தேன் – என்று சொல்லி திட்டினார். பின்னர் இதை “டாக்டர் ஜெகில், மிஸ்டர் ஹைட்” என்ற கதையாக எழுதினார்.
லிங்கன் கண்ட கனவு
அமெரிக்காவின் 16ஆவது ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன் ஒரு கனவு கண்டது பற்றி அவரே எழுதிவைத்து இருக்கிறார்: “நான் ஒரு பெரிய சபையில் பலரைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். யாரோ ஒருவர் என்னைப் பார்த்து “இவனைப் பார்த்தால் சாதாரண ஆசாமி போலத் தோன்றுகிறது” – என்றான். நான் உடனே அவனைப் பார்த்து சொன்னேன்: “நண்பரே! கடவுளுக்கு சாதாரண ஆசாமிகளைத்தான் அதிகம் பிடிக்கும். அதனால்தான் அவர், சாதாராண மனிதர்களை அதிகம் படைத்திருக்கிறார்.”
கனவில் வந்த எலிகள்
ஒரு ஜெர்மன் இளவரசனுக்கு எலிக் கனவு வந்தது. அந்தக் கனவில் மூன்று எலிகள் வந்தன. ஒன்று கொழுத்த எலி; இன்னொன்று நலிந்து மெலிந்து போன எலி; மூன்றாவதோ குருட்டு எலி. அவருக்கு இந்தக் கனவின் பொருளை அறிய ஆசை. உடனே எல்லோரும் “ஜிப்ஸி இன ஆரூடக்காரியிடம் கேளுங்கள்” – என்று சொன்னார்கள். அவரும் ஜிப்ஸி குறத்தியிடம் குறி கேட்டார். அந்தப் பெண் சொன்னாள்: “கொழுத்த எலி இருக்கிறதே – அதுதான் உன்னுடைய பிரதம மந்திரி, மெலிந்த எலி இருக்கிறதே – அது உன் நாட்டு மக்கள்; மூன்றாவது குருட்டு எலி யார் தெரியுமா? அது நீயே தான்!!
செவ்விந்தியர் கனவு
ஒரு 500 ஆண்டுகளுக்கு முன் வரை உலகிலேயே பணக்கார நாடு இந்தியாதான். இதனால் உலகம் முழுதுமுள்ள பேராசைக்காரர்கள் எல்லாம் இந்தியாவை நோக்கி 2000 ஆண்டுகளாகப் படை எடுத்து வந்தனர். இப்படிப் புறப்பட்ட ஒரு ஆள்தான் கொலம்பஸ். அவர் கண்டுபிடித்ததோ மேற்கிந்தியத் தீவுகள். அதை இந்தியா என்று நினைத்து அனைவரையும் இந்தியர் என்று பெயரிட்டார். இப்படிப்பட்ட அமெரிக்க இந்தியர்களுக்குப் பொறுப்பாக சர் வில்லியம் ஜான்சன் என்பவரை பிரிட்டன் நியமித்தது. அப்பொழுது அமெரிக்காவின் ஒரு பகுதி அவர்களிடம் இருந்தது.
சர் வில்லியம் நல்ல ஜரிகை வேலைபாடுமிக்க உடைகளை இங்கிலாந்திலிருந்து தரவழைத்திருந்தார். இந்தியாவில் பல பழங்குடி மக்கள் இருப்பது போலவே, இந்தியாவைவிடப் பெரிய நாடான அமெரிக்காவில், நிறைய பழங்குடி இன மக்கள் இருக்கின்றனர். அதில் ஒரு இனம் மொஹாக் இனப் பழங்குடியினர். அவர்களின் தலைவன் ஹென் ட் ரிக்.
வில்லியமைச் சந்திக்கவந்தபோது அவரும் இந்த வெளிநாட்டு உடைகளைப் பார்த்து புகழ்ந்துவிட்டுச் சென்றார். சில நாட்களுக்குப் பின் திரும்பிவந்து தான் கண்ட கனவை வில்லியமிடம் கூறினார். அந்தக் கனவில், விலையுயர்ந்த வெளி நாட்டு உடைகளில் ஒன்றை வில்லியம் தனக்குக் கொடுப்பது போல கனவு கண்டதாகச் சொன்னார். உடனே சர் வில்லியமும் குறிப்பறிந்து ஒழுகினார். ஒரு உடையை அந்த செவ்விந்தியத் தலைவரிடம் கொடுத்தார். அவரும் மகிழ்ச்சியுடன் விடை பெற்றார்.
சில காலம் கழிந்தது. ஹென் ட் ரிக் மீண்டும் வில்லியமைக் காண வந்தார். இப்பொழுது வில்லியம், தான் கண்ட ஒரு கனவை ஹென் ட் ரிக்கிடம் சொன்னார். மோஹாக் நதிக்கரையில் விலை மதிக்கமுடியாத 5000 ஏக்கர் நிலப்பரப்பை பழங்குடி இனம் தனக்குக் கொடுப்பதாகக் கனவு கண்டதாகச் சொன்னார். உடனே அந்த இனத்தின் தலைவன் கொஞ்சமும் தயங்காமல், 5000 ஏக்கர் நிலப்பரப்பை வெள்ளைக்காரரிடம் கொடுத்துவிட்டார்.
போகும்போது அவர் சொன்னார்: வில்லியம், இனி உங்களைக் கனவில் காணும் ஆசையே போய்விட்டது. ஏனெனில் உங்கள் கனவெல்லாம் கொஞ்சம் ஜீரணிக்கக் கடினமானவை”.
(வெள்ளைக்காரனிடம் விலையுயர்ந்த ஆடையை வாங்கியதால் 5000 ஏக்கர் விலையுயர்ந்த நிலப்பரப்பை இழந்தது மோஹாக் இனம்! வில்லியம் கண்ட கனவு, உண்மைக் கனவோ பொய்க் கனவோ, யாம் அறியோம் பராபரமே!)
My previous Research Articles on Dreams:
Role of Dreams in Tamil Saivite Literature (posted on July 4, 2013)
Do our Dreams have Meaning? (Posted on December 29, 2011)
God’s Note Book (posted on March 16, 2014)
Strange Dreams, posted on 27 July 2015Inauspicious Dreams: Dreams in Vedas and Upanishads, Posted on 28th July 2015
Vedic Echo in Sumerian and Egyptian Concept of Dreams, Posted 31 July 2015
–சுபம்—
Posted by Tamil and Vedas on August 4, 2015
https://tamilandvedas.com/2015/08/04/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5/
By ச.நாகராஜன்
Post No.1217; Dated 6th August 2014.
காவியத்தின் பயன்
பாரத தேசம் வலியுறுத்தும் புருஷார்த்தங்கள் நான்கு: தர்ம, அர்த்த, காம மோக்ஷம். இலக்கியமோ, இசையோ, நடனமோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைவனை அடைய வழி வகை செய்ய வேண்டும்; செய்யும் என்பது அறநூல்கள் நமக்குத் தரும் அறிவுரை, அன்புரை! அறத்தின் அடிப்படையில் அமைந்த வாழ்க்கையின் படி வாழ்ந்து பொருளை ஈட்டி இன்பம் துய்த்தால் வீட்டுப் பேறு தானே வந்து எய்தும் என்ற அடிப்படையிலேயே திருவள்ளுவர் முப்பாலை வகுத்தார் போலும்!
இறைவனுடன் ஒன்றச் செய்யும் கவிதைகள்
முதல் காவியமான வால்மீகி ராமாயணத்தில் அதைப் படித்தவர் தீர்க்க ஆயுள், செல்வம் உள்ளிட்ட அனைத்தையும் பெற்று முக்தியையும் அடைவர் என்று காவியத்தின் பயனாக இறுதியில் சொல்லப்படுகிறது.
ஒரு லக்ஷம் ஸ்லோகம் அடங்கிய வியாஸர் வகுத்த மஹாபாரதத் தைப் படிக்க முடியாதவர்கள் அதன் இறுதியில் வரும் பாரத ஸாவித்திரியில் உள்ள நான்கு ஸ்லோகங்களைச் சொன்னாலேயே பெரும் பேறு பெற்று பரப்ரஹ்மத்தை அடைவர் என்று வியாஸர் அருளியிருக்கிறார். அப்பர் ஞானசம்பந்தர் உள்ளிட்ட மகான்களின் பாடல்களிலும் கடைசியில் அதைக் கூறுவதால் ஏற்படும் பயன்கள் தெள்ளத் தெளிவாக் கூறப்பட்டுள்ளது. உலகின் வேறு எந்த இலக்கியத்திலும் இல்லாத அதிசய வேறுபாடு இப்படி பலனைச் சொல்லி நம்மை ஊக்குவிப்பது தான்!– முக்கியமாக இறைவனை இப்படி இலக்கியம் மூலம் அடைய முடிவதை வலியுறுத்துவது தான்!
கவிஞனாகத் தகுதிகள்
காவியம் இயற்றப் புகும் ஒரு கவிஞன் சகல கலைகளிலும் வல்லவனாக இருக்க வேண்டும். மனிதனை உன்னதமான உயரத்திற்கு ஏற்ற வல்லவனாக இருக்க வேண்டும், ஒவ்வொரு சொல்லின் முழு அர்த்தத்தையும் அது தரும் பயனையும் அறிந்திருக்க வேண்டும், என்று இப்படி ஏராளமான தகுதிகளை யாப்பு நூல்கள் கூறுகின்றன.
இப்படிப்பட்ட கவிஞன் இயற்றும் காவியங்களை ரஸிப்பதும் ஒரு சிறந்த விஷயமாகப் போற்றப்பட்டு வந்துள்ளது.
ரஸிகனாகத் தகுதி
ஒரு காவியத்தை அல்லது கவிதையை ரஸிக்க சஹ்ருதயனாக ஒருவன் இருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தகுதியாக விதிக்கப்பட்டிருக்கிறது. சஹ்ருதயன் என்றால் நல்ல இதயம் உடையவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவனே ரஸிக்கவும், விமரிசிக்கவும் முடியும் என்பது அறிஞர்களின் துணிபு.
“அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார் “
என்று மகாகவி பாரதியார் கூறுவதில் எத்தனை பொருள் பொதிந்துள்ளது. கவிஞன் எதை வலியுறுத்திக் கூறியுள்ளான் என்று அந்தக் கவியுள்ளத்தை அறிவதே கவிதை அல்லது காவியத்தைப் படிப்பதன் முக்கிய நோக்கம். கவிஞன் எல்லாவற்றையும் வெளிப்படையாக்க் கூறி விட மாட்டான். பல விஷயங்களை உள்ளடக்கி சொல் சிக்கனத்தின் மூலம் பெரும் பொருளை உணரவைக்க முயல்வான். அணுவைத் துளைத்து ஏழ் கடலை அதற்குள் நுழைவிப்பான்!அதை அறிந்து ரஸிப்பதே தேர்ந்த ரஸிகனின் வேலை.
வார்த்தை ஜாலங்கள், சொல் அடுக்குகள், உவமைகள், அணி அலங்காரங்கள், ஓசை நயம் இவற்றை எல்லாம் ரஸித்து அதையும் தாண்டி உண்மைப் பொருளை அறிவது என்பது பெரிய காரியம் தானே!
கவிஞனும் ரஸிகனும்
கவி கரோதி காவ்யானி
ரஸம் ஞானானி பண்டித:
சுதாசுரத சாதுர்யம்
ஜாமாதா வெட்டி நோ பிதா;
என்ற ஸ்லோகம் அற்புதமாக கவிஞனையும் ரஸிகனையும் பற்றிக் கூறுகிறது.
இதன் பொருள் :- ஒரு கவிஞன் காவ்யத்தை இயற்றத் தான் முடியும். அதன் ரஸத்தை அறிந்தவனே அதை ரஸிக்க/விமரிசிக்க முடியும். எப்படி ஒரு தந்தை தன் பெண்ணின் சாதுர்யமான லீலைகளை அறிய முடியாதோ அவளது லீலைகளை எப்படி அவனது மருமகன் மட்டுமே அறிய முடியுமோ அது போலத் தான் கவிஞனும் அவன் ரஸிகனும்!
எப்படி ஒரு அற்புதமான விளக்கத்தை இந்த ஸ்லோகம் தருகிறது, பாருங்கள். படைப்பவன் கவிஞன். அந்தப் படைப்பை நன்கு அனுபவிப்பவன் ரஸிகன்!
இன்னொரு ஸ்லோகம் மூன்று மாநிலங்களின் பெண்களோடு கவிஞனின் வார்த்தைகள் மற்றும் பொருள் அமைப்பை ஒப்பிடுகிறது.
ஸ்லோகம் இதோ:-
அர்த்தோ கிராமபிதிதா: பிஹிதாஸ்ச கச்சித்
சௌபாக்யமேதி மாராஹட்டவதுகுசாபாஹா;
நோ கேரளிஸ்தன இவாதிதரம் பரகாசோ
நோ கூர்ஜரிஸ்தன இவத்தராம் நிகுதா:
ஒரு யுவதியின் அழகும் கவர்ச்சியும் அவள் மார்பகத்தில் வெளிப்படும், இல்லையா! அதை உவமையாகக் கொண்டு கவிஞனின் படைப்பு அமைய வேண்டிய விதத்தைக் கூற வருகிறார் ஒரு கவி!
ஒரு கவிஞன் வார்த்தைகளில் பொதிந்துள்ள அர்த்தத்தில் பாதியையே வெளிப்படுத்துவான். பாதியை மறைத்து வைத்திருப்பான்! அதுவே மிக அழகு! எப்படி மஹராஷ்டிரத்தில் உள்ள பெண்கள் மார்பகங்களை பாதி மறைத்து பாதி வெளிப்படுத்திக் காண்பிக்கிறார்கள் அது அல்லவா அழகு! கேரளத்துப் பெண்கள் மார்பகங்களை முழுவதுமாக மறைப்பதில்லை. அது அழகல்ல! அல்லது குஜராத் மங்கையர் முழுவதுமாக கச்சை இறுகக் கட்டி மறைக்கிறார்களே அதுவும் அழகல்ல!
சொல்ல வந்ததை சிருங்கார ரஸம் ததும்பச் சொல்லி விட்டார் இந்தத் தனிப்பாடல் கவிஞர்.
காவியங்களில் சஞ்சரிப்பவன் சரஸ்வதி
கவிகளின் தெய்வமான சரஸ்வதியை “புராண நாடக மஹா காவ்யாதி சஞ்சாரிணீம்” – புராணங்கள், நாடகங்கள் மற்றும் மஹா காவியங்களில் சஞ்சரிப்பவள் அதாவது உள்ளுறைந்திருப்பவள் என்று சரஸ்வதி தியான ஸ்லோகம் கூறுகிறது.
காவியத்தில், இந்த உள்ளுறை தெய்வத்தை ஒரு சஹ்ருதயனே அறிய முடியும் என்பதே கவிதையை ரஸிக்க வருவோர் அறிந்து கொள்ள வேண்டிய முதல் உண்மை.
Image of Tamil poet Manikkavasagar.
உலகம் போற்றும் ஒரே ஒரு கவிதை
இப்படி ஒரே ஒரு கவிதையை மட்டும் எடுத்து ரஸித்துப் பார்ப்போம் – உதாரணத்திற்காக!
மஹாகவி காளிதாஸன் இயற்றிய குமார சம்பவத்தில் ஐந்தாம் காண்ட த்தில் 24வது செய்யுளாக அமைந்திருப்பது இது!
ஸ்தி²தா: க்ஷணம்ʼ பக்ஷ்மாஸு தாடி³தாத⁴ரா:
பயோத⁴ரோத்ஸேத⁴நிபாதசூர்ணிதா:
வலீஷு தஸ்யா: ஸ்க²லிதா: ப்ரபேத சிரேண நாபி⁴ம்ʼ ப்ரத²மோத³பி³ந்த³வ:
இதன் பொருள் இது தான்:- மழையின் முதல் துளிகள் அவளது கண் இமைகளில் சிறிது தங்கின. பின்னர் அவள் மார்பகங்களில் சிதறின. பின்னர் இறங்கி அவள் வயிற்று சதை மடிப்பு வரிகளில் தங்கின. வெகு நேரத்திற்குப் பின்னர் அவள் நாபிச் சுழியில் கலந்தன!
இதை உலகெங்கும் உள்ள அறிஞர்கள் இன்று வரை புகழ்ந்து பாராட்டுகின்றனர். சம்ஸ்கிருத கவிதைகளைத் தொகுத்த டேனியல் ஹெச்.ஹெச். இங்கால்ஸ் இதன் புகழைச் சொல்லிச் சொல்லி உருகுகிறார்!
ஏராளமான கருத்துக்களை சிறு சிறு வார்த்தைகளின் சங்கமம் பிரவாகமாக்க் கொண்டு வந்து தள்ளி நம்மைப் பிரமிக்க வைத்துப் பரவசப்படுத்துகின்றன!
முதலில் ஒரு ராஜகுமாரி தியானத்தில் ஆழ்ந்திருக்கிறாள்.செல்வச் செழிப்பில் ஊறிய ஒரு அழகிய யுவதி தியானத்தில் இருப்பது மெல்லிய உணர்வுகளை நம்முள் எழுப்புகிறது.உலகிற்கெல்லாம் தேவி அவள்! அடடா! கீதை கூறும் யோக நிஷ்டையில் அல்லவா அவள் இருக்கிறாள்! நீர்த் திவலைகள் அவள் கண்களில் சிறிது தங்க வேண்டுமென்றால் அது நீண்டு அழகியதாய் வளைந்து இருக்க வேண்டும். துளிகள் மார்பகங்களில் சிதற வேண்டுமென்றால் அவை பெரிதாக இருக்க வேண்டும்.அவை இரண்டும் திரண்டு உருண்டு ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருக்க வேண்டும். (உத்தம அழகிகளின் லட்சணப்படி!) இல்லையேல் மழைத் துளிகள் மார்பகங்களின் இடைவெளி வழியே உருண்டோடி அல்லவா இருக்கும்! திரட்சியான மார்பகங்கள் திடமாக இருப்பவை என்பதை மழைத் துளிகள் தெறித்துச் சிதறியதால் உணர்கிறோம். அவை பின்னர் வயிற்றில் உத்தம பெண்களுக்கே அமைந்திருக்கும் மூன்று வயிற்று மடிப்புகளின் வழியாக இடுப்பு என்னும் ஏணியின் வழியே இறங்கி நாபி கமலத்தை அடைந்து அந்தச் சுழியில் சங்கமிக்கின்றன!
என்ன அற்புதமான த்வனி அல்லது suggestion அல்லது ஏராளமான உட்பொருளைக் கொண்டுள்ள ஒரு செய்யுள் இது.
கவிகளுள் மஹாகவி காளிதாஸன் என்பதை எடுத்துக் காட்ட இந்த ஒரு செய்யுள் உலகளாவிய அளவில் எடுத்துக் காட்டப்பட்டு வருகிறது!
நல்ல கவிதைகளை நாடித் தேடி ரஸிப்போம்
ஒரு சஹ்ருதயனின் ரஸிகத் தன்மை வளர வேண்டுமெனில் இது போன்ற லட்சக் கணக்கான சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் கவிதைகளைத் தேடிப் பாடி ரஸிக்க வேண்டும்.
உன்னதமான உணர்வுகளை மேம்படுத்தி ரஸிகனை இது பிரபஞ்ச லயத்துடன் ஒன்று படுத்தி விடும், இல்லையா?!
*********************
நிலாச்சாரல் (www.nilacharal.com) 600வது இதழில் வெளியான சிறப்புக் கட்டுரை
Posted by Tamil and Vedas on August 6, 2014
https://tamilandvedas.com/2014/08/06/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%b0%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be/