எளிமை, பிரஸ்னம், சேவை : கீதை காட்டும் வழி பற்றி காந்திஜி! (10,162)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,162

Date uploaded in London – 2 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி தினம். அண்ணலைப் போற்றுவோம்!

எளிமை, பிரஸ்னம், சேவை : கீதை காட்டும் வழி பற்றி காந்திஜி!

ச.நாகராஜன்

மஹாத்மாவைப் பற்றி ஆயிரக்கணக்கில் துணுக்குச் செய்திகள், குட்டிச் சம்பவங்கள் உண்டு. எதை எடுத்துப் பார்த்தாலும் அதில் ஒரு பொருள் புதைந்து இருக்கும்.மஹான்களை அவர்கள் அருகில் இருப்போர்கள், சிறு சம்பவங்களினாலும் அவர்கள் கூறும் சொற்கள் அவை ஒன்றிரண்டாக இருந்தாலும் சரி- அந்தச் சொற்கள் மூலமாகவும், அவர்களை மஹாத்மா என்று இனம் கண்டு கொள்ளலாம்.

ராம்நாராயண் சௌத்ரி என்ற காந்திஜியின் அணுக்கத் தொண்டர் தனது அனுபவங்களை BAPU, AS I SAW HIM என்ற நூலில் தொகுத்துத் தந்துள்ளார்.

அவற்றில் சில இதோ:

உழையுங்கள் – நீரையும், உணவையும் பெறுங்கள்!

காந்திஜியின் ஆசிரமத்திற்குச் சில பேர் வருகை புரிந்திருந்தனர். நேரம் நண்பகல். அவர்களுக்கு ஒரே தாகம். ராம்நாராயண் சௌத்ரி அங்கிருந்தார். அவரிடம் அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டனர். உடனே கிணற்றிலிருந்து ஒரு பக்கெட் நீரை எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார் ராம்நாராயண். உடனே அங்கிருந்த அவரது ஆசிரம சகாக்கள் அப்படிக் கொடுக்கக் கூடாது என்றும அது ஆசிரம விதிகளுக்கு முரணானது என்றும் கூறினர். ராம் நாராயணனுக்கோ அப்படி தாகம் கொண்டவர்களுக்கு நீர் வழங்குவது ஒரு சேவையாகவே தோன்றியது. இதில் என்ன முரண்பாடு?!- என்று அவருக்குத் தோன்றியது. மதியம் காந்திஜை வழக்கம் போல நடைப் பயிற்சிக்காக வெளியே சென்ற சமயம் அவருடன் ராம்நாராயணனும் கூடவே சென்றார்.

அப்போது இப்படி நீர் வழங்கக் கூடாது என்ற சட்டம் ஏன் என்றும் கேட்டார். உடனே மஹாத்மா பதில் கூறினார்: “ நாம் நம்மால் முடிந்த அளவு நம் உடலினால் ஆன சேவையை நோயுற்றவர்களுக்கும் ஒரு வேலையைச் செய்ய முடியாதபடி இருக்கும் செயலிழந்தவர்களுக்கும் தான் செய்ய வேண்டும். ஆனால் நல்ல உடல் வலிமை கொண்டவர்களுக்கு அப்படி இலவ்சமாக உணவையும் நீரையும் கொடுப்பது என்பது அவர்களிடம் சோம்பேறித்தனத்தை வளர்க்கும், பிச்சை எடுப்பதைத் தோற்றுவிக்கும், மனித கௌரவத்தைக் குறைப்பதாகவும் ஆகும். ஒவ்வொரு மனிதனையும் சுய தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியவராக ஆக்க வேண்டும். ஆகவே தான் கிணற்றின் அருகே ஒரு பக்கட்டையும் கயிறையும் வைத்துள்ளேன். தேவையானோர், அதிலிருந்து நீரை எடுத்துத் தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம். உணவும் இங்கு அப்படித்தான்.  ஏதேனும் வேலை செய்தவருக்கே இங்கு உணவு – அவர் செய்த வேலைக்காக!

இன்று தமிழக அரசு இலவசமாக அள்ளிக் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக ஆக்குவதையும் காந்திஜி மிகவும் வலியுறுத்திய மது விலக்கை அமல் படுத்தாமல் குடிகார நாடாக தமிழ்நாட்டை ஆக்கியதையும் நினைத்துப் பார்த்தால் வேதனையாக இருக்கிறதல்லவா!

*

ராம்நாராயண் ஆன்மீக சம்பந்தமான ஒரு கேள்வியை காந்திஜியிடம் கேட்டார். அதற்கு விரிவாக அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் ஒவ்வொரு வரியை முடித்தவுடனும் ‘ஜி’, ஜி என்று ராம்நாராயண் தான் கேட்பதை உறுதிப்படுத்தி மரியாதையாக சொல்லிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் ஆனது. காந்திஜி சொல்லிக் கொண்டிருந்ததை சிறிது கவனிக்கத் தவறி விட்டார் ராம்நாராயண் அல்லது காந்திஜி சொல்லியது அவருக்குப் புரியவில்லை. அவர் ஜி என்று சொல்லவில்லை. காந்திஜியும் பேச்சை நிறுத்தி விட்டார். “என்ன ஆச்சு?” என்று கேட்டார் அவர்.

“ஒரு சந்தேகம் உங்கள் மனதில் எழுந்தது என்றால் அல்லது நான் சொன்னதை  உங்களால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் பேசாமல் இருக்கக் கூடாது. என்னைக் கேட்க வேண்டும். அறிவை அடைய கீதை மூன்று படிகளை வெளிப்படுத்தி இருக்கிறது. எளிமை, பிரஸ்னம் அதாவது கேள்விகள் கேட்பது, சேவை.

கேள்விகளைக் கேட்க ஒருவர் தயங்கவே கூடாது. விடையில் திருப்தி கொள்ளாத வரை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மௌனமாக இருப்பது கூட ஒருவகையில் பொய் தான். கவனமாக ஒருவர் கேட்க வேண்டும். இல்லையெனில் அது இங்கிதம் இல்லாமல் இருப்பதைக் காட்டுகிறது.”

பாபுஜி மிக்க பொறுமையுடன் ஒருவருக்கு அறிவைப் புகட்டுவார். அதே சமயம் கேட்கும் ஒருவர் கவனத்துடன் இருபப்தையும் வலியுறுத்துவார்.

நைமிசாரண்யத்தில் முனிவர்கள் சுகரை அணுகி கேள்விகளைக் கேட்கும் போது நடக்கும் சம்வாதத்தை மேற்படி சம்பவம் நினைவு படுத்துகிறது. கீதையும் பரிப்ரஸ்னம் என்பதை வலியுறுத்துகிறது – அதாவது மீண்டும் மீண்டும் கேட்டுத் தெளிவு பெறுதல்!

அடடா! மஹாத்மாவின் வாழ்க்கை தான் எத்துணை எளிமையானது, அதில் தான் எத்தனை பேர் கேள்வி கேட்டுப் பதிலைப் பெற்று அறிவை அடைந்தனர். அவர் தான் எப்படிப்பட்ட சேவையை உலகினருக்கு அளித்தார்!

கீதை காட்டிய வழியை அவர் எப்படி அழகுற போதித்தார்.

அவரை வணங்குவோம்; போற்றுவோமாக!

***

tags –எளிமை, சேவை , கீதை,  காந்திஜி

பாகிஸ்தான் பற்றி மஹாத்மா காந்திஜியும் மஹரிஷி அரவிந்தரும் (Post No.9880)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9880

Date uploaded in London – 22 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாகிஸ்தான் பற்றி மஹாத்மா காந்திஜியும் மஹரிஷி அரவிந்தரும் கூறியவை!

ச.நாகராஜன்

பாகிஸ்தான் உருவான விதத்தை பாரத தேச மக்கள் அனைவரும் அறிவோம்.

இப்படி ஒரு நாடு உருவாவதை மஹாத்மா காந்திஜி விரும்பவில்லை.

அவர் கூறிய சில சொற்கள் இவை:-

அதை அப்படியே ஆங்கிலத்தில் காணலாம்.

“I am firmly convinced that the Pakistan demand as put forth by the Muslim League is un-Islamic and I have not hesitated to call it sinful”.

–       Harijan 6, October 1946

–        

“முஸ்லீம் லீக் முன் வைக்கும் பாகிஸ்தான் கோரிக்கை இஸ்லாமுக்கு எதிரானது. அது பாவகரமானது என்று சொல்ல நான் தயங்க மாட்டேன்.”

இது தான் அவரது நிலைப்பாடாக 1946 அக்டோபரில் – அதாவது இந்தியா சுதந்திரம் அடைவதற்கும் பாகிஸ்தான் உருவாவதற்கும்  சுமார் பத்து மாதங்களுக்கு முன்னர் – இருந்தது.

பாகிஸ்தான் அவரது விருப்பமில்லாத நிலையில் 1947 ஆகஸ்டில் உருவானது.

அவர் கூறினார் அடுத்து:-

 “If Pakistan persists in wrong doing there is bound to be war between India and Pakistan.”

–       Harijan 28, September 1947

பாகிஸ்தான் தவறு செய்வதைத் தொடர்ந்தால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் உருவாகும். – இப்படி அவர் 1947 செப்டம்பரில் கூறினார் – அதாவது அவர் மறைவதற்கு சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பாக.

அஹிம்சையை வாழ்நாள் கொள்கையாக வலியுறுத்திய அவராலேயே பாகிஸ்தானின் தவறான போக்கும் செயலும் சரியில்லை என்பது கூறப்பட்டது. அது தொடர்ந்தால் போர் தவிர்க்க முடியாது போய் விடும் என்றார் அவர்.

போரை அவரால் என்றேனும் ஆதரிக்க முடியுமா?

அவர் அடுத்துக் கூறுவதைப் பார்ப்போம்:

“I have been an opponent of all warfare. But if there is no other way of securing justice from Pakistan, if Pakistan persistently refuses to see its proved error and continues to minimize it, the Indian Government will have to go to war against it. If there is a war, the Hindus in Pakistan cannot be fifth columnists there. No one will tolerate that.  If their loyalty lies not with Pakistan they should leave it. Similarly the Muslims whose loyalty with Pakistan should not stay in the Indian Union.

–       Harijan 6, October 1947

–        

“எல்லாப் போரையும் எதிர்த்து வருபவன் நான். ஆனால் பாகிஸ்தானிலிருந்து நீதி கிடைக்காதிருக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் தொடர்ந்து தனது தவறுகளைச் செய்து கொண்டிருப்பதைக் காணாதிருப்பின், அதைக் குறைப்பதற்கு மறுப்பின், அதற்கு எதிராக இந்திய அரசு போருக்குச் செல்ல வேண்டியிருக்கும். போர் ஏற்படின் பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் ஐந்தாம் படையாக அங்கு இருக்க முடியாது. அதை யாரும் பொறுக்க மாட்டார்கள். அவர்களின் விசுவாசம் பாகிஸ்தானிடம் இல்லையெனில் அவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும். அதே போல பாகிஸ்தானுக்கு விஸ்வாசமாக உள்ள முஸ்லீம்கள் இந்திய யூனியனை விட்டு வெளியேற வேண்டும்.”

மிகத் தெளிவாக இப்படி 1947 அக்டோபரில் அவர் கூறினார்.

பாகிஸ்தானைப் பற்றிய மிகத் தெளிவான பார்வையை அவர் கொண்டிருப்பதை இதன் மூலம் அறியலாம்.

பாகிஸ்தானின் இந்திய எதிர்ப்பை 1947லிருந்து இன்றைய வரை இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் ஹிந்துக்களும் நன்கு உணர்வர்.

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் ஓரிழையில் இணைந்து பாகிஸ்தானை நோக்கினால் பாகிஸ்தான் தனது வாலை ஆட்ட நினைத்தும் பார்க்காது.

இனி மஹரிஷி அரவிந்தர் பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றிக் கூறியதைப் பார்ப்போம்.

திருச்சி வானொலி நிலையத்திற்கு ஆகஸ்ட் 15 1947 சுதந்திர தினத்தை ஒட்டி ஒரு உரையை மஹரிஷி அரவிந்தர் தந்தார்.

அதில் “The Partition must go” – பிரிவினை போக வேண்டும் என்ற தன்  கருத்தைத் தெரிவித்திருந்தார்.

“(பாகிஸ்தான்) பிரிவினை என்பது செயற்கையானது. அது போக வேண்டும். போய் விடும்” என்பது அவர் கருத்தாக இருந்தது.

எதிர்காலம் காணும் மஹரிஷியின் தீர்க்க தரிசனமாகவே இதைக் கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் பிரிவினை பற்றி மஹாத்மா காந்திஜி கூறிய கருத்துக்களும், அதே போல 1950 முடிய வாழ்ந்த மஹரிஷி அரவிந்தர் கூறிய கருத்துக்களும் தனியே தொகுக்கப் பட வேண்டும்.

அது ஒரு தெளிவான எதிர்காலத்தை பாரத தேச மக்களுக்குக் காட்டும்!

NDEX

Mahatma Gandhiji on Pakistan.

Aurobindo on Pakistan

The division is unnatural

War between India and Pakistan

Division will have to go; will go

tags- பாகிஸ்தான் ,காந்திஜி, அரவிந்தர்

காந்திஜியிடம் புரபஸர் கீதையைப் பற்றிக் கேட்ட கேள்வி! ( (Post No.7080

Written by S Nagarajan


swami_48@yahoo.com

Date: 10 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 15-23
Post No. 7080

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ச.நாகராஜன்

காந்திஜி ஒரு கர்மயோகி. கீதை வழி நடப்பவர்.

அவரைப் பார்க்க ஆசிரமத்திற்கு ஒரு பேராசிரியர் வந்தார்.

அவரை வணங்கிய புரபஸர், “நீங்கள் கீதையை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பவர் என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனக்கு தயவுசெய்து கீதையின் சாரத்தை விளக்க முடியுமா?” என்று கேட்டார்.

அவரை உற்று நோக்கிய காந்திஜி, “புரபஸர், எனக்காக ஒன்றை நீங்கள் செய்ய முடியுமா?” என்று கேட்டார்.

“நிச்சயமாக” சந்தோஷத்துடன் கூறினார் புரபஸர்.

முற்றத்தில் குவிந்து கிடந்திருந்த செங்கல் அடுக்கை அவரிடம் காண்பித்த காந்திஜி, “இதை தயவுசெய்து எதிர்ப் பக்கம் போட்டு விட முடியுமா?” என்றார்.

திகைத்தார் புரபஸர். திக்கித் திணறியவாறே, “ உம், நான் உங்களிடம் முக்கியமான ஒரு  கேள்வியைக் கேட்டேன். அதற்கு நீங்கள் மட்டும் தான் பதில் கூற முடியும் என்று எண்ணுகிறேன்” என்றார்.

“ஆம், அதைப் பற்றிப் பிறகு பேசுவோம்.இப்போது தயவு செய்து அந்த செங்கல்களை…” காந்திஜி இழுத்தார்.

புரபஸருக்கு ஒன்றும் பிடிபடவில்லை. குழப்பமடைந்தார். ஆனால் மஹாத்மா சொன்னபடி செய்ய விழைந்தார்.

 செங்கற்களை எடுத்து எதிர்ப்பக்கம் கொண்டு சென்று அடுக்கினார்.

வேர்த்து விறுவிறுக்க காந்திஜியிடம் வந்த புரபஸர், ‘வேலை முடிந்து விட்டது’ என்று கூறினார்.

காந்திஜியே நேரில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

“அடடா, இப்படிச் செய்யச் சொல்லவில்லையே நான்!” என்று ஆச்சரியப்படும் குரலில் கூறினார் காந்திஜி.

“நான் எதிர்ப்பக்கம் என்று சொன்ன போது நேர் எதிரில் என்று சொல்லவில்லை. அந்த மூலையில் எதிர்ப்பக்கத்தில் என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன்.. அதொ அந்த வடக்குப் பக்க மூலையில்…”

பெருமூச்சு விட்ட புரபஸர், “அதனால் என்ன, இதோ அந்தப் பக்கம் போட்டு விடுகிறேன்” என்று மறுபடியும் தன் வேலையை ஆரம்பித்தார்.

அவருக்கு மேலும் கீழும் மூச்சு வாங்க ஆரம்பித்தது. கைகளில் எல்லாம் சிராய்ப்பு. முதுகில் வலி.

காந்திஜியிடம் மீண்டும் வந்த அவர், “பாபுஜி, வேலை முடிந்து விட்டது, இப்போது நீங்கள் என் கேள்விக்கு…” என்று சொல்ல ஆரம்பித்த போது  இடைமறித்தார் காந்திஜி.

“இந்த மூலையில் இருக்கும் செங்கல்கள் தோட்டத்திற்குப் போகும் வழியை அல்லவா அடைக்கிறது. இதை கிழக்குப் பக்க மூலையில் போட்டு விடலாமே” – காந்திஜி புரபஸரை நோக்கி இப்படிக் கூறினார்.

தனது நிதானத்தை இழந்த புரபஸர், “முதலில் அந்த இடத்தில் தானே இவை இருந்தன! நான் ஒரு புரபஸர், பாபுஜி!  உங்களிடம் ஒரு முக்கியமான கேள்விக்கு விடை காண வந்தேன். ஆனால் நீங்களோ என்னை கேவலம் ஒரு கூலி வேலைக்காரன் போல நடத்துகிறீர்கள். ஒரு வேளை  நீங்கள் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியாது என்று எண்ணுகிறீர்களோ அல்லது உங்களால் கீதையின் சாரத்தை நான் புரிந்து கொள்ளும்படி விளக்க முடியாதோ..” எனப் பொங்கினார்.

“அன்புள்ள நண்பரே, நான் உங்களுக்கு நடைமுறை விளக்கத்தை அல்லவா இப்போது அளித்தேன். கீதையின் முக்கியமான உபதேசத்தில் அல்லவா உங்களை ஈடுபடுத்தினேன் இவ்வளவு நேரமும்” என்ற காந்திஜி, “ கீதையின் சாரம் இது தான் – உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை  செய்யுங்கள். வேறு எதையும் நாடிச் செல்லாதீர்கள்” (Gita’s Central Teaching : –  Do your allotted task. Do not seek anyting else) என்று முடித்தார்.

*

அருமையான இந்த சம்பவத்தை ஜே.பி. வாஸ்வானி கீதையை விளக்கும் தனது  புத்தகமான The Seven Commandments of the Bhagavad Gita என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.

அது என்ன செவன் கமாண்ட்மென்ட்ஸ்?

அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

***

Gandhiji in Mauritius- Puvana Sharma’s Picture

பொய்யும் மெய்யும் – வள்ளுவர், பர்ட்ரெண்ட் ரஸ்ஸல், காந்திஜி (Post No.7014)

WRITTEN BY S Nagarajan

swami_48@yahoo.com

 Date: 25 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 15-30

Post No. 7014


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

வள்ளுவர் புரை தீர்ந்த நன்மை பயக்குமெனில் பொய் சொல்வதில் தப்பில்லை என்கிறார்.

நரியைக் காப்பாற்ற ரஸ்ஸல் பொய் சொன்னார். ஆனால் அந்த நன்மை பயக்கும் பொய்யைக் கூட சத்திய சோதனை செய்து வந்த காந்திஜி ஒத்துக் கொள்ளவில்லை.

*

காந்திஜி வழியில் இன்னொரு கதை உண்டு.

ஒரு முறை துர்வாஸ முனிவரிடம் ஒரு மான் அடைக்கலம் புகுந்தது.தன்னைத் தேடிக் கொண்டு வேட்டைக்காரர்கள் வருவதாகவும் அவரிடம் அடைக்கலம் புகுவதாகவும் கூறிச் சரணடைந்தது.

துர்வாஸ மஹரிஷி அதை தன் ஆசனத்தின் பின்னால் மறைத்து வைத்தார்.

வேட்டைக்காரர்கள் வந்தனர். மானைப் பார்த்தீர்களா என்று கேட்டனர்.

துர்வாஸ முனிவரின் கண்கள் சிவந்தன. கோபம் கொப்பளிப்பது போல அவர் முகம் மாறியது.

‘என்ன கேட்டீர்கள்’ என்று அவர் உரக்க வேட்டைக்காரர்களை நோக்கிக் கேட்டார்.

துர்வாஸ மஹரிஷியின் கோபம் நாடறிந்த ஒன்று.

எங்கே தவம் கலைந்த நேரத்தில் அதற்குத் தாம் தான் காரணம் என்று சபிக்கப் போகிறாரோ என்று வேட்டைக்காரர்கள் பயந்தனர்.

அந்த இடத்தை விட்டு ஓடோடிச் சென்றனர்.

மான் பிழைத்தது; மஹரிஷியும் மகிழ்ந்தார்.

 ஒரே விஷயம். பல விதமான கருத்துக்கள்.

வீரராகவ முதலியார், பர்ட்ரெண்ட் ரஸ்ஸல், மஹாத்மா காந்திஜி, துர்வாஸ மஹரிஷி ஆகிய இவர்கள் கூறிய அனைத்தையும் பார்க்கும் போது சத்தியம் என்பது கத்தி முனையை விடக் கூர்மையானது; அதை முதன்மையாகக் கொண்ட தர்மம் இன்னும் சூக்ஷ்மமானது என்று தெரிகிறது.

யத் பாவம் தத் பவதி!

(இதிலும் கூட) உள்ளத்தின் உணர்விற்கேற்ப உண்மை அமைகிறது.

சத்யமேவ ஜயதே!

***

காந்திஜி ஆசிரமத்திலும் ரமண ஆசிரமத்திலும் திருட வந்தவர்கள்! (Post No.6930)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

 Date: 25 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 7-14 AM

Post No. 6930

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

காந்திஜி, நேருஜி – தவறிய வார்த்தைகள் (Post No.5053)

Written by S NAGARAJAN

 

Date: 28 MAY 2018

 

Time uploaded in London –  6-46 am  (British Summer Time)

 

Post No. 5053

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சத்திய சோதனை

காந்திஜி, நேருஜி – தவறிய வார்த்தைகள்! – தேசப் பிரிவினையின் சோகமான அம்சம்!

 

ச.நாகராஜன்

 

1

பாரத தேசத்தின் சரித்திரத்தின் 1947இல் நடந்த பிரிவினை சோகமான ஒன்று. தேவையற்ற ஒன்று.

இது பற்றி நமது தேசத்தின் பெரும் தலைவர்களான காந்திஜி, நேருஜி முதலில் தெளிவான கருத்தைக் கொண்டிருந்தார்கள்.

1947, ஆகஸ்ட் 15ஆம் தேதி பாரதம் சுதந்திரத்தை அடைந்தது.

பிரிவினையுடன்.

 

 

இதற்கு முன்னர் ஏப்ரல் 1947இல் பண்டிட் ஜவஹர்லால் நேரு

ஒரு பொதுக்கூட்டத்தில் இப்படிப் பேசினார்:

 

“All talk of a partition of India as fantastic nonsense. We shall never agree to it.”

  • Pandit Jawaharlal Nehru, addressing a public meeting in April 1947, two months before he accepted it.

 

இப்படி வீர முழக்கம் செய்த இரண்டே மாதங்களில் அவர் பிரிவினைக்கு ஒத்துக் கொண்டார்!

 

ஹிந்துக்கள் காந்திஜியையும் நேருஜியையும் மலை போல நம்பினார்கள்.

 

ஆனால் நேருஜி வார்த்தை தவறி விட்டார்.

அவர் ஏன் இப்படி தனது வார்த்தையைத் தவற விட்டார்?

அதற்கான காரணத்தை அவரே தெரிவித்துள்ளார்!

Leonard Mosley  என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர். அவர்  ‘The Twilight of the British Raj’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

நேரு தனக்கு அளித்த பேட்டியை அவர் இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

 

அதன் ஒரு பகுதி இது:

 

“I was getting old”, said the fart in effect, and I did not want to engage myself in another struggle and lose my post as Prime minister of India. Partition of the country began to look like a solution to my problems.”

ஆறு வாரங்களில் ஆறு லட்சம் பேர்கள் கொல்லப்பட்டனர் – பிரிவினையால்.

 

தனது பிரதம மந்திரி பதவி போய் விடக்கூடாது, இன்னொரு போராட்டத்திற்குத் தான் தயாராக இல்லை, வயதாகிக் கொண்டே போகிறது என்பது நேருவின் வாயிலிருந்தே வந்த வார்த்தைகள்!

 

 

2

ஜின்னா என்ன நினைத்தார்?

இதை மைக்கேல் எட்வர்டின் புத்தகம் தெரிவிக்கிறது.

Michael Edwardes  எழுதியுள்ள  ‘The Last years of British India’ என்ற புத்தகத்தில் ஜின்னா கூறிய வார்த்தைகள் அப்படியே தரப்பட்டுள்ளது.

“I never thought it would happen. I never expected to see Pakistan in my lifetime.”

ஜின்னாவே எதிர்பார்க்காத பிரிவினை ஏற்பட்டது!

 

3

மகாத்மா காந்திஜி பாகிஸ்தான் உருவாவதைப் பற்றி என்ன சொன்னார்?

“Even if the whole of India burns, we shall not concede Pakistan, even if the Moslem League demanded it at the point of a word.”

மகாத்மா காந்திஜி 1947 மே மாதம் 31ஆம் தேதி இப்படிக் கூறினார்.

 

இதை Michael Edwardes மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

ஆனால் மேயில் கூறிய வார்த்தைகளை உடனேயே அவர் தவற விட்டார். ஆகஸ்ட் பிரிவினை ஏற்பட்டது.

என் உடலின் மீது தான் பிரிவினை ஏற்பட்டால் ஏற்படும் என்ற மகாத்மாவின் கூற்றையும் நாம் அனைவரும் அறிவோம்.

அவர் ஏன் மனம் மாறினார்!

 

 

முப்பது கோடி மக்களின் நம்பிக்கை தெய்வமாக இருந்த அவர் ஏன் தன் வார்த்தையைத் தவற விட்டார்.

ஜவஹர்லால் நேரு தனது பதவி மோகமே தன்னை பிரிவினைக்கு ஒப்புக் கொள்ள வைத்தது என்று கூறி விட்டதாக அறிகிறோம்.

 

ஆனால் மகாத்மா?

அவர் ஏன் வார்த்தையைத் தவறவிட்டார்?

தெரியவில்லை.

 

அவரது சொற்களைத் தான் ஆராய வேண்டும்?

பிரிவினையால் எத்தனை லட்சம் மக்கள் இறந்தனர்.

புதிய எளிதில் தீர்வு காண முடியாத தொடர் பிரச்சினையாக மைனாரிட்டிகளுக்கு (அதிக!) உரிமை என்ற அபத்தமான வாதம் இந்தியத் திருநாட்டை இன்று எந்த நிலைக்குக் கொண்டு தள்ளி இருக்கிறது.

 

வியக்கிறோம்!

சத்தியத்திற்கே சோதனையா?

***

 

குறிப்பு : மிக அருமையான நூலான, Hindu Destiny by Nostradamus  என்ற நூலை ஜி.எஸ். ஹிரண்யப்பா என்பவர் எழுதியுள்ளார். அதை ஆதாரமாகக் கொண்டே இந்தக் கட்டுரை எழுதப் பட்டிருக்கிறது. இவரது நூலைப் பற்றியும் இவரைப் பற்றியும் நான் எழுதிய  ஆங்கிலக் கட்டுரையை அன்பர்கள் படிக்கலாம்.

 

xxxx

 

 

 

 

ஹிந்து காந்திஜி! (Post No.4263)

Written by S.NAGARAJAN

 

 

Date: 2 October 2017

 

Time uploaded in London- 4-58 am

 

Post No. 4263

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

ஹிந்துத்வம் வாழ வழி காட்டியவர்

ஹிந்து காந்திஜி!

ச.நாகராஜன்

1

புனிதமான தினம் அக்டோபர் இரண்டாம் தேதி.

அண்ணல் அவதரித்த திருநாள்.

அவரைக் கொண்டாடும் விதமாக எழுத முற்படும் போது வந்த தலைப்பு தான் ஹிந்து காந்திஜி!

இந்தத் தலைப்பையே செகுலரிஸ்டுகள் விரும்பமாட்டார்கள்.

மாறாக கிறிஸ்துவ காந்திஜி என்றோ அல்லது இஸ்லாமிய காந்திஜி என்றோ தலைப்புக் கொடுத்திருந்தால் இமயமலை ரேஞ்சுக்கு என்னைப் பாராட்டுவார்கள்.

காந்திஜியின் வழியில் நடக்க விரும்புவதால் பாராட்டுக்கு பக்குவப்படாமல் உண்மையை எழுதத் துணிவேன்.

அதற்கு உகந்த தலைப்பு இது தான். ஹிந்து காந்திஜி!

 

2

சபர்மதி சிறையில் காந்திஜி இருந்த சமயம்.

ஒரு நாள் தி மான்செஸ்டர் கார்டியன் (The Manchester Guarding)  என்ற பத்திரிகையிலிருந்து அதன் பிரதிநிதி ஒருவர் 1922ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதிக்கு முன்னால் காந்திஜியைப் பேட்டி காண வந்தார்.

அந்தப் பேட்டியை மதராஸிலிருந்து வெளி வரும் ஆங்கிலப் பத்திரிகையான தி ஹிந்து 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட்டது.

ஒத்துழையாமை இயக்கம் என்பது கிறிஸ்துவின் உபதேசத்திற்கு முரணானது என்று பத்திரிகையாளர் காந்திஜியிடம் கூறினார். அதற்கு காந்திஜி, “ நான் ஒரு கிறிஸ்தவன் அல்ல; ஆகவே கிறிஸ்தவ கொள்கைகளுக்கு ஏற்றபடி எனது செயல்களை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லைஎன்று முகத்தில் அடித்தாற்போல் பதில் கூறினார்

3

தன்னை இந்தியாவின் நீண்ட கால நண்பர் என்று கூறிக் கொண்ட ஒரு அமெரிக்கப் பெண்மணி, “ஹிந்து சமயத்தைப் பற்றி உங்களுடைய விளக்கத்தை நீங்கள் கொடுத்து ஹிந்து சமயத்தையும் ஏசுநாதரின் உப்தேசங்களையும் ஒப்பிட்டுக் கூறுவீர்களா?” என்று வேண்டிக் கொண்டார்.

 

20-̀10-1927 யங் இந்தியா இதழில் அவரது கடிதத்தையும் தன் பதிலையும் காந்திஜி வெளியிட்டார்.

விரிவான அந்த பதில் ஹிந்துவாக தான் இருப்பதற்கான காரணம் என்ற காந்திஜியின் நிலைப்பாட்டை விளக்கும் அற்புத பதிலாக அமைந்தது.

 

ஆனால் இன்றைய செகுலரிஸ்டுகள் காந்திஜியைத் தங்களின் கபடப் போர்வைக்குள் சுருட்டப் பார்ப்பதால் அதையெல்லாம் பற்றிப் பேசுவதில்லை;; வெளியிடுவதில்லை.

அவரது பதிலின் ஒரு பகுதி:

 

“பரம்பரையின் செல்வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு. எனவே, நான் ஓர் ஹிந்து குடும்பத்தில் பிறந்ததால், நான் ஹிந்துவாக இருந்து வருகிறேன்.

 

எனக்குத் தெரிந்த எல்லா சமயங்களுக்குள்ளும் ஹிநது சமயம் ஒன்று தான் மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்தது என்பதை நான் அறிந்து கொண்டிருக்கிறேன்.

 

அதில் கண்மூடித்தனமான பிடிவாதத்திற்கு இடமில்லை. இது தான் என் மனத்தை மிகவும் கவர்ந்திருக்கிறது.

அதில் தான் அஹிம்சை நடைமுறையிலும் அனுசரிக்கப்படுகிறது. (ஜைன மதம் அல்லது புத்த மதத்தை ஹிந்து சமயத்திலிருந்து வேறானதாக நான் கருதவில்லை)

 

ஹிந்து சமயம் பசுவை வழிபடுவது, ஜீவ காருண்ய மலர்ச்சிக்கே அடிப்படையாகும். எல்லா உயிர்களும் ஒன்று என்பதையும், எனவே எல்லா உயிர்களும் புனிதமானவை என்பதையும் அது செயலில் காட்டுவதாக இருக்கிறது.

அந்த நம்பிக்கையின் நேரடியான பலனே, மறு ஜன்மத்தில் உள்ள மகத்தான நம்பிக்கையாகும்.

 

மேலும் சத்தியத்தை இடைவிடாது தேடியதன் அற்புதமான பலனாகவே, வர்ணாசிரம தருமம் கிடைத்தது.

ஹிந்து சமயத்தில் நான் இருந்து வருவதற்கான காரணமான சிறந்த அம்சங்கள் என்று எனக்குத் தோன்றியதையே இங்கே மிகவும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

 

4

1937ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதி  போலந்திலிருந்து தத்துவ பேராசிரியரான க்ரென்ஸ்கி காந்திஜியை வந்து சந்தித்தார்.

அனைவரும் படிக்க வேண்டிய பேட்டி இது.

முழுவதையும் தர இடம் இல்லை என்பதால் சில முக்கியப் பகுதிகளை மட்டும் இங்கு காணலாம்:

 

Krzenski : Catholicism is the only true religion

Gandhiji : Do you therefore say that other religions are untrue?

Krzenski : If others are convinced that their religions are true they are saved.

Gandhiji : Therefore you will say that everyone would be saved even through untruth.

Krzenski: But I have studied all religions and have found that mine is the only true religion.

 

Gandhiji : But so have others studied other religions. What about them?

Krzenski : I have examined the arguments in favour of other religions.

Gandhiji : But it is an intellectual examination. You require different scales to weigh spiritual truth…. My submission is that your position is arrogant. But I suggest you a better position. Accept all religions as equal, for all have the same root and the same laws of growth.

Professeor switched to a next question.

 

Gandhiji : It is no use trying to fight these forces without giving up the idea of conversion, which I assure you is the deadliest poison that ever sapped the fountain of truth.

 

 

மதமாற்றம் என்பது கொடிய விஷம்

 

மதமாற்றம் என்பது கொடிய விஷம் என்ற காந்திஜியின் கருத்து  செவிடன் காதில் ஊதிய சங்கு போலத் தான் ஆயிற்று பல கத்தோலிக்க பிஷப்புகளுக்கு.

காந்திஜியை “அறுவடை” செய்தால் ஒட்டு மொத்த இந்தியாவையுமே அறுவடை செய்தது போலத் தானே!

அதை நம்பி இந்த போலந்து புரபஸர் மட்டும் வரவில்லை.

ஸ்டான்லி ஜோன்ஸ் உள்ளிட்ட பிரபல பாதிரிகள் அவரை நோக்கிப் படை எடுத்து வந்தன.

ஆனால் ஏமாந்தே போயின.

அனைத்தையும் அன்பர்கள் விரிவாக முழுவதுமாகப் படிக்க வேண்டும்.

 

5

போலந்து மாணவன் ஒருவன் காந்திஜியின் போட்டோ ஒன்றை எடுத்து வந்தான். அவரிடம் அதில் கையெழுத்திட வேண்டினான்.

கத்தோலிக்க பாதிரிமார்கள் நடத்தும் பள்ளி ஒன்று இருக்கிறது.

உங்கள் கையெழுத்திட்ட இந்த போட்டோவை விற்று அதில் வரும் பணத்தை அவர்களிடம் கொடுத்து விடுவேன் என்றான அந்த மாணவன்.

 

“ஆ, அப்படியா சேதி! இதில் கையெழுத்திட்டு பாதிரிகளின் மதமாற்ற வேலைக்கு நான் உதவுவேன் என்று நீ எதிர்பார்க்கிறாயா?” என்று கூறியவாறே போட்டோவை அந்த மாணவனிடமே திருப்பிக் கொடுத்தார் காந்திஜி.

மஹாதேவ தேசாய் தனது டயரிக் குறிப்பில் இந்தச் சம்பவத்தை விரிவாகக் குறிப்பிடுகிறார்.

 

6

காந்திஜிக்கு பாதிரிகளின் அந்தரங்க எண்ணமும் தெரியும்;ஜிஹாதிகளின் உள் நோக்கமும் புரியும்.

அவர் தெளிவான ஹிந்துவாகவே வாழ விரும்பினார்.

ஏனெனில் ஒரு ஹிந்துவுக்கு யாரும் பகை இல்லை. அவனுக்கு அனைவரும் சமமே.

 

ஆனால் ஒரு கிறிஸ்துவனுக்கோ அவனுக்கு முன்னால் மற்றவர் சமம் இல்லை. அவன் ஏசுவுக்குத் தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டும்.

 

ஒரு இஸ்லாமியருக்கு அடுத்தவர் யாரானாலும் காஃபிர் தான்!

ஹிந்து மதம் வாழ்ந்தால் உலகில் அனைவரும் வாழலாம். ஆனால் இஸ்லாமோ அல்லது கிறிஸ்தவமோ வாழ்ந்தால் ஏனையது இருக்கக் கூடாது.

 

காந்திஜி அனைவரும் வாழ வேண்டுமென்று விரும்பினார்; அந்த நல்லெண்ண வேள்வியில் தன்னை ஆகுதி ஆக்கினார்.

இன்றைய போலி செகுலரிஸ்டுகளும், மதவாதிகளும் அவரை மறக்கடிக்கவே முயல்வர்.

 

அதைத் தோற்கடிக்க ஹிந்து காந்திஜியைப் போற்றுவோம். உண்மையான ஹிந்துவாகவே என்றும் இருப்போம்.

ஹிந்து ராஷ்டிரத்தை நிறுவுவோம்.

***

 

காந்திஜியும் பத்திரிகையாளர்களும் (Post No.2598)

gandhi-stamps-2

Picture of Stamps on Gandhi from other countries.

Written by S Nagarajan

 

Date: 5 March 2016

 

Post No. 2598

 

Time uploaded in London :–  5-23 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ச.நாகராஜன்

 

 

பத்திரிகையாளர்களைப் பொறுத்தமட்டில்  மஹாத்மா காந்திஜியின் அணுகுமுறையே தனி.

 

1946ஆம் ஆண்டு.  முஸ்லீம் லீக் DIRECT ACTION DAY-ஐ அறிவித்திருந்தது. அப்போது கல்கத்தா நகரில் காந்திஜி இருந்தார். அவர் முக்கியமான பத்திரிகையாளர்களை அழைத்தார். நகரில் நடந்த கலகங்கள் பற்றிய ஒரு அறிக்கையைத் தயார் செய்து தருமாறு வேண்டினார். பெரிய அறிக்கை ஒன்றை அவ்ர்கள் தயார் செய்தனர்.

 

 

காந்திஜி நிர்மல்குமார் போஸை அழைத்தார். (இவர் அப்போது காந்திஜியுடன் சேவைக்காகத் தங்கி இருந்தார். பின்னாளில் ஷெட்யூல்ட் கேஸ்ட்ஸ் அண்ட் ட் ரைப்ஸ் கமிஷனராக டில்லியில் பதவி வகித்தார்)

 

 

அந்த அறிக்கையில் உண்மையானவற்றை மட்டும் சிவப்பு பென்சிலால் குறிக்கப் பணித்தார்.

அவர்களின் கருத்துக்களையும் ஊகங்களையும் விட்டு விடச் சொன்னார்.

 

இதை நிர்மல் குமார் போஸ் செய்தார். பின்னர் தான் அறிக்கையையே காந்திஜி கையில் எடுத்தார்.

முஸ்லீம் லீக் மந்திரிகளை அழைத்து தானே நேரடியாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்க வருவதாகக் கூறினார்.

அது உடனே ஏற்கப்பட நகரின் பல பகுதிகளுக்கும்

காந்திஜி சென்று பார்த்தார்.

 

Gandhi-Stamps

Picture: Gandhi stamps from foreign countries

திரும்பி வந்ததும் தன்னிடம் கொடுக்கப்பட்ட அறிக்கையில் ஏராள்மான மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் இருந்ததாகத் தெரிவித்தார்.

 

‘Razed to the ground’ – அடியோடு தரைமட்டமாக்கப்பட்டது என்று குறிக்கப்பட்ட குடிசைகளில் சுவர்கள் அப்படியே இருந்தன. சில ஜன்னல்களும், கதவுகளும் உடைக்கப்பட்டிருந்தன.

இதே போலத் தான் 1946இல் நவம்பர் மாதம் நவகாளிக்குச் சென்ற காந்திஜி உண்மையான அறிக்கையைத் தயார் செய்து தருமாறு வற்புறுத்தினார். பீஹாரிலும் இப்படியே சொன்னார். நவகாளி அறிக்கையை சதீஷ் சந்திரதாஸ் குப்தா என்பவர் தயார் செய்ய பீஹாரில் காங்கிரஸ் அரசே அறிக்கையைத் தயார் செய்தது.

 

 

‘உண்மையைத் தேடு’ என்பதை காந்திஜி ஒரு நாளும் விட்டுக் கொடுக்கவில்லை – முக்கியமாக பத்திரிகையாளர்களிடம்.

மனம் போன போக்கில் செய்திகளை மிகைப்படுத்தி தங்கள் ஊகங்களையும் கருத்துக்களையும் கலந்து பரபரப்புச் செய்திகளைத் தரும் போது அது சமுதாயத்திற்கு விஷத்தைத் தந்தது போல ஆகிறது!

 

 

இந்தப் போக்கை அவர் மென்மையாகக் கண்டித்தார்.

இன்று காந்திஜி நம்மிடையே இல்லை. ஆனால் பத்திரிகையாளர்கள் இன்னும் மோசமாக ஆகி விஷக் கருத்துக்களையும் பொய்யையும் உண்மை போலத் தருகின்றனர்.கூடவே டி வி சானல்கள் தவறான செய்திகளை எப்போதோ எடுத்த லைப்ரரி ஷாட்டுகளை இடை இடையெ புகுத்தி மக்களைப் பயமுறுத்தி அவர்களைத் தவறான முடிவு எடுக்கத் தூண்டுகின்றன.

 

 

இப்போது இரு நாட்களாக ( மார்ச் 3,4, 2016 ) வரும் செய்திகள் சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது நரேந்திர மோடியை எப்படியெல்லாம் இஷ்ரத் ஜஹான் கேஸில் ஃப்ரேம் செய்யப் பார்த்தார் என்ற திடுக்கிடும் செய்திகள் வருகின்றன.

அரசு அதிகாரிகள், நுண்ணறிவுப் பிரிவு, போலீஸ் இவற்றுடன் பத்திரிகையின் பல பிரிவினரும் இதற்குத் துணை போயிருக்கும் செய்திகளைப் பார்த்து திடுக்கிடுகிறோம்.

 

 

இனிமேல் காந்திஜி போல செய்தி அறிக்கைக்கு சிவப்பு பென்சிலால அடிக்கோடிட்டு அதில் இருக்கும் உண்மை செய்திகளை எடுக்க வேண்டியது தானோ!

 

ஆனால் நிர்ம்ல் குமார் போஸ் அல்லது அவரைப் போன்ற ஒருவர், இந்தப் பணியை இப்போது ஏற்க வந்தால், அதற்கு அவசியமே இல்லை. சிவப்பு பென்சிலே தேவை இல்லை. பல பத்திரிகைகளைக் குப்பையில் தூக்கிப் போட்டு விடலாம்’ என்று சொல்வார்.’

 

அதில் உண்மை ஏதேனும் இருந்தால் தானே சிவப்பு பென்சில் வேண்டும்!!

 

உண்மையை விரும்புவோ சிந்திக்க வேண்டும்.

அப்படிச் சிந்திப்பவர் ஏராள்மாகப் பெருகினால் சத்தியத்தைத் தேடிய அந்த மகானுக்கு உண்மையான அஞ்சலி செய்தவர்கள் ஆவோம்.

 

(குறிப்பு: நிர்மல் குமார் போஸ் எழுதிய Report for fact : A personal account என்ற கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.Univiersity of Mysore 1969ஆம் ஆண்டு வெளியிட்ட ”Gandhi and the West “ என்ற நூலின் முதல் கட்டுரை இது.)

 

******

 

அசலாம்பிகையின் அற்புதக் கவிதை!

narsimehtha

Don’t Reblog it for at least for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

Compiled by லண்டன் சுவாமிநாதன்

Date : 7 September  2015

Post No. 2133

Time uploaded in London: – 15-40

1910, 1920 ஆம் ஆண்டுகளில் பல ஆன்மீக நூல்களையும், சொற்பொழிவுகளையும் செய்தவர் திருமதி பண்டிதை அசலாம்பிகை. அவரைப் புகழ்ந்து திரு.வி.க. போன்ற தமிழ் அறிஞர்களும் சித்தாந்த தீபிகை போன்ற பத்திரிக்கைகளும் எழுதியிருப்பதிலிருந்தே அவர் புகழ் குன்றின் மேலிட்ட விளக்கு போலப் பிரகாசிக்கிறது. அவர் காந்தி புராணம் என்று காந்தியின் வாழ்க்கை வரலாற்றை கவிதை வடிவில் எழுதி மூன்று பகுதிகளாக நூல்களாக வெளியிட்டுள்ளார். நல்ல கவி உள்ளம் படைத்தவர் என்று தெரிகிறது. முதல் முன்று பகுதிகள் காந்தியின் 1924 ஆம் ஆண்டுவரையுள்ள வாழ்க்கைச் சம்பவங்களை விவரிக்கிறது. அதற்குப் பின்னுள்ள காந்தியின் வரலாற்றை இவர் எழுதினாரா என்று தெரியவில்லை (பிரிட்டிஷ் லைப்ரரியிலுள்ள புத்தகங்களை அடிப்படையாக வைத்து இதை எழுதுகிறேன்).

காந்திஜிக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று குஜராத் மகான் நரசிம்ம மேத்தா எழுதிய “வைஷ்ணவன் யார்?” என்ற கவிதையாகும். இதை இந்து யார்? என்ற கேள்விக்கு விடையாகவும் கொள்ளலாம். இதைப் பிற்காலத்தில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை மொழி பெயர்த்ததை நாம் அறிவோம். ஆனால் அதற்கு முன்னரே காந்தி புராணத்தில் அசலாம்பிகை அம்மையார் கவிதையாக மொழி பெயர்த்துள்ளார். அதில் இவருடைய செஞ்சொற் கவி நயத்தைக் காணலாம். இதோ இத்துடனுள்ள இணைப்பில் அதைக் காணுங்கள். அதைத் தொடர்ந்து நாமக்கல் கவிஞரின் மொழிபெயர்ப்பையும் கொடுத்துள்ளேன்

narsimehta1 (2)
IMG_3996 (2)

IMG_3995 (2)

IMG_3991 (2)

வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்)

வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின்
வகுப்பேன் அதனைக் கேட்பீரே! (வைஷ்)

பிறருடைத் துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம் ;
உறுதுயர் தீர்த்ததில் கர்வங் கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும் ;
உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குவன் உடல்மனம் சொல்இவற்றால்
அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்
அவனைப் பெற்றவள் அருந்தவத்தாள். (வைஷ்)

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
விளங்கிட ஆசைகள் விட்டவனாய்
ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென
உணர்வோன் வைஷ்ணவன் தன்நாவால்
உரைப்பதிற் பொய்யிலன் ஒருபோதும்அவன்
ஊரார் உடைமையைத் தொடமாட்டான்
வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம். (வைஷ்)

மாயையும் மோகமும் அணுகா தவனாய்
மனத்தினில் திடமுள வைராக்யன்
நாயக னாகிய சிறீரா மன்திரு
நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து
போயதில் பரவசம் அடைகிற அவனுடைப்
பொன்னுடல் புண்ணிய தீர்த்தங்கள்
ஆயன யாவையும் அடங்கிய சேத்திரம்
ஆகும்அவனே வைஷ்ணவனாம். (வைஷ்)

கபடமும் லோபமும் இல்லாதவனாய்க்
காம க்ரோதம் களைந்தவனாய்த்
தபசுடை அவனே வைஷ்ணவன் அவனைத்
தரிசிப் பவரின் சந்ததிகள்
சுபமுடை வார்கள் எழுபத் தோராம்
தலைமுறை வரையில் சுகமுறுவர்
அபமறப் புனிதம் அடைகுவர் பிறப்பெனும்
அலைகடல் நீந்திக் கரை சேர்வார். (வைஷ்)

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை

மூலம்: நரசிம்ம மேத்தா

1969gandhi

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே
பீட பராயே ஜானேரே
பரதுக்கே உபகார் கரே தோயே
மன் அபிமான் ந ஆனே ரே
(வைஷ்ணவ)

சகல லோக மான் சஹுனே வந்தே
நிந்தா ந கரே கேனீ ரே
வாச் கச்ச மன் நிஸ்சல ராகே
தன் தன் ஜனனீ தேனே ரே
(வைஷ்ணவ)

சம்திருஷ்டி நே த்ருஷ்ணா த்யாகீ
பரஸ்த்ரீ ஜேனே மாத ரே
ஜிஹ்வா தகி அஸத்ய ந போலே
பர தன் நவ் ஜாலே ஹாத் ரே
(வைஷ்ணவ)

மோஹ மாயா வ்யாபே நஹீ ஜேனே
த்ருட வைராக்ய ஜேனா மன்மாம் ரே
ராம் நாம் சூன் தாலீ லாகீ
சகல தீரத் தேனா தன்மாம் ரே
(வைஷ்ணவ)

வண லோபீ நே கபட-ரஹித சே
காம க்ரோத நிவார்யா ரே
பனே நரசய்யொ தேனுன் தர்ஷன் கர்தா
குல் ஏகோதேர் தார்யா ரே

நரசிம்ஹ மேதா
(கிபி. 1500)

1947 Gandhi Rs 10 Service

वैष्णव जन तो तेने कहिये जे पीड परायी जाणे रे।
पर दुःखे उपकार करे तो ये मन अभिमान न आणे रे॥
सकळ लोकमां सहुने वंदे, निंदा न करे केनी रे।
वाच काछ मन निश्चळ राखे, धन धन जननी तेनी रे॥
समदृष्टि ने तृष्णा त्यागी, परस्त्री जेने मात रे।
जिह्वा थकी असत्य न बोले, परधन नव झाले हाथ रे॥
मोह माया व्यापे नहि जेने, दृढ़ वैराग्य जेना मनमां रे।
रामनाम शुं ताळी रे लागी, सकळ तीरथ तेना तनमां रे॥
वणलोभी ने कपटरहित छे, काम क्रोध निवार्या रे।
भणे नरसैयॊ तेनुं दरसन करतां, कुळ एकोतेर तार्या रे॥