மநுவை வள்ளுவர் காப்பி அடித்தாரா? (Post No.7221)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 16 NOVEMBER 2019

Time  in London – 19-25

Post No. 7221

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

மநு நீதி நூல் – Part 45

ரெவரண்ட் ஜி.யூ. போப் முதல் அண்மையில் பேரரறிஞர் டாக்டர் இரா.நாகசாமி வரை பலரும் திர்வள்ளுவர் எழுதிய திருக்குறளில் மநுவின் கருத்துக்களும் உவமைகளும் அப்படியே இருப்பது பற்றி சுட்டிக்காட்டி வந்துள்ளனர். இமயம் முதல் குமரி வரை பாரதீய சிந்தனை ஒன்றே  

என்பதை இது காட்டுகிறது. யாரும் யாரையும் காப்பி அடிக்கவில்லாஇ; இன்னும் ஆழமாகப் போனால் மஹாபாரதத்திலும் இக்கருத்துக்கள் இருப்பதைக் காணலாம். ஆனால் அதுவோ மஹாசமுத்திரம் ஒரு லட்சம் ஸ்லோகங்கள்; இரண்டு லட்சம் வரிகள்; பத்து லட்சம் சொற்கள். யாரே அதன் கரை காண்பார்?

மநு ஸ்மிருதியின் ஒன்பதாவது அத்தியாயத்தைத் தொடர்ந்து காண்போம். முந்தைய பகுதியில் 9-220 வரை கண்டோம். இதோ தொடர்ச்சி. முதலில் புல்லட் பாயிண்ட்ஸ்- ரத்தினச் சுருக்கம்—

வள்ளுவர், நாற்பது குறட்பாக்களில் நாலு அதிகாரங்களில் (சூது, கள்ளூண்ணாமை, கயமை, ஒற்றாடல் ) சொன்ன விஷயங்களை இந்த ஸ்லோகங்களில் மநுவும் குறிப்பிடுகிறார்  . அந்த  தீமைகளை கண்டிக்கிறார். அதாவது வள்ளுவரும் மநுவும் ஒரே கருத்தைச் சொல்கின்றனர். மநுவில் இடையிடையே ஜாதிகள் பற்றி வரும். வள்ளுவத்தில் அது இல்லை. காரணம்?

மநு எழுதியது சட்டப் புத்தகம்; வள்ளுவர் எழுதியது நீதி நூல்

வள்ளுவர் எழுதியது நமக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னர்; மநு எழுதியதோ அதற்கும் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்! (வள்ளுவர் மற்றும் மநுவின் காலம் பற்றி முன்னரே எழுதியதைக் காணவும்)

மேலும் சில சுவையான ஸ்லோகங்கள்:-

9-221- சூதாட்டத்துக்கும், பெட்டிங் (BETTING AND GAMBLING)  எனப்படும் பந்தயம் கட்டும் போட்டிக்கும் தடை விதிக்கவும்

9-235- பஞ்ச மஹா பாதகங்கள் எவை?

9-237 முதல் — நெற்றியில் சூடு போட்டு, பச்சை குத்தி அவமானப்படுத்தல்; ஜாதியிலிருந்தும், ஊரிலிருந்தும் விலக்கி வைத்தல்

9-244- பறிமுதல் செய்த சொத்துக்களை கடலில் எறி

9-245- வருணன் நம்மைக் கவனிக்கிறான் (தொல்காப்பியத்தில் வரும் வருணன்)

9-247- நல்ல மன்னன் நாட்டில் நிலங்கள் தானாக விளையும் .(வள்ளுவனும் குறளில் 545, 559, 560 சொல்லும் அதிசயம்; காளிதாசனும் இந்த அதிசயத்தை விளம்புவான்

9-249- அப்பாவிகளைத் தண்டித்து விடாதே

9-250-  18 வகைக் காரணங்கள் (எட்டாம் அத்தியாயத்தில் 4-7 முதல் உள்ள ஸ்லோகங்களில் 18 வகைக் காரணங்கள் உள.)

9-256 – ஒப்பிடுக- குறளில் வரும் ஒற்றாடல் அதிகாரம்.

9-288- சிறைச் சாலைகளை` சாலையின் இரு புறமும் அமைக்கவேண்டும்; எல்லோரும் கைதிகளையும் அவர்கள் படும் கஷ்டங்களையும் காணட்டும்

9-258- ஜோதிடர் பற்றி

9-286, 9-329 –ரத்தினக் கற்கள் பற்றி

9-301– யுகங்களும் மன்னர்களும் பற்றிய சுவையான செய்தி

9-303- மன்னர்கள் இந்திரன், யமன் முதலிய திக் பாலகர் போல;

இதுவும் காலத்தைக் காட்டும். புறநானூறு முதலிய நூல்களில் மன்னரை சிவன், முருகன் மற்றும் இந்திரன் அக்னி, யமனுக்கு ஒப்பிடுவர். ஆனால் மநுவில் பிரம்ம, விஷ்ணு, சிவனை விட வருணன் இந்திரன், அக்னியே ஒப்புமைக்கு வரும்; மநு, காலத்தால் மிகவும் முந்தையவர். கிருஷ்ணன், பலராமன் போன்று என்று புறநானூறு சொல்லும் உவமைகள் மநுவில் இரா.)

9-313 – சான்றோரைப் பகைக்காதே; அரசு தவிடு பொடியாகிவிடும்; திருவள்ளுவரும் இதைச் சொல்லுவார்- குறள் 898, 899

9-264, 265- எந்த எந்த இடங்களை அரசன் கண்காணிக்க வேண்டும் என்ற பட்டியல்

9-270- திருடர்களுக்கு மரண தண்டனை; வள்ளுவரும் மரண தண்டனையை ஆதரிக்கும் புலவர் (குறள் 550, 1224, 1077, 1078))

9-276- திருடர்களின் கைகளை வெட்டு ( வள்ளுவர் கஞ்சர்களின் கையை முறுக்கி மூஞ்சியில் குத்தி முகவாக்கட்டைடையை நொறுக்கு என்கிறார் (குறள் 1224, 1077)

9-290- மாயா ஜால மந்திரவாதிகள், சூன்யக்காரிகளுக்கு 200 பணம் அபராதம் ( மேலை நாடுகளில் ஜோன் ஆப் ஆர்க்கை எரித்தது போல பல்லாயிரம் பெண்களை கிறிஸ்தவப் பாதிரிகள் உயிருடன் கொளுத்தி விட்டனர்)

9-292- பொற்கொல்லர்களுக்கு கடும் தண்டனை

9-294 – அரசின் ஏழு அங்கங்கள்

9-311 – குறள் (151) உவமை — அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல பொறுமை வேண்டும்; பூமாதேவியின் பொறை பற்றி சம்ஸ்கிருத நூல்கள் எல்லாவற்றிலும் உவமைகள் வரும்

9-313 முதல் – ஐந்து ஸ்லோகங்களில் பிராமணர்களின் புகழ்; புத்தரும் தம்ம பதத்தில் 26ஆவது அத்தியாயத்தில் பிராமணர்களின் புகழ் பாடுகிறார்.

9-320- க்ஷத்ரியர்கள் பிராமணர்களிடமிருந்து தோன்றினர்.

TAGS

மநு, வள்ளுவர், காப்பி அடி, ஜோதிடர் பற்றி, ரத்தினக் கற்கள், திருட்டு, மரணதண்டனை

Valluvar and Vasuki