‘மலரினும் மெல்லிது காமம்’; ‘கள்ளினும் காமம் இனிது’- திருக்குறள் (Post No.6955)

Compiled by London  Swaminathan

swami_48@yahoo.com

 Date: 31 AUGUST 2019


British Summer Time uploaded in London –
6-28 AM

Post No. 6955

 Pictures are taken FROM VARIOUS SOURCES. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

செப்டம்பர் 2019 நற்சிந்தனை காலண்டர்

அன்பு, நேசம் பாசம், கணவன் – மனைவி இடையேயுள்ள காதல் பற்றிய 30 தமிழ்- ஸம்ஸ்க்ருதப் பொன் மொழிகள் செப்டம்பர் காலண்டரில் இடம்பெறுகின்றன,

பண்டிகை நாட்கள் – செப்.2 – விநாயக சதுர்த்தி, 3 ரிஷி பஞ்சமி, 6 ராதாஷ்டமி, மஹாலக்ஷ்மி விரதம் ஆரம்பம், 11-ஓணம், பாரதியார் நினைவு தினம், 14- மஹாளயம் ஆரம்பம், 18-மஹாபரணி, 22-மத்யாஷ்டமி, மஹலக்ஷ்மி விரதம் நிறைவு, 28- மஹாளய அமாவாசை, 29- நவராத்ரி ஆரம்பம்.

பௌர்ணமி- 13,

அமாவாசை – 28,

ஏகாதசி விரத நாட்கள் – 9/10, 25

முகூர்த்த நாட்கள்- செப்டம்பர் 1,2,4,8,11,12,16

செப்டம்பர் 1 ஞாயிற்றுக் கிழமை

எல்லோரும் நேசிப்பது மாப்பிள்ளையைத்தான்!

ஸர்வஸ்ய வல்லபோ ஜாமாதா பவதி- ஸம்ஸ்க்ருத பழமொழி

Xxx

செப்டம்பர் 2 திங்கட்கிழமை

அன்புக்குரியவரை திடீரெனப் பிரிவது இடி விழுந்தது போன்றதல்லவா. யாரால் அதைத் தாங்க முடியும்?

ஸஹஸா ப்ரியவிச்சேதம் வஜ்ரபாதம் ஸஹேத் கஹ- ப்ருஹத் கதா மஞ்சரி

Xxx

செப்டம்பர் 3 செவ்வாய்க்கிழமை

செல்வச் செழிப்பின் நோக்கமே நெருங்கிய சொந்த, பந்தங்களை இணைப்பதே- ராமாயண மஞ்சரி 6-1-34

ப்ரிய சமாகமஹ  ஸாரஹ ஸத்யம்  விபவஸம்பதாம்

xxx

செப்டம்பர் 4 புதன்கிழமை

அன்பிற்குரியவர் இறந்துவிட்டால் உலகமே பாலைவனம் ஆகிவிடும்- உத்தமராம சரிதம் – ப்ர்யாநாசே க்ருத்ஸ்னம் கில ஜகத் அரண்யம் பவதி ப்ருஹத் கதா மஞ்சரி

xxx

செப்டம்பர் 5 வியாழக்கிழமை

உறுதியுள்ளம் உடையவரும் கூட  பிரிவால் வருந்துவர்.

ப்ரியப்ராம்சோ தீரைரபி  ந சஹ்யதே

Xxx

செப்டம்பர் 6 வெள்ளிக்கிழமை

மிருகங்களுக்குக் கூட அன்பு  உணர்ச்சியும் பிறவற்றைக் கவனிக்கும் குணமும் உண்டு –

விக்ஞாயந்தே பசுபிரபி ப்ரியாதராஹா – ஸ்ரீராமசரிதாப்திரத்னஹ

xxx

செப்டம்பர் 7 சனிக்கிழமை

அன்பிற்குரியவரின் முழு அன்பைப் பெறுவதற்குத்தானே இத்தனை ஊடலும்.

ப்ரியேஷு சௌபாக்யபலா ஹி சாருதா – குமர சம்பவம் 5-1

Xxx

செப்டம்பர் 8 ஞாயிற்றுக் கிழமை

கள்ளினும் காமம் இனிது – குறள் 1201

Xxx

செப்டம்பர் 9 திங்கட்கிழமை

காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று – குறள் 1255

Love is blind.

xxxx

செப்டம்பர் 10 செவ்வாய்க்கிழமை

காமக்கடல் மன்னும் உண்டே – குறள் 1164

(கடல் போலக் காமம் இருக்கிறது)

Xxx

செப்டம்பர் 11 புதன்கிழமை

இன்பம் கடல் மற்றுக் காமம் – குறள் 1166

Xxx

செப்டம்பர் 12 வியாழக்கிழமை

காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன் – குறள் 1167

Xxx

செப்டம்பர் 13 வெள்ளிக்கிழமை

செல்லாமல் உண்டேல் எனக்குரை- குறள் 1151

(பிரிந்துபோக மாட்டேன் என்றால் பேசு)

xxx

செப்டம்பர் 14 சனிக்கிழமை

அன்பிற்குரியவர் அளிக்கும் நீர்க்கடனை முன்னோர்களும் விரும்புவர் -ராமாயண மஞ்சரி

ப்ரியபாணிச்யுதம் வாரி வாஞ்சந்தி பிதரோ அதிகம்

Xxx

செப்டம்பர் 15 ஞாயிற்றுக் கிழமை

அன்புடையோர் கொடுக்கும் நற்செய்தி கூடுதல் இனிமையுடைத்து- அவிமாரக நாடகம்

ப்ரியநிவேத்யமானானி ப்ரியாணி ப்ரியதராணி பவந்தி

xxxx

செப்டம்பர் 16 திங்கட்கிழமை

காமம் மறையிறந்து மன்றுபடும் – குறள் 1138

(காமம் பலர் அறிய ஊர் மன்றத்தே வெளிப்படும்)

Xxx

செப்டம்பர் 17 செவ்வாய்க்கிழமை

கருமணியிற் பாவாய் நீ- குறள் 1123

xxx

செப்டம்பர் 18 புதன்கிழமை

பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி- குறள் 1121

Xxx

செப்டம்பர் 19 வியாழக்கிழமை

அணியிழை தன் நோய்க்குத் தானே மருந்து

(நோயும் அவளே. நோய்க்கு மருந்தும் அவளே) குறள் 1102

xxxx

செப்டம்பர் 20 வெள்ளிக்கிழமை

கண்டார் உயிருண்ணும் தோற்றம்- குறள் 1084

(இப்பெண்ணின் கண்கள் பார்த்தவர் உயிரை உண்டுவிடும்)

xxx

செப்டம்பர் 21 சனிக்கிழமை

அன்பிற்குரியவர் அன்பற்ற செயல்களைச்செய்தாலும் அவர் பிரியமானவரே- ஹிதோபதேசம் 2-133

அப்ரியாண்யபி  குர்வாணோ யஹ ப்ரியஹ ப்ரிய ஏவ சஹ.

xxx

செப்டம்பர் 22 ஞாயிற்றுக் கிழமை

மலரினும் மெல்லிது காமம் – குறள் 1289

Xxx

செப்டம்பர் 23 திங்கட்கிழமை

புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ- குறள் 1323

ஊடலில் கிடைக்கும் இன்பம் தேவலோகத்தில் உண்டா?

Xxx

செப்டம்பர் 24 செவ்வாய்க்கிழமை

நசைஇயார்  நல்கார் எனினும் அவர்மாட்டு

இசையும் இனிய செவிக்கு – குறள் 1199

அன்பு செய்யவிடினும் அவர்  பற்றிக்கூறப்படும் எல்லாம் என் காதுக்கு இசை போலத்தான்.

Love sees no faults

xxx

செப்டம்பர் 25 புதன்கிழமை

பிடிக்காதவர் செய்த நல்ல செயலும் வேம்பாய்க் கசக்கும்

அப்ரியேண க்ருதம் ப்ரியமபி த்வேஷ்யம் பவதி- பழமொழி

xxx

செப்டம்பர் 26 வியாழக்கிழமை

வேண்டாத பெண்டாட்டியின் (மருமகளின்) கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் பழமொழி

Faults are thick where love is thin

xxx

செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமை

தனக்குப் பிரியமானவளைக் குணவதி என்றே மனிதர்கள் நம்புகிறார்கள் – சிசுபாலவதம்

தயிதம் ஜனஹ கலு குணீதி மன்யதே

xxx

செப்டம்பர் 28 சனிக்கிழமை

இந்த உலகில் மனிதர்கள் இரண்டு விஷயங்களை மிகவும் நேசிக்கிறார்கள்- பெண்களையும் நண்பர்களையும்

த்வயாமிதமதீவ லோகே ப்ரியம் நராணாம் ஸுஹ்ருச்ச வனிதா ச – மிருச்சகடிகம்

xxx

செப்டம்பர் 29 ஞாயிற்றுக் கிழமை

மூத்த பையனை தந்தை பாராட்டுவான்/நேசிப்பான்; இளைய பிள்ளையை தாய் பாராட்டுவாள்/நேசிப்பாள்

ப்ராயேணஹி ஜ்யேஷ்டாஹா பித்ருஷு வல்லபாஹா மாத்ரூணான் ச  கனீயாம்சஹ- பழமொழி

xxx

செப்டம்பர் 30 ஞாயிற்றுக் கிழமை

ஆசையுள்ள இடத்தில் பூசை நடக்கும்- பழமொழி

xxx subham xxx

கம்ப ராமாயணத்தில் பஞ்ச மா பாதகம்- 5 பாவங்கள்(Post No.2838)

murder-laurie-silva

Article written by London swaminathan

 

Date: 25 May 2016

 

Post No. 2838

 

Time uploaded in London :–  11-00 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 Drug Abuse 029-0053

ஐந்து தீய செயல்களை இந்துக்கள் பெரிய பாவச் செயல்களாகக் கருதுகின்றனர். அவை

கள், களவு, கொலை, பொய், காமம் (பிறர் மனைவியை விரும்பும் காமம்).

ஓதநீர் மண் இவை முதல் ஓதிய

பூதம் ஓர் ஐந்தினில் பொருந்திற்று அஞ்சியே

வேத நூல் வரன் முறை விதிக்கும் ஐம்பெரும்

பாதகம் திரண்டு உயிர்ப் படைத்த பண்பினான்

-ஆரண்ய காண்டம், கவந்தன் படலம், கம்ப ராமாயணம்

பொருள்:–

கவந்தன் என்னும் அசுரன் பஞ்ச பூதங்களால் மட்டும் ஆனவன் அன்று; பஞ்ச மா பாதகங்கள் ஒன்று சேர்த்து ஒரு உருவம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தானாம்.

அந்தக் கவந்தன், குளிர்ச்சி பொருந்திய நீரும் பூமியும் ஆகிய இவை முதலாகக் கூறப்பட்ட பஞ்ச பூதங்களினால் இவன் உடல் ஆக்கப்பட்டது அல்லாமல், வேத நூல்கள் முறைப்படி உரைக்கும் கள், களவு, பிறர் மனை விரும்புவதாகிய காமம், பொய், கொலை ஆகிய பஞ்ச மா பாதகங்கள் ஒன்றாகச் சேர்த்து உயிர்பெற்று வந்தவன் என்னும் தன்மை உடையவன்.

 

பகவத் கீதை

பகவத் கீதையில் (1-36) அர்ஜுனன், போர் புரிய மறுத்து அதற்குப் பல காரணங்களைக் கூறுகிறான். அதில் ஒன்று கொடும் பாவிகளான, திருதராஷ்டரன் பிள்ளைகளான கௌரவர்களைக் கொன்றால் மிகவும் பாபம் வருமே என்கிறான். கொடும் பாவிகள் என்பதற்கு அர்ஜுனன் பயன்படுத்தும் சொல், ‘ஆததாயின:’ என்பதாகும்.

lies_377131546 (1)

யார் ஆததாயினர்கள் என்பதை ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் அழகாக விவரிக்கிறது. அதில் பஞ்ச மஹா பாதகங்களோடு, ‘தீ வைத்தல்’ என்ற மற்றொரு பாபமும் சேர்க்கப்படுகிறது:–

 

அக்னிதோ கரதச்சைவ சஸ்த்ரபாணிர்த் தனாபஹ:

க்ஷேத்ர தார ஹரச்சைவ ஷடேதே ஹ்யாததாயின:

 

பொருள்:

தீவைப்பவன், விஷம் வைப்பவன் (கொலை), ஆயுதம் கொண்டு ஆயுதமில்லாதவரைக் கொல்பவன், பிறர் பொருளை அபகரிப்பவன், பிறர் நிலத்தை அபகரிப்பவன், பிறர் மனைவியை அபகரிப்பவன் – இந்த ஆறு பேரும் ஆததாயிகள் (கொடும் பாவிகள்) எனப்படுவர்.

ஆக வேத காலம் முதல் இந்தப் பாவப் பட்டியல் இருப்பதால்தான் “வேத நூல் வரன் முறை விதிக்கும் ஐம்பெரும் பாதகம்” என்று கம்பன் சொல்கிறான். வேத நூல்களைக் கரைத்துக்குடித்தவன் கம்பன்!

 

சிறுபஞ்ச மூலத்தில், காரியாசான் கொஞ்சம் மாறுதலான பாவப் பட்டியல் தருகிறார்:

பொய்யாமை பொன் பெறினும் கள்ளாமை மெல்லியலார்

வையாமை வார்குழலார் நச்சினும் – நையாமை

ஓர்த்துடம்பு பேருமென்று ஊன்வாய் உண்ணானேல்

பேர்த்துடம்பு கோடல் அரிது

பொருள்:-

ஒருவர்க்கு தங்கக் கட்டிகள் கிடைக்கும் என்றாலும் பொய் சொல்லாதிருத்தல், திருடாமல் இருத்தல், தன்னைவிட வலிமை குறைந்தவரை திட்டாமை, பெண்களே மேலே வந்து விழுந்தாலும் அவர்களை விரும்பாமை, உடல் மெலிகிறதே என்று எண்ணி ஆடு, மாடு, கோழிகளைக் கொன்று உண்ணாமை – இந்த ஐந்தையும் பின்பற்றுவோருக்கு மறு பிறவி இல்லை; முக்தி கிட்டும்.

theft

தம்மபதம்

இதையே புத்தமதத்தினரின் வேத நூலான தம்மபதத்திலும் புத்தர் கூறுவார்:-

யார் ஒருவன் மற்ற உயிரைப் பறிக்கிறானோ (கொலை), யார் ஒருவன் தனக்குக் கொடுக்கப்படாததை எடுத்துக் கொள்கிறானோ (களவு), யார் ஒருவன் பிறர் மனைவியை அனுபவிக்கிறானோ (காமம்), யார் ஒருவன் பொய் சொல்கிறானோ, யார் ஒருவன் மதுபானம் அருந்துகிறானோ அவன் தனக்குத்தானே வேர் செல்லும் ஆழத்துக்குக் குழி பறித்துக் கொள்கிறான். (தம்மபதம் -246, 247)

ஆன்றோர் சொல்லை மனதில் கல்லெழுத்தாகப் பதித்து, அவர் சொற்படி நடப்போம்.

 

–சுபம்–