காயத்ரி மந்திர மஹிமை – 24 அக்ஷரங்களின் மஹிமை! (Post 8700)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8700

Date uploaded in London – – 18 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

காயத்ரி மந்திர மஹிமை – 24 அக்ஷரங்களின் மஹிமை!

ச.நாகராஜன்

முக்கிய குறிப்பு!

facebook.com/gnanamayam நிகழ்ச்சியில் 14-9-2020 அன்று ஆற்றிய உரையில் நேரத்தைக் கருதி சில கருத்துக்கள் விடப்பட்டிருந்தன. அவற்றை இங்கு காணலாம்.

குற்றாலத்தில் ஒரு சம்பவம்!

காயத்ரி மந்திரம் தன்னைச் சரணடைந்து ஓதுபவர்களைக் காப்பாற்றும் என்பதை விளக்க இன்னும் ஒரு சம்பவம்.

இது சமீப காலத்தில் நிகழ்ந்த ஒன்று. இதை 2-8-1998 தேதியிட்ட தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் பெரிதாக வெளியிட்டன.

குற்றாலத்திற்குச் சுற்றுலா சென்ற 24 வயது இளைஞர் கல்யாண்குமார், மலை மேலுள்ள தேனருவிக்கு நண்பர்களுடன் சென்றார். குறுகிய பாதை ஒன்றைக் கடக்க அவர்கள் முயன்ற போது திடீரென்று அவரைக் காணோம். நண்பர்கள் அலறினர். கீழே விழுந்து வெள்ளமெனை விழும் அருவிப் பெருக்கில் அவர் அடித்துச் செல்லப்பட்டார் என்று அனைவரும் முடிவு செய்தனர். தேடுதல் வேட்டை ஒன்று தொடங்கியது. மூன்று நாட்கள் கழிந்தன. பயன் ஒன்றும் இல்லை. உடலும் கிடைக்கவில்லை. நெல்லை மாவட்ட வனத்துறை அதிகாரி மனோஜ் குமார் சர்க்காரியா முனைப்புடன் தேடுதலில் இறங்கினார். முத்துக் குளிப்பவர்களை அழைத்துத் தேடச் சொன்னார். அதில் ஒருவர் இருண்ட குகை ஒன்றில் இருட்டில் ஒரு உருவத்தைக் காண்கிறேன் என்றார். உடனே அந்தப் பக்கம் தண்ணீர் செல்வதை பாறைகளை வைத்து அணை கட்டித் தடுத்து நிறுத்தினார் அவர்.

குகையின் நடுவில் ஒரு ஓட்டை போடப்பட்டது. யார் அங்கே இருப்பது என்ற கேள்விக்கு அந்த இளைஞர் பதில் தரவே ஓட்டை பெரிதாகப் போடப்பட்டு பிஸ்கட், குடி நீர் வழங்கப்பட்டது. பின்னர் பல மீட்பு வீரர்கள் பெரிய துவாரம் ஒன்றைப் போட்டு உள்ளிறங்கி அவரை மீட்டனர்.

“எப்படி மூன்று நாட்கள் கழித்தாய்?” என்று கேட்ட போது இடைவிடாது காயத்ரி மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருந்தேன். காயத்ரி தேவி என்னைக் காப்பாற்றி விட்டாள்” என்றார் அவர்.

அக்ஷரங்களின் பயன்!

ஒவ்வொரு அக்ஷரமும் ஒவ்வொரு பயனைத் தரும்.

தத் என்பது பிரம்ம ஞானத்தையும்

‘ஸ’ என்பது சக்தியை நல்வழியில் பயன்படுத்தலையும்,

‘வி’ என்பது நல்ல வழியில் செல்வத்தைப் பயன்படுத்தலையும்,

‘து’ என்பது தைரியத்தையும்,

‘வ’ என்பது பெண்மையின் சிறப்பையும்,

’ரே’ என்பது வீட்டிற்கு வரப் போகும் இல்லத்தரசியையும் அவள் குடும்பத்திற்கு கொண்டு வரும் நலனையும்,

‘ண்யம்’ என்பது இயற்கையை வழிபடுதலையும்,

‘பர்’ என்பது நிலையான மனத்தின் கட்டுப்பாட்டையும்,

‘கோ’என்பது ஒத்துழைப்பு மற்றும் பொறுமையையும்,

தே என்பது எல்லாப் புலன்களும் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதையும்,

‘வ’ என்பது தூய்மையான வாழ்க்கையையும்,

‘ஸ்ய’ என்பது மனிதன் இறைவனுடன் ஒன்றுபடுவதையும்,

‘தீ’ என்பது எல்லாத் துறைகளிலும் எல்லாவித வெற்றி பெறுதலையும்,

‘ம’ என்பது இறைவனது நீதி மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டையும்

‘ஹி’ என்பது நுண்ணறிவையும்,

‘தி’ என்பது வாழ்க்கை மற்றும் மரணத்தையும்,

‘யோ’ என்பது தர்ம நெறிப்படியான வாழ்க்கையைப் பின்பற்றுவதையும்,

‘யோ’ என்பது வாழ்க்கை சேமிப்பையும்

‘நஹ’ என்பது எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பையும்,

’ப்ர’ என்பது நடக்கப்போவதை அறிவது மற்றும் நல்ல காரியங்களுக்கு உதவி செய்வதையும்,

‘சோ’ என்பது அறநெறி நூல்களைப் படிப்பதையும் மகான்களின் தொடர்பு ஏற்படுதலையும்

‘த’ என்பது ஆன்மாவை அறிதல் மற்றும் ஆத்மானந்தத்தையும்

‘யா’ என்பது சத் மக்கட்பேற்றையும்

‘த்’ என்பது வாழ்க்கையில் உள்ள ஒழுக்கக்கட்டுப்பாட்டையும் ஒத்துழைப்பையும் குறிக்கிறது.

காயத்ரி மந்திர தேவதைகள்!

ஆக்னேயம், பிரஜாபத்தியம், ஸௌம்யம், ஸமானம், சாவித்திரம், ஆதித்யம், பார்ஹஸ்பத்யம், மைத்ராவருணம், பகதெய்வதம், ஆர்யமைஸ்வரம், கணேசம், துவாஷ்ட் ரம், பௌஷ்ணம், ஐந்திராக்னம், வாயவ்யம், வாமதேவ்யம், மைத்ராவருணி, வைஸ்வதேவம், மாத்ருகம், வைஷ்ணவம், வததெய்வம்ஸும், ருத்ரதெய்வதம்,  கௌபேரம், ஆஸ்வினம் ஆகியவை காயத்ரி மந்திரத்திற்குள்ள 24 தேவதைகள்.

மஹா பாபங்களைப் போக்கடிப்பதாகவும், பரம சிரேஷ்டமாகவும் உள்ள இந்த இருபத்துநான்கும் தெய்வங்களாகச் சொல்லப்படுகின்றன.

இவைகளைக் கேட்ட மாத்திரத்தில் சாங்கமாகக் காயத்ரியை ஜபம் செய்தால் எந்தப் பயனுண்டாகுமோ அந்தப் பயன் உண்டாகும்.

மேலே கூறிய  24 காயத்ரி மந்திர தேவதைகள் தேவி பாகவதத்தில் பன்னிரெண்டாம் ஸ்கந்தத்தில்  முதல் அத்தியாயத்தில் தரப்படும் அபூர்வமான விவரங்களாகும்.

**

tags– காயத்ரி,  24 அக்ஷர மஹிமை, 

காயத்ரீ மந்திரம் ஒன்றே போதும்- மநு அடித்துச் சொல்கிறார்! (Post No.4693)

Date: 2 FEBRUARY 2018

 

Time uploaded in London- 8-44 am

 

Written by London swaminathan

 

Post No. 4693

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

 

மானவ தர்ம சாஸ்திரம்- இரண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி

 

மநு நீதி நூல்- Part 12

 

SLOKA 175, SECOND CHAPTER CONTINUED………………….

2-58. வலது கையில் ஜலம் எடுத்து ஆசமனம் செய்வதில் 4 வகைகள் உண்டு. உள்ளங்கையில் பிரம்ம தீர்த்தம், காய தீர்த்தம், தேவ தீர்த்தம், பித்ரு தீர்த்தம் விடுவதற்காக 4 பகுதிகள் இருக்கின்றன. பிராமணர் ஆசமனத்துக்கு, முதல் மூன்றையே பயன்படுத்த வேண்டும் (175)

 

2-59. பெரு விரலின் நடுக்கணுவால் விடுவது பிரம்ம தீர்த்தம்; சுண்டு விரலின் அடிக்கணுவால் விடுவது காய தீர்த்தம்; விரல்களின் நுனிப்பகுதியால் விடுதல் தேவ தீர்த்தம்; பெருவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையிலுள்ள பகுதியால் விடுதல் பித்ரு தீர்த்தம்.

 

2-60. ஆசமனம் எனப்படுவது நீரினால் செய்யும் தூய்மை. மூன்று முறை மந்திரம் சொல்லி நீர் உண்ட பின், இரு முறை வாயைத் துடைக்க வேண்டும். கண், காது, மூக்கு, தோள், மா ர்பு, தலை இவற்றையும் தொட்டுத் துடைப்பதாகும்.

 

2-61. தர்ம விதிகளை அறிந்தவன், சூடு இல்லாத நுரை இல்லாத தெளிந்த நீரால் கிழக்கு அல்லது வடக்கு முகமாகப் பார்த்து, நின்றவாறு ஆசமனம் செய்வது சிறந்தது.

 

2-62. ஆசமன ஜலத்தை உட்கொள்கையில், பிராமணன் மார்பு வரையிலும் க்ஷத்ரியன் கழுத்து வரையிலும், வைஸ்யன் உள்நாக்கு வரையிலும், ஏனையோர் (சூத்திரர்) நாவிலும் உதட்டிலும் ஜலம் படும்படியாக்ச் செய்யவேண்டும்

 

2-63. பூணூல் அல்லது மேலாடை இடது தோளில் இருந்து புறப்பட்டு கால் வரை செல்ல வேண்டும். இது உபவீதம் எனப்படும். இடது தோளில் மாற்றிப் போட்டால் அது பிராசீனா விதி எனப்படும். மாலையாகப் போடுதல் நிவிதம் என்றும் சொல்லப்படும். (180)

2-64. இவ்வாறு மூன்று வர்ணத்தார் அணியும் பூணூல், தோல், தண்டம், மேலாடை ஆகியன சேதம் அடைந்தாலோ, அழுக்கடைந்தாலோ பழையனவற்றை நீரில் போட்டுவிட்டு, புதியது தரிக்க வெண்டும்.

Brahmin boys; picture by P Swaminathan

 

2-65. இந்த மூன்று வருணத்தாரும் முறையே 16, 22, 24 வயதில் முடியிறக்க வேண்டும்

2-66. இத்தகைய சடங்குகள் ஏல்லாம் பெண் குழந்தைகளுக்கும் உண்டு. ஆனால் மந்திரம் இல்லாமல் வெறும் சடங்காக செய்தால் போதும்.

 

2-67. பெண்களுக்கு கல்யாணம்தான் உபநயனம் ; அதாவது பூணூல் போடுவது போல; கணவனுக்குப் பணிவிடை செய்தலே குருகுல வாசம்; இல்லறம் நடத்துவதே சமிதாதானம் ஆகும்.

 

கற்றுணர்ந்து செயல்படல்

 

2-68. இவ்வாறு உபநயனம் முதலியன மூலம் இரண்டாவது பிறப்பு எடுத்து புனித மார்கத்தில் செல்லுதலைக் கூறினேன். இனி அவரவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லுவேன். (185)

 

2-69. குரு தனது சீடனுக்கும், தந்தை தனது மகனுக்கும் தூய்மையாக இருத்தல், ஒழுக்கத்துடன் வாழ்தல், தீ வளர்த்து ஹோமம் செய்தல் ஆகியவற்றைக் கற்பிக்க வேண்டும். காலை, நண்பகல், மாலை ஆகிய சந்தி நேரங்களில் செய்யவேண்டிய வழிபாடுகளையும் சொல்லித் தர வேண்டும்.

 

2-70. வேதம் ஓதும் மாணவன் முதலில் ஆசமனம் செய்துவிட்டுக் கைகளைக் கட்டிக்கொண்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு புலன் அடக்கத்துடன் வேதம் ஓத வேண்டும்

 

2-71. வேதம் கற்பதற்கு முன்னரும் பின்னரும் குரு வணக்கம் செய்தலும் கைகட்டிக் கொண்டு வேதம் படித்தலும் பிரம்மாஞ்சலி எனப்படும்

 

2-72.குருவின் முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வலது கையால் அவரது வலது பாதத்தையும் இடது கையால் இடப் பாதத்தையும் தொட்டு வணங்க வேண்டும் (190)

 

2-73. உபதேசிக்கும் குருவும் சோம்பலில்லாமல் மாணவர்களுக்கு ‘’துவங்குக’’ என்றும் ‘’நிறுத்துக’’ என்றும் கட்டளை இட வேண்டும்

 

பிரணவ மந்திரத்தின் பெருமை

2-74. வேதம் கற்கும்போது துவக்கத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரம் சொல்லித் துவங்க வேண்டும்; இதே போல முடிக்கையிலும் ஓம் சொல்ல வேண்டும்; துவங்கும் போது ஓம் சொல்லாவிடில் வேதம் மனதில் பதியாது; இறுதியில் ஓம் சொல்லி முடிக்காவிடில் கற்ற வேதம் நினைவிற் நிற்காது.

 

2-75..பிரணவ (ஓம்) மந்திரத்தை உச்சரிக்கும் முன் தர்ப்பையைப் பரப்பி, கிழக்கு நோக்கி அமர்ந்து மூன்று முறை பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தல் வேண்டும்; பின்னரே பாடம் கற்கலாம்.

 

2-76. பிரம்மா, மூன்று வேத சாரங்களான அகார, உகார, மகார, சப்தங்களினால் பிரணவத்தை உண்டாக்கினார். அவரே பூர், புவர், சுவர் ஆகிய புனித மந்திரங்களையும் உண்டாக்கினார்.

 

2-77. மேலும் ‘’தத்’’ என்ற துவக்கத்தை உடைய மூன்று அடி காயத்ரியையும் மூன்று வேதங்களில் இருந்தே உண்டாக்கினார். (195)

2-78. இந்த பிரணவத்தையும் ‘’பூர் புவர் சுவர்’’ மற்றும் காயத்ரியையும் சந்தியா காலங்களில் ஓதும் பிராமணன் மூன்று வேதங்களையும் ஓதிய புண்ணியத்தை அடைகிறான்.

 

2-79. இந்த காயத்ரீ மந்திரத்தை ஊருக்கு வெளியே காடு, மலை, நதி தீரத்தில் தினமும் ஆயிரம் முறை ஜபிப்பவன் ஒரு மாதம் ஜபித்தால் மஹா பாதகத்தில் இருந்து விடுபடுவான். பாம்பு அதன் தோலில் இருந்து எப்படி விடுபடுகிறதோ அது போல பாவங்கள் நீங்கும்.

 

2-80. இந்த ஜபம்- உபநயனம் ஆகிய இல்லாத மூன்று வருணத்தாரும் பெரியோர்களினால் நிந்திக்கப்படுவார்கள்

 

 

2-81. காயத்ரீயை மோட்சத்துக்கான வழியாகச் சொல்லுகிறார்கள்.

 

2-82. எவன் மூன்று வருடத்துக்குச் சோம்பல் இல்லாமல், தினமும் இடைவிடாது காயத்ரீயை ஜபிக்கிறானோ, அவன் வாயுவைப் போல ஆகாயத்தில் , தன் இஷ்டப்படி உருவம் எடுத்து  சஞ்சரிக்கிறான். இறைவனுடன் ஒன்றிவிடுகிறான் (200)

2-83. பிரணவம் பரப்பிரம்மம் ஆகவும், பிராணாயாமம், சாந்திராயனம் முதலியவற்றைக் காட்டிலும் மேலானதாகவும் சொல்லப்படுகிறது; காயத்ரீயைச் ஜபிப் பவனுக்குப் பாபம் இல்லை. காயத்ரிக்கு மேலான மந்திரம் இல்லை. அவன் சத்தியத்தையே சொல்லுவதால் இதைச் செய்பவனுக்கு மௌன விரதம் தேவை இல்லை.

 

2-84. வேதத்தில் உள்ள யாக யக்ஞாதி கருமங்கள் அழியக்கூடிய பலத்தையே தரும்; ஆனால் பிரணவம், பரமாத்ம ஸ்வரூபத்தைக் காட்டி மோட்சத்தைக் கொடுக்கிறபடியால், அதற்கு அழிவற்றது (அக்ஷரம் = அழியாதது)  என்றும் பிரம்மனால் (by Bahma) சொல்லப்பட்டிருக்கிறது

 

2-85. ஒரு பிராமணன் ‘’ஓம்’’ உடன் காயத்ரீயைச் சொன்னால் இந்த ஜப யக்ஞமாவது அமாவாசை, பௌர்ணமியில் செய்யும் யாகங்களைவிட பத்து படங்கு பலன் தரக்கூடியது. அதை யார் காதிலும் விழாமல் ரஹசியமாகச்  செய்தால் நூறு மடங்கு பலன் கிடைக்கும். மனதில் அதன் பொருளை அறிந்து சொன்னால் ஆயிரம் மடங்கு பலன் பெறுவர்.(203)

 

2-86. பஞ்ச மஹா யக்ஞங்களில் பிரம்ம யக்ஞம் ஒன்றைத்தவிர மற்ற நான்கும் காயத்ரீயை விட மதிப்புக் குறைந்தவையே. காயத்ரீயின் மஹிமையில் பதினாறில் ஒரு பங்கு கூட அவைகளுக்கு இல்லை.

 

2-87. காயத்ரீ ஜபத்தால் பிராஹ்மணன் நிச்சயமாக மோட்சத்தை அடைகிறான். அவன் வேறு எதையும் செய்தாலும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அந்தணர் என்போர் அறவோர்; மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் (குறள் வரிகள்); அவன் எல்லோருடைய நண்பன் ஆகிறான்.

 

2-88. தேரை ஓட்டும் சாரதி குதிரைகளை கடிவாளம் போட்டு அடக்குவது போல, அறிவுடையார்,  மனம் என்னும் குதிரைகளை அடக்க வேண்டும். புலன் இன்பங்களை நாடி ஓடும் மனது, கட்டுக்கடங்காத குதிரைகளுக்கு உவமை.(206)

 

எனது கருத்து:-

 

பூணூல், தண்டம், மேலாடை, குருகுல வாசம், பிக்ஷை  எடுத்தல் முதலியவற்றை மூன்று வருணத்தாருக்கும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத் தக்கது. இப்போது பிராமணர் தவிர மற்ற எல்லோரும் சூத்திரர்கள் என்ற அரசியல் பிரசாரத்தால் மக்கள் குழம்பிக் கிடக்கின்றனர். ஆளும் அரசியல்வாதிகள், வணிகப் பெருமக்கள், விவசாயிகள் முதலியோரும் பூணூல் அணிந்து வேதம் கற்ற காலம் ஒன்று இருந்தது. ஆனால் இதை நடத்திக் கொடுக்கும் பணிக்கு பிராஹ்மணர் தலைமை வகித்தனர்.

 

மேலும் பெண்களுக்கும் மந்திரம் இல்லாமல் எல்லாச் சடங்குகளையும் செய்க என்று மநு கூறுவதிலிருந்து அவர் மிக மிகப் பழங்காலத்தில் வாழ்ந்தவர் என்பது தெரிகிறது. ஏனெனில் கதைகளில் கூட மூன்று வருணத்தார் இவற்றைச் செய்ததாகப் படிப்பதில்லை. ஆகவே அவர் ஸரஸ்வதி நதி பாய்ந்த காலத்தில் இதை எழுதினார் என்பது தெளிவாகிறது. பிற்காலத்தில் இடைச் செருகல்கள், குறிப்பாக சூத்திரர்களுக்கு எதிரான விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

 

தற்காலத்தில் வேதம் படிப்பதையும், காயத்ரீ சொல்லுவதையும் எல்லோருக்கும் பொதுவாக்கினார் சத்ய சாய் பாபா போன்ற மஹான்கள். இது ஜனகர் காலத்திலும் அவருக்கு முந்தியும் இருந்ததை நாம் உபநிஷத்து மூலம் அறிகிறோம். அப்பொழுது கார்க்கி போன்ற பெண்கள் பெரிய சபைகளில் வாதம் செய்ததைப் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் பார்க்கிறோம். ஆகவே பெண்களும் , மற்ற ஜாதியினரும் வேதம் அறிந்தவர்களாக இருந்த காலம் ஒன்று இருந்தது.

 

 

‘’ஓம்’’ என்னும் பிரணவ மந்திரத்தையும், காயத்ரீ மந்திரத்தையும் மிக உச்சாணிக் கொம்பில் வைக்கிறார் மநு. பிராஹ்மணர்கள், காயத்ரீ மந்திரத்தைப் பிடித்துக் கொண்டால் போதும்,  வேறு யாக யக்ஞங்கள் இல்லாவிட்டாலும் ஒன்றும் தவறில்லை என்று அடித்துக் கூறுகிறார் மநு.

 

மேலும், மாநசீகமாகச் செய்யும் (மனதுக்குள்) காயத்ரீக்கு ஆயிரம் மடங்கு பலன் என்று மநு செப்புவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

குருவுக்கு எப்படி வணக்கம் செலுத்த வேண்டும் என்று மநு கூறுவதும், குருவானவர் இப்போது ‘சொல்’, இப்போது ‘நிறுத்து’ என்று சொல்ல வேண்டும் என்று மநு கட்டளையிடுவது நோக்கற்பாலது. ஆசிரியர் என்பவர், மாணவர்களை வகுப்பறையில் உட்கார வைத்துவிட்டு மற்ற அலுவல்களைச் செய்ய முடியாது; முழுக் கவனமும் மாணவர் மீது இருக்க வேண்டும் என்பதும் பெறப்படுகிறது.

மநு  தனது நூல் முழுதும்— துவக்கம் முதல், இறுதி வரை — புலன் அடக்கத்தையும் ஸத்தியத்தையும் வலியுறுத்துவதை நன்கு கவனிக்கவும். இவை இரண்டும் இருக்கும் எல்லோரும் பிராஹ்மணர்களே;  வேதம், காயத்ரீ எல்லாம் இதற்குப் பின்னரே. அதனால்தான் வள்ளுவனும் மநு சொன்னதை அப்படியே சொன்னான்—

மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் (134)

 

மநு சொன்ன முதல் 200 ஸ்லோகங்களிலேயே பல அதிசய விஷயங்களைக் கண்டு வருகிறோம்; இன்னும் 2400 ஸ்லோகங்களில் பல அதிசயங்களைக் காண்போம்.

 

-தொடரும்……………………….

 

காயத்ரி ஸ்தோத்ரம் கூறுவதால் ஏற்படும் பயன்

gayatri matha

Written by S Nagarajan
Post No.1157; Dated:- 8h July 2014.

This is the fifth part of S Nagarajan’ article on the Puranas. First four parts were published in the past few days:swami.

தேவி பாகவதம் 12ஆம் ஸ்கந்தத்தில் காயத்திரி ஸ்தோத்ரம் வருகிறது. அதைச் சொல்வதால் ஏற்படும் பயனை நாராயணர் நாரதருக்கு ஸ்தோத்திரத்தின் முடிவில் இப்படிக்
கூறுகிறார்.

“ ஓ, மஹாதேவீ! ஓ ஈஸ்வரியே! ஓ, சந்தி ஸ்வரூபிணீ! உன்னை நமஸ்கரிக்கிறேன்” என்று எவன் சந்தியாகாலத்தில் பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்கின்றானோ அவனுக்கு
அளவில்லாத புண்ணியம் கிடைக்கும்.

மஹா பாபத்தைப் போக்கும்.

மஹா சித்தியைக் கொடுக்கும்.

புத்திரன் இல்லாதவனுக்கு புத்திரனையும், செல்வம் இல்லாதவனுக்கு செல்வத்தையும், சகல தீர்த்த ஸ்நான பலத்தையும், தவம், யக்ஞம், யாகம் ஆகியவற்றின் பலனையும் வேண்டியவர்க்கு வேண்டிய பலனையும் கொடுக்கும்.

போக மோக்ஷங்களை வேண்டியவர்க்கு இம்மையில் போகத்தையும், அந்திய காலத்தில் மோக்ஷத்தையும் அடையும்படி செய்யும்.

இத்துதியை எந்தெந்த ஸ்நான காலங்களில் எவன் படித்து எந்த ஜலத்தில் ஸ்நானம் செய்த போதிலும் சந்தியா காலத்தில் ஸ்நானம் செய்த பலனை அடைவான்.

இதில் சந்தேகம் கிடையாது. ஓ! நாரதரே! இது அமிர்த வாக்கியமாகும்.
இது சத்தியம்! சத்தியம்!!

– 12ஆம் ஸ்கந்தம், ஐந்தாம் அத்தியாயம்

periyava-rudraksha
Kanchi Shankaracharya with Rudrakshas.

ருத்ராக்ஷம் அணிவதன் மஹிமை

நாயாய் இருந்தாலும் கழுத்தில் ருத்ராக்ஷம் தரிக்கப் பெறுமானால் அதுவும் முக்தி அடையும் என்று சொல்லப்பட்டிருக்கிறபோது, மானிடனுக்கு என்ன சொல்ல வேண்டும்? ஒருவன் ஜபம் மற்றும் தியானம் இல்லாதவனாய் ருத்ராக்ஷம் மட்டுமே தரிப்பவனாகி இருப்பின் அவன் கூட சர்வ பாவங்களிலிலிருந்தும் விடுபட்டவனாகி மேலான கதியை அடைகிறான். ஆதலால் ஒருவன் முயற்சி மேற்கொண்டு ஒரு ருத்ராக்ஷத்தையாவது தரிக்க வேண்டும். அப்படித் தரிக்கிறவன் 21 தலைமுறைகளை உய்வித்து சிவலோகத்தில் பூஜிக்கப்பட்டவனாக இருப்பான்.

ஈஸ்வரர் ஷண்முகனுக்கு உரைப்பது – தேவி பாகவதம் 11ஆம் ஸ்கந்தத்தில் ஆறாம் அத்தியாயம்

goddess-madurai-meenakshi-picture

மீன் போல பார்வையாலேயே ரக்ஷிக்கும் தேவி

தன் முகத்தினுடைய சௌந்தர்ய ப்ரவாஹத்தில் ஓடும் மீன்களைப் போல இருக்கும் கண்களை உடையவள்

வக்த்ர லக்ஷ்மி பரிவாஹ சலன் மீனாபலோசனா

இப்படி லலிதா சஹஸ்ரநாமத்தில் 18வது நாமத்தில் தேவி வர்ணிக்கப்படுகிறாள்.

மீனானது தன் குஞ்சுகளைப் பால் கொடுத்து வளர்ப்பதில்லை என்றும். அவைகளைத் தன் கண்களால் பார்ப்பதனாலேயே வளர்க்கின்றது என்று சொல்வதுண்டு.அதே போல தேவியானவள் அனைத்து லோகங்களையும் தன் பார்வையினாலேயே ரட்சித்து வருவதால் அவளை மீனாக்ஷி என்று சொல்வது வழக்கம். அதே அர்த்தத்தைத் தரும் மீனாபலோசனா என்ற பெயர் இங்கு குறிப்பிடப்படுகிறது,

ப்ரம்மாண்ட புராணத்தில் இடம் பெறும் லலிதா சஹஸ்ர நாமம் – 18வது நாமம்

To be continued………………………