
THE ‘GREAT’ FOUR ‘ IN TAMIL WORLD
Post No. 8426
Date uploaded in London – 30 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆகஸ்ட் மாத காலண்டர் 2020 (ஆடி -ஆவணி,சார்வரி வருடம்)
திரு ஞான சம்பந்தர் பிறந்தது முதல், மூன்றே வயதில் ஞானப் பால் உண்டு, ‘தோடுடைய செவியன்‘ என்று பாடியது வரை, உள்ள நிகழ்வுகளை சேக்கிழார் பெருமான் அழகிய எளிய தமிழில் கவி பாடியுள்ளார். இதோ 31 எடுத்துக் காட்டுகள்
xxx
பண்டிகை தினங்கள்- ஆகஸ்ட் 2 பதினெட்டாம் பெ ருக்கு, ஆடித்தபசு 3- ஆவணி அவிட்டம்,யஜுர் உபா கர்மா , ரக்ஷா பந்தன்; 4- காயத்ரீ ஜபம், ரிக் உபா கர்மா ; 11- கிருஷ்ணன் பிறப்பு; ஜன்மாஷ்டமி ; 15- சுதந்திர தினம்; 22 விநாயக சதுர்த்தி, 31 ஓணம் பண்டிகை
பவுர்ணமி -3, அமாவாசை -18; ஏகாதசி விரத ம் – 15, 29
சுப முகூர்த்த தினங்கள் – ஆகஸ்ட் 21, 23,24, 28,30,31

ஆகஸ்ட் 1 சனிக்கிழமை
உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அழகு இல் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்
ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக் கிழமை
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கப்
பூத பரம்பரை பொலியய் புனித வாய் மலர்ந்தழுத
சீதவள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
பாத மலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம் -1904
ஆகஸ்ட் 3 திங்கட் கிழமை
உளம்கொள் மறை வேதியர்தம் ஓம தூமத்து இரவும்
கிளர்ந்த திருநீற்று ஒளியின் கெழுமிய நண்பகலும் மலர்ந்து -1909
XXX
ஆகஸ்ட் 4 செவ்வாய்க் கிழமை
மரங்களும் ஆகுதிவேட்கும் தகையஎன மணந்துளதால் –1911
XXX
ஆகஸ்ட் 5 புதன் கிழமை
தேமருமென் சுரும்பு இசையால் செழும் சாமம் பாடுமால் -1912
XXX

ஆகஸ்ட் 6 வியாழக் கிழமை
வானமுகில் கூந்தல் கதிர்செய் வடமீன் கற்பின்
மனை வாழ்க்கைக் குலமகளிர் வளம்பொலிவ மாடங்கள்
XXX
ஆகஸ்ட் 7 வெள்ளிக் கிழமை
மடை எங்கும் மணிக்குப்பை, வயல் எங்கும் கயல் வெள்ளம்
புடை எங்கும் மலர்ப்பிறங்கல், புறம் எங்கும் மகப்பொலிவு
(மணிக்குப்பை- ரத்தினங்கள், கயல் – மீன் , பிறங்கல் – மலை, மகம் – யாகம்)
XXX
ஆகஸ்ட் 8 சனிக்கிழமை
பிரமபுரம், வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர்
பொரு இல் திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன்
வரு புறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சை வயம்
பரவு திரு கழுமலம் ஆம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால் -1917
(சீர்காழிக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே 12 பெயர்கள்!)
XXX
ஆகஸ்ட் 9 ஞாயிற்றுக் கிழமை
கவுணியர் கோத்திரம் விளங்கச்
செப்புநெறி வழிவந்தார் சிவபாத இருதயர் -1918
XXX
ஆகஸ்ட் 10 திங்கட் கிழமை
பகவதியார் எனப்போற்றும் பெயருடையார்
கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார் -1919
XXX

ஆகஸ்ட் 11 செவ்வாய்க் கிழமை
அருக்கன் முதல் கோள் அனைத்தும் அழகிய உச்சங்களிலே
……..
திருக் கிளரும் ஆதிரை நாள் திசை விளங்க – 1925
XXX
ஆகஸ்ட் 12 புதன் கிழமை
அண்டர் குலம் அதிசயிப்ப , அந்தணர் ஆகுதி பெருக
வண் தமிழ்செய் தவம் நிரம்ப மாதவத்தோர் செயல் வாய்ப்ப – 1926
XXX
ஆகஸ்ட் 13 வியாழக் கிழமை
அசைவு இல் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல -1927
XXX
ஆகஸ்ட் 14 வெள்ளிக் கிழமை
தவம் பெருக்கும் சண்பையிலே தா இல் சராசரங்கள் எல்லாம்
சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார் -1929
XXX
ஆகஸ்ட் 15 சனிக்கிழமை
சேய பொருள் திருமறையும் தீந்தமிழும் சிறக்க வரும்
நாயகனைத் தாலாட்டு நலம் பல பாராட்டினார் – 1947
XXXX
ஆகஸ்ட் 16 ஞாயிற்றுக் கிழமை
‘நாம் அறியோம் பரசமயம் உலகிற் எதிர் நாடாது
போம் அகல’ என்று அங்கை தட்டுவதும் – 1949
XXX

ஆகஸ்ட் 17 திங்கட் கிழமை
விதி தவறு படும் வேற்றுச் சமயங்கள் இடை விழுந்து கதி தவழ – 1950
XXX
ஆகஸ்ட் 18 செவ்வாய்க் கிழமை
கிளர் ஒலி கிங்கிணி எடுப்பக் கீழ்மை நெறிச் சமயங்கள்
தளர் நடையிட்டு அறத் தாமும் தளர் நடையிட்டு அருளினார் -1953
XXX
ஆகஸ்ட் 19 புதன் கிழமை
நீதி முறைச் சடங்கு நெறி முடிப்பதற்கு நீராடத்
தாதையார் போம் பொழுது தம் பெருமான் அருள் கூடச்
சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார் -1959
XXXX
ஆகஸ்ட் 20 வியாழக் கிழமை
பிள்ளையார் தமைக் கரையில் வைத்துத் தாம் பிரிவு அஞ்சித்
தெள்ளுநீர் புகமாட்டார் – 1962
xxx

ஆகஸ்ட் 21 வெள்ளிக் கிழமை
செம்மேனி வெண்நீற்றார் திருத்தோணி சிகரம் பார்த்து
‘அம்மே அப்பா’ என்று என்று அழைத்தருளி அழுதருள –1966
XXX
ஆகஸ்ட் 22 சனிக்கிழமை
தொழுகின்ற மலைக்கொடியைப் பார்த்தருளித் துணை முலைகள்
பொழிகின்ற ‘பல் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு’ – என்ன – 1969
XXX
ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக் கிழமை
உமை அம்மை எதிர் நோக்கும்
கண்மலர் நீர்த் துடைத்தருளி கையில் பொன் கிண்ணம் அளித்து
அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள் புரிந்தார் – 1971
XXX
ஆகஸ்ட் 24 திங்கட் கிழமை
யாவருக்கும் தந்தைத்தாய் எனும் இவர் இப்படி அளித்தார்
ஆவதனால் ஆளுடைய பிள்ளையாராய் அகில
தேவருக்கும் முனிவருக்கும் தெரிவு அரிய பொருளாகும்
தாவு இல் தனிச் சிவ ஞான சம்பந்தர் ஆயினார் – 1972
XXX
ஆகஸ்ட் 25 செவ்வாய்க் கிழமை
‘எப்பொருளும் ஆக்குவான் ஈசனே’ எனும் உணர்வும்
அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும் – 1974
XXX

ஆகஸ்ட் 26 புதன் கிழமை
சிவபாத இருதயரும் சிறு பொழுதில் …….
‘யார் அளித்த அடிசில் பால் உண்டது நீ’ – என வெகுளா 1975
xxxx
ஆகஸ்ட் 27 வியாழக் கிழமை
‘எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டு’ என்று
….
உச்சியினில் எடுத்தருளும் ஒரு திருக்கை விறல் சுட்டி -1976
XXX
ஆகஸ்ட் 28 வெள்ளிக் கிழமை
எல்லை இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை
மல்லல் நெடுந்தமிழால் இம்மாநிலத்தோர்க்கு உரை சிறப்பப் – 1978
XXX
ஆகஸ்ட் 29 சனிக்கிழமை
செம்மை பெற எடுத்த திருத் ‘தோடுடைய செவியன்’ எனும்
மெய்மை மொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார்
தம்மை அடையாளங்களுடன் சாற்றித் தாதையார்க்கு
‘எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே’ என இசைத்தார் -1979
xxx
ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக் கிழமை
அருள் கருணைத் திருவாளன் ஆர் அருள் கண்டு அமரர் எலாம்
பெருக்கவிசும் பினில்ஆ ர்த்துப் பிரசமலர் மலை பொழிந்தார் -1983
XXX
ஆகஸ்ட் 31 திங்கட் கிழமை
கந்தருவர் கின்னரர்கள் கான ஒலிக் கடல் முழக்கும்
இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசை முழக்கும்
அந்தம் இல் பல் கணநாதர் அர எனும் ஓசையின் அடங்க -1984

tags— பெரிய புராண, பொன்மொழிகள், ஆகஸ்ட் 2020, மாத, காலண்டர்
–SUBHAM–