திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532)

IMG_3156 (2)

Written by london swaminathan

 

Post No. 2532

Date: 12th February 2016

 

Time uploaded in London  காலை 8-48

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

IMG_3147

 

IMG_3154 (2)

IMG_3157 (2)

 

புத்த மதம் பற்றிய ஒரு நூலின் பின்னட்டையில் இந்த புத்தக விளம்பரம் வெளியாகியுள்ளது. இதை பிரிட்டிஷ் லைப்ரரியில் நேற்று புகைப்படமெடுத்தேன். வருங்கால ஆராய்ச்சியாளர்களுக்கு  உதவும் என்பதால் இங்கே பதிவு செய்கிறேன்.

 

சுமார் நூறு ஆண்டுகளுக்கு  முன் வெளியான எல்லா, தமிழ் ஆங்கிலப் புத்தகங்களிலும் திருவள்ளுவர் பற்றிப் பல தகவல்கள் உள்ளன. ஆனால் சமீப காலத்தில் வெளிவரும் நூல்களில் அவை இருட்டடிப்புச் செய்யப்பட்டுவருகின்றன. இதே போல திருக்குறள் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு நூல் என்ற உண்மையும் மறைக்கப்பட்டு வருகிறது.

 

நாங்கள் லண்டனில் பல்கலைக் கழக வளாகத்தில் வள்ளுவர் சிலை நிறுவியபோது, இவர் ஐந்தாம் நூற்றாண்டுப் புலவர் என்றே எழுதி அழைப்பிதழ் வெளியிட்டோம். வள்ளுவர் ஆண்டை கி.மு.31 என்று நிர்ணயித்த மகநாட்டில், கடும் எதிர்ப்பு, வெளிநடப்புகள் நடந்த விஷயங்களை தமிழ்கூறு நல்லுக அறிஞர்கள் அறிவர். அதிகாரம் என்ற சொல்லும், ஒவ்வொரு அதிகாரத்திலும் சம்ஸ்கிருதச் சொல்லும் இருப்பதால் வள்ளுவனின் காலத்தை மொழியியல் ரீதியில் ஐந்தாம் நூற்றாண்டிலேயே வைக்கமுடியும்.

 

இன்றுள்ள நிலையில் தொல்காப்பியம் (குறிப்பாகப் பொருளதிகாரம்), சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய மூன்றும் தமிழ்நாட்டின் வரலாற்றில் இருண்ட காலம் என்று கருதப்படும் 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டிலேயே தோன்றின. தொல்காப்பிய காலம் பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இதை விரிவாக எழுதியுள்ளேன்.

எனது வேறு சில பழைய கட்டுரைகள்:

Who was Tiruvalluvar? written and posted by me on 24 July 2013

 

Abert Einstein and Tiruvalluvar, posted on 17 December 2013

Tamil Merchant who dumped god into sea, posted on 17 August 2014

Elelasingan Kathai (Tamil), posted on 17 August 2014

 

வள்ளுவனும் வன்முறையும் (ஜூலை 24, 2013)

 

வள்ளுவன்  ஒரு  சம்ஸ்கிருத  அறிஞன் (நவம்பர் 5, 2012)

 

வள்ளுவான் சொன்ன புராண, இதிஹாசக் கதைகள் (ஜூலை 30, 2013)

 

வள்ளுவன் காமெடி ( 5 ஜனவரி, 2015)

தொல்காப்பியம் பற்றி சுமார் பத்து கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

 

–சுபம்–

காலம் என்னும் மர்மம்! – 3

Written  by S NAGARAJAN

Date: 2 November 2015

Post No:2293

Time uploaded in London :–  5-13 am

(Thanks  for the pictures) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ஹிந்து தத்துவ விளக்கம்

காலம் என்னும் மர்மம்! – 3

.நாகராஜன்

8

தேவர் உலக கால அளவுகள்

தேவர் உலகில் உத்தராயணம் அதாவது 6 மாதம் ஒரு பகலாகவும், தக்ஷிணாயனம், அதாவது இன்னொரு 6 மாதம் இரவாகவும் ஆகிறது. அதாவது மனித மாதங்கள் பன்னிரெண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகிறது.

பிரம்மாவின் ஆயுள்

அதிகமான ஆயுளுடன் இருப்பவர் பிரம்மா.

தேவர் கால அளவில் தேவர்களின் ஒரு நாள் என்பது மனிதர்களி  360 நாள் என்று பார்த்தோம்.

12,000 தேவ வருடங்கள் ஒரு சதுர் யுகம் எனப்படுகிறது.

ஒரு சதுர் யுகத்தில் கிருத யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம், கலி யுகம் என நான்கு யுகங்கள் உள்ளன.

கிருத யுகம் 4000 தேவ வருடங்களையும் திரேதா யுகம் 3000 தேவ வருடங்களையும் த்வாபர யுகம் 2000 தேவ வருடங்களையும் கலியுகம் 1000 தேவ வருடங்களையும் கொண்டிருக்கிறது.

இந்த வருடங்கள் யுகத்தின் சரியான காலமாகும்.

என்றாலும் யுக ஆரம்பத்திற்கு முன் ‘சந்தி’ என்ற காலமும் யுகத்திற்குப் பின் ‘சந்தி அம்சம்’ என ஒரு கால அளவும் உள்ளது.

இதன் படி கிருத யுகத்திற்கு சந்தி அளவு 400 தேவ வருடமும் சந்தி அம்சம் 400 தேவ வருடமும் ஆகிறது.

இதே போல திரேதா யுகத்திற்கு சந்தி அளவு 300 தேவ வருடமும் சந்தி அம்சம் 300 தேவ வருடமும் ஆகிறது.

ஆக, திரேதா யுகத்தின்  மொத்த வருடம் 3600. இதே போல த்வாபர யுகத்தின் மொத்த வருடம் 2400. கலி யுகத்தின் மொத்த வருடம் 1200.

ஆக சதுர் யுகங்களின் – நான்கு யுகங்களின் மொத்த காலம் 12000 தேவ வருடம். அதாவது 43,20,000 மனித வருடம்.

கலியுகம், 1200 x 360 = 4,32,000 மனித வருடம்.

த்வாபர யுகம் கலி யுகத்தைப் போல இரு மடங்கு. அதாவது 8,64,000 மனித வருடம்.

திரேதா யுகம் 12,96,000 மனித வருடம். கிருத யுகம் 17,28,000 மனித வருடம்.

ஆக மொத்தம் ஒரு சதுர் யுகத்தின் கால அளவு 43,20,000  மனித வருடம்.

இது போன்ற ஆயிரம் சதுர் யுகங்கள் – அதாவது 432 கோடி மனித வருடமே பிரம்மாவிற்கு ஒரு பகலாகும்.

இந்த பிரம்மாவின் ஒரு பகலே ‘கல்ப’ம் எனப்படுகிறது.

பிரம்மாவின் இரவுக்கு இன்னொரு இன்னொரு 432 கோடி மனித வருடம்.

ஆக, பிரம்மாவின் ஒரு பகலும் இரவும் சேர்ந்தால் 864 கோடி மனித வருடங்களுக்குச் சமமாகும்.

பிரம்மாவின் ஆயுள் 100 வருடமாகும். அவருக்கும் ஒரு முடிவு. உண்டு. அவர் ஆயுளுக்கும் எல்லை இப்படி இருக்கிறது என்பது தெளிவு.

பிரம்மாவின் முழு ஆயுளைக் கணக்கிட்டால் 31.54 x 10 to the power 13  மனித வருடங்களாகிறது!

இதே போன்ற பிரம்மாக்கள் ஏராளமானோர் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பர்.

இது தான் காலத்தின் எல்லையற்ற எல்லை!

மனக் கற்பனைக்கு அப்பாற்பட்ட உண்மை!!

மனித ஆயுளை இப்போது ஒப்பிட்டுப் பாருங்கள். எத்தனை சிறிது! ‘காய கல்பம்’ என ஆயுளை நீடிக்க வைக்கும் வித்தையைச் சொல்கிறார்கள்.

ஒரு கல்பம் அளவு – பிரம்மாவின் ஒரு நாள் அளவு – அதாவது 432 கோடி மனித வருடம் வாழ்கின்ற சித்தராகவே நீங்கள் இருந்தாலும் எல்லயற்ற கால வெள்ளத்தில் நீங்கள் ஒரு சிறு துளி தான்!

ஆயுள் ‘குறைவாக’ உள்ள மற்ற தேவர்களும் இருக்கிறார்கள்.

“தெய்வீக நிர்வாகத்தில்” அவரவர்க்கு உரிய பணியைச் செய்யும் இந்திரன், அக்னி, சூரியன், வருணன் ஆகிய தேவர்களின் ஆயுள் மனிதரின் கால அளவை விட மிகப் பெரியது. என்றாலும் பிரம்மாவின் ஆயுளுடன் ஒப்பிடும் போது அது மிகக் குறைவே!

Konark_Sun_Temple_Wheel

SUN TEMPLE, KONARK, ORISSA

9

ஆன்மீக உயர் நிலையை எட்டி மேலே சொன்ன தேவ நிலையை மனிதர்கள் அடையலாம்.

கடோபநிஷத்தில் – யமன் – இறப்பிறகு அதிபதி – இதை விளக்குகிறார்.

தவத்தின் மூலம் பிரம்ம நிலையை எய்துதற்கு முடியும். என்றாலும் அவன் இந்த நிலைக்கு மட்டுமே வர முடிந்தது என விவரிக்கிறான்.

பிரம்ம நிலையை எய்துவதே மனிதனின் இலட்சியம்.

தைத்ரியோபநிஷத் பேரின்ப நிலைகளை வரிசையாகக் குறிப்பிடும் போது (இன்பமான, லட்சிய) மனித இன்பம், கந்தர்வர், பிதிர், தேவர், இந்திரன், பிரஹஸ்பதி, பிரஜாபதி, பிரம்மா எனக் குறிப்பிடுகிறது.

ஆயுளும் இதே வரிசையில் கூடுகிறது.

சில ரிஷிகள் – முனிவர்கள் – ஒரு கல்ப காலம் ஆயுளை உடையவர்களாக இருக்கின்றனர். மற்ற சிலரோ ஒரு மன்வந்தரமே ஆயுள் உடையவர்களாக இருக்கின்றனர்.

பெரும் தவ சிரேஷ்டர்கள் பிரம்மாவின் ஆயுள் எல்லையையும் தாண்டி வாழ்கின்றனர்!

மன்வந்தரம் என்பது கல்பத்தில் ஒரு பகுதி. 14 மன்வந்தரம் கொண்டது ஒரு கல்பம். ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் ஒரு மனு உண்டு.

நாம் இப்போது இருக்கும் கல்பத்தின் பெயர் ஸ்வேத வராஹ கல்பம்.

நாம் இப்போது இருக்கும் மன்வந்தரத்தின் பெயர் வைவஸ்வத மன்வந்தரம். வைவஸ்வத மனு என்பவரின் பெயரைக் கொண்டது இது!

அதாவது ஒரு மன்வந்தரம் சுமார் 31 கோடி மனித வருடங்களைக் கொண்டது. ((துல்லியமாக வேண்டுமெனில் கல்பத்தை 14ஆல் வகுத்துச் சரியாகவும் கணக்கிட்டுக் கொள்ளலாம்)

ஒவ்வொரு மன்வந்தரத்திலும் இந்திரன், அக்னி, சில ரிஷிகள் மாறலாம். ஆனால் அவர்களின் பணிகள் புதிய பெயரிலேயே நடந்து கொண்டே தான் இருக்கும்.

சப்த ரிஷிகளின் பெயர்கள் பல்வேறு விதமாகக் கூறப்படுவதால் குழப்பம் அடைவதாகப் பலரும் சொல்வர்.

அனைத்துப் பெயர்களும் சரியே! எந்த மன்வந்தரத்து சப்த ரிஷிகள் என்று கேட்டால் குழப்பம் நீங்கி விடும்!

நம் முன்னோர் வகுத்து வைத்திருக்கும் துல்லியமான கால அளவுகளைப் போல உலகின் வேறு எந்த மதமும், நாகரிகமும் வகுத்து வைத்திருக்கவில்லை.

அதனால் தான் காஸ்மாஸ் தொடரை தொலைக்காட்சி சீரியலாக தயாரித்த பிரபல விஞ்ஞானி கார்ல் சகன் உலகின் எந்த மதம் அல்லது நாகரிகம் எல்லையற்ற கால அளவைச் சரியாகச் சொல்லி இருக்கிறது என ஆராய ஆரம்பித்தார்.

ஹிந்து மதத்தின் இந்த கால அளவுகளைக் கண்டு அவர் பிரமித்தார். உடனே இந்தியாவிற்கு வந்து சிதம்பரம் சென்றார்.

அவர், தன் தொடரில் நடராஜரை முதலில் காட்டியது இதனால் தான்!

நமது அறிவுத் திறனுக்கும் மூளை ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட காலம் பற்றிய சரியான விவரணம் தருவது –

ஹிந்து மதமே!

  • தொடரும்

குறிப்பு: காலம் பற்றிய இந்த தொடர் எழுதப்பட்ட நாள் 14-7-1996. பழைய கைப்பிரதிகளை கிழிக்க முற்பட்ட போது இது என் கையில் அகப்பட்டது. ஆஹா, எதற்கும் ஒரு காலம் வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இதை முழுத் தொடராக்குகிறேன்.

 

காலம் என்னும் மர்மம்! – 2

mayan-calendar

Mayan Calendar

Written  by S NAGARAJAN

Date: 1 November 2015

Post No:2291

Time uploaded in London :–  14- 40

(Thanks  for the pictures) 

 

 

ஹிந்து தத்துவ விளக்கம்

காலம் என்னும் மர்மம்! – 2

.நாகராஜன்

4

தன் வலிமையால் பெரிதான காலமானது அதிகம் படிப்புள்ளவனானாலும், அல்பப் படிப்புள்ளவனானாலும், பலசாலி ஆனாலும், பலவீனன் ஆனாலும், அழகுள்ளவனானாலும், குரூபி ஆனாலும், நல்லவனானாலும், கெட்டவனானாலும் எல்லோரையும் தன் வசமாக்கிக் கொள்கிறது.

மனிதன் முதலில் எரிக்கப்பட்டதையே பிறகு எரிக்கிறான். அடிக்கப்பட்டதையே பிறகு அடிக்கிறான்.

நாசமடைந்ததே நசிகிறது. அடைய வேண்டியதையே அடைகிறான்.

 

ஆச்சரியமான விதியைச் சிந்தித்தால், காலமாகிற இந்தக் கடலுக்குத் தீவு இல்லை!

அக்கரை ஏது? இக்கரையும் காணப்படுகிறதில்லை. இதன் முடிவை நான் காணேன்.

காலம் யாவற்றையும் எடுத்துக் கொள்ளுகிறது. காலம் யாவற்றையும் கொடுக்கிறது.

யாவும் காலத்தால் செய்யப் படுகின்றன.

 

 

காலம் எல்லாவற்றையும் நிலை பெறச் செய்கிறது.காலம் எல்லாவற்றையும் பழுக்கச் செய்கிறது.

வேதமறிந்த ஜனங்கள் கால ரூபியான பிரம்மத்தை, மாதத்தையும், பட்சத்தையும் வீடாகக் கொண்டதும், இரவாலும், பகலாலும் மூடப்பட்டதும், ருதுக்களைத் துவாரமாகக் கொண்டதும், பிராண வாயுவை முகமாகக் கொண்டதுமாகக் கூறுகிறார்கள்.

 

ஐந்து விதமான இந்திரியங்கள் யாவும் எதைத் தொடர்ந்து அறிகிறதில்லையோ அதைக் காலம் என்று தெரிந்து கொள்.

இவ்வுலகம் அனைத்தும் அதன் வசம் இருக்கிறது.

 

பூஜ்யமான காலமானது பூதங்களுக்குள்ள வேற்றுமையைச் செய்கிறதென்று இவ்வளவைக் கூடத் தெரிந்து கொள்ள முடியாது.

காலத்தைக் காட்டிலும் இவ்வித சக்தியுள்ள வேறு பதார்த்தம் இல்லாததாலும் எல்லாப் பிராணிகளும் அடையத்தக்க அக்காலத்தை அடையாமல் எங்கு போக முடியும்?

 

ஓடுகிறவனானாலும் அக்காலத்தைத் தள்ள முடியாது. நின்றாலும் அதிலிருந்து விலக மாட்டாது.

ஐந்து விதமான இந்திரியங்களும் யாவும் அதைக் காண்பதில்லை.

சிலர் இக்காலத்தை அக்னி என்று சொல்கிறார்கள். சிலர் பிரம்மா என்று சொல்கிறார்கள்.

argos clock 3

5

 

காலத்தைப் பற்றி ஶ்ரீ கிருஷ்ணர் கீதையில் கூறுவது:-

सहस्रयुगपर्यन्तमहर्यद्ब्रह्मणो विदुः ।

रात्रिं युगसहस्रान्तां तेऽहोरात्रविदो जनाः ॥८- १७॥

ஸஹஸ்ர யுக பர்யந்தமஹர்யத் ப்ராஹ்மனோ விது:  I                        

ராத்ரிம் யுக சஹஸ்ராந்தாம் தேஹோராத்ரி விதோ ஜனா: II (கீதை 8 – 17)

 

இதன் பொருள்: அநுபூதியினால் பிரம்மாவின் ஒரு பகல் ஆயிரம் மகாயுகங்களையும், அவரது இரவு மற்றும் ஆயிரம் மகாயுகங்களையும் கொண்டிருக்கிறது என்று எந்த யோகிகள் உணர்கிறார்களோ அவர்களே காலத்தின் உண்மை நிலையை உணர்ந்தவர்கள்.

இவ்வாறு பகவத் கீதையில் ஶ்ரீ கிருஷ்ணர் காலத்தைப் பற்றி விரிவாக அர்ஜுனனுக்கு விளக்குகிறார்.

இது எவ்வளவு பொருள் பொதிந்தது என்பதை பிரம்மாவின் ஆயுள் பற்றி அடுத்து விவரிக்கும் போது அறியலாம்.

 

 argos clock

6

இனி கால அளவுகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

நாம் வாழும் பூமியில் நம்மால் உணரப்படும், அளக்கப்படும் நேரம் வேறு.

சூரிய மண்டலத்திற்கும், நட்சத்திர மண்டலங்களுக்கும் எப்படி கால அளவு இருக்கிறது என்று பார்த்தோமானால் வருவது வேறு அளவு. இந்த அளவைக் கொண்டு பிரம்மாவின் ஆயுளைக் கணக்கிட்டால் பிரமித்துத் திகைப்போம்!

 

மனித அளவில் உள்ள கால அளவுகள் இதோ:

18 இமைப் பொழுது                     1 கஷ்டை

18 கஷ்டை                               1 கலை

30 கலை                                  1 க்ஷணம்

12 க்ஷணம்                                1 முகூர்த்தம்

30 முகூர்த்தம்                             24 மணி அல்லது ஒரு நாள்

15 நாள்                                    1 பக்ஷம்

2 பக்ஷம்                                    1 மாதம்

2 மாதம்                                    1 ருது

6 ருது                                       1 வருடம்

ஒரு வருடம் இரண்டு அயனமாகப் பிரிக்கப்படுகிறது.

உத்தராயணம்             – 6 மாதம்

தக்ஷிணாயணம்           – 6 மாதம்

 

 

7

இனி இறந்தவர்களின் உலகில் கால அளவுகளைப் பார்ப்போம்.

தேவ நிலையை எய்தாமல் இறந்தவர் இருக்கும் உலகின் கால அளவுகள் வேறு. ‘பிதிர்லோகம் எனக் குறிப்பிடப்படும் இந்த உலகில் மனித உலகின் ஒரு பக்ஷம் அதாவது 15 நாட்கள் ஒரு பகலாகவும் இன்னொரு பக்ஷம், அதாவது அடுத்த 15 நாட்கள் இரவாகவும் இருக்கிறது. அதாவது மனித தினத்தின் 30 மடங்கு ஒரு பிதிர் தினமாகும்.

 

இறந்தவருக்கு அவர் இறந்த வருடம் மாதத்திற்கு ஒரு முறைபடையல்உணவு அளிக்கும் வழக்கத்தை நினைத்துப் பார்த்தால் புரியும்அவர்களது கணக்குப்படி தினமும் நாம் உணவு அளிக்கிறோம் என்று.

இனி தேவர் உலக கால அளவுகளை அடுத்து பார்ப்போம்.

to be continued………………………………..

காலம் என்னும் மர்மம்! – 1

apple-kitchen-wall-clocks

ஹிந்து தத்துவ விளக்கம்                                          புதிய தொடர்

காலம் என்னும் மர்மம்! – 1

Written  by S NAGARAJAN

Date: 31 October 2015.

Post No:2288

Time uploaded in London :–  7-16 AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

.நாகராஜன்

1

வியாசர் சுகருக்கு விளக்கியது        

காலம் என்னும் மர்மத்தை இந்திய நூல்கள் விளக்கியுள்ளது போல உலகின் வேறு எந்த நூல்களும் விளக்கவில்லை.

விஞ்ஞானிகளில் கார்ல் சகன் உள்ளிட்டோர் ஹிந்து மதத்தில் காலம் விளக்கப் பட்டுள்ள விதத்தை வியந்து பாராட்டி உள்ளனர். அதன் மீதுள்ள மதிப்பின் காரணத்தால் கால நடனத்தைஆடும் நடராஜரையும் தங்கள் காஸ்மாஸ் (Cosmos) தொடரில் பயன்படுத்தி உள்ளனர்.

 

 

மஹாபாரதத்தில் காலம் பற்றிய விவரம் ஏராளமான இடங்களில் பல்வேறு நோக்கில் விளக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலவற்றை இங்கு பார்ப்போம்.

சாந்தி பர்வம் 244வது அத்தியாயத்தில் வருவது இது.

வியாச முனிவர் சுக முனிவருக்கு காலத்தைப் பற்றி இப்படி விவரிக்கிறார்:-

காலமானது நானாவிதமாக ஏற்பட்டிருக்கிறது. என்னால் உனக்கு முன்னே சொல்லப்பட்டதும், மக்களை உண்டு பண்ணுகிறதும், அழிப்பதுமான (பரமாத்ம ரூபமான) காலமானது ஆதி, அந்தம் இல்லாதது.

 

 

பூதங்களுடைய உற்பத்தியையும், பாலனத்தையும், அழிவையும் செய்யும் ஆகிய இவற்றின் விளக்கமாக அமைகிறது காலம்.

ஒன்றுக்கொன்று தொடர்ச்சியாக படைக்கப்பட்ட பூதங்கள் தமது இயல்புடன் கூட அப்படிப்பட்ட காலத்தில் இருக்கின்றன.

காலமே சிருஷ்டி. காலமே துஷ்டி.

காலமே வேதம். காலமே கர்த்தா.

காலமே காரியம். காலமே கர்மத்தின் பலன்.

argos clock 2

 

2

இந்திரனுக்கும் பலிக்கும் நடந்த சம்வாதம்

இந்திரனுக்கும் விரோசனன் மகனான பலிக்கும் இடையில் நடந்த சம்வாதம் – (அர்த்தமுள்ள உரையாடல்) – காலத்தின் வன்மையை நன்கு விளக்குகிறது.

பாழடைந்த வீட்டில் கழுதை வேஷத்தில் இருந்த பலியைப் பார்த்த இந்திரன், “அசுர வேந்தனே! உன் பெரிய குடை எங்கே? பொன் பாத்திரம் எங்கே? பிரம்மதேவர் உனக்கு அளித்த மாலை எங்கே?” என்று கேட்டான்.

பலி இந்திரனை நோக்கி நகைத்து, “அவற்றையா கேட்கிறாய்? யாவும் காலத்தால் வரும்! .நல்ல காலத்தில் போகாது.

 

 

இவ்வுலகத்தில் யாவும் காலத்தின் மாறுதலில் எல்லாமே நிலையற்றனவாயிருப்பதைக் கண்டு நான் சோகப்படாமல் இருக்கிறேன்.

இவ்வுலகம் அனைத்தும் முடிவுள்ளதாக இருக்கிறது.

கொன்ற பின்னும் வென்ற பின்னும் புருஷ வீரம் உள்ளவன் போல் இருக்கின்ற மனிதன் உண்மையில் கர்த்தாவே அல்ல. கர்த்தாவாய் இருப்பது தான் அதைச் செய்கிறது.

மற்றும் சிலர் ஒன்றாய் இருக்கும் காலத்தை வருடங்கள் என்றும், மாதங்கள் என்றும், பட்சங்கள் என்றும், தினங்கள் என்றும், க்ஷணங்கள் என்றும், காலை என்றும், மாலை என்றும், நடுப்பகல் என்றும், முகூர்த்தம் என்றும் பல விதமாகக் கூறுகிறார்கள்.

 

 

இவ்வுலகம் யாவும் எதன் வசத்தில் இருக்கிறதோ அதைக் காலம் என்று தெரிந்து கொள்!

இந்திரனே! உன்னைப் போல் வன்மையும் பராக்ரமும் பொருந்திய பல்லாயிரம் இந்திரர்கள் காலம் சென்றார்கள். உனக்கு கர்வம் வேண்டாம். வருங்காலத்தில் உள்ள கதியை எவன் கண்டான்?”

 

காலத்தின் வன்மையையும், தன்மையையும் பலி, இந்திரனுக்கு இப்படி விளக்கினான். (மஹாபாரதம் சாந்தி பர்வம் 234வது அத்தியாயத்தில் ஒரு சிறு பகுதி சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது)

 

antique-kitchen-wall-clocks

3

பிருஹஸ்பதியிடம் மனு கூறியது

பிருஹஸ்பதியிடம் மனு காலத்தைப் பற்றி விவரிக்கிறார் :-

பூமியின் உருவத்தை விட ஜலத்தின் உருவம் பெரியது.                            

ஜலத்தை விட தேஜஸ் பெரியது.                                                  

தேஜஸை விட வாயு பெரியது.                                                        

வாயுவை விட ஆகாயம் பெரியது.                                                          

ஆகாயத்தை விட மனம் மிகப் பெரியது.                                      

மனத்தை விட புத்தி பெரியது.                                                          

புத்தியை விடக் காலம் பெரியது, என்று இப்படிச் சொல்லப்படுகிறது.

 

இந்த உலகமெல்லாம் எந்த விஷ்ணுவின் உருவமோ அந்த விஷ்ணு காலத்தை விடப் பெரியவர்!

மிக அழகாக ஒவ்வொன்றையும் ஒப்பிட்டு எது எதை விடப் பெரியது என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுவது ஹிந்து இலக்கியம் ஒன்று மட்டுமே! இப்படி எதை எதனுடன் ஒப்பிட வேண்டும் என்பதே மற்ற பழைய நாகரிகத்தினர்க்குத் தெரியுமா என்பது ஐயப்பாடே! எதிர்காலத்தில் விஞ்ஞானம் இவற்றைப் படிப்படியாக நிரூபிக்கும் என்பதில் ஐயமில்லை.

(சாந்தி பர்வம் 204வது அத்தியாயம்

 

மஹாபாரதம் இன்னும் பல்வேறு இடங்களில் காலம் பற்றி விரிவாக விளக்குகிறது! காலத்தைப் பற்றி மிக விளக்கமாக அறிந்து கொள்வதால் ஏற்படும் முதல் பலன் எல்லையற்ற கால வெள்ளத்தில் நாம் சிறுதுளியினும் சிறுதுளியே என்பதை அறிவதன் மூலம் நம் அகங்காரம் அகலும். அத்துடன் கூட  ‘நிலையாமைஎன்பது நன்கு புரியப் புரிய மன அமைதி தானே உருவாகும்!

***********         (தொடரும்)

காலம் என்னும் மாபெரும் சக்தி! பாரதியார் கருத்து

பாரதி

Article No.2018

Written ச .நாகராஜன்

Swami_48@yahoo.com

Date : 25  July 2014

Time uploaded in London :8-49

 

 

முகலாய சாம்ராஜ்ய அழிவுக்கு மகாகவி பாரதி கூறும் காரணம்! – 2

.நாகராஜன்

 

(இக்கட்டுரையின் முதல் பகுதி ஜூலை 23 வெளியாகியது)

 

காலம் என்னும் மாபெரும் சக்தி!

பாரத ராஜ்யம் மொகலாயர் கையினின்றும் நழுவ வேண்டுமென்று கால சக்தி நிர்ணயம் செய்து விட்டது.”

என்று கட்டுரையின் முன் பகுதியில் கூறும் மகாகவிகாலசக்தியைப் பற்றி விரிவாகக் கூறுகிறார் இப்படி:-

ஓர் பெரிய ராஜ்யம் அழிவதென்றால் அது ஸாமான்யமான சம்பவமன்று. கடைசிப் பொழுதிலே தான் காலசக்தி ஓர் மனுஷ்யாவதாரமாகத் தோன்றி அதை முடித்து வேறு சகம் தொடங்கச் செய்து விட்டுப் போகிறதாயினும், அதற்கு முன்னிட்டே நெடுங்காலமாகக் காலசக்தி பதினாயிர வழிகளிலே மறைவாக அதனை அரித்துக் கொண்டு வருகின்றது. ஒரு ராஜ்யத்தின் மரணத்தை நினைக்கும்போது மிகப்  பரிதாபமுண்டாகிறது. நேற்று வரை கல்லைப் போலிருந்த அதன் சரீரத்திலே மறைவாகப் பதினாயிரம் புண்களுண்டாகின்றன. அந்தப் பதினாயிரம் புண்களின் வழியாகவும் யமன் உள்ளே நுழைகிறான். ஒவ்வொரு புண் இலேசாக வெளிக்குத் தென்படும். பார்ப்பவர்கள்! இவ்வளவு வலிமையுடைய சரீரத்தை இச்சிறிய புண் என்ன செய்து விடும்?” என்று யோசிப்பார்கள். முடிவில் திடீரென்று அந்தப் பெரியவுடல் மலை சரிவது போலச் சரிந்து விழும்போது உலகத்தாரெல்லாம் கண்டு வியப்படைவார்கள்

காலசக்தியைப் பற்றிய இந்த பாரா தனியாக தரப்பட்டிருக்கிறது. ம்காகவியின் அழகிய வாக்கியங்களில் பெரும் உண்மை புதைந்திருக்கிறது. ஒரு சாம்ராஜ்யத்தின் அழிவுக்கான வித்து சிறு சிறு புண்களாகபதினாயிரவழிகளிலே உண்டாகும் என்கிறார் அவர்.

பதினாயிரம் புண்களின் வழியாகவும் எமன் உள்ளே நுழைகிறான் என்ற அழகிய வாக்கியம் ஆழ்ந்த பொருளைத் தருகிறது. ஒரு வழியில் அல்லா, ஆயிரம் வழிகளை உண்டாக்கி அழிவைத் தருகிறான் யமன்!

இதையே மனதில் ஊன்றிப் படிப்பவர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அழிவுக்கும்பதினாயிரவழிகளிலே புண்கள் ஏற்பட்டு விட்டன; அழிவு ஒன்று தான் பாக்கி என்று அவர் குறிப்பால் உணர்த்துகிறார் என்ற உணர்வு ஏற்படும்!

காலசக்தியைப் பற்றிய மகாகவி பாரதியாரின் தெளிவான சிந்தனை அவரது பாடல்களில் பல்வேறு இடங்களில் பளிச்சிடுவதைப் பார்க்கலாம்இதைத் தனியாக ஒரு கட்டுரையில் பின்னர் பார்ப்போம்.

 

 

பதினாயிரம் புண்கள்

பாரதியாரின் வார்த்தைகளில் கட்டுரையின் அடுத்த பகுதி இது:-

“மொகலாய ராஜ்யத்தின் சரீரத்திலே தோன்றிய கணக்கற்ற புண்களை இங்கே விஸ்தரித்து முடியாது. ஒன்றா? இரண்டா? ஆயினும், அவுரங்கஜீப்பைப் பற்றிக் கல்கத்தா மாதாந்தப் பத்திரிகையொன்றில் யதுநாத் ஸர்க்கார் என்னும் பண்டிதர் எழுதி வரும் சரித்திரக் குறிப்புகளை வாசிக்கும் போது ஒரு முக்கியமான பெரும் புண் தென்படுகிறது.ல்

“ஸம்சயாத்மா விநச்யதி” என்று பகவான் கீதையிலே சொல்லுகின்றார். ஒருவனுக்கு நாசம் வந்து விட்டதென்பதற்குத் தெளிவான அடையாளம் யாதெனில், அவன் உள்ளத்திலே சமுசயங்கள் வந்து குடிகொண்டு விடும். இது மிக நல்ல அடையாளம். அவுரங்கஜீப் ராஜாவின் நெஞ்சம் சமுசயங்களுக்கெல்லாம் ஓர் வாசஸ்தலமாக இருந்தது. ராஜா மனதில் எப்போது அசாதாரணமான சமுசயங்கள் உதிக்கின்றனவோ, அப்போது அவனுடைய ராஜ்யம் உதிரத் தொடங்கி விட்டதென்று பாவித்துக் கொள்ளலாம்.

அவுரங்கஜீப்பின் சமுசயங்களை வாசிக்கும்போது மனதிற்கு மிகுந்த சலனமுண்டாகிறது. இவ்வளவு வல்லமை கொண்ட அரசனுக்கு இவ்வளவு சமுசயங்கள் எப்படி உண்டாயினவென்று வியப்புண்டாகிறது.

என்ன செய்யலாம்?

காலசக்தியின் செயல்!

இப்படியாக மகாகவி பாரதியார் காலசக்தியின் செயலை மீண்டும் வற்புறுத்திக் கூறுகிறார் இங்கு!

அவுரங்கஜீப்பின் சமுசயங்கள் என்னென்ன? சுவாரசியமாகப் பட்டியலிடுகிறார் பாரதியார்!

அதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்!

****************

 

காலம் பற்றிய ஐந்து அற்புதக் கதைகள்!-1

க்ரிஷ்ன ஈட்டி

Written by London swaminathan

Research Article No.1875; Dated 19 May 2015.

Uploaded in London at காலை 8-45

Already posted in English

காலம் என்பதை இந்துக்கள் தெரிந்துகொண்ட அளவுக்கு, புரிந்துகொண்ட அளவுக்கு,வேறு எந்த கலாசாரமும், நாகரீகமும் அறியவில்லை. இந்துக்களுக்கு ‘காலச்சக்கரம்’ என்ற சொல் நன்கு தெரிந்த சொல். அதாவது காலம் என்பது சுழன்றுகொண்டே இருக்கும்—காலம் என்பது வட்டப் பாதையில் செல்லும் என்பது அவர்கள் கணிப்பு. நான்கு யுகங்கள் முடிந்தவுடன் மீண்டும் கிருத யுகம் துவங்கி நான்கு யுகங்கள் வரும்—இவ்வாறு பல கோடி ஆண்டுகள் ஆனபின்னர் ஒரு பிரம்மாவின் ஆயுள் முடியும் என்பதெல்லாம் இந்துக்களுக்கு அத்துபடியான விஷயம். இந்த மாதிரி பெரிய எண்கள், சுழற்சி முதலியவை வேறு எங்கும் காணப்படா.

மேற்கத்தியர் கணக்குப்படி காலம் என்பது சக்கரம் போல சுழலாது—அது நீண்ட ஆறு ஓடுவது போல ஒரே திசையில் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும் என்பர். அவர்கள் இப்பொழுது கருந்துளைகள் (Black holes) என்னும் விண்வெளி அதிசயம் பற்றி ஆராய, ஆராய புதுப்புது தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதன் முடிவில் இந்துக்கள் சொன்னதே சரி என்று உணர்வர்.

இந்துக்களின் கடவுளுக்குக் கூட காலத்தின் பெயர்கள் இடப்பட்டன. சிவனை ‘மஹா கால’ (Maha Kala) என்றும், ‘காலாக்னீ ருத்ராய’ (Kalagni Rudraya) என்றும் மந்திரங்கள் சொல்லுகின்றன. அதாவது மாபெரும் காலம், இறுதி நேரத்தில் எல்லோரையும் விழுங்குபவன், காலம் என்னும் தீயில் அனைத்தும் கருகி சாம்பல் ஆகும்—விபூதி ஆகி விடும் என்பதை இந்துக்கள் உணர்வர். அதே போல விஷ்ணுவையும் ‘பூத, பவ்ய, பவத் பிரபு’ (விஷ்ணு சஹஸ்ரநாமம்) என்று அழைப்பர். அதாவது அவனே “கடந்த, வரும், நிகழ் காலம்”. எல்லா கடவுளரையும் “குணத்ரயாதீத, காலத்ரயாதீத” என்றும் இந்துக்கள் போற்றுவர். அதாவது இறைவன் என்பவன் குணத்தையும் காலத்தையும் கடந்தவன். அவனை நமது காலம் கட்டுப்படுத்தாது. இதெல்லாம் மேல்நாட்டினருக்குப் புரியாத விஷயம்!

காலத்தின் தன்மையை விளக்க ஐந்து அருமையான கதைகள் உள. அவற்றை இரண்டு பகுதிகளில் தருவேன்.முதல் பகுதியில் மூன்று கதைகளைக் காண்போம்.

1.விஷ்ணு புராணக் கதை

விஷ்ணுவும் நாரதரும் ஒரு காட்டின் வழியே பயணம் செய்து கொண்டிருந்தனர். விஷ்ணுவுக்குத் திடீரென தாகம் எடுத்தது. தூரத்தில் ஒரு கிராமம் தெரிந்தது. அங்கே சென்று கொஞ்சம் தண்ணீர் வாங்கி வருமாறு நாரதரிடம் விஷ்ணு கேட்டுக் கொண்டார். உடனே நாரதர் அந்த கிராமத்துக்குச் சென்று ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். அழகிய பெண் கதவைத் திறந்தாள். கண்டதும் காதல் மலர்ந்தது. அது கல்யாணத்தில் போய் முடிந்தது. நாரதர் மிகவும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.

ஒரு நாள் பெரிய வெள்ளம் வந்தது. அந்த கிராமமே வெளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நாரதர் குடும்பமும் வெள்ளத்தில் சென்றது. நாரதர் செய்த புண்ணியம் அவர் காட்டில் போய் ஒதுங்கினார். எந்த இடத்தில் விஷ்ணுவிடம் விடை பெற்றாரோ அதே இடத்தில் கரை ஒதுங்கினார். விஷ்ணு, “என்ன நாரதரே! தண்ணீர் கிடைத்ததா?” என்று கேட்டார். நாரதருக்கு ஒரே வியப்பு. இது என்ன, நான் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி குழந்தைகளையும் பெற்று வயசும் ஆகிவிட்டதே, இவர் ஏதோ ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தண்ணீர் கொண்டுவரச் சொன்னது போலப் பேசுகிறாரே என்று எண்ணி விஷ்ணுவிடமே போய் விளக்கம் கேட்டார். அப்போது விஷ்ணு சொன்னார், நாரதரே உமது பூவுலக நேரம் வேறு, எமது தேவலோக நேரம் வேறு என்று.

இது போன்ற கதைகள் இந்து மதத்தில் ஏராளம் உண்டு. அர்ஜுனனை மாதலி என்பவன் இந்திர லோகத்துக்கு அழைத்துச் சென்று ஐந்து ஆண்டு விருந்தினராக வைத்திருந்த போது நடந்தவையும், ரேவதி நட்சத்திரக் கதையும் இது போன்றவையே. சம்பந்தரும் சுந்தரரும் காலப் பயணம் செய்து எப்போதோ இறந்த இருவரை உயிர்ப்பித்தனர் என்று முன்னரே ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.

இந்த அளவுக்கு வேறு கலாசாரங்களில் கதைகளும் இல்லை. கதைகள் இருந்தாலும் அதை விளக்க எந்த கொள்கைகளும் இல்லை.

அவர்களுக்கு சிறிய எண்கள் மட்டுமே தெரிந்திருந்தன. இதே காலத்தில் வேத மந்திரங்களோ பிரம்மாண்டமான எண்களைப் பயன்படுத்தின.

IMG_3526

கதை 2: இன்னும் ஒரு கதையைக் காண்போம்

லீலாசுகரின் “பால கோபால ஸ்துதி”யில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. கிருஷ்ணன் குழந்தையாக இருந்தகாலையில், யசோதா அவனைத் தொட்டிலில் போட்டு ஆட்டி தூங்கச் செய்கிறாள். அப்பொழுது தாலாட்டுப் பாட்டில் ராமாயணக் கதையைப் பாட்டாகப் பாடிக் கொண்டிருந்தார். மாரீசன், மாய மான் வேடத்தில் வந்து, அதை ராமன் துரத்திச் செல்லும் கட்டத்தை யசோதா பாடிக் கொண்டிருந்தாள். திடீரெனக் குழந்தைக்கு –அதாவது குழந்தைக் கிருஷ்ணனுக்கு — தூக்கிவாரிப் போட்டது. லட்சுமணா! என் வில் எங்கே? என்று கிருஷ்ணன் (குழந்தை) உரத்தகுரலில் கத்தினான். அதாவது பூர்வ ஜன்ம நினைப்பு வந்தது. இதில் அவர் காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்தது தெரிகிறது.

கதை 3: இந்திரனும் எறும்பு வரிசையும்

பிரம்ம வைவர்த்த புராணத்தில் இந்திரனின் மமதை, அஹங்காரம் அடக்கப்பட்ட ஒரு கதை வருகிறது. இந்திரன் கம்பீரமாக அவனது சபையில் அமர்ந்திருந்த போது,  திடீரென எறும்புகள் ஒரு நீண்ட வரிசையில் சபைக்குள் நுழைந்தன. எல்லோரும் வியப்புடன் பார்க்கின்றனர். ஒருவர் மட்டும் குபீரெனச் சிரித்துவிட்டார். “ஐயா, இதில் சிரிக்க என்ன இருக்கிறது?” என்று இந்திரன் கேட்டார். “இந்த ஒவ்வொரு எறும்பும் முந்தைய ஜன்மத்தில் ஒரு இந்திரனாக இருந்தது” என்று அவர் பதில் சொன்னார். இதில் காலச் சுழற்சி என்னும் கருத்து இருக்கிறது.

ants

மேலும் இரண்டு சுவையான கதைகளை நாளை காண்போம்

காலம் என்னும் அற்புதம் பற்றி முப்பது பொன் மொழிகள்!

clock

சுவாமியின் பொன்மொழி காலண்டர் – மன்மத வருடம்- சித்திரை (April 2015)

இந்த பிளாக்—கில் இதுவரை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆயிரத்துக்கும் மேலான தமிழ், சம்ஸ்கிருத பொன் மொழிகள் வெளியிடப் பட்டுள்ளன! படித்துப் பயன் பெறுக!!

Compiled by London Swaminathan

Article No.1758;  Dated 30 March 2015.

Uploaded at London time 9-45 (GMT 8-45)

 

முக்கிய நாட்கள்/ விழாக்கள்:– ஏப்ரல் 2- மஹாவீர் ஜயந்தி,

புனித வெள்ளி, ஈஸ்டர் ஞாயிறு, ஈஸ்டர் திங்கள் – ஏப்ரல் 3, 5, 6;

விஷு, தமிழ் புத்தாண்டு – ஏப்ரல் 14; அக்ஷய திரிதியை- 21, மதுரை மீனாட்சி திருக் கல்யாணம்- ஏப்ரல் 30.

 

ஏகாதசி  : 15 ,  29/30; அமாவாசை-18; பவுர்ணமி (சந்திர கிரஹணம்)- ஏப்ரல் 4.

முகூர்த்த நாட்கள்:– 1, 3,6,8,10,15, 22

 

 end-of-time

 

1 புதன் கிழமை

காலோ ஹி துரதிக்ரம:

காலத்தை வெல்ல முடியாது –ராமாயணம்

2 வியாழக் கிழமை

காலே தத்தம் வரம் ஹ்யால்பம காலே பஹுணாபி கிம் – கதாசரித்சாகர:

சரியான காலத்தில் உதவி குறைந்தாலும் சிறந்ததே. தேவை இல்லாத காலத்தில் கூடக் கிடைத்தாலும் என்ன பயன்?

 

3 வெள்ளிக் கிழமை

கால சுப்தேசு ஜாகர்தி – சாணக்ய நீதி தர்பண:

நாம் தூங்கிக்கொண்டிருந்தாலும் காலம் விழித்துக் கொண்டிருக்கிறது

4 சனிக் கிழமை

க: கம் சக்தோ ரக்ஷிதும் ம்ருத்யு காலே  ரஜ்ஜுச் சேதே கே கடம் தாரயந்தி  – ஸ்வப்ன வாசவ தத்தா

மரண காலம் வந்துவிட்டால் யார் யாரைக் காப்பாற்ற முடியும்? நைந்து போன கயிற்றில் தொங்கும் (கிணற்றுப்) பானையை யார் (விழாமல்) பிடிக்க முடியும்?

 

5 ஞாயிற்றுக் கிழமை

அபி தன்வந்தரீ வைத்ய: கிம் கரோதி கதாயுஷி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

வயது போனபின்பு தன்வந்த்ரியே வந்து வைத்தியம் செய்தாலும் பயன் என்ன?

 

The_Value_of_Time

6 திங்கட் கிழமை

ஆயுர்யாதி க்ஷணே க்ஷணே

ஒவ்வொரு வினாடியும் ஆயுள் கழிந்து கொண்டே இருக்கிறது!

 

7 செவ்வாய்க் கிழமை

காலக் கலயதாம் அஹம் –

எண்ணக்கூடிய விஷயங்களில் நான் காலமாக இருக்கிறேன்; அஹம் ஏவ அக்ஷய காலோ— அழிவில்லாத/முடிவில்லாத காலம் நானே!–பகவத் கீதை

 

8 புதன் கிழமை

அந்ததோ அஸ்மாபி ஜீர்யதி

பாறையானாலும் இறுதியில் அழிந்து போகும் (மண் ஆகிவிடும்) – சம்ஸ்கிருத பொன்மொழி

9 வியாழக் கிழமை

அகாலேதுர்லபோ ம்ருத்யு:, ஸ்த்ரியா வா புருஷச்ய வா—- ராமாயணம்

ஆண் ஆகட்டும் பெண் ஆகட்டும்—மரணம் என்பது அகாலத்தில் ஏற்படுவது அரிது.

 

10 வெள்ளிக் கிழமை

ஆயுஷ: க்ஷண ஏகோபி சர்வரத்னைர் ந லப்யதே

நீயதே தத்வ்ருதா யேன ப்ரபாத: சுமஹானஹோ – யோகவாசிஷ்டம்

எல்லா ரத்னங்களையும் கொடுத்தாலும் ஒரு வினாடி ஆயுளைக் கூட விலைக்கு வாங்க இயலாது. அதை வீணாக்குவது எப்பேற்பட்ட மடமை!

time

11 சனிக் கிழமை

ஞாலம் கருதினும் கைகூடும் — காலம் கருதி இடத்தாற் செயின் – திருக்குறள் 484

சமயே ஹி சர்வம் உபகாரி க்ருதம் – சிசுபாலவதம்

சமயம் அறிந்து செய்வது பலன் தரும்.

12 ஞாயிற்றுக் கிழமை

க: காலஸ்ய ந கோசராந்தரகத:  — பர்த்ருஹரி

காலத்தின் பிடியில் சிக்காதவன் யார்?

 

13 திங்கட் கிழமை

கால க்ரீடதி கச்சத்யாயு: – சங்கரரின் மோஹமுத்கரம்

காலம் விளையாடுகிறது. ஆயுள் போய்க்கொண்டிருக்கிறது

 

14 செவ்வாய்க் கிழமை

காலஸ்ய குடிலா கதி: — சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

காலத்தினுடைய போக்கு புரிந்துகொள்ள முடியாதது.

 

15 புதன் கிழமை

காலோ ந யாதோ வயமேவ யாதா; :  — பர்த்ருஹரி

காலம் செல்லவில்லை; நாம்தான் சென்று கொண்டிருக்கிறோம் (நம் ஆயுள் ஒவ்வொரு நிமிடமும் சென்று கொண்டிருக்கிறது)

clock big

16 வியாழக் கிழமை

கத: காலோ ந சாயாதி

கடந்த காலம் திரும்பிவாராது

 

17 வெள்ளிக் கிழமை

கதஸ்ய சோசனம் நாஸ்தி– சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

சென்றது இனி மீளாது மூடரே! நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் (பாரதி)

18 சனிக் கிழமை

கதே ஸோகோ ந கர்தவ்யோ பவிஷ்யன்னைவ  சிந்தயேத் – சாணக்ய நீதி

சென்றதனைக் குறித்தல் வேண்டாம்; எதிர்காலத்தை எண்ண வேண்டாம் (நிகழ்காலத்தை பயனளிக்கும் வகையில் செலவிடு))

19 ஞாயிற்றுக் கிழமை

ந ஸ்வ: ஸ்வ: உபாசித் கோ ஹி மனுஷ்யஸ்ய ஸ்வோ வேத:– சதபத பிராமணம்

நாளை நாளை எண்ணாதே! நாளை வீணில் போக்காதே! நாளை நம்முடைய முறையோ; நமனுடைய முறையோ; யார் அறிவார்?

 

20 திங்கட் கிழமை

நீசைர் கச்சத்யுபரி ச தசா  சக்ர்நேமி  க்ரமேன – மேகதுதம்

வண்டிச் சக்கரம் போன்றதே வாழ்க்கைச் சக்கரம்; மேலும் கீழும் போய்வரும்.

foot steps

21 செவ்வாய்க் கிழமை

பவந்த்யுதய காலே ஹி சத் கல்யாண பரம்பரா: — கதா சரித் சாகரம்

நல்ல காலம் வந்து விட்டால் மங்கள விஷயங்கள் தொடர்ந்து வரும் (தை பிறந்தால் வழி பிறக்கும்)

 

22 புதன் கிழமை

விநாச காலே விபரீத புத்தி: — சாணக்ய நீதி தர்ப்பண:

கெட்ட காலத்தில் புத்தி பேதலிக்கும்.

23 வியாழக் கிழமை

சமய ஏவ கரோதி பலாபலம் – சிசுபாலவதம்

காலமே ஒருவனை பலவானாகவும் பலவீனனாகவும் ஆக்குகிறது

 

24 வெள்ளிக் கிழமை

கொக்கொக்க கூம்பும் பருவத்து (குறள் 490) ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவு வாடி இருக்குமாம் கொக்கு (வாக்குண்டாம்-அவ்வையார்)

உரிய காலம் வரும் வரை கொக்கு போல காத்திரு!

25 சனிக் கிழமை

ஹா ஹந்த சம்ப்ரமதி கதானி தினானி தானி

அடடா! இதோ இந்த நொடி (இப்பொழுது) சென்று விட்டதே!!!

(ஒவ்வொரு வினாடியும் வங்கியில் சேமித்த நம் வாழ்நாள் கழிந்து கொண்டே இருக்கிறது. இதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது)

 

time handy

26 ஞாயிற்றுக் கிழமை

கால கரோதி கார்யாணி கால ஏவ நிஹந்தி ச

காலமே எல்லா காரியங்களையும் முடிக்கிறது.

27 திங்கட் கிழமை

க்ருத ப்ரயத்னோபி  க்ருஹே ந ஜீவதி

என்ன முயன்றாலும் வீட்டில் வாழமுடியாது (இறுதி நேரம் வந்துவிட்டால்)

28 செவ்வாய்க் கிழமை

காலோ ஹி பலவத்தர:

காலம் என்பது வலிமையானது

29 புதன் கிழமை

கதம் கதம் நைவ து சந்நிவர்ததே

போனது போனதுதான்; திரும்பிவாராது.

30 வியாழக் கிழமை

நஹி ஸ்வமாயுசிசகிதேசகிதே ஜனேஷு

மனிதர்களில் தன் ஆயுளை அறிந்தவன் எவனும் இல்லை.

time gita

தொல்காப்பிய அதிசயங்கள்

astrologer

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1410; தேதி 14 நவம்பர், 2014.

‘ஒல்காப் புகழ் தொல்காப்பியன்’ எழுதிய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் தமிழ் மொழியின் மிகப்பழைய நூலாகக் கருதப்படுகிறது. ஆயினும் இதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. தொல்காப்பியர் தரும் சில அதிசயச் செய்திகளை மட்டும் சுருக்கமாகக் காண்போம்.

1.தமிழர்களின் 4 முக்கிய தெய்வங்களில் இந்திரனையும் வருணனையும் சேர்த்த தொல்காப்பியர் ஏன் சிவபெருமானை அறவே ஒதுக்கிவிட்டார் என்பது இன்றுவரை புரியவில்லை. மாயோன் (விஷ்ணு), சேயோன் (முருகன்), வேந்தன் (இந்திரன்), வருணன் ஆகியோரை மட்டுமே நானிலத் தெய்வமாகக் குறிப்பிடுகிறார்.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (பொருள் 1-5)

2.தொல்காப்பியத்தில்
1610 சூத்திரங்கள் – சூத்திரங்கள் (நூற்பாக்கள்)
5630 சொல் வடிவங்கள்
மூன்று அதிகாரங்கள்
அதிகாரத்துக்கு 9 வீதம் 27 இயல்கள்
3999 வரிகள் உடையது
தொல்காப்பிய ஏட்டுச் சுவடிகளில் உள்ள பாட பேதங்கள் -2000
(13,699 தொடை வகைகள் உள்ளதாக தொல்காப்பியர் கூறுகிறார்— சூத்திரம் 1358)
தொல்காப்பியத்துக்கு உரை எழுதியோர் அறுவர் :—- இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர்.

3.பனம்பாரனார் எழுதிய தொல்காப்பியப் பாயிரம் தமிழ்நாட்டின் எல்லைகளைத் தெளிவாகக் கூறுகிறது:
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகம் — என்றும்

தொல்காப்பியனார்
வண்புகழ் மூவர்தண்பொழில் வரைப்பின்
நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது — 1336.தொல் — என்றும்

இதையே பாரதியார்
நீலத் திரை கடல் ஓரத்திலே — நின்று
நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை – வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு – என்றும் பாடினர்.
tolkappiyar

4.அதே பாயிரம், நான்கு வேதங்களையும் அறிந்த அதங்கோட்டு ஆச்சார்யார் என்ற பிராமணர் தலைமையில் நிலந்தரு திருவிற் பாண்டியன் சபையில் தொல்காப்பியம் அரங்கேறிய நற்செய்தியையும் நமக்குத் தரும்:–
நிலம்தரு திருவில் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து (பாயிரம்)

5.தமிழின் தனிச் சிறப்பு உயர்திணை, அஃறிணை என்ற பிரிவுகளாகும். மக்கள், கடவுளர் எல்லோரும் உயர்திணை. அஃதில்லாதது அஃறிணை என்பார் தொல்காப்பியர்:
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையில் இசைக்குமன சொல்லே (484)

6.உயிரினங்களை ஆறு அறிவு உடைய பிரிவுகளாகத் தொல்காப்பியர் பிரித்திருப்பதும் வேறு எங்கும் காணாத புதுமை:

புல்லும் மரமும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் புள்ளும் ஐயறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

tamil-lovers

தொல்காப்பியம் எவ்வளவுதான் சிறப்புடைத்தாலும் மேலே உள்ள சூத்திரத்தில் கூறியது கூறல் என்னும் குற்றம் ( பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே) — இருப்பதைக் காண்கிறோம். இதனால் பாணினியின் வடமொழி இலக்கணத்தையும் தமிழ் இலக்கணத்தையும் ஒருங்கே கற்றோர் பாணினியை இமயமலைக்கும் தொல்காப்பியனை விந்திய மலைக்கும் ஒப்பிடுவர்.

7.கடவுள் வாழ்த்து பற்றிச் சொல்லும் தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து அமையாதது ஏனோ என்று வியக்கத் தோன்றுகிறது. உயிர் எழுத்துக்களில் ஒன்றான ‘’ஔ’’ பற்றித் தொல்காப்பியத்தில் இருந்தாலும் திருக்குறளிலோ சங்க இலக்கியத்திலோ இந்த எழுத்தில் துவங்கும் சொற்களே இல்லை!!! இது மிகப் பெரிய தமிழ் அதிசயம்!!! ‘’ஔ’’ என்பது வடமொழி இறக்குமதியாக இருக்கலாம்!

8.தர்ம, அர்த்த, காம (மோட்சம்) என்ற வடமொழி நூல் வழக்கத்தை இவரும் திருவள்ளுவரும் அறம், பொருள், இன்பம் என்று அப்படியே பின்பற்றுகின்றனர் (காண்க சூத்திரங்கள்:-1038, 1363)

9.பெண்களுக்கு இருக்கவேண்டிய பண்புகளை அழகாகப் பட்டியலிட்டுள்ளார்:–

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் (1097)

10.பறவைகள், மிருகங்கள் போல எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் ஓடி விடக் கூடாது. திருமணத்திற்கு தசப் பொருத்தம் – பத்து வித பொருத்தங்கள் பார்க்க வேண்டும் என்பார் தொல்காப்பியர்:
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவுநிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (1219)

varadaraja iyer

11.எல்லோரும் கல்யாணம் என்ற பெயரில் பல மோசடிகள் செய்து பொய், பித்தலாட்டம் செய்யத் துவங்கிய பின்னர் ஐய்யர்கள் கல்யாணம் என்ற சடங்கை உண்டாக்கினர் என்று தொல்காப்பியர் கூறுகிறார்:

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே (1090)
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப (1091)

சூத்திரம் 1090 மஹாபாரதத்தில் உள்ளது. ஒரு முனிவரின் மனைவியை மற்றொருவர் அழைத்துச் சென்றதைக் கண்டு வெகுண்டெழுந்தவர்கள் இப்படிச் சடங்குகள் செய்த கதை மஹாபாரதத்தில் வருகிறது.
சூத்திரம் 1091: ஆர்ய (சம்ஸ்கிருதம்)= அஜ்ஜ (பிராக்ருதம்)= அய்ய (தமிழ்)=ஐயர்.; ஜ– என்பது தமிழில் ய – ஆக மாறும். எ.கா. அஜன்= அயன்; கஜமுகன்= கயமுகன்; பிற மொழிகளிலும் இப்படி உண்டு. ஜீஸஸ்=யேசு, ஜூதர்=யூதர்)

12.தொல்காப்பியர் காலம் பற்றி தமிழர் இடையே கருத்து ஒற்றுமை காண்பது அறிது. 20,000 ஆண்டு முதல் கி.மு.முதல் நூற்றாண்டு வரை அவரது காலத்தை வைப்பர். மொழியியல் அறிவு இல்லாதோரும் உலக மொழிகளின் வளர்ச்சி பற்றி அறியாதோரும் அடிக்கும் கூத்து இவைகள்!

12.உலகில் எல்லோரும் இலக்கண நூல்களில் சொல், எழுத்து, சொற்றொடர் போன்றவற்றோடு நிறுத்திக் கொண்டனர். தொல்காப்பியர் மட்டும் பொருள் அதிகாரம் என்று ஒன்றைச் சேர்த்து இலக்கண நூலில் புதுமை செய்தார்! ஆனால் இந்தப் பொருளதிகாரம் அவர் எழுதியது அல்ல – இது ஒரு பிற்கால இணைப்பு என்று வெளிநாட்டுத் தமிழறிஞர் செப்புவர். நான் செய்த ஆய்வு முடிவுகளைத் தொகாப்பியம் பற்றிய எனது கட்டுரைத் தொடர்களில் கொடுத்து இருக்கிறேன்.

arumuganavalar

13. தொல்காப்பிய மயக்கம்
“சிலபல நூற்பாக்கள் சொற்கள் எளிமையாக இருந்தும், அவற்றின் உண்மைப் பொருளை நாம் அறிய இயலவில்லை
பாங்கன் நிமித்தம் பன்னிரண்டென்ப -1050
முன்னைய நான்கும் முன்னதற்கென்ப – 998
பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே – 1145

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் –1021

என்றின்னவாறு பல இடங்களில் வரும் தொகைச் சொற்களும், உயர்ந்தோர், இழிந்தோர், கீழோர், மேலோர் என வரும் நிலைச் சொற்களும், கொடிநிலை, கந்தழி, வள்ளி எனவும், பால்கெழு கிளவி உயர்மொழிக் கிளவி, ஒருபாற்கிளவி எனவும் சுட்டு நகை சிறப்பு எனவும் வரும் பல்வகைச் சொற்களும் பொருள் மயக்கமாகவே உள. பொருள் மயக்கம் தொல்காப்பியச் சொற்களில் இல்லை. அக்காலத்து அவற்றின் பொருள்கள் தெளிவுடையனவே. உடன்பிறப்பு நூல்கள் இன்மையானும், தொன்மை யானும், உயர்ந்தோர், கீழோர், மேலோர் என்ற எளிய சொற்களுங் கூட நமக்குப் பொருள் காட்டவில்லை”— ( இதை மட்டும் நான் ‘’தொல்காப்பியக் கடல்’’, மூதறிஞர் வ.சுப.மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம் 1987 நூலில் இருந்து அப்படியே கொடுத்துள்ளேன்)

14.தொல்காப்பியர் ஒரு சம்ஸ்கிருத அறிஞர். ஏராளமான விஷயங்களை பாணீணீயம் (எழுத்து ஒலி பிறகும் இடங்கள்) மனுதர்ம சாத்திரம் (எண்வகைத் திருமணங்கள் மற்றும் உடன்கட்டை ஏறுதல்– சூத்திரம் 1025), மஹாபாரதம் முதலியவற்றில் இருந்து எடுத்தாண்டுள்ளார். சம்ஸ்கிருதச் சொற்களை தயக்கம் இன்றிக் கையாளுகிறார். எ.கா. கடைசி சூத்திரம் 1610-ல் ஞாபகம், மனம், உத்தி, முதலிய பல சொற்களைக் காணலாம்.

தொல்காப்பியம் முழுதும் படிக்கப் படிக்கச் சுவை தரும். பல வழக்கங்கள் இமயம் முதல் குமரிவரை ஒரே மாதிரி இருந்தது பாரத ஒற்றுமைக்குச் சான்று தருவனவாக உள்ளன.

இது தொடர்பான எனது முந்தைய கட்டுரைகள்:—
தொல்காப்பியர் காலம் தவறு—பகுதி 1, 2, 3, 4 (posted 9-9-12 முதல் 13-9-12 வரை)
தொல்காப்பியத்தில் இந்திரன் posted on 14 ஜூன் 2013
தொல்காப்பியத்தில் வருணன் posted on 8 ஜூலை 2013
மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? (25-2-2012)
தொல்காப்பியருடன் 60 வினாடி பேட்டி (அக்டோபர் 25, 2014)
தமிழனின் ஆறு பருவங்கள்:ஆரிய-திராவிட வாதத்துக்கு அடி (ஜூலை 22, 2014)
ராவணன் — பாண்டியர் சமாதான உடன்படிக்கை (ஜூன் 24, 2014)
தொல்காப்பியத்தில் துர்க்கை, அக்னி (மார்ச் 31, 2014)

No Brahmins ! No Tamil ! (posted on 12 /1 / 2012)
Tolkappian- A Genius ( posted on 12/9/2012)
Indra in the Oldest Tamil Book
Varuna In the Oldest Tamil Book
Did Tolkappiar copy from Sanskrit Books? (Sept.10, 2012)
Who was Tolkappiar? (Sept.9, 2012)

தொல்காப்பியமே என்ன என்று தெரியாதோர் முதலில் படிக்கவேண்டிய நூல்:– தொல்காப்பியக் கடல், மூதறிஞர் வ.சுப. மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம் 1987. ஒவ்வொரு கட்டுரையிலும் தொல்காப்பியருக்கு ஆசிரியர் வெவ்வேறு காலம் கற்பித்து எழுதி இருந்தாலும் தொல்காப்பியத்தின் அருமைதனை, பெருமைதனை எடுத்துரைக்கும் எளிய நடை நூல் இது. தமிழர் வீடுகளில் இருக்க வேண்டிய நூல் இது.
Contact swami_48@yahoo.com