

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 7 NOVEMBER 2019
Time in London – 9-45 am
Post No. 7187
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
~கொழுநனனைக் கொளுத்தினால் பொய்யெனப் பொய்யும் மழை~
கணவனைத் தொழுதால் போதும்; தெய்வத்தைத் தொழ வேண்டாம் என்றான் சநாதனி ஹிந்து, ஹிந்து தீவிரவாதி, பழைய பத்தாம் பசலி திருவள்ளுவன்.
இப்போது ~டேய், வாடா, போடா~ என்று காதலனைக் கூப்பிடும் பெண்கள் வள்ளுவனைப் பார்த்துச் சிரிக்கின்றனர்;பரிகசிக்கின்றனர்.
~கணவனையா? தொழ வேண்டுமா? மசூதீல வேணும்னா தொழுகை நடக்கும். எங்க வீட்ல அவர்தான் என்னைத் தொழுவார்; காரணம் என்ன வென்றால். திருவள்ளுவன் குறளை இலக்கணப்படியே இரண்டு விதங்களிலும் அர்த்தம் சொல்லலாம்~– என்பாள் படிதாண்டாப் பத்தினிகள்!!
தெய்வம் தொழாள்;
கணவன் தொழுது எழுந்திருப்பாள் – என்று!`
இப்போது கூட பல வீடுகளில் பார்க்கிறோம்.
அம்மா தாயே; பிள்ளைங்கெல்லாம் ஸ்கூலுக்குப் போகனும்; எனக்கு காப்பி கூட வேனாம். அதுகளுக்கு உடுப்பைப் போட்டு மத்தியானச் சாப்பாட்டைக் கட்டிக்கொடு; உன்னை யாரு ராத்ரி ஒரு மணி வரைக்கும் டெலிவிஷன் பாக்கச் சொன்னான் – என்று கணவன்மார்கள் கதறுவதை!!
பிரிட்டனில் 1992-லேயே கொலைகாரிக்கு மாலை போட்டார்கள். இதோ நான் எழுதிய 15-11-1992 அலுவாலியா கட்டுரை.
அலுவாலியா கட்டுரையைப் படிச்சிட்டு அழுவலியா?
தெய்வம் தொழாள் கொழுநனனைக் கொளுத்துவாள்
பொய் எனப் பொய்க்கும் மழை (கலியுகத்தில்)–
சுவாமிநாதன் எழுதிய அருட்குறள்.
இதோ வள்ளூவன் எழுதிய உண்மைக் குறள்:–
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)
தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனைத் தொழுது எழுகின்ற ஒரு பெண் பெய் என்றால் மழை பெய்யும்.
எனது கட்டுரைக்குப்பின்னர் வந்த செய்திகள்………………….
கிரன் ஜித் அலுவாலியா வழக்கு திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதில் ஐஸ்வர்யா ராய் நடித்தார். கிரன் ஜித் தனது வாழ்க்கையை சர்க்கிள் ஆFப் லைட் என்ற தலைப்பில் சுயசரிதையாகவும் எழுதினார்.


இதையும் படியுங்கள்………………………..





தெய்வம் தொழாஅள் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › தெய்வம்-த…
3 Jun 2017 – Written by S NAGARAJAN. Date: 3 June 2017. Time uploaded in London:- 6-29 am. Post No.3966. Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. contact: swami_48@yahoo.
https://tamilandvedas.com › tag › மும்மாரி
22 Dec 2012 – வள்ளுவர் இவருக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, “தெய்வம் தொழாள், கொழுநன் தொழுது எழுவாள், பெய் எனப் பெய்யும் மழை= …
