கிரேக்க மொழிச் சொல்லில் தமிழ், சம்ஸ்க்ருதம்- Sirius/Sothis (Post No.8918)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8918

Date uploaded in London – –11 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேதத்தில் சுவையான வான சாஸ்திரக் குறிப்புகள் உள்ளன. இவற்றைப் பார்க்கையில் எல்லோருக்கும் வான சாஸ்திரம் நன்கு தெரிந்து இருந்தது என்றே சொல்லத் தோன்றுகிறது.

முதலாவது சுவையான விஷயம் வானியலுக்கு ‘ஜோதிஷம்’  என்று பெயர்! வேதத்தைப் பயில்வோருக்கு இது ஒரு கட்டாய பாடம் ஆகும்

‘ஜோதி’ JYOTI என்றால் ஒளிப் பிழம்பு . ஜோதிஷம் என்றால் ஒளி உமிழும் விண்வெளி (Light Emitting Matters in the Sky) விஷயங்களை  ஆராய்வது ஆகும்.

அந்த ஜோதி = ஒளிப்பிழம்பு  என்ற சொல், வானத்தில் மிகப்பிரகாசமான நட்சத்திரத்துக்கு சூட்டப்பட்ட கதையைக் காண்போம் . மிகவும் பிரகாசமான கிரகம் வெள்ளி Venus . மிகவும் பிரகாசமான நட்சத்திரம் – Sirius சிரியஸ்

நட்சத்திரம் ஜொலிக்கும்/ கண் Twinkle சிமிட்டும் .

கிரகம் கண் சிமிட்டாது No Twinkling ஒளிரும்

இரவு நேரத்தில் ஒளிரும் நட்சத்திரங்களில் மிகவும் பிரகாசமானது சிரியஸ் என்னும் நட்சத்திரம் ஆகும். இதை கிரேக்கர்கள் சோதிஸ் SOTHIS என்று அழைப்பர். “ஜ|” J என்னும் எழுத்து உலகில் சம்ஸ்க்ருதம் தவிர வேறு எந்த பழைய மொழியிலும் கிடையாது. அதை ச அல்லது யா என்ற உச்சரிப்புடன் பயில்வர். எடுத்துக் காட்டாக தமிழில் ஜெ கிடையாது. உலகிலேயே மிகவும் குறைகளை உடைய பழைய மொழி தமிழ்தான் .ஏன் எனில் அரேபிய, எபிரேய மொழிகளில் உள்ள ‘ஹ’ வும் இராது. ‘ஸ் ஷ்’ ‘ஜ’ போன்ற உச்சரிப்பும் இராது. இதனால் செமிட்டிக் மொழி உச்சரிப்போ, ஐரோப்பிய மொழி உச்சரிப்போ தமிழில் தர இயலாது. அவைகளை தமிழ் வழி ப்படுத்த (Tamilize) வேண்டும் அப்படிச் செய்கையில் பல அனர்த்தங்கள் விளையலாம். இக்குறைகளை  உணர்ந்தோர் பிற்காலத்தில் ஜ , ஷ, ச, ஹ , க்ஷ  முதலிய கிரந்த எழுத்துக்களையும் (Grantha Lipi)  உச்சரிப்புகளை அறிமுகப்படுத்தினர்

xxxx

சிவப்பு வர்ணத்தில் திருவாதிரை; மூன்று நட்சத்திரம்- மிருக ஸீர்ஷம் 

நான் கண்டுபிடித்த புதிய கொள்கை-

இந்திய -ஐரோப்பிய மொழிக் கொள்கை , திராவிட மொழிக் கொள்கை தவறு. (Classification of Indian Languages is wrong)

இரண்டும் வேவ்வேறு குடும்பம் அல்ல .

உலகிலேயே மிகப்பழைய மொழி/கள் சம்ஸ்கிருதமும் தமிழுமே .

எந்த ஒரு பழைய மொழிச் சொல்லையும் நம்முடைய மொழிகளில் காட்டிவிடலாம் .(Oldest Two Languages are Tamil and Sanskrit; any old word of any any ancient language can be traced back to these two Indian Languages)

அதாவது இந்திய மொழியின் வேர்ச் சொல் (root) இரண்டு வகையில் பிரியலாம் ; ஒன்று சம்ஸ்கிருத வழி ; மற்றோன்று தமிழ் வழி ; ஆங்கிலத்தில் வழங்கும் எண் 1, 8 (One, Ettu) ஆகியன தூய தமிழ் உச்சரிப்பிலும் ஏனையன சம்ஸ்கிருத உச்சரிப்பிலும் இருப்பதைக் காணலாம் .

இப்பொழுது வான சாஸ்திரத்தில் ஒரு உதாரணம் காட்டப் போகிறேன்.

ஜோதி என்றால் எரியும் பிழம்பு ; எடுத்துக்காட்டு – தீப ஜோதி, தீப ஜ்வாலை

தமிழில் ஜோதி = எரியும்

இந்த இரண்டும் வானத்திலேயே பிரகாசமான சிரியஸ் (Siriu) நட்சத்திரத்தில் இருப்பதைக் காணுங்கள்

ஸ் /எரி -ய = கிரேக்க மொழி =”Sirius” is derived from the Ancient Greek Seirios (“glowing” or “scorcher”). = எரியும் S/Eri/os

இதையே கிரேக்கர்கள் SOTHIS சோதி (ஜ்யோதி) என்றும் அழைத்தனர் =after the known Greek and Latin form Sothis (Σῶθις, Sō̂this).

ஆக தமிழ் ‘எரியும்’ சம்ஸ்க்ருத ஜோதி ஆகிய இரண்டையு ம் சிரியஸ் நட்சத்திரத்தில் காணலாம்

xxxx

நைல் = நீல மாதா 

எகிப்திய மொழியில் சம்ஸ்க்ருதம்

எரியும்(S-eri-os) என்று கிரேக்க மொழியில் தமிழைப் பயன்படுத்திய கிரேக்கர்கள் திடீரென்று சோதி / ஜோதி Sothis என்று ஸம்ஸ்க்ருதத்தையும் பயன்படுத்தியது ஏன் ?

ஏனெனில் எகிப்திய மொழியில் அதை ‘சோதி உதயம்’ Sopdet என்று அழைத்தனர்.

எகிப்தியர் வாழ்வில் சிரியஸ் மிக முக்கியமானதாகும். சிரியஸ்  அடிவானத்தில் தோன்றிவிட்டால் உலகிலேயே மிகப்பெரிய நதியான நைல் NILE வெள்ளப் பெருக்கெடுத்து எகிப்திய தேசத்தை வளப்படுத்தும் இதனால் சிரியஸ் நட்சத்திரத்தோடு உதயம்/ உத்பத்தி என்ற சொல்லையும் சேர்த்து சோதத் பத் Sopdet  என்றனர்.

அந்த நதிக்கே நீல – நைல் (BLUE NILE) என்றும் ஸம்ஸ்க்ருதப் பெயர் சூட்டினர் .

நதியை கங்கா மாதா போல,  பெண் (RIVER GODDESS)  உருவாக்கினர் .

thuban= druvan

அதுமட்டுமல்ல சிவன் தலையில் கங்கை இருப்பது போல ஆசிரிஸ் OSIRIS தேவன் தலையில் நதியை வரைந்தனர்.சிவனின் உருவமான நந்தியை ஆசிரிசுக்கு வரைந்தனர்

சிரியஸ் தோன்றினால் எகிப்தில் வெள்ளம்; கிரேக்க நாட்டிலோ அக்கினி நட்சத்திர ஆரம்பம். ஆகையால் அதை அவர்கள் ஸ் / எரி /யும் – சிரியஸ் என்று பெயர் சூ ட்டியதில் வியப்பில்லை

நந்தி/சிவன் ; தலையில் சந்திரன் /கங்கை

Source material :–

((Sirius is the brightest star in the night sky. With a visual apparent magnitude of -1.46, it is almost twice as bright as Canopus, the next brightest star.

The name “Sirius” is derived from the Ancient Greek Seirios (“glowing” or “scorcher”). The star has the Bayer designation Alpha Canis Majoris. What the naked eye perceives as a single star is actually a binary star system, consisting of a white main sequence star of spectral type A1V, termed Sirius A, and a faint white dwarf companion of spectral type DA2, termed Sirius B. The distance separating Sirius A from its companion varies between 8.1 and 31.5 AU.

The exact pronunciation of ancient Egyptian is uncertain, as vowels were not recorded until a very late period. In modern transcription, her name usually appears as Sopdet (Spdt,[3] lit. ‘Triangle’ or ‘Sharp One’), after the known Greek and Latin form Sothis (Σῶθις, Sō̂this).))

tags — சிரியஸ் , சோதி, ஜோதி, கிரேக்க மொழி , எரியும்

Xxx subham xxx

தமிழ் மொழியின் அண்ணன் கிரேக்க மொழி (Post No.8672)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8672

Date uploaded in London – –12 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பொதுவாக மொழிகளைப் பெண்களாகக் (MOTHER OR SISTER LANGUAGE) கருதுவர். இந்த இந்துமத மரபை உலகம் முழுதும் இன்றும் பின்பற்றி, நெருங்கிய மொழிகளை சகோதரி – சிஸ்டர்- என்றே அழைப்பர் ; ஆயினும் மூளைச் சலவை செய்யப்பட தமிழர்களுக்காக ‘அண்ணன்’ என்று எழுதியுள்ளேன். இன்று உலகில் வழங்கும் மொழிகளில் அல்லது அவற்றின் மாபெரும் இலக்கியம் நூலகங்களை அலங்கரிக்கும் மொழிகளில் மிகவும் பழைய மொழிகள் சம்ஸ்க்ருதம், பாரசீகம், எபிரேயம் எனப்படும் ஹீப்ரு கிரேக்கம், லத்தின், தமிழ் ஆகிய மொழிகளாகும் . இவைகளில் தமிழ்தான் கடைக்குட்டி. அதாவது இலக்கியம், கல்வெட்டு சான்றுகளை எடுத்துக் கொண்டால் சின்னத் தம்பி தமிழ்தான்.

இரண்டு பொய்களைத் தமிழ் வெறியர்கள் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றனர்.

முதல் பொய் : —இன்று பேசப்படும் மொழிகளில் மிகவும் பழைய மொழி தமிழ் .

இரண்டாவது பொய் – தமிழ் தவிர மற்ற பழைய மொழிகள் எல்லாம் வழக்கொழிந்துவிட்டன.

இரண்டும் பொய் என்பதை விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்கள் படித்தவர்கள் அறிவர்.

தமிழில் கிடைத்த பழைய நூல் தொல்காப்பியம் . அது புள்ளி வைத்த (DOTTED CONSONANTS) எழுத்துக்கள் பற்றிப் பேசுவதால் அது 2000 ஆண்டுகளுக்குள் தோன்றிய நூலே என்பது அறிஞர் தம் முடிவு. மேலும் அதிலுள்ள சொற் பிரயோகங்களைக் கொண்டு பேராசிரியர் கே. ஏ.நீலகண்ட சாஸ்திரி, வையாபுரிப்பிள்ளை போன்றோர் அது கிபி.ஐந்தாம் நூற்றாண்டு அல்லது     அதற்கும் பிந்தியது என்பர். ஆனால் நான் மேலே குறிப்பிட்ட பழைய மொழிகளில் அதற்கு முன்னரே நூல்கள் உள்ளன. (தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் விதிகள் தொல்காப்பியருக்கு முந்தியவை OLDER THAN TOLKAPPIAM)

கிரேக்க மொழி இன்று சுமார் ஒன்றரைக் கோடி மக்களால் பேசப்படுகிறது. கிரேக்க நாட்டிலும் சைப்ரஸ் தீவிலும் அதிகார பூர்வ மொழி அது. அல்பேனியா கருங்கடல், மத்திய தரைக் கடல் கரையோர பகுதிகளிலும் கிரேக்க மொழி பேசுவோர் உள்ளனர். இவர்கள் ஆதிகாலத்தில் பயன்படுத்திய எழுத்து லீனியர் பி (Linear B )என்பதாகும். அது அகர (not alphabet) வரிசை எழுத்தன்று. பிற்காலத்தில் பினீசிய எழுத்துக்களில் இருந்து ஆல்பா , பீட்டா , காமா , டெல்டா என்ற அகர வரிசை எழுத்துமுறை பின்பற்றப்பட்டது.

குறைந்தது 3500 ஆண்டுகளுக்கு எழுத்து வடிவத்தில் கல்வெட்டுகள் கிடைக்கின்றன . ஆனால் இலக்கியம் என்பது 2800 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றின. ஹோமர் என்ற அந்தகக் கவிஞர் (blind poet Homer) எழுதிய இலியட், ஒடிஸி /ஆடிஸி (அமெரிக்க உச்சரிப்பு ஆடிஸி Iliad and Odyssey )ஆகியன பழைய காவியங்கள் ஆகும்.

இந்த மொழியை சம்ஸ்கிருதம் தமிழ் மொழியுடன் ஒப்பிடுவோம் .முதலில் கிடைக்கும் தமிழ் இலக்கியம் சங்க கால இலக்கியம் . அது 2000 ஆண்டு பழமையுடைத்து . முதலில் கிடைக்கும் தமிழ் எழுத்து பிராமி எழுத்து அது 2300 ஆண்டு பழமையுடைத்து. ஆக கிரேக்க மொழிக்கு 800 ஆண்டு பிந்தியது.

தமிழர்களின் பழைய இலக்கண நூல் தொல்காப்பியம். இது ஆய்த எழுத்து என்னும் மூன்று புள்ளி, மற்றும் புள்ளி வைத்த மெய் எழுத்துக்கள் பற்றிப் பேசுவதால் தொல்பொருட்த் துறை அறிஞர்கள் இதை சுமார் 1500 ஆண்டு பழமையுடைத்து என்றுதான் கருதுகின்றனர் . மேலும் திருக்குறள் ‘அதிகாரம்’, தொல்காப்பிய ‘அதிகாரம்’, சிலப்ப’திகாரம்’ ஆகிய மூன்றிலும் ‘அதிகாரம்’ என்ற சம்ஸ்க்ருத சொல், சூத்திரம் என்ற சம்ஸ்க்ருத சொல் ஆகியன வருவதாலும் இதைப் பிற்காலத்தியது என்பர்.

இதைப் படிப்பவர்கள் எழுத்து/ வரி வடிவம் வேறு; மொழி (language and Script are different)  என்பது  வேறு என்பதை முதலில் தெளிவாக அறிதல் வேண்டும். தொல்காப்பியத்தின் விதிகள்/சூத்திரங்கள் மிகவும் பழங்கால விதிகளையும் சொல்கிறது. ஆகையால் அதற்கு முன்னரும் தமிழ் நூல்கள் இருந்தன. அவை நமக்குக் கிடைக்கவில்லை. பொதுவாக இப்படி அழிந்து போன நூல்களை எவரும் உறுதியான ஆதாரமாகக் கொள்வதில்லை. ஏனெனில் மைசீனியன் (Mycenean ) கிரேக்க மொழிக்கும் ஹோமர் புஸ்தகம் எழுதிய கிரேக்க மொழிக்கும் இடையே 600 ஆண்டுக்கால மர்மமான இடை  வெளி இருக்கிறது. சம்ஸ்கிருதத்திலோ இருக்கும் நூல்களை விட அழிந்துபோன நூல்களே அதிகம்!

இப்போது கிரேக்க மொழியை ஸம்ஸ்க்ருதத்துடன்  ஒப்பிடுவோம்

முதலில் எழுத்து  வடிவத்தில் சம்ஸ்கிருத மொழி இருப்பது  கி.மு 1340-ல் தெரிய வந்தது. இப்போது துருக்கி நாட்டில் இருக்கும் பொகஸ்கொய் என்னும் இடத்தில் வேத கால தெய்வங்களின் பெயரைச் சொல்லி கையெழுத்திட்ட உடன்படிக்கை பற்றிய செய்தி கிடைக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மிட்டன்னி நாகரீக மன்னர்கள் அனைவர் பெயரும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன.. அதிலுள்ள வேத கால தெய்வங்கள் ரிக் வேத மந்திர வரிசையில் எழுதப்பட்டதால் ரிக்வேத மந்திரங்கள் கி.மு 1340க்கு முந்தியவை என்ற தொல்பொருட் துறை சான்றும் கிடைத்துவிட்டது. துருக்கி நாட்டில் கிடைத்த கக்கூலி எழுதிய குதிரை சாஸ்திரமும் சம்ஸ்கிருதத் சொற்களுடன் உள்ளன.

ஆயினும் இந்தக் கல்வெட்டு களிமண் பலகையில் கியூனி பார்ம் எழுத்தில் உள்ளது. இதற்குப் பின்னர் எகிப்தில் உள்ள  தசரதன் கடிதங்களும் சம்ஸ்கிருத சொற்களை உடையவை என்பதை விக்கிபீடியா உள்பட எல்லா என்ஸைக்ளோபிடியாக்களிலும்  காணலாம்.

ஆக எழுத்து வடிவில் கிரேக்க மொழியின் லீனியர் பி -க்கு சமமாக உள்ளது சம்ஸ்கிருதம்; இலக்கிய வடிவிலோ அதை விட  மிகப் பழமையானது; ஹோமர் இதிகாசத்தை எழுதும் முன்னரே பிரமாண்டமான அளவில் வேத கால இலக்கியத்தை எழுதி முடித்துவிட்டனர். சம்ஹிதை,  பிராமணங்கள், ஆரண்யகங்கள், முக்கிய உபநிஷத்துக்கள் அனைத்தும் எழுதி முடித்த காலத்தில் ஹோமர் Homer என்னும் கவிஞர் கிரேக்க மொழியின் முதல் படைப்புகளை  அளித்தார்.

ஆக தமிழை விட பழமையானது கிரேக்க மொழி என்பதும் அது இன்றும் கோடிக்கணக்கான மக்களால் பேசப்படுகிறது என்பதும் உண்மையே. அலெக்சாண்டரின் படை எடுப்புக்குப் பின்னர் அதன் ஆதிக்கம் மேலும் பரவியது. பூகோள ரீதியில் கிரேக்க நாட்டிலிருந்து இந்தியாவின் வடமேற்கு எல்லை வரை கிரேக்க மொழி எதிரொலித்தது. ஆக இதிலும் தமிழை விட முன்னிலையில் நிற்கிறது.

சம்ஸ்க்ருத மொழியோ துருக்கி- சிரியா எல்லையிலிருந்து தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் பரவியது; மத்திய ஆசிய பாலைவனத்திலிருந்து இந்தோனேஷியாவின் காடுகள் வரை சம்ஸ்கிருத ஓலைச் சுவடி அல்லது கல்வெட்டு காணப்படுகிறது ; சுருங்கச் சொன்னால் உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்திய மொழி. இது தவிர மொழி பெயர்ப்பு என்று எடுத்துக் கொண்டாலும் பழைய காலத்தில் அதிகமான  மொழிகளில் ஆக்கப்பட்டது பஞ்ச்ச தந்திரக் கதைகள் முதலியனதான்.

ஆனால் ஒரு மொழியின் சிறப்புக்கு பழமை மட்டும் காரணமன்று என்பதை நேற்று வந்த ஆங்கில மொழியின் பெருமையிலிருந்து அறியலாம். அரசியல்,பொருளாதார அம்சங்களும் மொழி பரவியதற்கு காரணங்கள் .

இனி கிரேக்க மொழி பற்றி விரிவாகக் காண்போம் .

தொடரும் …………………………………………………..

Tags–   கிரேக்க மொழி , காவியம் , ஹோமர், மைசீனியன்

கிரேக்க நாட்டில் இந்துச் சடங்கு! (Post No.4131)

Written by London Swaminathan

Date: 5 August 2017

Time uploaded in London- 13-14

Post No. 4131

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

சங்கரன் கோவில் கொடுங்கலூர் பகவதி கோவில், மதுரை மாரியம்மன் கோவில் முதலிய நூற்றுக் கணக்கான கோவில்களில் பக்தர்கள் ஒரு விநோத காணிக்கை செலுத்துவதுண்டு. உடல் உறுப்புகளில் ஏதாவது நோய் வந்தால் அது குணமாக அல்லது குணம் அடைந்ததற்கு நன்றி தெரிவிக்க அந்த உறுப்பின் உருவத்தை வாங்கி கடவுளுக்குப் படைப்பர். பொதுவாக வெள்ளியிலோ பித்தளையிலோ கண், காது, கால், கை உருவங்கள் இருக்கும். இதே போல குழந்தை பிறக்காதவர்கள் ஒரு குழந்தை உருவத்துடன் தொட்டில் வாங்கி மரத்தில் கட்டும் வழக்கமும் உண்டு. இந்த வழக்கம் சுமேரிய நாகரீகத்திலும் இருந்தது பற்றி எனது ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தேன்.

 

ஜூலை மாதக்  கடைசியில் (2017) குடும்பத்துடன் ஏதென்ஸ் நகரத்துக்குச் சென்று இருந்தேன். உலகப் புகழ்பெற்ற பார்த்தினான் (Parthenon) கட்டிடம் (அதீனா தேவியின் கோவில்) இருக்கும் குன்றுக்கு கீழே புகழ்பெற்ற ஆக்ரோபோலிஸ் மியூசியம் (Acropolis Museum) உள்ளது. அங்கு அரிய கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. முதல் மாடிவரையுள்ள முக்கியப் பொருட்களைப் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று தடுத்துவிட்டனர். ஆகையால் மியூசியம் கடைக்குச் சென்று பட அட்டைகளையும் (Picture Cards)  பிரிட்ஜில் (Fridge) ஒட்டுவதற்கான மாக்னெட்/ காந்தங்களையும் வாங்கினேன். எந்த நாட்டுக்குப் போனாலும் அந்த நாட்டின் நினைவாக அந்த நாட்டின் சின்னம் உள்ள பிரிட்ஜ் காந்தம் (Fridge Magnet) வாங்குவது என் வழக்கம். போட்டோ எடுக்கக் கூடாது என்று தடுத்ததால் பட அட்டைகளையும் வாங்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதுவும் நல்லதாகப் போயிற்று.

‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல’ நான் தேடிய ஆராய்ச்சி விஷயங்கள் கிடைத்தன. இந்துக்களைப் போலவே அவர்களும் ஒரு தேவதைக்கு செலுத்திய காணிக்கையின் படம் கிடைத்தது. அதில் கல்யாணம் ஆவதற்காக கன்னிப் பெண்கள் (கன்யா ஸ்த்ரீகள்) செலுத்திய நூற்கும் (Spinning Whorls) சுழல்கள் இருந்தன. நிம்ப் (Nymphe) என்னும் தேவிக்கு செலுத்தப்பட்ட காணிக்கை அவை.

 

தமிழர்கள் அணங்கு என்றும் சம்ஸ்கிருதத்தில் நங்கை (அங்கண், சுராங்கனி) என்றும் இளம் தேவதைகளை அழைப்பர். இந்தச் சொல் கிரேக்க மொழியில் நைம்ப், நிம்ப் (Nymphe, Nymph) என்று திரிந்துள்ளது. நீர் நிலைகள், மலைகள், காடுகள், மரங்களில் அணங்கு  இருப்பதாக சங்க இலக்கியங்களும் சம்ஸ்கிருத இலக்கியங்களும் செப்புகின்றன. கிரேக்கர்களும் இப்படி நம்பினர். கல்யாணம் ஆகாத பெண்கள் நம்மூரில் திருமணஞ்சேரி போன்ற தலங்களுக்குச் சென்று காணிக்கை, வேண்டுதல் செய்வது போல கிரேக்கத்திலும் (Greece) நடந்தது தெரிகிறது.

 

புதிய ஐடியாக்கள் (New Ideas)

 

ஒவ்வொரு நாட்டிற்குச் சென்று வந்த பின்னரும் நான் சில பிஸினஸ் ஐடியாக்(Business Ideas)  களை எழுதி வருகிறேன். இப்போது மனதில் தோன்றும் விஷயங்களை எழுதுகிறேன்:

1.ஏதென்ஸில் ஒரு கடையில் கிரேக்க தத்துவ அறிஞர் படங்களுடன் சீட்டுக் கட்டு ( Greek Philosophers Playing Cards) வைத்திருந்தனர். பிரித்துக் காட்டுங்கள் நான் வாங்கிக் கொள்கிறேன் என்றேன். சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாடில், பிதகோரஸ், ஹோமர் என்று பல அறிஞர் படங்களையும் பல பொன் மொழிகளையும் பார்த்தவுடன் அதை இரண்டரை யூரோ கொடுத்து  வாங்கினேன். ஆனால் சாக்ரடீஸ் படத்தை ஜோக்கர் (Joker Card) கார்டில் போட்டது எனக்கு சிரிப்பை வரவழைத்தது. கிரேக்கர்களுக்கு சாக்ரடீஸ் மீது அவ்வளவு மதிப்பு!!

 

நாமும் இதே போல பல நல்ல விசயங்களுடன் சீட்டுக்கட்டுகள் தயாரிக்கலாமே. கோவில்கள், தலங்கள், அறிஞர்கள், பொன் மொழிகளுடன் சீட்டுக் கட்டுகள் (ஆங்கலத்தில்) தயாரித்தால் வெளி நாட்டினரும் வாங்குவர்.

 

ஐடியா 2

இன்னொரு கடை வாசலில் பொன்மொழிகள் அடங்கிய புக் மார்க்குகள்  (Book Marks) இருந்தன. இத் போல ராமகிருஷ்ண மடத்தில் விவேகாநந்தர் முதலியோரின் புக் மார்க் வாங்கி இருக்கிறேன். ஆனால் ஏதென்ஸில் நல்ல தரமான, வலுவான பிளாஸ்டிக் அட்டையில் 12 கிரேக்க அறிஞர்களின் படங்களுடன் அவர்களுடைய பொன்மொழிகள் கிடைத்தன. அதைப் பல மொழிகளில் மொழி பெயர்த்தும் தந்திருப்பதால் பல நாட்டினரும் வாங்குவர். நாமும் இப்படி பொன் மொழி அட்டைகளை ‘புக் மார்க்’ ஆக விற்கலாமே!

 

தரம் மிகவும் முக்கியம் இல்லாவிடில் வெளிநாட்டினர் வாங்க மாட்டார்கள். மூன்று புக் மார்க் ஒரு யூரோ வீதம் வாங்கினேன்.

 

ஐடியா 3

நான் எந்த நாட்டிற்குப் போனாலும் அந்த ஊரின் முக்கியப் படமுள்ள பிரிட்ஜ் மாக்னெட் (Fridge Magnets) வாங்கி, வீட்டில் பிரிட்ஜில் ஒட்டி வைப்பேன். இது போல பார்த்தினான் படமுள்ள மாக்னெட்டுகளை வாங்கினேன். இது நல்ல பிஸினஸ். வெளி நாட்டு மியூசியங்களில் காபிக் கடைக்கு அருகில் இப்படி கடை வைத்து அதில் பட அட்டைகள், பேனாக்கள், கீ செயின்கள், குழந்தைகளுக்கான டிராயிங் புத்தகங்கள், அறிவூட்டும் நூல்கள் என விற்கிறார்கள். நல்ல வியாபாரம் நடக்கிறது. நாமும் ஒவ்வொரு கோவிலிலும் நல்ல தரமான பொருட்களை விற்றால் நல்ல பணம் கிடைக்கும்.

முன்னொரு காலத்தில் நானும் இந்தியாவில் தொல்பொருட் துறை அலுவலத்துக்குச் சென்று கருப்பு வெள்ளைப் (Black And white) படங்களை வாங்கி இருக்கிறேன். அவைகளை எல்லாம் இப்போது பார்த்தால் அழுகையும் சிரிப்பும் வருகிறது. வெளிநாடுகளைவிட மிகவும் நல்ல கலைப் பொக்கிஷங்களை வைத்துக்கொண்டு அவைகளை விற்பனை செய்யும் திறன் இல்லையே என்று அழுகை. இப்படித் தரக் குறைவான படங்களை அவர்கள் விற்றதையும் அதை நான் வாங்கி பொக்கிஷம் போல வைத்திருந்ததையும் நினைத்து ஒரே சிரிப்பு.

 

ஏதென்ஸ் அக்ரோபொலிஸ் (Acropolis Museum in Athens) மியூசியத்தில் ஒரு யூரோவுக்கு இரண்டு (Picture Cards) அட்டைகள் வாங்கினாலும் அவைகளைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்; அப்படி நல்ல தரம்.

 

சுருக்கமாகச் சொல்லப் போனால், எல்லா சுற்றுலாத் தலங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட கடைகளும் காப்பிக் கடைகளும் இருக்க வேண்டும் அங்கே அந்தந்த ஊருக்கு ஏற்ற படங்களுடன் நூற்றுக்கணக்கான கலைப் பொருட்கள், படங்கள், பிரிட்ஜ் மாக்னெட், ஸ்டிக்கர்களை விற்க வேண்டும்.

 

–subham–