சிலைத் திருடனைக் கட்டிக்கொடுத்த கிளி! (Post No.6550)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com


Date: 15 June 2019


British Summer Time uploaded in London – 9-16 am

Post No. 6550

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

இஷ்டம், பூர்த்தம் என்றால் என்ன? (Post No.2897)

family havan2

Compiled by London swaminathan

 

Date: 15 June 2016

 

Post No. 2897

 

Time uploaded in London :– 8-20 AM

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

 

தான தர்ம அனுஷ்டானங்கள், இஷ்டம் பூர்த்தமென இருவகைப்படும்:-

 

அக்னிஹோத்ரம் தப: சத்யம் வேதானாம் சைவ பாலனம்

ஆதித்யம் வைஸ்வதேவஸ்ச இஷ்டமித்யபிதீயதே

 

அக்னிஹோத்ரம்

தவம்

சத்யம்

வேதம் ஓதுதல்

அதிதி /விருந்தோம்பல்

வைஸ்வதேவம் ( எல்லா கடவுளர்க்கும் தினசரி அக்னியில் இடப்படும் பலி; இன்னொரு அர்த்தம் -பூத யக்ஞம்)

இவைகள் இஷ்டம் என்று அறியப்படும்.

(திருக்குறளில் துறவறவியல் மற்றும் இல்லறவியலில் இவை கூறப்பட்டுள்ளன).

 

WELL IN SALEM, AZAKIYA SINGAR

வாபீகூபதடாகாதி தேவதாயதனானி ச

அன்னப்ரதானமாராமா: பூர்தமர்த்யா: ப்ரசக்ஷதே

குளம் (வாபீ) தோண்டல், கிணறு (கூப:) வெட்டல், ஏரி (தடாகா:) அமைத்தல்,ஆலயம் கட்டுதல் (தேவ ஆயதனா:),அன்னதானம் செய்தல், சத்திரங்கள் அமைத்தல் (ஆரமா:) – இவைகள் பூர்த்தம் எனப்படும்.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) இஷ்டம், பூர்த்தம் பற்றி விரிவாகப் பேசியுள்ளார். தெய்வத்தின் குரல் புத்தகத்தில் காண்க. குறிப்பாக வைஸ்வதேவம் பற்றி அவர் நன்கு விளக்கியுள்ளார்)

 

xxx

 

ஆறு வகையான ஆபத்துகள்

அதிக மழை (அதி வ்ருஷ்டி)

மழையின்மை/வறட்சி (அனாவ்ருஷ்டி)

வெட்டுக்கிளி (சாலபா:0

எலிகள் (மூஷகா:)

கிளிகள் (சுகா:)

அயல்நாட்டானின் படையெடுப்பு (ப்ரத்யாசன்னா:)

 

அதிவ்ருஷ்டிரனாவ்ருஷ்டி: சலபாமூஷகா: சுகா:

ப்ரத்யாசன்னாஸ்ச ராஜான: ஷடேதா ஈர்தய: ஸ்ம்ருதா:

belize_1984_parrots

–சுபம்–

 

 

ஜலே தைலம், கலே குஹ்யம், பாத்ரே தானம்!!!

Compiled by London swaminathan

Post No.2214

Date: 4   October 2015

Time uploaded in London: காலை 13-30

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

சம்ஸ்கிருதப் பொன்மொழிகள்

1).ஜலே தைலம் கலே குஹ்யம் பாத்ரே தானம் மனாகபி

ப்ராக்ஞே சாஸ்த்ரம் ஸ்வயம் யாதி விஸ்தாரம் வஸ்து சக்தித: — சாணக்கிய நீதி

நீரில் எண்ணையும், கெட்டவர்களிடத்தில் சொன்ன ரகசியமும், தகுதியுள்ளோரிடத்தில் கொடுத்த தானமும், அறிஞர்களிடத்தில் சொல்லப்படும் நூலறிவும் இயற்கையாகவே பரவிவிடும்.

Xxxx

2).ஜீவந்தோபி ம்ருதா: பஞ்ச வ்யாசேன பரிகீர்த்திதா:

தரித்ரோ வ்யாதிதோ மூர்க்க: ப்ரவாசீ நித்யசேவக:

வறுமையில் வாடுபவன், நோயாளி, முட்டாள், பிறதேசம் சென்றவன், தினக் கூலி ஆகிய ஐவரும் இருந்தும் இறந்தவர்கள் என்று வியாசர் கூறியுள்ளார்.

Xxx

3).த்ரிசங்கு இவ அந்தரா திஷ்ட – சாகுந்தலம்

திரிசங்கு போல அந்தரத்தில் நில்

Xxx

4).ந கலு ச உபரதோ யஸ்ய வல்லபோ ஜன: ஸ்மரதி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

செவிடனுக்கு குயில்களின் ஆலாபனை, மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதில்லை அல்லவா?

  

தபால்தலைகளில் குயில்

Xxx

5).நக்ன  க்ஷபணகே தேஸே ரஜக: கிம் கரிஷ்யதி – சாணக்யநீதி

எல்லோரும் நிர்வாணமாக இருக்கும் இடத்தி வண்ணானுக்கு என்ன வேலை?

Xxx

6).ந வா அரே சர்வஸ்ய காமாய சர்வம் ப்ரியம் பவதி

ஆத்மனஸ்து காமாய சர்வம் சர்வம் ப்ரியம் பவதி

உடல் மீது , உருவம் மீது அன்பு இல்லை.

ஆத்மாவைக் கருதியே அன்பு இருக்கிறது

ஒப்பிடுக:— “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு” (குறள் 786)

Xxx

7).ந வ்ருதா சபதம் குர்யாத் – மனு ஸ்மிருதி

வீண் உறுதி மொழி எடுக்காதே

Xxx

crane india Afghanistan-stamp790parrots

8).ந வ்யாபார சதேனாபி சுகவத் பாடயதே பக:- ஹிதோபதேசம்

நூற்றுக் கணக்கான முறை முயற்சி செய்தாலும் கொக்கு, கிளி போலப் பேச முடியாது

Xxx

9).ந சா சபா யத்ர ந சந்தி வ்ருத்தா:

வ்ருத்தா ந தே யே ந வதந்தி தர்மம் – மஹாபாரதம்/ ஹிதோபதேசம்

எங்கே முதியோர் இல்லையோ அது சபையாகாது;

யார் தர்ம உபதேசம் செய்வதில்லையோ அவர்கள் மூத்தோர் அல்ல.

Xxx

10).ந ஹி மானுஷாத் ஸ்ரேஷ்டதரம் ஹி கிஞ்சித் – மஹாபாரதம்

மானுடப் பிறவிக்கும் மேலானது எதுவுமில்லை.

ஒப்பிடுக: அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.

Xxx

11).ந ஹி சிம்ஹோ கஜாஸ்கந்தீ பயாத் கிரிகுஹாசய:

–ரகுவம்சம்

யானைமீது தாக்குதல் நடத்தவல்ல சிங்கமானது, யானைக்குப் பயந்து குகையில் அடைக்கலம் புகாது.

Xxx

12).நஹி அமூலா ப்ரசித்யதி – சு.ர.பா.

மூலகாரணமின்றி எதுவும் பிரபலமாகாது.

ஒப்பிடுக: நெருப்பின்றிப் புகையாது.

–சுபம்–

நீங்கள் தமிழ்ப் புலியா? தமிழ்க் கிளியா? தமிழ் எலியா?

புலி

கட்டுரை எண் 1838

தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்

தேதி : ஏப்ரல் 30, 2015; லண்டன் நேரம்: 12–02

என் கேள்விக்கென்ன பதில்?

இது போல தமிழ், ஆங்கிலத்தில் முப்பதுக்கும் மேலான க்விஸ், இந்த பிளாக்-கில் உள்ளன.

கீழேயுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னால் நீங்கள் தமிழ்ப் புலி. 15 கேள்விகளுக்குப் பதில் சொன்னால் நீங்கள் தமிழ்க் கிளி. 10 கேள்விகளுக்குப் பதில் சொன்னால் நீங்கள் தமிழ் எலி. 5 கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னால் நீங்கள் தமிழுக்குத் தருவது பெரும் வலி. ஒன்றும் சொல்லாவிடில் தமிழ் மொழிக்குப் பிடித்தது கிலி!!!!

கோடிட்ட இடங்களை நிரப்புங்கள்:—

1)———————– படித்தவனுடன் சொல்லாடாதே.

2)——————- புலவருக்கு ஔஷதம்

3)—————-உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்

4)கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி ————————–

5)—————- முப்பதும் செப்பினாள் வாழிய

6)நெஞ்சை அள்ளும் ————————

7)உச்சிமேற் புலவர்கொள் ————————-

8)ஒல்காப்புகழ் ————————————

9)வாய்மொழிக் ————————-; புலன் அழுக்கற்ற அந்தணாளன்

10)கருணைக்கு —————————

கிளி

11)கற்பனைக்குக் ————————–

12) நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்———————–

13)———————— என்னைப் பாடினான்

14)———————— தன்னைப் பாடினான்

15)———————— பெண்ணைப் பாடினான்

16) ————– வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்

17) வேதம் தமிழ் செய்த—————————-

18)பெரியாழ்வார் பெற்றெடுத்த————– வாழிய

19)விருத்தமென்னும் ஒண்பாவிற்கு ———–

20)மஹா கவி—————–

எலி

விடைகள்

1)கல்லாடம் 2) நைஷதம் 3) திருவாசகத்துக்கு 4) குறுகத் தரித்த குறள் 5)திருப்பாவை 6) சிலப்பதிகாரம் 7) நச்சினார்க்கினியர் 8) தொல்காப்பியன் 9) கபிலன் 10)அருணகிரி 11) கம்பன் 12) ஞான சம்பந்தன் 13) அப்பர் 14) சம்பந்தன் 15) சுந்தரர் 16) கம்பன் 17) மாறன் சடகோபன் 18) பெண்பிள்ளை 19) உயர் கம்பன் 20) பாரதி.

நிகழ்காலத்தில் வாழ்க!

ramana stamp

ஜென் காட்டும் வாழ்க்கை நெறி:-
நிகழ்காலத்தில் வாழ்க!
By ச.நாகராஜன்

Post No 1211; Dated 3rd August 2014.

ஜென் நெறி – நிகழ்காலத்தில் வாழ்க!
அமைதியான வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஜென் காட்டும் வாழ்க்கை நெறிகளில் மிக முக்கியமான ஒன்று –“நிகழ்காலத்தில் வாழ்க” என்பது தான்!

ரமண மஹரிஷியிடம் ஒரு கேள்வி!
இதே நெறியைத் தான் இந்து மதமும் வலியுறுத்தி வருகிறது.பகவான் ரமண மஹரிஷியை தரிசிக்க அவரது அணுக்கத் தொண்டர்களுள் ஒருவரான கிரிதாரிலால் என்பவர் (18-3-1946 அன்று) வந்தார். இந்த யுகம் எப்போது முடியும் என்ற கேள்வியை அவர் பகவானிடம் கேட்டார்.

உடனே ரமண மஹரிஷி” நான் காலத்தை உண்மையெனக் கருதுவதில்லை இறந்த காலத்தைப் பற்றியும் முன்பிருந்த யுகங்களைப் பற்றியும் நமக்குத் தெரியாது. எதிர்காலத்தைப் பற்றியும் நமக்குத் தெரியாது ஆனால் நிகழ்காலம் இருக்கிறதென்பது தெரியும் அதை முதலில் தெரிந்து கொள்வோம். அப்போது எல்லா சந்தேகங்களும் தீரும். தூக்கத்தில் இந்த உலகமும் இறந்த காலம் அல்லது எதிர்காலம் ஆகிய ஒன்றுமே நமக்கு இருப்பதில்லை. ஆனால் “நாம்” இருக்கிறோம்! மாற்றமில்லாததும் சாஸ்வதமுமானதையும் முதலில் தெரிந்து கொள்வோம்” என்றார்.

கிரிதாரிலால் புராணங்களில் ஒவ்வொரு யுகத்திலும் இத்தனை வருடங்கள் எனத் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதே என்று மேலும் வினவினார்.

அதற்கு பகவான், : அப்படிக் குறிப்பிடப்படுவதில் ஒரு அர்த்தம் இருக்கக் கூடும். அல்லது உலகத்தின் பிரமிப்பூட்டும் காலத்திற்கு முன்னர் மனிதனின் முழு ஆயுளான நூறு வருடங்கள் கூட எவ்வளவு அற்பமானது என்பதைச் சுட்டிக் காட்டும் ஒரு உத்தியாகவும் அது இருக்கக் கூடும்” என்று அருளினார்.

.பிரபஞ்ச வயதின் முன்னர் மனிதனின் வாழ்வு எவ்வளவு அற்பமானது! நான்கு யுகங்கள் கொண்ட சுற்று வரிசை எத்தனை வந்தனவோ! நிகழ்காலத்தில் வாழக் கற்றுக் கொண்டால், தூக்கத்தில் உள்ளதைப் போல காலம் என்பதே இல்லையென்றால் இந்தக் கேள்விகளால் நம்மை நாமே தொந்தரவு செய்து கொள்வதால் என்ன பயன்!

ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து அமைதியாக வாழக் கற்றுக் கொண்டால் நாளடைவில் அனைத்தும் புரிய ஆரம்பிக்கும் என்பதே ரமண மஹரிஷியின் அருளுரையின் சாராம்சம்.

EmptyBoat

காலிப் படகு மோதிய கதை

ஜென் பிரிவில் புத்த துறவிகளும் எல்லையற்ற கால வெள்ளத்தின் முன்னர் இறந்த காலத்தையோ எதிர் காலத்தையோ பற்றி எண்ணாமல் நிகழ் காலத்தில் வாழ்வதையே வாழ்க்கை நெறியாகக் கொண்டுள்ளனர்.

ஜென் பிரிவில் அடிக்கடி கூறப்படும் ஒரு போதனை காலியான படகு பற்றிய ஒரு சம்பவம். பெரிய ஜீவ நதியில் நீங்கள் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென காலியான படகு ஒன்று உங்கள் படகின் மீது மோதி விடுகிறது என வைத்துக் கொள்வோம். நீங்கள் என்ன செய்வீர்கள். கோபப் பட மாட்டீர்கள். ஆனால் அதிலேயே படகோட்டி ஒருவன் இருந்தால் அவன் மீது எவ்வளவு கோபம் வரும்!

அதே போலத்தான் உங்கள் வாழ்வின் நிகழ்வுகளும்! உங்களை உங்கள் அண்டை அயலார் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். மற்ற தோழர்கள் உங்களைச் சீண்டி விளையாடி இருக்கலாம். நேற்று உங்களின் மீது அபாண்டமான பழியை உங்களின் அலுவலக சகா சுமத்தி இருக்கலாம்.! இவர்கள் அனைவரும் காலியான படகு தான்! அவர்கள் தங்களது செய்கைகளை ஏதோ ஒரு உந்துதல் பேரில் தான் செய்திருக்கிறார்கள். தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியாது!

கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியினால் காலியான படகு உங்கள் படகின் மீது மோதுவது போல தங்கள் வலியினாலும் காயத்தினாலும் உங்கள் மீது அவர்கள் மோதுகிறார்கள்.

இதை உணரும் வரை நாம் நமது துக்கம், இறந்த காலம் ஆகியவற்றின் கைதிகளாக இருப்போம். நிகழ் காலத்தின் சக்திகளுக்குக் கட்டுப்பட்டு எப்போதும் பாய்ந்து பெருகும் அன்பை உளத்தில் ஏற்றுக் கொண்டால் யார் மீதும் கோபம் கொள்ள மாட்டோம்.காலிப் படகுகளை ஒதுக்கி விடுவோம்.

26-parrot1

ஒவ்வொன்றாகச் செய் நண்பனே!
நிகழ் காலத்தில் வாழ்வது உடனடி பயனைத் தரும் ஒரு அற்புதமான நெறி. வில்லியம் ஆஸ்லர் என்பவரிடம் ஒரு நண்பர் சென்றார்.எப்போதும் குழப்பமான சூழ்நிலையில் இருக்கும் தான் அதிக வேளைப் பளுவினாலும் ஏராளமான விஷயங்களைச் செய்ய வேண்டியிருப்பதால் மன இறுக்கம் கொண்டவராக இருப்பதாகவும் கூறி மனம் நொந்தார். அப்போது வில்லியம் ஆஸ்லர் வளர்த்து வந்த கிளி ஒன்று அந்த நண்பரை நோக்கி வணக்கம் கூறியது. இதனால் ஆச்சரியப்பட்ட நண்பர் அந்தக் கிளி பற்றி அவரிடம் விசாரித்தார்.

“இது ஒரு அற்புதமான கிளி..உங்கள் பிரச்சினைக்கு இந்தக் கிளி சுலபமான தீர்வைத் தரும்” என்று வில்லியம் ஆஸ்லர் சொல்லவே.அதன் விலை எவ்வளவு என்று கேட்டார் நண்பர்.

:இதன் விலை நூறு டாலர்” என்றார் வில்லியம் ஆஸ்லர். “இவ்வளவு விலையா?” எனத் திகைத்தார் நண்பர் ஆனால் தனது பிரச்சினையோ பெரிது என்பதால் நூறு டாலர் கொடுத்து அதை வாங்கி வீட்டுக்குச் சென்றார்.

வீட்டுக்குச் சென்றவுடன் கிளி அவரை நோக்கி “ஒன் அட் எ டைம். ஃப்ரண்ட் ஒன் அட் எ டைம்” (One at a time, friend! one at a time) -“ஒவ்வொன்றாகச் செய், நண்பனே ஒவ்வொன்றாகச் செய்” என்று கூறியது.

திருப்பித் திருப்பி அந்த வார்த்தைகளைக் கேட்ட நண்பர் தன் கையிலிருந்த முதல் காரியத்தை முடித்தார். ஆச்சரியமாக இருந்தது அவருக்கு. இப்படி விரைவாக ஒரு காரியத்தையும் அவர் முடித்ததே இல்லை. அடுத்தாற் போல அடுத்த விஷயத்தைத் தொடங்கினார். அதுவும் விரைவாக முடிந்தது. “ஒரு சமயத்தில் ஒரு வேலை” என்று நிகழ்காலத்தில் வாழப் பழகிக் கொள்ளும் பழக்கத்தால் ஒரே வாரத்திலேயே அவரது எல்லா வேலைகளும் முடிந்தன. தாமதமான காரியங்களும் இல்லை; தடைப்பட்ட காரியங்களும் இல்லை!வில்லியம் ஆஸ்லருடன் நேராக வந்த நண்பர், “கிளி கோடி டாலர் பெறும்” என்று உளமாரக் கூறினார்.

நிகழ்காலத்தில் வாழ்வது அதிசயமான மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் உருவாக்கும். வெற்றி மேல் வெற்றி வரும். உங்கள் மீது மோதுபவர்களை காலிப் படகாக எண்ணி சிரித்தவாறே முன்னேறுங்கள். அற்புதங்கள் மலரும்! இதுவே ஜென் காட்டும் வாழ்க்கை நெறி!

Article was written by my brother S Nagarajan of Bangalore for Muthal Osai tamil Daily. Contact swami_48@yahoo.com

**************