எந்த பூமியில் மனிதர்கள் யாக மேடைகளை நிறுவி, பலரும் சேர்ந்து வேள்வி என்னும் துணியை நெய்கிறார்களோ , பிரார்த்தனைக்கு முன்னர் எங்கு உயரமான, ஒளிமிக்க கம்பங்களை நாட்டுகிறார்களோ அந்த பூமாதேவி வளம் பெறட்டும் ; எங்களையும் வளம் பெறச் செய்வாளாகுக — 13
வேள்வி என்னும் கிரியையை ஆடையாக உருவகப்படுத்தி பலரும் நெய்யும் சித்திரம் இதில் உளது. எங்களுக்கு வளம் தருக என்ற கூட்டுப் பிரார்த்தனையும் இருக்கிறது ஒளி மிகுந்த யாக ஸ்தம்பங்களையும் புலவர் போற்றுகிறார்.
வர்த்த = வளர்க (வளம் பெருகுக) என்ற வினைச் சொல் பாஸிட்டிவ் /ஆக்கபூர்வ எண்ணத்தின் பிரதி பலிப்பு ஆகும்
பூமாதேவியே ! எங்களுக்குஆயுதங்களாலும் எண்ணங்களாலும் தொல்லை தரும் விரோதிகளை நாங்கள் வெல்வோமாக.. முன்னரே நீ உதவிய வாறு செய்வாயாகுக .
எதிரிகள், அவர்களுடைய மனதாலும் தொல்லை தருவதாகக் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. சைக்கலாஜிக்கல் பிளாக்மெய்ல் PSYCHOLOGICAL BLACKMAILING என்று சொல்லலாம். இது புதிதல்ல. முன்னரே நடந்தவைதான். நீ அப்போது உதவியது போலவே இப்போதும் உதவுக என்கிறார் புலவர் – 14
இரு கால், நான்கு கால் பிராணிகள் அனைத்தும் உன் மீது தோன்றின. அவற்றை நீ தாங்கி வளர்க்கிறாய் . உன் மீது ஐந்து இன மக்கள் தோன்றினார்கள். சூரியன் உதயமாகி அமுத மயமான ஒளியை உன் மீது பரப்புகிறான்.
ஐந்து இன மக்கள் என்பது ரிக் வேதம் முழுதும் பல இடங்களில் வருகிறது. அவர்களை ஐந்து பெரிய குழுக்கள் என்று வியாக்கியான க்காரர்கள் வருணிக்கிறார்கள் . இவர்கள் சிந்து சமவெளியிலிருந்து ஐரோப்பா முழுவதையும் சென்றதை ஸ்ரீகாந்த் தலகரி எழுதிய புஸ்தகத்தில் காணலாம்.
அவர் அனு , யது, துர்வாச, புரு, த்ருஹ்யு என்ற ஐந்து குழுக்களைக் குறிப்பிட்டு, அவர்களில் த்ருஹ்யு என்னும் இனமும் அனு என்னும் இனமும் ஆசியா மற்றும் ஐரோப்பா முழுதும் சென்றதைக் காட்டுகிறார்
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ரிக் வேதத்தில் ஆப்கானிஸ்தான் முதல் பீஹார் வரை
ரிக் வேதம் உலகின் பழமையான கவிதைப் புஸ்தகம். இதில் பத்து மண்டலங்கள் உள்ளன. இதிலுள்ள ஹரியூபிய என்னும் இடம் சிந்து-சரஸ்வதி நதி தீர ஹரப்பா நகரம் என்ற கருத்தும் உண்டு. இது பற்றி ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியுள்ளேன். காண்க-
1 Nov 2014 – கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1382; தேதி நவம்பர் 1, 2014. உலகின் மிகப்பழைய நூல் …
ரிக் வேதம் காட்டும் பல்லாயிரக்கணக்கான சதுரமைல் பர ப்பைக் காண்கையில் அந்தப் புலவர்கள் பல நூற்றாண்டுக் காலத்தில் வாழ் ந்தவர்கள் என்று தெரிகிறது. இதைவிட மிகச் சிறிய பரப்பைக் கொண்ட தமிழகம் பற்றிப் பாடிய 450 சங்கப்புலவர்களுக்கு நாம் 400 ஆண்டுக்காலம் ஒதுக்கியுள்ளோம். ரிக் வேதத்திலும் 450 புலவர் பாடல்கள் உள்ளன. இவ்வளவுக்கும் இவர்கள் பாடியது கடவுள் துதிகள் ! பூகோளம்- வரலாறு அல்ல.
ரிக் வேதத்தின் சில பகுதிகள் ஈரான் நாட்டவர் பாடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் எல்லோரும் ஒப்புக்கொள்ளாக் கூடிய , இன்றும் அடையாளம் தெரியக்கூடிய பிரதேசங்களை மட்டும் காண்போம்.
ஆப்கானிஸ்தான் (AFGHANISTAN) :-
இப்பொழுது அடிக்கடி பெயரில் அடிபடும் நகரம் காண்டஹார். முஸ்லீம் பயங்கரவாதிகளால் அடிக்கடி தாக்கப்படும் நகரம் இது. இதன் பெயர் காந்தாரம் என்பதாகும். அங்கிருந்து வந்தவர்தான் திருதராஷ்டிரனின் மனைவி காந்தாரி. அரசர்களுக்கு பல மனைவியர் இருப்பதால் அந்தந்த நாட்டிலிருந்து வந்தவர்களை அந்தப் பெயர்கொண்டு அழைப்பர் .
கோசால நாட்டிலிருந்த வந்த பெண்ணை கோசலை, கௌசல்யா என்பர். கேகய தேசத்திலிருந்து வந்த ராணியை கைகேயி என்பர். மிதிலா நகரில் இருந்து வந்த பெண்ணை மைதிலி என்று அழைப்பர். இதே போல தமிழ் மன்னர்களும் பலரை மணந்ததால் சோழ மாதேவி , பாண்டிமாதேவி என்று நாட்டின் பெயரால் அழைத்தனர்.
இந்த காந்தார நாட்டைப்பற்றி ஒரே இடத்தில் ஒரே துதி வருகிறது – 1-126-6
கந்தர்வர் பற்றிக் குறிப்பிடும் துதிகளை, மறைமுகமாக காந்தாரம் பற்றிக் குறிப்பிடுவதாக எண்ணுவோரும் இருக்கின்றனர்.
கந்தர்வர் பற்றிய இருபது குறிப்புகளில் பெரும்பாலானவை 1, 8, 9, 10 ஆவது மண்டலங்களில் வருவதால் அவை பிற் காலத்தியவை . மற்ற மண்டலங்களுக்குப் பின்னர் வைத்த புதிய மண்டலங்கள் இவை.
XXX
பஞ்சாப் (PUNJAB) :–
அடுத்தபடியாக இருப்பது பஞ்சாப் .
இப்பொழுது இதன் கிழக்குப் பகுதி இந்தியாவிலும் மேற்குப் பகுதி பாகிஸ்தானிலும் உளது. இப்போது நம் இதை ‘ஐந்து நதி – பஞ்ச ஆப’ — என்று அழைக்கிறோம். . வேத காலத்தில் இதை ‘ஏழு நதி – சப்த சிந்து’ – (SAPTASINDHU) பிரதேசம் என்று அழைத்தனர். மேற்கே ஓடிய சிந்துவையும் கிழக்கே ஓடிய சரஸ்வதி நதியையும் சேர்த்து இப்படி கூப்பிட்டனர் . பாரசிகர் மதநூலான செண்ட் அவெஸ்தாவிலும் ‘சப்த சிந்து’ என்றே வருகிறது.
ஆயினும் வேதத்தில் ‘பல’ , ‘அநேக’ என்ற பொருளிலும் எண் 7 பயன்படுத்தப்பட்டுள்ளது . சப்த சிந்து என்ற சொல் வரும் இடங்கள் –
1-32-12; 1-35-8;
2-12-3; 2-12-12;
4-28-1;
8-54-4; 8-69-12; 8-96-1;
9-66-6;
10-43-3; 10-67-12
இந்த மண்டலங்களை மத்திய கால , இறுதிக்கால மண்டலங்கள் என்பர் ஆய்வாளர்கள்.
xxx
ஹரியானா (HARYANA):-
இதை மஹாபாரத காலத்தில் குருக்ஷேத்ரப் பகுதி என்று அழைத்தனர். மனு ஸ்மிருதி முதலியன பிரம்மாவர்த் த என்று குறிப்பிடும். ஆனால் இவ்விரு சொற்களும் ரிக் வேதத்தில் இல்லை. ‘வர ஆ ப்ருதிவ்யா’- உலகில் சிறந்த இடம் – ‘நாபா பிருதிவ்யா’ – பூமியின் நாபி போன்ற பகுதி — என்றும் வேதம் போற்றும் .
ரிக் வேதத்தில் 3-23-4ல் ‘இலாயாஸ்பத’ , ‘மானுஷ’ என்ற இரண்டு இடங்கள் வருகின்றன. இவற்றை கிரிப்பித் Griffith தவறாக மொழி பெயர்த்துள்ளார் என்றும் இவைகளைப் பற்றிய தெளிவான விளக்கங்கங்கள் மஹாபாரதத்தில் வருகின்றன என்றும் ‘ரிக்வேதத்தில் வரலாறு’ என்ற நூலில் ஸ்ரீகாந்த் தலகரி காட்டுகிறார் .
THE RIG VEDA- A HISTORICAL ANALYSIS, Shrikant G. Talageri, Aditya Prakashan, New Delhi ,2000
வன பர்வத்தில் தீர்த்தயாத்ரை பகுதியில் 178 ஸ்லோகங்களில் குரு க்ஷேத்ரப் பிரதேசத்திலுள்ள புண்ய ஸ்தலங்களின் பட்டியல் கிடைக்கிறது.
“உலகப்புகழ் பெற்ற மானுஷாவில் (MANUSHA) குளிப்போரின் பாவங்கள் போய்விடும்
மானுஷாவிலிருந்து கூப்பிடு தூரத்தில் கிழக்கு திக்கில் ஆபகா (APAGA) நதி வரும். சித்தர்கள் வந்து செல்லும் இவ்விடத்தில் ஒரு பிராமணனுக்கு அன்னம் இட்டாலும் அது கோடி பிராமண அன்ன தான புண்யத்தை அளிக்கும்.”
(இதில் வரும் கூப்பிடு தூரம் என்னும் சொல் இன்றும் தமிழ் நாட்டின் கிராமத்தார் வழங்கும் சொல்!)
“இதற்குப் பின்னர் ஒருவர் இலாஸ்பத (ILYASPADA OR ILAYASPADA) செல்லவேண்டும் . உலகப் புகழ் பெற்ற சாரக என்னும் இடத்தில் அத்துறை உள்ளது. முன்னோர்களை வழிபட்டு அங்கே குளிப்போருக்கு துரதிருஷ்டம் என்பதே வராது.
மானுஷ என்றால் மனிதன் என்ற பொருளும் உண்டு. கிரிப்பித் அந்தப் பொருளை மனதில் வைத்து தவறாக மொழி பெயர்த்தார். ஆனால் எம். எல். பார்கவா என்பவர் இப்போதும் இவை ஹரியானாவில் உள்ள புனித ஸ்தலங்கள் என்பதைக் காட்டுகிறார்.
கைதால் (Kaithal) என்னும் இடத்திலிருந்து மூன்றரை மைல் தூரத்தில் மானஸ் இருக்கிறது கத்லி (Gadhli) என்னும் பெயரில் ஆபக (Apaga) தீர்த்தம் இருக்கிறது . கைதால் என்னும் இடத்திலிருந்து 2 மைல் தொலைவில் சாரக (Saraka) என்னும் இடம் ஷெர்கத் (Shergad) என்று மருவி வழங்குகிறது அதுதான் இளாஸ் பத.
இளா , பாரதி , சரஸ்வதி என்னும் மூன் று தேவியர்களும் ரிக் வேத ஆப்ரி ஸுக் தங்களில் எல்லா மண்டல ரிஷிகளாலும் வணங்கப்படுகின்றனர்.
ரிக் வேதத்தில் ஹரியானா புண்ய ஸ்தலங்கள் இடம்பெறும் துதிகள்—
வர ஆ ப்ருதிவ்யா –
3-23-4; 3-53-11;
நாபா ப்ருதிவ்யா –
1-143-4; 2-3-7; 3-5-9, 3-29-4;
9-72-7, 9-79-4, 9-82-3; 9-86-8;
10-1-6.
இலஸ் பத – இலயாஸ்பத –
1-128-1; 2-10-1; 3-23-4; 3-29-4; 6-1-2;
10-1-6; 10-70-1; 10-91-1; 10-191-1
மானுஷ –
1-128-7; 3-23-4
எல்லா மண்டலங்களிலும் பரவலாக ஹரியானா விஷயங்கள் வருவதைக் கவனிக்கவும். மேலும் மூன்றாவது மண்டலம் இன்னும் ஒரு அரிய விஷயத்தையும் சொல்கிறது . மிகப் பழைய மண்டலம் என்று கருதப்படும் ஆறாவது மண்டலத்தில் வரும் மன்னன் திவோ தாசன். அவனுடைய மூதாதையர் தேவவாதன் இலாஸ் பதத்தில் அக்கினியை பிரதிஷ்டை செய்த விஷயத்தை சொல்கிறது. இந்த வழக்கம் பாரசீக மதத்தில் பெரு வழக்காக காணப்படுகிறது.
xxx
உத்தர பிரதேசம் (UTTAR PRADESH):-
தற்கால உ.பி. மாநிலம் அக்காலத்தில் ஆர்யவர்த்தம் எனப்பட்டது. ஆனால் ரிக் வேதத்தில் அச்ச்சொல் இல்லை. பிரதர்தன என்ற காசி ராஜனின் பெயரை மூதாதையர் என்று கூறும் ரிக்வேத சூக்தங்கள் 9-96, 10-179-2 ஆகியவற்றின் அநுக்ரமணி (VEDIC INDEX) ஆகும்.
காசிராஜனின் ‘பிரதர்தன’ என்பது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஷ்ணுவின் பெயர். கி.மு 1400ல் துருக்கி- சிரியா நாடுகளை ஆண்ட இந்து மன்னன் (Mitanni Civilization) பெயரும் அதுவே. கங்கைநதியின் பெயரும் காசி நகரின் பெயரும் தமிழ் இலக்கியத்திலும் உண்டு . பூமியில் மிகப்பழமையான நகரம் புண்ய காசி.
ரிக் வேத சூக்தம் மற்றும் அநுக்ரமணி காண்க- 9-96; 10-179-2;
xxx
பீஹார் (BIHAR):-
உலகப் புகழ் பெற்ற சாம்ராஜ்யம் மகத சாம்ராஜ்யம். புத்தருக்கும், மஹாவீரருக்கும் முன்னரே தத்துவ ஞா னிகளை ஈன்றெடுத்த மாநிலம். ‘கீகட’ என்ற பெயரில் வேதத்தில் மகதம்/ பீஹார் இடம்பெறுகிறது .
3-53-14
பிரமகந்த என்று வேதம் குறிப்பிடும் மன்னன் பெயரில் இருந்து ‘ப்ர- மகதம்’ உண்டாயிற்று என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு .
xxx
ஆரியர் குடியேற்றம் பற்றிக் கொக்கரிக்கும் அரைவேக்காடுகளின் சவப்பெட்டியில் ஆணி அடிக்கும் பகுதி, இந்த பூகோள விஷயங்களாகும். கங்கையை முதலில் வைத்து, மேற்கு நோக்கி நதிகளின் பெயரை அடுக்கும் ஒரு சூக்தம் (Westward) வெள்ளைக் காரர்களின் மண்டையைப் பிளக்கிறது அடுத்தாற்போல ஹரியானாவிலும் உத்தர பிரதேசத்திலும் புனிதத் தலங்களை காட்டிவிட்டு
பஞ்சாப் பகுதியில் எதையும் காட்டாதது அவர்களுக்கு ஆப்பு அடிக்கிறது; வேத கால மக்கள் வடமேற்கு வழியாக நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கே வரவில்லை ; கங்கையிலிருந்து புறப்பட்டு உலகம் முழுதும் நாகரீகத்தைப் (Westward Expansion) பரப்பினர் என்பதை 6, 3, 7 ம் மண்டலங்களில் வரும் இலாயாஸ்பத (Ilayaspada) — காசி (Kasi Raja) ராஜன் – ‘கீகட’ (Kikata) பாடல்கள் பறை சாற்றுகின்றன . கி.மு 1400ம் ஆண்டிலேயே துருக்கியில் ஆடசி அமைத்தவர் காசி மக்கள். அதற்கு முன்னர் கி.மு 1800-ல் பாபிலோனிய -சுமேரிய பகுதியை ஆண்ட காசைட்டுகளும் (Kassites Civilization) காசி மக்களே!!
வெள்ளைக்கார மாக்ஸ்முல்லர்களுக்கும் கள்ளப்பயல் கால்டுவெல்களுக்கும் செமை அடி கொடுக்கிறது ரிக்வேத பூகோளம்.
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
அறிவியல் துளிகள் தொடரில் 13-5-16 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
சந்திரனில் ஒரு கிராமம்!
ச.நாகராஜன்
“சந்திரனைக் குறி வையுங்கள். ஒருவேளை தவறி விட்டாலும் ஒரு நட்சத்திரத்தை அடையலாம்.”
டபிள்யூ க்ளிமெண்ட் ஸ்டோன்
உல்கெங்கும் சந்திரனில் ஒரு கிராமம் அமைக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. 2016 ஏப்ரல் மாத ஆரம்பத்தில் 32வது விண்வெளி கருத்தரங்கம் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் எப்படி இந்த கிராம திட்டத்தை நிறைவேற்றுவது என்பதை ஆர்வலர்கள் தீவிரமாகப் பரிசீலித்தனர்.
நாஸாவோ செவ்வாய்ப் பயணத்தில் தீவிர ஈடுபாட்டைக் காண்பிப்பதால் சந்திரனில் கிராமம் அமைக்கும் திட்டத்திற்கு அவ்வளவாக ஆதர்வு காட்டவில்லை.
ஆனால் சந்திரனில் ஒரு தளத்தை முதலில் அமைத்து விட்டால் அங்கிருந்து செவ்வாய்க்குச் செல்லும் பயணம் சுலபமாகும் என்று அங்கு குழுமியிருந்த விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் ஒரு கருத்தை முன் வைத்தனர்.இரண்டாயிரத்து இருபதுகளில் இது முடிந்து விட்டால் இரண்டாயிரத்து முப்பதுகளில் செவ்வாய்ப் பயணம் உருவாகி விடும் என்பது அவர்களின் கணிப்பு.
இதற்கிடையில் இப்போது வெளியாகி உலகில் பரபரப்பூட்டை ஊட்டும் ஒரு புத்தகமாக பால் ஸ்புடிஸ் என்ப்வர் எழுதிய ‘தி வால்யூ ஆஃப் தி மூன்’ என்ற புத்தகம் அமைகிறது.
ஸ்புடிஸ் சந்திரனைப் பற்றிய ஒரு ஸ்பெஷலிஸ்ட். முதலில் சந்திரனில் மனித குலம் குடியேற வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கும் விஞ்ஞானி.
ரொபாட்டுகளையும் மனிதர்களையும் சந்திரனுக்கு அனுப்பி அங்கிருக்கும் நீர் உள்ளிட்ட அனைத்து ஆதார வளங்களையும் பயன்படுத்தி அற்புதமான ஒரு குடியிருப்பை அமைத்து விடலாம் என்பது அவரது ஆலோசனை.
இந்தியாவின் சந்திராயன் – 1 திட்டத்தை அவர் வெகுவாக ஆதரிக்கிறார்.
நாஸாவின் செவ்வாய் மோகத்தில் அவருக்கு சந்தேகம்! சமீப காலத்தில் நிச்சயமாக செவ்வாய்க்குச் செல்ல முடியாது; அப்படியே போனாலும் அது மனிதனின் கால் பதிக்கும் பயணமாகவே அமையும். ஆனால் சந்திரன் அருகில் இருக்கும் கிரகம். அதில் காலனி ஏற்படுத்துவது என்பது சுலபம் என்கிறார் அவர்.
சந்திரனில் நீர் இருப்பது உறுதியாகி விட்ட நிலையில் அந்தப் பனிக்கட்டி நீரைப் பயன்படுத்துவதோடு சந்திரனில் எப்போதுமே வெளிச்சமாக இருக்கும் பகுதியைப் பயன்படுத்தினால் சூரிய ஒளி பிரதேசத்தில் சரியான தளம் ஒன்றை அமைக்க முடியும். அங்கிருந்து மனிதர்களின் சந்திரனுக்கும் பூமிக்குமான பயணம் சுலபமாகும், சாடலைட்டுகளை சர்வீஸ் செயவதும் சுலபம். இது இன்னும் தொலைதூரப் பயணங்களுக்கு வழி வகுத்து அப்பயணங்களை எளிதாக்கும் என்று விவரமாக அவர் விளக்குகிறார்.
இந்த திட்டத்திற்கு 2011இல் உத்தேசிக்கப்பட்ட செலவு சுமார் 88 பில்லியன் டாலராகும் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி).
இப்போது கொஞ்சம் கூட செலவாகும்.
ஆனால் சந்திர தளத்தை அமைத்து விட்டால் டெலி ஆபரேடட் ரொபாட்டுகள் அனைத்து வேலைகளையும் அங்கு செய்து மனிதர்கள் வாழத் தக்க ஒரு கிராமத்தை உருவாக்கி விடும். சந்திரனில் தளம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?
ஏராளமான காரணங்கள் உள்ளன.
முதலில் தளம் அமைக்கும் தேசத்தின் கௌரவம் உயரும். அறிவியல் புதிய பரிமாணத்தை எட்டும். வணிகம் உயரும். சந்திர பயணங்கள் ஏற்பட்டு கிரகங்களுக்கு இடையேயான பயணம் ஆரம்பிக்கும்.
1972இலிருந்து ஒருவரும் சந்திரனுக்குச் செல்லவில்லை. இரண்டாயிர்த்து இருபதுகளிலிருந்து இந்த நிலை மாறும். இப்படி ஒரு சந்திர கிராமம் அமைய வேண்டுமெனில் மேலும் பல கருத்தரங்கங்கள் தேவை. இதை ஜாம் செஷன் என்று அழைக்கின்றனர்.
ஆனால் இப்படிப்பட்ட தளம் அமைக்கப்பட வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட ப்ல நாடுகளும் விரும்புகின்றன. அனைத்து நாடுகளும் இந்த திட்டத்தில் இணைந்தால் திட்டம் வெற்றி பெறும்.
சந்திர கான்க்ரீட்டைக் கொண்டு பாறைகள் உள்ள பகுதியில் விண்வெளி வீரர்களுக்கு ஒரு கிராமம் அமைக்கலாம். கிராமம் என்றால் ஒரு சர்ச், ஒரு டவுன் ஹால், வீடுகள் என்று அர்த்தமில்லை. ரொபாட்டுகள் மற்றும் மனிதர்களின் செய்ல்பாட்டிற்கு உதவும் ஒரு தளம், அவ்வளவு தான்,
ஆனால் இதிலும் அபாயங்கள் இல்லாமல் இல்லை. சந்திரனின் உஷ்ணநிலை மாறுபாடு அபாரமாக இருக்கும். சூரிய கதிரியக்கம் வேறு அதிகம். அத்துடன் விண்கற்கள் மோதாமல் இருக்க வேண்டும். இதையெல்லாம் மீறி நாம் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்றார் அவர்.
விண்வெளி வீரர்கள் சிறிது சிறிதாக அங்கு வாழும் நிலையை உருவாக்கிக் கொண்டே தான் இருக்கின்றனர். ஓடுபாதையில் விண்கலத்திலேயே உருவாக்கப்பட்ட உணவுவகைகளை அவர்கள் சாப்பிடுவது உள்ளிட்ட பல முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
விண்வெளி கருத்தரங்கமும் சந்திர தளம் அமைப்பதற்கு ஆதரவாக வெளியாகியுள்ள புதிய புத்தகமும் நல்ல முயற்சிக்கான ஆரம்பம் என்று சந்திரப் பிரியர்கள் கருதுகின்றனர்.
அறிவியல் அறிஞர்கள் வாழ்வில .. ..
பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒரு சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, மனிதாபிமானம் மிக்க சிறந்த ஒரு மனிதரும் கூட என்று அவரது வாழ்க்கைச் சமபவங்கள் பல நிரூபித்துள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று இது:
1903ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்ற முதல் பெண்மணி என்ற புகழைப் பெற்றார் மேரி க்யூரி. (தோற்றம் 7-11-1867 மறைவு 4-7-1934). அவரது கணவரான பியரியுடன் இணைந்து இப்பரிசு அவருக்கு அளிக்கப்பட்டது.
1906ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நிகழ்ந்த ஒரு விபத்தில் அவர் கணவர் அகால மரணம் அடைய அவர் விதவையானார். பெரும் துக்கம் அவரை ஆட்கொண்டது.
காலப்போக்கில் ஆறுதல் அடைந்த அவர் மனம், பால் லாங்வின் (Paul Langevin) என்ற இயற்பியல் பேராசிரியரின் மீது நாட்டம் கொண்டது. பால் தன் மனைவியிடமிருந்து ஒதுங்கித் தனித்து வாழ்ந்து வந்தார். ஏனெனில் அடிதடிக்குத் தயங்காதவர் அவர் மனைவி.
இருவரின் காதலும் வளர்ந்ததைப் பார்க்கச் சகிக்காத பாலின் மனைவி அவரது வீட்டின் கதவை உடைத்து காதல் கடிதங்களைக் கைப்பற்ற ஒரு ஆள் மூலமாக ஏற்பாடு செய்தார். அந்தக் கடிதங்களை பத்திரிகைகளுக்கு வேறு அனுப்ப ஏற்பாடு செய்தார். அவ்வளவு தான், பத்திரிகைகள் மேரி க்யூரியைக் கண்டபடி சித்தரிக்க ஆரம்பித்தன.
இதனால் மிகவும் மன வருத்தமுற்றார் அவர். இதற்கிடையே ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த பிரம்மாண்டமான அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் அங்கே ஐன்ஸ்டீனைச் சந்தித்தார். மாநாட்டிலிருந்து திரும்பி பாரிஸுக்கு வந்த அவர் தன் வீட்டின் முன்னால் திரண்டிருந்த கோபம் கொண்ட கும்ப்லைக் கண்டு திடுக்கிட்டார். வீட்டை விட்டு தனது மகள்களுடன் வெளியேறிய அவர் தன் நண்பர் ஒருவர் வீட்டில் தஞ்சம் புக நேர்ந்தது.
இதைக் கேட்ட ஐன்ஸ்டீன் மிகுந்த வருத்தம் அடைந்தார். மேரி க்யூரியை அபூர்வமான அறிவு கொண்ட பிழையில்லாத நேர்மையான பெண்மணி என்று அவர் கணித்து வைத்திருந்தார். ஆனால் பத்திரிகைகளும் மஞ்சள் பத்திரிகைகளும் பல்வேறு விதமாக அவரைச் சித்தரித்து அவருக்கு களங்கத்தை உண்டாக்கின. குறிப்பாக அவரது அறிவியல் சாதனையை மட்டம் தட்ட வேண்டும் என்பதே அவற்றின் குறிக்கோளாக இருந்தது.
ஆறுதல் கடிதங்கள் எழுதுவதில் புகழ் பெற்ற ஐன்ஸ்டீன் அற்புதமான ஒரு கடிதத்தை மேரி க்யூரிக்கு எழுதி அதில் தனது உறுதியான ஆதரவை அவருக்குத் தெரிவித்தார். களங்கமே இல்லாத நபர் என்று மேரியை ஐன்ஸ்டீன் புகழ்ந்தார்.
“இந்தக் கடிதத்தை எழுதுவதைப் பார்த்துச் சிரிக்க வேண்டாம், ஆனால் நடப்பதைப் பார்த்து நான் மிகவும் கோபமடைகிறேன், உங்களின் அறிவையும் உங்கள் ஆற்றலையும் நேர்மையையும் பார்த்து நான் வியக்கிறேன். ப்ரஸ்ஸல்ஸ் நகரில் உங்களைச் சந்தித்ததில் பெருமைப் படுகிறேன். கண்டதை எல்லாம் படித்து குழப்பம் அடையவேண்டாம். உங்களுக்கும் லாங்வினுக்கும் என் மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நீண்ட கடிதம் ஒன்றை ஐன்ஸ்டீன் எழுதினார்.
இதைப் பார்த்த மேரி பெரும் ஆறுதலை அடைந்தார். தொடர்ந்து பணியாற்றினார். அவருக்கு இரண்டாவது முறையாக நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
இந்த கடிதத்தை ‘ஐன்ஸ்டீன்: ஹிஸ் லைஃப் அண்ட் யுனிவர்ஸ்’ என்ற சமீபத்திய புத்தகத்தில் வால்டர் ஐஸக்ஸன் என்பவர் வெளியிட்டுள்ளார்.
You must be logged in to post a comment.