மர்தனம் குணவர்தனம்: குணங்கள் பற்றிய சம்ஸ்கிருத பழமொழிகள் (Post No. 2479)

cleaning saints

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 11 January 2016

 

Post No. 2479

 

Time uploaded in London :– காலை  9-32

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

(தமிழ் மொழிபெயர்ப்பு:லண்டன் சுவாமிநாதன்)

1.குணேஷு க்ரியதாம் யத்ன: கிம் ஆடோபை: ப்ரயோஜனம் – சார்ங்கதர பத்ததி.

நற்குணங்களை அடைய முயற்சி செய்க. ஆடம்பரத்தால் என்ன பயன்?

 

2.குணேஷு யத்ன: புருஷேண கார்யோ ந கிஞ்சித்  அப்ராப்யதமம் குணானாம்- மிருச்சகடிகம்

மனிதர்கள் நற்குணங்களை அடைய முயற்சிசெய்ய வேண்டும். நல்ல குணங்களால் அடைய முடியாது என்ன?

 

3.குணேஷ்யேவ கர்தவ்ய: ப்ரயத்ன: புருஷை: சதா – மிருச்சகடிகம்

நற்குணங்களை அடைய எப்போதும் முயற்சி செய்க.

 

4.குணைர் உத்தமதாம்  யாந்தி ந உச்சைர் ஆசனம் ஸ்தித: – சாணக்ய நீதி, பஞ்ச தந்திரம்

குணங்களால்தான் உயர்ந்த நிலையை அடைய முடியும். உயர்ந்த ஆசனத்தால் அல்ல.

 

dalai's 80th BD in california

5.குணோ பூஷயதே ரூபம்- சாணக்ய நீதி

நற்குணங்களே ஒருவனுக்கு அழகு தரும்.

 

6.குணோ ஹி கௌரவஸ்தானம் ந ரூபம் ந தனம் ததா

குருதாம் நயந்தி ஹி குணா ச சம்ஹதி: – கிராதார்ஜுனீயம்

நற்குணங்கள் ஒருவனுக்கு பெருமை சேர்க்கும் (உயர்வு தரும்)

வெளித்தோற்றத்தால் அல்ல.

 

7.தத் ரூபம் யத்ர குணா: – காதா

நற்குணங்கள் எங்கோ, அங்கே அழகு (ஒளிரும்)

 

8.நம்ரந்தி குணினோ ஜனா: நம்ரந்தி பலினோ வ்ருக்ஷா:

பழுத்த பழங்கள் உடைய மரங்கள் தாழ்ந்து இருக்கும். நற்குணங்கள் உடையோர் அதுபோல பணிந்திருப்பர்.

 

9.நிர்குணஸ்ய ஹதம் ரூபம் – சாணக்ய நீதி

குணமில்லாத இடத்தில் அழகு பாழ்.

 

10.ந ஏகத்ர சர்வோ குண சந்நிபாத:

ஒரே இடத்தில் எல்லா குணங்களும் சேருவதில்லை.

 

11.பதம் ஹி சர்வத்ர குணைர் நிதீயதே – ரகுவம்சம்

ஒருவனுடைய நிலையை நிர்ணயிப்பது அவனது குணங்களே.

 

12.ப்ராயேன சாமக்ரயவிதௌ குணானாம் பராங்முகி விஸ்வஸ்ருஜ: ப்ரவ்ருத்தி:- குமார சம்பவம்

 

13.கடவுள் பெரும்பாலும், எல்லா குணங்களையும் ஒரே இடத்தில் வைக்காமல் பிரித்துவைக்கவே செய்கிறார்.

(ஒப்பிடுக: துர்கா, லெட்சுமி, சரஸ்வதி மூவரும் சேர்ந்து வசிப்பதில்லை)

 

14.மர்தனம் குணவர்தனம்சு.ர.பா. (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)

நல்ல குணங்கள், தொடர்ந்து கடைபிடிப்பதால்தான், வளரும்.

(ஒப்பிடுக: சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். பாடப்பாட ராகம், மூட மூட ரோகம்)

baba laddu

15.யத்ரா க்ருதிஸ் தத்ர குணா வசந்தி- சு.ர.பா.

எங்கு உடற்கட்டு இருக்கிறதோ அங்கே குணங்கள் இருக்கும்.

(ஒப்பிடுக: பலமுள்ளவனே ஆன்மாவை அறிவான்: உபநிஷத்)

 

16.யதா நாம ததா குண:

எப்படிப் பெயரோ அப்படி குணம் (பெயருக்கேற்ற குணம்)

 

17.யதி சந்தி குணா: பும்சாம் விகசந்த்யேவ தே ஸ்வயம் – சம்யோ

நற்குணங்கள் இருக்கும் மனிதர்கள், தாமாகவே உயர்வடைவர் ( குணங்களே ஒருவர் உயர உதவும்)

 

18.ரூபஸ்யாபரணம் குண: — சாணக்யநீதி

குணங்களே நல்ல அணிகலன்.

 

19.வசந்தி ஹி ப்ரேம்ணி குணா ந வஸ்துனி – கிராதார்ஜுனீயம்

அன்பில்தான் குணங்கள் இருக்கும்; பொருட்களில் அல்ல.

 

20.சத்ரோரபி குணா க்ராஹ்யா தோஷா வாச்யா குரோரபி – மஹாபாரதம்

எதிரிகளிடத்தில் நற்குணங்கள் இருந்தாலும் அவைகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

 

21.சத்ரோரபி சுகுணோ க்ரஹ்ய:- சாணக்யசூத்ரம்

சந்த: ஸ்வத:ப்ரகாசந்தே  குணா ந பரதோ நூணாம் –சு.ர.பா

நற்குணங்கள் தாமாகவே பிரகாசிக்கும்; பிறர் காட்டத் தேவையில்லை.

 

22.சுலபா ரம்யதா லோகே துர்லபம்ஹி குணார்ஜனம் – கிராதார்ஜுனீயம்

அழகானது மலிவாகக் கிடைக்கும்; நற்குணங்களோ கிடைப்பதரிது.

(தமிழ் மொழிபெயர்ப்பு:லண்டன் சுவாமிநாதன்)

 

 

 

Subham–