COMPILED BY LONDON SWAMINATHAN
Date: 11 January 2016
Post No. 2479
Time uploaded in London :– காலை 9-32
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
swami_48@yahoo.com)
(தமிழ் மொழிபெயர்ப்பு:லண்டன் சுவாமிநாதன்)
1.குணேஷு க்ரியதாம் யத்ன: கிம் ஆடோபை: ப்ரயோஜனம் – சார்ங்கதர பத்ததி.
நற்குணங்களை அடைய முயற்சி செய்க. ஆடம்பரத்தால் என்ன பயன்?
2.குணேஷு யத்ன: புருஷேண கார்யோ ந கிஞ்சித் அப்ராப்யதமம் குணானாம்- மிருச்சகடிகம்
மனிதர்கள் நற்குணங்களை அடைய முயற்சிசெய்ய வேண்டும். நல்ல குணங்களால் அடைய முடியாது என்ன?
3.குணேஷ்யேவ கர்தவ்ய: ப்ரயத்ன: புருஷை: சதா – மிருச்சகடிகம்
நற்குணங்களை அடைய எப்போதும் முயற்சி செய்க.
4.குணைர் உத்தமதாம் யாந்தி ந உச்சைர் ஆசனம் ஸ்தித: – சாணக்ய நீதி, பஞ்ச தந்திரம்
குணங்களால்தான் உயர்ந்த நிலையை அடைய முடியும். உயர்ந்த ஆசனத்தால் அல்ல.
5.குணோ பூஷயதே ரூபம்- சாணக்ய நீதி
நற்குணங்களே ஒருவனுக்கு அழகு தரும்.
6.குணோ ஹி கௌரவஸ்தானம் ந ரூபம் ந தனம் ததா
குருதாம் நயந்தி ஹி குணா ச சம்ஹதி: – கிராதார்ஜுனீயம்
நற்குணங்கள் ஒருவனுக்கு பெருமை சேர்க்கும் (உயர்வு தரும்)
வெளித்தோற்றத்தால் அல்ல.
7.தத் ரூபம் யத்ர குணா: – காதா
நற்குணங்கள் எங்கோ, அங்கே அழகு (ஒளிரும்)
8.நம்ரந்தி குணினோ ஜனா: நம்ரந்தி பலினோ வ்ருக்ஷா:
பழுத்த பழங்கள் உடைய மரங்கள் தாழ்ந்து இருக்கும். நற்குணங்கள் உடையோர் அதுபோல பணிந்திருப்பர்.
9.நிர்குணஸ்ய ஹதம் ரூபம் – சாணக்ய நீதி
குணமில்லாத இடத்தில் அழகு பாழ்.
10.ந ஏகத்ர சர்வோ குண சந்நிபாத:
ஒரே இடத்தில் எல்லா குணங்களும் சேருவதில்லை.
11.பதம் ஹி சர்வத்ர குணைர் நிதீயதே – ரகுவம்சம்
ஒருவனுடைய நிலையை நிர்ணயிப்பது அவனது குணங்களே.
12.ப்ராயேன சாமக்ரயவிதௌ குணானாம் பராங்முகி விஸ்வஸ்ருஜ: ப்ரவ்ருத்தி:- குமார சம்பவம்
13.கடவுள் பெரும்பாலும், எல்லா குணங்களையும் ஒரே இடத்தில் வைக்காமல் பிரித்துவைக்கவே செய்கிறார்.
(ஒப்பிடுக: துர்கா, லெட்சுமி, சரஸ்வதி மூவரும் சேர்ந்து வசிப்பதில்லை)
14.மர்தனம் குணவர்தனம் – சு.ர.பா. (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)
நல்ல குணங்கள், தொடர்ந்து கடைபிடிப்பதால்தான், வளரும்.
(ஒப்பிடுக: சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். பாடப்பாட ராகம், மூட மூட ரோகம்)
15.யத்ரா க்ருதிஸ் தத்ர குணா வசந்தி- சு.ர.பா.
எங்கு உடற்கட்டு இருக்கிறதோ அங்கே குணங்கள் இருக்கும்.
(ஒப்பிடுக: பலமுள்ளவனே ஆன்மாவை அறிவான்: உபநிஷத்)
16.யதா நாம ததா குண:
எப்படிப் பெயரோ அப்படி குணம் (பெயருக்கேற்ற குணம்)
17.யதி சந்தி குணா: பும்சாம் விகசந்த்யேவ தே ஸ்வயம் – சம்யோ
நற்குணங்கள் இருக்கும் மனிதர்கள், தாமாகவே உயர்வடைவர் ( குணங்களே ஒருவர் உயர உதவும்)
18.ரூபஸ்யாபரணம் குண: — சாணக்யநீதி
குணங்களே நல்ல அணிகலன்.
19.வசந்தி ஹி ப்ரேம்ணி குணா ந வஸ்துனி – கிராதார்ஜுனீயம்
அன்பில்தான் குணங்கள் இருக்கும்; பொருட்களில் அல்ல.
20.சத்ரோரபி குணா க்ராஹ்யா தோஷா வாச்யா குரோரபி – மஹாபாரதம்
எதிரிகளிடத்தில் நற்குணங்கள் இருந்தாலும் அவைகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
21.சத்ரோரபி சுகுணோ க்ரஹ்ய:- சாணக்யசூத்ரம்
சந்த: ஸ்வத:ப்ரகாசந்தே குணா ந பரதோ நூணாம் –சு.ர.பா
நற்குணங்கள் தாமாகவே பிரகாசிக்கும்; பிறர் காட்டத் தேவையில்லை.
22.சுலபா ரம்யதா லோகே துர்லபம்ஹி குணார்ஜனம் – கிராதார்ஜுனீயம்
அழகானது மலிவாகக் கிடைக்கும்; நற்குணங்களோ கிடைப்பதரிது.
(தமிழ் மொழிபெயர்ப்பு:லண்டன் சுவாமிநாதன்)
–Subham–
You must be logged in to post a comment.