கங்கை, காவிரி, குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்? (Post No.4101)

கங்கை, காவிரி, குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்? (Post No.4101)

 

Written by London Swaminathan


Date: 21 July 2017


Time uploaded in London- 13-45


Post No. 4101


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

இந்த நாட்டை வெள்ளைக்காரன்தான் ஒற்றுமைப் படுத்தினான், அதற்கு முன்பாக இந்தியர்களுக்கு  பரந்த இந்த பாரத நிலப்பரப்பு ஒரே நாடு என்பதே தெரியாது என்று பல திராவிடங்களும் மார்கஸீயங்களும் பிதற்றுவதைக் கேட்டிருப்பீர்கள். அவர்கள் சாலை போடாவிடில், ரயில்வே லைன் போடாவிடில் நாடே ஒற்றுமை அடைந்திருக்காது என்று அதுகளும் இதுகளும் திண்ணையில் உட்கார்ந்து அங்கலாய்ப்பதையும் பார்த்திருப்பீர்கள் இதெல்லாம் உண்மையில்லை என்பதற்குச் சான்று சங்கத் தமிழ் நூல்கள் முதல் பாரதி பாடல் வரை உள்ளது.

ஒரு சில எடுத்துக் காட்டுகளை மட்டும் பார்ப்போம்-

கங்கை- காவிரி இணைப்பு பற்றி அடிக்கடி பேசுகிறோம். ‘கங்கையை விட புனிதமான காவிரி’ என்று ஒரு ஆழ்வார் பாடுகிறார். இன்னும் ஒரு இடத்தில் ‘கங்கை ஆடிலென், காவிரி ஆடிலென்’ என்று புண்ய தீர்த்தத்தில் குளிப்பது பற்றிப் பாடுகிறார்.

இதோ அப்பர் வாக்கு:-

கங்கை யாடிலென் காவிடி யாடிலென்

கொங்கு தண்குமரித்துறை யாடிலென்

ஓங்கு மாகடல் ஓத நீராடிலென்

எங்கும் ஈசனெனா தவர்க்கில்லையே

–ஐந்தாம் திருமுறை

 

 

 

நமது தந்தையர்  காலத்தில் வாழ்ந்த பாரதியோ ‘கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’ என்கிறான்.

 

கம்ப வர்மனின் திருவாமூர்க் கல்வெட்டில் ‘கங்கையிடை குமரி இடை எழுநூற்றுக் காதமும்’ – என்ற வரி உள்ளது.


கம்பவர்மனின் திருவாமூர்க் கல்வெட்டு

 

ஸ்ரீ கம்ப பருமற்கு

யாண்டு இருபதாவது

பட்டை பொத்தனுக்கு ஒக்கொண்ட நாகன் ஒக்க

தித்தன் பட்டைபொத்தன் மேதவம் புரிந்ததென்று

படாரிக்கு நவகண்டங் குடுத்து

குன்றகத்தலை அறுத்துப் பிடலிகை மேல்

வைத்தானுக்கு

திருவான்மூர் ஊரார் வைத்த பரிசாவது

எமூர்ப் பறைகொட்டக்

கல்மேடு செய்தராவிக்குக் குடுப்பாரானார்

பொத்தனங் கிழவர்களும் தொறுப்பட்டி நிலம்

குடுத்தார்கள்

இது அன்றென்றார்

கங்கையிடைக் குமரி இடை எழுநூற்றுக் காதமும்

செய்தான் செய்த பாவத்துப் படுவார்

அன்றென்றார் அன்றாள் கோவுக்கு

காற்ப்பொன் றண்டப்படுவார்

 

கங்கை நதி உலகின் மிகப் பழமையான, உலகின் முதல் கவிதைத் தொகுப்பான ரிக் வேதத்திலும் உள்ளது. எதற்காக இப்படி கங்கையையும் காவிரியையும் இணைத்துப் பேசுகின்றனர்?

 

இந்த நாடு ஒன்றே!

இந்தப் பண்பாடு ஒன்றே!!

 

என்பதை எடுத்துரைக்கத்தான்  காரிகிழார் முதல் (புறநானூறு பாடல் 6) பாரதி வரை இமயம்-குமரி பற்றிப் பாடுகின்றனர்.

சேரன் செங்குட்டுவனும், கரிகால் சோழனும் இமயம் வரை சென்று சின்னங்களைப் பொறித்தது  ஏன்?

கண்ணகி சிலைக்காக, இமயத்தில் கல் எடுத்து, கங்கையில் அதைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்தது ஏன்?

 

காளிதாசனின் ரகு வம்ச காவியத்தில் ஈரான் முதல் பாண்டியநாடு வரை ரகுவின் திக்விஜயம் செல்கிறது. இந்துமதி சுயம்வரத்துக்கு வந்த அரசர்களும் பாண்டியநாடு முதல் ஆப்கனிஸ்தான் வரை பல நாடுகளிலிருந்து வந்துள்ளனர். ஆக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாம் ஒரு நாடு, நாம் ஒரே பண்பாடு என்ற கொள்கை மனதில் ஆழ வேரூன்றிவிட்டது.

 

திருமூலர் இமயத்தையும் சிதம்பரத்தையும் இலங்கையையும் இணைத்துப் பாடியது ஏன்?

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை

கூரும் இவ்வானில் இலங்கைக் குறியுறுஞ்

சாருந்திலை வனத் தன் மாமலயத்து

ஏறுஞ் சுழுனை இவை சிவபூமியே”. (திருமந்திரம் – 2747)

 

 

(திருமூலரும் தீர்க்கரேகையும் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இப்பாடல் பற்றி மேல்விவரம் காண்க)

கல்வெட்டிலும் கூட கங்கை காவிரி பற்றி இருக்கிறது! ஆக நமது நாட்டில் அப்பர் காலத்துக்கு முன்னரே, காளிதாசன் காலத்துக்கு முன்னரே, சங்க காலத்துக்கு முன்னரே இமயம் முதல் குமரி வரை ஒன்று என்ற கொள்கை இருந்திருக்கிறது.

 

வெள்ளைக்காரன் ரோடு போட்டதும், ரயில் பாதை போட்டதும் அவனுடைய படைகளையும் விற்பனைப் பொருட்களையும் கொண்டு வந்து நம்மை அடக்கி வைக்கவும், கோஹினூர் போன்ற பொக்கிஷங்களைக் கடத்தவும்தான் என்பதை அறிக.

 

தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுக்க அகத்தியனை இமய மலையிலிருந்து சிவபெருமான் அனுப்பியதும் வரலாற்று உண்மை. தொல்காப்பியம் முதல் பாரதி பாடல் வரை இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது

நமது வரலாற்றுப் புத்தககங்களை மாற்றி எழுதி நம் பிள்ளைகளுக்கு சரியான வரலாற்றைக் கற்பிக்க வேண்டும்.

இது நமது தலையாய கடமை!

–SUBHAM–

TAGS:– கங்கை, காவிரி, குமரி, ஒற்றுமை, வெள்ளைக்காரன்

சுமேரு, குமேரு, பாமேரு, மேரு

sumeru_parvat9742

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1400; தேதி 9 நவம்பர், 2014.

சுமேரியா/ சுமேரு என்னும் நாகரீகம் தழைத்த இடம் இராக்
பாமீர்/ பாமேரு என்னும் பீடபூமி இருப்பது தாஜ்கிஸ்தான், கிர்கிஸ்தான் பகுதி
குமேரு என்பது தென் துருவம்; குமரி என்பது தென் கோடி மலை, க்மேர் என்பவர் கம்போடியர்
மேரு என்பது இந்துக்களின் புனித மலை.

இவை எல்லாவற்றிலும் மேரு இருப்பதன் மர்மம் என்ன?

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் 12-10-1932ல் சென்னையில் நடத்திய சொற்பொழிவில் சொல்கிறார்:
“ வடக்கே உள்ளதற்கு ஸுமேரு என்று பெயர். தெற்கே உள்ளதற்கு குமேரு என்று பெயர். ஸூமேருவிலிருந்து குமேரு வரை ஏழு ஸமுத்ரங்களும் த்வீபங்களும் இருக்கின்றன என்று காணப்படுகிறது. இப்பொழுது உள்ளாற்றைப் பார்த்தால் அது பொய் என்று தோற்றுகிறது. ஏழு த்வீபங்களைக் காணோம், ஏழு ஸமுத்ரங்களும் இல்லை. இதைப் பற்றி கொஞ்சம் யோசிக்கலாம்.”
இப்படிச் சொல்லிவிட்டு பின்னர் பூமியின் அச்சு ஒரு காலத்தில் துருவ நட்சத்திரத்துக்கு நேராக இருந்ததும் பின்னர் அது சிறிது சிறிதாக நகர்ந்து இப்போழுது தள்ளி இருக்கிறது என்றும் அது நேராக இருந்த காலத்து இருந்த நிலையையே புராணங்கள் கூறுவதகாவும் விளக்குகிறார். ஆடிவிட்டு நிற்கப் போகும் பம்பரம் போல பூமி தலை சாய்ந்து சுற்றுவதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை துருவ நட்சத்திரம் மாறுவதும் விஞ்ஞான உண்மை. நிற்க.

((காண்க: —ஸ்ரீ ஜகத்குருவின் உபதேசங்கள், முதற்பாகம், பக்கம்75, ஸ்ரீகாமகோடி கோசஸ்தானம், சென்னை, 1957, வில ரூ3.))

sumermap2 in modern Iraq

நாம் காண வந்த விஷயம் குமேரு. அதற்காகத்தான் காஞ்சிப் பெரியவரின் உரையை மேற்கோள் காட்டினேன். இதைத்தான் நாம் குமரிக் கோடு என்கிறாம். அதாவது ஒரு காலத்தில் குமரி மலை (கோடு) என்று ஒன்று இருந்ததும் அது சுனாமி தாக்குதலில் கடலுக்குள் சென்றதும் தமிழ் இலக்கியம் வாயிலாக நாம் அறிகிறோம். குமரி என்பது குமேருவில் இருந்து வந்திருக்கலாம். அல்லது தென் துருவம் குமேரு என்றும் அது போல உள்ள மலை குமரிக்கோடு என்றும் வந்திருக்கலாம்.

கலைக் களஞ்சியங்களைப் படிப்போருக்கு ஒரு விஷயம் தெரியும் — க்மேர் எனப்படும் கம்போடிய இனம், சுமேரிய இனம் ஆகியவற்றின் மூலமும் இதுவரை மர்மமாகவே இருக்கிறது. இதற்கு விளக்கமே கிடைக்கவில்லை. காஞ்சிப் பெரியவர் சொல்வதன் அடிப்படையில் நான் சொல்வது குமரி என்பதும் க்மேர் என்பதும் குமேருவில் பிறந்த சொற்கள் என்பதே!

mount-meru
Meru in Kenya, East Africa

க்மேர் என்னும் இனம் கம்போடியாவில் ஆட்சி புரிந்தது — இன்றும் இருக்கிறது. அவர்கள் காம்போஜர்கள். அதை இப்பொழுது கம்போடியா என்போம். இந்த இனம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஒரு காலத்தில் இருந்ததை வடமொழி புராண, இதிஹாசங்கள் மூலம் அறிகிறோம். அவர்கள் 1500 ஆண்டுகளுக்கு தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் இந்துப் பண்பாட்டைப் பின்பற்றினர். அவர்கள் குமரி வழியாகப் போனதன் நினைவாக க்மேர் என்ற பெயர் நிலைத்திருக்கலாம் .அகத்தியர் கடல் கடந்து இவர்களைக்கொண்டு சென்றதாலோ அல்லது அவர்களுக்கு நாகரீகத்தைக் கற்பித்ததாலோ இன்றுவரை அகத்தியர் சிலைகள் அந்த நாடுகள் முழுதும் இருப்பதையும் நாம் அறிவோம்.

காம்போஜர்கள் கட்டிய உலகப் புகழ்பெற்ற அங்கோர்வட் என்னும் இந்துக் கோவில் மேருமலை வடிவத்தில் அமைக்கப்படதையும் அதைத் தொடர்ந்து இந்தோநேசியாவில் போரொபுதூரில் மேருமலை வடிவத்தில் கோவில் கட்டப்பட்டதையும் உலக மக்கள் அறிவர். இத்தகையோர் க்மேர்– குமேர்—குமேரு – மேரு என்று பெயர் கொண்டதில் வியப்பதற்கு ஏதேனும் உண்டோ?

pameru
Pamir– Roof of the World

இனி சுமேரியாவைக் கண்போம். சு+மேரு என்பதன் பொருளும் யாருக்கும் தெரியவில்லை. அருகில் வசித்த அக்கடியர்கள் இவர்களை சுமேரம் என்று குறித்தனர். ஆனால் சுமேரியர்கள் யார்? அவர் மெசபொடோமியாவுக்கு வெளியே இருந்துவந்த வந்தேறு குடிமக்களா? என்று அறிஞர் உலகம் இன்றும் காரசாரமாக விவாதித்து வருவதாக லண்டன் பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட “அண்மைக் கிழக்கு நாட்டு அகராதி” கூறும். அந்த நூலைப் பன்முறை படித்த நான் கூறுவது, “ சுமேரியர்கள் இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து குடியேறியவர்களே என்பதாகும். அல்லது ஒரு பிரிவு மக்கள் இந்தியக் குடியேறிகளாக இருக்கலாம்.

சுமேரியர்களுக்கு சப்த ஸ்வரங்களைக் கற்பித்தவர்கள் அக்கடியர்கள் என்பதும் மற்ற எல்லா சங்கீத விஷயங்களையும் கற்பித்தவர்கள் ஹிட்டைட்ஸ் என்பதும், அந்த ஹிட்டைட்ஸ் என்பவர்கள் சம்ஸ்கிருத மொழியுடன் தொடர்புடைய மொழி பேசியோர் என்பதும் பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட அகராதி தரும் தகவல் ஆகும். ஆகவே, நான் செய்த சொல் ஆராய்ச்சியில் தெரிவதும் அவர்கள் இந்தியத் தொடர்புடைய ஒரு பழங்குடி என்பதேயாகும். இன்ன பிற காரணங்களால் சுமேரியா என்பது சு+மேரு என்று கொள்வதே சாலப் பொருத்தம்.

maha-meru-yantra
Sri Chakra and Meru: Hindu Goddess Worship

இனி பாமீர் மலைத் தொடரைக் காண்போம். பாமேரு என்பதன் சிதைந்த வடிவே பா மீர் என்பதாகும். அராபிய, உருது மொழிகளில் மீர் என்னும் அடைமொழி காட்டும் பொருள்: உயர்ந்தவன், சிறந்தவன், மதிப்பு மிக்கவன். இதனால் முஸ்லீம் பெயர்களில் மீர் காசிம், மீர் முகமது முதலிய பல பெயர்களைக் காண்கிறோம். இந்த “மீர்” பெயர்களுக்குப் பின் வருவதும் உண்டு. ஆக உலகின் கூரை என்றழைக்கப்படும் மிக உயர்ந்த சிகரத்தை பா+மேரு என்று அழைத்ததில் வியப்பில்லை. பா என்னும் முன் ஒட்டுடன் பல வடமொழிச் சொற்கள் பயிலப்படுகின்றன. எ.கா. பாமதி.

ஆகவே குமேரு, சுமேரு, பாமேரு, மேரு என்பனவெல்லாம் நாம் உலகிகு வழங்கிய கொடையே. இமய மலையை பிற்காலத்தில் நாம் மேரு என்று சொன்னதும் வடதுருவச் சிறப்பால் அன்றோ! இந்து சமய தேவி உபாசனையில் ஸ்ரீசக்ரமும் அதன் மத்தியில் உயர்ந்து நிற்கும் மேருவும் போற்றப்படுவதும் இதனால் அன்றோ.

khmer new year
Khmer people celebrating New Year

“திருநெல்வேலி ஐயரின் வடதுருவ யாத்திரை” — என்ற கட்டுரையில் வடதுருவச் சிறப்பை விளக்கி இருக்கிறார். மேருவில் ஆறுமாதம் பகல், ஆறுமாதம் இரவு என்ற புராணக் குறிப்புகள் பற்றி அவர் விளக்குகிறார்.

-சுபம்–

contact swami_48@yahoo.com