ஞானம் பெற்று விட்டேனா, குருவே! (Post No.8019)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8019

Date uploaded in London – – – 22 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஞானம் பெற்று விட்டேனா, குருவே!

ச.நாகராஜன்

அதனால் யாருக்கு என்ன லாபம்?

பெரிய மகான் ஒருவர் நகர்ப்புறத்தில் குடில் ஒன்று அமைத்து தவம் செய்து கொண்டிருந்தார்.

தொலைதூரத்தில் வசித்து வந்த அவரது சீடன் ஒருவன் அவருடன் கடிதம் மூலம் தொடர்பு கொள்வது வழக்கம். தனது முன்னேற்றம் பற்றி அவ்வப்பொழுது அவன் தெரிவித்துக் கொண்டே இருந்தான்.

‘மாதம் ஒரு முறை கடிதம் எழுது’, என்றார் குரு.

முதல் கடிதம் வந்தது : “நான் சொர்க்கத்தை என் அகக் கண்ணில் தரிசனம் செய்கிறேன். என்னை தேவதைகள் தூக்கிச் சென்று பறப்பது போல ஒரு ஆனந்தம். மேலிருந்து அகில உலகத்தையும் பார்க்கிறேன்.”  

ஹூம் என்று முனகிய குரு அதைக் கசக்கித் தூக்கிப் போட்டார்.

அடுத்த மாதக் கடிதம் வந்தது : “பிரபஞ்சம் முழுவதையும் பார்க்கிறேன். நானே பல உலகங்களைப் படைக்கிறேன். எனது அகத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கிறேன்.”

ஹூம் என்று முனகிய குரு அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போட்டார்.

அடுத்த மாதம் கடிதம் வந்தது : “ஒரு மாதம் தியானத்தில் அமர்ந்தேன். சாப்பிடக்கூட இல்லை. எனது மனம் வெறும் கடல் போல இருக்கிறது. எவருடைய ஔராவையும் (Aura) என்னால் பார்க்க முடிகிறது. ஒரு க்ஷணத்தில் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் என்னால் பார்க்க முடிகிறது.”

குரு வருத்தமான முகத்துடன் அதைச் சுக்கல் நூறாகக் கிழித்துப் போட்டார்.

இதே போல பல சீடர்களிடமிருந்தும் அவருக்குக் கடிதம் வருவது வழக்கம்.

ஆறு மாதங்கள் உருண்டு ஓடின.

ஆனால் மாதாமாதம் தவறாமல் தன் முன்னேற்றத்தை எழுதி வந்த சீடரிடமிருந்து ஆறு மாதங்களாகக் கடிதமே வரவில்லை.

குரு உடனே அவருக்குக் கடிதம் எழுதினார்: ”ஏன் ஆறு மாதங்களாகக் கடிதமே எழுதவில்லை. உடனே என்ன நடக்கிறது என்று பதில் போடு” என்று!

பதில் கடிதம் வந்தது : ”அதனால் யாருக்கு என்ன லாபம்?”

குரு புன்முறுவல் பூத்தார்.

ஆஹா, ஞானம் வந்து விட்டது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.

*

நீர் போல இரு!

களரி தற்காப்புக்கலை கற்றுக் கொள்ள வந்த மாணவன் ஒருவன் மைதானத்தில் மாஸ்டர் சொன்னபடி பயிற்சி செய்ய முயன்று கொண்டிருந்தான்.

ஏராளமான மற்ற மாணவர்கள் ஆங்காங்கே மைதானத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். மற்ற மாணவர்கள் ஆங்காங்கே இருந்ததால் அந்த மாணவனால் உரிய முறையில் பயிற்சி  செய்ய முடியவில்லை.

அவன் விரக்தியுடன் சோகமாக இருந்தான். மாஸ்டர் அவன் அருகே சென்றார். தோளைத் தட்டி. “என்ன பிரச்சினை?” என்றார்.

“எனக்குத் தெரியவில்லை. எவ்வளவு முயன்றாலும் எதையும் சரியாகச் செய்ய முடியவில்லை” என்றான் அவன்.

 “பயிற்சியைக் கற்பதற்கு முன்னால் லயம் என்றால் என்ன என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடன் கூட வா” என்றார் மாஸ்டர்.

மைதானத்தை விட்டு வெளியே வந்த மாஸ்டர் அருகிலிருந்த பசுமையான மரங்கள் அடர்ந்த காட்டிற்கு அவனை அழைத்துச் சென்றார்.

அங்கு ஒரு அழகிய பெரிய நதி பாய்ந்து கொண்டிருந்தது. வெள்ளமெனத் தண்ணீர் அதில் வேகமாகப் பாய்ந்து சென்று கொண்டிருந்ததை மாஸ்டர் அந்த மாணவனுக்குச் சுட்டிக் காட்டினார்.

“அதோ, பார். நதி செல்லும் வழியில் சிறிதும் பெரிதுமாக எத்தனை பாறைகள் இருக்கின்றன! நதி சற்றேனும் சுணக்கப்படுகிறதா? அது தன்வழியே பாறைகளைச் சுற்றி வேகமாக முன்னேறிச் சென்று கொண்டே இருக்கிறது. அந்த நீர் போல இரு. அப்போது தான் உனக்கு லயம் என்றால் என்ன என்று தெரியும்.”

மாணவனுக்கு விஷயம் புரிந்தது. மாஸ்டரின் உபதேசத்தை மனதில் கிரஹித்துக் கொண்டான்.

மைதானத்திற்குச் சென்றான். தனது பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்தினான். ஏராளமான மாணவர்கள் இருப்பதையும் அவர்கள் கூச்சலுடன் பயிற்சி செய்வதையும் பற்றி அவன் அலட்டிக் கொள்ளவே இல்லை.

என்ன ஆச்சரியம், எல்லா உத்திகளும் தாமாக வந்தன! அனைத்தையும் அவன் சுலபமாகப் பயின்றான்.

மாஸ்டர் சிரித்தார்; அவனும் சிரித்தான்!

நீர் போல இரு என்பது ஒரு பெரும் மகத்தான உபதேசம். வெள்ளமெனச் சுழித்தோடும் பெரும் ஜீவ நதி தயங்குவதே இல்லை;  நெகிழ்வுடன் ஜிலுஜிலுவென அது தன் வழியே பாய்ந்தோடுகிறது!

அதற்குள்ள மகிழ்ச்சியும் செயல்திறனும் அந்த நீரோட்டத்தைப் பார்த்தவர்களுக்கும் பற்றிக் கொள்கிறது.

வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் நீர் போல இருக்க வேண்டும்!

tags — நீர் போல, ஞானம், குரு

குருவைப் பார்த்து சிரித்த சிஷ்யன்! (Post No.5278)

Written by London swaminathan

Date: 1 August 2018

 

Time uploaded in London – 9-24 am    (British Summer Time)

 

Post No. 5278

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஒரு நாள் மாலை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், தன் குரு தோதாபுரியோடு அமர்ந்து இருந்தார். அவர் வளர்த்து இருந்த நெருப்பின் அருகில் இருவரும் அமர்ந்து இருந்தனர். இரண்டுபேரும் தங்களை மறந்து வேதாந்தப் பேச்சில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது கோயில் தோட்டக்காரன் சுருட்டைப் பற்றவைக்க அந்த நெருப்பிலிருந்து எரியும் விறகு ஒன்றை எடுத்து வந்தான். முதலில் தோதாபுரி இதை கவனிக்கவில்லை. அவன் நெருப்பை எடுத்ததும் பார்த்துவிட்டார். அவருக்கு அளவில்லாத கோபம் வந்துவிட்டது.

 

பிரம்மமயமான நெருப்பிலிருந்து சுருட்டு பற்ற வைப்பதா? என்று  எண்ணிய அவர், அவனைக் கண்டபடி திட்டிவிட்டு, அடிப்பதற்கே போய்விட்டார். இதைக் கண்ட ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் “என்ன இது? என்ன இது?” என்று  பரவச நிலையில் உரக்கக் கூவியபடி, விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

 

தோதாபுரி, தனது சீடனின் விசித்திரமான நடவடிக்கையைக் கண்டு “ஏன் சிரிக்கிறாய்? அவன் செய்தது தவறான காரியம் இல்லையா?” என்றார்.

 

 

ஒருவாறு சிரிப்பை அடக்கிக்கொண்ட ராமகிருஷ்ணர் (பரமஹம்சர்), தோதாபுரியைப் பார்த்து,  “உங்களுடைய அத்வைத ஞானத்தின் ஆழம் என்னைச் சிரிக்க வைத்துவிட்டது. இவ்வளவு நேரம் என்னிடம், பிரம்மம் ஒன்றே உண்மை, உலகத்தில் உள்ள உள்ள ஒவ்வொரு பொருளும் அந்தப் பிரம்மத்தின் தோற்றமே என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள்; அதன்படி பார்த்தால் அந்த நெருப்பும் பிரம்மம்; அதை எடுத்துச் சுருட்டுப் பற்றவைத்த தோட்டக்காரனும் பிரம்மம்; சுருட்டைப் பற்ற வைக்கிற செயலும் பிரம்மம். பிரம்மம் பிரம்மத்தைப் பற்ற வைக்கிறது. அப்படியிருக்க தோட்டக்காரன் செய்தது அக்கிரமம் என்று நீங்கள் அவனை அடிக்க ஓடுகிறீர்களே! எல்லோரும் ஆட்டிப் படைக்கும் மாயையின் சக்திதான் எப்படிப்பட்டது என்று நினைத்தேன். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை” என்றார்.

 

அதைக்கேட்டதும் தோதாபுரி அசந்தே போய்விட்டார். நெடு நேரம் அவரால் ஒன்றுமே பேசமுடியவில்லை. பிறகு நிதானமாக, “ஆமாம் நீ சொல்வது சரிதான். கோபத்தில் நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன்; எதனிடமும் பற்றுக்கொள்வதும் ஆபத்துதான். இனிமேல் கோபம் கொள்ள மாட்டேன்”  என்றார். அது போலவே அன்றிலிருந்து கோபப்படுவதை விட்டுவிட்டார்.

 

xxxx

 

யானைப் பாகன் பிரம்மம்!

 

(2014 பிப்ரவரியில் எழுதிய கதை)

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை:

“ஒரு குரு, தனது சிஷ்யனுக்கு, உபதேசம் செய்தார். நீயும் பிரம்மம், நானும் பிரம்மம். எல்லாம் கடவுள் என்று. சிஷ்யன் உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டுக் கொண்டான். வெளியே ஞானத் திமிருடன், செருக்குடன் நடந்தான். ஒரு மதம் பிடித்த யானை அவ்வழியே வந்தது. அனைவரும் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினர். யானைப் பாகனும் ‘விலகிப் போ, விலகிப் போ’ என்று கத்தினான்.

 

அவனோ, நானும் பிரம்மம், இந்த யானையும் பிரம்மம், நான் எதற்கு நகர வேண்டும்? என்றான். அவனை யானை துதிக்கையால் சுழற்றி தூக்கி எறிந்தது.

ரத்தக் காயங்களுடன் குருவிடம் வந்து முக்கி முனகிய வாறே, குருவே! நானும் பிரம்மம், யானையும் பிரம்மம், ஆனால் அந்தப் பிரம்மம் இந்தப் பிரம்மனைத் தூக்கிப் போட்டுக் காயப்படுத்தியது. ஏனோ? என்றான்.

சிஷ்யா!, சிறிது விளக்கமாகச் சொல். யானை தனியாக ஓடி வந்ததா? மற்ற யாரும் அங்கு இல்லையா?

குருவே, யானைப் பாகன் விரட்டவே எல்லோரும் ஓடிவிட்டனர். நான் அவன் சொன்னதை மறுத்து நானும் பிரம்மம் , யானையும் பிரம்மம் என்று வாளாவிருந்தேன்.

சிஷ்யா!, யானையை பிரம்மம் என்று நீ கருதினாய். அதன் மீதிருந்த பாகன் என்ற பிரம்மம் சொன்னதை கேட்கவில்லையே. அவனும் பிரம்மம்தானே! என்றார்.

ஆக, குரு சொன்னதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் குருவின் கட்டளையை மீறியதால் அவர் துயரம் அடைந்தார்.

 

–subham–

ஒரு குட்டிக்கதை–குரு எதற்கு? கோவில் எதற்கு? (Post No.4949)

ஒரு குட்டிக்கதைகுரு எதற்கு? கோவில் எதற்கு? (Post No.4949)

 

Written by London Swaminathan 

 

Date: 25 April 2018

 

Time uploaded in London –  21-49

 

Post No. 4949

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

உலகம் முழுதும் உள்ள மியூசியங்களுக்குப் போனால் அங்கே பெரிய மனிதர்கள், மஹான்கள், தலைவர்கள் பயன்படுத்திய பேனாக்கள், செருப்புகள், அவர்கள் சாப்பிட்ட தட்டுகள், படுத்த பாய்கள், படித்த புத்தகங்கள் இவைகளை எல்லாம் காட்சிக்கு வைத்துள்ளனர். அதைப் பலரும் தொட்டுக் கும்பிடுகின்றனர். வணங்கிச் செல்லுகின்றனர். கல்லில் பொறித்த பாதங்களை இது ராமர் பாதம், இது புத்தர் பாதம், இது சமண தீர்த்தங்கர பாதம் என்று சொன்னால்    அதையும் கும்பிட்டுச் செல்கின்றனர். இது ஏசு மீது போர்த்திய துணி என்றால் அதைப் பார்க்கவும் டூரின் (Turin) நகருக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். இதில் எந்த மதமும் விலக்கு அல்ல. எல்லா மதங்களிலும் இது போல நம்பிக்கை உள்ளது.

 

பெரிய புராணத்தில் பல கதைகளில் வெள்ளை நிறத்தைப் பார்த்தாலேயே விபூதி என்று கருதி வண்ணான் முதலியோரையும் வணங்கிய செய்தி வருகிறது. ஏன் இப்படி?

 

இது பற்றி ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதை சொல்கிறார்; அதைப் படித்தால் நாம் குருவுக்கு எதற்கு வணக்கம் சொல்கிறோம், கோவிலுக்குச் சென்று ஏன் வணங்குகிறோம் என்பது விளங்கும்; அவைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே நமக்கு ஊற்றுணர்ச்சி கிடைக்கிறது கடவுளை எண்ணுகிறோம்; குருவை நினைக்கிறோம்; அவரது உபதேசங்களில் மெய் மறக்கிறோம்

 

 

இதோ  ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதையைச் சுருக்கித் தருகிறேன்:

 

ஒரு முறை சைதன்ய மஹாப்ரபு ஒரு ஊர் வழியாகச் சென்று கொண்டிருந்தார். பேச்சு வாக்கில் சிலர் இந்த ஊர்க்காரர்கள்தான் மண்ணினால் கடம் மிருதங்கம் முதலிய இசைக் கருவிகளைச் செய்கிறார்கள் என்று சொல்லி வைத்தனர். உடனே அதை எண்ணி எண்ணி சைதன்யர் சமாதி நிலைக்குப் போய்விட்டார்.

 

ஓ கடவுளே: இவர்கள் செய்யும் இசைக் கருவிகள அல்லவா பஜனைகளில் வாசிக்கப்படுகிறது. அதன் மூலம்தானே நாமிறைவனை நினைக்கிறோம்; அந்த இறைவன் ஆன்மாக்களில் எல்லாம் அந்தராத்மாவாக உறைகிறானே; அழகுக்குக் எல்லாம் அழகானவன் அவன் அன்றோ என்று எண்ணிக்கொண்டே சமாதி நிலைக்கு போய்விட்டார்.

இதே போல குருவின் மீது அபார பக்தி கொண்டவர்கள், அவர் வாழும் ஊரிலிருந்து வந்தவர்களைப் பார்த்தவுடன் குருவின் ஞாபகம் வந்து, அவர்களை உபசரித்து, அன்னம் இட்டு காலில் விழுந்து வணங்குகின்றனர். அவர்கள் மிதித்த இடத்தில் இருந்து பாத தூளிகளை எடுத்து தலையில் தரிக்கின்றனர். குருவிடத்தில் குறைகள் இருந்தாலும் கூட அதைக் காண முடியாத வாறு பக்தி வெள்ளம் வருகிறது.

 

இந்தக் கதையிலிருந்து நாம் அறிவது என்ன?

கண்ணுக்கு முன் உதாரண புருஷராக விளங்கும் குரு அவசியம்; அவரைப் பார்க்கும் போதெல்லாம், அவருடைய சினங்களைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு அந்தப் புனிதரின் நினைவு வருகிறது.

இதே போலக் கோவிலுக்குச் சென்றால் சிறுவர்களும் பெரியவர்களும் உள்ளம் உருகிக் கண்ணீர் விடும் காட்சியைக் கண்டவுடன் நமக்கும் உத்வேகம் பெருகுகிறது.

ஒருவன் வேண்டாத படங்களைப் பார்த்தால் தீய எண்ணங்கள் வரும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. தற்காலத்தில் வரும் திரைப்படங்களும் டெலிவிஷன் சீரியல்களும் மனதில் தீய மன வெழுச்சிச்சிகளை உண்டாக்குகின்றன. இதற்கு நேர் மாறாக மடங்களுக்கும் கோவில்களுக்கும் சென்று பக்தர்களைப் பார்க்கையில் நம் மனதில் நல்ல எண்ணங்களும் மன அமைதியும் உண்டாகின்றன. ஆகவே கோவில்களுக்குச் செல்லுவது அவசியம்; குருநாதரையோ அவர்களின் சீடர்களையோ காண்பதும் அவசியம்.

 

–SUBHAM–

குரு யார்? ஆசிரியர் யார்? என்ன வேறுபாடு? (Post No.2907)

mdu school

Compiled by London swaminathan

 

Date: 19  June 2016

 

Post No. 2907

 

Time uploaded in London :– 9-51

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

devakottai school

தமிழிலும் ஆங்கிலத்திலும் குரு, ஆசிரியர் (டீச்சர்), உபாத்யாயர் போன்ற சொற்கள் வேறுபாடின்றி வழங்கப்படுகின்றன. ஆனால் சம்ஸ்கிருதத்தில் ஒவ்வொன்றுக்கும் தெளிவான பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

 

டீச்சர், ஆசிரியர் ஆகிய சொற்கள் சம்ஸ்கிருதச் சொல்லான ‘ஆசார்ய’ என்பதிலிருந்து வந்தவை.

 

வட இந்தியாவில் இப்பொழுது பல்கலைக்கழகத் துணைவேந்தரை குலபதி என்று அழைக்கின்றனர். வேத காலத்தில் 10,000 மாணவர்களைக் கொண்ட ஆசிரியருக்கு மட்டுமே குலபதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.

 

உலகின் முதல் சட்டப்புத்தகமான மனு ஸ்மிருதியிலிருந்து சில விஷயங்களைக் காண்போம்.

உபநீயது ய: சிஷ்யம் வேதமத்யாபயேத் த்விஜ:

சகல்பம் சரஹஸ்யம் ச தமாசார்யம் ப்ரசக்ஷதே (மனு 2-140)

உபநயனம் (பூணூல்) செய்வித்து வேத வேதாந்தங்களை ஓதிவைப்பவன் ‘ ஆசார்யன்’ என்று அழைக்கப்படுகிறான்.

xxx

 

SCHOOL CHILDREN jr

ஏகதேசம் து வேதஸ்ய வேதாங்கான்யபி வா புன:

யோ அத்யாபயதி வ்ருத்தர்தமுபாத்யாய: ச உச்யதே

பணம் (தட்சிணை) வாங்கிக் கொண்டு வேத வேதாங்கங்களைக் கற்பிப்பவன் உபாத்யாயன் என்று சொல்லப்படுகிறான்.

xxx

நிஷேகாதினி கர்மாணி ய: கரோதி யதா விதி

சம்பாவயதி சான்னேன ச விப்ரோ குருர் உச்யதே

விதிப்படி, கர்ப்பாதானம் முதலிய கிரியைகளைச் செய்வித்து ஜீவனோபாயத்தைக் கற்பிப்பவன் குரு என்று அழைக்கப்படுகிறான்

xxx

பிதா மாதா ச ததாசார்யோ மஹாகுருரிதி ச்ம்ருத:

தந்தை, தாய், ஆசிரியர் ஆகியோர் மஹா (பெரிய) குருக்கள் என்று கருதப்படவேண்டும்.

xxx

 

school tree

முனீனாம் தசசாஹஸ்ரம் யோ அன்னதானாதி போஷணாத்

அத்யாபயதி விப்ரர்ஷிரசௌ குலபதி: ஸ்ம்ருத:

10,000 சிஷ்யர்களுக்கு உணவு அளித்து, போதிக்கும் (கற்பிக்கும்), ரிஷிக்கு ‘குலபதி’ என்று பெயர். (பத்தாயிரம் முனிவர்களுடைய கூட்டத்துக்கு எவன் அன்னதானம் முதலியன கொடுத்து ஆதரிக்கிறானோ அவன் குலபதி என்று அறியப்படுகிறான்)

xxxx

ஆசிரியனின் இலக்கணம்:  ஒரு ஆசிரியன் எப்படி இருக்கவேண்டும் என்றும் இந்துமத நூல்கள் செப்புகின்றன:–

 

ஜிதேந்த்ரிய ஜித த்வந்த்வஸ் தபோ தான பராயணா:

சத்யவாக் ஊர்ஜித: ராக்ஞோ மேதாவீ நியதஸ் சுசி:

புலனடக்கம், இருமைகளை (வெற்றி தோல்வி, சுக துக்கம் போன்றவை இருமைகள்) வென்றவன், தானம்-தவம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பவன், உண்மை விளம்பி, வீர்யமுடையவன், கற்றறிந்தவன், புத்திகூர்மையுள்ளவன், ஒழுங்கு கட்டுப்பாடு உடையவன், தூய்மையானவன் (ஆசிரியன் ஆவான்)

xxxx

நிஸ்சம்திக்த: குலீனஸ்ச ஸ்ரௌதகர்மணி தத்பர:

நிக்ரஹானி க்ரஹேதக்ஷஸ் சர்வ தோஷ விவர்ஜித:

காயத்ரீமந்த்ர குசல ஆசார்ய ஸமுதாஹ்ருத:

 

அப்பழுக்கற்ற குலத்தில் பிறந்தவன், வேத அனுஷ்டானம் உடையவன், செய்யத் தக்கது-செய்யத்தகாதது எது என்ற விவேகம் உடையவன், மாசுமருவற்ற ஒழுக்கம் உடையவன், எல்லாம் அறிந்தவன், காயத்ரீ மந்திரத்தில் தேர்ச்சியுடையவன் ஆசார்யன் (ஆசிரியர்) என்று அறியப்படுகிறான்.

 

xxxx

Skt at school level

Sanskrit instructor conducting a contact class for professionals at Rashtriya Sanskrit Sansthan on Tuesday. Photo by K Asif 26/09/12

ஆசினோதி ஹி சாஸ்ரார்தான் ஆசாரே ஸ்தாபயத்யபி

ஸ்வயமாசரதே யஸ்மாத் தஸ்மாத் ஆசார்ய உச்யதே

சாத்திரங்களை அறிந்து பிறரையும் அனுசரிக்கச் செய்பவனே ஆசார்யன்.

(சாத்திர நூல்களின் பொருளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து அறிந்துஆராய்பவன், பிறரையும் ஆசார அனுஷ்டானங்களில் ஈடுபடச் செய்பவன், தானும் அதைக் கடைப்பிடிப்பவன் ஆசார்யன் (ஆசிரியர்) என்று அறியப்படுகிறான்.

 

–சுபம்–

 

 

 

குருவும் கஞ்சனும் : ஒரு குட்டிக்கதை (Post No.2865)

dollars

Translated by London swaminathan

 

Date: 3 June 2016

 

Post No. 2865

 

Time uploaded in London :–  5-56 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

1830-Jewish-beggar

ஒரு ஊரில் ஒரு பரம கஞ்சன் இருந்தான். எச்சில் கையால் காகத்தை விரட்ட மாட்டான். தேநீரில் ஈ விழுந்தால்கூட அதைப் பிழிந்து விட்டு வெளியே எறிவான். ஆனால் நல்ல பணக்காரன். அப்பேற்பட்ட கஞ்சன் குருவிடம் வந்தான். இவனுக்கு ‘பசுமரத்தில் ஆணி பதிவது போல’ புத்தி புகட்ட வேண்டும் என்று அவர் நினைத்தார். இருந்த போதிலும் நேரடியாகச் சொல்லாமல் ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ கற்பிக்க எண்ணினார்.

 

அன்பரே! இங்கே வாருங்கள் என்று ஒரு ஜன்னலுக்கு அருகில் அழைத்துச் சென்றார். என்ன தெரிகிறது? என்று கேட்டார்.

கஞ்சன் சொன்னான்: ஜன்னல் கண்ணாடி.

குரு: அது சரி. அது வழியாக என்ன தெரிகிறது.

கஞ்சன்: மக்கள்; தெருவில் நடமாடும் மக்கள்.

பின்னர், அந்தக் கஞ்சனை குரு, ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி அருகே அழைத்துச் சென்றார்.

இது என்ன?

கஞ்சன்:–முகம் பார்க்கும் கண்ணாடி.

இதில் என்ன தெரிகிறது?

கஞ்சன்:–நான் என்னைப் பார்க்கிறேன்.

ஜன்னலிலும் கண்ணாடிதான் இருந்தது. இங்கும் கண்ணாடிதான் இருக்கிறது. ஏன் இங்கே உங்கள் முகம் தெரிகிறது; அங்கே மக்கள் தெரிந்தது?

கஞ்சன்:– முகம் பார்க்கும் கண்ணாடியில் வெள்ளி (ரசம்) பூசியதால் என் முகம் தெரிந்தது. ஜன்னல் கண்ணாடி தூய பளிங்கு போன்றது.ஆகையால் மக்கள் தெரிந்தனர்.

உடனே குரு சொன்னார்: பார்த்தீர்களா. தூய கண்ணாடி இருந்தால் மக்கள் தெரிகின்றனர் (பொது நலம்). வெள்ளி இருந்தால் உங்களைத்தான் பார்க்க முடிந்தது (சுயநலம்). உங்களிடம் கொஞ்சம் வெள்ளி (பணம்) சேர்ந்துவிட்டால் மக்கள் மறைந்து உங்களை மட்டுமே பார்க்கிறீர்கள் என்றார்.

கஞ்சனுக்கும் கதையின் நீதி புரிந்தது!

 

Xxx

edison

ஐயய்யோ! அவ்வளவு பணம் வேண்டாம்!

தாமஸ் ஆல்வா எடிசன் பல கண்டுபிடிப்புகளைச் செய்தவர். ஒரு கண்டுபிடிப்பின் உரிமையைப் பெற வெஸ்டர்ன் யூனியன் கம்பெனி, அவருக்கு ஒரு லட்சம் டாலர் முன் தொகை கொடுக்க முன்வந்தது.

ஐயய்யோ! அவ்வளவு பணம் வேண்டாம்! உங்களிடமே அந்தத்தொகை இருக்கட்டும். பாதுகாப்பாகவாவது இருக்கும் என்று சொன்னார். அவர்கள் மிகவும் வலியுறுத்தவே, சரி, வருடத்துக்கு ஆறாயிரம் டாலர் வீதம் 17 ஆண்டுகளுக்குத் தாருங்கள் என்றார்.

சின்னச் சின்ன ஆசை!!

Xxxx

பணக்காரர்களுக்கு அதிக மூளையா?

ஒரு மனிதனுக்கு நிறைய பணம் சேர்ந்துவிட்டால் அவனுக்கு மூளை ஜாஸ்தி/ அதிகம் என்று மக்கள் நினைக்கின்றனர். நான் ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள் என்று சிகாகோ நகர கோடீஸ்வரரான ஜூலியஸ் ரோசன் பால்ட் ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார்.

 

ஒருவர் 14 என்ற எண் மூலம் மில்லியன் (பத்து லட்சம்) டாலர் வென்றார். எல்லோரும் அவரிடம் போய், பல கோடி எண்கள் இருக்கையில், எப்படி 14 என்று சொன்னீர்கள்? என்றார்.

ஓ, அதுவா? ஒரு நாள் ஒரு கனவு கண்டேன். அதில் ஒரு பெரிய 9 எண் தோன்றியது. கொஞ்ச நேரம் கழித்து எண் 6 தோன்றியது. இரண்டையும் கூட்டிப் பார்த்தேன். அவ்வளவுதான்!!!! என்றார்.

Xxx

lincoln dollar

ஜனாதிபதி சொன்ன குட்டிக் கதை!

ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சில அரசாங்க அதிகாரிகள் அவரிடம் சென்றனர். நீங்கள் சில துறைகளுக்கு மட்டும் நிதி அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். எங்களுக்கும் பணம், பட்ஜெட் அதிகாரங்களைக் கொடுங்களேன் என்றனர்.

உடனே லிங்கன் ஒரு கதை சொன்னார்:

“இல்லினாய்ஸ் என்னுமிடத்தில் ஒருவர் ஒரு வீடு வைத்திருந்தார். நீங்கள் அவரைப் போலவே இருக்கிறீர்கள். அவருடைய வீடு தீ விபத்தில் எரிந்து சாம்பலாயிற்று. அந்தக் காலத்தில் ஊரில் யாருக்காவது இப்படி நஷ்டம் வந்தால், ஊர் மக்கள் எல்லோரும் பணம் கொஞ்சம் போட்டு, அவருக்கு உதவி செய்யும் நல்ல வழக்கம் இருந்தது. இந்த ஆளுடைய அதிர்ஷ்டம்! எல்லோரும் கொடுத்த பணம் அதிகமாக இருந்ததால் அவருக்கு முன்னைவிட சொகுசான வாழ்க்கை கிடைத்தது.

கொஞ்ச நாள் கழித்து அவருக்கு உதவி செய்யும் நோககத்துடன் ஒருவர் தானியம் கொண்டு வந்து கொடுத்தார்.

அவர் சொன்னார்: “சீ, சீ! நான் தானியம் எல்லாம் பெற்றுக் கொள்ளும் ஆசாமி அல்ல. பணமாகக் கொண்டு வாருங்கள்!”

(பணத்தை ஒரு முறை கொடுத்துப் பழக்கிவிட்டால், பிறகு பண போதை தலைக்கேறிவிடும்! பணம் ஒரு பேய்!!)

xxxசுபம்xxx

 

ஐந்து தந்தை, ஐந்து தாய், ஐந்து குரு யார்?

Five-Men-with-Cap-Oil-Painting

Compiled by London swaminathan

Article no. 1702; dated 9 March 2015

லண்டன் மாநகர நேரம்  காலை 9-25

நம் ஒவ்வொருவருக்கும் 5 தந்தைகள், 5 தாய்மார்கள், 5 குருக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். அந்தக் காலத்தில் இந்த மாதிரி செய்யுட்களை சிறு வயது முதலே போதித்து வந்தனர். சில செய்யுட்கள் பஞ்ச தந்திர, ஹிதோபதேசக் கதைகளுக்கு நடுவில் கொடுக்கப்பட்டன. இதனால் அவை சிறுவர் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்துவிடும். அது மட்டுமல்ல. ஏதேனும் வழக்கு வாய்தாவில் தீர்ப்புச் சொல்லவும் இவை பயன்பட்டன. இதோ பழங்காலப் பொக்கிஷம்:

தந்தைக்குச் சமமாகக் கருதப்பட வேண்டியவர்கள்:

  • பிறப்பினால் நமக்குத் தந்தையாக இருப்பவர், (2) நமக்கு மந்திர உபதேசம் செய்தவர் அல்லது குருவை அறிமுகப்படுத்தியவர், (3) நமக்கு கல்வி கற்பித்த ஆசிரியர், (4 )நமக்கு உணவு கொடுத்து உதவியவர் (5) ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றியவர்.

ஜனிதா ச உபநீதா ச யஸ்து வித்யாம் ப்ரயச்சதி

அன்னதாதா, பயத்ராதா பஞ்சைதே பிதர ஸ்ம்ருதாஹா

–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 165/ 542, பஞ்சதந்திரக் கதைகள், சாணக்ய நீதி

5-el-teachers-for-suai-2009

ஐந்து தாய்

ராஜாவின் மனைவி (மஹாராணி), குருவின் மனைவி, அண்ணனின் மனைவி, தன்னுடைய சொந்தத் தாய் மற்றும் மாமியார் ஆகிய அனைவரும் தாய்க்குச் சமமானவர்கள்:–

ராஜ பத்னீ குரோஹோ பத்னீ ப்ராத்ரு பத்னீ ததைவ ச

பத்னீ மாதா ஸ்வமாதா ச பஞ்சைதா மாதர ஸ்ம்ருதாஹா

–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 160/ 326, — சாணக்ய நீதி

இன்னொரு ஸ்லோகம் பஞ்ச தந்திரக் கதைகளில் வருகிறது: எந்த வீட்டில் தாய் இல்லையோ, மனைவி இனிமையாகப் பேசுவதில்லையோ அவன் காட்டிற்கு ஏகுவதே மேல்; ஏனெனில் அவனுக்குக் காடுதான் வீடு!

மாதா யஸ்ய க்ருஹே நாஸ்தி பார்யா ச ப்ரியவாதினீ

அரண்யம் தேன கந்தவ்யம் யதாரண்யம் ததா க்ருஹம்

–பஞ்சதந்திரக் கதைகள்

Five-teachers-who-are-changing-lives

ஐந்து குரு

குரு யார் என்பதில் இரண்டு விதக் கருத்துகள் இரண்டு ஸ்லோகங்களில் உள்ளன:

மஹாபாரத வனபர்வம் கூறுகிறது:

அம்மா, அப்பா, அக்னி, ஆத்மா (தனக்குத் தானே குரு), ஆசிரியர் ஆகிய ஐவரும் குரு – ஆவர்.

பஞ்சைவ குரவோ ப்ரம்மன் புருஷஸ்ய புபூஷதஹ

பிதா மாதா அக்னிர் ஆத்மா ச குருஸ்ச த்விஜசத்தமஹ

—மஹா பாரத – வன பர்வ – 204-27

யோக வாசிஷ்டம் சொல்லுகிறது:

அம்மா, அப்பா, ஆசிரியர், தாய்மாமன், மாமனார் ஆகியோர் குரு ஸ்தானத்தில் இருப்பவர் ஆவர்.

குரவஹ பஞ்ச சர்வேஷாம் சதுர்னாம் ஸ்ருதிசோதிதாஹா

மாதா பிதா ததாசார்யோ மாதுல ச்வசுரஸ்ததா

–யோக வாசிஷ்டம் 1-60

5 women

உண்மை அன்பு

அம்மா, அப்பா, நண்பர்கள் ஆகியோருடைய உள்ளத்தில் உண்மையிலேயே கருணை இருக்கும். ஆனால் மற்றவர்களோ வெனில் காரியம் நடக்க வேண்டுமானால் (பொய்) அன்பை வெளிப்படுத்துவர்.

மாதா மித்ரம் பிதா சேதி ஸ்வபாவத் ஹ்ருதயம் ஹிதம்

கார்ய காரணத்தஸ்சான்யே பவந்தி ஹித புத்தயஹ

 

இவை எல்லாம் காரண காரியங்களுடன் சொல்லப்பட்ட பொன்மொழிகள். சில இக்காலத்துக்குப் பொருந்தாவிடினும் அக்காலச் சிந்தைப் போக்கையும் சமுதாய நடைமுறைகளையும் அறிய உதவும்.

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க பொது அறிவு!

men-in-black-clip-art

-சுபம்-

குருவின் “வீட்டோ” அதிகாரம்!

shirdi sai

Picture of Shirdi Sai Baba

குருவின் “வீட்டோ” அதிகாரம்!

ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து வல்லரசுகளுக்கு மட்டும் ‘வீட்டோ’ எனப்படும் வெட்டு/ரத்து அதிகாரம் உண்டு. உலக அமைதிக்கான எந்த தீர்மானமும், ஐந்து நாடுகளில் ஒரு நாடு ரத்து அதிகாரத்தைப் பிரயோகித்தாலும் நிறைவேறாது. ராணுவத்தையும் அனுப்ப முடியாது. இதே போல குரு-வுக்கும் அதிகாரம் உண்டு. கடவுளே கூட குருவின் அதிகாரத்துக்குப் பணிய வேண்டும்.

 

இந்து மதம் ஒரு ஒப்பற்ற மதம். இதில் குரு என்பவருக்கு மிகவும் மதிப்பும் மரியாதையும் உண்டு. குருவே பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரன் என்று வடமொழி ஸ்லோகம் புகழுகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் அம்மா, அப்பாவுக்கு அடுத்த இடம் குருவுக்கே. நாலாவது இடம்தான் கடவுளுக்கு!

குரு என்ற சம்ஸ்கிருதச் சொல் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதிக்குள் போனது மட்டுமில்லாமல் இப்போது துறைக்கு துறை குரு என்ற சொல்லும் பயன்படுத்தப் படுகிறது.

இந்து மதத்தில் கடவுளும் கூட சில விதிகளுக்குக் கட்டுப்படே நடக்கவேண்டும். அசுரர்களுக்கோ தேவர்களுக்கோ வரமோ சாபமோ கொடுத்துவிட்டால் அந்தச் சொல்லை அவரே கூட மாற்றமுடியாது என்பதை ‘’சாபங்களும் வரங்களும்’’ ஆங்கிலக் என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன். இதேபோல பக்தர்களுக்கு யாரேனும் தீங்கு செய்துவிட்டால் கடவுள் தலையிட மாட்டார். அந்த பக்தனிடம்தான் தவறிழைத்தவர் மன்னிப்பு கேட்கவேண்டும் இதையும் ஒரு கட்டுரையில் எழுதிவிட்டேன். (இக்கட்டுரையின் இறுதியில் தலைப்புகளைக் காண்க).

 

குருவின் சக்தி கடவுளுக்கும் மிஞ்சியது என்பதற்கு எவ்வளவோ கதைகள் உண்டு. இரண்டு கதைகளை மட்டும் பார்ப்போம்.

Statue of Adi Shankara

சுந்தரர் வரலாறு

சைவப் பெரியார்களுள் நால்வரில் ஒருவர் சுந்தரர். எட்டாம் நூற்றாண்டில் அப்பருக்கும் சம்பந்தருக்கும் பின்னர் வந்தவர். அவருடைய நெருங்கிய நணபர் சேர மன்னன் சேரமான் பெருமாள் நாயனார். அவரும் பெரிய சிவ பக்தர். சுந்தரரை குருவாகவே நினைத்துப் போற்றியவர். சுந்தரருக்கு 18 வயதானபோது சிவபெருமான் அவரை கைலாயத்துக்குத் திரும்ப அழைக்க எண்ணினார். ஐராவதம் என்னும் வெள்ளை யானையை அனுப்பிவைத்தார். சுந்தரருக்கு ஒரே மகிழ்ச்சி. உடனே புறப்பட்டு விட்டார்.

 

ஆருயிர்த் தோழரான சேரமானுக்கு உள்ளுணர்வால் இது தெரிந்துவிட்டது. உடனே தனது குதிரையில் தாவி எற்றினார். சிட்டாகப் பறக்கும் குதிரையானாலும் பூலோக குதிரை எப்படி கயிலாயத்துக்குப் போக முடியும்? காதில் நமச்சிவாய மந்திரத்தை ஓதினார். ராக்கெட் போல பறந்து, நேரே கையிலாயத்துக்குப் போய்விட்டது. ஆனால் சுந்தரரை உள்ளே விட்ட நந்திகேஸ்வரர், சேரமானை தடுத்து நிறுத்திவிட்டார். அவரிடம் உள்ளே போக ‘டிக்கெட்’ (அனுமதி) இல்லை. அவர் அழையாத விருந்தாளி!  சுந்தரர் போய் சிவனிடம் சிபாரிசு செய்யவே உள்ளே வர அனுமதிக்கப்பட்டார். அழைப்பில்லாமல் வந்தது ஏன் என்று சிவன் வினவினார். சுந்தரரை விட்டு தனியே இருக்க முடியாது. அவர் என் குரு என்றார். அப்போதும் சிவனுக்கு மனம் இரங்கவில்லை. சுந்தரர் ஒரு பதிகம் பாடி சிவனை வழிபடவே சேரமானுக்கு அனுமதி கிடைத்துவிட்டது. பக்தருக்கு தகுதி இல்லாவிட்டாலும் குருவின் அருள் இருந்தால் இறைவனும் மறுக்க முடியாது!

 

விஷ்ணுவுடன் நாரதர் மோதல்

திரி லோக சஞ்சாரி நாரதர் ,வைகுண்டத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தார். அவர் சென்ற வழியில் விஷ்ணு பக்தனான ஒரு கிராமத்தான் அவரைப் பார்த்துவிட்டான். நாரதரை நலம் விசாரிக்கவே அவர் வைகுண்டத்துக்குப் போவதாகக் கூறினார். கிராமத்தான் கெஞ்சலாகக் கெஞ்சினான், “ஐயா, கல்யாணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. எப்போது எனக்குக் குழந்தை பிறக்கும்? என்று விஷ்ணுவிடம் கேட்டு வாருங்கள்.”என்றான். அவனும் விஷ்ணு பக்தன் ஆதலால் நாரதர் மறுகவில்லை.

 

வைகுண்டம் போனவுடன் மறக்காமல் கேட்டார். விஷ்ணு கொடுத்த செய்தி நல்ல செய்தி இல்லை. அப்படியே கிராமத்துக்கு வந்து, ‘’அப்பனே உனக்கு இப் பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை’’ என்று விஷ்ணு சொல்லிவிட்டார் என்றார்.

Picture of Kanchi Paramacharya and Swami Shanthanantha

அந்த கிராமத்தானுக்கு முன்னைவிட பக்தி அதிகரிக்கவே அந்த ஊருக்கு வந்த ஒரு சந்யாசிக்குப் பணிவிடை செய்து அவரை குருவாக ஏற்றான். அவர் அவனது பக்தியை மெச்சி, அவனுக்கு மூன்று குழந்தைகள் பிறக்கும் என்று ஆசிர்வதித்தார்.

பல ஆண்டுகள் உருண்டோடின. நாரதர் அதே கிராமத்தின் வழியாக வைகுண்டம் போய்க் கொண்டிருந்தார். கிராமத்தானைப் பார்த்தபோது மூன்று குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டார். அவனிடம் சென்று கேட்டபோது குருவின் திருவருளில் குழந்தை கிடைத்ததை அவன் கூறினான்.

 

வைகுண்டம் சென்ற நாரதர், கோபத்தோடு விஷ்ணுவை ஏசினார். ‘’ஏன் பொய் சொல்லி, என் பெயரையும் கெடுத்தீர்கள்?’’ என்று கடிந்தார். என்ன நடந்தாது? ஏன் இவ்வளவு கோபம்? என்று விஷ்ணு கேட்கவே , குழந்தையே பிறக்காது என்று என்னிடம் சொல்லி அனுப்பிய ஆளுக்கு ‘’எப்படி ஐயா மூன்று குழந்தை பிறந்தது?’’ என்று சத்தம் போட்டார்.

 

விஷ்ணுவோ சிரித்துக் கொண்டே, “அட, அவன் யாராவது ஒரு குருவின் காலில் விழுந்திருப்பான். அவனுக்குக் குழந்தை பிறந்திருக்கும். குரு ஒருவருக்கே விதியை மாற்றும் சக்தி உண்டு? இது என்ன உனக்குத் தெரியாதா?” என்று போட்டார் ஒரு போடு!

நாரதரும் குருவைத் தேட ஓட்டம் பிடித்தார்!!

Picture of Sri Ramana Maharishi

வள்ளுவனும் கூட பெரியாரின் (குருவின்) பெருமையை, இரண்டு அதிகாரங்களில் , இருபது குறள்களில் சொல்லி இருக்கிறார்.

 

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல் (குறள் 443)

 

ஏந்திய கொள்கை உடையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும் (குறள் 899)

 

உயர்ந்த கொள்கை உடைய பெரியோர்களை பகைத்துக் கொண்டால் அரசனே ஆனாலும் கெட்டு அழிவது உறுதி.

குருர் பிரம்மா, குருர் விஷ்ணோ, குருர் தேவோ மஹேஸ்வர:

குருஸ் சாக்ஷாத் பரம் பிரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:

இந்தக் கட்டுரைகளை வேறு இடங்களில் வெளியிட விரும்புவோர், பிளாக்—பெயரையும் கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன் பெயரையும் வெளியிடவேண்டும்.

Pictures are taken from different sites.

 

Source books: Sixty Nayanar Saints by Swami Sivananda, Stories as told by Swami

Ramdas; I have compared them and added my comments.

 

Please read my earlier posts on this subject:

1.Do Words Have Power? An interesting Study on curses and Boons.

2.யார் பெரியவர்? கடவுளா? பக்தனா?

contact: swami_48@yahoo.com