தூய்மை பற்றி வள்ளுவனும், அதர்வண  வேதமும் (Post No.10,411)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,411

Date uploaded in London – –   5 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great

தூய்மை பற்றி வள்ளுவன் பல்வேறு இடங்களில் பேசுகிறான். அதர்வண வேதத்திலும் ரத்தினச் சுருக்கமாக ஒரு துதி உள்ளது. முதலில் அதை பார்த்துவிட்டு வள்ளுவனுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

அதர்வண வேதம், ஆறாவது காண்டம், துதி 19; சூக்தம் எண்  192

1.தேவர்கள் என்னைத் தூய்மை செய்க!

மானிடர்கள் என்னை அறிவால் தூய்மை செய்யட்டும்!

உலகிலுள்ள எல்லாப் பொருட்களும் என்னைத்  தூய்மைப் படுத்தட்டும்!

தூய்மை செய்பவன் / பவமானன்  என்னைத்  தூய்மைப்  படுத்தட்டும் !

2.விவேகம் பெறவும், சக்தி பெறவும், நீண்ட ஆயுள் பெறவும், அசைக்கமுடியாத பாதுகாப்பு பெறவும் என்னைத்  தூய்மைப்  படுத்தட்டும் !

3.ஸவித்ரு தேவனே சோம ரஸத்தை நசுக்கிப் பிழிவதாலும் வடிகட்டுவதாலும் சுத்தப்படுத்துமாறு   தூய்மைப்  படுத்துக

XXXX

எனது வியாக்கியானம்

தூய்மை எனப்படுவது இருவகைப்படும்.

உள்ளத் தூய்மை

உடல் தூய்மை

வள்ளுவன் அழகாகச் சொல்கிறான்

புறந் தூய்மை நீரான் அமையும் அகந் தூய்மை

வாய்மையால் காணப்படும் – குறள் 298

நீரினால் உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

சத்தியத்தால் உள்ளத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்..

சத்தியம் என்பது மூவகைப்படும்- உண்மை, வாய்மை, மெய்மை .

அதாவது மனம், மொழி, உடல் (THOUGHT, WORD AND DEED) ஆகியவற்றில் சத்தியத்தைப் பின்ப ற்றுத்தலை ‘திரிகரண சுத்தி’ என்பர். இதுதான் உண்மையான சத்தியம்.

இதை முதல் மந்திரம் அழ்காகச் சொல்கிறது.

தேவர்களே என்னை சுத்தப்படுத்துங்கள் என்று சொல்லிவிட்டு ‘சான்றோர்கள், அறிவால் என்னை சுத்தம் செய்யட்டும்’ என்கிறார் இதை பாடிய  ரிஷி. அதாவது கேள்வி ஞானம் மூலம், படிப்பது மூலம் நாம் சுத்தம் – மனச்  சுத்தம்–  பெறுகிறோம். அடுத்தபடியாக சோப்பு, சீயக்காய் முதலிய  .. எல்லாப் பொருட்களையும் சுத்தம் செய்வதைக் குறிப்பிடுகிறார். வள்ளுவனும் குளியல் முதலியவற்றை ‘நீரான் அமையும்’ என்று சொல்லிவிட்டார்.

இரண்டாவது மந்திரம், தூய்மையால் கிடைக்கும் நன்மைகளைப்  பட்டியல் இடுகிறது. சுத்தமாக இருந்தால் விவேகம், சக்தி, நீண்ட ஆயுள், பாதுகாப்பு கிடைக்குமாம். இதை விளக்க நம்முடைய புராணங்களில் பல கதைகள் உண்டு. நளன் என்னும் மன்னனைப் பிடிப்பதற்கு சனைஸ்சரன் (சனி பகவான்) காத்திருந்தானாம். எளிதில் முடி யவில்லை ; ஒரு நாள் கால் கழுவி வந்த போது ஒரு சிறிய பகுதியில் தண்ணீர் படவில்லை. அங்கே அசுத்தம் இருந்தது. அது வழியாகப் புகுந்த சனி பகவான் அவனை ஏழரை ஆண்டுகளுக்கு ஆட்டிவைத்தான். மனைவியைப் பிரிந்து காட்டில் கஷ்டப்பட்டுட்டான் . இதை கலி அல்லது சனி என்பர். இரண்டுக்கும் கருப்பு/ அழுக்கு என்பதே பொருள்.

மூன்றாவது மந்திரத்துக்கு இரண்டு விதமாகப் பொருள் சொல்லலாம் .சோம ரசத்தை எடுக்க, சோமக்கொடியை நசுக்கி ஜுஸ் JUICE எடுத்து, அதை வடிகட்டி, ஹோமத்தில் ஆகுதி செய்வார்கள்; பின்னர் அருந்துவார்கள்; அது போல என் மனதையும் நசுக்கிப் பிழிந்து வடிகட்டி சுத்தம் செய்யவும். மற்றோர்  பொருள் – ஸோம ரசத்தை சாப்பிட்டால் மனம் சுத்தம் அடையும் என்று கல்வெட்டும் வேத மந்திரமும் கூறும். அப்படி சுத்தம் அடையட்டும் என்று ரிஷி சொல்கிறார் போலும்.

XXX

மனத் தூய்மை  பற்றி வள்ளுவன்

மனத் தூய்மை  பற்றி வள்ளுவன் சொல்லும் இடம் வேறு ஒரு த ப்பின் கீழ் வருவதால் பலருக்கும் தெரியாமல் போய்விடுகிறது.  சிற்றினம் சேராமை என்னும் அதிகாரத்தின் கீழ் நாலைந்து குறள்களில் நல்ல கருத்த்துக்களை முன்வைக்கிறார்.

மனம் போல மாங்கல்யம்

ஒருவர் என்ன நினைக்கிறாரோ அதுவாகவே  மாறிவிடுவர். பாசிட்டிவ் / ஆக்கபூர்வ எண்ணங்கள் இருந்தால் அது நல்ல பலன் தரும் ; இதைத்தான் மனம் போல மாங்கல்யம் என்றும், மனம் இருந்தால் மார்க்கம்/ வழி உண்டு என்ற பழமொழியும்  கற்றுத் தருகிறது

மனந் தூய்மை செய்வினை  தூய்மை இரண்டும்

இனந் தூய்மை  தூவா வரும் -455

மனந் தூயார்க்கெச்சம்  நன்றாரும் இனந் தூயார்க்கு

இல்லை நன்றாகா வினை – குறள் 456

இந்த இரண்டு  குறள்களும் நல்ல கருத்துக்களை விளக்குகின்றன.

மனத்தின் தூய்மை முக்கியம்; செய்யும் தொழிலின் தூய்மையும் முக்கியம்; இவை இரண்டுக்கும் மிக முக்கியமானது யாருடன் சேர்ந்து அதைச் செய்கிறோமோ  அவர்களுடைய குணமும் உதவியும் அவசியம்; அதை பொருத்தே வெற்றி அமையும் ; சத் சங்கம் அவசியம். – குறள் 455

மனம் சுத்தமாக இருந்தால் பிள்ளைகள், புகழ் எல்லாம் நல்லபடியாகவே அமையும் ; அவர்களுக்கு  கெட்டது எதுவுமே வராதாம் . இதை பகவத் கீதையில் கண்ணனும் சொல்கிறான்.

பார்த்தா! (அர்ஜுனா )

நிச்சயமாக நல்லதைச் செய்பவன் எவனும் தீய நிலையை அடையவே மாட்டான் அவனுக்கு இம்மையிலும் அழிவு இல்லை; மறுமையிலும் அழிவு இல்லை.  — பகவத் கீதை 6-40

ந ஹி கல்யாணக்ருத் கச்சித்  துர்க்கதிம் கச்சதி – 6-40

தம்ம பதத்திலும் புத்தர் இதையே செப்புகிறார் (காண்க 314)

–சுபம் –

TAGS- பகவத் கீதை 6-40, குறள் , அதர்வண வேதம், தூய்மை

சர்ச்சிலும் மசூதியிலும் குறள்? ஒத வேண்டுகோள் விடுக்குமா தமிழக அரசு?!! (Post.10,056)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,056

Date uploaded in London – 5 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சர்ச்சிலும் மசூதியிலும் குறள்? ஒத வேண்டுகோள் விடுக்குமா தமிழக அரசு?!!

ச.நாகராஜன்

நாத்திக அரசுக்கு சந்தோஷம் – தன் கையில் கோவில் அகப்பட்டுக் கொண்டிருப்பதை நினைத்து!

கோவிலில் குறள் ஓத ஏற்பாடு செய்யப்போகிறதாம்!

நல்லது, அனைத்து ஹிந்துக்களுக்கும் சந்தோஷமே.

புதிதாக ஒன்றையும் செய்து விடவில்லை. மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் தான் தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றினார். மற்ற நூல்கள் கவிழ்ந்து விழ திருக்குறள் மேலே எப்போதும் இருந்தது; உலகப் பொதுமறையானது.

1330 குறள் பாக்களையும் பொற்றாமரைக் குளம் சுற்றி வருகையில் தென்புறச் சுவரில் காணலாம்; படித்து மகிழலாம்!

சில “பகுத்தறிவுகளுக்கு” ஒரு சந்தேகம். அது சந்தோஷம் தரும் சந்தேகம் அவர்களுக்கு

4310 திருக்குறள் சொற்களிலே – 1330 அரும் குறள் பாக்களிலே – கடவுள் என்ற வார்த்தையையே திருவள்ளுவர் சொல்லவில்லையே என்று!

என்னிடம் கேட்ட ஒரு “பகுத்தறிவுக்கு” நான் சொன்ன பதில் இது தான் : “நண்பரே, இப்படி எல்லாம் “பகுத்தறிவு மூளை” பின்னால் ஒரு நாளில் கேட்கும் என்று தான் 133 அதிகாரங்களை வகைப்படுத்தி தொகைப்படுத்தி முறைப்படுத்தி பெயரையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார் திருவள்ளுவர்.

முதல் அதிகாரத்தின் பெயரையே கடவுள் வாழ்த்து என்று வைத்திருக்கிறார். கடவுள் என்று சொல்லாமல் திருக்குறளையே ஆரம்பிக்க முடியாது, நண்பரே”

கடவுளை வாழ்த்தினால் தான் திருக்குறள் உள்ளேயே நுழைய முடியும்.

நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியவர்க்கு திருக்குறள் சரிப்படாது!

ஈ.வெ.ராமசாமி நாயக்கரைப் போற்றிப் புகழ்ந்து ‘தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை’ என்பதை ஏற்பவர்கள் தமிழையும் புகழ வேண்டாம், தமிழ்த் திருக்குறள் பக்கமும் வர வேண்டாம்.

கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று சொல்லும் ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் “பக்தர்களுக்கு” கோவில் தான் எதற்கு, சிலைகள் தான் எதற்கு, ஆகமம் தான் எதற்கு, தேவார, திருவாசகம் தான் எதற்கு? கடவுள் வாழ்த்து என்று ஆரம்பிக்கும் திருக்குறள் தான் எதற்கு!

பேசாமல் விட்டு விட்டுப் போய் விடலாமே!

ஊஹூம், அது எப்படி விட முடியும், கோவிலை!

அங்கே உ.பி.களுக்கு “வேண்டியதெல்லாம்” இருக்கிறது. விடமாட்டார்கள் கோவிலை.

சரி, உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஓதச் சொல்லிய பகுத்தறிவுகள் தங்கள் அன்பு உபிக்களை – உடன்பிறப்புகளை – அணுகி சர்ச்சிலும், மசூதியிலும் இதை ஓத ஏற்பாடு செய்வார்களா? அங்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி 1330 அரும் குறளும் பொறிக்கப்பட்டிருப்பது போல பொறிக்கச் செய்வார்களா?

அவர்கள் மறுத்து விட்டால், அது தங்கள் மதத்திற்கு ஏற்புடையதல்ல என்று அவர்கள் கூறினால் விட்டு விடலாம் – அவர்களைப் புரிந்து கொண்டு.

போகட்டும், ஹிந்துப் பொதுமறையாகவே திருக்குறள் இருந்து விட்டுப் போகட்டும். குறை ஒன்றும் இல்லை! தெய்வப்புலவர் தெய்வப்புலவர் தான். திருக்குறள் ‘திரு’ வாசம் செய்யும் திருக்குறள் தான்!

ஈவெராவின் நெஞ்சில் குத்திய முள் எது என்று ஆராய்ச்சி செய்து, கடவுள் இருக்கிறாரா என்று தினமும் வாதம் செய்து இல்லை என்று சொல்லும் தொலைக்காட்சி மற அரக்கர்களுக்கு (பாப ராக்ஷஸனைத் தமிழ்ப் படுத்தி இருக்கிறேன், அவ்வளவு தான்) திருக்குறளும் வேண்டாம், கடவுளைத் தொழும் கோவில்களும் வேண்டாம். விட்டு விடுங்களேன்!

திருக்குறளில் கடவுள் வாழ்த்த்து என்பதில் தொடங்கி ஏராளமான சொற்களால் கடவுளைச் சுட்டிக் காட்டுகிறார் தெய்வப்புலவர்.

கடவுள், ஆதி பகவன் (குறள் 1) வாலறிவன் (குறள் 2), மலர்மிசை ஏகினான் (குறள் 3), வேண்டுதல் வேண்டாமை இலான் (குறள் 4), இறைவன் (குறள் 5), பொறிவாயில் ஐந்தவித்தான் (குறள் 6), தனக்குவமை இல்லாதான் (குறள் 7), அறவாழி அந்தணன் (குறள் 8) எண்குணத்தான் (குறள் 9), இறைவன் (குறள் 10), உலகு இயற்றியான் (1062) என்று இப்படி எல்லாம் கடவுளைச் சுட்டிக் காட்டி கடவுளின் சொல்ல முடியா குணங்களை எல்லாம் விவரிக்கிறார் அவர்.

பைபிளையும், குரானையும் ஏற்றுக் கொள்கிறேன், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஹிந்துக் கடவுள்களை ஏற்றுக் கொள்வார்களா, திருநீறு பூசிக் கொள்வார்களா என்று மதுரை ஆதீனத்தின் புது ஆதீனகர்த்தர் கேட்ட அர்த்தமுள்ள கேள்வியை “மடைமாற்றம்” செய்து ஒரு டிவி, மதுரை ஆதீனகர்த்தர் பைபிளையும், குரானையும் ஏற்றுக் கொள்கிறார் என்று பொய்ச் செய்தி வெளியிட்டது.

தமிழகம் அல்லாத இதர  மாநிலங்களிலும் பாரதம் அல்லாத பிற நாடுகளிலும் இந்தப் பொய் செய்தி வெளியீட்டைக் கேட்டோர் அல்லது இதைப் பற்றித் தெரிந்து கொண்டோர் வியந்து பிரமிக்கிறார்கள், இப்படி எல்லாம் கேடு கெட்ட அளவில் ஒரு ஊடகம் இயங்க முடியுமா, இது தமிழர்க்கும் தமிழுக்கும் செய்யும் மிகப் பெரிய துரோகம் அல்லவா, அவமானம் அல்லவா, இந்து  மதத்திற்கு ஒரு மாபெரும் அவமானத்தை ஏற்படுத்தும் சதி அல்லவா என்று கேட்கின்றனர்.

“இது ஒரு சின்ன சாம்பிள் தான்” என்று தான் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது.

ஹிந்துக்களுக்கே உள்ள மிகப் பெரிய குணமான பெருந்தன்மையையும், கருணையையும், பொறுத்துப் போகும் தனமையையும் அளவுக்கு மீறிச் சோதித்தால்..

சோதித்தால்…?

சிவபிரானின் நெற்றிக்கண் திறந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை!

***

tags- tags — சர்ச், மசூதி, குறள், 

கம்போடியக் கல்வெட்டுகளில் அழகிய கவிதைகள்- பகுதி 2 (Post No.7017)

Tamil at the bottom


WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 26 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 7-54 am

Post No. 7017

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

துன்முகனுக்கு உண்டோ சுகம்? (Post No.4112)

Written by London Swaminathan
Date: 25 July 2017
Time uploaded in London-17-21
Post No. 4112
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

‘இடும்பைக்கு  இடும்பை படுப்பர்’ — துன்பத்துக்கு துன்பம் செய்வர் என்று வள்ளுவனும் நெப்போலியனும் சொன்னார்கள். அதாவது அறிவில் சிறந்தவர்கள் துன்பத்தையே திணறடித்துவிடுவார்கள்; அது பயந்துகொண்டு ஓடிவிடும்!

 

நீதி வெண்பா என்னும் நூலில் ஒரு அழகான செய்யுள்:-

 

தூய அறிவினர் முன் சூழ்துன்ப மில்லையாம்

காயும் விடங்கருடற் கில்லையாம் — ஆயுங்காற்

பன்முகஞ்சேர் தீமுன் பயில் சீத மில்லையாம்

துன்முகனுக்  குண்டோ சுகம்

 

பொருள்:-

ஆயுங்கால் = ஆராய்ந்து பார்க்குமிடத்து

காயும் விடம் கருடற்கு இல்லை = கொல்லுகின்ற விஷம் கருடனுக்கு ஒன்றும் செய்வதில்லை

(அது போல)

தூய அறிவினர் முன் சூழ் துன்பம் இல்லை = நல்ல அறிவினர்க்கு வரும் துன்பம் அவருக்கு ஒரு தீங்கும் செய்யாது

பன் முகம் சேர் தீ முன் = நாலா பக்கங்களிலும் பற்றி எரியும் தீக்கு முன்னால்

பயில் சீதம் இல்லை = குளிர் என்பது நெருங்காது.

(அது போல)

துன்முகனுக்கு உண்டோ சுகம் = தீயோருக்கு சுகம் என்பது உண்டோ (கட்டாயம் இல்லை)

 

திருக்குறளில் இடுக்கண் அழியாமை என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் அழகான பத்து குறள்களை அமைத்து இருக்கிறார்.

இடுக்கண் வருங்கால் நகுக (621)

இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் (622)

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படா அதவர் (623)

இப்படி அடுக்கிக் கொண்டே போவார்.

சுருக்கமாகச் சொன்னால் அறிவுடையோர் துன்பத்துக்கே துன்பம் செய்வர்!

 

பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் ஞானிகளை இன்பமும் துன்பமும் ஒன்றும் செய்யாது  என்பார். இதைப் பல இடங்களில் திரும்பத் திரும்ப உரைப்பார்.

 

 

ஆத்திச் சூடி பாடிய அவ்வையோ மனந்தடுமாறேல், “துன்பத்திற்கிடங்கொடேல் என்கிறார்.

 

கேட்டிலுறுதி கூட்டுமுடைமை — என்று கொன்றை வேந்தன் செப்பும்

 

கேட்டில் உறுதி = கைப்பொருளை இழந்த காலத்தில் மனம் தளராமல் இருப்பது

உடைமை கூட்டும் = இழந்த அப்பொருளை உண்டாக்கும் அல்லது ஈடு செய்யும். அதாவது அதை இழந்த உணர்வே இல்லாமற் செய்துவிடும்.

 

போனால் போகட்டும் போடா’— என்ற தத்துவ உணர்வு பிறந்து விடும்!

துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது என்று முதுமொழிக் காஞ்சி சொல்லும்

துன்பம் வெய்யோர்க்கு = துன்பத்தை விரும்பி பொறுத்துக் கொள்ளுவோருக்கு

இன்பம் எளிது = இன்பம் எளிதாகும்

 

ஒரு காரியத்தைச் செய்வோருக்கு அப்படிச் செய்யும்போது வரும் துன்பங்களை விரும்பி ஏற்கும் பக்குவம் வந்துவிட்டால் அந்தக் காரியம் எளிதில் முடியும்; சந்தோஷமும் ஏற்படும் என்பது பொருளாம்.

TAGS:–துன்பம், இடும்பை, குறள், அவ்வை, இன்பம்

 

–SUBHAM–

‘நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும் நல்லவாம்’ (Post No.4108)

Written by London Swaminathan


Date: 23 July 2017


Time uploaded in London- 19-58


Post No. 4108


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்

நல்லவாம்  செல்வம் செயற்கு (குறள் 375)

பொருள்

செல்வத்தை ஈட்டும் பணியில் (பிஸினஸில்) , கெட்ட காலம் இருந்தால் நல்லன எல்லாம் தீயதாகவே முடியும். நல்ல காலம் இருந்தாலோ கெட்டதும் கூட நல்ல பலன்களைத் தரும்.

திருவள்ளுவரின் திருக்குறளில் ஊழ் என்னும் அதிகாரத்தில் பத்து பாடல்களில் தீவினையின் சக்தியை விதந்து ஓதுகிறார். மேலும் சில குறள்களிலும் நல்வினை தீவினை பற்றிச் செப்புகிறார்.

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்

சொரியினும் போகாதம (குறள் 376)

 

இறைவனுடைய அருள் இல்லாவிடில் கோடிகோடியாய்ப் பொருள் வந்தாலும் அதைக் காப்பாற்ற முடியாது. எவ்வளவுதான் காப்பாற்ற முயன்றாலும் தனக்கு வினைப்படி உரியன அல்லாதவை நிற்காது. உரிய பொருளை வேண்டாமென்று தூக்கி எறிந்தாலும், அதே வினைப்படி, அது அவரிடமே திரும்பி வந்துவிடும்.

 

திருவள்ளுவரின் நெருங்கிய நண்பரான ஏலேல சிங்கன், திருவள்ளுவர் சொற்படி தான, தருமம் செய்துவிட்டு மிச்சத்தைத் தங்கக் கட்டிகளாக மாற்றி கடலில் எறிந்தபோதும், சுறாமீன் வயிற்றில் ஏலேல சிங்கன் முத்திரைகளுடன் அதைப் பார்த்த மீனவர்கள் அவரிடமே திருப்பிக் கொடுத்தனர்.

 

வித்யாரண்யர் தங்கம் வேண்டி தவம் செய்த போது லெட்சுமி அவர் முன்னால் தோன்றி இந்த ஜன்மத்தில் உனக்குச் செல்வம் வரும் நல்வினை இல்லை என்றவுடன் அவர் சந்யாசம் வாங்கினார். சந்யாசம் வாங்கினால் அது அடுத்த ஜன்மம் எடுத்ததாகிவிடும். அப் போதுதான் அவருக்குத் தெரிந்தது — உண்மையான சந்யாசி தங்கத்தைத் தொட முடியாது என்று. உடனே அதை ஆடு மேய்க்கும் இடையர்களிடம் கொடுத்து மாபெரும் விஜயநகர சாம்ராஜ்யத்தைத் தாபித்து முஸ்லீம்களை தென்னாட்டை விட்டு விரட்டினார்.

 

ஆகவே ஒருவரின் வினைப்படிதான் செல்வம் ‘’வரும்- போகும்’’ என்பது துணிபு. ஆனால் இந்த ஜன்ம நல்வினையால் மேலும் செல்வம் பெறலாம். அதிக தவம் செய்து வினையையும் வெல்லலாம்.

 

இதே கருத்தை விளக்கும் வேறு சில பாடல்களைக் காண்போம்

 

நீதிவெண்பாவில் ஒரு பாடல் உள்ளது:

தானே புரிவினையாற் சாரு மிருபயனுந்

தானே யனுபவித்தல் தப்பாது – தானூறு

கோடி கற்பஞ் சென்றாலுங் கோதையே செய்தவினை

நாடிநிற்கு மென்றார் நயந்து

பொருள்:

பெண்ணே! அளவற்ற கோடி கோடி கற்பங்கள் கடந்துவிட்டாலும், ஒருவனை அவன் செய்த வினைகள் எப்படியும் வந்து சேரும் என்று பெரியோர் சொல்லுவர்.  ஒருவன் தானே செய்த வினையினால் வந்து சேரக் கூடிய இரண்டு பயன்களும் (நல்லதும், தீயதும்), செய்தவன் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அது தப்பவே தப்பாது

 

கற்பம்= பிரம்மாவின் ஆயுட்காலம், ஒரு ஊழி

‘நல்வழி’யும் இதையே சொல்லும்:

 

தாந்தாமுன் செய்தவினை தாமே அனுபவிப்பார்

பூந்தாமரையோன் பொறிவழியே – வேந்தே

ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றாய்

வெறுத்தாலும் போமோ விதி

நல்வழி 60

 

நாலடியார் செய்யுளும் இதை உறுதி செய்யும்:

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தே தற்செய்த

கிழவனை நாடிக்கொளற்கு

 

ஒரே கருத்தைப் பல புலவர்கள் சொல்லுவது படித்து ரசிக்கத்தக்கது.

TAGS: நல்வினை, தீவினை, குறள், நல்வழி, நீதிவெண்பா

—சுபம்—

 

மனிதரில் எத்தனை வகை? வள்ளுவரின் பதில்!

IMG_3384

திருக்குறள் தெளிவு

மனிதரில் எத்தனை வகை? வள்ளுவரின் பதில்!

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by S NAGARAJAN

Date: 26 September 2015

Post No: 2189

Time uploaded in London :– 6-15 AM

(Thanks  for the pictures) 

 

.நாகராஜன்

 

அரசவையில் வள்ளுவர்

வள்ளுவர் வருகிறார் என்ற செய்தி கேட்டு மன்னம் ஓடோடி வந்து அவரை அரசவைக்குள் அழைத்துச் சென்றான். அப்பா! அரசவை சற்று நேரத்திற்குள் ததும்பி வழிந்தது. வள்ளுவர் மஹிமை!

மன்னர் வள்ளுவரை நோக்கிக் கரம் கூப்பினார். கேட்டார்:-“ஐயனே! நீண்ட நாளாக ஒரு சந்தேகம்! பெறுதற்கரிய மனிதப் பிறப்பை அடைந்தோர் ஏராளம். இந்த மனிதர்களில் எத்தனை வகை உண்டு?”

“மன்னா! மனிதர்களின் வகைகள் தானே தெரிய வேண்டும்! இதோ மக்களே பதில் சொல்வர்.“ என்ற வள்ளுவர், “ பல கிராமங்களின் வழியே வந்தேன் அல்லவா!   பல கிராமங்களிலிருந்தும் மக்களில் பலர் என்னுடன் இங்கு வந்துள்ளனர்.” என்று அரசவையில் மக்களோடு குழுமி இருந்த அவர்களைச் சுட்டிக் காட்டினார்.

1935 valluvar2

 

இறை என்று வைக்கப்படும்

அவர்களில் ஒருவரை அழைத்த வள்ளுவர், “நேற்று உங்கள் கிராமத்தில் என்ன நடந்தது? சொல்லுங்கள்!” என்றார்.

மன்னர், ராணி உட்பட அனைவரும் அவரை நோக்கினர்

“மன்னருக்கு வணக்கம். தெய்வப் புலவருக்கு வணக்கம்” என்று வணக்கம் செலுத்திய அவர் சொல்லத் தொடங்கினார். “இதுவரை நடந்திராத ஒரு சம்பவம் நேற்று எங்கள் கிராமத்தில் நடைபெற்றது. ஊரை ஒட்டி ஓடும் நதியில் பெரு வெள்ளம்! வெள்ள நீர் கிராமத்தில் புகுந்து விட்டது. இதனால் குழப்பம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர், பாதிப்புக்கு உள்ளாகாதோர் என்று இரு பிரிவுகளாக கிராமமே பிரிந்து மோதல் சூழ்நிலை ஏற்பட்டது. கொள்ளையர் சிலர் வேறு ஊருக்குள் புகுந்து அகப்பட்டதைக் கொள்ளையடிக்க நினைத்தனர்..”

மன்னர் பதைபதைத்தார். “அப்புறம்?” அவர் குரலில் வேகமும் அவசரமும் தொனிக்க மன்னரை இடைவெட்டி கிராமவாசி தொடர்ந்தார்.

“மன்னா! கவலைப்பட வேண்டாம். ஊரில் நீங்கள் அமைத்திருக்கும் கிராமத் தலைவர்கள் உடனடியாக இரு பிரிவுகளையும் இணைத்தனர்.. அவரவர்க்குத் தேவையானதை ஒரே நாழிகையில் கொடுத்து உதவவே கிராமமே ஒன்றானது. கிராமத்தில் இருந்த அரசு அதிகாரிகள் உடனடியாக வெள்ளம் உள் புகாமல் தடுப்புச் சுவரை எடுத்தனர். அதிகாரிகளில் இன்னொரு பிரிவினர் உணவுக்கு ஏற்பாடு செய்து அனைவருக்கும் வயிறார உணவைப் பரிமாறினர். கிராம காவல் படையினரோ கொள்ளையரை அடித்துப் பிடித்து இதோ உங்கள் முன்னிலையில் கொண்டு வந்துள்ளனர். அவர்களை தளபதி வசம் ஒப்புவித்து விட்டோம்.”

“இப்படி நிலைமை ஒரே நாளில் சீர் பட என்ன காரணம்?” வள்ளுவர் அந்த கிராமவாசியை நோக்கிக் கேட்டார்.

“ஐயனே! நம் மன்னரின் ஆட்சியில் அனைத்தும் முறைப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் எதையும் கோராமலேயே நேரம் அறிந்து நிலை அறிந்து அரசு அதிகாரிகள் உதவினர். எங்களிடம் பொருள் பெறுவதில்லை அவர்கள்! தங்கள் கைப்பொருளையே செலவழித்தனர். அதுவே காரணம்”

IMG_5641

வள்ளுவர் அனைவருக்கும் கேட்கும்படி கூறினார்:

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு                      

இறை என்று வைக்கப்படும் (குறள் 388)

மக்கள் ‘ஹாஹா’வென்று கூவினர். அரசன் இருக்கையிலிருந்து ராணி பின் தொடர எழுந்தோடி வந்து வள்ளுவரின் பாதங்களில் விழுந்து வணங்கினான்.

“ஐயனே! இறை என்பதைத் தலைவன் என்ற பொருளில் எடுத்துக் கொள்கிறேன்” என்று அவன் முடிப்பதற்குள், “எங்கள் மன்னா! எமக்கு இறைவா! நீ வாழ்க” என்று மக்கள் எழுந்து நின்று ஒரே குரலாகப் பெரு முழக்கம் செய்தனர்.

வள்ளுவர் புன்சிரிப்பு பூக்க, “அவர்கள் இறை என்பதற்கு என்ன அர்த்தம் எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ!” என்றார்.

 

தெய்வத்துள் வைக்கப்படும்

 

வள்ளுவர் அனைவரையும் அமரச் செய்தார். இன்னொரு கிராமத்திலிருந்து வந்தவரை அழைத்தார்.” நேற்று உங்கள் கிராமத்தில் என்ன நடந்தது?”

“ஐயனே! எங்கள் கிராமத்தில் நூறு வேலி நிலம் கொண்ட பெரும் பணக்காரர், -சிற்றரசருக்கு நிகரானவர் -இருக்கிறார். ஆனால் அவர் எதையும் தனக்கெனக் கொள்ளாமல் மக்களாகிய எங்களுக்கே தருகிறார். காலை முதல் இரவு வரை எங்கள் வாழ்க்கையை நல்வழிப் படுத்துவதே அவரது ஒரே தொழில். அவர் நடப்பதைப் பார்த்து நாங்கள் நடக்கிறோம். நேற்று வெள்ளம் போக்க அவர் அனைத்தையும் செய்தார். ஒரு கேடும் நிகழவில்லை. உரிய நேரத்தில் மாலையில் கோவில் பூஜையையும் முடித்து வழக்கம் போல சாவடியில் இராமாயணம் கூறவும் வந்தார் ஐயா!

நேற்றைய தினத்தை எங்களால் மறக்கவே முடியாது. பிரளயம் வந்தது என நினைத்தோம். அது பாற்கடல் ஆனது” என்றார்.

kanchi best anbe sivam

வள்ளுவர் இப்போது கூறினார்:-

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்                     

தெய்வத்துள் வைக்கப்படும் (குறள் 50)

‘ஹா ஹா’ என்றனர் மக்கள். ஒருவரைத் தலைவனாக வைத்தார். இன்னொருவரை தெய்வமாக வைத்தார்.

உயிர்வாழ்வாருள் வைக்கப்படும்

 

அடுத்து..

இன்னொரு கிராமத்திலிருந்து வந்த ஒருவரை அழைத்தார். அவர் கேளாமலேயே தன் கிராம நிகழ்வைச் சொல்ல ஆரம்பித்தார்.

“இதோ, எங்கள் அருகில் நிற்கிறாரே, இவர் ஒரு சாது! எங்கள் நினைவு தெரிந்த நாளிலிருந்து இவர் தேகம் பிறருக்காகவே இருக்கிறது. மருத்துவத் தொண்டு செய்வார். கோவில்களில் உழவாரப் பணி செய்வார். கூட்டு பிரார்த்தனைக்கு மக்களை அழைப்பார். ஏழைகளுக்கு உணவைத் தயார் செய்து தருவார். இவரிடம் பணம் ஏதுமில்லை என்றாலும் இதையெல்லாம் இவரால் செய்ய முடிகிறது, இவரது மூச்சு விடுவது ஏனையோருக்காகவே, ஐயனே!”

வள்ளுவர், ‘அந்த ‘உயிர் வாழ்வானை’ மன்னனுக்கு முன்னர் கூட்டி வா’ என்றார்.

‘உயிர் வாழ்வானா’? மன்னன் முகத்தில் சிறிது சந்தேகம் தோன்ற, “ஐயனே! அவர் தான் உயிர் வாழ்வானா? எல்லோரும் தானே உயிர் வாழ்பவர்கள்?!” என்றான்

வள்ளுவர் கூறினார்:

ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்                              

செத்தாருள் வைக்கப்படும்    (குறள் 214)

மக்கள் ‘ஹாஹா’ வென்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிறருக்கு சேவை செய்பவனே உயிர் வாழ்பவன். ஏனையோர் இருந்தும் இறந்தவரே! உயிருடன் இருந்தாலும் செத்த பிணமே!

DRAGON3

அலகையா வைக்கப்படும்

 

இறுதியாக இன்னொரு கிராமவாசியை அழைத்தார் வள்ளுவர்.

அவர் தன் கிராமக் கதையைக் கூறலானார்:”ஐயனே! அவமானம்! சொல்லவே நாக்கு கூசுகிறது! எங்கள் கிராமத்தில் புல்லறிவு படைத்த ஒரு இளைஞன் இறைவனே இல்லை என்கிறான். தன்னுடன் அறியாப் பிள்ளைகளைத் திரட்டிக் கொண்டு தில்லை நடராசரையும் ஶ்ரீரங்கநாதரையுமே வன்முறையில் மிரட்டுகிறான்! கோவிலை இடி என்கிறான். ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி அவனுக்கு எவ்வளவோ நல்லுபதேசம் செய்தோம். அவன் பெற்றோரும் உறவினரும் கூட அவனைத் துறந்து விட்டனர்.”

அவன் முடித்தவுடன் வள்ளுவர் கூறினார்:-

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து                               

அலகையா வைக்கப்படும்   (குறள் 850)

ஆஹா! உலகோர் அனைவரும் உண்டு என்று சொல்லும் ஒன்றை இல்லை என்பான் வையத்தில் பேயாக வைக்கப்படுவான்.

மக்கள், ‘வள்ளுவர் வாழ்க’ என்று முழக்கம் செய்தனர்.

மன்னனோ, “ஐயனே ஒருவனை இறையாகவும் ஒருவனை தெய்வமாகவும் இன்னொருவனை உயிர் வாழ்பவனாகவும் ஏனோயோரை நடைப்பிணமாகவும், இன்னொருவனை பேயாகவும் வைத்தீர்களே!” ஆஹா! மனிதரில் இத்தனை வகையா!” என்று புளகாங்கிதத்துடன் கூறினான்.

மக்களில் பதரும் மிருகமும்

“ஐயனே! எனது அரசின் கீழ் உள்ள மக்களில் மோசமானவர் யாரேனும் உண்டோ, ஐயனே?”

வள்ளுவர் கூறினார்:

பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்

மக்கட் பதடி எனல் (குறள் 196)

ஆஹா! பயனற்ற சொல் சொல்பவன் மக்களில் பதர் போன்றவனா? அவனை ஒதுக்கித் தள்ள வேண்டும். மனிதருள் பதரைச் சொல்லி விட்டாரே!

“ஐயனே! மக்களில் மக்களாக இல்லாதவர் யாரேனும் உண்டோ?”

“விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்                       கற்றாரோடு ஏனை யவர்”   (குறள் 410

ஆஹா! எந்தக் கேள்விக்கும் வள்ளுவரிடம் இருக்கிறது பதில். இலங்கு நூல் கற்காதவன் மிருகமே!

முறையுடன் மக்களைக் காப்பவன் தலைவன். அவனே மக்களால் இறை எனப்படுவான்.

வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வம்.

பிறருக்காக வாழ்பவனே உயிருடன் இருப்பவன். தனக்காக மட்டும் வாழ்பவன் இருந்தும் இறந்தவனே!

உலகத்தார் உண்டு என்பதை இல்லை என்பவன் பேய்!

பயனற்ற சொல் பேசுபவன் பதர்.

நல்ல நூல் கற்காதவன் மிருகம்!! மனிதருள் இத்தனை வகையா?!

இலங்கு நூல் என்கிறாரே! இலங்கு நூல் எது?

அவர் கையில் இருந்த ஒரு சிறிய சுவடிக் கட்டை மன்னன் நோக்க அனைவரும் அதை நோக்கினர்.

“ஐயனே! நாங்கள் அனைவருமே உயர் நிலைக்குச் செல்ல ஆவலுடன் உள்ளோம்! உங்கள் கையில் உள்ள நூலை எங்களுக்குத் தர முடியுமா? அதில் இன்னும் ஏராளமான வகைகளைப் பற்றியும் வாழ்வாங்கு வாழும் முறை பற்றியும் நாங்கள் அறிய முடியுமே!”

வள்ளுவர் புன்முறுவலுடன் திருக்குறளை மன்னனிடம் அளிக்க கூட்டம் ஆரவாரம் செய்தது.

“இதல்லவோ தெய்வச் சுவடி! நாம் அனைவரும் இதைக் கற்று அதன்படி வாழ்வோம். உயர்வோம்!” என்று சபத மொழி கூறினான் மன்னன்.

“நன்று, நன்று” என்றனர் நல்லோர்! வள்ளுவர் சிரித்தார். வான் சிரித்தது. இலேசான தூறல் வீச, பூமித் தாய் மனம் குளிர்ந்தாள்.

திருக்குறள் வாழ்க! தெய்வத் தமிழ்ப் புலவர் வாழ்க!!

**************

வினவுங்கள் விடைதருவோம்: அறவாழி அந்தணன்

Please click below for the article:

அறவாழி அந்தணன் யார்

vishnu wheel