நான்மறை பற்றி குழப்பம் வேண்டாம் (Post No.9715)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9715

Date uploaded in London – –10 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அண்மைக் காலமாக இந்து விரோதக் கும்பல்கள், தமிழ் இலக்கியத்தில் புகுந்து மக்களைக் குழப்பி வருகிறது. தமிழ் இலக்கியம் ஒரு பெரிய கடல் ; சம்ஸ்க்ருத இலக்கியமோ மஹா மஹா சமுத்திரம் ; இரண்டையும் நீந்திக் கரை சேர முடியாது. இதனால் ஏதோ ஒரு பாட்டை எங்கிருந்தோ எடுத்துக் காட்டி ஏதோ உண்மை போல பொய் யைச் சொல்லி விடுவார்கள்

நான்மறை என்றால் 4 வேதங்கள் என்று சங்க இலக்கியம் முழுதும் உளது.

சைவப் பெரியார்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர்,மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தேவாரம், திருவாசகம் என்னும் திருமுறைகளை நமக்கு அளித்தனர். அவர்கள் சொன்னது திருமுறை. வேத கால ரிஷிகள் சொன்னது திருமறை.

சில அசட்டுப் பிசட்டு அரைவேக்காடுகளும் , தத்துப் பித்து தான் தோன்றிகளும்  நால்வர் சொன்னதே நான் மறைகள்என்று உளறிக்கொட்டி கிளறி மூடிவருகின்றன.

நால்வரும் தோன்றி நான்மறை என்ற சொல் உருவாக அந்த நால்வரும் மறைந்த பின்னர் ஒரு சில நுற்றாண்டுகளாவது ஆகும். அது மட்டுமல்ல. சுந்தரர், மாணிக்க வாசகர் தோன்றுவதற்கு முன்னரே சம்பந்தர் நான் மறை என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். நால்வர் சொன்ன விஷயங்கள் நான் மறை கண்ட உண்மைகள் என்பதில் ஐயமில்லை ஆனால் அவர்கள் பாடலில் வரும் “நான்மறை” என்ற சொல் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களையே.குறிக்கின்றன. பழைய உரை காரர்களும்  அப்படியே உரை செய்துள்ளனர்.

இதோ சில சான்றுகள் –

திருஞான சம்பந்தரின் முதல் திருமுறையில் (தேவாரத்தில்)

மெய்ம்மொழி நான்மறை யோர் மிழலை”        – (திருப்புகலியும் திருவீழிமிழலையும் – 1)

  தளராத வாய்மைப்

    புந்தியி னான்மறை யோர்களேத்தும்

    புகலி நிலாவிய புண்ணியனே        1.4.5

நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி

        நான்மறை ஞானசம்பந்தன்”                             – (திருப்புகலியும் திருவீழிமிழலையும் – 11)

    நாமரு கேள்வியர் வேள்வியோவா

    நான்மறை யோர்வழி பாடுசெய்ய     1.6.4

·   வேதக்

கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்   1.10.9

  “நல்லுயர் நான்மறை நாவின் நற்றமிழ்

        ஞானசம்பந்தன்”                               – (திருவாழ்கொளிபுத்தூர் – 11)

·   “விண்ணவரேத்தும்,

        பாரணி திகழ்தரு நான்மறையாளர்”                      – (திருப்பாம்புரம் – 1)

இவ்வாறு சம்பந்தரும் அப்பரும் நூற்றுக்கணக்கான இடங்களில் மறை, ருக்கு வேதம், சாம வேதம், 4 வேதங்கள் என்று தெளிவாகப் பாடியுள்ளனர். ஆக தேவார, திருவாசக, திவ்வியப்பிரபந்தத்தில் வருவன ருக், யஜுர், சம அதர்வண வேதங்களே என்பதில் ஐயம் வேண்டாம்.

Xxx

சங்க இலக்கியத்தில் நான் மறை

நான்மறை -பரிபாடல் 9-12, புறம்.6-20, 362-9;

நான்மறை  முதல்வர் – புறம்.26-13, 93-7

நான்மறை முதுநூல் – அகம்.181-16

நான்மறையோர் – பட்டினப்பாலை 202

சிலப்பதிகாரம் 15-12, 23-68

நான்மறை மரபு- சிலப்பதிகாரம் 5-175, 28-191

நான்மறை மருங்கு-    சிலப்பதிகாரம் 28-176

நான்மறைக் கேள்வி -பரி .திரட்டு 8-8

நான்மறையந்தணர் – சிலம்பு 13-141, மணி 6-169

நான்மறையாளன் – சிலம்பு 28-137

நான்மறையாள- சிலம்பு 11-152; 27-54

நான்மறைமாக்கள் – மணி.13-99

நான்மறைமாக்காள்– மணி..13-69

நான்மறையாளர் – திரிகடுகம் 3-3; ஆசாரக்கோவை-61-1

Xxxx

சங்க இலக்கிய, சிலப்பதிகார உரைகாரர்களும் சம்ஸ்க்ருதத்தில் உள்ள நான்கு வேதங்களையே குறித்துள்ளனர்.

நான் கூறும் புதிய கருத்தோ, எனது கண்டுபிடிப்போ இல்லை; எனக்கு முன்னே பல ஸைவப் பெரியோர்களும் இந்தக் கருத்தைச் செப்பியுள்ளனர்.

ஆகவே நேற்று வந்த சுள்ளான்களை, கள்ள மதம் பரப்ப வந்தோர் என்று கருதி விலக்குக .

–subham—

tags- நான்மறை, குழப்பம் வேண்டாம், சங்க இலக்கியத்தில்