அன்னமும், கொக்கும் வெள்ளை நிறமே, இரண்டிற்கும் வித்தியாசம்? (9180)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9180

Date uploaded in London – –24 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அன்னமும் வெள்ளை நிறம், கொக்கும் வெள்ளை நிறமே, இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

ச.நாகராஜன்

அருமையான சில சுபாஷித ஸ்லோகங்கள் கீழே தரப்பட்டுள்ளன. எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானவை இவை.

ஹம்ஸ: ஷ்வேதோ தக: ஷ்வேதோ கோ பேதோ தக ஹம்ஸயோ: | நீரக்ஷீரவிவேகே து ஹம்ஸ: ஹம்ஸோ தகோ தக: ||

அன்னம் வெள்ளை நிறம்; கொக்கும் வெள்ளை நிறம் தான்! இந்த இரண்டிற்கும்  என்ன வித்தியாசம்? அன்னமானது பாலுடன் தண்ணீர் கலந்து  அது வெண்மையாக இருந்த போதிலும் கொக்கு போலலல்லாமல் நீரைப் பிரித்து பாலை மட்டுமே குடிக்கிறது.  (இந்த சுபாஷிதம் வெளித் தோற்றம் முக்கியமல்ல. புத்திசாலிகளுக்கு எது முக்கியம் எது முக்கியமல்ல என்பது தெரியும். ஆகவே வெளித்தோற்றத்தைக் கண்டு மயங்காமல் உள்ளிருக்கும் நற்பண்புகளையே பார்க்க வேண்டும் என்கிறது)

The swan is white and so is the crane. Then what is the difference between the two? It is said that the swan is able to separate milk even though diluted with water and drink only milk (unlike the crane). The subhāşita stresses the point that it is the inner qualities that make an object not its outer appearance. The wise precisely know what is useful and what is not.

காக: க்ருஷ்ணோ பிக: க்ருஷ்ணோ கோ பேதோ காகபிகயோ: |         வசந்தசமயே ப்ராப்தே காக: காக: பிக: பிக: ||

காகம் கறுப்பு நிறம் கொண்டது. குயிலும் கறுப்பு நிறம் தான்? இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? வசந்த காலம் வரும் போது குயில் இனிய ஓசையை எழுப்புகிறது. காகத்தால் அப்படி இனிய ஓசையை எழுப்ப முடியவில்லை. காக்கை காக்கை தான்; குயில் குயில் தான்!

The crow is black, so is the cuckoo bird. Then, what is the difference between the two? It becomes evident with the advent of the spring when the cuckoo bird starts singing in sweet voice, which the crow cannot.

அஹம் ச த்வம் ச ராஜேந்த்ர லோகநாதாவுபாவபி |         பஹுவ்ரீஹிரஹம் ராஜன் சஷ்டிதபுரூஷோ பவான் ||

பிச்சைக்காரன் அரசனை நோக்கிப் பிரகடனம் செய்கிறான் இப்படி: “நாம் இருவருமே லோக நாதர்களே. இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவெனில் என்னை எடுத்துக் கொண்டால் மக்களே எனக்கு எஜமானர்கள்; அரசனோவெனில் மக்களுக்கு எஜமானன்; அவ்வளவு தான்!

The beggar declares to the king: “Both of us are Lokanatha. The only difference is that in my case people are my master (when the compound Lokanatha is resolved as “Bahuvrihi”); while the king is the master (ruler) of the people (when the compound is resolved as a ‘Shashthitatpurusha).’

சுலபா: புரூஷா: ராஜன் சததம் ப்ரியவாதின: |                       அப்ரியஸ்ய ச ப்த்யஸ்ய வக்தா ஷ்ரோதா ச துர்லப: ||

விதுரன் திருதராஷ்டிரனுக்குக் கூறும் புத்திமதி : “ஹே! அரசனே! இன்பங்களை நாடும் மக்களை சுலபமாகக் காணலாம். ஆனால் அப்ரியமாக இருந்தாலும் உண்மையைப் பேசுபவனையோ அல்லது அவன் சொல்வதைக் கேட்பவனையோ காண்பது அரிதே!

Sage Vidura advises Dhritarashtra, “Your Majesty, people who engage in pleasantries can be easily found. One speaking bitter [truth] and another who listens to him/her are both difficult to find however.  

துர்ஜன: ப்ரியவாதீதி நைதத் விஸ்வாசகாரணம் |                      மதுதிஷ்டதி ஜிஹ்வாக்ரே ஹ்ருதயே து ஹலாஹலம் ||

உன் பக்கமாக பிரிய வார்த்தைகளைப் பேசினாலும் கூட, ஒருபோதும் கெட்டவர்களை நம்பாதே. அவர்கள் நாக்கில் தேன் சொட்டும்; இதயத்திலோ விஷம் நிரம்பியிருக்கும்!

Never believe a wicked person even if he/she speaks in (your) favor because there may be honey on his tongue but poison in his heart.

குறிப்பு : ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் இருக்கும் ஸ்வயம்சேவகர்களுக்காக சுபாஷித தொகுப்பு நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள சில சுபாஷிதங்களும் அவற்றின் ஆங்கில மொழியாக்கமும் மேலே தரப்பட்டுள்ளன. (தமிழாக்கம் : ச.நாகராஜன்)

நன்றி : Subhashita for Sanga shaka (77 pages)

***

tags- அன்னம், கொக்கு , வெள்ளை நிறம், 

காக்கா, காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா! (Post No.7206)

WRITTEN BY London Swaminathan

swami_48@yahoo.com

Date: 12  NOVEMBER 2019

Time  in London – 14-59

Post No. 7206

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

காகம் பற்றி 1992 மே 10ம் தேதியும், கொக்கு பற்றி 1992 நவம்பர் 15ம் தேதியும் தினமணியில் நான் எழுதிய கட்டுரைகளைப் படியுங்கள். காகம் பற்றிய செய்தி இன்று வரை சரியே. லண்டனுக்கு வரும் சுற்றுலாப் பபயணிகள் ‘லண்டன் டவரில்’ இன்றும் இக்கதையைக் கேட்கலாம். செஷைர் பால கொக்குகள் தொல்லை இப்போது இல்லை என்றே தோன்றுகிறது. இறுதியில் காகம் பற்றிய முந்தைய கட்டுரைகளுக்கும் தொடர்பு முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.

காகம் | Tamil and Vedas

காகம் மீது சாணக்கியன் (வசை) பாடியது! (Post No.4734). Date:12 FEBRUARY 2018. Time uploaded in London- 11-26 am. Written by London swaminathan. Post No. 4734. PICTURES ARE TAKEN from various …

  1.  

tamilandvedas.com › tag › காகம்-பழமொ…



காகம் பழமொழிகள் | Tamil and Vedas

28 Mar 2013 – இன்று காகம் பற்றிய பாடல்கள், பழமொழிகளைக் காண்போம்.அடுத்த வாரத் தலைப்பையும் இப்போதே சொல்லிவிடுகிறேன்: ”இன்பம் …

கா கா பராசக்தி பாடல் | Tamil and Vedas

Translate this page

கா கா கா (பாராசக்தி திரைப்படப் பாடல்) !!!!!! காகம் பற்றிய பழமொழிகள்: நாங்கள் பட்டிக்காட்டு ஜனங்கள்தான் .எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் ஆனால் நாங்கள் புழக்கத்தில் விடும் பழமொழிகள் நிறைய விஷயங்கள் உடைய பொக்கிஷம்.ஈதோ பாருங்கள்: காக்கைக்கும் தன் குஞ்சு பொன் …

காகம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/காகம்/

Translate this page

5 May 2017 – 5.கிடைத்த உணவைப் பகிர்ந்து உண் (முதலில் எல்லோரையும் அழை). 6.எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் காகா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்). காலை எழுந்திருத்தல் காணமலே புணர்தல். மாலை குளித்து மனை புகுதல் – சால.

பிரிட்டனில் கா கா ஜோதிடம்! மேலும் …

Translate this page

27 Feb 2015 – காகம் என்னும் பறவை குறித்து இதற்கு முன் பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பாடிய கா….கா…. பாடல் முதல் சங்க இலக்கியத்தில் காகத்துக்கு ஏழு பிண்டம் வைத்தல் வரை, வள்ளுவன் குறள் முதல் பாரதி பாடிய காக்கை, குருவி …

காகத்திடம் கற்க வேண்டிய ஆறு …

Translate this page

5 May 2017 – எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் காகா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்). … பஞ்ச தந்திரக் கதையில், ஆந்தைகளைக் காகம் எப்படி வென்றது என்பதையும், அஸ்வத்தாமா படுகொலைகளுக்கு ஆந்தைகள் எப்படித் தூண்டின என்பது …

–subham–

ஒரு கவிஞனின் ஆராய்ச்சி: அன்னமும் வெள்ளை! கொக்கும் வெள்ளை! என்ன வேறுபாடு?

swan1

ஒரு கவிஞனின் ஆராய்ச்சி: அன்னமும் வெள்ளை! கொக்கும் வெள்ளை! என்ன வேறுபாடு?

Written  by London swaminathan

Date: 2 November 2015.

Post No:2294

Time uploaded in London :–  7-41 (காலை)

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

1).சர்வாரம்பா தண்டுலப்ரஸ்த மூலா:

எல்லாவற்றிற்கும் மூல காரணம் (அரிசிச்) சோறு!

ஒப்பிடுக:

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்

இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் -ஒருநாளும்

என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது— அவ்வையார்.

xxxx

2).சா சபா யத்ர சப்யோஸ்தி (கதா சரித்சாகரம்)

எங்கு அவை ஒழுக்கமுடையோர்

இருக்கிறார்களோ அதுவே சபை!

ஒப்பிடுக: மாநில சட்டசபைகள், லோக் சபை உறுப்பினர்களின் நடத்தை!!

xxx

3).ஸா சேவா யா ப்ரபுஹிதா– (பஞ்ச தந்திரம்)

முதலாளிக்கு (தலைவருக்கு/ எஜமானனுக்கு) இதம் தருவதே சேவை

xxx

4).சூர்ய ஏகாகி சரதி (யஜூர் வேதம்)

சூரியன் தன்னதனியனாகச் சொல்கிறான்

xxx

5).ஸ்வஜாதிர் துரதிக்ரமா (பஞ்ச தந்திரம்)

எங்கும் தனது இனத்தை (ஜாதியை) விட்டுக்கொடுக்க முடியாது

xxx

6).ஸ்வதேச ஜாதஸ்ய நரஸ்ய நூனம் குணாதிகஸ்யாபி பவேதவக்ஞா

சொந்த நாட்டுக்காரர்களுக்கு எவ்வளவு பெருமை/திறமை இருந்தாலும் அவனுக்கு அவமதிப்பே மிஞ்சுகிறது (இக்கரைக்கு அக்கரை பச்சை)

ஹிந்தி: கர் கா ஜோகீ ஜோக்டா ஆன் காவ்ன் கா சித்த

xxx

7).ஸ்வாத்யாய  ப்ரவசனாப்யாம் ந ப்ரமதிதவ்யம் (தைத்ரீய உபநிஷத்)

வேதங்களைக் கற்பதையும், கற்பிப்பதையும் புறக்கணிக்காதீர்கள்

xxx

swan2

8).ஹம்சோ ஹி க்ஷீரமாதத்தே தன்மிஸ்ரா வர்ஜயத்யப:  – (சாகுந்தலம் நாடகம்)

அன்னப் பறவையானது பாலை மட்டும் எடுத்துக் கொண்டு தண்ணீரை விட்டுவிடும்

Xxxx

9).ஹம்ச: ஸ்வேதோ பக: ஸ்வேத: கோ பேதோ பக ஹம்சயோ:

நீரக்ஷீர விபாகே து ஹம்ஸோ ஹம்ஸோ பகோ பக: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

அன்னப் பறவையும் வெள்ளை; கொக்கும் வெள்ளை! பின்னர் என்ன வேறுபாடு?

தண்ணீரையும் பாலையும் கலந்து வைத்தால் அன்னம், பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும் நீரை விட்டுவிடும். கொக்கு, கொக்குதான்! அன்னம், அன்னப் பறவைதான்!

xxx

crane

10).ஹிமவதி திவ்ய ஔஷதய: சீர்ஷே சர்ப: சமாவிஷ்ட: (முத்ராராக்ஷசம் நாடகம்)

தலைக்கு மேலே பாம்பு! இமய மலையில் மூலிகைகள்!

(தொலைவில் தீர்வு/ மருந்து இருந்தால் என்ன பயன்?)

ஹிந்தி: ஜப் தக் ஹிமாலய் சே சஞ்சீவனீ ஆயே, பீமார் மர் ஜாயே.

சாம்ப் தோ சிர் பர், பூடி பஹாட் பர்

–சுபம்–

ஜலே தைலம், கலே குஹ்யம், பாத்ரே தானம்!!!

Compiled by London swaminathan

Post No.2214

Date: 4   October 2015

Time uploaded in London: காலை 13-30

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

சம்ஸ்கிருதப் பொன்மொழிகள்

1).ஜலே தைலம் கலே குஹ்யம் பாத்ரே தானம் மனாகபி

ப்ராக்ஞே சாஸ்த்ரம் ஸ்வயம் யாதி விஸ்தாரம் வஸ்து சக்தித: — சாணக்கிய நீதி

நீரில் எண்ணையும், கெட்டவர்களிடத்தில் சொன்ன ரகசியமும், தகுதியுள்ளோரிடத்தில் கொடுத்த தானமும், அறிஞர்களிடத்தில் சொல்லப்படும் நூலறிவும் இயற்கையாகவே பரவிவிடும்.

Xxxx

2).ஜீவந்தோபி ம்ருதா: பஞ்ச வ்யாசேன பரிகீர்த்திதா:

தரித்ரோ வ்யாதிதோ மூர்க்க: ப்ரவாசீ நித்யசேவக:

வறுமையில் வாடுபவன், நோயாளி, முட்டாள், பிறதேசம் சென்றவன், தினக் கூலி ஆகிய ஐவரும் இருந்தும் இறந்தவர்கள் என்று வியாசர் கூறியுள்ளார்.

Xxx

3).த்ரிசங்கு இவ அந்தரா திஷ்ட – சாகுந்தலம்

திரிசங்கு போல அந்தரத்தில் நில்

Xxx

4).ந கலு ச உபரதோ யஸ்ய வல்லபோ ஜன: ஸ்மரதி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

செவிடனுக்கு குயில்களின் ஆலாபனை, மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதில்லை அல்லவா?

  

தபால்தலைகளில் குயில்

Xxx

5).நக்ன  க்ஷபணகே தேஸே ரஜக: கிம் கரிஷ்யதி – சாணக்யநீதி

எல்லோரும் நிர்வாணமாக இருக்கும் இடத்தி வண்ணானுக்கு என்ன வேலை?

Xxx

6).ந வா அரே சர்வஸ்ய காமாய சர்வம் ப்ரியம் பவதி

ஆத்மனஸ்து காமாய சர்வம் சர்வம் ப்ரியம் பவதி

உடல் மீது , உருவம் மீது அன்பு இல்லை.

ஆத்மாவைக் கருதியே அன்பு இருக்கிறது

ஒப்பிடுக:— “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு” (குறள் 786)

Xxx

7).ந வ்ருதா சபதம் குர்யாத் – மனு ஸ்மிருதி

வீண் உறுதி மொழி எடுக்காதே

Xxx

crane india Afghanistan-stamp790parrots

8).ந வ்யாபார சதேனாபி சுகவத் பாடயதே பக:- ஹிதோபதேசம்

நூற்றுக் கணக்கான முறை முயற்சி செய்தாலும் கொக்கு, கிளி போலப் பேச முடியாது

Xxx

9).ந சா சபா யத்ர ந சந்தி வ்ருத்தா:

வ்ருத்தா ந தே யே ந வதந்தி தர்மம் – மஹாபாரதம்/ ஹிதோபதேசம்

எங்கே முதியோர் இல்லையோ அது சபையாகாது;

யார் தர்ம உபதேசம் செய்வதில்லையோ அவர்கள் மூத்தோர் அல்ல.

Xxx

10).ந ஹி மானுஷாத் ஸ்ரேஷ்டதரம் ஹி கிஞ்சித் – மஹாபாரதம்

மானுடப் பிறவிக்கும் மேலானது எதுவுமில்லை.

ஒப்பிடுக: அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.

Xxx

11).ந ஹி சிம்ஹோ கஜாஸ்கந்தீ பயாத் கிரிகுஹாசய:

–ரகுவம்சம்

யானைமீது தாக்குதல் நடத்தவல்ல சிங்கமானது, யானைக்குப் பயந்து குகையில் அடைக்கலம் புகாது.

Xxx

12).நஹி அமூலா ப்ரசித்யதி – சு.ர.பா.

மூலகாரணமின்றி எதுவும் பிரபலமாகாது.

ஒப்பிடுக: நெருப்பின்றிப் புகையாது.

–சுபம்–

மனு ஸ்மிருதியில் மிருகங்கள்!

Heron_070067-717950

Research Article No.1771; Date:- 3 ஏப்ரல், 2015

Written by London swaminathan

Uploaded at London time – காலை 7-43

(இதை ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியிட்டு இருக்கிறேன்.)

 

மனு நீதி நூலைப் பற்றி இந்து விரோதிகளும் வெளிநாட்டினரும் நிறைய அவதூறுகளைப் பரப்பியதால்  அதிலுள்ள நிறைய நல்ல விஷயங்கள் உலகிற்குத் தெரியாமல் போய்விட்டன. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் வரை மனு நீதிக்குத் தமிழ்நாட்டிலும் நல்ல மதிப்பு இருந்தது. இது கல்வெட்டுகளில் இருந்தும், திருவிளையாடல் புராணம் போன்ற நூல்களில் இருந்தும் வள்ளலார் போன்றோர் எழுத்துக்களாலும் தெரியவருகிறது. சங்க காலத்தில் ஒரு சோழ மன்னனுக்கே மனுநீதிச் சோழன் என்ற பெயர் இருந்ததும் அவன் தேர்க்காலில் தனது மகனையே பலிகொடுத்ததையும் நாம் அறிவோம்.

மனு ஸ்மிருதியில் சில இடைச் செருகல்கள் உள. அவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் உலகிலேயே தலை சிறந்த நீதி நூல் இதுதான் என்பது புலப்படும். அவர் சொல்லவரும் விஷயங்களின் எண்ணிக்கையைப் பார்க்கையில் வியப்பு மேலிடும். திருலோக சீதாராம் என்னும் தமிழ் அன்பர் அழகிய தமிழில் மனு நீதியை மொழி பெயர்த்துள்ளார். அனைவரும் படித்து ஆராய வேண்டிய விஷயம் இது. எனினும் இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போவது மனு கையாண்ட சில உவமைகள் மட்டுமே.

cat

இந்துக்கள் இயற்கையின் நண்பர்கள். இயற்கையில் நிகழ்வனவற்றைக் கூர்ந்து கவனித்து அதைத் தகுந்த இடத்தில் உவமைகளாகப் பயன் படுத்தி, அரிய பெரிய உண்மைகளை மனதில் பசுமரத்தாணி போல பதியச் செய்கின்றனர். பாகவத புராணத்தில் தத்தாத்ரேயர் என்பவர் இயற்கையிடம் தாம் கற்றுக் கொண்ட விஷயங்களின் நீண்ட பட்டியலை நாம் முன்னரே பார்த்தோம். மஹாபாரதத்திலும் ராமாயணத்திலும் வரும் பறவை, மிருகங்களின் கதைகளும் உங்களுக்குத் தெரியும். உலகம் முழுவதும் மொழி பெயர்க்கப்பட்டுள்ள பஞ்சதந்திரக் கதைகளை இந்தியச் சிறுவர்கள் அனைவரும் அறிவர்.

மனுவும் தக்க இடங்களில் பிராணிகளைப் பயன்படுத்தி அறிவுரை வழங்குகிறார். மனுவுக்கு மிகவும் பிடித்தது கொக்கு. இதற்கு அடுத்த படியாக அவர் அதிகம் பயன்படுத்துவது பூனை! கொக்கும் பூனையும் தந்திரத்தால் இரை தேடுகின்றன.

கொக்கின் குணத்தை நல்லதுக்கும் கெட்டதுக்கும் உவமையாக்குகிறார். சில பிராமணர்கள் ருத்ராக்ஷப் பூனை போலவும், காத்திருக்கும் கொக்கு போலவும் கபடதாரிகள். அவருக்குத் தண்ணீர் கூடக் கொடுக்கக்கூடாது என்று எச்சரிக்கிறார். இது நாலாவது அத்தியாயத்தில் வருகிறது.

LionAttack

ஏழாவது அதிகாரத்தில் மன்னனின் குணநலன்கள் பற்றிச் சொல்லுகையில் அவன் கொக்கு போல காத்திருந்து காலம் கருதி இடத்தாற் செயின் வெற்றி கிட்டும் என்கிறார். இதையே பிற்காலத்தில் அவ்வையாரும் வள்ளுவரும் வாக்குண்டாம், திருக்குறள் ஆகியவற்றில் பயன்படுத்தினர். மனு என்பவர் ரிக்வேத காலத்தில் (கி.மு.1700-க்கும் முன்னதாக) வாழ்ந்தவர். இன்றைய மனு நீதி நூல் 2300 ஆண்டுக்கு (கி.மு.3-ஆம் நூற்றாண்டு) முந்தையது என்று அறிஞர்கள் பகருவர்.

ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்

வாடி இருக்குமாம் கொக்கு – வாக்குண்டாம்

என்று அவ்வையாரும் மனு சொன்னதையே சொல்கிறார்

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த விடத்து – குறள் 490

என்று வள்ளுவரும் மனு சொன்னதையே சொல்கிறார்

 

4-30, 4-192, 4–196/7, 5-14, 7-106, 11-136, 12-66 (மனுவில் குறைந்தது எட்டு இடங்களில் கொக்கு வருகிறது)

bee_with_flower

ஆமையோ ஆமை!

மனு பயன் படுத்திய ஆமை உவமை, பகவத் கீதையிலும் திருக்குறளிலும் உள்ளது. மன்னன் தனது ரஹசியங்களையும் துறைகளையும் ஆமை தனது உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்து பாதுகாப்பது போலக் காக்க வேண்டும் என்கிறார் மனு (7—105). புலன் அடக்கம் பற்றிச் சொல்லுகையில்  குறளும் கீதையும் ஆமை பற்றிப் பேசும்.

ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்புடைத்து – குறள் 126,

கீதை 2-58, மனு 7-105, திவ்விய பிரபந்தம் 2360.

ஏழாம் அத்தியாயத்தில், எதிரிகளை அழிக்க, ஒரு அரசன் ,”கொக்கு போல திட்டம் தீட்டவும், சிங்கம் போல தாக்கவும், ஓநாய் போல பாயவும்,தோல்வி வரும்பட்சத்தில் முயல் போலப் பின்வாங்கவும் வேண்டும் என்கிறார்.

வரிவிதிப்பு பற்றிச் சொல்லுகையில் மக்களுக்கு மிதமாக வரி விதிக்க வேண்டும். அது தேனீயானது மலர்களில் இருந்து தேனை எடுப்பது போலவும், அட்டையானது பிராணிகளிடத்தில் இருந்து ரத்தம் எடுப்பது போலவும், கன்றானது தனது தாயாரிமிருந்து பால் குடிப்பது போலவும் இருக்க வேண்டும் என்பார்.

survive-wolf-attack

புலித்தோல், மான் தோல் முதலியவற்றை தியானத்துக்குப் பயன்படுத்துவது பற்றியும் சொல்கிறார். வேறு பல இடங்களில் நிறைய மிருகங்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஆனால் அவைகள் உவமை அல்ல.

மனு நீதி சாத்திரத்தைப் படித்துப் பயன்பெறுக.