வேதத்தில் தவளை அதிசயம் – பகுதி 2 (Post No.10,343)

EGYPTIAN FROG GODDESS HEQET OR HEKET= HINDU SHAKTI 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,343

Date uploaded in London – –   16 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

“மர்மத் தவளைகள் ; ரிக், அதர்வ வேதம் தரும் அதிசயத் தகவல்கள்” (Post.10,337) -என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் இரண்டாவது பகுதி இது.

ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் இதுவரை நான் 5 அதிசயங்களைக் கண்டுள்ளேன். அதர்வண வேதம் முழுதும் மாய , மந்திர, இந்திர ஜால (Magic) வித்தைச் செய்திகளாக உள்ளன. யஜுர் வேதத்திலும் மேலும் அதிசயச் செய்திகள் உள்ளன. ஆகவே தவளைகள் பற்றி மேலும் அதிசயச் செய்திகள் கிடை க்கலாம் .

இதுவரை நாம் கண்ட அதிசயங்கள் 4; அவையாவன

1. ரிக் வேதத்தில் வசிஷ்டர் பாடிய நகைச் சுவை மிகுந்த தவளைப் பாட்டு (RV 7-103). இதை அப்படியே கிரேக்க நாடக ஆசிரியர் அரிஸ்டோபனீஸ் காப்பி அடித்து கிரேக்க மொழியில் ஒரு நாடகம் செய்தார். இது உலக அறிஞர்கள் அனைவருக்கும் தெரிந்த செய்தி ; கம்பனும் இதே பாணியில் தவளை பற்றிப்   பாடினான்  (எனது முந்தைய கட்டுரைகளில் காண்க).

இரண்டாவது அதிசயம்- ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் தகனக் கிரியைப் பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடலில் சடலத்தை எரித்த பின்னர் அங்கே பெண் தவளை ஒன்றை வைக்க வேண்டும் என்பதாகும் .

மூன்றாவது அதிசயம் – அதர்வண வேதத்தில்  இருக்கிறது; சிவப்பு -நீல நிற நூலைக் கட்டி தங்கத்துடனும் ‘அவகா’ என்ற நீர்த் தாவரத்துடனும் கால் வாய் திறப்பு விழாவில் ஒரு தவளையை விட  வேண்டும்  என்று சொல்லி இருப்பதைக் கண்டோம்..

நாலாவது அதிசயம் — அதர்வண வேதத்தில் கண்வக்கா , கைமுக்கா , தஹூரி என்றெல்லாம் தவளைக்குப் பெயர் சூட்டும் மந்திரம் உள்ளது. இதை வெள்ளைக்காரர்கள் , ஒலி நயம் காரணமாக ரிஷிகள் பாடி மகிழ்ந்தனர் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டனர். ஆனால் நான் அது தவறு என்பதை அலிகி , விளிகி பாம்பு விஷயங்களைக் காட்டி விளக்கினேன்.

XXXX

GREEK GODDESS HECATE= HINDU SHAKTI 

இப்போது புதிய அதிசயத்துக்கு வருவோம்.

ஐந்தாவது அதிசயம்

மொழி இயல் (Linguistic researchers) பற்றி ஆராய்வோருக்கு சில விஷயங்கள் கண்களில் ‘சட்’டென்று பட்டு விடும்

ரிக் வேதத்தில் ‘ஸபா’ என்ற சொல் உள்ளது. அதை ‘அவை’ என்று மாற்றி தமிழர்கள் இன்றும் பயன்படுத்துகின்றனர். லோக் ஸபா, ராஜ்ய ஸபா என்பன தெயாத இந்தியர்கள் இருக்க முடியாது. அங்கே ‘ப’ என்பது தமிழில் ‘வ’ என்று மாறுகிறது. இன்றும் நாம் ‘பெங்கால்’ என்பதை ‘வங்கம்’ என்கிறோம் . இந்த மாற்றங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நடந்து இருக்கிறது!

இதே போல நாம் ‘ச’ என்று சொன்னால் கிரேக்க பாரசீக மொழிகளில் ‘ச’ கிடையாது; அதை அவர்கள் ‘ஹ’ என்பர். இதனால்தான் சிந்து நதிக்கரையில்’ அதற்கு அப்பாலும் வசித்த நம் எல்லோரையும் அவர்கள் ‘ஹி’ந்துக்கள் என்று எழுதிவிட்டனர் .

இந்துக்கள் ‘சக்தி’ என்றால் அவர்கள் ‘ஹக்தி’ என்பார்கள் . இதே பெயரில் எகிப்திலும் , கிரேக்க நாட்டிலும் சில தெய்வங்கள் உள்ளன. அவற்றில் கிரேக்க நாட்டு ‘ஹெகதி’க்கு நாம் ‘சக்தி’ பற்றி சொல்லிய வருணனைகள் பொருந்துகின்றன.

எகிப்து நாட்டில் ‘ஹெகதி’ Heqet, Heket என்ற தேவதைக்கு தவளை உருவம் கற்பித்துள்ளனர். அவளை குழந்தை பிறப்பதில் உதவவும் தேவதையாகவும் மகப்பேறு மருத்துவச்சி என்றும் பழைய எகிப்திய நூல்கள் வருணிக்கின்றன.

இப்போது நாம் பழைய விஷயங்களை ஒப்பிடுவோம் . சுடுகாட்டில் ஏன் இந்துக்கள், பெண் தவளையை வைத்தனர்? கால்வாயில் ஏன் இந்துக்கள் நீர்  தாவரத்துடன் தவளையை விட்டு திறப்பு விழா நடத்தினர்?

இதற்கு விடை: மறு பிறப்பு, மறு மலர்ச்சி,  (Rebirth, Reincarnation, Resurgence) புத்தெழுச்சி ஆகும் அதாவது தவளை முட்டையாக தோன்றி மீன் போல உருமாறி (தலைப் பிரட்டை Tadpole) நான்கு கால் தவளையாக உருமாறுகிறது. இது மறு பிறப்பைக் குறிக்கும். அது மட்டுமல்ல தவளைக்குள்ள அபூர்வ குணம் நீரிலும் வசிக்கும், நிலத்திலும் வசிக்கும். (Amphibian) கல்லுக்குள் தேரையாகவும் வசிக்கும் .அத்தோடு இந்துக்கள் நீர்த் தாவரத்தையும் கால்வாயில் விட்டனர். அந்த ‘அவகா’ தாவரத்தை இன்று லண்டன் முதலிய இடங்களில் அக்வேரியம் aquarium எனப்படும் மீன் காட்சி சாலைகளில் தண்ணீர் தொட்டிக்குள் காணலாம். இதன் அபூர்வ குணம் தண்ணீருக்குள் வளர்ந்து அதை சுத்தப்படுத்தும் . இதை அறிந்த வேத கால ரிஷிகள் இதையும் சேர்த்து கால்வாயில் விடச் சொன்னார்கள்.

தவளையின் இனப்பெருக்கத்தையும் (fertility) , அதன் உரு மாற்ற (Metamorphosis) குணத்தையும் கண்ட எகிப்தியர் இந்துக் கடவுளுக்கான ‘சக்தி’க்கு தவளை உருவத்தைக் கொடுத்து அதை ‘ஹெகதி’ (சக்தி என்றனர்)

இப்போதும் மேற்கு வங்கம் பீஹார் போன்ற இடங்களில் இந்துக்கள் ‘ஷஷ்டி’ Shasthi என்ற தேவதையாக வணங்கி வருகின்றனர். காலப்போக்கில் சஷ்டியில் (ஆறு என்பதன் சம்ஸ்கிருதம்) முருகன் வழிபாடு இருப்பதாலும், முருகனை 6 கிருத்திகைப் பெண்கள் வள ர்த்தத்தாலும் அதை ஸ்கந்தனுடனும் தொடர்பு படுத்தினர்.

தவளை உருமாற்றம் செய்வது போலவே இந்து தெய்வங்கள் உருமாற்றம் அடைவதையும் காணலாம் (Metamorphosis of Hindu Gods) . ஒரே பார்வதி தேவியை – ஒரே சக்தி அன்னையை- மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு பெயரில் அழைப்பதைக் காணலாம் – 51 சக்தி பீடங்களின் தேவி பெயர்களின் பட்டியலைப் பார்த்தால் இது உங்களுக்குத் புரியும். அத்தோடு local லோக்கல் கதைகளை இணைத்து தலபுராணமும் சொல்லுவார்கள். “கடவுள் ஒருவரே; அவரை பல குணங்களில் ,  பல ரூபங்களில் வணங்கலாம்”– என்பது இந்துக்கள் உலகிற்குக் கற்பித்த  பாடம்.

இந்துக் கடவுளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றோர், அதற்கு மொழி மாற்றம் காரணமாக புதிய உச்சகரிப்பை – புதிய  நாமத்தை — புதிய கதைகளை உருவாக்கி லோக்கல்/ உள்ளூர்  மக்களை கவர்கின்றனர் .

இதுதான் சக்தி – ஷஷ்டி ஆகி கிரேக்க நாட்டில் ஹெகதி ஆகிக் – எகிப்தில் தவளை ரூபா ஹெக்தி ஆக உரு மாறிய கதை.

அதர்வண வேத மந்திரம் ஒவ்வொன்றும் அற்புத விஷயங்களைச் சொல்கிறது. நம்முடைய முதல் கடமை வேதம் படித்தவர்களைப் பார்த்தால் அவர்கள் காலில் விழுந்து, தயவு செய்து இதை ஒலி மாறாமல் சொல்லி வாருங்கள்; நாங்கள் பிற் காலத்தில் அர்த்தம் சொல்கிறோம் என்று சொல்ல வேண்டும்!!

இன்று காலை நான் படித்த அதர்வண வேத ஐந்தாவது காண்டத்தின் முன்னுரையிலேயே, இதிலுள்ள 30 பாடல்களுக்கும் சாயனர் உரை  எழுதவில்லை என்று எழுதி இருக்கிறார்கள். 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாயனருக்கே அர்த்தம் புரியவில்லையா? ஆராய்ச்சிகளைத் தொடர்வோம் .

–subham–

TAGS- எகிப்து, தவளை, தேவதை, கிரேக்க, ஹெகதி , சக்தி , அதர்வண வேதம், அதிசயங்கள்

மனம் என்னும் மகோன்னத சக்தி பற்றிச் சொல்லும் லவணன் கதை! (Post.9698)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9698

Date uploaded in London – –  –7 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

யோக வாசிஷ்டம்

மனம் என்னும் மகோன்னத சக்தி பற்றிச் சொல்லும் லவணன் கதை!

ச.நாகராஜன்

வசிஷ்ட மஹரிஷி மனதின் மகோன்னத சக்தி பற்றி  ஸ்ரீ ராமருக்கு விவரிக்கலானார். அதை நன்கு அவர் புரிந்து கொள்ளும் பொருட்டு லவணன் என்ற மஹராஜனின் கதையைக் கூறலானார்.

      லவணன்  என்ற மஹராஜன் தன் தேசத்தைச் சிறப்பாக அரசாண்டு வந்தான். ஒரு நாள் அவன் அரசவையில் ஒரு மாயாஜால நிபுணன் வந்தான். அவன் தனது வித்தையைக் காட்ட அனுமதி கேட்டு அரசவையினர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அரசனை மனோவசியம் செய்தான். தனது கையிலிருந்த மயிலிறகுகள் கொண்ட மந்திரக் கோலை அவன் அசைத்தான். அவ்வளவு தான், அரசன் ஒரு ஆழ்ந்த உறக்கநிலைக்குச் சென்றதை அனைவரும் பார்த்தனர். சிறிது நேரம் கழித்தது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்து திகைப்புடன் எழுந்த மன்னன் என்ன நடந்தது என்பதை விளக்கினான்.

       மன்னனின் கீழ் பணியாற்றிய ஒரு படைத்தலைவன்  அவனுக்கு ஒரு அழகிய குதிரையைப் பரிசாகத் தந்தான். அதன் மீது மன்னன் ஏறி அமர, அது வாயு வேகம் மனோவேகமாகப் பறக்கலாயிற்று. அது வேகமாக ஓடி ஒரு அடர்ந்த வனப்பகுதியை அடைந்தது. மன்னன் குதிரையின் வேகத்தைக் கண்டு தாள முடியாமல் அதனிடமிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டுமென்று நினைத்தான். குதிரை ஒரு மரக்கிளையின் வழியே ஓடும் போது மரக்கிளையைப் பிடித்துக் கொண்ட அரசன் குதிரை வெகு தூரம் ஓடிய பிறகு கீழே குதித்தான். அவன் காட்டில் அங்குமிங்கும் சுற்றி அலைந்தான். ஒரே தாகம், பசி.

     என்ன செய்வதென்று தெரியாத நிலையில் ஒரு சண்டாளப் பெண்மணி அருகில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தன் தந்தைக்காக உணவு எடுத்துச் செல்வதைக் கண்டான். அவளிடம் சென்று உணவில் ஒரு பகுதியைத் தருமாறு கேட்டான். அவளோ ஒரு நிபந்தனை விதித்தாள். தன்னை அவன் மணம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டால் மட்டுமே தன்னால் உணவு தர முடியும் என்று அவள் சொன்னாள். அரசன் அதற்கு இணங்கினான். அரசனுக்கு உணவு வழங்கிய அந்தப் பெண்மணி அவனைத் தன்னுடன் தந்தை இருக்குமிடம் அழைத்துச் சென்றாள். தந்தை சம்மதம் தர அவனை மணந்தாள்.

       சண்டாளர்கள் வசிக்கும் இடத்திற்குச் சென்ற அரசன் அவர்கள் வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டி இருந்தது. மாமிசம் முதலிய அவர்களது உணவுப் பழக்கங்களையும் பின்பற்ற வேண்டியதாயிற்று. காலக் கிரமத்தில அந்தப் பெண் முதலில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். பின்னர் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். குடும்பம் பெரிதானது. அரசனுக்கு வயது கூடிக் கொண்டே போனது. 

      ஒரு சமயம் அந்தப் பகுதியில் பெரிய பஞ்சம் வந்து அனைவரையும் வாட்டியது.எவ்வளவோ கஷ்டப்பட்டு பார்த்தும் அவனால் தன் குடும்பத்தைப் பராமரிக்க முடியவில்லை. அவர்களைப் பராமரிக்க முடியாமல் போனதால் அவன் எரியும் நெருப்பில் குதித்து உயிரை விட்டான்.

     இந்தக் கணத்தில் திடீரென்று லவணனுக்குச் சுய உணர்வு வந்தது. அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எப்படி இது சாத்தியம் என்று எண்ணலானான். உடனே தான் கனவில் கண்ட வனாந்திரப் பகுதிக்கு நிஜமாகவே சென்றான். அப்படி ஒரு பகுதி அவன் கனவில் கண்டது போலவே இருந்ததை ஆச்சரியத்துடன் அவன் பார்த்தான். தான் கனவில் கண்டபடியே பொருள்களும், இதர அம்சங்களும் இருந்தன. அத்துடன் மட்டுமல்லாமல் தனது மாமனார் மாமியாரையும் அவன் பார்த்தான். மிக கோரமாக இருந்த அவர்களையும் அவலட்சணம் பிடித்த அவர்களது மகளையும் அவன் பார்த்தான். அவளைத் தான் தனது பசியைத் தணிக்க வேண்டி அவன் மணம் புரிந்து கொண்டிருந்தான்.

     கதையில் வரும் சம்பவங்களைச் சில நிமிடங்களிலேயே அனுபவித்து விட்டான் லவணன். ஆனால் அவையோ கனவு கண்ட சமயத்தில் நெடுங்காலம் நடந்தவை.

     கதையைக் கூறி முடித்த வசிஷ்டர் இதன் தத்துவத்தை விளக்கலானார். மனம் என்பது மகோன்னத சக்தி கொண்ட ஒன்று. காலம், வெளி என்ற உண்மைகளுக்கு உட்பட்டு பல காலம் நடந்த சம்பவங்களை ஒரு சில நிமிடங்களிலேயே அரசன் அனுபவிக்க மனத்தின் அனுபவங்களே காரணம்.

      லவணன் ஒரு காலத்தில் அப்படிப்பட்ட வனப்பகுதிக்குச் சென்று அவர்களையோ அல்லது அவர்களைப் போன்று ஒத்து இருப்பவர்களையோ பார்த்தும் இருக்கலாம். கணப்பொழுதில் அவன் அவற்றை மறந்திருந்தாலும் மனப் பதிவுகள் அவனை விட்டு நீங்காமல் இருந்திருக்கும்.

     உலகம் என்னும் வனத்தில்  இரையாகும் மிருகங்கள் போல வலையில் சிக்கித் தடுமாறுபவை மனிதர்களின் மனங்களே. எவன் ஒருவன் இதை விசாரத்தினால் அறிந்து கொள்கிறானோ அவன், மேகம் விலகிய சூரியன் போல ஆன்மாவின் ஒளியைப் பெற்றவன் ஆகிறான்.

     அருமையான இந்தக் கதை யோக வாசிஷ்டத்தில் உத்பத்தி பிரகரணத்தில் இடம் பெறுகிறது

****

tags- மனம் , சக்தி, லவணன் கதை,

மந்திரங்களைத் தவறாக உச்சரித்தால் பாதிப்பு வருமா? (Post.8784)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8784

Date uploaded in London – – 7 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

5-10-2020 அன்று ஞானமயம் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் ((Facebook.com/Gnanamayamஒளிபரப்பப்பட்ட கேள்வி – பதில்

மந்திரங்களைத் தவறாக உச்சரித்தால் பாதிப்பு வருமா?

ச.நாகராஜன்

QUESTION ASKED BY SENTHAMANGALAM GANESAN; THANKS

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

மந்திரங்களைத் தவறாக உச்சரித்தால் பாதிப்பு வருமா? என்ற கேள்வி வந்துள்ளது.

பதில் : தவறாக உச்சரிக்காமல் உரிய முறைப்படி ஓதினால் நிச்சயம் அதற்குரிய பலன் முழுமையாகக் கிடைக்கும் என்பது தான்.

விளக்கத்தைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மந்திரம் என்றால் என்ன?

மனனாத் த்ராயதே இதி மந்த்ர: மனத்தினால் மீண்டும் மீண்டும் சொல்லி அதாவது ஜபித்து உய்வைப் பெறுகின்ற ஒன்றே மந்திரம் ஆகும்.

சில மந்திரங்கள் பிரார்த்தனை மந்திரங்கள். சில பலன்களை எதிர்பார்த்து ஓதப்படும் மந்திரங்கள்.

இவற்றை குரு மூலமாகக் கற்று ஓதுவதே சிறப்பாகும்.

ஒவ்வொரு  மந்திரத்திற்கும் ஆறு பகுதிகள் உண்டு.

  1. மஹரிஷி – குறிப்பிட்ட ஒரு மந்திரத்தைக் கண்டவர்.
  2. ஸ்வரம் – அந்த மந்திரத்திற்கான குறிப்பிட்ட உச்சரிப்பு அல்லது இசை அமைப்பு
  3. தேவதா – அந்த மந்திரத்தின் அதி தேவதை
  4. பீஜம் – மந்திரத்தின் வித்து போன்ற ஜீவ ஒலி.
  5. சக்தி – மந்திரத்திற்கான திவ்ய சக்தி
  • கீலகம் – கீலகம் என்றால் தூண் என்று பொருள்படும். அதை ஓதுபவர் இடைவிடாது முயன்று மந்திரத்தை அப்யசிப்பதை இது குறிக்கிறது.

இவை அனைத்தையும் அறிந்தவரே குரு. குறிப்பிட்ட மந்திரத்தை அப்யசித்து சித்தி பெற்று, உரிய சீடர்களுக்கு அவர் வழங்குவார்.

உச்சரிப்பு என்பது மிக முக்கியம். வேதங்களை ஓதுவதற்கென்று குறிப்பிட்ட மரபு, வரைமுறை உள்ளது.

உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம், தீர்க்க ஸ்வரிதம் ஆகிய இந்த நான்கும் உச்சரிப்பில் கையாளப்படுகின்றன.

உதாத்தம் என்றால் சாதாரண ஸ்வரத்தில் உச்சரிப்பதாகும்

அனுதாத்தம் என்றால் சாதாரண ஸ்வரத்திலிருந்து ஒரு  மாத்திரை இறக்கி உச்சரிக்க வேண்டும்.

ஸ்வரிதம் என்றால் சாதாரண ஸ்வரத்திலிருந்து ஒரு மாத்திரை ஏற்றி உச்சரிக்க வேண்டும்.

தீர்க்க ஸ்வரிதம் என்றால் சாதாரண ஸ்வரத்திலிருந்து இரண்டு மாத்திரைகள் ஏற்றி உச்சரிக்க வேண்டும்.

மந்திரத்தில் ஒலி அதாவது உச்சரிப்பு மிக முக்கியமானது என்பதை உணர்த்த யஜூர் வேதத்தில் வரும் ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

ஒரு சமயம் இந்திரனைக் கொல்ல எண்ணிய விருத்ராஸுரன் என்னும் அசுரன் தவம் செய்து இறைவனின் தரிசனத்தைப் பெற்றான்.

‘இந்த்ர சத்ரு வர்தஸ்வ’ என்று இந்திரனைக் கொல்ல வேண்டி அவன் கோரியது, ஸ்வர பேதத்தால் – அதாவது ஒலியை மாறுபட்டு உச்சரித்ததால் – இந்திரன் கொல்லும்படியான சத்ரு என்று ஆகியது; அவன் இந்திரனால் கொல்லப்பட்டான்.

இன்னும் ஒரு சம்பவம்.

தேவர்களை இல்லாமல் செய்வதற்காக பிரம்மனை நோக்கி கும்பகர்ணன் ஒரு பெரும் யாகம் செய்தான். பிரம்மா தரிசனம் தந்தார். அவரிடம் அவன் கேட்க நினைத்தது நிர்தேவத்வம் – அதாவது தேவர்கள் இல்லாத நிலை. ஆனால் அவன் கேட்டதோ நித்ராவத்வம். எப்போதும் தூங்குவது என்பதை! பிரம்மா அவன் கேட்டதைத் தந்தார்.பின்னர் அவன் வேண்டுதலின் பேரில் எப்போதும் தூங்காமல் ஆறு மாத தூக்கம், ஆறு மாத விழிப்பு என்ற நிலையைப் பெற்றான்.

ஆகவே சொல்லுக்கு சொல் தனித் தனியே பொருள் உண்டு.

ஓம் என்ற பிரணவ மந்திரத்தை 170 விதமாக உச்சரிக்க முடியும் என்று மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்னிபெஸண்ட் அம்மையாரோ இந்த பிரணவ மந்திரத்தை 250 விதமாக உச்சரிக்க முடியும் என்று கூறுகிறார். ஒவ்வொரு உச்சரிப்பிற்கும் பலன் வெவ்வேறாக இருக்கும். அதாவது அடையக் கூடிய சித்திகள் வேறு வேறாக இருக்கும்.

மந்திரத்தில் பிரதானமாக இருப்பது ஒலி. ஒலிக்குச் சக்தி உண்டு என்பதை க்ளாட்னி என்ற விஞ்ஞானி நிரூபித்திருக்கிறார்.

ஒரு தகட்டின் மீது நுண்ணிய  மணலைப் பரப்பி அதன் ஓரத்தில் வில் ஒன்றை இணைத்து வில்லை அதிரச் செய்வதன் மூலம் மணல் துகள்கள் அசைந்து அதிர்விற்கு ஏற்பப் பல்வேறு வடிவங்கள் உருவாவதை அவர் நிரூபித்துக் காட்டினார். இந்த வடிவங்களுக்கு க்ளாட்னி சித்திரங்கள் என்று பெயர். Chladni Patterns என்று  youtubeஇல் பதிவிட்டால் இவற்றை நீங்கள் பார்க்க முடியும்.

சரி அப்படியானால் மந்திரங்களை உச்சரிக்கவே முடியாதோ என்று யாரும் பயப்படத் தேவை இல்லை. இறைவன் திருமுன்னர் மனமும் நம் உணர்ச்சியுமே முக்கியம். எளிய உச்சரிப்பை யார் வேண்டுமானாலும் சுலபமாகச் சொல்ல முடியும். ராம, நமசிவாய, நாராயணா, ஹரே கிருஷ்ணா போன்றவற்றை யார் வேண்டுமானாலும் உச்சரிக்க முடியும்.

 மந்திரத்தை ஒருமுனைப்பட்ட மனதுடனும் ஈடுபாட்டுடனும், பக்தியுடனும் சொல்ல வேண்டும் என்று பெரியோர் சொல்கின்றனர்.

மந்திர ஹீனம் கிரியா ஹீனம் என்று ஆரம்பிக்கும் ஸ்லோகம் ஒன்றை பூஜை முடிவில் சொல்வது மரபு.

 அதாவது மந்திரத்தைத் தவறாக உச்சரித்தல், அல்லது பூஜை கிரியைகளில் சிலவற்றை விட்டு விட்டிருப்பது ஆகியவற்றை மன்னித்து எனது பிரார்த்தனையை ஏற்று அருள்க என ஒவ்வொரு பூஜையும் முடிவிலும் நாம் சொல்வது பாரம்பரிய மரபாகும்.

ஆகவே குரு மூலமாக மந்திரத்தை உச்சரிப்புடன் கற்று மனதை ஈடுபடுத்தி ஓதுவதால் நல்ல பலன் ஏற்படும் என்பது உறுதி. அதே சமயம், இறைவனது நாமங்களை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். அவையும் நலம் தரும் மந்திரங்களே என்று கூறி வாய்ப்பளித்த ஞானமயம் குழுவினருக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

நன்றி,வணக்கம்!

tags – மந்திரம், சக்தி, உச்சரிப்பு

பிரார்த்தனையால் பலன் உண்டா? (Post No 2714)

beemasingan5

Written by london swaminathan

Date: 11 April, 2016

 

Post No. 2714

 

Time uploaded in London :–  9-22 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

மொகலாய சக்ரவர்த்தி பாபரின் மகன் ஹுமாயுன் நோய்வாய்பட்டார்; படுத்தபடுக்கையாய்க் கிடந்தார். அரண்மனை வைத்தியர்கள் வந்து சிகிச்சை செய்தும் உடல் நலம் தேறவில்லை. அரசவை முதியோர்களைக் கலந்தாலோசித்தார். அவர்களில் சிலர், உங்களிடமிருக்கும் மிக உயர்ந்த பொருளை இறைவனுக்குக் காணிக்கையாக்கினால், உங்கள் மகன் உயிர் பிழைப்பார் என்றனர்.

 

உடனே பாபர் தனது கஜானாவிலுள்ள மிக உயர்ந்த பொருளை எடுத்து வா என்று நிதியமைச்சருக்கு உத்தரவிட்டார். அவர் ஒரு பெரிய பை நிறைய வைரக் கற்களைக் கொண்டுவந்து, அதில் மிகப்பெரிய , நன்கு பட்டைதீட்டப்பட்ட, ஜொலிக்கும் வைரத்தைக் காட்டி, இதுதான் மிக விலை உயர்ந்த பொருள் என்றார். (படத்தில் அதிகாரிகள் விலையுயர்ந்த பொருட்களைக் காட்டுவதைப் பார்க்கலாம்). அந்த வைரத்தை விட, தன்னுடைய உயிர் மதிப்புமிக்கதா? என்று கேட்டார். எல்லா அமைச்சர்களும், மன்னர் மன்னவா! அதில் சந்தேகம் என்ன? என்று பதிலிறுத்தார்கள்.

 

உடனே பாபர், ஒரு கம்பளத்தை விரித்தார்; முழந்தாளிட்டார். இறைவா! என்னுடைய இன்னுயிரை எடுத்துக் கொண்டு, என் மகனை உயிர் பிழைக்க வை என்று வேண்டினார். ஹுமாயூன் படுத்திருந்த படுக்கையை மூன்று முறை வலம் வந்தார். அவருடைய நோய் தனக்கு வந்துவிட்டது என்று பகிரங்கமாக அறிவித்தார்.

 

அவர் சொன்னபடியே பாபருக்கும் நோயும் வந்தது. அவர் சில நாட்களில் இறந்தும் போனார். அவருடைய மகன் ஹுமாயூன் உயிர்பிழைத்துக் கொண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.

 

எல்லா மதங்களிலும் பிரார்த்தனைக்கு மதிப்பு உண்டு. அதனால்தான் பிரார்த்தனைக்காகக் கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் என்று கட்டி வைத்திருக்கின்றனர்.

 

“நம்பினார் கெடுவதில்லை; இது நான்குமறைத் தீர்ப்பு” – என்று மஹா கவி பாரதி பாடியதும் இதை உறுதி செய்யும்.

-சுபம்-