ஒரு சந்தேகம்- அந்தணர் என்போர் யார்?- part 1 (Post No.7765)

tamilandvedas.com, swamiindology.blogspot.com

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7765

Date uploaded in London – 31 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சங்கத் தமிழ் இலக்கியத்திலும் திருக்குறளிலும் ‘அந்தணர்கள்’, ‘அறுதொழிலோர்’, ‘மறையவர்’,  ‘நான்மறையாளர்’, ‘வேதியர்’,’ பார்ப்பான்’, ‘ஐயர்’  ஆகிய சொற்களை புலவர்கள் பயன்படுத்தியுள்ளனர். சில அரைவேக்காடுகளும், அசத்துக்களும் திராவிடங்களும் மார்கசீயங்களும் , எனக்கு எழுதி வருகின்றன ; அவை என்ன எழுதின? “அந்தணர் என்றால் பிராமணர் இல்லையாமே” என்று.!

சங்கத் தமிழ் நூல்கள் பிராமணர்களைத்தான் குறிக்கின்றன என்று பழைய உரைகள் சொல்கின்றன. சில இடங்களில் அந்தணர் என்போர் துறவோருடன் ஒப்பிடப்படுகின்றனர். ஏனெனில் சந்யாசிகள் அனைவரும் அந்தணர்க்குச் சமம்.

ஏறத் தாழ 16 நூல்களும் 75-க்கும் மேலான இடங்களும் இருப்பதால் ஒவ்வொரு நூலுக்கும் ஓரிரு உதாரணங்களை மட்டும் தருகிறேன்.

திருக்குறளிலும் சங்கத் தமிழ் நூல்களிலும்  வரும் சில பல இடங்களைக் காண்போம் :-

அந்தணர் -தொல்காப்பியம் 1-102, 3-144-15, 615-2

திருமுருகு. 96

சிறுபா . 187, 204

பெரும்பா .315

மதுரை. – 656

குறி. – 225

பதிற்று. – 24-8, 64-5.

பரிபாடல்- 1-13, 40; 2-57, 68;3-14, 4-65, 5-22, 6-45, 11-78, 79, 14-28

பரி.திரட்டு- 1-20, 2-61

கலி .- 1-1, 36-25, 99-2, 119-12, 126-4,

புறம் . க.வா .-6, 2-22, 361-4, 397-20

நான் மணி. 35-1, 87-2,

இன்னா – 2-3,

இனி.நா .- 7-1, 23-2,

குறள் – 30-1, 543- 1.

ஆ .கோவை – 92-3

சிலப் . – 13-141, 15-70, 16-71, 22-8, 23-70, 26-102, 28-222.

மணி .- 5-43, 133, 6- 169, 13-25, 40, 46, 96, 100, 102.

முத்தொ ள் . – 43-1, களவியல் 1-2.

அந்தணர் பள்ளி – மது.474

அந்தணர் வெறுக்கை- திருமுருகு .263.

அந்தணரது – புறம்.122-3

அந்தணன் – பரி.11-7, கலி. 38-1, 69-5, 72-18, அகம்.க.வா . 15, புறம் .200-13, 201-7, குறள் .8-1, சிலப் .15-20, மணி.11-84, 13-27, 70, 15-64

அந்தணன் எரி வலம் செய்வான் – கலி .69-5

அந்தணாளர் – தொல்காப்பியம் .3-617-1, 627-1, புறம் 362-8

அந்தணாளன்- புறம் 126-11, மணி .22-115

அந்தணிர் – ஐங்.-384-1, 387-2, கலி .9-4, மணி. 13-56

Xxx

முதலில் உலகம் போற்றும் திருக்குறளை எடுத்துக் கொள்வோம்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது  மன்னவன் கோல் – 543

“அந்தணர்க்கு உரித்தாகிய வேதமும், அவ்வேதத்தில் சொல்லப்பட்ட அறமும், ஆகிய இரண்டும் நிலைபெறுதற்கு அரசனால் செலுத்தப்படுகின்ற செங்கோல் காரணமாகும்” .

— ஏ . அரங்கநாத முதலியார், 1933

‘ஆதி’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையும் கவனிக்கவும்.

xxx

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்

காவலன் காவான் எனின் – 560

“நாட்டைக் காக்க வேண்டிய அரசன் நீதி முறைப்படி நாட்டைக் காக்கத் தவறிவிட்டால் பசுக்களும் பால் தராது; அந்தணர்களும் மறை நூலை மறந்து விடுவர் .

சென்ற குறளின் கருத்துதான். இதில் ‘அறுதொழிலோர்’ என்ற மனுவின் வாசகத்தையும் (Manu 1-88), ‘கோப்ராஹ்மண’ஸ்ய சுபமஸ்து நித்யம் (ஆ+அறுதொழிலோர்) என்ற கருத்தையும் காணலாம். இதை “வாழ்க அந்தணர், வானவர் ஆனினம்” என்ற தேவாரப்பாடலிலும் காணலாம் .

அத்யாபநமத்யயநம் யஜநம் யாஜநம் ததா²

தா³நம் ப்ரதிக்³ரஹம் சைவ ப்³ராஹ்மணாநாமகல்பயத் Manu 1-88

अध्यापनमध्ययनं यजनं याजनं तथा ।

दानं प्रतिग्रहं चैव ब्राह्मणानामकल्पयत् Manu 1-88

Hints for further research

ஆராய்ச்சியாளர்க்கு —

இக்கருத்துவரும் பிற இடங்கள் – ராஜ தரங்கிணி , பஞ்ச தந்திரம், யாக்ஞ வாக்ய ஸ்ம்ருதி.

வால்மீகி ராமாயணம் – 3-24-21, 1-26-5, 4-17-36, 1-25-15

‘பயஸ்= பால்’ என்பது ஸம்ஸ்க்ருதச் சொல் என்பதையும் கவனிக்கவும்

‘நூல்’ என்றாலேயே வேதம்தான் என்ற கருத்தை கிறிஸ்தவர்களும் நம்மிடமிருந்து திருடிக் கொண்டார்கள். அவர்கள் ஸம்ப்ரதாயத்திலும் “நூல் =பைபிள்=விவிலிய=பிப்லியோ = புஸ்தகம்”தான்.

xxxx

அந்தணர் என்போர் அறவோர் மற்றெ வ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழு கலான் – குறள் 30

“எல்லா உயிர்களிடத்திலும் அருள் காட்டுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவார்” . அதாவது யார் யார் எல்லாம் அருள் மழை பொழிகிறார்களோ அவர்கள் எல்லோரும் அந்தணர். இது பொதுப்படையான வாசகம் என்றாலும் தம்மபதம் 393, 294 ஸ்லோகங்களில் புத்தர் இதை ப்ராஹ்மண ஜாதியின் இலக்கணத்தைக் குறிப்பிடுகையில் பயன்படுத்துகிறார் இந்தக் கருத்து சதபத பிராமண நூலிலும் உளது.

இந்தக் கருத்தை பிற்காலத்தில் நரசிம்ம மேத்தா ‘வைஷ்ணவ ஜனதோ’  பாடலில் பயன்படுத்துகிறார். அதை மஹாத்மா காந்தி பாடிப்பாடி மகிழ்ந்தார்.

சுவாமி விவேகானந்தர் ‘யார் ஹிந்து’ என்ற பிரசங்கத்தில் இதே பணியில் பேசினார்

xxx

எட்டாவது குறளில் “அறவாழி அந்தணன்” என்ற சொல் வருகிறது. இது விஷ்ணு சஹஸ்ர நாமச் சொல். அது விஷ்ணுவை ‘ப்ராஹ்மணன்’ என்றும் ‘பிராஹ்மணப் பிரியன்’ என்றும் போற்றும். அதாவது நீயே பிரம்மம்; உன்னை நாடுவோர் அனைவரும் பிராமணர்கள்; அவர்கள் எல்லோரும் உன் அருள் மழையில் நனைவர் ; அன்பிற்குப் பாத்திரமாவர் என்பது பொருள்.

ஆழ்வார்களும் கிருஷ்ண பரமாத்மாவை இப்படிப் புகழ்வர்-

“அறவனை ஆழி ப்படை அந்தணனை” — என்று திவ்யப் பிரபந்தத்தில் படிக்கிறோம். புத்தரைக் குறிக்கும் என்றும் சிலர் செப்புவர் . அதுமட்டும் அல்ல. அதே குறளில் வரும் “பிறவாழி நீந்தல்” – என்பது வள்ளுவன் ‘பக்கா ஹிந்து’ என்பதைக் காட்டும். ஏனெனில் ‘சம்சார சாகரம் = பிறப்பு -இறப்பு என்ற கடல்’ (வாழ்க்கை) என்பது ஹிந்துக்கள் பல துதிகளில் சர்வ சாதரணமாய் பயன்படுத்தும் சொல். இதை செமிட்டிக் மதங்கள் (Semitic Religions) மூன்றிலும் காண முடியாது. ஏனெனில் இந்துக்களுக்கு கடல் பயணம், கடல் படை தாக்குதல் தெரிந்த அளவுக்கு வேறு யாருக்கும் தெரியாது.

அடுத்தபடியாக தமிழ் மக்களின் சிறப்பைக் கொடிகட்டிப் பறக்கவிடும் புறநாநூற்றைக் காண்போம்.

Tags –

அந்தணர் , யார், திருக்குறள் , கமிழ், இலக்கியம், சங்கத் தமிழ்

— to be continued………………………….

தமிழில் விநோத உவமைகள்: பெண்ணே! நீ லண்டன் போல அழகி!!

pen painting

தமிழில் விநோத உவமைகள்: பெண்ணே! நீ லண்டன் போல அழகி!!

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1404; தேதி 11 நவம்பர், 2014.

உலகப் புகழ் பெற்ற வடமொழிக் கவிஞன் காளிதாசனும், சங்க காலப் புலவர்கள் கபிலர், பரணர், நக்கீரர், மாமுலனார், ஓரம்போகியார், அம்மூவனார் போன்றோரும், பைபிளில் சில பகுதிகளை எழுதியவர்களும் சில விநோதமான உவமைகளைப் பயன்படுத்தினர். அழகிகளை — நகர்கள் சிற்றுர்கள், பேரூர்களின் அழகுக்கு ஒப்பிட்டுப் புகழ்ந்து பாடினர். இன்று நான் ஒரு அழகான சினிமா நடிகையின் அழகை — அவள் லண்டன் போல அழகானவள், மதுரை போல அழகானவள், ஸ்ரீரங்கம் போல அழகானவள் — என்று எழுதினால் என்னைப் பார்த்து நகைப்பர். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இதுவே ஒரு சிறப்பான உவமையாக கருதப்பட்டது.

இதோ சில உவமைகள்:
நற்றிணை 35, 253, 265, 350, 358, 367, 395
குறுந்தொகை 238, 258 ஐங்குறுநூறு 58, 175, 177 மற்றும் பல இடங்களிலும் காணப்படும் உவமைகளில், நற்றிணை என்னும் நூலில் இருந்து ஒரு சில மட்டும்:

துறைகெழு மரந்தை அன்ன இவள் நலம் (பாடல் 35, அம்மூவனார்)
(அவள் மரந்தை என்னும் ஊர் போல அழகானவள்)
பாரி பலவு உறு குன்றம் போல கவின் எய்திய ((பாடல் 253, கபிலர்)
( நீ பாரியின் பலா மரம் பழுக்கும் குன்று போல அழகி )
தேர் வண் விரா அன் இருப்பை அன்ன (பாடல் 350, பரணர்)
(கொடை வள்ளலான விராவன் உடைய இருப்பை போல அழகு)
பசும்பூண் வழுதி மருங்கை அன்ன (பாடல் 358, நக்கீரர்)
(பாண்டிய மன்னனின் மருங்கை என்னும் ஊர் போல அழகு வாய்ந்தவள்)
அம்மமூவன் என்பவர் ஒரு அழகியை, தொண்டி நகருக்கும் ஓரம் போகியார் மற்றொரு அழகியை சோழ நாட்டு ஆமூருக்கும் ஒப்பிடுவதை ஐங்குறு நூற்றில் படித்து ரசிக்கலாம்

நக்கீரர் பாடிய பாடல்களில் இந்த நகர=அழகி ஒப்புமை அதிகம் காணப்படும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசனும் இப்படிப் பாடுகிறான்:

ரகுவம்சத்தில் (11-52) ஒரு ‘’செக்ஸி’’ உவமை வருகிறது:
தசரத மன்னனுடைய படைகள் மிதிலா நகரத்தை அடைந்தன. அங்குள்ள தோட்டங்களையும் மரங்களையும் படைவீரர்கள் படுத்திய பாடு, அன்புமிக்க கணவன் தனது மனைவியை அன்போடு அணைத்துச் செய்யும் சேஷ்டைகள் போல இருந்தது.
இங்கே மிதிலை என்னும் நகரம் ஒரு பெண்ணுக்கு ஒப்பிடப்படுகிறது.

மற்றொரு இடத்தில் (14-12), “அயோத்தி என்னும் அழகிய நகரில் கார் அகில் புகை எழுந்தது ஒரு அழகான பெண் தன் கூந்தலில் நறுமணம் ஏற்ற அகில் புகையை எழுப்பியது போல இருந்தது என்பான். இது போல காளிதாசன் காவியங்கள் முழுதும் படித்து ரசிக்கலாம்.

காளிதானின் கவிதைகளைப் படித்து ரசித்த கபிலர் என்னும் புலவர் அதன் மூலமாகவே பிரஹத் தத்தன் என்ற வடக்கத்தியானுக்கு தமிழ் கற்பித்தார். அவன் தமிழைக் கிண்டல் செய்தான். அவனுக்கு காளிதாசன் எழுதிய கவிதை போலவே இயற்கை அழகு மிக்க குறிஞ்சிப் பாட்டை எழுதிக் காண்பித்து, அவனைத் தமிழால் மயக்கி அடிமைப் படுத்தினார். தமிழுக்கு அடிமையான ஆரிய அரசன் பிரஹத் தத்தன் தமிழில் கவிதை புனையும் ஆற்றலை எய்தி அழகியதோர் கவியும் புனைந்தான். அவனுக்கு தக்க பரிசில் கொடுக்க எண்ணிய தமிழர்கள் அவன் கவிதையையும் சங்க இலக்கியத்தில் சேர்த்தனர். என்னே தமிழனின் மாண்பு, பண்பு!!

Seattle_Skyline_2112
That actress is as beautiful as this city!

காளிதாசனின் மேகதூதம், ருது சம்ஹாரம் காவியங்களிலும், சாகுந்தலம் என்னும் நாடகத்திலும் இயற்கை அழகு மிகுதியாகக் காணப்படும்.

குறிஞ்சிப் பாட்டைப் படித்த தமிழ் ஆர்வலர் டாக்டர் ரெவரெண்ட் ஜி.யூ.போப், உடனே இது காளிதாசனின் செல்வாக்கில் வந்தது என்று எழுதினார். நான் காளிதாசன் பற்றி இதுவரை எழுத்திய பத்துக்கும் மேலான கட்டுரைகளில் காளிதாசன் கி.மு.முதல் நூற்றாண்டில் ‘’சகரர்’’களை ஓட ஓட விரட்டிய பேரரசன் விக்ரமாத்தித்தன் காலத்தில் வாழ்ந்தவன் என்று காட்டியுள்ளேன். இதற்குக் காரணம் 200-க்கும் மேலான காளிதாசனின் உவமைகளை சங்கத் தமிழ் இலக்கியத்தில் காணமுடிகிறது.

ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்………

இந்துக்கள் அடிக்கடி பயன்படுத்தும் மற்றொரு உவமை “எப்படி வானில் இருந்து விழும் தண்ணீர் ( நதிகள் ) கடலை அடைகிறதோ………………….. அப்படி நான் செய்யும் எல்லா வழிபாடுகளும் உன்னையே அடையட்டும்” – என்று வழிபடுவர். பிராமணர்கள் நாள்தோறும் மும்முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் கூட இம்மந்திர உவமை உண்டு.

இதைக் காளிதாசனிலும் சங்கப் புலவர் உவமைகளிலும் காண்கிறோம். இதிலிருந்து அறிவது என்ன?

1.உலகில் வேறு எங்கும் காணாத இவ்வுவமைகளை இந்திய இலக்கியங்களில் மட்டும் ஒரு சேரக் காணமுடிகிறது. இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை, ஒரே பண்பாடு, ஒரே அணுகு முறை உடையது இந்நாடு — ஆரிய—திராவிட வாதங்கள் என்பன எட்டுக்கட்டிய கட்டுக்கதைகள் ஆகும்.
2.காளிதாசன் போன்றோரின் இலக்கியங்களும் இப்படிப்பட்ட உவமைகளை தமிழிலும் எழுத உதவி இருக்கலாம்.
3.புவி இயல் உவமைகளைப் பயன்படுத்துவது இந்துக்களின் கடல், நதிகள் பற்றிய புவியியல் அறிவுக்குச் சான்று பகரும்.
4.கவுண்டின்யன், அகஸ்தியர், பிருகு ஆகியோர், ஆளுக்கு ஒரு திசையில் கடல் கடந்து சென்று, இந்தியப் பண்பாட்டைப் பரப்பியதை வரலாற்றுச் சான்றுகளின் வாயிலாக அறிகிறோம்.

gujarati

இதோ சில உவமைகள்:

புறநானூறு 42; மலைபடுகடாம் 51-53; பெரும் பாணாற்றுப்படை 427, புறப்பொருள் வெண்பாமாலை 11, கம்பராமாயணம்-கையடைப் படலம் முதலியவற்றில் இந்த ஆகாசாத் பதிதம் தோயம் – உவமை வருகிறது:-

மலையின் இழிந்து, மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
புலவரெல்லாம் நின் நோக்கினரே

சோழன் கிள்ளிவளவனை இடைக்காடன் என்ற புலவர் புகழ்கிறார்:–மலையிலிருந்து இறங்கி கடலை நோக்கிச் செல்லும் பல ஆறுகள் போலப் புலவர் எல்லோரும் உன்னை நாடியே வருகின்றனர்.

உருத்திரங்கண்ணனார் (ருத்ராக்ஷன்) என்னும் புலவர் தொண்டைமான் இளந்திரையனைப் பாடுகிறார்:

கல்வீழ் அருவி கடல் படர்ந்தாங்கு
பல்வேறு வகையின் பணிந்த மன்னர்
இமையவர் உறையும் சிமையச் செல்வரை
வெண் திரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப்
பொன் கொழித்திழிரும் போக்கரும் கங்கைப்
பெருநீர் போகும்………………… (427—432)

மலை அருவிகளில் விழும் நீர் (ஆறுகளாகப் பெருகி) எப்படி கடலை அடைகின்றனவோ அப்படி பல்வேறு மன்னர்களும் கட்டும் கப்பம் உன்னை அடைகிறது. இதற்கு அடுத்த வரியிலேயே நீண்ட இமய மலை, கங்கை ஆறு பற்றிப் பாடுகிறார். இதிலிருந்து வடக்கத்திய செல்வாக்கைக் காணலாம்.

இன்னொரு உதாரணம், இதை இன்னும் தெளிவாகக் காட்டும். தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் கிராமப் பெண் பற்றிப் பாடுகையிலும் கங்கை வெள்ளம் பற்றியே உவமை வருகிறது. ஆகவே காளிதாசனின் நூல்களைப் படித்தே இவர்கள் இப்படி உவமைகளைப் பயன்படுத்தினர் என்று கொள்ளலாம். இதோ அந்த உவமை:–

நற்றிணைப் புலவர் நல்வெள்ளையார் (369) கூறுகிறார்:
ஞெமை ஓங்கு உயர்வரை இமையத்து உச்சி
வா அன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும்

ஞெமை மரங்கள் வளர்ந்து ஓங்கிய இமய மலையின் உச்சியில் இருந்து அருவிகளாக விழுந்து கங்கை ஆறாகப் பெருகி கரைய உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளம் போல என் காம எண்ணம் என்னை அடித்துச் செல்கிறதே. இந்த காம வெள்ளத்தை நானெப்படிக் கடப்பேன்? – என்று தோழியிடம் சொல்லி வருத்தப்படுகிறாள் தலைவி.. இது காளிதாசன் பாடலின் எதிரொலி:

“உமை அம்மை — சிவன் என்னும் காதலனை எவ்வளவு விரும்பினாளோ அவவளவுக்கு — சிவனும் அவளைக் காதலித்தான். கங்கை நதி, எப்போதாவது கடலை விட்டு வேறு எங்காவது போகுமா? எப்போது பார்த்தாலும் தன் காதலனின் ரசத்தைச் ( சமுத்திரத்தை ) சுவைத்துக் கொண்டிருக்கிறதன்றோ!!” ( காளிதாசனின் குமார சம்பவம் 8-16)

most-beautiful-cities-101
This city is as beautiful as that woman!

இதைப் படிக்கும்போது யார் யாரைக் ‘’காப்பி’’ அடித்தனர் என்னும் குட்டு வெளிப்பட்டு விடுகிறது. காளிதாசன் பாடலைப் படிக்காமல் மதுரை ஓலைக்கடையத்து நல்வெள்ளையார் கங்கை பற்றிப் பாடி இருக்கமுடியாது. கங்கை – காம வெள்ளம் என்றெல்லாம்—ஒரு தமிழ்ப் பெண்ணின் மீது ஏற்றிப்பாடுவது தன்னிச்சையாக நடந்ததல்ல. காளிதாச னின் செல்வாக்கே!! இது போல ஒன்றல்ல, இரண்டல்ல. காளிதாசனின் 200 வகை உவமைகள் ஏறத்தாழ ஆயிரம் இடங்களுக்கு மேல் சங்கத் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன!! காளிதாசனோவெனில் உலகில் உவமைகளைப் பயன்படுத்துவதில் முதல்நிலை வகிப்பவன். ‘’கழுதை விஷ்டை (விட்டை) கை நிறைய’’ — என்பதல்லாமல் தரமான 1000 உவமைகளை இடத்திற்குத் தக பொருத்திய மாமேதை அவன்.

இந்தியாவில் யாராவது காளிதாசனைப் படிக்காமல் எழுதத் துவங்கினால் அவர்கள் ஆங்கிலத்தைப் படித்து பட்டம் வாங்கி விட்டு ஷேக்ஸ்பியர் யார்? என்று கேட்பதை ஒக்கும். தமிழில் பட்டம் வாங்கிவிட்டு கம்பன் யார்? என்று கேட்பதற்குக் சமம்.

இனி ஆகாசாத் பதிதம் தோயம் – உவமையை காளிதாசன் பயன்படுத்தும் ஓரிரு இடங்களை மட்டும் காண்போம்:

மலைகளின் புதல்விகளான ஆறுகள் எப்படி கடல் எனும் காதலனை நோக்கி ( இயற்கையாகவே ) ஓடுகின்றனவோ அதே போல மகதம், கோசலம், கேகயம் ஆகிய மூன்று நாட்டுப் பெண்களும் தசரதன் எனும் வீரனை மணந்தனர். ஆறுகள், மாபெரும் கடலை நோக்கித்தானே ஓடும்? (ரகு வம்சம் 9—17)
இந்திய இலக்கியங்கள் முழுதிலும் ஆறுகள் பெண்கள் என்றும் கடல் காதலன் என்றும் சித்தரிக்கப்படும்.

13-10-08_217_CONFLUENCE_OF_INDUS_RIVER_N
Akaasaath pathitham thoyam Ythaa gachchathi saagaram…………………..

கள்ளம் கபடமற்ற — பறவைகளால் வளர்க்கப்பட்ட — இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்த — சகுந்தலை என்னும் பெண்ணின் கதையான சாகுந்தலத்தில் மானுட உணர்ச்சிகள் அத்தனையையும் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுவான் காளிதாசன். இதனால் இந்த நாடகம் உலகின் தலை சிறந்த நாடகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதில் ஒரு வசனம்:

நீ உனக்குத் தகுதியான ஆளிடம்தான் உன் இதயத்தைக் கொடுத்து இருக்கிறாய்! அதிர்ஷ்டசாலிதான்!! உண்மைதான் ! பெருக்கடுத்து ஓடும் ஆறு கடலைத் தவிர வேறு எங்கு போக முடியும்? (சாகுந்தலம் 3-13)

இப்படி நூற்றுக் கணக்கான உவமைகளை ஒப்பிட்டுக் கட்டலாம். விரித்துரைப்பின் — கங்கை போலப் பெருகும் என்பதால் இத்தோடு நிறுத்துவன் யான்!

–சுபம்–

காளிதாசன் பற்றிய முந்தைய கட்டுரைகள்:

1.காளிதாசன் நாடகத்தில் வியத்தகு விண்வெளி விஞ்ஞானம் (13-9-2014)
2.நால்வகைப் படைகள்:மஹாபாரதம்- தமிழ் இலக்கிய ஒற்றுமை (13-8-2014)
3.தமிழனின் ஆறு பருவங்கள்: ஆரிய-திராவிட வாதத்துக்கு அடி (22-7-2014)
4.அரசனின் குண்நலன்கள்: கம்பனும் காளிதாசனும் (21-7-2014)
5.அன்னப் பறவை பற்றிய அதிசயச் செய்திகள் (7-7-2014)
6.ராவணந்-பாண்டியர் சமாதான உடன்படிக்கை (24-6-2014)
7.மாரி, பாரி, வாரி:காளி, கம்பன், கபிலன் (23-6-14)
8.ஆண்களே! நீங்கள் மலர் மேயும் வண்டுகளாமே! (18-6-2014)
9.கம்பனும் காளிதாசனும் சொன்ன அதிசயச் செய்திகள் (16-6-2014)
10.மூன்று புகழ்பெற்ற பிரிவுபசார உரைகள் (8-5-2014)
11.காளிதாசரின் நூதன உத்திகள்: தமிழ்லும் உண்டு
12.கடலில் மர்மத் தீ – பகுதி 2
13.சங்கத் தமிழ் இலக்கியத்தில் காளிதாசனின் உவமைகள் (29-1-2012)

My earlier posts on Kalidasa
1.Did Kalidasa fly an Airplane? 12 Sept. 2014
2.Sea in Kalidasa and Tamil Literature
3.Ganges in Kalidasa and Sangam Tamil Works
4.Gem Stones in Kalidasa and Tamil Literature
5.Bird Migration in Kalidasa and Tamil Literature
6.Kalidasa’s Age:Tamil Works confirm 1st Century BC
7.Ravana-Pandya Peace Treaty! Kalidasa solves a Tamil Puzzle (June 24, 2014)
8.Agastya in Jataka Tales and Kalidasa June 13, 2014.

contact swami_48@yahoo.com