சங்க இலக்கியத்தில் மர வழிபாடு -2 (Post No.10,618)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,618

Date uploaded in London – –    1 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சகத்வீபம் என்பது ஈரான் நாடா? சங்க இலக்கியத்தில் மர வழிபாடு -2

நேற்றைய கட்டுரையில், ஏழடுக்கிய பாலை பற்றி பரி பாடலிலும் காளிதாசனின் ரகு வம்சம் மற்றும் சாகுந்தலம் நாடகத்திலும் கண்டோம் .  அதே போல ஏழிலைகள் கொண்ட சிற்பங்களை கி.மு 900 அஸீரிய நாகரீகத்தில் கண்டோம். மூன்றிலும் புனிதத் தன்மை உளது.

இதோ மேலும் சில மரம் விஷயங்கள்

காளிதாசன் நூல்கள்

மேக தூதம் 25- கிராம சதுக்கத்தில் புனித அரச மரம்:_

காளிதாசன், மேகத்தை தனது காதலி இருக்கும் இடத்திற்கு தூது அனுப்புகையில் குறுக்கிடும் தசார்ணம் என்னும் நாடு பற்றி வருணிக்கிறான் . அங்கே தினமும் இல்லத்தரசிகள் வழங்கும் பலி உணவினை காக்கைகள் உண்டுவிட்டு பெரும் ஆரவாரத்துடன் கூடு கட்டும் காலம் இது. கூடுகள் கிராம சைத்யங்களில் இருக்கும்.

இதற்கு உரைகாரர்கள் எழுதிய பாஷ்யத்தில் மேடைகள் அமைக்கப்பட்ட மரங்களென்றும் ஆல் , அரசு முதலியவற்றைச் சுற்றி இப்படி மேடை அமைப்பர் என்றும் உள்ளது 

இதே பாட்டில் அன்னப் பறவைகள் மானஸ ஏரியை நோக்கிப் பறக்கும் காட்சியும் உள்ளது. பறவைகள் குடியேற்றம் பற்றிய கட்டுரையில் புறநானுற்றுப் புலவரும் இது பற்றிப் படியுள்ளதை முன்னரே எழுதியுள்ளேன் (புறம் 67)

xxx

ரகு வம்சம் 17-12  பல்வேறு மரம் செடி கொடிகளுடன் அபிஷேகம் :–

மன்னன் அரியாசனத்தில் அமர்ந்தபோது அறுகு , யவ தானிய முளை , ஆலம் பட்டை, இளம் தளிர் இவைகளை வைத்து ஆரத்தி எடுத்ததாகவும் உரைகாரர்கள் கூறுவார்கள்.

“புற்களில் அரசன் அருகம் புல் ; அது போல நீயும் சிறந்த அரசனாகுக” என்று பட்டமேற்கும் சம்ஸ்க்ருத மந்திரங்கள் கூறுகின்றன. ஆகவே பட்டமேற்கும் மன்னர்கள் அருகம்புல் மீது கால் வைத்த ஏறினார்கள் என்ற அரிய செய்தியை தொல்பொருட் துறை பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி ‘யாவரும் கேளிர்’ என்ற அவரது நூலில் கூறுகிறார்.  இது 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வழக்கம் என்பது காளிதாசன் மூலமாகவும் நமக்கு கிடைக்கிறது.

சாகுந்தலத்தில் சகுந்தலா எப்படியெல்லாம் மரங்களைப் போற்றி வளர்க்கிறாள் என்றும் காளிதாசன் காட்டுகிறான்

XXX

வட இந்தியா முழுதும் வட சாவித்திரி விரத த்தின்போது இன்றும் பெண்கள் ஆலமர வழிபாடு செய்கின்றனர்

சங்க இலக்கிய நூல்கள்

புற நானூறு 198- வ.வ . பேரி சாத்தன் — ஆலமரக் கடவுள்

புற நானூறு   199  – மகா பத்மன் – கடவுள் ஆலம்

“காமர் நெஞ்சம்  ஏமாந்து உவப்ப

ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம்

வேல் கெழு குருசில் “

பெரும்பதுமனார் பாடிய அடுத்த பாடலில் ,

“கடவுள் ஆலத்துத் தடவுசினைப் பல் பழம்

நெருநல் உண்டனம் என்னாது பின்னும்” …..

என்று பாடுகிறார்.

ஜல்லிக்கட்டுக்கு வரும் யாதவ குல இளைஞர்கள் ஆலம் , மரா மரங்களின் கீழ் உறையும் தெய்வத்தை வணங்கிவிட்டு வந்ததாக முல்லைக் கலி பாடிய நல்லுருத்திரனார் பாடுகிறார்

Xxxx

குறுந்தொகை 87- கபிலர் பாடியது  — மரத்திலுள்ள கடவுள் கொடியோருக்கு துன்பம் கொடு ப்பார்.

கபிலர் பாடிய குறுந்தொகைப் பாடலில்

“மன்ற மரா அத்த பே எ முதிர் கடவுள்

கொடியோர்த் தெறூ உ மென்ப யாவதும்

கொடியரல்ல ரெங்குன்று கெழு  நாடர்” — பாடல் 87

என்பார்

பொருள்-

பொது இடத்தில் மரத்தின் கண் தங்கும் அச்சம் ஊட்டும் கடவுள் கொடுமையுடையாரை  வருத்தும் என்று அறிந்தோர் கூறுவர்

கலித்தொகை 101-14/15 மற்றும் பரிபாடல் 8-65/68 வரிகளில் கடவுள் வசிக்கும் மரங்கள் வருவதைக் காணலாம்

அக நானூறு 70-  கடுவன் மள்ளனார் பாடல் – ஆல  மரத்தின் கீழ் அமர்ந்து இராம பிரான் ,வானர என்ஜினீயர்களுடன் கடல் மீது பிரிட்ஜ் கட்டுவது பற்றி ஆலோசனை.

xxx

நற்றிணை 83- மகாதேவன்பாடல்- கடவுள் முதுமரம்

நற்றிணையில் பெருந்தேவனார் பாடிய பாடலில் கூகையை நோக்கி ஒரு பெண் பாடுவதாக அமைந்துள்ளது. கடவுள் உறைகின்ற பருத்த மரத்தின் மீது இருக்கும் ஆந்தையே இரவில் குரல் எழுப்பி எல்லோரையும் எழுப்பிவிடாதே என்கிறாள் . இவ்வாறு கடவுள் வசிக்கும் மரம் என்ற கருத்து நெடுகிலும் காணப்படுகிறது .

சம்ஸ்க்ருத நூல்களிலும் இக்கருத்து உளது

இது தவிர நாணயங்களில் ‘மேடை அமைக்கப்பட்ட மரம்’   உள்ளது

சிற்பங்களிலும் மரங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. பகவத் கீதையில் 15-1ல் வரும் அஸ்வத்த/ அரச மரம் பற்றிய உவமை எல்லோரும் அறிந்ததே 99ஊர்த்வமூலம் அதஸ் சாகம………………..

இவற்றிலிருந்து நாம் அறிவது என்ன ? மரங்களில் கடவுள் உறைவர் ; அவர்கள் தீயோரைத் தண்டிப்பர் ; மரங்களில் உள்ள தெய்வங்கள் வணங்குதற்குரியர் என்ற கருத்துக்கள் காளிதாஸனிலும் சங்க இலக்கியத்திலும் காணக்கிடக்கிறது

–subham—

tags- சங்க இலக்கியத்தில், மர வழிபாடு,

நான்மறை பற்றி குழப்பம் வேண்டாம் (Post No.9715)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9715

Date uploaded in London – –10 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அண்மைக் காலமாக இந்து விரோதக் கும்பல்கள், தமிழ் இலக்கியத்தில் புகுந்து மக்களைக் குழப்பி வருகிறது. தமிழ் இலக்கியம் ஒரு பெரிய கடல் ; சம்ஸ்க்ருத இலக்கியமோ மஹா மஹா சமுத்திரம் ; இரண்டையும் நீந்திக் கரை சேர முடியாது. இதனால் ஏதோ ஒரு பாட்டை எங்கிருந்தோ எடுத்துக் காட்டி ஏதோ உண்மை போல பொய் யைச் சொல்லி விடுவார்கள்

நான்மறை என்றால் 4 வேதங்கள் என்று சங்க இலக்கியம் முழுதும் உளது.

சைவப் பெரியார்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர்,மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தேவாரம், திருவாசகம் என்னும் திருமுறைகளை நமக்கு அளித்தனர். அவர்கள் சொன்னது திருமுறை. வேத கால ரிஷிகள் சொன்னது திருமறை.

சில அசட்டுப் பிசட்டு அரைவேக்காடுகளும் , தத்துப் பித்து தான் தோன்றிகளும்  நால்வர் சொன்னதே நான் மறைகள்என்று உளறிக்கொட்டி கிளறி மூடிவருகின்றன.

நால்வரும் தோன்றி நான்மறை என்ற சொல் உருவாக அந்த நால்வரும் மறைந்த பின்னர் ஒரு சில நுற்றாண்டுகளாவது ஆகும். அது மட்டுமல்ல. சுந்தரர், மாணிக்க வாசகர் தோன்றுவதற்கு முன்னரே சம்பந்தர் நான் மறை என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். நால்வர் சொன்ன விஷயங்கள் நான் மறை கண்ட உண்மைகள் என்பதில் ஐயமில்லை ஆனால் அவர்கள் பாடலில் வரும் “நான்மறை” என்ற சொல் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களையே.குறிக்கின்றன. பழைய உரை காரர்களும்  அப்படியே உரை செய்துள்ளனர்.

இதோ சில சான்றுகள் –

திருஞான சம்பந்தரின் முதல் திருமுறையில் (தேவாரத்தில்)

மெய்ம்மொழி நான்மறை யோர் மிழலை”        – (திருப்புகலியும் திருவீழிமிழலையும் – 1)

  தளராத வாய்மைப்

    புந்தியி னான்மறை யோர்களேத்தும்

    புகலி நிலாவிய புண்ணியனே        1.4.5

நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி

        நான்மறை ஞானசம்பந்தன்”                             – (திருப்புகலியும் திருவீழிமிழலையும் – 11)

    நாமரு கேள்வியர் வேள்வியோவா

    நான்மறை யோர்வழி பாடுசெய்ய     1.6.4

·   வேதக்

கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்   1.10.9

  “நல்லுயர் நான்மறை நாவின் நற்றமிழ்

        ஞானசம்பந்தன்”                               – (திருவாழ்கொளிபுத்தூர் – 11)

·   “விண்ணவரேத்தும்,

        பாரணி திகழ்தரு நான்மறையாளர்”                      – (திருப்பாம்புரம் – 1)

இவ்வாறு சம்பந்தரும் அப்பரும் நூற்றுக்கணக்கான இடங்களில் மறை, ருக்கு வேதம், சாம வேதம், 4 வேதங்கள் என்று தெளிவாகப் பாடியுள்ளனர். ஆக தேவார, திருவாசக, திவ்வியப்பிரபந்தத்தில் வருவன ருக், யஜுர், சம அதர்வண வேதங்களே என்பதில் ஐயம் வேண்டாம்.

Xxx

சங்க இலக்கியத்தில் நான் மறை

நான்மறை -பரிபாடல் 9-12, புறம்.6-20, 362-9;

நான்மறை  முதல்வர் – புறம்.26-13, 93-7

நான்மறை முதுநூல் – அகம்.181-16

நான்மறையோர் – பட்டினப்பாலை 202

சிலப்பதிகாரம் 15-12, 23-68

நான்மறை மரபு- சிலப்பதிகாரம் 5-175, 28-191

நான்மறை மருங்கு-    சிலப்பதிகாரம் 28-176

நான்மறைக் கேள்வி -பரி .திரட்டு 8-8

நான்மறையந்தணர் – சிலம்பு 13-141, மணி 6-169

நான்மறையாளன் – சிலம்பு 28-137

நான்மறையாள- சிலம்பு 11-152; 27-54

நான்மறைமாக்கள் – மணி.13-99

நான்மறைமாக்காள்– மணி..13-69

நான்மறையாளர் – திரிகடுகம் 3-3; ஆசாரக்கோவை-61-1

Xxxx

சங்க இலக்கிய, சிலப்பதிகார உரைகாரர்களும் சம்ஸ்க்ருதத்தில் உள்ள நான்கு வேதங்களையே குறித்துள்ளனர்.

நான் கூறும் புதிய கருத்தோ, எனது கண்டுபிடிப்போ இல்லை; எனக்கு முன்னே பல ஸைவப் பெரியோர்களும் இந்தக் கருத்தைச் செப்பியுள்ளனர்.

ஆகவே நேற்று வந்த சுள்ளான்களை, கள்ள மதம் பரப்ப வந்தோர் என்று கருதி விலக்குக .

–subham—

tags- நான்மறை, குழப்பம் வேண்டாம், சங்க இலக்கியத்தில்

ஜாதி பேதமற்ற சங்க இலக்கியப் புலவர்களுள் நால்வர்! (Post No.4985)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 7 MAY 2018

 

Time uploaded in London –  6-51 AM   (British Summer Time)

 

Post No. 4985

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

ஜாதி பேதமற்ற சங்க இலக்கியப் புலவர்களுள் நால்வர்!

 

ச.நாகராஜன்

 

சங்க இலக்கியத்தில் ஜாதி பேதமே இல்லை என்பதைச் சுட்டிக் காட்ட நான்கு புலவர்களைப் பற்றிய சில குறிப்புகளை இங்கே காணலாம். உலகத்தார் அனைவரையும் ஒன்று படுத்தும் ஒரு பெரும் சக்தியாக தமிழ் விளங்குவதையும் உணரலாம்.

சங்க இலக்கியம் முழுவதையும் படித்தால் பொன்னான தமிழ்நாடு நம் கண் முன்னே தவழும்.

அதை மீண்டும் கொணர முயல்வோமாக!

இதோ புலவர்கள் நால்வர்.

 

கபிலர்

புலனழுக்கற்ற அந்தணாளன் என்று போற்றப்படும் பெரும் புலவர் இவர்.

இவர் அந்தணர் (புறம் 200)

குறிஞ்சித்திணை பாடுவதில் இணையற்ற ஆற்றலுடையவர்.

ஐங்குறுநூற்றில் குறிஞ்சிப்பாட்டு நூறும், கலித்தொகையில் குறிஞ்சி 29 பாட்டும் இவர் பாடியனவாகும்.

இதனைப்,

“பெருங்கடுங்கோன் பாலை குறிஞ்சி கபிலன்

மருதனிள நாகன் மருத – மருஞ்சோழ

னல்லுத் தான்முல்லை நல்லந் துவனெய்தல்

கல்விவலார் கண்ட கலி”

என்ற வெண்பாவால் அறியலாம்.

அகநானூறில் 203ம் பாடல் தவிர ஏனைய பாடல்கள் அனைத்தும் குறிஞ்சித் திணைக்கு உரியவையே.

இவர் மழவர் பெருமகனாகிய நள்ளியையும், பேரூரினையும் புகழ்ந்து பாடியுள்ளார். (அகம் 238; 382)

குறுந்தொகையில் ஓரியினது கொல்லிப்பாவையினையும், காரியினது முள்ளூர்கானத்தையும் புகழ்ந்துள்ளார். (குறுந்: 100;198)

நற்றிணையில் காரி மாவூர்ந்து நிரைகவர்தலையும், அவன் ஓரியைக் கொன்ற வரலாற்றினையும் கூறியுள்ளார். (நற் 291;320)

ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழறிவுறுத்திக் குறிஞ்சிப்பாட்டுப் பாடியருளினார்.

செல்வக்கடுங்கோ ஆழியாதனைப் புகழ்ந்து இவர் பாடிய பத்துப் பாடல்கள் பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தாகத் தொகுக்கப் பெற்றுள்ளன.

இன்னா நாற்பதும் கபிலம் என்னும் நூலும் இவர் இயற்றிய மற்ற நூல்களாகும்.

இவர் பாணருடன் வாது செய்தவர்.

புறநானூற்றில் பாரி வள்ளலைப் பலபடியாகப் புகழ்ந்து பாடியுள்ளார். (புறம் 105;106)

பாரிவள்ளல் தன் மகளிரை மூவேந்தருக்கு மணம் செய்து கொடுக்க மறுத்தமை காரணமாக மூவேந்தரும் அவனைப் பகைத்து அவன் பறம்பு மலையை முற்றுகை இட்ட போது உள்ளே உணவின்றி வருந்திய அனைவரையும் காப்பதற்காக கிளிகளால் நெற்கதிரைக் கொணரச் செய்தார். (அகம் 78;303)

மூவேந்தரும் பறம்பு மலையைக் கைப்பற்றுவது இயலாத காரியம் என்று கண்டு மனம் தளர்ந்த காலத்து, அவர்களை இவர் இகழ்ந்து பாடியுள்ளார். (புறம் 109;110)

பாரி அவ்வேந்தரால் வஞ்சித்துக் கொல்லப்பட்ட பின்னர், அவன் மகளிரை அழைத்துச் சென்று பார்ப்பார் பால் அடைக்கலம் வைத்தார். (புறம் 113; 236)

இந்தப் பாரி மகளிர் தம் தந்தையின் மலையைச் சூழ்ந்து கொண்ட பகை வேந்தரது படையின் அளவு எந்தெந்த திசையில் எவ்வெவ்வளவு இருக்கிறதென்று உயர்ந்த குவடுகளில் ஏறி நின்று எண்ணிச் சொன்னார்கள் என்னும் குறிப்புத் தோன்ற இவர் பாடியுள்ளார். (புறம் 116)

பின்னர், அம்மகளிர்களை அழைத்துக் கொண்டு போய், அவர்களை மணந்து கொள்ளும்படி விச்சிக்கோனையும் இருங்கோவேளையும் அவர் புகழ்ந்து பாடினார். (புறம் 200;201)

அவர்கள் மறுத்தவுடன் அவர்களைச் சபித்து விட்டு மீண்டார்.

கடைசியாக அம்மகளிருள் ஒருத்தியைத் திருக்கோவலூர் மலையனுக்கு மணம் செய்து கொடுத்து விட்டுப் பெண்ணையாற்றினிடையே ஒரு பாறையில் தீ வளர்த்து அதில் புகுந்தார் என்று திருக்கோவலூர் சாஸனம் ஒன்றால் வெளியாகிறது. (ஆதாரம் : செந்தமிழ் தொகுதி-4; பகுதி-5 பக்கம் 232)

 

தித்தன்

தித்தன் ஒரு அரசன்.

இவன் தித்தன் வெளியன் எனவும் வீரைவெளியன் தித்தன் எனவும் கூறப்படுவான். (அகம் 152;188;226)

இவன் சிறந்த வீரன் மட்டுமன்றி பெரும் புலவனும் ஆவான். (அகம் 188)

இவனது தலைநகர் உறையூர்.

இவ்வூரைப் பகைவர் கைப்பற்றாவண்ணம் அரண்வலி மிகுந்த புறங்காடு உடையதாகவும் படைகாவல் உடையதாகவும் செய்து காத்து வந்தான். (அகம் 122; தொல்.பொருள் நச் 60)

இவனுக்குக் கற்பில் சிறந்தவளும் பேரழகியாயுமுள்ள ஐயை என்னும் பெயருடைய ஒரு மகள் இருந்தாள். ஒரு சமயம் வடுக அரசனான கட்டி என்பான் பாணனொடு சேர்ந்து கொண்டு தித்தனோடு போர் புரிய நினைத்து உறையூருக்கு அருகில் வந்து இருக்கும் போது, உறையூரின் கண் இத்தித்தனது நாளவைக்கண் ஒலிக்கப் பெறும் தெண்கிணைப்பாடு கேட்டு அஞ்சிப் போர் புரியாமல் ஓடினான். (அகம் 226) இவன் மகன் பெயர் போர்வைக்கோப்பெருநற் கிள்ளி.

 

மதுரை அறுவைவாணிகன் இளவேட்டனார்

இவர் வணிக மரபினர். (தொல் பொருள் மரபு 74)

அறுவை வாணிகன் என்றால் வஸ்திர வியாபாரி. (Cloth Merchant) திருவள்ளுவரின் திருக்குறளைச் சிறப்பித்துப் பாடியுள்ளோரில் இவரும் ஒருவர். பாலைத் திணையைத் தவிர ஏனைய எல்லாத் திணையையும் புனைந்து இவர் அகநானூற்றில் பாடியுள்ளார்.

படுத்த யானை முதுகினைக் காற்றிலசையும் வழைத்தாறு தடவும் என்பது இவரது அழகிய கூற்று. (அகம் 302)

 

ஆவூர் மூலங்கிழார்

இவர் சோழநாட்டில் பிறந்தவர். (புறம் 33) வேளான் மரபிணர்.

இவரது மகன் தான் பெரும் புகழ் படைத்த பெருந்தலைச் சாத்தனார் ஆவார்.

இவர் காவிரியைப் புகழ்ந்து பாடியுள்ளார். (அகம் 341)

யாகம் பண்ணாத பார்ப்பானுக்கு சங்கறுக்கைத் தொழிலாகுமென்று இழித்துக் கூறுவதாலும் (அகம் 24),  யாகம் பண்ணிய கௌணியன் விண்ணந்தாயனைப் புகழ்ந்து பாடியுள்ளமையாலும் (புறம் 1660 இவர் வைதிக மதத்தில் (இந்து மதத்தில்) பெரும் பற்றுள்ளவர் என்பது அறியப்படுகிறது.

 

***

சங்க இலக்கியத்தில், ரிக் வேதத்தில் யூப நெடுந்தூண் (Post No.4943)

 

Yupa is on seen in the right.

சங்க இலக்கியத்தில், ரிக் வேதத்தில் யூப நெடுந்தூண் (Post No.4943)

 

 

RESEARCH ARTICLE WRITTEN by London Swaminathan 

 

Date: 23 April 2018

 

Time uploaded in London –  22-20 (British Summer Time)

 

Post No. 4943

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேத்திலுள்ள சொற்களை நாம் இன்று வரை பன்படுத்துவது, இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரம் இருந்ததற்குச் சான்றாக விளங்கி வருகிறது.

 

யூபம் என்னும் தூண் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை இது. இந்த யூப ஸ்தம்பம் ரிக்வேதத்திலும் உள்ளது. அதற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய சங்கத் தமிழ் இலக்கியத்திலும் உளது. ஹரப்பா என்பதே ஹரி யூப என்ற சொல்லின் மருவு என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன்.

Pandya coin

நாலாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூலவர்மனின் ஏழு யூப ஸ்தம்பங்கள் போர்னியோ தீவின் அடர்ந்த காட்டுக்குள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்ததை காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் (1894-1994) பல ஆண்டுகளுக்கு முன்னரே சொற்பொழிவில் குறிப்பிட்டதையும் எழுதினேன்.

 

புற நானூற்றின் மிகப்பழைய பாட்டிலும் பெரும்பாணாற்றுப் படையிலும் யூபம் பற்றிய குறிப்புகள் உளதையும் சுட்டிக்காட்டினேன். தமிழ் மன்னர்கள் வேத கால யாக யக்ஞங்களில் பேரார்வம் கொண்டவர்கள் என்பதை ராஜசூய யாகம் வேட்ட பெருநற்கி ள்ளி பற்றிய கட்டுரையிலும், பருந்து வடிவில் யாக குண்டம் அமைத்த கரிகாற் பெருவள த்தான் செய்த யாகம் பற்றிய கட்டுரையிலும் எழுதினேன்.

 

 

அகஸ்தியரையும் பாண்டியரையும்

தொடர்புப் படுத்திப் பேசிய முதல் காவியம் உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் ரகுவம்சம் என்பதையும், பாண்டிய மன்னர்கள் சதாசர்வ காலமும் அவப்ருத ஸ்நானத்தில் நனைந்திருப்பதே அவர்களின் பெருமை என்று காளிதாசன் பாண்டிய மன்னனை இந்துமதி ஸ்வயம்வரத்தில் அறிமுகப்படுத்தியதை எழுதி இது பலயாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் அஸ்வமேத யாகம் பற்றிய குறிப்பாக இருக்கலாம் என்பதையும் குதிரை பொறித்த பெருவழுதி நாணயம் கிடைத்திருப்பதையும் எழுதினேன். இதன் மூலம் காளிதாசனின் காலம் சங்கத் தமிழ் இலக்கியத்தை ஒட்டியோ முன்னரோ இருக்கலாம் என்றும் சொன்னேன்.

(இவை அனைத்தையும் எனது ஐந்து ஆண்டுக் கட்டுரைகளில் கண்டு மகிழ்க. இப்பொழுது புதிய விஷயங்களைக் காண்போம்).

 

Yupa is shown.

வேள்வி நெடுந்தூண்

 

யூபம் என்ற ரிக்வேதச் சொல்லை மிகப் பழைய புலவரான நெட்டிமையார் அப்படியே குறிப்பிடுவதும் மற்றொரு புலவர் வேள்வி நெடுந்தூண் என்று குறிப்பிடுவதையும் காண்போம்.

 

பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது (புறம்.15)

 

நால்வேதத்து

அருஞ் சீர்த்திப்பெருங்கண்ணுறை

நெய்மமலி ஆவுதி பொங்க, பல் மாண்

வீயாச்சிறப்பின் வேள்வி முற்றி

யூபம் நட்ட வியன் களம் பல கொல்?

யா பல கொல்லோ?

 

பொருள்

உன்னால் தோற்கடிக்கப்பட்ட பகைவர்கள் எண்ணிக்கை அதிகமா? அல்லது நான்கு வேதங்களில் சொன்னபடி நெய்யும் பொரியும் போட்டு யூப ஸ்தம்பங்கள் நட்டு நீ செய்த யாககங்கள்  அதிகமா?என்று பாண்டிய மன்னரைக் கேட்கிறார் நெட்டிமையார்.

 

சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாடிய கருங்குளவாதனார் பாடிய (புறம்.224) பாட்டில்,

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்

வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்

என்கிறார்.

 

அதாவது பருந்து வடிவ யாக குண்டத்தில் அந்தணர் சொற்படி செய்யப்பட்ட யாகத்தில் யூப நெடுந்தூண் நட்டவன் நீ…

 

இவ்வாறு பதிற்றுப் பத்து,  பெரும்பாணாற்றுப்படையிலும் வருகிறது

 

கேள்வியந்தணர் ரருங்கடனிறுத்த

வேள்வித்தூணத் தசைஇ யவன

ரோதிம விளக்கின்………

–பெரும்பாணாற்றுப்படை வரி 315, 316

 

யூபம் பற்றி அக்காலத் தமிழ் அறிஞர்களுக்கு நன்கு தெரியுமாதலால் உரைகாரர்கள் அதிகம் விளக்கவில்லை. இதற்கு நாம் ஸம்ஸ்க்ருத நூல்களையே நாட வேண்டியுள்ளது.

 

யூபக் கம்பங்களில் வேள்வியில் ‘பலியிடும்’ மனிதர்கள், மிருகங்களைக் கட்டுவார்கள். பின்னர் அவைகளை அவிழ்த்து விட்டு விடுவார்கள்.

 

ஐதரேய பிராஹ்மணம் என்னும் நூல் ரிக் வேதத்தின் துணை நூல். அதில் ராஜ சூய யாகம் பற்றி வருகிறது; எந்த யாகம் செய்தாலும் அதில் மன்னர்கள் சுநஸ்சேபன் கதையைக் கேட்க வேண்டும்.

உயிர்ப்பலி இல்லை

 

சுநஸ்சேபன் என்பவன் யாகத்தில் பலியிடக் கட்டியிருந்த போது அவனை விஸ்வாமித்ரர் விடுவித்த கதை இது. இது சூர்ய வம்சத்தின் 28ஆவது மன்னரான ஹரிச்சந்திரன் காலத்தில் நடந்தது.

 

இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால் ஹரிசந்திரன் காலத்துக்கு முன்னாலோ பின்னாலோ இப்படி நடந்ததாக எங்கும் எந்தக் குறிப்பும் இல்லை. ஆக அந்த ஒரே சம்பவத்திலும் சுனஸ்சேபனை விஸ்வாமித்ர மஹரிஷி காப்பாற்றி விடுகிறார்.

 

மேலும் நால் வேதத்துக்கும் உரை எழுதிய பலருள் மிக முக்கியமானவர் சாயனர். அவரே சொல்கிறார்: ‘யாகத்தில் உயிர்கள் பலியிடப்படுவதில்லை. யூப ஸ்தம்பத்தைச் சுற்றி தீ எடுத்துச் செல்லப்பட்டவுடன் அவை  விடுதலை செய்யப்பட்டுவிடும்’.

சாயனர் சொல்லுவதை எல்லோரும் ஏற்றுக் கொள்வர்.

 

அகநானூற்றில் ஒரு ஆமை மர்மம் இருந்தது. அது எப்படி வெளியே வந்தது என்ற மர்மத்தைத் துலக்கி நான் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையிலும் ஆமை பலியிடப்படவில்லை என்பதைக் காட்டி இருக்கிறேன் (கட்டுரையில் மேல் விவரம் காண்க)

 

 

ரிக் வேதத்தில் இரண்டு இடங்களிலும் அதர்வ வேதத்தில் சில இடங்களிலும் பிற்கால பிராமண நூல்களில் ஏராளமான இடங்களிலும் யூபம் என்ற சொல் நேரடியாகப் பயிலப்படுகிறது. குறிப்பால் உணர்த்தும் இடங்கள் மிகப் பல.

 

யூப ஸ்தம்பம் கடிர மரத்தால் (கருங்காலி வகை மரம்) செய்யப்படும், அதன் மேல் பகுதி த்ரிசூலம் போல இருக்கும்; யக சாலைக்கு கிழக்கே வைப்பர். அதில் நெய் தடவி தோரணங்கள் கட்டுவர். அந்தக்கால இளைஞர்களின் அலங்காரம் போல இது விளங்குவதால் யுவ (இளைஞர்) என்ற சொல்லே இப்படி மருவியதாச் சிலர் பகர்வர்.

 

மனிதர்களுக்கு யாக யக்ஞங்க்ள் பற்றிய அறிவு வருவதைக் கடவுளர் விரும்பாமல் தடுத்ததால் (யோயுபயன்) யூபம் என்பப் எயர் வந்ததாக ஐதரேய பிராஹ்மணம் செப்பும். சதபதப் பிராமணத்தில் வேறு விளக்கம் உண்டு.

 

யாகத்தில் பலியிடப்படும் விலங்குகளோ மனிதர்களோ சம்மதம் தெரிவித்தால்தான் அவைகளைப் பலியிடலாம். ம்ருகங்களுக்கு, தான் சாகப்போகிறோம் என்று தெரிந்தவுடன் தயங்கும் என்றும் அப்போது கடவுளர் அவைகளிடம் நான் உன்னை சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னவுடன் அவை இசைவு தெரிவிக்கும் என்றும் நூல்கள் இயம்பும்.

இன்னும் சிலர் மந்திரத்தைக் கேட்டவுடன் அதன் சக்தியில் மிருகங்களே செயல் இழந்து விடும் என்பர். எது எப்படியாகிலும் யாகத்தில் பலி என்பதே இல்லை அதற்குப் பதிலாக நெய்யே விடப்படும் என்று 700 ஆண்டுகளுக்கு முன்னர் சாயனர் எழுதி வைத்ததே சரி யென்று தோன்றுகிறது.

 

மாபாரதக் கதை

 

 

இசைவு தெரிவிக்கும் விஷயம் பற்றி மஹாபாரத்ததில் ஒரு சுவையான சம்பவம் உண்டு. அஸ்வமேத பர்வத்தில் அந்தக் கதை வருகிறது

 

கிருஷ்ணரும் அர்ஜுனரும் பிராமணர் வேடத்தில் மேவரத்வஜன் என்ற மன்னரிடம் சென்றனர். கிருஷ்ணனின் மகனை புலி தூக்கிக்கொண்டு போய்விட்டதென்றும் அரசனின் மகனின் உடலில் பாதி கிடைத்தால்தான் புலி அவனை விடும் என்றும் சொன்னார்கள். உடனே மன்னன், தன்னையே பலி கொடுப்பதாகச் சொல்லி மகனையும் மனைவியையும் கூப்பிட்டு அறுக்கச் சொன்னான். அவர்களும் அப்படியே செய்ய முன்வந்தார்கள். அப்பொழுது அந்த மன்னரின் இடது கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீர் வந்தவுடன் கிருஷ்ணன் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். முழு சம்மதம் இருந்தால்தான் யாகத்தில் பலியிடலாம், கண்ணீர்த் துளியானது முழு மனது இல்லை என்பதைக் காட்டுகிறது என்று சொல்லி நிறுத்திவிட்டனர். இந்தக் கதையானது எதையும் அனுமதி இன்றி செய்யக்கூடாது என்பதை விளக்குவதோடு அக்காலத்தில் சிறந்த ஜனநாயகம் இருந்ததைக் காட்டுகிறது.

 

இதுவரை சொன்ன விஷயங்கள்:

 

இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரம்  இருந்ததை பாண்டிய மன்னர்கள் சோழ மன்னர்கள், சேர மன்னர்கள் யாகம் செய்ததை சங்கத் தமிழ் இலக்கியம் செப்புவதால் அறிகிறோம்.

 

யாகத்தில் உயிர்ப்பலி இல்லாமல் அது அடையாள         பூர்வமாக செய்யப்பட்டதையும் சாயனர் உரை மூலம் அறிகிறோம்.

 

 

கருங்காலி வகை மரம் பல மருத்துவ குணம் உடைய மரம். அதை யூப ஸ்தம்பத்துக் பயன்படுத்தியது, அதன் தோற்றம் மற்றும் மருத்துவ குணமுள்ள ஒரு மரத்தைப் பயன்படுத்தியது ஆகியவற்றையும் கண்டோம்.

 

 

யூப தூண் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/யூப-தூண்/

Translate this page

ஆகவே யூபம் என்பது சிந்து சமவெளி நாகரீக ஹரியூப்பியவில் மட்டும் இன்றி 2000 ஆண்டுகளாக ஆசியா முழுதும் பரவிவிட்டது தெரிகிறது. யூப ஸ்தம்பம் என்பது வேதத்தில் ஆகுதியாக்கப்படும் யாகப் பசு கட்டப்படும் இடம் அல்லது வேதச் சடங்கின் வெற்றியின் நினைவாக எழுப்பபடும் …

ராவணன் – பாண்டியர் சமாதான …

swamiindology.blogspot.com/2014/06/blog-post_24.html?view=sidebar#!

24 Jun 2014 – வேறு எங்கும் கிடைக்காத இந்தச் செய்திகாளிதாசன் மூலமே கிடைக்கிறது அதுமட்டுமல்ல யாகத்திற்காக செய்த அவப்ருத ஸ்நானத்தில் ( குளியல்)பாண்டிய மன்னர்கள் எந்நேரமும் இருப்பதையும் சொல்கிறார். புற நானூற்றில் பெரிதும் போற்றப்படும் பலயாகசாலை முது …

புலிக் கொடி | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/புலிக்-கொடி/

Translate this page

தமிழ் நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் ஆகிய மூவேந்தர்களும் குறைந்தது 2500 ஆண்டுகளாக வரலாற்றில் இடம்பெறுகிறார்கள். போதாயனர், காத்யாயனர், வால்மீகி, வியாசர், அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியர், மாமன்னன் அசோகன், கலிங்க மன்னன் காரவேலன், இலங்கையின் …

பாண்டியர் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பாண்டியர்/

Translate this page

அதில் முக்கியமான செய்தி – அகத்தியர் – பாண்டியர் – இராவணன் தொடர்பு ஆகும். வேறு எங்கும் கிடைக்காத இந்தச் செய்தி காளிதாசன் மூலமே கிடைக்கிறது அதுமட்டுமல்ல யாகத்திற்காக செய்த அவப்ருத ஸ்நானத்தில் ( குளியல்)பாண்டிய மன்னர்கள் எந்நேரமும் இருப்பதையும் …

–சுபம்–

 

சங்க இலக்கியத்தில் வறட்சி! (Post No.3955)

Research Article Written by London Swaminathan

 

Date: 30 May 2017

 

Time uploaded in London- 9-58 am

 

Post No. 3955

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

வறட்சி பற்றி பாரத நாட்டு இலக்கியங்கள் எழுதி இருக்கும் விஷயங்கள் பல வரலாற்று உண்மைகளை எடுத்துரைக்கின்றன. மிகவும் அதிசயமான விஷயங்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ளன.

 

சிந்துசமவெளி நாகரீகம் எப்படி அழிந்தது என்ற செய்தியும் வறட்சி பற்றிய மஹாபாரதக் குறிப்பால் தெரியவருகிறது.

மஹாபாரத காலத்திலேயே சரஸ்வதி நதி வற்றிய செய்தி மஹாபாரதத்திலேயே பல இடங்களில் வருவதால் வேதங்கள் கி.மு 3102-க்கு முந்தையவை என்பது உறுதியாகிறது. வேதங்கள் ஜீவ நதியாக இருந்த சரஸ்வதி நதியை விதந்து ஓதுகின்றன. பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள், தொல் பொருட் துறை அடிப்படையில், மஹாபாரத காலம் கி.மு .1500 என்று எழு தி  இருப்பதை ஏற்றுக் கொண்டாலும்  வேதங்கள் 3500 ஆண்டுகளுக்கு முன் என்பது உறுதி ஆகிறது. வேதங்களைத் தொகுத்து அளித்ததாலும் , மஹாபாரதத்தை தொகுத்து வழங்கியதாலும் தான் நாம் ‘கறுப்புத் தீவுக்காரனை’ (க்ருஷ்ண த்வைபாயன) ‘வியாசன்’ (கட்டுரையாளன், எழுத்தாளன்) என்று போற்றுகிறோம்.

 

(( நான் பள்ளியில் படித்த போது யானை பற்றி ஒரு வியாசம் எழுது என்றுதான் கேள்வித்தாளில் இருக்கும்! இப்பொழுது யானை பற்றி ஒரு கட்டுரை எழுது  என்று வருகிறது.))

 

பத்து பிரிவுகளைக் கொண்ட பிராமணர்கள் எப்படி நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்றனர் என்றும் தெரிகிறது

முதலில் தமிழில் உள்ள விஷயத்தைப் பார்ப்போம்.

நற்றிணையில் (230) ஆலங்குடி வங்கனார் பாடுகிறார்:

முயப்பிடிச் செவியின் அன்ன பாசடைக்

…………

முனிவில் பரத்தையை என் துறந்து அருளாய்

நனிபுலம்பு அலைத்த வேலை நீங்கப்

புதுவறங்கூர்ந்த செறுவில் தண்ணென

மலிபுனல் பரத்தந் தாஅங்கு

இனிதே தெய்ய நின் காணுங் காலே –230

 

பொருள்

பரத்தையிடம் (ப்ர ஸ்த்ரீ) சென்ற தலைவா! அவளிடமே இரு; இங்கு வாராதே; உன்னைப் பார்த்த போதே வறண்ட நிலத்தில் பாய்ந்த புது மழை வெள்ளம் போல என் உள்ளம் குளிர்ந்து இருக்கிறது (அது போதும்)

 

இவ்வாறு வறண்ட நிலத்தில் பெய்த மழை (நீர், வெள்ளம்) என்ற உவமை சம்ஸ்கிருதத்தில் பல இடங்களில் வருகிறது. புகழ் பெற்ற கவிஞன் காளிதாசனும் ரகுவம்ச காவியத்தில் இந்த உவமையைக் கையாளுகிறான்:

ராவணன் என்னும் வறட்சியை திருமால் என்னும் மழை போக்கியது- இதுதான் காளிதாசன் சொல்ல வந்த செய்தி (ரகுவம்ச காவியம் 10-48)

 

தேவர்கள் பயிர்கள்; ராவணனுடைய கொடுமை பயிர்களுக்கு உண்டான வறட்சி; திருமால்-மேகம்; அவர் உதிர்த்த வாக்கு அமிர்தம். பயிர்கள் வறட்சியால் வாடின; மழை பொழிந்தது; நீரால் அவ்வாட்டம் மறைந்தது.

 

மஹாபாரதத்தில் இரண்டு கதைகள்

அங்க தேச மன்னனான லோமபாதன், சில பிராமணர்களுக்கு தீங்கு செய்யவே அவர்கள், அந்த நாட்டில் நீண்ட காலம் வறட்சி ஏற்படட்டும் என்று சபித்தனர். “நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை”– என்ற சான்றோர் வாக்கை அறிந்த லோமபாதன், மிகச் சிறந்த ரிஷ்ய ஸ்ருங்கர் என்ற முனிவரை தம் நாட்டுக்கு அழைக்க எண்ணினான். அவரை அழகான பெண்களை அனுப்பி தந்திரமாக அழைத்து வந்தான். நாட்டில் வறட்சி நீங்கியது. தன்னுடைய வளர்ப்பு மகள் சாந்தாவை அவருக்கு திருமணமும் முடித்தான் (மஹா. 3-110)

இதில் அங்க தேச வறட்சி பற்றி நாம் அறிகிறோம்.

 

சாரஸ்வத பிராமணர்கள் என்போர் இப்போது கொங்கண தேசத்தில் அதிகம் உள்ளனர். ஆனால் இவர்கள் ஒருகாலத்தில் சரஸ்வதி நதி தீரத்தில் வசித்தவர்களாவர். அங்கு தொடர்ந்து 12 ஆண்டுக் காலம் வறட்சி நிலவவே இவர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து பல திசைகளுக்கு ஏகினர்.

 

பிரமணர்களை பத்து பிரிவாகப் பிரிப்பர்: பஞ்ச கவுடா (வடக்கத்திய 5 பிரிவு); பஞ்ச திராவிடா =தெற்கத்திய 5 பிரிவு பிராமணர்கள். சாரஸ்வத பிராமணர்கள், கௌடா பிரிவைச் சேர்ந்தோர் ஆவர்.

 

இரண்டாவது கதை

ததீசி மகரிஷியின் மகன் பெயர் சரச்வத. அவருடைய அம்மா பெயர் சரஸ்வதி. 12 ஆண்டுகளுக்கு வறட்சி நிலவியதால் எல்லா ரிஷிகளும் சரஸ்வதி நதி தீரத்திலிருந்து வெளியேறினர். இதனால் அவர்களுக்கு வேதங்கள் மறந்துவிட்டன. “பசி வந்திடப் பத்தும் போம்” என்பது சரிதானே! அவர்கள் எல்லோரும் உணவைத் தேடி அலைந்தனர். சரஸ்வத மட்டும் வேதங்களைப் போற்றிப் பாதுகாத்து அவர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தினார் (மஹா.9-51)

இதில் பல உண்மைகள் பொதிந்துள்ளன:

  1. நீண்ட 12 ஆண்டுக்கால வறட்சி

2.இதனால் சிந்து சமவெளி காலியனது. சரஸ்வதி நதி வற்றியது. சாரஸ்வத முனிவரின்   தாய் போன்றது அந்த நதி என்ற பொருளிலேயே அவரது தாயார் சரஸ்வதி என்று கூறியதாக நான் நினைக்கிறேன்.

3.சிந்து சமவெளி நாகரீகம் அழிந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

4.சாரஸ்வத பிராமணர்கள், தாங்கள், சரஸ்வதி நதி தீரத்தில் இருந்து வந்ததாகச் சொல்வதற்கும் இந்த மஹாபாரத கதை உதவுகிறது.

 

சம்ஸ்கிருதத்தில் வற்கடம் என்றால் வறட்சி; தமிழ்ச் சொல்லுக்கும் அந்த சொல்லுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் காணலாம்.

 

வியாழன் கிரகமும், வெள்ளி கிரகமும்

 

குரு என்னும் வியாழன் கிரகம் சூரியனைச் சுற்றிவர 12 ஆண்டுகள் பிடிக்கும். ஆகையால் 12 ஆண்டுக்கு ஒரு முறை வறட்சி  ஏற்படும் என்று சம்ஸ்கிருத நூல்கள் செப்பும் ஆனால் தமிழர்களைப் பொறுத்த மட்டில் வெள்ளி கிரகத்துக்கும் மழைக்கும்தான் தொடர்பு அதிகம் மூன்று சங்கப் பாடல்களில் இக்குறிப்பு வருகிறது:-

 

வெள்ளி கிரகம் தென் திசை ஏகியதால் வறட்சி வந்ததாக புற நானூறு 388, பதிற்றுப் பத்து 24; 69 பாடல்களில் வருகின்றது.

 

வெள்ளி தென் திசை சென்றாலும் சோழர் ஆட்சியில் வளம் கொழிக்கும்; வறட்சி வாலாட்டாது என்று மேலும் மூன்று புற நானூற்றுப் புலவர்கள் பாடுவர் ( புற.35, 386, 397)

 

ஆக வியாழன் , வெள்ளி கிரஹம் பற்றி அவ்வளவு கவலை! உலகில் வேறு எந்த நாட்டு விஞ்ஞானியும் கூறாத இக்கருத்துகளை பாரதீயர்கள் மட்டுமே புகன்றனர். வருங்காலத்தில் அவர்களும் கண்டு பிடிக்கும்போது நாம் முன்னரே

சொல்லிவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளலாம்.

தேவாரத்தில் வறட்சி

 

தேவாரத்தில் இரண்டு அற்புதங்கள் வறட்சியுடன் தொடர்புடையவை. வறட்சியால் சோழ நாட்டு மக்கள் கஷ்டப் படவே அப்பரும் சம்பந்தரும் சிவபெருமனை வேண்ட அவர் வாசி தீர தங்கக் காசு நல்கினார். அதை வைத்து வயிற்றுக்குச் சோறிட்டனர் இரு பெரும் சைவப் பெரியார்கள். இது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. அவர்களுக்கு 200 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த சுந்தரருக்கு வறட்சி காலத்தில் சிவன் நெற்குவியலை மலை போலக் குவித்துக் கொடு  தார்.

 

சுந்தரருக்குப் படியளக்கும் கிழார், வறட்சி காரணமாக நெல அனுப்பவில்லை. சுந்தரருக்கும் வருத்தம்; நிலக்கிழாருக்கும் வருத்தம்.

இரவில் நிலக் கிழாரின் கனவில் வந்த சிவபெருமான் , நெற்குவியல் வரும் என்று சொல்லிப் போந்தர். மறு நாள் கிராமம் முழுத்ம் நெல். உடனே ஆரூரருக்கு செய்தி அனுப்பினார். ஆரூரர்– சுந்தரர் – – வந்து பார்த்து, இதை எப்படி திருவாரூருக்கு எடுத்துச் செல்வேன் என்று வழி தெரியாமல் வருந்தினார். சிவன், அவரது கனவில் தோன்றி சிவ கணங்கள் அப்பணியைச் செய்யும் என்று பகர்ந்தார். அவர் சொன்ன மாதிரியே மறு நாள் திரு ஆரூரில் வீடு தோறும் நெல் மலை!

ஆக அற்புதம் ஒரு புறம் இருக்க அதற்குக் காரணமான வறட்சி நமக்கு ஒரு செய்தியாகும்.

திருவிளையாடல் புராணத்தில் வறட்சி

 

மதுரையில் எழுந்தருளிய சிவ பெருமானின் 64 திருவிளையாடல்களைச் சொல்லுவது பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணமாகும்

அதில் உக்கிரகுமார பாண்டியன் காலத்தில் தமிழ்நாட்டில் 12 ஆண்டுக்கால வறட்சி  ஏற்பட்டது. உடனே முடியுடைய மூவேந்தரும் அகஸ்தியர் வழிகாட்டுதலில் இந்திரனைப் பார்த்து தீர்வு கண்டனர்.

 

ஆக வறட்சி பற்றி மஹாபாரதம் முதல் திருவிளையாடல் புராணம் வரை 4000 ஆண்டுகளுக்கான குறிப்புகள் உள்ளன. பிருஹத் சம்ஹிதா முதலிய நூல்களில் உள்ள விஷயங்களை ஆராய்ந்தால் உலகிற்கே நாம் வறட்சி  பற்றி கற்பிக்கலாம்.

–subham–

தமிழ் இலக்கியத்தில் டாக்டர்! சம்ஸ்கிருத நூல்களில் டாக்டர்!! (Post No.3540)

7d450-tamil2bdoctors

Written by London swaminathan

 

Date: 13 January 2017

 

Time uploaded in London:- 9-04 am

 

Post No.3540

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

2000 ஆண்டுக்கு முந்தைய தமிழ்ச் சங்க இலக்கியத்தில் டாக்டர்கள் பற்றிய குறிப்புகள் மிகவும் குறைவே. ஆனால் மருத்துவம் பற்றிய பழமொழிகளும் பிற்காலத்தில் எழுந்த இலக்கியங்களில் வரும் மருத்துவக் குறிப்புகளும் தமிழர்களின் மருத்துவ அறிவை விதந்து போறுவனவாய் உள. குறிப்பாக சங்க காலத்துக்குப் பின் எழுந்த திருக்குறளில் மருந்து என்ற தலைப்பில் வள்ளுவர் பாடிய பத்துக் குறள்களும் பத்தரை மத்துத் தங்கக் கட்டிகளே!

 

வாயைக் கட்டுப்படுத்து; பசித்த பின் சாப்பிடு– இதுதான் பத்து குறள்களின் ஒட்டுமொத்த முடிபு. ஆயினும் கடைசி இரண்டு குறள்களில் வரும் கருத்துகள் அக்காலத்தில் டாக்டர், கம்பவுண்டர் /நர்ஸ் ஆகியோர் இருந்ததையும் மருத்துவன் என்பவன் எப்படிப்பட்டவன் என்பதையும் காட்டுகின்றன.

be20e-indian2bdoctor2buk

சங்க இலக்கியத்தில் நற்றிணையில் ஒரே ஒரு டாக்டர் (மருத்துவன்) உவமை உள்ளது:-

 

அரும்பிணி  உறுநர்க்கு வேட்டது கொடாது

மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல

(பாடல் 136, நற்றிணை, நற்றங்கொற்றனார்)

 

“ஒரு நோயாளி கேட்டதை எல்லாம் கொடுக்காமல் அவனுக்கு நோய் தீருவதற்கான மருந்தை  ஒரு டாக்டர் (அறவோன்) கொடுப்பது போல” — என்ற உவமையைப் புலவர் பயன்படுத்துவதிலிருந்து அக்கால மருத்துவர் நிலையை நாம் அறிய முடிகிறது.

 

திருவள்ளுவர், திருக்குறளில்,

நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல் (குறள் 948)

 

பொருள்:

முதலில் நோய் என்ன என்று ஆராய்க; பின்னர் நோய் ஏன் வந்தது என்று அறிக; பின்னர் அதற்கான மருத்து என்ன என்பதைக் காண்க; அதற்குப் பின்னர் நோயாளியின் உடலுக்கு ஏற்ற மருந்தை கொடுக்க — என்று அழகாக நான்கு நிலைகலையும் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லுவான் வள்ளுவன்.

 

இதே போல

உற்றவன், தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று

அப்பால் நாற்கூற்றே மருந்து (குறள் 950)

 

பொருள்:-

நோயாளி, டாக்டர், மருந்து, பக்கத்தில் இருந்து உதவி செய்யும் கம்பவுண்டர் அல்லது நர்ஸ் என்ற நான்கு அம்சங்களைக் கொண்டதே மருத்துவம்.

 

இதிலிருந்து அந்தக் காலத்திலேயே டாக்டருக்கு உதவி செய்யும் ஒருவனும் இருந்ததை அறிகிறோம். சிலர் நர்ஸ் என்றும் மற்றும் சிலர் கம்பவுண்டர் என்றும் உரை எழுதியுள்ளனர். எதுவாகிலும் மருத்துவம் உச்ச கட்டத்தை அடைந்து இருந்ததை இது காட்டும்.

 

பரிமேல் அழகர் எழுதிய உரையில் நான்கு  என்பதை விரித்து 4 x4 = 16 ஆக  குண நலங்களை விரித்துரைக்கிறார். அவர் முழுதும் ஆயுர்வேதம் என்ற மருத்துவத்தையே முழுதும் சுட்டிக்காட்டுகிறார்.

 

புத்தர் காலத்தில் ஒரு பிரபல டாக்டர் கண் ஆபரேஷனுக்கு எவ்வளவு கட்டணம் வசூலித்தார் என்பதை முன்னரே எழுதியுள்ளேன். அது போல அருணகிரிநாதர் கொடுக்கும் வியாதிகளின் பட்டியல், முருகன் ஒரு டாக்டர் என்ற திருப்புகழ் பாடல்கள் பற்றியும் எழுதியுள்ளேன். ஒருவேளை உண்பான் யோகி என்ற கட்டுரையிலும்  உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கழகு என்ற கட்டுரையிலும் பல விவரங்களைக் கொடுத்து விட்டேன்.

46713-indian-doctors

சம்ஸ்கிருத நூல்களில் டாக்டர்!

இந்து மதத்தில் கடவுளை டாக்டர் (பிஷக்) என்றே அழைப்பர்; ஏனெனில் அவர் பிறவிப் பிணிக்கு மருந்து தருபவர்! யஜுர் வேதத்தில் பிஷக் என்றே சிவபெருமானை அழைப்பர்.

 

உலகப் புகழ் பெற்ற நூல்கள் எழுதிய சரகரும் சுஸ்ருதரும் சம்ஸ்கிருதத்தில் டாக்டர் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதையும் காண்போம்:-

 

ஒரு சர்ஜனின் (சஸ்த்ர சிகிச்சை செய்யும் டாக்டர்) குண நலன்கள் சுஸ்ருத (சூத்ர) 5-10:-

 

சௌர்யம் = பயப்படாமல் ஆபரேஷன் செய்க;

ஆசுக்ரியா= லாவகமாக, டென்ஷன் ஆகாமல் ஆபரேஷன் செய்க;

அஸ்வதேவேபது= கை நடுங்கக் கூடாது; வியர்த்து ஒழுகக் கூடாது;

அசம்மோஹக = மனதில் குழப்பம் இருக்கக் கூடாது (என்ன செய்யப் போகிறோம் என்பதை தெளிவாக நினைவில் வைத்துக்கொள்க)

 

சௌர்யமாசுக்ரியா சஸ்த்ரதைக்ஷயமஸ்வேதபது

அசம்மோஹஸ்ச வைத்யஸ்ய சஸ்த்ர கர்மணி சஸ்யதே

–சுஸ்ருத (சூத்ர) 5-10

xxxx

 

 

சிறந்த வைத்யனின் குணாதிசயங்கள் (பிஷக்தமஸ்ய ஞானம்):-

 

ஹேது= நோய்க்கான காரணத்தை அறிபவன்;

லிங்க = நோயின் தன்மையை அறிவான்;

ப்ரசமன = என்ன சிகிச்சை தரவேண்டும் என்பதைத் துணிவான்

ரோகாணாம் அபுனர்பவ = அந்த நோய் மீண்டும் வராதபடி தடுப்பான்.

 

இந்த நான்கையும் அறிந்தவனே சிறந்த டாக்டர்!

 

ஹேதௌ லிங்கே ரோகாணாமபுனர்பவே

ஞானம் சதுர்விதம் யஸ்ய ச ராஜார்ஹோ பிஷ்க்தமஹ

–சரக (சூத்ரம்) 9-19

 

xxxx

8f8a8-photo2bfor2bplant2bbased2bdoctors2b2_0

நல்ல டாக்டரின் நாலு தகுதிகள்:–

 

ச்ருதே பர்யவதாதத்வம் = மருத்துவ நூல்களில் பேரறிவு;

பஹுசோ த்ருஷ்டகர்மதா = நல்ல அனுபவ அறிவு;

தாக்ஷ்யம் = திறமை;

சௌசம் = கை சுத்தம், உடல் சுத்தம் , மன சுத்தம், கிளினிக் CLINIC/SURGERY சுத்தம்

 

ஸ்ருதே பர்யவதாதத்வம் பஹுசோ த்ருஷ்டகர்மதா

தாக்ஷ்யம் சௌசமிதி ஞேயம் வைத்யே குணசதுஷ்டயம்

–சரக சூத்ரம் 9-6

xxx

 

நோயாளியை கவனிக்கும் முறை:-

 

மைத்ரீ = நோயாளியை நண்பனாகப் பார்;

காருண்யா = அவனிடம் இரக்கம் காட்டு ( எவ்வளவு கட்டணம் வைத்து ஆளிடம் கறக்கலாம் என்று திட்டம் போடாதே)

ப்ரீதி = அவனுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் செய்திகளைக் கொடு;

உபேக்ஷணம் = அவனிடம் அனுதாபம் காட்டு ( நோய் வந்ததற்காக அவனைக் குற்றவளிக் கூண்டில் நிறுத்தாதே)

 

மைத்ரீ காருண்யமார்தேஷு சக்யே ப்ரீதிருபேக்ஷணம்

ப்ரக்ருதிஸ்தேஷு பூதேஷு வைத்யவ்ருத்திஸ்சதுர்விதா

–சரக சூத்ர 9-26

 

Please read my old articles:

 

டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்–திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை2  ((Posted on 15 January 2015))

ஒரு வேளை உண்பான் யோகி (ஆமை போல நீண்ட காலம் வாழும் ரகசியம்) posted on 15-11-2012

 

–subham–