

Written by London Swaminathan
Post No.7557
Date uploaded in London – 10 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ஜோதிடத்தை நம்பு. உனக்கு அது சரியா? தப்பா? என்று சந்தேகம் வருகிறதா? சந்தேகமே படாதே . அவர்கள் சொல்வதெல்லாம் சரி என்பதற்கு கிரகணங்களே (Eclipses) சான்று . அவர்கள் போடும் கணக்கு, சரியானதே என்பதை பஞ்சாங்கத்தில் மிகவும் முன்கூட்டி அறிவிக்கும் கிரகண விஷயங்களே காட்டிவிடுகின்றன என்கிறார் அம்பலவாண கவிராயர்.
சித்த மருத்துவர் (வாகடம்) கொடுக்கும் மருந்துகளுக்கு பலன் உண்டா, இல்லையா என்ற சந்தேகம் வருகிறதா? வேண்டவே வேண்டாமப்பா! அவர்கள் கொடுக்கும் பேதி மருந்தைச் சாப்பிட்டு பார் ; உண்மை தெரிந்து விடும்.
ஒருவன் செய்த தவப்பயனுக்கு சாட்சி வேண்டுமா? உன் ஆபீஸ்ல ஏன் ஒருவன் முதலாளி, மற்றவன் ஒருவன் ஏன் பியூன் ஆக கைகட்டி சேவகம் செய்கிறான் என்று பார். ஒருவன் ஆள் கிறான், மற்றுமொருவன் அடிமை ஆக இருக்கிறான். (இதை குறள் 25, 28-லும் காணலாம்).
எந்தக் கடவுள் முதல்வன் என்று சந்தேகம் வருகிறதா? வேண்டாமப்பா ஐயப்பாடு!
எழுதும் எழுத்துக்கு அரிச் சுவடி (ஹரி- விஷ்ணு) என்றல்லவா பெயர் வைத்திருக்கிறோம். உடனே சிவ பெருமான் பற்றி சந்தேகப்பட்டு விடாதே. யஜுர் வே தத்தில் நமச் சிவாய (நம: + சிவாய) என்ற பஞ்சாட்சரம் – ஐந்தெழுத்து –மந்திரம் வரக்கூடிய ருத்ரம், சமகம் இரண்டையும் படி. அவனே தலைவன் என்பது விளங்கும்..
நாய் போன்ற நான் கூட எப்படி நன்றாக இருக்கிறேன் என்பதற்கு சாட்சி? இறைவனின் திருப்பாதங்களை நான் வணங்குவதே. யார் அந்த இறைவன்? அவன் சதுரகிரியில் உள்ள ஆதி நாயகன், வேத முதல்வன் என்னும் சிவபெருமான். அவன் யார்? விஷ்ணுவும் பிரம்மாவும் வந்து தினமும் வணங்கும் கொல்லி மலை சதுரகிரி அரசன்! அவன் என்னைக் காத்து ரட்சிப்பானாக !


Xxx

அறப்பளீச்சுர சதகம்
அம்பலவாணக் கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். நீதிகள் , அறிவுரைகள் நிரம்பியது tamilandvedas.com, swamiindology.blogspot.com
அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு


Xxxx subham xxxx