திரவுபதியை கிருஷ்ணன் காப்பாற்றியது ஏன்?

Was Draupadi Disrobed

Compiled by London swaminathan

Post No.2239

Date: 13 October 2015

Time uploaded in London: காலை 9-15

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

மஹாபாரதம் உலகிலேயே மிக நீண்ட இதிஹாசம். சமய சம்பந்தமான நூல்களில் இதுவே உலகில் பெரிய நூல். இது ஒரு பெரிய பொக்கிஷம். கடல் போலப் பரந்த விஷயங்கள் இதில் உள்ளன. இதில் எப்போது மூழ்கினாலும் முத்து, பவளம், வலம்புரிச் சங்குகள் கிடைக்கும். ஆனால் இதிலுள்ள விஷயங்களை யாரும் விஷயம் வாரியாகத் தொகுத்து வெளியிடவில்லை. இதிலுள்ள கதாபாத்திரங்கள், உவமைகள் முதலியன பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் உள்ளன. ஆனால் பொன்மொழிகளை விஷயம் வாரியாக (சப்ஜெக்ட்) வெளியிட்டால் நன்றாக இருக்கும். கீழேயுள்ள நான்கு ஸ்லோகங்கள் பல முக்கிய விஷயங்களைத் தரும்:

‘லக்கி’ திரவுபதி

சதுர்பி: காரணை: க்ருஷ்ண த்வயா ரக்ஷ்யாஸ்மி நித்யச:

சம்பந்தாத் கௌரவாத் சக்யாத் ப்ரபுத்வேநைவ கேசவ

(மஹாபாரதம், வனபர்வம்,12-127)

திரவுபதியைக் கிருஷ்ணன், காப்பாற்றியதற்கு நான்கு காரணங்கள் உண்டு:

1.சம்பந்தாத் = உறவு முறை

2.கௌரவாத் = மானத்தைக் காப்பாற்றும் பொருட்டு

3.சக்யாத்= நட்புமுறை

4.ப்ரபுத்வாத்= இறைவன் என்ற முறையில்

longest step

சுவர்க்கத்துக்குப் போக உதவும் படிக்கட்டு எது?

சத்யமே (உண்மை) ஸ்வர்கத்துக்கான மாடிப்படி. அதில் ஏறினால் எளிதில் சொர்க்கத்தை அடையலாம்.

ஏகமேவாத்விதீயம் யத் தத் ராஜன் நாவபுத்யசே

சத்யம் ஸ்வர்கஸ்ய சோபானம் பாராவாராஸ்ய நௌரிவ

(மஹாபாரதம், உத்யோக பர்வம்,33-47)

எவ்வாறு படகு ஒன்று கடல், அல்லது, நதியைக் கடக்க உதவுமோ அவ்வாறு சுவர்க்கம் செல்ல சத்யம் என்பது படிக்கட்டாகத் திகழ்கிறது.

ஏ, மன்னனே, நீ இதைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டாய். இதைவிட வேறொன்றுமில்லை.

(சுவர்க்கம் என்பது மேலே இருப்பதால் மேலேறிச் செல்லும் படி உவமையாக்கப்பட்டது)

Simple-Indoor-Stair-Treads

தர்மத்தின் விளக்கம், இலக்கணம் என்ன?

வேதோக்த: பரமோ தர்ம: தர்மசாஸ்த்ரேஷு சாபர:

சிஷ்டாசாரஸ்ச சிஷ்டானாம் த்ரிவிதம் தர்ம லக்ஷணம்

(மஹாபாரதம், வன பர்வம்,207-83)

தர்மம் என்பது மூன்று இடங்களில் இருக்கிறது:–

வேதத்தில் சொல்லப்பட்ட எல்லாம் தர்மம்

தர்மசாஸ்த்ரம் = நீதி நூல்கள் செப்புவது அனைத்தும் தர்மம்

சிஷ்டாசார: = ஆசாரம் பற்றிய விதிமுறைகலைச் சொல்லுவது எல்லாம் தர்மம் ( இதை ஒவ்வொரு காலத்திலும் குரு அல்லது குடும்பத்திலுள்ள பெரியோர்கள் சொல்லும் மொழிகள் எனக் கொள்ளலாம்)

 krshna eating

மற்றவர்கள் வீட்டில் சாப்பிடலாமா?

கிருஷ்ணர், கௌரவர்களின் பெரிய அரண்மனை விருந்தை விட்டுவிட்டு, தேரோட்டி விதுரன் வீட்டில் தங்கினார். ராமன், சபரி என்னும் வேடுவச்சி கடித்துக் கொடுத்த இலந்தைப் பழத்தைச் சாப்பிட்டார். கண்ணாப்ப நாயனார், எச்சில்படுத்டிக் கொடுத்ததை, சிவ பெருமான் ஏற்றார். ஏன்?

சம்ப்ரீதி போஜ்யான்யன்னானி ஆபத் போஜயானி வா புன:

ந ச சம்ப்ரீயசே ராஜன் ந சைவாபத்கதா வயம்

(மஹாபாரதம், உத்யோக பர்வம்,91-25)

அன்பின் காரணமாக அளிக்கப்பட்ட எதையும் ஏற்கலாம் ( அவர்கள் வீட்டில் சாப்பிடலாம்; அசுத்தமான உணவானாலும், தூய அன்பு, அந்த உணவைச் சுத்தப் படுத்திவிடும்)

ஆபத்துக் காலத்திலும் எங்கும் சாப்பிடலாம் (உயிரைக் காப்பதே முதல் கடமை; சுவர் இருந்தால்தானே சித்திரம்? உயிர் இருந்தால்தானே சாஸ்திரம்!)

–சுபம்-

உண்மை, வாய்மை, மெய்மை (சத்யம்) பற்றிய பொன்மொழிகள்

National-Emblem

Article No. 2049

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 7  August  2015

Time uploaded in London : – 10-17

 

உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது உண்மை

சொல்லால் பொய்யாது ஒழுகுவது வாய்மை

உடலால் பொய்யாது ஒழுகுவது மெய்மை!

தமிழர்களைப் போல இவ்வளவு தெளிவாக மனம், மொழி, மெய் ஆகியவற்றின் தூய்மையை விளக்கியவர் எவருளர்?

 

காயேன, வாசா, மனஸேந்த்ரியைர்வா என்று சொல்வதை – த்ரிகரண சுத்தியை – மிக அழகாக விளக்கிவிட்டனர் தமிழர்கள்!

 

இனி சம்ஸ்கிருத, தமிழ் பொன் மொழிகலைக் காண்போம்:

 

அஸ்வமேத சஹஸ்ராத் ஹி சத்யமேவ விசிஷ்யதே – மஹாபாரதம் & ஹிதோபதேசம்

ஆயிரம் அஸ்வமேத யாகங்களை விட சத்யமே சிறந்தது. (உண்மையைக் கடைப் பிடிப்பவன், 1000 யாகங்களைச் செய்வதால் கிடைப்பதைவிடக் கூடுதல் பலன் பெறுவான்)

Xxx

வாய்மை எனப்படுவது — தீமை இலாத சொலல்: குறள் 291

Xxx

உண்மை பேசுவோருக்கு வேறு அறம் தேவைப்பாடாது – குறள் 297

xxx

அசத்யம் ஜன ரஞ்சனம்

பொய் பேசுவது ஜனரஞ்சகம் ஆக இருக்கும் (இறுதியில் கெடுதியை விளைவிக்கும்)

Xxx

பொய்மையும் வாய்மை ………. நன்மை பயக்கும் எனின் –குறள் 292

xxx

நாஸ்தி சத்யாத் பரம் தானம், நாஸ்தி சத்யாத் பரம் தப:  – மஹாபாரதம்

உண்மையை விட உயர்ந்த தானம் இல்லை; உண்மையை விட உயர்ந்த தவம் இல்லை

Xxx

vaymaiyee

தன் நெஞ்சறிவது பொய்யற்க – குறள் 293

xxx

 

நாஸ்தி சத்யாத் பரோ தர்மோ நான்ருதாத் பாதகம் பரம் – மனுஸ்ம்ருதி, மஹாபாரதம்

உண்மையை விட பெரிய தவம் இல்ல; பொய்யைவிட பெரிய பாதகம் (தீங்கு) இல்லை

Xxx

வாய்மை மொழியின் தவத்தொடு தானம் செய்வாரின் தலை – குறள் 295

xxx

 

சச்சாசச்ச வசஸீ பஸ்ப்ருதாதே –அதர்வ வேதம்

உண்மையும் பொய்யும் போட்டி போடும் வசனங்கள்

(அதாவது தர்ம – அதர்மப் போராட்டம் காலாகாலமாக நடைபெறும்)

 

Xxx

சத்யம் கண்டஸ்ய பூஷணம் – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

கழுத்திற்கு அணிகலன் உண்மை விளம்பல்!

Xxx

 

சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயான்ன ப்ரூயாத்சத்யமப்ரியம்

ப்ரிய ச நான்ருதம் ப்ரூயாதேஷ தர்ம சநாதன: — மனுஸ்ம்ருதி

 

உண்மையே பேசு

இனிமையே பேசு

இனிமையற்றதை, உண்மையே ஆனாலும், சொல்லாதே

அதற்காக இனியது என்று கருதி பொய் பேசாதே

இதுவே எக்காலத்துக்கும் பொருந்தும் சநாதன தர்மம் (இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடு) – மனுஸ்மிருதி

 satya b w

Xxx

உலகத்தார் உள்ளத்துள் எலாம் உளன் – உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் — குறள் 294

xxx

 

சத்யம் வை சக்ஷு:, சத்யம் ஹி ப்ரஜாபதி: — சதபத ப்ராஹ்மணம்

உண்மையே கண்கள், உண்மையே தோற்றுவாய்

 

Xxx

சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு — குறள் 299

Xxx

சத்யமேவ ஜயதே நான்ருதம், சத்யேன பந்தா விததோ தேவயான: — முண்டகோபநிஷத்

 

வாய்மையே வெல்லும், பொய்மை வெல்லாது. உண்மையே சொர்கத்தை அடைவதற்கான பாதை, திறவுகோல் (இது தான் இந்திய அரசு, தமிழ் நாடு அரசு சின்னங்களில் உள்ள வாசகம்)

Xxx

 

புறந்தூய்மை நீரான் அமையும், அகந்தூய்மை வாய்மையால் காணப்படும் — குறள் 298

xxx

 satya1

சத்யம் ஸ்வர்கஸ்ய சோபானம் – மஹாபாரதம்

உண்மையே சுவர்கத்தின் மாடிப்படிகள்

 

Xxx

சத்யஸ்ய நாவ: சுக்ருதம் அபீ பரன் – ரிக் வேதம்

உண்மையெனும் படகுகள் நல்லோரைக் கரை சேர்க்கும்

Xxx

 

பொய்யாமை அன்ன புகழில்லை — குறள் 296

Xxx

 

சத்யான்ன ப்ரமதிதவ்யம் – தைத்ரியோபநிஷத்

உண்மை பேசுவதை ஒரு போதும் அலட்சியம் செய்யாதே

Xxx

சத்யேன தார்யதே ப்ருத்வீ , சத்யேன பபதே ரவி: — மனுஸ்ம்ருதி, சாணக்ய நீதி

இந்த பூமியே உண்மையினால்தான் நிலைபெற்று நிற்கிறது, இந்த சூரியன் உண்மையின் அடிப்படையிலேயே ஒளிருகிறது

 

Xxx

சத்யேன உத்தபிதா பூமி: —  ருக் வேதம், அதர்வ வேதம்

உண்மைதான் பூமியைத் தாங்கி நிற்கிறது.

 satya2

Xxx

ஹிரண்மயேன பாத்ரேன சத்யஸ்யாபிஹிதம் முகம் – ஈஸாவாஸ்யோபநிஷத்

பொன்மயமான பாத்திரத்தினால் உண்மையின் முகம் மூடப்பட்டுள்ளது.

Xxx

வாய்மையை விடச் சிறந்த தர்மம் எனக்குத் தெரியாது – குறள் 300

 

–சுபம்–

 

உபநிஷத அற்புதங்கள்– Part 2

upanishads (1)

உபநிஷத அற்புதங்கள்– Part 2 எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்

எழுதுபவர் – லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 996; தேதி—23 April 2014.

13.பிருஹத் ஆரண்யக உபநிஷத்
மிகவும் பழைய உபநிடதம் இதுதான். கி.மு 800 என்பது வெளி நாட்டினர் கணிப்பு. மிகவும் பெரியதும் இதுதான். இதில் 400 பாடல்கள் உள்ளன. பிற்கால உபநிஷதத்தில் காணப்படும் எல்லா கருத்துகளும் இதில் விதை ரூபத்தில் இருப்பதை உணரலாம்.

அஸ்வமேத குதிரை உருவகம் இதில் காணப்படுகிறது
.(1-1-1)
கண்- சூரியன், மயிர்/முடி—மரம் செடி, கொடி, மூத்திரம் – மழை என்ற ஒப்பீடும் உள்ளது. இது ரிக்வேத புருஷ சூக்தத்திலும் வருவதால் பல்லாயிரம் ஆண்டுகளாக பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் கடவுளாக காண்பது இந்துக்களின் சிந்தனை மரபு என்று காட்டுகிறது.

14.ஒன்றாகக் காண்பதே காட்சி

ஒன்றாகக் காண்பதே காட்சி (அவ்வை பாடல் வரி) என்ற வாசகம் — இரண்டு இருக்குபோதுதான் பயம் இருக்கும் என்ற உபநிடத வாக்கியத்தில் இருந்து உண்டானதே. 1-4-1

கடவுள் தன்னை இரண்டாகப் பிரித்துக் கொண்டார்: கணவன் மனைவி என்று. மனைவியை கணவனின் மற்றொரு பாதி (தி அதர் ஹாப்) என்று கூறுவதற்கு இதுதான் முக்கியக் காரணம். பிற்காலத்தில் வந்த அர்த்தநாரீஸ்வரன் உருவத்துக்கு (மாதொருபாகன்) மூர்த்திக்கு இதுவே மூலம். இதையே பைபிள் ஆதாம் என்பவர் இடது பக்க விலா எலும்பை முறித்து பெண்ணை உருவாக்கியதாகச் சொல்லுகிறது. இடது பக்கத்தில் தேவி இருப்பது இந்து மதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஆதாம் என்பது ஆத்மா என்பதன் திரிபு. பரம ஆத்மா தன்னை ஜீவ ஆத்மா என்று இரண்டாக வேறு படுத்தியதே இக்கதை. இதையே உபநிடதத்தில் இரண்டு பறவைகள் கதையாகவும் காண்கிறோம். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இது பற்றி அற்புத விளக்கம் கொடுத்துள்ளார். நானும் ஏற்கனவே ‘த்ரீ ஆப்பிள்ஸ் தட் சேஞ்ட் தெ ஓர்ல்ட்’ என்ற கட்டுரையிலும் , ‘பைபிளில் சம்ஸ்கிருதம்’ என்ற கட்டுரையிலும் எழுதி இருக்கிறேன்.

புதிய பரிணாமக் கொள்கையையும் இந்த உபநிடதத்தில் காணலாம்: பசு, குதிரை, கழுதை, ஆடு, காளை, எறும்பு, மனிதன் ,மற்ற மிருகங்கள்

upanishad book

1000 பொற்கிழி
15.ஜனகர் நடத்திய யாகத்தின் இறுதியில் ஒரு போட்டி நடத்தப்படுகிறது 1000 பசுக்களின் கொம்புகளில் சுற்றப்பட்ட பொற்கிழிகளுடன் முதல் பரிசு என்று அறிவிக்க ப்படுகிறது. இதில்தான் யாக்ஞவல்க்யர் – கார்க்கி வாதம், யாக்ஞவல்க்யர் – மைத்ரேயி சம்பாஷணை எல்லாம் வருகிறது. (3-1-1)
(1000 பசுக்கள் ஒவ்வொன்றிலும் பத்து வீதம் 10,000 பொற்காசுகள்).
இதே போல திருவிளையாடல் புராண தருமி- நக்கீரன் சம்பவத்திலும் ஆயிரம் பொற்கிழி வருவதால் போட்டி நடத்தி இப்படிப் பரிசு வழங்குவது இந்தியாவில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது என்று அறிகிறோம்.

16.இதில் தெரியும் விஷயங்கள்
யாராவது ஒருவர் அறிவாளி என்று அறிவித்தால் அவர் சபையில் அதை நிரூபிக்க வேண்டும். அதை எதிர்த்து அறிஞர்கள் கேள்வி கேட்கலாம். இதில் பெண் அறிஞர்களும் கலந்து கொண்டனர். உலகில் இல்லாத புதுமை!
தமிழ் சங்கமும் இதே பணியைச் செய்து வந்ததை திருக்குறள் அரங்கேற்றம் மற்றும் தருமி—நக்கீரன் மோதலில் படிக்கிறோம்.

17.ஆண்டு, பட்சம்
இந்த உபநிஷத்தில் 12 மாதம் ,பட்சம் எல்லாம் வருகிறது. ஆனால் வாரம் என்ற கணக்கு இல்லை. காலத்தை சக்கரமாக உருவகித்து 12 கம்பிகள் என்று 12 மாதங்களும் வருணிக்கப்படுகின்றன.

18.கடவுள் விஷயத்தில் அதிக கேள்விகள் கேட்கக்கூடாது என்று யாக்ஞவல்கியர் கார்க்கியைக் கண்டித்தது—கடவுள் பட்டிமன்ற விவாதத்துக்கு அப்பாற்பட்டவர் என்ற உண்மையைப் புலப்படுத்தும்.

purmada

19.பணமும் கடவுளும் வெகுதூரம்
யாக்ஞவல்கியருக்கு இரண்டு மனைவியர்: மைத்ரேயி, காத்யாயனி. அவர், என் சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்துவிட்டு நான் தவம் செய்யப் போகிறேன் என்று சொன்னார். உடனே பணத்தின் மூலம் என்ன பயன்? என்று மைத்ரேயி கேட்கிறார். பணத்தின் மூலமாக கடவுளை அடைய முடியாது என்று கேட்டவுடன் தனக்கு சொத்தின் ஒரு பகுதி வேண்டாம் என்று சொல்லி விடுகிறாள். உலகில் முதல் முதலில் பணமும் சுகமும் வேண்டம் என்று சொன்ன பெண்மணி இவராகத்தான் இருக்க வேண்டும்!

20.உன்னையே நீ அறிவாய் என்ற வாசகம் வருவதும் இங்கேதான் (4-5–1). சாக்ரடீஸ் இதை நம்மிடம் கற்றுக் கொண்டார்.

‘பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்’ என்று பாரதி பாடியது ஏன் என்று இப்போது தெரிகிறது.
21.பெண்களுக்கு சொத்தில் ஒரு பகுதி உண்டு என்பதும் இதில் இருந்து தெரிகிறது.

இது எல்லாம் 3000 ஆண்டுகளுக்கு முன்!!! மற்ற நாடுகளில் நாகரீகம் என்றால் என்ன என்றே தெரியாத காலம். பிரம்மாண்டமான பிரமிடுகள் இருந்தனவே அன்றி ‘’உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’’— என்ற தத்துவம் இல்லை!

22.சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மா
சத்ய சாய் பாபா பாடும் ‘’சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மா’’ பஜனையின் வாசகம் இந்த உபநிஷத்தில்தான் இருக்கிறது. இது அற்புதமான ஒரு வாக்கியம்.(3—9—28)
இது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய ஆராய்ச்சி விஷயம்.

முதல் பகுதி வெளியிட்டது 22 ஏப்ரல் 2014
sohum-upanishad

Contact: swami_48@yahoo.com

அதர்வண வேத ரத்தினங்கள்

purnahuti

(நான் (London Swaminathan) செப்டம்பரில் இந்தியாவுக்குச் சென்ற போது வழக்கம் போல சென்னை ‘ஹிக்கின்பாதம்ஸ்’ Higginbothams புத்தகக் கடையில் நுழைந்தேன். அதர்வண வேதம் பற்றிய ஒரு நல்ல புத்தகத்தைக் கண்டேன். என்னிடம் ஆங்கிலத்தில் நிறைய வேதப் புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில் மிகவும் அரிது. அதை உடனே படித்து முடித்தேன் அனைவரும் வாங்கி படிக்கவேண்டிய அந்த நூலின் விவரங்கள் இதோ: அதர்வ வேதம் அருளும் ஆனந்த வாழ்வு- எழுதியவர் கவிமாமணி தமிழ் மாறன், வெளியீடு: ரம்யா பதிப்பகம், தியாகராய நகர், சென்னை-600 017, தொலைபேசி 24340599)
அந்தப் புத்தகத்தில் பக்கம் 212-ல் பொன்மொழிகள் தொகுப்பு உள்ளது. அதிலிருந்து சில பகுதிகள் இதோ:

இனிமை (காண்டம் 1-34)
தேனைப் போல எங்களை இனிமை செய்; என் நாக்கின் நுனியில் தேன்; அடிவரையில் இனிய தேன்; நாம் மொழிவதும் தேன் மயமாகவேண்டும்.
(மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும் என்ற பாரதி பாடலும் மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டும் என்ற அவரது வேண்டுதலும் ஒப்பிடற்பாலது)

மருந்து (1-4)
ஜலங்களின் நடுவே அமிர்தம் உண்டு; ஜலங்களில் சிகிச்சை உண்டு.
வானின்று உலகம் வழங்கி வருதலால்தான் அமிழ்தம் என்றுணரற்பாற்று—என்ற வள்ளுவன் வாக்கு ஒப்பிடற்பாலது)

கல் (2-13)
இங்கு வா! கல்லின் மேல் நில்; உனது தேகம் கல் போலாகட்டும். நூறு சரத் காலத்தைக் காண்பாயாகுக!

பயம் (2-15)
வானமும் பயப்படுவதில்லை; பூமியும் பயப்படுவதில்லை. அதனால் துன்பமோ நஷ்டமோ அடைவதில்லை. பிராணனே! நீயும் அங்ஙனே பயப்படாதே! அச்சம் தவிர்.

காதல் (2-30)
எப்படி காற்று பூமியிலுள்ள புல்லை இப்படியும் அப்படியும் அசைக்கின்றதோ, அப்படி உன் மனத்தை என்னிடமிருந்து நீங்காமல் இருப்பதற்கு விருப்பம் உள்ளவளாக, பிரியாதவளாக இருக்க அசைக்கிறேன்

குடும்ப ஒற்றுமை (3-30)
மகன் தந்தையின் ஆணையை அனுசரித்து தாயோடு ஒரு மனம் உடையவன் ஆகுக; கணவனிடம் மனைவி அமைதியுடன் தேனினும் இனிய சொற்களை சொல்பவளாகுக. சகோதரன் சகோதரியை வெறுக்காமல் அனைவரும் ஒற்றுமையாக மங்கல மொழி பேசுங்கள் காலையிலும் மாலையிலும் நல்ல எண்ணம் உங்களுடன் இருக்கட்டும்.

மூன்றும் தெரியும் (4-16)
ஒருவன் நிற்பது, குறுக்கு வழியில் ரகசியமாகப் போவது, மறைந்து உட்கார்ந்து உரையாடுவது போன்ற அனைத்தையும் வருணன் அறிகிறான்.

281

ஆசிகள் (5-30)
பிராணன் வருக; மனம் வருக. கண் பார்வை வருக! பிறகு பலமும் வருக. அவனது சரீரம் நன்கு சேர்க, அவன் தனது திடமான இரு கால்களால் நிற்பானாக.

தூய்மை (6-19)
தேவர்கள் என்னை தூய்மை ஆக்குக; மனிதர்கள் என்னை தூய்மை ஆக்கட்டும். தூய்மை செய்பவன் என்னைத் தூய்மைப் படுத்தட்டும். நல்லறிவும், பாதுகாப்பும் பெற, தேவ சவிதாவே, என்னைத் தூய்மை ஆக்குக.

ஐக்கியம் (6-64)
தேவர்கள் எப்படி தங்களுக்குள் பங்கைப் பெற ஒரு மனதாக இருக்கிறார்களோ, அப்படி நீங்களும் இணக்கமாகுங்கள். மந்திரம், சபை, விரதம், சித்தம், அவி இவற்றில் சமானமாக நடத்தப்படுகிறார்கள். உங்கள் எண்ணம், இருதயம், இவை ஐக்கியமாகி, நீங்கள் ஒன்று சேர்ந்து செயல்படுங்கள்.
(ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு- என்ற பாரதியின் மொழி நினைவிற்கு வரும்)

தாய் அன்பு ( 7-10)
சரஸ்வதியே! சாசுவதமான, சுகம் தரக்கூடியதாய், நல் சிந்தனையைத் தருவதாய், வீரியமும், போஷாக்கு ஊட்டுவதாய், உள்ள உனது புனித ஸ்தனத்தின் அமுதத்தை நாங்கள் பருகும்படி செய்து காப்பாயாக.

கொடை (7-26)
விஷ்ணுவே! சுவர்க்கத்தில் இருந்தும், பூமியில் இருந்தும், வானகத்தில் இருந்தும், குறையாத செல்வத்தை உனது இரு கரங்களில், அள்ளி எமது வலது இடது கரங்களில் அளித்து நிரப்புவாயாக!

ஒற்றுமை (7-54)
அஸ்வினிகளே! உறவினருடனும், தெரியாத மற்றவர்களுடனும் ஒற்றுமையுடனிருக்க மனத்தை தாருங்கள். நாங்கள் எண்ணத்திலும் செயலிலும் ஒற்றுமைப்படவேண்டும். முரண்படாத நல்ல மனம் அடைய வேண்டும். எவருடனும் சண்டை போடாமல் இருக்கவேண்டும்.

உயர்வழி (8-1)
புருஷனே! உயர்ந்து செல்வதே உன்வழி. தாழ்ந்து செல்லாதே. நான் உனக்கு நீண்ட வாழ்க்கையும் வலிமையும் தருகிறேன். நீ எளிதாக இந்த அமுத ரதத்தில் ஏறு. அப்பால், நீ முதுமையிலும் சபையில் பிரசங்கம் செய்வாய்.!

282

கெடுதல் (10-1-5)
கெடுதல் செய்தவரையே கெடுதல் சேரட்டும். பழிச் சொல் சொல்பவரையே பழிச்சொல் அடையட்டும்.
(மறந்தும் பிறன் கேடு சூழற்க—என்ற வள்ளுவன் சொல் நினைவுக்கு வரும்)

பூரணம் (10-8-29)
அவன் பூரணத்தில் இருந்து பூரணத்தை உண்டாக்குகிறான். அவன் பூரணத்துடன் பூரணத்தைப் பொழிகிறான். அது எங்கிருந்து பொழியப்ப்டுகிறது என்பதை நாங்கள் அறியலாமா?

பிரம்மசர்யம் (11.5-17-19)
பிரம்மசரியத்தால், அரசன் தனது ராஜ்யத்தைப் பரிபாலிக்கிறான். குருநாதன் பிரம்மசரியத்தால் பிரம்மசாரியை விரும்புகிறான். கன்னிகை பிரம்ம சரியத்தால் இனிமையான கணவனை அடைகிறாள். குதிரையும் காளையும் பிரம்மசரியத்தால் உணவை அடைகின்றன. தேவர்கள் பிரம்மசரியத்தாலும் தவத்தாலும் மரணத்தை அழித்தார்கள். பிரம்மசரியத்தால் இந்திரன், தேவர்களுக்குச் சொர்க்கத்த்தைக் கொண்டுவந்தான்.

bluemarble2k_big-01

பூமி (12-1, 18, 28, 62, 63)
நீ பெரியவள், நீ பெரிய வசதியுள்ளவள். உனது குலுக்கலும் கலக்கலும் நடுக்கமும் மகத்தானவை. நாங்கள் எழும்போதும் உட்காரும் போதும், நிற்கும்போதும், தாங்கும்போதும், தரையில் கால்கள் தடுமாறாமல் இருக்க வேண்டும். நிலமே உன்னிடத்தில் இருப்போர், நோய்கள் விலகி, துன்பங்கள் விலகி , தீர்க்க ஆயுளுடன் இருக்க நாங்கள் பணிசெய்வோம்! தாயே! தரணி மாதாவே! நீ என்னை க்ஷேமமாக வைத்திரு. செல்வத்திலும் புகழிலும் நிலைக்க வை.
(வந்தேமாதரம் என்னும் பாடலில் நிலமகள் பற்றிப் பாரதி பாடியதை ஒப்பிடுவது இன்பம் தரும்)

வசந்த காலம் (12-2-27/28)
நண்பர்களே எழுமின்! கடந்து செல்மின். இங்கு கல்லாறு ஓடுகிறது. இதைக் கடந்து மங்கலமான இனிமை தரும் மேன்மயை நோக்கிச் செல்லுங்கள்! மனம் தெளிந்து தூயர்களாக , தூய்மை செய்வோராக, விஸ்வே தேவர்களின் அருளோடு, கடினமான பாதைகளைக் கடந்து, சுபிட்சமான இந்த இடத்தில், என் வீரர்களுடன் நூறு வசந்த காலம் அனுபவிக்க வேண்டும்!

சத்யம் (14-1-1)
சத்தியத்தால் பூமி ஸ்தாபிதமாயுள்ளது. சூரியனால் சுவர்க்கம் நிலைபெற்றுள்ளது. நேர்மையினால் ஆதித்தர்கள் நிற்கிறார்கள். சோமனும் சுவர்க்கதிலே ஒளிர்கிறான்.

மணப்பெண் (14-2-26)
சுமங்கலிகளாகவும் வீடுகளை விருத்தி செய்பவளாகவும், கணவனுக்கு மங்களம் சேர்ப்பவளாகவும், மாமனார்க்கு மேன்மையும் மாமியார்க்கு இனிமை வழங்குபவளாகவும் இந்த வீட்டில் நுழைக! மாமனார்க்கு சேவை செய்வாயாக; அதே போல புருஷனுக்கு சுகம் கொடுப்பாயாக; வீட்டிற்கு இன்பம் சேர்ர்ப்பாயாக. குடும்பத்துக்கு இன்பமும் சுகமும் வழங்குவாயாக.
(வேத காலப் பெண்களைப் போற்றி “புதுமைப் பெண்” என்ற பாடலைப் பாரதியார் பாடியுள்ளார். ஒப்பிட்டுப் பார்ப்பது நலம்)

செல்வம் (16-9)
நலமுடன் வேள்வி செய்ய செல்வம் உள்ளது. நான் செல்வத்தை வெற்றிகொள்ள வேண்டும். செல்வந்தனாக வேண்டும். நீ எனக்கு செல்வம் அளிப்பாயாக.
தீர்க்காயுள் (17-1-27)
நான் பிரஜாபதியின் கேடயமுடன், காஸ்யபரின் மேன்மையான ஒளியுடன், மகிழ்ச்சிகரமான ஆயுளுடன் அதிர்ஷ்டத்துடன் ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும்.

சரஸ்வதி (18-4-45, 47)
தூயவர்கள் சரஸ்வதியை அழைக்கிறார்கள்; வேள்வி வளரும்போது சரஸ்வதியை அழைக்கிறார்கள்; சரஸ்வதியை புலவர்கள் போற்றி இசைக் கிறார்கள். வேண்டுவோருக்கு வேண்டியதை சரஸ்வதி கொடுப்பாளாக.
sarasvati metal

சாந்தம் (19-9-1, 11, 2)
சுவர்க்கம் எங்களுக்கு சாந்தி அளிக்கட்டும்’ பூமியும் ஆகாசமும், தண்ணீரும், தாவர மூலிகைகளும் சாந்தி தருக. ருத்திரர்கள், வசுக்கள், ஆதித்தியர்கள், அக்னிகள், மகரிஷிகள், தேவர்கள், பிரகஸ்பதி சாந்தமானவர்களாக இருப்பதும் இருக்கப்போவதும் சாந்தம்; எங்களுக்கு எல்லாம் சாந்தி தருவதாக.
(எனது கட்டுரை “ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி” என்பதில் முழு விளக்கம் கொடுத்திருக்கிறேன்)

அச்சமின்மை (19-5)
வானமும், பூமியும், சோதி மண்டலமும் எனக்கு அச்சமின்மை தருக; பின்புறத்திலிருந்தும் முன்புறத்திலிருந்தும், மேலிருந்தும் கீழிலிருந்தும் அச்சமின்மை எங்களுக்கு ஆவதாக. நண்பர்கள், அறிமுகம் இல்லாதவர்கள், மற்றும் அறிந்த விஷயம் அறியாத விஷயம் எதிலும் அச்சமின்மை தருக. இரவிலும் பகலிலும் எமக்கு அச்சமின்மையை நல்கி, எல்லா திசைகளும் நண்பர்களாகுக.
(பாரதியார் “அச்சமில்லை” என்ற பாடலிலும், “ஜயபேரிகை” என்ற பாடலிலும் “தெளிவு” என்ற பாடலிலும் இந்தக் கருத்துகளை எதிரொலிக்கிறார்.வள்ளுவனும் “அச்சமே கீழ்களது ஆச்சாரம்” என்று ஏசுகிறார்.)

அக்னி (19-55)
ஒவ்வொரு மாலையிலும், அக்னியே, எங்கள் இல்லத் தலைவன்; ஒவ்வொரு காலையிலும் அவன் எனக்கு நல்ல மனம் தருபவன்; மிகு செல்வத்தையும் பொருளையும் அளிக்கும் உன்னை வளர்த்து , நாங்கள் வாழ்வில் வளம் பெறுவோமாக.

தேகவலிமை (19-60)
வாயிலே (நல்) வாக்கும், மூக்கிலே பிராண மூச்சும், கண்களிலே தெளிவான பார்வையும், கேட்கும் காதும், நரைக்காத கேசமும், உடையாத பற்களும், கைகளில் பலமும் வேண்டும்! தொடைகளிலே திடம், கால்களில் துரித இயக்கம், பாதங்களில் சுவாதீனம் எங்களுக்கு வேண்டும். நான் துன்பமின்றி, என் ஆன்மா சேதமுறாமல் இருக்க வேண்டும்.
(தேசிய கவி சுப்பிரமணிய பாரதி “சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்” என்னும் பாடலில் இந்தக் கருத்தை ஒவ்வொரு உடல் உறுப்பாகச் சொல்லிப் பாடுகிறார்).

நூறு வயது (19-67-1/8)
நாங்கள் நூறு சரத் காலங்களைப் பார்க்கவேண்டும்; நூறு சரத் காலங்கள் ஜீவிக்கவேண்டும்; நூறு சரத் காலங்கள் விழித்தெழ வேண்டும்; நூறு சரத் காலங்கள் ஏறவேண்டும்; நூறு சரத் காலங்கள் சிறப்புற வேண்டும்; நூறு சரத் காலங்கள் வாழ வேண்டும்; நூறு சரத் காலங்கள் நலமுற வேண்டும்; நூறு சரத் காலங்கள் மேலும் மேலும் சிறப்புற வேண்டும்;
(பிராமணர்கள் தினமும் சந்தியாவந்தனத்தில் இந்த மந்திரத்தைச் சொல்லுவார்கள்)

அக்னி பகவான் (20-10)
“அனைத்தும் அறிந்த அறிவுக் கடவுளாக, தேவதூதனாகச் செயல்பட்டு, தேவர்களுக்குத் தரப்படும் ஆஹுதி உணவை மிகச் சிறப்பான முறையில் அவர்களுக்குச் சேர்ப்பிக்கும் உன்னதப் பணியை ஆற்றும் அக்னியே! ஆற்றல் மிக்க உன்னை எங்கள் ப்ரியமுள்ள தேவதையாக வரிக்கிறோம்.
( பாரதியாரின் “தீ வளர்த்திடுவோம்” என்ற பாடலிலும் “வேள்வித் தீ” என்ற பாடலிலும் அக்னி பகவானைப் போற்றும் துதிகள் உள்ளன.).

Contact Santanam Swaminathan :- swami_48@yahoo.com