
Acupressure in Rig Veda


Research article Written by London Swaminathan
Uploaded in London on – 5 JANUARY 2020
Post No.7421
contact – swami_48@yahoo.com
pictures are taken from various sources; thanks.












Acupressure in Rig Veda
Research article Written by London Swaminathan
Uploaded in London on – 5 JANUARY 2020
Post No.7421
contact – swami_48@yahoo.com
pictures are taken from various sources; thanks.
Posted by Tamil and Vedas on January 5, 2020
https://tamilandvedas.com/2020/01/05/%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-2-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4-%e0%ae%b5-2/
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 2 SEPTEMBER 2019
British Summer Time uploaded in London –16-29
Post No. 6968
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Posted by Tamil and Vedas on September 2, 2019
https://tamilandvedas.com/2019/09/02/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/
கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1340; தேதி அக்டோபர் 11, 2014.
உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் பல இடங்களில் ரிஷி என்ற சொல் பயிலப்படுகிறது. “மந்திரத்தை வாக்கிய வடிவத்தில் சொல்பவர்” — என்று வேதத்தின் சர்வானுக்ரமணி கூறும்.
யாஸ்கர் எழுதிய நிருக்தம் போன்ற நூல்களில் சொற்பிறப்பியல் அடிப்படையில் ரிஷி என்ற சொல்லுக்கு விளக்கம் தரப்படுகிறது:
சாயனர் “ர்ஸ்: என்றால் ‘மேலே செல்’ என்பார். இதிலிருந்து பிறந்தது ரிஷி — ரிக் வேத பாஷ்யத்துக்கு முன்னுரை தருகையில் ‘த்ருஸ்’ என்ற சொல்லையும் காட்டுவார். ‘பார்’ என்பது இதன் மூலம். அதாவது மனிதனின் ஊனக் கண்ணால் காண முடியாததை ஞானக் கண்ணால் கண்டு நமக்கு வேத மந்திரங்களை அளித்தார்கள்.
இந்து மதம் தவிர, உலகிலுள்ள எல்லா மத நூல்களும் ஒரு மதத் தலைவர் சொன்னதை அடிப்படையாகக் கொண்டவை. உலகிலுள்ள எல்லா மதங்களும் ஒரு மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. இந்துக்களின் வேதமோ, இந்து மதமோ மனிதனால் தோற்றுவிக்கப் படவில்லை. அது சநாதனமாக – தோற்றமோ முடிவோ இல்லாத ஒன்றாக— இருந்து வருகிறது. வேத மந்திர ஒலிகளும் இப்படித்தான்.
நாம் ரேடியோவில் ஒரு நிலையத்தைக் கேட்க வேண்டுமானல் ஒரு அலை வரிசயைத் தேர்ந்தெடுக்கிறோம். அது போல ரிஷிகள் மனதை ஒரு முகப்படுத்தி மந்திரங்களைக் கேட்கிறார்கள். எப்படி ஆயிரக் கணக்கான நிலயங்களின் ரேடியோ அலைகள் நம்மைச் சுற்றி இருக்கிறதோ அது போல பிரபஞ்சத்தில் பல்லாயிரக் கணக்கான மந்திர ஒலிகளும் நம்மைச் சுற்றி இருக்கின்றன என்று இந்துக்கள் நம்புவர்.
ரிஷிகள் முக்காலம் உணர்ந்த “த்ரிகால” ஞானிகளும் ஆவர். எப்படி நாம் ஒரு வீடியோ “டேப்”பைப் பார்க்கையில் REWIND ரீவைண்டு, FAST FORWARD பாஸ்ட் பார்வர்ட் என்று முன் பின்னால் உள்ளதைப் பார்க்கிறோமோ அது போல ரிஷிகளும் செய்கின்றனர். மஹாபாரத யுத்தக் காட்சியை கண்ணன் — விஸ்வரூப தரிசனத்தில் — அர்ஜுனனுக்கு பாஸ்ட் பார்வர்ட் செய்து காட்டுவதைப் படிக்கிறோம்.
இதே போல த்ரிகரண சுத்தி என்பதும் ரிஷிகளிடத்தில் உள்ளது. ஆதி சங்கரர் ஒரு துதியைப் (கனக தாரா ஸ்தோத்திரம்) பாடும்போது தங்க நெல்லிக்காய் மழை பெய்தது. முத்து சுவாமி தீட்சிதர் ஒரு ராகத்தைப் (அமிர்தவர்ஷனி) பாடும்போது மழை கொட்டியது. நாம் அதையே துதிக்கும் பொழுதும், பாடும்பொழுதும் ஏன் அப்படி நடப்பதில்லை?
1.அவர்களைப் போல சொல், செயல், சிந்தனை மூன்றிலும் தூய்மை இருக்க வேண்டும்.
2.அவர்களைப் போல தீவிரம் (Intensity ஈடுபாடு) மற்றும் நேரம், காலம், சூழ்நிலை அணுசரனையாக இருக்க வேண்டும். நேரம், காலம், சூழ்நிலை பற்றி அவர்கள் ஞானக் கண்ணால் அறிய முடியும்.
“ரிஷிர் தர்சனாத் ஸ்டோமன் ததர்ச இதி ஔவமன்யவ:” — என்பதை யாஸ்கர் மேற்கோள் காட்டுவார்.
அவர்கள் “சூத்ர த்ருஷ்டா” என்றும் “சூத்ர கர்தா” இல்லை என்றும் சொல்லுவர்.
சதபத ப்ராஹ்மணம் ரிஷி என்பதற்கு “அதிகம் பாடுபடுபவர், கஷ்டப்படுபவர்” — என்று பொருள் சொல்லும். அதாவது தீவிரத் தவம் புரிவோர்.
தைத்ரீய ஆரண்யகம் , “முன்னேறிச் செல், தோன்று” என்று பொருள் காணும்.
தான் மட்டுமின்றி மனித குலத்தையும் முன்னேற்ற விரும்பியதால்தான் அவர்கள் காயத்ரி மந்திரம், மிருத்யுஞ்சய மந்திரம் போன்ற அரிய பெரிய மந்திரங்களை நமக்கு அளிததனர்.
ராஜ ரிஷிக்களும் சப்த ரிஷிக்களும்
ஜனகன், புத்தன், ராமன், கிருஷ்ணன் இவர்களை ராஜ ரிஷிகள் என்பர். கண்ணனும் ராஜரிஷி பற்றி கீதையில் (4-2) சொல்கிறான். இன்னும் ஒரு ஸ்லோகத்தில் (10—6) சப்த ரிஷிக்கள் , நான்கு மானச புத்ரர்கள், 14 மனுக்கள் பற்றி கிருஷ்ணன் சொல்லுவான்.
இதற்கு ஸ்ரீ இராமகிருஷ்ண மடம் அண்ணா அவர்கள் எழுதிய உரை மிகவும் அருமையானது. அவர் சொல்வதாவது:–
முன்னவர்களான ஏழு மகரிஷிக்கள்:
1.நீண்ட ஆயுள்
2.மந்திரங்களை காணும் சக்தி
3.ஈசுவரத்தன்மை
4.தெய்வீகப்பார்வை
5.குணத்தாலும், வித்தையாலும், வயதாலும் உயர்வு
6.தருமத்தைப் பிரத்யக்ஷமாக அனுஷ்டித்துக் காட்டல்
7.கோத்ரப் பிரவர்த்தகராக இருத்தல்
இவ்வேழு லக்ஷணங்களும் அமைந்தவர்கள் ரிஷிகள்.
இவர்களில் முக்கியமானவர்கள் ஏழு மகரிஷிகள்; ஒவ்வொரு மன்வந்தரத்திலும் இவர்கள் வெவ்வேறாவர். இந்த கல்பத்தில் முதல் மன்வந்தரத்தில் தோன்றிய ஸப்தரிஷிகள்:–
மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், க்ரது, வசிஷ்டர்.
இப்போது நடக்கும் வைவஸ்வத மன்வந்தரத்துக்கு உரிய ஸப்தரிஷிகள்:
அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், காசியபர்
நால்வர்: ஸனகர் ஸநந்தனர் ஸனாதனர் ஸனத் குமாரர்.
இதுதவிர ரிஷிக்களை வேறு பல வகைகளிலும் பிரிப்பர்:
ராஜ ரிஷி:
க்ஷத்திய குல அரசர்கள் – ரிஷிகளின் தன்மை பெற்றவர்கள்
பிரம்ம ரிஷி:
பிராமண குலத்தை சேர்ந்த ரிஷி முனிவர்
ஜன ரிஷி:
மக்களிடையே இருந்து ரிஷிகளின் நிலைக்கு உயர்ந்தோர்.
காண்ட ரிஷி:
வேதங்களின் காண்டங்களுக்குப் பொறுபான ரிஷிக்கள்
மஹரிஷி:
ரிஷிகளுக்குள் உயர் நிலை அடைந்தவர். நாம் தலைவர், பெருந்தலைவர் என்று சொல்வது போல
பரம ரிஷி:
மிக உயர்ந்த நிலையிலுள்ள ரிஷி
ச்ருத ரிஷி:
வேத ஒலியைக் கேட்போர்
தவ ரிஷி:
தவத்தில் சிறந்தவர்
சத்ய ரிஷி:
சத்யத்தில் நிலைபெற்றவர்.
தேவ ரிஷி
தெய்வீக நிலைக்கு உயர்ந்தோர்.
பதஞ்சலி பிரிவினை
பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ என்னும் உலகமே வியக்கும் சம்ஸ்கிருத இலக்கண நூலுக்கு மஹாபாஷ்யம் என்ற அளவிலும் தரத்திலும் பெரிய விளக்கவுரை (பாஷ்யம்) செய்ஹ பதஞ்சலி என்ற ரிஷி. வேறி இரண்டு விளக்கம் தருவார்:
மந்திரத்தைக் கண்டவர்கள் ஒரு வகை. கல்ப சூத்ரம் போன்ற பெரிய நூலகளை எழுதியோர் மற்றொரு வகை. ஆன்மீக எழுத்தாளர்களையும் ரிஷி வகையில் சேர்த்துவிட்டார் பதஞ்சலி.
மஹாபாரதமோ எனில் வேறு வகையில் ரிஷிக்களைப் பிரித்துரைக்கும்:
கிருஹஸ்தாஸ்ரமி: இல்லறம் நடத்தும் ரிஷிமார்கள்.
ரிஷிக்களில் இந்த வகைதான் அதிகம். பெரிய ரிஷிக்கள் அனைவரும் இல்லறத்தை நடத்தியே பெரும் புகழை எய்தினர். வசிட்டர், விசுவா மித்திரர், அகத்தியர் ஆகிய அனைவரும் மனைவியுடன் வாழ்ந்தவர்
ஊர்த்வரேதஸ்: — பிரம்மசர்யம் அனுட்டித்த ரிஷிக்கள்
ஆஸ்ரமவாசிகள்:– கானகம் முதலிய இயற்கைச் சூழ்நிலையில் ஆஸ்ரமம் அமைத்து எளிமையான வாழ்வு வாழ்ந்தோர்.
யாயவரஸ்: நாடோடி ரிஷிக்கள். நாடு விட்டு நாடு சென்று பலருக்கும் உதவியவர்கள்
புரோகித வ்ருத்திகா: — புரோகிதம் செய்த ரிஷிக்கள்
சாதரண வ்ருத்திகா: — சாதாரண வாழ்க்கை நடத்திய ரிஷிக்கள்
சஸ்த்ர அத்யாபகா :– ஆயுதப் (சஸ்த்ரம்) பயிற்சி அளித்த ரிஷிகள்
சாஸ்த்ர அத்யாபகா: — சாத்திரப் பயிற்சி அளித்த ரிஷிகள்
உக்ர தபஸ்வீ: — இவர்கள் சூப்பர் பாஸ்ட் ரயில் போல உக்ரமான தவம் செய்து விரவில் பலன் பெற முயன்றோர்.
சாதரண தபஸ்வீ: இவர்கள் சாதாரண வேகத்தில் செல்லும் ரயில் போல தவம் செய்தோர்.
இந்தப் பிரிவினைகள் அவர்களை வருணிக்கப் பயன்படுத்திய சொற்கள். ஒருவர், ஒரு பிரிவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல.
( உதவிய நூல்கள்:— பழங்கால இந்தியாவில் ரிஷிமார்கள் – சி.பி. பாண்டே எழுதிய நூல் —- ப்ருகு வம்சம் – ஒரு ஆய்வு, ஜயந்தி பண்டா எழுதிய நூல்—பகவத் கீதை, அண்ணா உரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை).
– சுபம் —
Posted by Tamil and Vedas on October 11, 2014
https://tamilandvedas.com/2014/10/11/%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d/
Wriiten by S Nagarajan
Post No.1167; Dated 12th July 2014
This is the nineth part of S Nagarajan’ article from his Tamil book “Honey Drops from the Puranas”. First eight parts were published in this blog:- swami.
நாரத புராணம் பல யந்திரங்களை விவரிக்கிறது. அவற்றில் சில:
த்ரைலோக்ய மோஹன யந்த்ரம் – இதை முறையாக வழிபட்டால் ஒருவன் நினைத்ததெல்லாம் கை கூடும்.
நாரசிம்ஹ யந்த்ரம் – வெற்றி, செல்வாக்கு, பாதுகாப்பு ஆகியவற்றைத் தரும்.
சர்வ வசங்கர யந்த்ரம் – அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
காலாந்தக யந்த்ரம் – சாவை முறியடிக்கும் யந்த்ரம்
ஒரு யந்த்ரம் குறிப்பிட்ட ஜியாமெட்ரி வடிவமைப்புடையது. அதை சொல்லப்பட்ட உரிய முறைப்படி கல்லிலோ அல்லது உரிய உலோகத்திலோ அல்லது ஒரு பேப்பரில் வர்ணத்தினாலோ அமைத்து அதற்குள் உரிய மந்திர பீஜங்களை எழுத வேண்டும். பிறகு அந்த தேவதையை ஒரு மண்டலம் வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும் என்று புராணம் தெரிவிக்கிறது.
யந்திரம் அமைக்கும் முறை அதை வழிபடும் முறை ஆகியவற்றை அதில் சித்தி பெற்ற குரு முகமாக மட்டுமே பெற வேண்டும்.
Symbol of Jainism which propagated Ahimsa.
அஹிம்சையே தர்மங்களுக்குள் உயர்ந்த தர்மம்
அஹிம்சா பரமோ தர்ம: என்பதை பத்ம புராணம் அறிவிக்கிறது. மஹாத்மா காந்தி அடிகளின் வாழ்க்கையின் உயிர் மூச்சாக அஹிம்சா தத்துவம் இழைந்தோடியது.
அஹிம்சையின் உயர்வைத் தெரிவிக்கும் ஸ்லோகம் இது:-
அஹிம்சா பரமோதர்மோஹ்யஹிம்சவைவ பரம் தப: I
அஹிம்சா பரம்ம் தானமித்யாஹுர்முனஸ்ய: சதா II
அஹிம்சையே தர்மங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தர்மம். அஹிம்சையே தவங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தவம். அஹிம்சையே தானங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தானம். என்று முனிவர்கள் எப்போதும் சொல்லி வருகின்றனர்.
– பத்ம புராணம் , ஸ்வர்க்க காண்டம், 31ஆம் அத்தியாயம் 26ஆம் ஸ்லோகம்
சப்த ரிஷிகள் யார் யார்?
கஸ்யபர், அத்ரி.வசிஷ்டர். விஸ்வாமித்திரர்,கௌதமர். ஜமதக்னி,பரத்வாஜர் ஆகிய இவர்களே சப்த ரிஷிகள் ஆவர்.
– ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணு புராணம்,வாமன புராணம், கூர்ம புராணம்
மரீசி, அங்கீரஸர், அத்ரி, புலஸ்த்யர், புலகர், க்ரது, வசிஷ்டர் ஆகிய இவர்களே சப்த ரிஷிகள் ஆவர்.
– வாயு புராணம், அக்னி புராணம்
மரீசி ஆகிய ஏழு ரிஷிகளும் பிரம்மாவின் புத்திரர்கள் என சிவ புராணம் கூறுகிறது.
சப்த ரிஷிகளின் ஒரு வருடமானது தேவர்களின் ஏழு வருடங்களுக்குச் சமமாகும் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது.
சப்த ரிஷிகளின் பெயர்கள் மாறி மாறி கூறப்படுகிறதே என்று பலரும் சந்தேகம் கொள்வர். ஆனால் ஒவ்வொரு கல்பத்திலும் சப்தரிஷிகள் மாறுவர் என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்த சந்தேகம் எழாது.
சிவனைத் துதிக்கும் பாக்கியம் ஏன் ஏற்படுகிறது?
தவம், யாகம், தானம் முதலியவை சிவ ஞான இச்சை (பக்தி) உண்டாவதற்குக் காரணமாக அமைகிறது. வேதம் மற்றும் வேதாங்க அத்தியயனம் செய்தல் அத்தியயனம் செய்வித்தல், வேதார்த்த பக்தி, வேதத்துக்கு விரோதமான நூல்களை விலக்குதல், சாந்தி, தாந்தி முதலியவை ஞானாங்கமாகும் என்று கற்றோர் சொல்வார்கள்.
ஞானங்கள் எல்லாவற்றுள்ளும் சிவலிங்க பூஜை செய்தல், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தல்,சிவ ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்தல், சிவனடியார்களைப் பூஜித்தல், விபூதி, ருத்ராக்ஷம் தரித்தல், ஞானாசிரியன் சேவடி தரிசனம் செய்தல், பஞ்சாட்சரம் உள்ளிட்ட மந்திரங்களை ஜபித்தல் இவைகள் மேலானவை என்று பெரியோர்கள் சொல்வார்கள்.
சிவத் தலங்கள் பலவற்றுள்ளும் காசி, திருக்காளத்தி, சிதம்பரம் ஆகியவை விசேஷமாகும்
ஸ்கந்த புராணம், சூத சம்ஹிதை,யக்ஞ வைபவ காண்டம், எட்டாவது அத்தியாயம்
சிவனும் விஷ்ணுவும் ஒருவரே!
சிவ பெருமானை லக்ஷ்மி துதி செய்தவுடன் மனம் மகிழ்ந்து சிவபிரான் லக்ஷ்மியை நோக்கிக் கூறுவது:-
“ஓ! கமலாக்ஷீ! நீ சொல்லி வந்த நியாயப்படி எனக்கும் விஷ்ணுவுக்கும் அபேதம் என்பது சத்தியமே! இந்த நியாயம் உனக்கு எப்படித் தெரிய வந்தது? யான் எல்லாமாய் இருக்கும் தன்மையாகிய ஏகத்வத்தைத் தேவர்களும், முனிவர்களும், வேதாந்தம் உணர்ந்த ஞானிகளும் குதர்க்கத்தால் அறியாமல் பேத புத்தி உடையவர்களாகி துவேஷிக்கின்றனர். இவர்கள் இங்ஙனம் இருக்க, உலகில் எனக்கு பக்தர்கள் என்று சொல்லப்பட்ட பலர் விஷ்ணுவைத் தூற்றி நிந்திக்கின்றவர்களாயும், விஷ்ணு பக்தர்கள் என்று சொல்லப்பட்ட பலர் என்னைத் தூற்றி நிந்திக்கின்றவர்களாயும் இருக்கின்றனர். இதற்குக் காரணம் தேவியின் மாயையினால் அவர்கள் கவரப்பட்டிருக்கும் தன்மையே ஆகும்.
ஏனெனில் பக்தர்கள் என்று சொல்லப்பட்ட இவர்கள் ஸ்தூல உருவங்களைக் கண்டு பக்தி செய்ய வந்தார்களேயன்றி சொரூப உண்மையை அறிந்து பக்தி செய்ய வந்தவர்கள் அல்லர். சொரூப உண்மையை அறியப் புகுவாராயின் துவேஷம் உடையவர் ஆகார். ஸ்தூல உருவம் பல வேற்றுமை உள்ளது. சொரூபம் வேற்றுமையாகாது ஒரே தன்மையாக உள்ளது. ஆகவே ஒரு தன்மையாய் இருக்கும் சொரூப உண்மையை விட்டு விட்டுப் பல தன்மையாய் இருக்கும் வடிவத்தைப் பற்றினாராதலின் கண்ட ஞானமுடையவராகி பேதவாதத்துக்கு உள்ளாகின்றனர். என்னுடைய வேற்றுமை இல்லாத ஏகத்வத்தை அறிவதென்றால் அகண்ட ஞானமும் புண்ணிய விசேஷமும் பெற்றவராக இருப்பின் அறிவர். அவர்களிட்த்தில் தேவியின் மாயா விலாசம் போய் ஞான விலாசம் உண்டாகும். இது யாவர்க்கும் கிடைத்தல் அரிது. கஷ்டப்பட்டு அறிதல் வேண்டும்.
இவ்வாறு லக்ஷ்மி தேவியிடம் சிவ பிரான் அருளுவதை தேவி பாகவதம் ஆறாம் ஸ்கந்தம் 18 ஆம் அத்தியாயம் விளக்குகிறது.
To be continued………………………………………………
Contact swami_48@yahoo.com
Posted by Tamil and Vedas on July 12, 2014
https://tamilandvedas.com/2014/07/12/%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
You must be logged in to post a comment.