திருடனைப் பிடித்த புத்திசாலி வணிகன் (Post No.4887)
Written by London Swaminathan
Date: 6 April 2018
Time uploaded in London – 7-41 am (British Summer Time)
Post No. 4887
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
இது ஒரு தெலுங்கு தேச நாட்டுப்புற கதை
ஒரு வயதான வர்த்தகன் வீட்டில் திருடன் வந்து மரத்தடியில் ஒளிந்து கொண்டான். இதை அந்த புத்திசாலி வணிகன் பார்த்தும் பாராமலும் இருந்துவிட்டான். பின்னர் திருடனைப் பிடிக்க எப்படி பக்கத்து வீட்டுக்காரர்களை அழைப்பது என்று யோசித்தான்.
திருடன், திருடன் என்று கத்தினால் அவன் ஓடி விடுவான் அல்லது வணிகரைத் தாக்குவான். ஆகையால் ஒரு IDEA ஐடியா செய்தார்.
மனைவியைக் கூப்பிட்டு மரத்துக்குப் பக்கத்தில் ஒரு நாற்காலியைப் போடச் சொன்னார். கணவனுக்கு ஏதோ என்னமோ ஆகிவிட்டதோ என்று பயந்து அந்த அம்மாளும் ஒரு நாற்காலியைப் போட்டார்.
‘கடவுளே, பயங்கர பல் வலி. சீக்கிரம் ஒரு குடத்தில் சுடுநீரும், வாயில் அடக்கிக்கொள்ள கிராம்பும் கொண்டு வா’ என்றார். மனைவியும் அப்படியே செய்தார்.
அவர் ஒவ்வொரு முறையும் வாயைக் கொப்பளித்து அந்த எச்சிலைத் திருடன் இருக்கும் புதர் மீது துப்பினார். குடத்தில் கடைசி நாலு வாய்க்கு சுடு நீர் இருக்கும் நேரத்தில் அதை இரண்டு மூன்று முறைக் கொப்பளித்து மனைவி மீது துப்பினார். அவள் கணவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று குய்யோ முறையோ என்று சப்தம் போடத் துவங்கினாள். உதவி, உதவி என்று எல்லோரையும் கூப்பிடத் துவங்கினார் .
எல்லோரும் ஓடி வந்தனர்; உடனே அந்த வணிகர் மனைவியைப் பார்த்து திட்டத் துவங்கினார்:- “நான் யாருக்காக லட்சக் கணக்கான ரூபாயைச் சேமித்து வைத்தேன்? இது என்ன அநியாயம்? இரண்டு முறை எச்சில் விழுந்ததற்கு இவ்வளவு கூப்பாடு போட்டு ஊரையே கூட்டி விட்டாளே!! இதோ பாருங்கள், அந்தப் புதருக்கு அடியில் ஒளிந்திருக்கும் திருடன் மட்டும் நான் ஒரு மணி நேரத்துக்கு எச்சில் நீரை துப்பியும் கூட எவ்வளவு அமைதியாக இருக்கிறான்? அவனுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? என்று கேட்டார்.
உடனே எல்லோரும் அந்த்ப் புதர் மீது பாய்ந்து, திருடனை வெளியே இழுத்து தர்ம அடி கொடுத்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
எந்தப் பிரச்சினையையும் சமயோசித புத்தியால் சமாளிக்கலாம்.
–subham–
You must be logged in to post a comment.