பெண்களுக்கும் மலர் மாலைக்கும் என்ன ஒற்றுமை? (Post No. 2665)

IMG_4530

Translated by london swaminathan

 

Date: 26 March 2016

 

Post No. 2665

 

 

Time uploaded in London :– 7-57 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பெண்கள் பற்றி 150 சம்ஸ்க்ருத பழமொழிகள் –பகுதி 1

மான் கூட்டத்தில் காணாமற்போன பெண்ணைக் கண்டுபிடிக்க முடியாதென்கிறார் வால்மீகி! என்ன அழகான கற்பனை! தொடர்ந்து படியுங்கள்.

 

1.அதீரம் லலநா மன: – ப்ருஹத் கதா மஞ்சரி

பெண்கள் சலனமான மனத்தைக் கொண்டவர்கள்

 

Xxx

2.அநாதா க்ருச்ரபதிதா விதேசே ஸ்த்ரீ கரோதி கிம் – கதா சரித் சாகரம்

வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட, உதவியற்ற, துயரமுடைய ஒரு பெண் என்ன செய்வாள்?

Xxx

3.அப்ரதிஷ்டம் மன: ஸ்த்ரீணாம் — கதா சரித் சாகரம்

பெண்கள் மனது நிலையற்றது.

Xxx

4.அவத்யா:  சர்வபூதானாம் ப்ரமதா: – வால்மீகி ராமாயணம்

உயிர்வாழும் எல்லா இனங்களிலும் மென்மையான பெண்களைக் கொல்லக்கூடாது

Xxx

5.அசஹ்யம் ஹி புரந்த்ரீணாம் ப்ரேம்ணோகாதஸ்ய கண்டனம் – கதா சரித் சாகரம்

ஆழ்ந்த காதலில் சிக்கிய பெண்கள், பொறுக்கமுடியாத துன்பம் அடைகின்றனர்.

IMG_4880 (2)

Xxx

6.அஹோ ஸ்த்ரீ சரிதம் சித்ரம் – கதா சரித் சாகரம்

பெண்களின் செயல்கள் மிக விநோதமானவை

Xxx

7.ஆனுகூல்ய கதயா ஹி நராணாம் ஆக்ஷிபந்தி ஹ்ருதயானி தருண்ய: -சிசுபாலவதம்

அனுகூலமாக நடந்து, மனிதர்களின் இதயங்களை ஆட்கொள்வர் பெண்கள்.

 

Xxx

8.ஆசய: ஸ்த்ரீணாம் துர்விக்ஞேய: சுரைரபி – ப்ருஹத் கதா மஞ்சரி

தேவர்களுக்கும் புரியாதது பெண்களின் எண்ணம்!

Xxx

9.ஷ்டா ஹி ஸ்த்ரீணாம் அன்யா அசஹிஷ்ணுதா – கதா சரித் சாகரம்

பெண்கள் மற்ற பெண்களை சகிக்கமுடியாதது வருந்தக்கூடிய விஷயம்.

Xxx

10.குதூஹலவானபி நிச்சர்கசாலீன: ஸ்த்ரீஜன:

-மாளவிகாக்னிமித்ர

ஆடிப்பாடி ஓடினாலும் பெண்கள், இயற்கையில் தைரியமற்றவர்கள்.

Xxx

 

IMG_4885 (2)

11.கோ ஹி வித்தம்  ரஹஸ்யம் வா ஸ்த்ரீஷு சக்னோதி கூஹிதும் – கதா சரித் சாகரம்

ஒரு பெண்ணிடமிருந்து ரகசியத்தையோ, செல்வத்தையோ யாரால் காப்பாற்ற முடியும்?

 

Xxx

12.க்ருஹாந்தா ப்ரபுதா ஸ்த்ரிய:

வீட்டிற்குள்தான் பெண்களின் ஆட்டபாட்டமெல்லாம்.

 

Xxx

13.தூரஸ்தா ஏவ சோபந்தே புஷ்ப மாலா இவ அங்கனா: – ராமாயண மஞ்சரி

பெண்களின் வசீகரம்/கவர்ச்சியானது,மலர் மாலைகளைப் போல தூரத்தில் இருக்கும்போது மட்டுமே.

Xxx

14.திக் ஜன்ம ந்ருபயோஷிதாம் – விக்ரமசரிதா

ராணிகளின் பரிதாப வாழ்க்கை முடியட்டும்

Xxx

15.ந பரஸ்பர்சமாத்ரம் ஹி ஸ்தீணாம் ஆபதி தூஷணம் – கதா சரித் சாகரம்

ஆபத்தில் சிக்கிய பெண்ணைத் தொட்டால் தப்பில்லை; அதை யாரும் கண்டிப்பதில்லை.

 

Xxxx

 

16.ந புன: சர்வதா சர்வா துர்வ்ருத்தா ஏவ யோஷித: – கதா சரித் சாகரம்

எல்லா பெண்களும் எப்போதும் கெட்டவர்கள் இல்லை.

Xxx

17.நவ அங்கனானாம்  நவ ஏவ பந்தா:

–சுபாஷிதரத்னகண்டமஞ்சுசா

இளம் பெண்கள், புதுப்புது பாதைகளை (பாஷன்) நாடுவர்.

 

Xxx

18.ந சக்யம் ப்ரமதா நஷ்டா ம்ருகீஷு பரிமார்கிதும் -– வால்மீகி ராமாயணம்

மான்களிடையே காணாமற்போன பெண்ணைக் (மான்விழியாளை) கண்டுபிடிப்பது அரிது!

Xxx

19.ந ஹி நார்யோம் வினேஷ்ர்யயா —சுபாஷிதரத்னகண்டமஞ்சுசா

பொறாமையில்லாத பெண்கள் இல்லை.

IMG_4412

Xxx

20.நஹி அதிசம்மானயேத் ப்ரமதாம் – சதோபதேசப்ரபந்த

இளம் பெண்ணை அதிகம் புகழாதே.

 

Xxx

21.நாரீணாம் பரமோ தர்மோ நிஜசீலஸ்ய பாலனம் –விக்ரம சரிதம்

ஒரு பெண்ணின் தலையாய கடமை, கற்பைப் பாதுகாப்பதே.(தமிழ் மொழியாக்கம்-லண்டன் சுவாமிநாதன்)

தொடரும்……………………………

Source: Suktisudha- The Elixir of Adages, Chinmaya International Foundation, Ernakulam, Kerala

உன்னுடைய ஓட்டைகளைத் தம்பட்டம் அடிக்காதே

tom tom

தொகுத்து வழங்குபவர்:லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்: 1967

தேதி: 2 ஜூலை, 2015; லண்டன் நேரம்: காலை 8-40

மேலும் சில சம்ஸ்கிருத பழமொழிகள்:–

 

1.ஆத்மசித்ரம் ந ப்ரகாஸயேத்

தன்னுடைய குறைகளை வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது.

உன்னுடைய ஓட்டைகளைத் தம்பட்டம் அடிக்காதே/ வெளிச்சம் போடாதே

2.பலாயமானஸ்ய சௌரஸ்ய கந்தைவ லாப:

ஓடும் திருடனுக்கு கோமணமும் லாபம்தான்

(எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்)

3.அபேயேஷு தடாகேஷு பஹுதரமுதகம் பவதி

குடிப்பதற்கு ஏற்றதல்லாத குளங்களில் தண்ணீர் நிரம்ப இருக்கிறது

(கருமியிடம் உள்ள பணம் போல)

4.இதமரண்யே ருதிதமிவ

இது காட்டில் அழுதது போல

5.அர்த்தி தோஷம் ந பஸ்யதி – சாணக்ய நீதி தர்பண:

உனக்கு கார்யம் நடக்க வேண்டுமானால் குற்றம் குறைகளைப் பார்க்காதே

6.அவ்ருத்திகம் த்யஜேத் தேசம்

வருமானம் இல்லாத தேசத்தை விட்டுவிடு (ஓரிடத்தில் வெற்றி கிட்டாவிடில் அதே இடத்தில் வசிக்காதே)

damara madu

7.அசக்தாஸ்தத்பதம் கந்தும் ததோ நிந்த்யம் ப்ரவர்ததே

ஒரு நிலையை எட்ட முடியாதவர்கள் அதை நிந்திப்பர்

(சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும் கதை)

(கிட்டினால் ராமா, கோவிந்தா, கிட்டாவிட்டால் ஒன்றுமில்லை)

8.அஸ்வா யஸ்ய ஜயஸ்தஸ்ய – சாணக்ய நீதி தர்பண

குதிரை உடையவனுக்கு வெற்றி

9.ஆத்மார்தே கோ ப்ருத்வீம் த்யஜேத் – மஹாபரதம்/பஞ்சதந்திரம்/சாணக்கியய நீதி தர்பணம்

ஆத்மஞானத்துக்காக உலகையே தியாகம் செய்வர்

தன்னுயிரைப் பாதுகாக்க தேசத்தையே விட்டும் செல்லலாம்

10.உத்தீர்ணே ச பரே பாரே நௌகாயா: கிம் ப்ரயோஜனம் – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

கரை கடந்த பின்னால் படகினால் என்ன பயன்?

(ஏறிய ஏணியை எத்தி உதைப்பர்)

11.உப்யதே யத் யத் பீஜம் தத்ததேவ ப்ரோஹதி

எதை விதைக்கிறாயோ அதுதான் கிடைக்கும்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

தினை விதைத்தவன் தினை அறுப்பான்

12.க: ஸரீர நிர்வாபயித்ரீம் சாரதீம் ஜ்யோஸ்தனாம் படாந்தேன வாரயிதி – சாகுந்தலம்

சூட்டைத் தணிக்கும் சரத் சந்திர ஒளியை, யார் துணியில் கட்டி எடுக்க முடியும்?