Compiled by London swaminathan
Date: 21 April 2016
Post No. 2744
Time uploaded in London :– 13-51
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
மனைவி- பார்யா பற்றிய பொன்மொழிகள்
பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பகுதி 5
67.அடுத்தவன் மனைவி பற்றி விமர்சிப்பது பண்புடையாளர் செயலன்று
-சாகுந்தலம், காளிதாசன்
அநார்ய: பரதார வ்யவஹார:
Xxxx
68.மற்றவர் மனைவியை கூர்ந்து கவனிப்பது தவிர்க்கப்பட வேண்டியது
-சாகுந்தலம், காளிதாசன்
அநிர் வர்ணனீயம் பர களத்ரம்
Xxxx
69.மனைவி என்பவள் அணுசரணையாக இருக்க வேண்டும்.
–க்ரந்தஸ்தகாதகாகு
அனுகூல ரசா பார்யா
Xxxx
70.மனைவி இல்லாத வீடு சூன்யமானது
(இல்லாள் இல்லாவிடில் அது வீடு இல்லை)
–கதா சரித் சாகரம் (கதைக்கடல்)
அபார்யம் ஹி சூன்யம் க்ருஹபதேர்க்ருஹம்
Xxxx
71.கணவனின் அரைப்பகுதி மனைவி (ஆணில் பாதி பெண்)
அர்தம் பார்யா மனுஷ்யஸ்ய
Xxxx
72.மனைவி என்பவள் உலோகத்தால் செய்யப்படாத ஒரு தளை (கைவிலங்கு)
-சாணக்ய நீதி சாஸ்த்ரம்
அலோஹமயம் நிகடம் களத்ரம்
Xxxx
73.கட்டுபடாத மனைவி எதிரி
-சாணக்ய நீதி
அவிநீதா ரிபு: பார்யா
Xxxx
74.மனைவியின் காம வலையில் விழுந்த கணவன், சாவையும் பொருட்படுத்தான்
–பாரத மஞ்சரி
காந்தா கடாக்ஷ ஹ்ருஷ்டோ ஹி ந வேத்தி மரணம் ஜன:
Xxxx
75.க்ரியாணாம் கலு தர்ம்யாணாம் சத்பத்ன்யோ மூல காரணம்
–குமாரசம்பவம், காளிதாசன்
அறப்பணிகள் அனைத்துக்கும் வேர் போன்றவர் நல்ல மனைவிமார்களே.
Xxxx
76.கணவனுடைய அன்பினால், உறவினர்களையும் விட்டுவிடுவர் பெண்கள்.
த்ருணம் பாந்தவபக்ஷோ ஹி பர்த்ருஸ்நேஹேன யோஷிதாம்
—-பாரத மஞ்சரி
Xxxx
77.இல்லாள் இருப்பதால்தான் அதை இல்லம் என்கிறோம்.
ந க்ருஹம் க்ருஹம் இதி ஆஹு: க்ருஹீணீ க்ருஹம் உச்யதே
–பஞ்சதந்திரம்
Xxxx
78.மனிதனுடைய மனைவி ராக்ஷசன் மனைவியாக இருக்க் வாய்ப்பில்லை
ந மானுஷீ ராக்ஷசஸ்ய பார்யா பவிதும் அர்ஹதி
–வால்மீகி ராமாயணம், 5-24-8
Xxxx
79.அடுத்தவன் மனைவியைப் பார்ப்பது (உற்று நோக்குவது) அறநெறியன்று.
–ம்ருச்சகடிக, சூத்ரகர்
ந யுக்தம் பர களத்ர தர்சனம்
Xxxx
80.காதலனைக் காணப் போகும் பெண்ணை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.
ந சக்யாஹி ஸ்த்ரியோ ரோத்தும் ப்ரஸ்திதா தயிதம் ப்ரதி
—-ம்ருச்சகடிக, சூத்ரகர்
Xxxx
81.வீரர்களின் மனைவியர் வருந்துவதே இல்லை
–வால்மீகி ராமாயணம் 4-24-43
ந சூர பத்ன்ய:பரிதேவயந்தி
Xxxx
82.சுயமரியாதையுள்ள பெண்கள், தனது கணவன், மற்ற பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை விரும்புவதில்லை
ந சஹந்தே ஹி மானின்ய: பத்யுர் அன்யா சமாகமம்
-ப்ருஹத் கதா மஞ்சரி
Xxxx
83.கணவன் மீது பற்றுடைய பெண்கள், அவர்களின் கணவரின் அன்புவலைக்குள் வேறு யாரும் வருவதை சகிப்பதில்லை.
ந சஹந்தே ஹி ராகிண்யோ பர்து: ப்ரேமபதம் ஜனம்
—ப்ருஹத் கதா மஞ்சரி
Xxxx
84.சக்களத்திகளுடன் பெண்கள் போட்டி போடுவது நிரூபிக்கப்பட்ட உண்மையே
–கதா சரித் சாகரம்
நிசர்கசித்தோ நாரீணாம் சபத்னீஷு ஹி மத்சர:
Xxxx
85.கணவன் இல்லாமல் ஒரு பெண் வாழ்வது மிகவும் கடினம்
–வால்மீகி ராமாயணம், 2-29-7
பதிஹீனா து யா நாரீ ந, சாசக்ஷ்யதி ஜீவிதும்.
Xxxx
86.கடும் கஷ்டத்திலும் மனைவியை யார் கைவிடுவான்?
பராபவே அபி டாராணாம் உபேக்ஷாம்க்ஷமதே நு க:?
–பாரத மஞ்சரி
–சுபம்–