சரஸ்வதி தேவியை வணங்கத் துவங்கிய சுல்தான் இப்ராஹீம்!(Post 7644)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7644

Date uploaded in London – – 3 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பீஜப்பூரை ஆண்ட சுல்தான் (இரண்டாம்) இப்ராஹீம் சிறந்த சரஸ்வதி பக்தன். சிறந்த கலைஞன். இசையில் தேர்ந்தவன்.

சுல்தான் இப்ராஹீம் அடில்ஷா II என்று வரலாற்றில் குறிப்பிடப்படுபவன். இவனது காலம் 1580-1627.

அவன் ஏன் சரஸ்வதி தேவியை வணங்கத் துவங்கினான் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

முக்கியமான காரணத்தை முதலில் பார்ப்போம்.

சுல்தான் இப்ராஹீம் (II) பீஜப்பூரை ஆண்ட காலத்தில் ஒரு யோகி வாழ்ந்து வந்தார். அவர் மீது சுல்தானுக்கும் மதிப்பும் மரியாதையும் நிரம்ப உண்டு. இதற்கான முக்கியமான காரணம் சுல்தானின் வாழ்க்கையில் நடந்த ஒரு சோக சம்பவத்தை அவர் சந்தோஷ சம்பவமாக மாற்றியது தான்!

pictures from metropolitan museum of art

சுல்தானுக்கு ஒரு  அருமை மகள் உண்டு. அந்த மகளின் மீது சுல்தானுக்கு அளவற்ற பாசம். ஒரு நாள் திடீரென்று அந்த அருமை மகள் இறந்து விட்டாள். சுல்தான் துக்கத்தால் கதறி அழுதான். இதைக் கேள்விப்பட்ட யோகி உடனடியாக அவனிடம் வந்தார். சுல்தானிடம் சரஸ்வதி தேவியின் உருவச்சிலை உடனடியாக அந்த அறைக்குள் கொண்டுவரப்பட்டு இறந்த மகளின் சவத்தையும் அந்த அறைக்குக் கொண்டுவர வேண்டும் என்றார். இப்படிச் செய்தால் சுல்தானின் மகள் உயிர் பிழைப்பாள் என்றார் அவர். உடனடியாக சுல்தான் அப்படியே செய்தான்.யோகி சிறந்த இசைக் கலைஞர்.  அவர் ஒரு ராகத்தைப் பாட ஆரம்பித்தார். அந்த ராகம் பாதி முடியும் முன்னரேயே இறந்த மகளின் உடலில் அசைவுகள் ஏற்பட ஆரம்பித்தன. ராகம் முடியும் போது  முற்றிலுமாக சுல்தானின் மகள் எழுந்து விட்டாள்.

சுல்தானும் அரசவையில் அங்கம் வகித்தோரும் பிரமித்தனர். யோகியின் ஆற்றலுக்கு அவர்கள் தலை வணங்கினர்.

அன்றே சரஸ்வதியின் திருவுருவச் சிலையை அரண்மனையில் பிரதிஷ்டை செய்த சுல்தான் ஹிந்துக்களின் பூஜை முறைப்படி சரஸ்வதிக்கு பூஜை செய்ய ஆரம்பித்தான்.

இப்ராஹீம் அனைத்து ராகங்களிலும் வல்லவன் என்பதால் அவன் சரஸ்வதியின் முன் பாடுவான்.

அரசவைக் கலைஞர்களும் பாடுவர்.

சுல்தானுக்கு போர், படையெடுப்பு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. ஒற்றுமையான அமைதியான வாழ்வையே அவன் விரும்பினான். அதை மக்களிடம் உறுதிப்படுத்தினான்.

விஜயபுரி என்ற நகரத்தின் பெயரை வித்யாபுரி என்று அவன் மாற்றினான்.

ஹிந்துக்களின் பழக்க வழக்கங்களை மதிக்க வேண்டும் என்று கூறிய அவன் அதைத் தன் வாழ்விலும் கடைப்பிடிக்க ஆரம்பித்தான்.

அவனது கவிஞரான ஜுஹாரி (Zuhari) இயற்றிய கிதாப்-இ-நௌரஸ் (‘Kitab-i-Naurs) என்ற நூல் பிஸ்ம் அல்லாவைத் (Bism Allah) தொழுது ஆரம்பிக்கவில்லை.

மாறாக, ஹிந்து கவிஞர்கள் நூலின் ஆரம்பத்தில் துதிக்கும் கணபதி துதியைக் கொண்டு ஆரம்பிக்கிறது!

சிவ பிரான், பார்வதி,பைரவர் உள்ளிட்ட தெய்வங்கள் நூலெங்கும் காணப்படுகின்றனர்.

என்றாலும் கூட சுல்தானுக்கு இஷ்ட தெய்வம் சரஸ்வதி தான்!

நா வன்மை, கவிதையின் தாய், அறிவுத் தெய்வம், கலைகளின் இருப்பிடம், சாஸ்திர புராண நாடக சஞ்சாரிணீ – ஆகிய சரஸ்வதி தேவியை அவன் ஆராதித்தான்.

இது அவனது தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டும் நடக்கவில்லை.

அரசாங்க ஆவணங்களிலும் பிரதிபலித்தது.

பெர்சிய மொழியிலும் மராத்திய மொழியிலும் எழுதப்படும் ஆவணங்கள், அஜ் பூஜா ஸ்ரீம் சரஸ்வதி (Ai puja shrim Saraswathi) என்று ஆரம்பிக்கப்பட்டது.

ஜுபைரி (Zubairi) என்ற வரலாற்று ஆசிரியன், தான் எழுதிய நூலான பசாசின் அல்-சுலாடின் (Basatib al-Sulatin) என்ற நூலில்,” சுல்தான் சிறந்த இசைக் கலைஞர்களுடன் நெருக்கமாகப் பழகி வந்தான். அவர்கள் அனைவரும் சரஸ்வதி தேவியை வழிபடுபவர்கள். ஆகவே சுல்தான் இப்ராஹிமும் சரஸ்வதி தேவி பால் ஈர்க்கப்பட்டான்” என்று எழுதியுள்ளான்.

இதற்கான இன்னும் பல காரணங்களைத் தங்கள் மனம் போல பல எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர்.

இன்னும் ஒரு விஷயம். சுல்தானின் மகளை உயிர்ப்பித்த ருக்மாங்கத பண்டிதர் பற்றிய விஷயம் அது.

சுல்தான் ஹிந்து தெய்வத்திற்கு கொடுத்த மரியாதையையும் பக்தியையும் கண்டு பொறாத அப்துல் ஹாஸன் (Abdul- Hasan) என்பவர், தான் பீஜப்பூருக்கு வந்தவுடன் இதை மாற்ற வேண்டுமென்று நினைத்தார். அவரிடம் ஏதாவது செய்ய வேண்டுமென்று பலரும் சொல்லவே, சுல்தானின் கவனம் யோகியிடமிருந்து தன் மீது திரும்பவேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்களா என்று அவர் கேட்க அவர்கள் ஆமாம், ஆமாம் என்றனர்.

 உடனே அப்துல் ஹாஸன் தன் உருவத்தை ஒரு மண் பாண்டத்தில் வரைந்து அவர்களில் ஒருவனிடம் கொடுத்து, மறுநாள் யோகியைப் பார்க்க சுல்தான் செல்லும் போது அதை அவனிடம் காண்பிக்குமாறு கூறினார். மறுநாள் சுல்தான் வரும் போது அவரிடம் ஹாஸனின் படத்தைக் காண்பிக்கவே அவர் யோகியிடம் செல்லாமல் ஹாஸன் இருக்குமிடம் நோக்கிச் சென்றார்.

அங்கு ஹாஸன் சுல்தானை நோக்கி, “உன் மனம் இறைவனிடம் நிலை பெறட்டும் “ என்று பல்வேறு விதமாக உபதேசித்தார்.

யோகியை வரவழைத்த அப்துல் ஹாஸன் அவர் முன்னர் மழை நீரை பாலும் நெய்யுமாக மாற்றிக் காண்பிக்க ருக்மாங்கத பண்டிதர் ருக் அல் டின் (Rukn al-Din) என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு இஸ்லாமுக்கு மாறினார்.

இப்படி ஒரு கதை உண்மையா என்று வரலாற்று ஆசிரியர்கள் சந்தேகப்படுகின்றனர். அப்துல் ஹாஸன் யோகியை விட உயர்ந்தவர் என்ற அபிப்ராயத்தை உருவாக்க இப்படி ஒரு கதை உருவாக்கப்பட்டது என்பது அவர்கள் கருத்து.

சிந்தித்துப் பார்த்தால், இறந்த உயிரை எழுப்பிய யோகி பெரியவரா, மழை நீரை பாலாக மாற்றிக் காண்பித்த ஹாஸன் பெரியவரா என்று கேட்டால் சிறு குழந்தை கூட என்ன பதிலைச் சொல்லும் என்பது புலப்படும்.

தனது இறுதி வரை சரஸ்வதி தேவியின் பக்தனாக சுல்தான் இப்ராஹீம் திகழ்ந்தான் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.

*

சரஸ்வதி தேவியை வணங்கிய சுல்தான் இப்ராஹீம் போன்ற ஏராளமான வரலாறுகள் இந்திய சரித்திரத்தில் உண்டு. அதிகாரபூர்வமான நூல்கள் தரும் வரலாறுகள் இவை.

இவற்றை நாம் கேள்விப்படுவதே இல்லை.

காரணம் செகுலரிஸம்.

செகுலரிஸம் என்றால் இன்றைய செகுலரிஸ்டுகளின் உபதேசப்படி, ‘ஹிந்து மதத்தை இழிவு படுத்தும் எதையும் உடனடியாகப் பரப்புவது; அதற்குப் பெருமை சேர்க்கும் எதையும் மறைத்து விடுவது; இஸ்லாமிய, கிறிஸ்தவர்களை உண்மைக்கு மாறாகக் கூடப் புகழலாம்; ஆனால் ஒரு போதும் உண்மையான விஷயமாக இருந்தால் கூட இகழக் கூடாது’ என்பது தான்!

இது மாற வேண்டும் இல்லையா, சுல்தான் இரண்டாம் இப்ராஹீம் வாழ்க்கைச் சம்பவம் போல உள்ளவற்றை ஹிந்துக்கள் உணர வேண்டும்; பரப்ப வேண்டும்!

****

ஆதார நூல் : Sufi’s of Bijapur 1300-1700 by Richard Maxwell Eaton, 1978 publication

நன்றி : Richard Maxwell Eaton சுல்தான்படம் – நன்றி – ரிச்சர்ட் மாக்ஸ்வெல் ஈடன்

tags சுல்தான் இப் ராஹிம் , அடில்ஷா,பீஜப்பூர், சரஸ்வதி

கறுப்பு மான், ஸரஸ்வதி நதி மர்மங்கள்! ஆயுர்வேத ரஹசியங்கள்! (4526)

Written by London Swaminathan 

 

Date: 21 DECEMBER 2017 

 

Time uploaded in London- 7-46 am

 

 

Post No. 4526

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

மநு நீதி நூல்-9 (Post No.4526)

கறுப்பு மான், ஸரஸ்வதி நதி மர்மங்கள்! ஆயுர்வேத ரஹசியங்கள்– 

  1. லாப நோக்கும் காம நோக்கும் இல்லாதவர்களுக்கே தர்மத்தின் உபதேசம். (மற்றவர்களுக்கு அல்ல). தர்மத்தை அறியவிரும்புவோருக்கு வேதமே பிரமாணம் (2-13)

 

133.வேதம், ஒன்றுக்கொன்று முரண்பட்ட விஷயங்களைச் சொல்லுமானால் இரண்டும் சரி என்று அறிக; ஏனெனில் அறிஞர்கள் அவ்விரண்டும் சரி என்று சொல்லுவர்.

134.ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். வேள்வியை சூரிய உதயத்துக்கு முன்னாலும், சூர்ய அஸ்தமனத்துக்குப் பின்னாலும், சூர்யனோ நட்சத்திரங்களோ இல்லாத காலத்திலும் செய்யலாம் என்று வேதங்கள் விளம்பும். இதில் முரண்பாடு ஏதுமில்லை. இவை அனைத்தும் தர்மமே.

  1. எந்த மனிதனுக்கு பிறப்பு (கர்ப்பாதானம் முதல்)

முதல் இறப்பு வரை வேதமுறைப்படியான சடங்குகள் விதிக்கப்பட்டிருக்கிறதோ அவனுக்கே- அந்த இரு பிறப்பாளனுக்கே – இந்த சாஸ்திரத்தை ஓதும் அதிகாரமுண்டு. மற்றவர்க்கில்லை.

 

136.சரஸ்வதி நதிக்கும், த்ருஷத்வதி நதிக்கும் இடைப்பட்ட பிரதேசம் கடவுளால் உருவாக்கப்பட்ட பிரம்மாவர்த்த தேசம் ஆகும்.

137.அந்த தேசத்தில் எப்போதும் பெரியோர் வசிப்பதால் பிராமணர் முதலிய வருணத்தாருக்கும் கலப்பு ஜாதியாருக்கும் ஆதிகாலத்திலிருந்தே ஆசார விதிகள் பாரம்பர்யமாக உள்ளன.

 

Geography in Manu Smrti

 

138.குரு, மத்ஸ்ய, பாஞ்சால, சூரசேன தேசங்கள் பிரம்மரிஷி தேசம் எனப்படும். இவை பிரம்மாவத்தத்துக்கு அடுத்த நிலையில் உள்ளன.

139.இந்த தேசங்களில் பிறந்த பிராமணர் இடத்தில் ஒவ்வொருவரும் தர்மத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்

 

140.இமய மலைக்கும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் விநாசன த்துக்கு கிழக்கேயும், பிரயாகைகு மேற்கேயும் உள்ள இடம் மத்திய தேசம் எனப்படும் (2-21)

 

 

141.கிழக்கு சமுத்திரத்திலிருந்து மேற்கு சமுத்திரம் வரையுள்ள பிரதேசத்துக்கு சாதுக்கள் வசிக்கும் ஆர்யாவர்த்தம் என்று பெயர்.(2-22)

 

Antelope Black buck picture from Wikipedia.

Zoology in Manusmrti

142.கிருஷ்ணசாரம் (BLACKBUCK) என்னும் மான் இயற்கையில் எங்கு வசிக்கிறதோ அந்த பூமியே யாகம் செய்வதற்குரிய பூமியாகும். மற்றவிடம் அசுத்தமான மிலேச்ச தேசம் என்பப்படும் (2-23)

 

143.இருபிறப்பாளர்கள் (BRAHMIN, KSHTRIA, VAISYA) இந்தப் பிரதேசத்தில் வாழ எல்லா முயற்சிகளும் எடுக்கவேண்டும். சூத்திரர்கள் ஊழியத்துக்காக எந்த தேசத்திலும் வசிக்கலாம்.

144.இதுவரையில்  உலகத்தின் உற்பத்தியையும் தர்மத்திற்குக்  காரணமான புண்ய தலங்களையும் எடுத்துச் சொன்னேன். இனி வர்ணாஸ்ரம தர்மங்களைக் கேளுங்கள் (2-25)

145.இருபிறப்பாளர்கள் வேத சாஸ்திரங்களில் சொல்லப்படிருக்கிற கர்ப்பாதானம் முதலிய சடங்குகளை, இம்மை நலனுக்காகவும், மறுமையில் புண்ணியப் பிறப்பெடுக்கவும் உரிய சரீர சுத்திகளைச்செய்ய வேண்டும்.

 

146.கர்ப்பாதான  மந்திர ததாலும், சீமந்த ஹோமத்தாலும் (வளைகாப்பு),

ஜாதகர்மம் (பிறப்பு தொடர்பான சடங்கு)  நாமகரணம் (பெயர் சூட்டல்), அன்னப் ப்ராசனம் (உணவூட்டுதல்)  சௌளம் (முடி இறக்கல்), உபநயனம் (பூணூல் போடுதல்) முதலிய சடங்குகளால் இருபிறப்பாளர்கள் செய்த பாவங்கள் நீங்கும்; புணர்ச்சி செய்யக்கூடாத நாட்களில் புணர்ந்த தோஷமும், அன்னையின் கருப்பையில் வசித்த தோஷமும் நீக்கப்படும் (2-27)

 

 

147.வேதம் ஓதுவதாலும், மது மாமிசம் சாப்பிடாத   விரதத்தாலும், ஔபாசனம் மு தலிய ஹோமங்களாலும், தேவரிஷி பிதுர தர்ப்பணத்தினாலும் (நீத்தார் நினைவுச் சடங்குகள்), ஐம்பெரும் வேள்விகளாலும் (பஞ்ச மஹா யக்ஞம்) அக்னிஷ்டோம ஹோமங்களாலும் , புதல்வர்களைப்  ச பெறுவதாலும், சரீரமானது மோட்சத்திற்குரிய தாக்கப்படுகிறது.(2-28)

Ayurveda in Manu smrti

 

148.தொப்புள்கொடியை அறுப்பதற்கு முன்,ஆண் குழந்தைக்கு ஜாத கர்மம் என்னும் பிறப்பு தொடர்பான சடங்கு செய்யப்படும். அப்போது வேத மந்திர முழக்கத்தோடு குழந்தைக்கு தங்கத்தை இழைத்து தேனும் வெண்ணையும் கொடுக்க வேண்டும்.

எனது கருத்து: Geography in Manu

மேற்கூறிய ஸ்லோகங்களில் உள்ள சுவையான விஷயங்களை ஆராய்வோம் அல்லது சிந்திப்போம். ஸரஸ்வதி நதி குறித்து மனு சொல்லும் விஷயம் ஆராய்ச்சிக்குரியது. மநு இன்னும் ஒரு இடத்திலும் இந்த நதி பற்றிப் பேசுகிறார். 11-78-லும் ஒரு விஷயத்தைச் சொல்லுகிறார். பிரம்மஹத்தி- அதாவது பிராமணனைக் கொன்ற பாவம்- போவதற்காகச் சொல்லப்படும் ஒரு பரிஹாரம் சரஸ்வதி நதியின் முழு நீளத்தையும் நீரோட்டத்துக்கு எதிராக நடந்து கடக்க வேண்டும் என்பதாகும்.

 

இங்கே ஒரு கேள்வி எழுகிறது. மனுவின் காலத்தில் ஸரஸ்வதி நதி ஓடியதை அறிகிறோம். அதே நேரத்தில் விநாஸன் என்ற சொல்லுக்கு ஸரஸ்வதி நதி பூமியில் மறையும் இடம் என்று வியாக்யானம் எழுதுவோர் உரை எழுதுகின்றனர். ஸரஸ்வதி,  த்ருஷத்வதி என்று இந்த அத்தியாயத்தில் மநு குறிப்பிடுவன வேத கால நதிகள். ஆகவே மநு, சரஸ்வதி ஓடிய கி.மு.2000ஐ ஒட்டி இதை எழுதியிருக்கவேண்டும். ரிக்  வேதமோ மலையில் தோன்றி கடலில் மறையும் பிரம்மாண்ட நதி பற்றிப் பேசுகிறது. மஹாபாரதமோ மறையும் (விநாசன்) நதி பற்றிக் குறிப்பிடுகிறது. 11-ஆம் அத்தியாயத்தின் ஸ்லோகத்தில் ஸரஸ்வதி நதியை எதிர் நீச்சல் போட்டுக் கடக்க வேண்டும் என்று மநு சொல்லுவதால் அவர் ஸரஸ்வதி நதி காலத்தவர் என்பது தெளிவாகிறது. ஆகவே மநுவின் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு அல்ல. கி.மு2000-க்கும் முன்னர் என்று அறியலாம். சதி (உடன்கட்டை ஏறும்  வழக்கம்) பற்றி எங்குமே குறிப்பிடாததும். விந்தியத்துக்கு அப்பாலுள்ள விஷயங்களைப் பே சாததாலும் தெற்கில் நாகரீகம் பரவியதற்கும் முன்னதாக வாழ்ந்தவர் என்று துணியலாம்.

இன்னும் இரண்டு சுவையான விஷயங்கள் (Medicine and Sociology in Manu):–

ஆயுர்வேதம்: சிறு வயதிலேயே குழந்தைக்குத் தங்கத்தில் இழைத்து — தங்கச் சத்துடன் வெண்ணை, தேன் கொடுக்கச் சொல்லுவது அக்கால மருத்துவ வளர்ச்சியைக் காட்டுகிறது.

 

மிலேச்ச என்ற சொல், ‘பண்பாடற்ற மக்கள்’ பிற இடங்களில் வசித்ததையும் காட்டுகின்றது. பிற்கால இலக்கியத்தில், இவை கிரேக்கர்களையும் ரோமானியர்களையும் குறித்தன. அதற்குப் பின்னர் இது அராபியர்களையும், துலுக்கர்களையும், கிறிஸ்தவர்களையும் குறித்தது. ஆகவே மநு காலத்தில் கிரேக்கர்கள்  அல்லது வேதத்தைப் பின்பற்றாத பிற ஜாதியினர்   பற்றிய அறிவு இருந்திருக்கலாம்.

 

பிராணி இயல் தகவல் (zoology in Manu)

 

எல்லாவற்றையும் விட சுவையான தகவல் கிருஷ்ண சாரம் (Blackbuck antelope) என்னும் மான் வகைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆகும்.

 

கிருஷ்ணசாரம் எனப்படும் மான் உலவும் இடம் எல்லாம் வேள்விக்குரிய பூமி என்று சொல்லப்படுகிறது. இது இந்தியாவின் தென் கோடி முனையில் இருந்து இப்போதுள்ள வங்க தேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய தேசங்களிலும் 1850 வரை இருந்தது வெள்ளைக்கார்கள் எழுதிய குறிப்புகளில் இருந்து தெரிகிறது. ஆக இந்திய பூமி முழுதும் புனித பூமி, வேள்விக்குரிய பூமி என்ற அரிய பெரிய உண்மையை மநு பறை சாற்றுகிறார். இதை சங்கத் தமிழ் இலக்கிய நூல்களும் உறுதிப்படுத்துகின்றன.

 

கரிகால் சோழன் பருந்து வடிவ யாக குண்டம் செய்து வேள்வி இயற்றிய தையும், சோழ மன்னன் ராஜ சூய யாகம் செய்ததையும், முது குடுமிப் பெருவழுதியின் பாண்டிய நாடு முழுதும் வேள்வித் தூண்கள் பெருகி இருந்ததையும் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்கத் தமிழ் நூல்கள் பாடிப் பரவுகின்றன. ஆக கருப்பு மான் உலவிய புண்ய பூமி பாரதம்; அதிலும் குறிப்பாக புண்ணியப் பிரதேசம் சரஸ்வதி நதி தீரம், குருக்ஷேத்ரம், பாஞ்சாலம் எனலாம். காரணம் என்னவெனில் இங்கு தலைநகரை அமைத்துக் கொண்டு அவர்கள் ஆண்டனர். மேலும் வற்றாத ஜீவ நதிகள் அவை என்பதால் அபரிமித தான்ய விளைச்சலும் இருந்தது. நீர் இன்று அமையாது உலகு என்பது வள்ளுவன் வாசகம் அன்றோ!

TAGS:– மநுநீதி நூல், கறுப்பு மான், சரஸ்வதி, மர்மம்

 

to be continued………………………………

–SUBHAM–

 

சரஸ்வதி நதி பற்றிய சுவையான விஷயங்கள்! (Post No.4211)

Written by London Swaminathan

 

Date: 14 September 2017

 

Time uploaded in London- 10-47

 

Post No. 4211

 

Pictures are taken from various sources; thanks.

 

 

வேத காலத்தில் ஒரு பிரம்மாண்டமான நதி ஓடியது; அதன் பெயர் சரஸ்வதி; உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் இதன் புகழ் பாடுகிறது. ஆனால் மஹா பாரத காலத்திலேயே (கி.மு.3100) இது வற்றிச் சுருங்கி விட்டது. இப்பொழுதும் மனிதர்கள் நம்புவது என்னவென்றால் இந்த நதி அந்தர்வாஹினியாக த்ரிவேணி சங்கமத்தில் (அலஹாபாத், உத்திரப் பிரதேசம்) கலக்கிறது என்பதாகும்

 

சரஸ்வதி நதி பற்றி பாபா அணுசக்தி ஆராய்ச்சி (B A R C) நிலையம் கொடுத்த தகவல்கள் இந்திய வரலா ற்றையே மாற்றிவிட்டது. நாம் இது வரை சிந்துவெளி நாகரீகம் என்று அழைத்தது எல்லாம் தவறு அது, வேத கால சரஸ்வதி நதி நாகரீகம் என்று விஞ்ஞான ஆராய்ச்சி நிரூபித்துவிட்டது!

 

ரிக் வேதம் 50 க்கும் மேலான இடங்களில் சரஸ்வதி நதியைக் குறிப்பிடுகிறது. அந்த வற்றாத ஜீவ நதிக்கு நம் நாவில் வெள்ளமெனப் பொழியும் சரஸ்வதி தேவியின் பெயரை வைத்தது என்ன பொருத்தம்!

 

நாகரீகத்தின் உச்சானிக் கொம்பில் நின்ற வேத கால இந்துக்கள் நதிகளுக்குப் பெண்களின் பெயர்களைச் சூட்டினர். தாய்மார்களின் கருணையும் அளவற்றதன்றோ!

 

ரிக்வேதம் போற்றும் சரஸ்வதி!

 

நீயே சிறந்த தாய்

நீயே தலைசிறந்த நதி

நீயே கடவுள்

 

ரிக்வேதத்தில் நதி ஸ்துதி என்று ஆறுகளை போற்றித் துதிக்கும் அற்புதமான பாடல் ஒன்று உண்டு! இதில் கங்கா, யமுனா, சரஸ்வதி, சுதோத்ரி (சட்லெஜ்) ஆகியன போற்றப்படுகின்றன. ஆரிய-திராவிட வாதம் பேசும் அறிவிலிகளுக்கு செமை அடி கொடுக்கும் பாடல் இது! ஏனெனில் இந்திய நதிகளைக் கிழக்கிலிருந்து மேற்காக வருணிக்கின்றன இந்த நதி ஸ்துதி. ஆக வேத காலத்திலேயே கிழக்கில்- கங்கைச் சமவெளியில் – பெரிய நாகரீகம் நிலவியது. மேலும் ரிக் வேதத்தில் அதிகப் பாடல்களில் பாடப்படும் இந்திரனின் திசை கிழக்கு! ஆகவே இந்துக்கள் மண்ணின் மைந்தர்கள்! வந்தேறு குடியேறிகள் அல்ல!

இந்த துதிப்பாடல் சரஸ்வதி நதியை சட்லெஜ்-யமுனை நதிகளுக்கு இடையே வைக்கிறது

 

நதிகளில் எல்லாம் புனித மான சரஸ்வதி உயிர்த்துடிப்புள்ள நதி; மலையிலிருந்து கடல் நோக்கிச் செல்லும் இந்த நதி அபரிமிதமான வளத்த்தைச் சுரக்கிறது

 

இப்பேற்பட்ட சரஸ்வதி பாலைவனத்தில் மறைவது பற்றி மஹாபாரதமும் ஐதரேய, சதபத பிராமணங்களும் பேசுகின்றன.

 

1872ம் ஆண்டில் சி.எF ஓல்தமும் ( C F Oldham and R D Oldham) ஆர்.டி. ஓல்தமும் நடத்திய சர்வேயில் சரஸ்வதியும் அதன் உபநதிகளும் ஒரு காலத்தில் ஓடியதை உலகிற்கு அறிவித்தனர். சரஸ்வதி நதிக்கு யமுனையும் சட்லெஜ் நதியும் தண்ணீர் கொண்டுவந்தன என்றும் புவியியல் மாற்றங்களால் அவை விலகிச் செல்லவே சரஸ்வதியின் ஒளி மங்கியது என்றும் அவர்கள் எழுதிவைத்தனர்.

விஞ்ஞானிகள் என்ன கண்டார்கள்?

 

வி.எம்.கே.புரி, பி.சி.வர்மா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் இந்த நதி அப்பர் ப்ளைச்டோசின் (UPPER PLEISTOCENE ) காலத்தில் இருந்தது,

கார்வால் இமயமலைப் பகுதியில் இருந்த பனிக்கட்டி ஆறுகள் உருகி இதற்கு தண்ணீர் அளித்தது. பின்னர் பனிக்கட்டி யுகத்தில் கதை மாறியது என்று சொன்னார்கள்.

 

(இந்தியாவின் முதல் அணுகுண்டு 1974லும் இரண்டாவது அணுகுண்டு 1998லும் வெடிக்கப்பட்டன)

1998 மே 11ல் பொக்ரானில் நாம் அணுகுண்டு வெடித்துச் சோதித்து உலகையே வியப்பில் ஆழ்த்திய போது, அந்த அணுகுண்டு வெடிப்பினால் நிலத்தடி நீருக்கு என்ன நேர்ந்தது என்பதை ஆராய்வதில் பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டது. அபோது அது குடி நீருக்குப் பயன்படுத்தக்கூடியது என்பதும் கீழேயுள்ள தண்ணீர் 8000 முதல் 14000 ஆண்டுப் பழமையானது என்றும் தெரியவந்தது.

 

இது தவிர மத்திய நிலத்தடி நீர் கமிஷன் 24 கிணறுகளை வெவ்வேறு இடத்தில் தோண்டி ஆராய்ந்ததில் 23 கிணறுகளின் நீர் தூய குடிநீர் என்றும் கண்டது.

 

இதிலிருந்து வரலாற்று நிபுணர்கள் கண்ட முடிவு:

கி.மு.6500 முதல் கி.மு3100க்கு இடைப்பட்ட காலத்தில் ஹரப்பா நாகரீகத்துக்கு முந்தைய சரஸ்வதி நதிதீர நாகரீகம் இருந்தது . அப்போதுதான் ரிக்வேதப் பாடல்கள் எழுந்தன. பின்னர் கி.மு3100 முதல் கி.மு 1900 வரை சிந்துவெளி/ஹரப்பன் நாகரீகம் இருந்தது.

கிமு 1900 முதல் கிமு 1000 வரை சரஸ்வதி-சிந்து நாகரீகம் படிப்படியாக அழிவு நிலை க்கு வந்து சரஸ்வதி நதி அடியோடு மறைந்தது. இதனால் மக்கள் அங்கேயிருந்து கங்கைச் சமவெளிக்குக் குடியேறினார்கள்.

 

இந்த தேதிகள், வரலாற்று ரீதியில் சில சிக்கல்களை ஏற்படுத்தும். ஆயினும் விரிவான ஆய்வுகள் மூலம் புதிர்களை விடுவிக்கலாம்.

 

1995 ஆம் ஆண்டு ஆய்வுகள்

 

ராஜஸ்தானிலுள்ள ஜைசால்மர் மாவட்ட விண்கல புகைப்படங்களை ஆராய்ந்தபோது சரஸ்வதி நதியின் மறைந்த தடயங்களில் சில பகுதிகள் தென்பட்டன. இது பற்றி பாபா அணுசக்தி விஞ்ஞானிகள் CURRENT SCIENCE கரண்ட் சயன்ஸ் என்ற சஞ்சிகையில் எழுதினர். 1995ல் டாக்டர் எஸ்.எம் ராவ், டாக்டர் கே.எம்.குல்கர்னி ஆகியோர் ஐசடோப் பிரிவைச் (ISOTOPE DIVISION) சேர்ந்தவர்கள் . அவர்கள் நிலத்தடி  நீரின் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன்  ஐசடோப்புகளை ஆராய்ந்தனர். ரிக்வேதத்தில் சரஸ்வதி நதி பற்றிச் சொல்லப்பட்ட விஷயங்கள் உண்மை என்று அவர்கள் ஆய்வு முடிவுகள் காட்டின. இப்போது கங்கா நகர் மாவட்டத்திலுள்ள கக்கர் நதியின் வறண்ட நிலப்படுகைகள், பாகிஸ்தானிலுள்ள ஹக்ரா, நரா நதிகள் ஆகியன சரஸ்வதியின் ஒரு சில பகுதிகள். இன்னும் நிலத்தடியில் சரஸ்வதியின் நீர் உள்ளது கோடைகாலத்திலும் இந்த நீர், பயிர்கள் வளர உதவுகின்றன. ஜைசாலமர் பகுதியில் மிகக்குறைந்த அளவு மழை பெய்தாலும் நிலத்துக்கு 50-60 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைக்கிறது. இவை எல்லாம் சரஸ்வதி நதியின் மிச்ச சொச்சங்களே என்றும் கண்டனர்.

 

நிலத்தடி நீர் சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை ரேடியோ கார்பன் தேதிகள் நிர்ணயிக்கின்றன.

 

 

1910 ஆம் ஆண்டில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்ட ஜி.இ. பில்க்ரிம் ( G E PILGRIM) என்பவரும் மிகப் பழங்கால வண்டல் மண் படுகைகள் காணப்படுவதாகவும் இமயத்தின் அடிவாரத்திலிருந்து சிந்து வளைகுடா வரை காணப்படும் இப்படுகைகள் சிவாலிக் என்ற நதியாக இருக்கலாம் என்றும் எழுதினார்.

ரிக்வேத சரஸ்வதி பற்றி அவருக்குத் தெரியாது.

ரிக்வேதம் இந்த நதியை நதிகளுக்கு எல்லாம் தலையாயது என்று பாராட்டியதை அவர் அறியார்.

அம்பிதமே நதிதமே தேவிதமே சரஸ்வதி (ரிக்.2-41-16) புகழ்கிறது

 

(சிறந்த தாய், சிறந்த நதி,  சிறந்த தேவி சரஸ்வதி)

 

மஹோ ஆர்ணா சரஸ்வதி ப்ரசேதயதி கேதுன தியோ விஸ்வ  விரஜதி 1-3-12

 

சரஸ்வதி கடல் போன்றது; அவள் ஒளிவீசுகிறாள்; எல்லோருக்கும் ஊற்றுணர்ச்சி ஊட்டுபவள் அவளே

 

நி த்வததே வர அப்ருதிவ்ய இளைஸ்பதே சுதிநத்வே அஹ்னம்; த்ருஷத்வயம் மானுஷே அபயயாம் சரஸ்த்வயாம் ரெவத் அக்னே திதி (3-23-4)

 

ஓ அக்னியே நாங்கள் உன்னை பூமியின் புனிதமான இடத்தில் — இலா பூமியில்-  ஒளிமிகு நாட்களில் ஏற் றியுள்ளோம். த்ருஷத்வதி, அபயா, சரஸ்வதி ஆறுகளின் கரை மீது மானுடர்களுக்காகப் பிரகாசிப்பாயாக.

சித்ர இத் ராக ராஜக இத் அன்யகே சரஸ்வதீம் அனு: பர்ஜன்ய இவ ததநதி வர்ஷ்த்ய சஹஸ்ரம் அயுத ததாத் 8-21-18

 

சரஸ்வதி தீரத்தில் வசிக்கும்  புகழ்மிகு அரசன், மற்ற எல்லாரும் இளவரசர்கள். மழைக்கடவுள் மழையைப் பொழிந்து தள்ளுவது போல, அவன் பத்தாயிரம் பசுமாடுகளை ஆயிரம் தடவை தருகிறான்

அயஸி புரஹ; விஸ்வ ஆபோ மஹின: சிந்துர் அன்ய: சுசிர் யதி கிர்ப்ப்ய அ ஆ சம்த்ராத் 7-95-1/2

 

சரஸ்வதி ஒரு வெண்கல நகரம்; எல்லா நதித் தீரங்களைளையும் , நீர் நிலலைகளையும் விஞ்சி நிற்கிறது. மலையிலிருந்து சமுத்ரம் வரை தூய நீராக ஓடுகிறாள்

 

இப்படி எல்லா மண்டலங்களிலும் சரஸ்வதி புகழ்ப்படுவதால் ரிக் வேதம் என்பது கி.மு.3000க்கும் முன்னதாகவே சரஸ்வதி நதிக்கரைகளில் ஒலித்திருக்க வேண்டும்!

 

இந்தியாவிலிருந்து பாரசீக நாட்டுக்கு (ஈரான்) குடியேறிய ஜொராஸ்டரும் சரஸ்வதியைப் போற்றுகிறார்.

மனு தர்ம சாஸ்திரமும் இந்த நதியைப் புகழ்கிறது

சரஸ்வதிக்கும் த்ருஷத்வதிக்கும் இடைப்பட்ட பூமியே கடவுளால் உண்டாக்கப்பட்டது. இதுவே பிராமணர்கள் வாழுமிடம் (மனு 2-17-8)

 

ஆனால் வேத காலம் முடிவதற்கு முன்னரே சரஸ்வதி மறையத் துவங்கியதை பஞ்சவம்ச பிராமணம் தெளிவாகக் குறிப்பிடுகிறது

 

 

ராஜஸ்தானிலும் பாகிஸ்தானிலும் ஓடிய சரஸ்வதி பூகர்ப்ப மாற்றங்களால் நான்கு முறை திசை மாறி ஓடியது.

 

டெக்கான் காலேஜ் பட்டமேற்படிப்பு ஆராய்ச்சிக் கழகம் சரஸ்வதி நதியின் பாதை எப்படி எல்லாம் மாறியது என்று ஆராய்ந்து வெளியிட்டுள்ளது. கிமு4000 ஆம் வாக்கில் இமயமலையில் தோன்றிய சரஸ்வதி, மதுரா, கட்சிலுள்ள பஞ்சபத்ரா வழியாக ஓடியது. நாலாவது முறை திசை மாறியபோது அது சிந்து நதியில் இணைந்து தனது பெயரையும் புகழையும் இழந்தது. யமுனையும் சட்லெஜ்ஜும் தண்ணிரைக் கொணந்து கொட்டிவிட்டு யமுனை நதி திசை மாறிக் கங்கையில் கலந்தவுடன் சரஸ்வதியின் வளம் குறைந்தது

 

ஹரப்பன் நாகரீக நகரங்களான லோதல் காலிபங்கன் ஆகியன சரஸ்வதி நதிப் ப டுகையிலேயே அமைந்துள்ளன.

 

5000 ஆண்டுகளுக்கு முன் இமயமலையின் சிவாலிக்  குன்றுகளில் உதயமாகி ஹிமாசல் பிரதேஷ், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் வழியாக ஓடி அரபிக் கடலில் கலந்த சரஸ்வதியின் கதை இது!

 

பேராசிரியர் வைத்யா போன்றவர்கள் சரஸ்வதி நதியின் கதையை புத்தகமாக வெளியிட்டுள்ளனர். தமிழிலும் சரஸ்வதியின் கதை வெளியாகியுள்ளது. நான் கொடுத்தது எல்லாம் பத்திரிக்கை செய்திகளின் தொகுப்பகும்.

 

இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்பட்டதே சரஸ்வதின் மறைவுக்குக் காரணம்.

 

சரஸ்வதி நதி பற்றிய வேத, இதிஹாச, பிராமன நூல்கள் தகவல்களை வரிசைப் படுத்தினால் வேத காலம், சிந்துவெளி, சரஸ்வதி நாகரீக காலங்களை உறுதிப்படுத்திவிடலாம்.

 

Geo Morphologist Dr Amal Kar ஜியோ மார்ப்பாலஜிஸ்ட டாக்டர் அமல் கர் சில சுவையான விஷயங்களைச் சொல்லுகிறார்:

 

பத்து லட்சம் ஆண்டுகளுக்கும் 40,000 ஆண்டுகளுக்கும் இடையே சரஸ்வதி நதி தார்ப் பாலைவனம் வழியே ஓடியது

லோக்பட் என்னும் துறைமுக நகரம் கல்விக்கும் வணிகத்துக்கும் பெயர்பெற்ற இடம்.  இந்த நதிக்கரையில் இருந்தது.

மஹாபாரதம் குறிப்பிடும் நாராயண சரோவர் இதன் கரையில் இருந்தது

 

ஹரப்பன் நாகரீகத்துக்கும் முந்தைய அலிபங்கன், கலிபங்கன் நாகரீகம் இதன் கரையில் செழித்தோங்கியது.

சதத்ரு (சட்லெஜ்) என வேதம் குறிப்பிடும் நதி இதன் உபநதியாகும்.

 

மஹாபாரதம் சப்த சரஸ்வதி என்னும் நதி பினாசன் (விநாசன்) என்னும் இடத்தில் மறைவதைக் குறிப்பிடுகிறது.

 

TAGS: சரஸ்வதி, கக்கர், வேத நதி, நதி துதி

 

–SUBHAM–

 

 

 

சரஸ்வதி இருக்குமிடத்தில் லக்ஷ்மி ஏன் வருவதில்லை?

14.சம்ஸ்கிருதசெல்வம்

சரஸ்வதி இருக்குமிடத்தில் லக்ஷ்மி ஏன் வருவதில்லை? ரகசியம் இதோ!

 

By ச.நாகராஜன்

 

         பணம் வேண்டும் என்று எண்ணாதவன் உலகில் யாரேனும் உண்டா? நவீன காலத்தில் சந்யாசிகள் கூடத் தங்கள் ஆசிரம வளர்ச்சிக்காகவும் நற்பணிகளுக்காகவும் பணத்தைத் தேடிச் சேர்க்கின்றனர்.ஆகவே பணத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி தேவியை அனைவரும் வணங்குவதில் வியப்பே இல்லை.

 

 

ஒரு கவிஞர் பார்த்தார், அனைவரின் நன்மைக்காகவும் ஸ்ரீதங்காத இடங்களைப் பட்டியலிட்டுத் தந்து விட்டார் தன் கவிதை வாயிலாக. அதைப் பார்ப்போம்:

 

குசைலினம் தந்தமலோப ச்ருஷ்டம்

   ப்ரஹ்மாஷினம் நிஷ்டூரபாஷினம் I

சூர்யோதயே சாஸ்தமிதே ஷயனம்

    விமுச்சதி ஷீரபி சக்ரபாணிம் II

 

(தந்தம்பல்; நிஷ்டூர பாஷினம்கடுஞ்சொற்களைப் பேசுதல்; சூர்யோதயம்சூரிய உதய நேரம்; அஸ்தமிதம்சூரியன் அஸ்தமிக்கும் மாலை வேளை; ஷயனம்உறங்குதல்)

 

அதிர்ஷ்ட தேவதையான லட்சுமி தேவி விஷ்ணுவையும் விட்டு நீங்கி விடுவாளாம்! எப்போது?

 

அவர் அழுக்கான உடைகளை அணிந்தால்

பற்களைத் துலக்காமல் அவை அழுக்குடன் இருந்தால்

அவர் பெருந் தீனிக்காரராக இருந்தால்

அவர் கடுஞ்சொற்களைப் பேசினால்

சூர்யோதய காலத்திலும் சூர்யாஸ்தமன காலத்தில் அவர் தூங்கினால்

அவர் விஷ்ணுவாக இருந்தாலும் க்ஷ்மி தேவி அவரை விட்டு விலகி விடுவாளாம்!

 

 

ஆக நல்ல பழக்கங்களை மேற்கொண்டால்  அது நாம் லக்ஷ்மி தேவியை வரவேற்கிறோம் என்று பொருள்!

 

இது ஒரு புறமிருக்க,  நல்ல வாக்கை உடைய புலவர் ஒருவர் வறுமையில் வாடுகிறார். அதன் காரணத்தை ஆராய்ந்தார். உலகியல் ரீதியான விளக்கம் சட்டென்று அவருக்குப் புரிந்தது. எந்த மாமியாரும் மருமகளும் ஒத்துப் போனதாக உலக சரித்திரம் உண்டா, என்ன! அப்படி இருக்கும் போது சரஸ்வதியும் லட்சுமியும் மட்டும் எப்படி ஒத்துப் போவார்கள். மாமியார் இருக்கும் இடத்தில் மருமகள் இருப்பாளா என்ன! அது தான் தன்னிடம் சரஸ்வதி இருக்கும் போது லட்சுமி வந்து வாசம் செய்ய மாட்டேன் என்கிறாள்! காரணம் புரிந்தவுடன் கவிஞரின் மனம் ஒருவாறு சமாதானம் அடைகிறது.

அதைப் பாடலாக வடித்து விட்டார் இப்படி:

 

 

குடிலா லக்ஷ்மீர் யத்ர

  ப்ரபவதி சரஸ்வதி வஸதி தத்ர I

ப்ராய: ஸ்வஸ்தூஸ்நுஷயோர்

   த்ருஷ்யதே சௌஹத்வம் லோகே II

 

(குடிலாகெட்ட சுபாவமுள்ள)

கெட்ட சுபாவமுள்ள லட்சுமி  எங்கு செழித்து சக்திவாய்ந்தவளாக இருக்கிறாளோ அங்கு சரஸ்வதி வசிக்க மாட்டாள். பொதுவாக உலகத்தில் மாமியாருக்கும் மருமகளுக்கும் நட்பு இருந்து பார்த்ததே இல்லை! – இது தான் ஸ்லோகத்தின் பொருள்!

 

விஷ்ணுவின் பத்தினியான லட்சுமி தேவி விஷ்ணுவின் நாபியில் பிறந்த பிரம்மாவின் பத்தினியான சரஸ்வதிக்கு மாமியார் முறை ஆகிறாள் அல்லவா; அதனால் விளைந்தது இந்த அற்புதக் கற்பனை!

*****