மாதா கோவிலில் மார்க் ட்வைன்; பாதிரியார் அதிர்ச்சி (Post No.6617)

Written  by  London Swaminathaan


swami_48@yahoo.com


Date: 30 June 2019


British Summer Time uploaded in London –8-52 am

Post No. 6617


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Images f Heaven and Hell

–subham–

காஞ்சி பரமாசார்யார் ஆயுள் கண்டுபிடித்த ‘டெக்னிக்’ (Post No.4982)

Written by London Swaminathan 

 

Date: 6 May 2018

 

Time uploaded in London – 6-58 am (British Summer Time)

 

Post No. 4982

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

திருச்சி அருகிலுள்ள கூத்தனூரைச் சேர்ந்தவர் ஸ்ரீ சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள். வேத பண்டிதர்; ரிக் வேதத்தின் ஒரு ஷாகையைப் படித்து காஞ்சிபரமாசார்ய ஸ்வாமிகளிடம் தங்க நாணயம், பசு மாடு, சால்வை பெற்றவர். பெரிய அறிஞர்–மஹா பண்டிதர். அவரிடம் ஒருவர் , இறந்து போனவரின் ஜாதகத்தைக் கொடுத்து அவரைச் சோதித்த போது அவருக்கு ஷாக் அடித்தது போல உடம்பு தூக்கிவாரிப் போட்ட நிகழ்ச்சியை முன்னரே எழுதினேன்.

 

அவரை மதுரை டி.வி.எஸ். நிறுவனத்தார் உபந்யாசம் செய்வதற்காக ஆண்டுதோறும் அழைத்தார்கள். அப்பொழுது அந்தக் கம்பெனி அனுப்பும் காரில் நானும் அவருடன் சென்று நோட்ஸ் (NOTES) எடுத்து அதை தினமணி பத்திரிகைக்கு செய்தியாகத் தருவேன். அவர் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை வேதத்தில் இருந்து மேற்கோள் காட்டிக் கொண்டே இருப்பார். இதனால், விஷயம் அறிந்தவர்கள், அவருடைய சொற்பொழிவைத் தவறாமல் கேட்பர். அவர் உபந்யாசத்தைத் துவங்கும்போது ‘உத்தமோத்தமர்களே” என்று துவங்குவார். என் அருகில் உடகார்ந்து இருப்பவர் உடனே காமெண்ட் (COMMENT) அடிப்பார். இங்கு இருப்பவர்களில் யார் உத்தமர்? என் உள்பட எவனும் உத்தமர் இல்லையே! என்பார். இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் ‘வெளுத்ததெல்லாம் பால்’ என்று எண்ணும் அளவுக்குக் குழந்தை மனம் படைத்தவர் சாஸ்திரிகள்.

 

என்னிடம் சொல்லுவார்: சாமிநாதா, நீ எங்கள் திருச்சி பஜாருக்கு வந்து பார்க்க வேண்டும். முனிவர்கள், சந்யாசிகளும் கூட மனம் தடுமாறிவிடும் அளவுக்கு பெண்கள் ஆடை அலங்காரம் இருக்கும் என்பார்.

நான் உடனே மாமா, எங்கள் மதுரையிலும் அப்படித்தான்.

நீங்கள் எங்கள் டவுன்ஹால் ரோடு (TOWN HALL ROAD) அல்லது, பணக்காரத் திருமணங்களுக்கு வந்து பாருங்கள்’ என்று சொல்லுவேன்.

 

இதை எழுதும்போது இன்னும் ஒரு விஷயமும் ஞாபகத்துக்கு வருகிறது. தொல்பொருட் துறை அறிஞர், வரலாற்று ஆசிரியரான டாக்டர் இரா.நாகசாமியும் பேச்சு வாக்கில் சொன்னார்; ‘பெரிய ஞானிகளையும் நிலை தடுமாறச் செய்து மனத்தை மாயையில் ஈடுபடுத்தும் சர்வ வல்லமை துர்கா தேவிக்கு உண்டு’ என்று சொல்லி ‘ஞானினாம் அபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா பலாத் ஆக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி’ என்ற துர்கா சப்தஸ்லோகீ வரிகளைக் கூறினார்

 

ॐ ज्ञानिनामपि चेतांसि देवी भगवती हि सा।

बलादाकृष्य मोहाय महामाया प्रयच्छति॥१॥

 

விஸ்வாமித்ரர், புத்தர் ஏசு முதலியோரையும் இறைவன் இப்படிச் சோதித்ததாக நாம் படித்து இருக்கிறோம்.

காஞ்சி பரமாசார்யார் வயதைச் சொன்ன சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள்!!!!

 

காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகளுக்கு (காஞ்சி சங்கராச்சார்யார் ஸ்ரீ சந்திர சேகர இந்திர சரஸ்வதி 1894-1994) இன்னும் எவ்வளவு ஆண்டுகள் உயிரோடு இருப்போம் என்று அறிய திடீரென ஆவல் ஏற்பட்டது. அவர் 100 ஆண்டுகள் வாழ்ந்து 1994ல் சமாதி அடைந்ததை நாம் அறிவோம்.

 

ஒரு முறை அவர் சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகளை யாரும் இல்லாத போது அழைத்து, தன் கையில் அக்ஷதையைப் போடும்படி சொன்னாராம். சாஸ்திரிகளுக்கு ஒரே வியப்பு. ஆயினும் அவர் சொன்ன படியே செய்தார். அட்சதையைப் போட்டபின்னர் ஸ்வாமிகள் அதை எண்ணிப்  பார்த்துவிட்டு ‘ஓஹோ, நான் இவ்வளவு ஆண்டுகள் உயிருடன் இருப்பேன்’ என்றாராம். அது எத்தனை ஆண்டுகள் என்று சாஸ்த்ரிகள் சொல்ல மறுத்து விட்டார்.

 

மறைகளைக் காப்பவர்களே நான் மறையாளர் அல்லவா? (இரஹஸியம்=   மறை) இறுதிவரை சாஸ்திரிகள் எங்களிடம் சொல்லவில்லை.

இவை அனைத்தும் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகள்!!!!

 

xxxxxxxxxxxx SUBHAM xxxxxxxxxxx

பாரதீய ஜனதா இல.கணேசன் ‘ஜோக்’குகள் (Post No. 4979)

Written by London Swaminathan 

 

Date: 5 May 2018

 

Time uploaded in London – 5-36 am (British Summer Time)

 

Post No. 4979

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

முன்னொரு காலத்தில் மதுரையில் ஆர்.எஸ்.எஸ். பிரசாரக்காக இருந்தவர் இல. கணேசன்; அவர் இப்பொழுது பாரதீய ஜனதா எம்.பி. இந்திரா காந்தி  (Emergency) எமர்ஜென்ஸி பிரகடனம் செய்த காலத்தில் நாங்கள் எல்லோரும் தலைமறைவு இயக்கத்தில் வேலை செய்தோம். எமர்ஜென்ஸிக்கு முன்னரும் பின்னரும் மதுரையில் வீட்டிற்கு சாப்பிட வருவார். அவர் தஞ்சாவூர்காரர். ஆகையால் பேச்சில் நிறைய நகைச் சுவை இருக்கும். அவர் என்ன சொன்னாலும் நான் தலை அசைப்பேன்

‘நான் இப்பொழுது என்ன சொன்னேன் தெரியுமா? உங்களை ஒரு குரங்கு என்று சொன்னேன் அதற்கும் தலை அசைத்து ஆமாம், ஆமாம் என்கிறீர்களே’ என்பார்.

 

ஜீ!  நீங்கள் சொன்னால் எல்லாம் சரிதான் என்று சொல்லி நான் சிரித்து (அசடு வழிய) மழுப்பி விடுவேன்.

 

வீட்டிற்கு சாப்பிட வந்த போது, வழக்கமாக பிராமணர்கள் சொல்லுவது போல, அவரிடம் என் அம்மாவும்

“சங்கோஜப்படாமல் சாப்பிடுங்கள்” என்றார்.

கணேஷ்ஜி, தடால் அடியாக ஒரு போடு போட்டார்.

“நான் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவேன்; நீங்கள் சங்கோஜம் இல்லாமல் தாராளமாகப் போடுங்கள்” என்றார்.

 

என் அப்பா, அம்மா எல்லோரும் தஞ்சை ஜில்லாக்காரர்கள்தான். ஆகவே அவர் ‘ஜோக்’கைப் புரிந்து கொண்டு சிரித்தார்கள்.

xxxx

 

தமிழ்நாட்டு எம்.பிக்கள் வழக்கம் போல பார்லிமெண்டில் கூட்டம் நடக்கும் போது தூங்கிக் கொண்டிருந்தார்களாம். அப்போது காரசார விவாதத்தில் வடக்கத்திய எம்.பி.க்கள் “எங்களுக்கு இரண்டு வேண்டும், மூன்று வேண்டும்; அந்த மாநிலத்துக்கு எங்கள் மாநிலம் என்ன இளைத்தவர்களா?” என்று சண்டை போட்டனராம்.

 

திடீரென விழித்துக் கொண்ட தமிழ் நாட்டு எம்.பிக்கள், “நீங்கள் எப்போதுமே இப்படித்தான் ‘ வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது. எங்களுக்கும் மூன்று வேண்டும்” என்று கூச்சல் போட்டார்களாம்.

அது சரி, நீங்கள் எந்த மிருகக் காட்சிசாலைக்காக கேட்கிறீர்கள் என்பதையும் சேர்த்துச் சொல்லுங்கள்; சபைக் குறிப்பேட்டில் அது பதிவாகட்டும் என்றார் அவைத்  தலைவர்.

 

தமிழ்நாட்டு எம்.பிக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பேசா மடந்தைகளாக நின்றனராம்.

 

கரசாரமாக விவாதித்தது வெளி நாட்டில் இருந்து வந்த குரங்குகளை எங்கு அனுப்புவது என்பதாகும்; குரங்கு பற்றிய விவாதம் என்பதே புரியாமல் இவர்கள் எங்களுக்கும் “மூன்று தா” என்று கூச்சல் போட்டனராம்!! அது போல நான் சொன்னது என்ன என்றே தெரியாமல் நீங்களும் ஆமாம் என்றீர்களே என்று என்னை இடித்துரைப்பார்.

 

xxx

 

என் மனைவி ஒரு செவிடு!

எங்கள் வீட்டுக்கு நிறைய உபந்யாசகர்கள், சாமியார்கள், சாது, சந்யாஸிகள் சாப்பிட வருவர். என் தந்தை வெ.சந்தானம்  திருக்கருகாவூர்க்காரர். தஞ்சாவூர்காரர்கள் பேச்சில் நிறைய நகைச் சுவை இருக்கும்—- ஒரு முறை ஒரு சொற்பொழிவாளர் சாப்பிடுகையில் ஏதோ கேட்டார். என் அம்மா வேறு வேலை செய்து கொண்டிருந்ததால் கொஞ்சம் தாமதாமக அதைக் கொண்டு வந்தார்.

 

என் அப்பா சொன்னார்,

“என் பெண்டாட்டி ஒரு செவிடு; கொஞ்சம் பொறுங்கள்; நான் சொல்கிறேன்” என்று ஜோக் அடித்தார்.

அதற்குள் அவர் கேட்ட பொருளும் வந்தது.

 

அடுத்த முறை அவருக்கு மோர் தேவைப்பட்டது. சமையல் ரூம் முழுக்க எதிரொலிக்குமாறு உரத்த குரலில் மோர் கொண்டு வாருங்கள் என்று இடி முழக்கம் செய்தார். எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை; பெரிதாகச் சிரித்து விட்டோம். அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

 

பின்னர் எங்கள் சஹோதரர்களில் ஒருவர் “அம்மாவுக்குக் காது கேட்கும்; அப்பா ஜோக் அடித்தார்; அதை நீங்கள் உண்மை என்று நம்பிவிட்டீர்களே” என்றார்.அவருக்கு தர்ம சங்கடமாகிப்போனது.

 

விருந்தாளியின் முகம் வாடக்கூடாதே என்பதற்காக நாங்கள் பேச்சை மாற்றி, அவருடைய முந்திய நாள் உபந்யாசத்தைப் புகழ்ந்தோம்.

 

xxxx

சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள்

கூத்தனூர் சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள் மதுரைக்கு வந்தால் எங்கள் வீட்டில்தான் தங்குவார். பெரிய வேத பண்டிதர்; ரிக் வேதத்தின் ஒரு ஷாகையை மனப்பாடம் செய்து (அத்யயனம் செய்து) காஞ்சி பரமாசார்ய சுவாமிகளிடம் தங்கக் காசு, சால்வை, பசு மாடு, ஒரு வீடு ஆகியன பெற்றவர்.

 

எப்போது சாப்பிட உட்கார்ந்தாலும், எங்கள் தாயார் உங்களுக்கு இது வேண்டுமா. அது வேண்டுமா என்று கேட்டுப் பரிமாறுவார். அவரோ இன்னும் கொஞ்சம் ரஸம் வேண்டுமா? என்று கேட்டால்” நீங்கள் எல்லோரும் க்ஷேமமாக (நன்றாக) இருக்க வேண்டும்” என்பார். இன்னும் கொஞ்சம் பாயஸம் வேண்டுமா? என்று கேட்டாலும் ‘நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்’ என்பார். அவ்வளவு நல்ல உள்ளம்; சதா ஸர்வ காலமும் உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்பவர்; நன்றி பாராட்டுவர். “அன்ன தாதா ஸுகீ பவ” என்று ஆஸீர்வதிப்பவர்.

 

அதிலிருந்து அவர் சொன்ன வாசகம் எங்கள் வீட்டில் ஒரு IDIOM AND PHRASE ‘இடியம் அண்ட் ப்ரேஸாக’ மாறிவிட்டது. எங்கள் அம்மா ஏதாவது வேண்டுமா என்று கேட்டாலோ வேறு யாராவது ஏதாவது வேண்டுமா என்று கேட்டாலோ நீங்கள் எல்லோரும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்போம். சிரித்து மகிழ்வதற்கு ஒரு சான்ஸ் கிடைத்தால் விடலாமா?

ஆனால் அந்தப் பெரியவர் வந்தால் வழக்கம் போல நமஸ்கரித்து ஆஸி பெறுவோம். ‘ஜோக்’ வேறு; மரியாதை வேறு.

 

xxxx Subham xxxxx