சீதையும் கோதையும்- POEMS BY LONDON NARAYANAN (Post No.10,450)

WRITTEN BY DR. A. NARAYANAN
Post No. 10,450
Date uploaded in London – – 16 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

DR A NARAYANAN WITH SRI VELUKKUDI KRISHNAN IN LONDON 

சீதையும் கோதையும்
வேள்விச்சாலையமைக்க நிலம்
வெட்டக் கருப்பையில் தோன்றுவது
கலப்பை நுணிக் களி மண்ணில்
கண்டெடுக்கப் போர் முனையறிந்த
அரசனுக்கு ஏர் முனை ஏந்தியதோ
மகள் அவதாரமான புவிமகளே
நில மகளாயினும் மிதிலை அரசுக்குக்
குல மகள் மைதிலி சனக மன்னனின்
செல்வியாகி சானகி எனும் பெயர்
சூடி ராசியத்திற்கோர் ராச இலக்குமி
குடியின் கொடி மலரெனப் பூரித்தப்
புரவலனறியா இவளே வால்மீகீ
முனிவன் படைத்த ராமாயண ஆதி
காவிய நாயகி சீதையே அவதார
ஜெயராமனின் தாரமான தாரகையே.
தோளிணைந்த பூக்குடலியோடு மலர் கொய்ய
தோட்டம் சென்ற விட்டுசித்தன் தண் துழாய்
செடியடியில் மலர் தாமரை எழில் வழிந்
தோடி மதியொளி வீசிய மதலையைக் காண
மடி தவரி மண் தவழ்ந்த இப்பூங்குழலி
மலர் கொய்யும் கைக்கு மாலனருளிய
மாலையென மார்பணைத்து கோதை எனும்
பெயர் சூட்டி அன்னையுமபிதாவும் ஆசானுமாய்
வளர்த்தவனிதை வாய் மொழிந்ததோ
வாசுதேவன் மூச்சுக் காற்றோ முகுந்தன்
பருகும் நீரும் புசியுமுணவும் கண்ணனே என
சிறையிலே பிறந்தோனை மனதிலே சிறை
வைத்துக் கவிதையே விதையாகி கண்ணனே
செடியாகக் கொடியாயவன்மீது தவழ்ந்த
கோதையே கோவிந்தனையே ஆண்டாள்
அங்கு அறியானோ அரசர்கோன் நிலமீன்ற
அணங்கு சீதை அனந்தன் மார்புறங்கும்
அலைமகளேயென இங்கு புரியானோ பெரி
ஆழ்வான் விட்டு சித்தன் தன்மண் மகளே
அச்சுதன் சித்தம் கவரும் கோதையென
–நாராயணன் (Dr A Narayanan Ph.D., London)
xxxx

நாதமா ராகமா வேதமா?

பாடலாமோ பண்ணிசைக்கு ஆடலாமோ
வீணையின் நாதத்தில் வாணியின் வாசம்
வேய்ங்குழலிசையில் வேணுகானனின் சுவாசம்
ஏழு சுவரங்களில் எண்ணற்ற ராகங்கள்
எடுத்துப் பாட ஏழு சன்மங்களும் போதாது
சுருதியும் லயமும் சுவரங்களோடிணைந்து
சுகமான ஒலியாய் எழுவதே தரமான ராகம்
சுவர்கமே கேட்கும் அந்த சுவையான வேதம்

  • Dr A Narayanan, London
    XXX

  • ஓயாத ஆசை

மண்ணிலே ஓடும் தண்ணீர்
மனதிலே ஓடும் ஆசை
எண்ணிலாப் பொருள்கள் கண்டு
எனக்கு வேண்டுமென்றேங்கும்
மனதைப் பற்றியதாசையோ
மலருக்கு மலர் தாவும் தேனீக்களாக
தேனீக்களோ தேடுவது தேனொன்றே
தேரா இம்மனிதனோ தேடுவது பலவும்
நிறை வான பின்னும் குறையாத
ஆசை அலைகள் போராது போராதென
ஓசையிட நேராத ஆசையிலும்
மாறாது ஆறாத இவனாசை
அடங்குவதோ ஆறடி மண்ணிலே

Dr .A. நாராயணன்
xxx subham xxxx

tags – Dr A நாராயணன், சீதை, கோதை, ஓயாத ஆசை, நாதமா வேதமா

யமுனையிடம் சீதையின் பிரார்த்தனை! (Post.9070)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9070

Date uploaded in London – – 24 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

யமுனையிடம் சீதையின் பிரார்த்தனை!

ச.நாகராஜன்

வால்மீகி ராமாயணத்தில் அயோத்யா காண்டம் 54 மற்றும் 55வது ஸர்க்கம் மிக முக்கியமான கட்டத்தை விவரிக்கின்றன!

ராமர், சீதை, லக்ஷ்மணன் ஆகிய மூவரும் அழகிய வனாந்தர பிரதேசத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அங்கே ப்ரயாகை க்ஷேத்திரத்திற்கு அருகில் அக்னி பகவானது புகை உயரக் கிளம்பி இருப்பதைப் பார்த்த ராமர் லக்ஷ்மணரிடம் அதைச் சுட்டிக் காட்டி, “இங்கு ஏதோ ஒரு முனிவர் சமீபத்தில் இருக்கிறார் என எண்ணுகிறேன்” என்றார்.

கங்கை யமுனை சங்கமத்துறைக்கு வந்து சேர்ந்து விட்டோம் என்று ராமர் சொல்லி அங்குள்ள பரத்வாஜ ரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்றார்.

அவர்களைக் கண்ட பரத்வாஜ மஹரிஷிக்கு மிகவும் சந்தோஷம் உண்டாயிற்று, அவர்களை வரவேற்று தக்கபடி உபசரித்து விருந்தளித்தார்.

ராமர், பரத்வாஜரை நோக்கி, “நகரவாசிகள் இங்கு வந்து எங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். சீதா தேவி எங்கு பிறரால் தரிசிக்கப்படாதவளாக, தியானம் ஒன்றையே அனுஷ்டிக்கின்றவளாக நிம்மதியாக காலம் கழிக்கும் இடம் ஒன்றை தேவரீர் ஆலோசித்துச் சொல்வீர்களாக” என்றார்.

உடனே பரத்வாஜர், தரிசித்த மாத்திரத்தில் பாக்கியங்களைத் தரவல்லை சித்ரகூட சிகரத்தைச் சொல்லி அதன் மஹிமையையும் சொல்லி அங்கு வஸிக்கலாம் என தனது ஆலோசனையைக் கூறினார்.

ஒரு நாள் இரவை பரத்வாஜாஸ்ரமத்தில் கழித்த ராமர் மறு நாள் கிளம்ப ஆயத்தமானார்.

யமுனை நோக்கிச் சென்ற அவர்கள் நதிக்கரையை அடைந்தனர். காய்ந்து உலர்ந்த கட்டைகளாலும் மூங்கில்களாலும் அழகிய தெப்பத்தை ராமரும் லக்ஷ்மணரும் அமைத்தனர்.

அதில் பிரம்புக்கொடிகளாலும் நாவல் மரக்கிளகளாலும் ஆன அற்புதமான ஆசனம் ஒன்றைச் செய்து அமைத்தார் லக்ஷ்மணர் – சீதா தேவி அமர்வதற்காக!

சீதை தெப்பத்தில் ஏற, இருவரும் தெப்பத்தைச் செலுத்தலாயினர்.

தெப்பம் யமுனை நதியின் நடுவை அடைந்தது.

உடனே சீதா தேவி யமுனையை நோக்கி இப்படிப் பிரார்த்தித்தாள்:

“தேவி! திருவுளமுவந்து பிரார்த்தனைகளை அருளிச் செய்வாயாக! உன்னைக் கடந்து தாண்டுகின்றேன். எனது பர்த்தா பிரதிக்கினையை கை கூடப் பெறட்டும்.”

ஸ்வஸ்தி தேவி தராமி த்வாம் பாரயேன்மே ப்ரதிர்ஷிதம் |

“ஸ்ரீராமர் குறையின்றி இக்ஷ்வாகு மன்னர்களால் பரிபாலிக்கப்பட்ட நகருக்குத் திரும்பிய பின்னர் அநேக கோதானங்களாலும் அநேக தீர்த்தம் நிறைந்த பூர்ண கல்சங்களாலும் உன்னை பூஜிக்கிறேன்.”

யக்ஷயே த்வாம் கோ சஹஸ்ரேண சுராகடஷதேன ச |
ஸ்வஸ்தி ப்ரத்யாகதே ராமே புரிமிக்ஷ்வாகுபாலிதம் ||

யமுனை நதியைக் கடந்து கரையில் இறங்கிய மூவரும் யமுனை நதியை ஒட்டிய வனத்தின் வழியே சென்று பச்சிலைகளை உடைய ச்யாமம் என்னும்  பெயரை உடைய ஆலமரத்தைக் கண்டனர்.

உடனே சீதா தேவி பின் வரும் வார்த்தைகளை அருளிச் செய்தாள்:

“புண்யம் அளிக்க வல்ல விருக்ஷமே! உன்னை நான் முடி தாழ்த்தி

நமஸ்கரிக்கிறேன். எனது கணவனார் பிரதிக்கினையை கை கூடப் பெறட்டும்”

நமஸ்தேஸ்து மஹா வ்ருக்ஷ பாரயேன்மே பதிர் வ்ரதம் |

கோஸலா தேவியாரையும், புகழ் பெற்ற சுமித்திரா தேவியாரையும் நேரில் நான் ஸேவிக்க வேண்டும்.”

கௌஸல்யாம் சைவ பஷ்யேயம் சுமித்ராம் ச யஷஸ்வினீம்|

இந்த கட்டம் அற்புதமான ஒரு வழிகாட்டுதலைக் குறிக்கிறது. பரத்வாஜ மஹரிஷி அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை வழி காட்டி அருள்கிறார்.

ஒரு பெரும் அவதாரம் உதிக்கும் போது இப்படி பல மஹரிஷிகளும் தேவர்களும் உரிய இடத்தில் உரிய சமயத்தில் வந்திருந்து அவர்களை உபசரித்து அடுத்து செய்ய வேண்டியதைச் சுட்டிக் காட்டி மகிழ்கின்றனர்.

சீதா தேவி, யமுனை நதியையும், ச்யாமம் என்று பெயர் பெற்ற ஆலமரத்தையும் நோக்கிச் செய்யும் பிரார்த்தனையும் அற்புதமான ஒன்று.

பதியின் பிரதிக்கினை நிறைவேற வேண்டும்!

மாமியார்மார் இருவரையும் நேரில் கண்ணாரக் காண வேண்டும்!

இப்படிப்பட்ட புனிதமான நதியும், புனிதமான வ்ருக்ஷமும் கை கூட வைத்து அருள் பாலிக்கின்றன!

பாரதப் பெண்மையின் சிகரமாக அமையும் சீதா பிராட்டியாரின் பிரார்த்தனை ஒரு குடும்பம் எப்படி அமைய வேண்டும் என்பதைத் தெளிவுற எடுத்துக் காட்டுகிறது.

அதனால் தான் சீதையை பெண்மையின் முடிவான லக்ஷியம் என நமது அறநூல்கள் ஆணித்தரமாக இயம்புகின்றன!

ஜெய் ஸ்ரீராம்!

tags – Ram, Sita images, யமுனை, சீதை, பிரார்த்தனை

***

கவிதையில் சித்திரங்களைக் காண்பிக்கும் கம்பன் (Post No.8043)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8043

Date uploaded in London – – – 26 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

கவிதையில் சித்திரங்களைக் காண்பிக்கும் கம்பன்!

ச.நாகராஜன்

சிறப்பான ஒரு கவிதைக்குப் பல அங்கங்கள் உண்டு. முக்கியமான ஒன்று சித்திரம் எனப்படும் இமேஜ் (Image).

இந்த அங்கங்கள் தேவைக்குத் தக ஆங்காங்கே பளிச்சிடும் போது கவிதையைக் கொண்டாடுகிறோம். கவிஞனை மனதிலிறுத்திப் புகழ்கிறோம்.

விஸ்வாமித்திரருடன் ராமனும் லட்சுமணனும் மிதிலை நகரின் வீதிகளின் வழியே செல்வதைக் கம்பன் வர்ணிக்கிறான்.

ஆடல் பாடல், மங்கையரின் கீதம், சோலைகளில் அன்ன நடை போடும் மிதிலை நகரின் அழகிகளைக் கண்டு நாணம் கொண்ட தேவ மகளிர் தோற்றுப் பின்னால் நடக்க வேண்டியது தான் என்ற மனநிலை கொள்வது, மது குடித்த மங்கையரின் ‘ஆட்டம்’ என இப்படிப் பலக் காட்சிகள்.

அனைத்தும் பளிச் பளிச் என ஒவ்வொரு சித்திரமாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.

இவைகளை வேகமாகப் பார்த்துக் கொண்டே வந்த ராம லட்சுமணர் ஓரிடத்தில் நிற்கின்றனர். ஏன்?

கம்பன் சீதையை அறிமுகப்படுத்தும் அறிமுகக் கவிதை இது:

பொன்னின் ஜோதி போதினி னாற்றம் பொலிவே போல்

தென்னுன் டேனிற் றீஞ்சுவை  செஞ்சொற் கவியின்பம்

கன்னிம் மாடத் தும்பரின் மாடே களிபேடோடு

அன்னம் மாடு முன் துறை கண்டாங் கயனின்றார்

(பால காண்டம், மிதிலைக் காட்சிப் படலம் செய்யுள் 23)

பாடலின் பொருளைப் பார்ப்போம்:-

கன்னி மாடத்து உம்பரின் மாடு – கன்னி மாடத்தின் மேலிடத்தில்

களிபேடோடு அன்னம் ஆடு – மகிழ்ச்சியுள்ள பெட்டை அன்னங்களுடன் ஆண் அன்னங்கள் கூடி விளையாடுகின்ற

முன் துறை -இடத்திற்கு முன்புறத்தில்

பொன்னின் ஜோதி – பொன்னின் ஒளியும்

போதின் இன் நாற்றம் – மலரின் நறுமணமும்

தென் உண் தேனின் தீம் சுவை – வண்டுகள் உண்ணும் தேனின் இனிய சுவையும்

செம் சொல் கவி இன்பம் – செம்மையான சொற்களினால் அமைந்த கவிதையின் ரசமும் ஆகிய இவை அனைத்தும்

பொலிவே போல் – ஓருருக் கொண்டு விளங்கி நிற்பது போல சீதா பிராட்டி தோன்ற

கண்டு – அதைப் பார்த்து

ஆங்கு அயல் நின்றார் – மூவரும் அவ்விடத்தின் அருகில் நின்றனர்

தனது காவிய நாயகியை அறிமுகப்படுத்தும் கம்பன் செம் சொல் கவி இன்பம் போல கவிதை இருக்க வேண்டும் என்று சொல்வதை இங்கேயே தானே கையாண்டு காண்பிக்கிறான்.

தங்கத்தின் ஜோதியென மின்னும் தகதகப்பு, மலர்கள் தரும் சுகந்த மணம், வண்டுகள் உண்ணும் தேனின் இனிமையான சுவை, கவிஞர்கள் இயற்றும் கவிதையில் தரப்படும் செம் சொல் கவி இன்பம் இவை அனைத்தும் சேர்ந்தால் எப்படி இருக்கும்?

ஒளி, நாற்றம், சுவை, ஓசை இந்த நான்கு புலனின்பத்தையும் உதாரணம் காட்டி விட்டான் கம்பன் – தங்க ஒளி, மலர் வாசம், தேனின் சுவை, இனிய கவிதையின் ஓசை – கண்ணுக்கு ஒளி, நாசிக்கு வாசம், வாய்க்கு சுவை, காதுக்கு ஓசை என நான்கு புலன் இன்பத்தையும் கூறியவர் ஊற்றின்பத்தை மறைமுகமாக அறிய வைக்கிறார்.

கண்டு கேட்டுண்டுயுயிர்த்துற்றறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள என ஒண்டொடியிடத்தில் ஐம்புலனும் உள்ளன என வள்ளுவன் கூறுவதைக் கம்பன் இங்கு எடுத்தாளுகிறான்.

கவிதையில் ஒரு சித்திரத்தைப் படைக்கிறான்.

Six different women acted as Sita Devi

திரைப்படத்தில் இது ஒரு அறிமுக காட்சி தான். அடுத்து வரும் காட்சிகளில் அந்த சித்திரத்தின் தொடர் காட்சிகள் வருகின்றன!

ஆங்கில இலக்கியத்தில் கூட கவிதைக்கான முக்கியமான இலக்கணங்களுள் இமேஜ் (Image) என்பதும் ஒன்று.

இங்கு கம்பன் 29 சொற்களில் தீட்டுவதற்கு அரிய ஒரு ‘இமேஜை’ப் படைக்கிறான்.

ஏரியின் வளைவில் திரும்பியவுடன் தான் பார்த்த டேஃபொடில் மலர்க் கூட்டத்தைப் பார்த்து பிரமித்த வேர்ட்ஸ்வொர்த்,

“When all at once I saw a crowd

A host of Golden Daffodils

Beside the lake, beneath the trees,

Fluttering and dancing in the breeze” — என்று பாடுகிறான்.

மலர் கூட்டத்தின் சித்திரத்தை நம் முன் எழுப்பும் கவிஞன் அது பிற்காலத்தில் அவன் மனம் வாட்டம் அடையும் சமயம் எல்லாம் முன் வந்து அவனது மனத் தளர்ச்சியைப் போக்கி ஊக்கமளித்து உயர்த்தி ஆனந்தப்படுத்துகிறது என்கிறான்

For oft when on my couch I lie,

In vacant or in pensive mood

They flash upon that inward eye

Which is the bliss of solitude

And then my heart with pleasure fills

And dances with the daffodils

                                   வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் ( 1770-1850) Daffodils

 கவிதையில்

pensive mood

 inward eye

bliss of solitude

my heart with pleasure fills

dances with the daffodils வரும் வார்த்தைகள்  –

ஒரு அகக் காட்சியை உருவாக்கும் சக்தி வாய்ந்த – வார்த்தைகள் இவை. அவர் அகக்கண்ணில் பழைய சித்திரம் தோன்றி அவரை மகிழ வைத்து நடனமாட வைக்கிறது.

வேர்ட்ஸ்வொர்த் காண்பிப்பது ஒரு மலர்க் கூட்டத்தை – கண்ணுக்கும் மனதிற்கும் நாசிக்கும் மட்டும் அது இன்பம் தரும்.

ஆனால் கம்பனோ ஐம்புலனுக்கும் இன்பம் தரும் ஒரு அறிமுகக் காட்சியைக் காண்பிக்கிறான்.

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல பத்தாயிரம் பாடல்களில் அவன் செம் சொல் கவி இன்பத்தை அள்ளித் தருகிறான்!

இமேஜுக்கு – கவிதா சித்திரத்திற்கு ஒரு கவிஞன் கம்பனே!

tags – வேர்ட்ஸ்வொர்த்,கம்பன், சீதை

சீதையைக் கண்டு அக்கினி தேவன் அலறல்-கம்பன் தகவல் (Post No.5946)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 17 JANUARY 2019

GMT Time uploaded in London –7-43 am

Post No. 5946 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

picture from Kalakshetra, Chennai

Tags-  அக்கினி தேவன் அலறல்,சீதை,கற்புத் தீ

யமன் (எமன்) போல வந்த 3 பெண்கள்! (Post No.4104)

Written by London Swaminathan


Date: 22 July 2017


Time uploaded in London- 11-00 am


Post No. 4104


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ஒரு பாட்டுக்கு எனக்கு முழு அர்த்தம் விளங்கவில்லை. இது நீதி வெண்பாவில் உள்ளது. அந்த நூலை யார் எழுதினார்கள் அல்லது தொகுத்தார்கள் என்பது தமிழ் கூறு நல்லுலகிற்குத் தெரியாது. கால வெள்ளத்தில் மறைந்துவிட்டது. நாம் மிகவும் போற்றும் மூன்று பெண்களை எமனென்று வருணிக்கிறது இந்தப் பாடல்! ஓரளவுக்கு அர்த்தம் விளங்குகிறது!

 

முதலில் பாடலைப் படித்துவிட்டு விவாதிப்போம்:-

என்னே கிரேதத் திரேணுகையே கூற்றுவனாம்

தன்னேர் திரேதத்திற் சானகியே – பின்யுகத்திற்

கூடுந்திரௌபதையே கூற்றாம் கலியுகத்தில்

வீடுதொறும் கூற்றுவனாமே

 

பொருள்:-

கிரேதத்து- கிரேதா யுகத்தில்

இரேணுகையே – இரேணுகை என்பவளே

கூற்றுவன் ஆம் – யமன் ஆகும்

திரேதத்தில் – திரேதா யுகத்தில்

தன் நேர்- தனக்குத் தானே ஒப்பாகிய (வேறு எவரையும் உவமை சொல்ல முடியாத)

சானகியே –  சீதை என்பவளே

கூற்றுவனாம் – யமன் ஆகும்

பின் யுகத்தில் – அதற்கடுத்த துவாபர யுகத்தில்

கூடும் – வந்த

திரௌபதியே – திரௌபதையே

கூற்றாம் – யமன் ஆகும்

கலியுகத்தில் – இப்பொழுது நடக்கும் கலி யுகத்தில் என்றாலோ

வீடுதொறும் – ஒவ்வொரு வீட்டில் இருக்கும் (ஒவ்வொரு பெண்ணும்)

கூற்றுவனாம் ஆம் – யமன் ஆகும்

என்னே – இஃது என்ன ஆச்சரியம்!

 

மொத்தத்தில் கருத்து என்னவென்றால் பெண்கள் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்காமல் அடக்க ஒடுக்கமாக வாழவேண்டும். முன் யுகத்தில் இருந்ததைவிட இப்பொழுது பெண்கள் மிகவும் கெட்டுப் போய்விட்டார்கள் என்பதே.

 

அது எப்படி?

ரேணுகா – பரசுராமன் கதை பலருக்கும் தெரிந்ததே. ரேணுகாவுக்கு காமம் தொ டர்பான தீய எண்ணங்கள் வரவே அவரது கணவர் ஜமதக்னி ரேணுகாவைக் கொல்ல உத்தரவு இடுகிறார். உடனே பரசுராமன் அதைச் செய்கிறார். அதைப் பாராட்டி ஜமத்னி முனிவர் ஒரு வரம் தருகிறார். தன்னுடைய அம்மா ரேணுகாவை உயிர்ப்பிக்க வேண்டும் என்று வேண்டுகிறார். ரேணுகா மீண்டும் உயிர் பெறுகிறாள்.

 

இதில் ரேணுகா செய்த தவற்றால் ஒரு சம்பவம் நிகழ்கிறது. ஆனால் எல்லாம் சுபமாக முடிகிறது. பரசுராமர் க்ஷத்ரியர்கள் மீது கோபம் கொண்டு 21 தலைமுறையை அழித்ததற்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை.

 

சீதை, ஒரு மாய மானுக்காக ஆசைப்பட்டதால் ராவணன் கடத்துகிறான். இலங்கையே அழிகிறது. பிறகு சீதையைப் பற்றி ஒரு சலவைத் தொழிலாளி சந்தேகம் கிளப்பவே அவள் பூமாதேவியிடம் திரும்பிச் செல்கிறாள். இங்கு சீதை செய்த தவறு எல்லாப் பெண்களையும் போல தங்கத்துக்கு (பொன் மான்) ஆசைப்பட்டது. அதாவது அது பொன் மான் இல்லை என்று கணவன் தெளிவு படுத்தியும் அடம்பிடித்ததால் வந்த வினை.

 

மூன்றாவது, திரவுபதி சிரித்ததால் வந்த வினை. ரத்தினக் கல் போல இழைக்கப்பட்ட தரையைத் தண்ணீர் என்று நினைத்து துரியோதனன் தனது பட்டாடையைத் தூக்கவே பலகணியில் இருந்து அதைப் பார்த்த திரவுபதி ‘களுக்’ என்று சிரித்துவிட்டாள்; பெண்களுக்கான அடக்கம் அவளுக்கு அப்போது இல்லை.

 

இதற்கெல்லாம் சேர்த்துப் பழிவாங்க, வேறு ஒரு சந்தர்ப்பத்தில், அவளுடைய ஆடையை அவிழ்க்க உத்தரவிட்டான். அவள், உடனே சபதம் செய்து, மஹா பாரதப் போருக்குப் பின்னால்,  துரியோதனன் ரத்தத்தை முடியில் தடவி பழி தீர்த்துக்கொண்டாள். இது பெண்ணின் நகைப்பினால் வந்த வினை.

 

கலியுகத்தில் ஒவ்வொரு பெண்ணும் இப்படித் தவறு செய்யக்கூடும் என்பதால் புலவர் எச்சரிக்கிறார் போலும்.

 

இன்று டெலிவிஷன்களில் வரும் சீரியல்களிலும் அப்படித்தானே பெண்களைக் (நீலாம்பரிகளாக) காட்டுகிறார்கள்.

 

புலவர் பெருமான் காரணம் சொல்லாவிடிலும் மூன்று கதைகளையும் நாமாகத் தொடர்புபடுத்தி விளக்கம் காண முடிகிறது.

 

வேறு ஏதேனும் பொருள் தெரிந்தால் நீங்களும் சொல்லலாம்.

TAGS:- யமன், பெண்கள்,ரேணுகா, சீதை, திரௌபதி, யுகம்

-சுபம்–

 

 

ஹா, ராம, ஹா, தேவர், தாத, மாதா!

ராவணன் சீதையை தூக்கிச் செல்லுதல்

Written by S NAGARAJAN

Research Article No: 1828

Date: 26 April 2015; Uploaded in London at  7-19 am

 

சம்ஸ்கிருதச் செல்வம்பாகம் 3

3. ஹா, ராம, ஹா, தேவர், தாத, மாதா!

.நாகராஜன்

கவிதைப் புதிர்களின் தொடர் வரிசையில் இன்னும் ஒரு பஹிர் ஆலாப வகை புதிர்:-

 

கே ப்ரவீணா: குதோ ஹீனம் ஜீர்ணம் வாசோம்ஷுமாஞ்ச்ச : I

நிராகரிஷ்னவோ பாஹ்யம் யோகாசாராச்ச கீத்ருஷா: II

 

 

இதன் பொருள் :- யார் புத்திசாலி? (விஞ்ஞானா: – படித்த மனிதர்கள்)

பழைய துணி எதில் குறைபாடுடையது? – (நவாத்புதியதில்)

யார் கிரணங்களைக் கொண்டுள்ளார்? – (இனா: – சூரியன்)

புத்த மத யோகசாரா பிரிவைச் சேர்ந்தோர் எப்படி இருப்பர்? (விஞ்ஞானவாதினபுத்தமத தத்துவத்தைச் சேர்ந்தோர் விஞ்ஞானவாதிகள் என அழைக்கப்படுகின்றனர்)

விஞ்ஞானவாதின: என்ற சொற்றொடரைப் பிரித்தால் விஞ்ஞானா:, நவாத், இனா, விஞ்ஞானவாதின: என்ற அனைத்துச் சொற்களும் கிடைப்பதைப் பார்க்கலாம். அனைத்துக் கேள்விகளுக்கும் இந்த ஒரே சொற்றொடர் விடையைத் தருகிறது. இதைக் கண்டு பிடிப்பது தான் கஷ்டம்!

இனி அந்தர் ஆலாப வகை புதிர் ஒன்று. இதில் பாடலுக்குள்ளேயே விடை இருப்பதால் புரிந்து கொள்வது சுலபம்.

கே பூஷயந்தி ஸ்தனமண்டலானி

கோத்ருஷ்யுமா சந்த்ரமச: குத: ஶ்ரீ:

கிமாஹ சீதா தசகண்டநீதா

ஹாராமஹாதேவர்தாதமாத:

கடைசி வரி புதிர்களுக்கு விடையாக அமைகிறது. ஆகவே புதிரை விடுவிப்பது வெகு சுலபம்.

இதன் பொருளைப் பார்ப்போம்:-

வட்டமான மார்பகங்களை எது அலங்கரிக்கிறதுஹாரம்

பார்வதி எப்படி இருக்கிறாள்? மஹாதேவனுடன் இணைந்து இருக்கிறாள் (மஹாதேவ)

சந்திரனின் பிரகாசம் எப்போது வருகிறது? – இருளிலிருந்து (ராத்)

சீதையை தசகண்ட ராவணன் தூக்கிச் செல்லும் போது அவள் என்ன கூறினாள்ஹா, ராம, ஹா, தேவர், தாத, மாத)

(ஹா, ராமா, ஹா, மைத்துனரே, அப்பா, அம்மா என்று சீதை அலறினாள்)

இது அமைந்துள்ள விருத்தம் உபஜாதி (இந்திரவ்ரஜா மற்றும் உபேந்திரவ்ரஜா) விருத்தமாகும்.

இப்படிப்பட்ட ஆயிரமாயிரம் புதிர்களை பதம் பதமாகப் பிரித்து அர்த்தம் கண்டு புதிர்களை அவிழ்த்து விடை கண்டு மகிழலாம்.

பொறுமையும், ஆவலும் இருந்தால் போதும்; புதிருக்கு விடை கண்ட மகிழ்ச்சி ஏற்படும்!

*************