சோறு கண்ட இடம் சுவர்க்கம் (Post 8836)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8836

Date uploaded in London – –21 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சோறு கண்ட இடம் சுவர்க்கம் — என்ற பழமொழி எல்லோரும் அறிந்த மொழி. மேலும் 7 சோற்றுப் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் . ஒருமுறை வந்த சொல் மீண்டும் கட்டத்தில் இராது. விடைகள் கீழே உளது.

ANSWERS

1.சோறு சிந்தினால் பொறுக்கலாம் , மானம் சிந்தினால் பொறுக்கலாமா

2.சோ ற் றி லே இருக்கும் கல் எடுக்க மாட்டாதவன் சேற்றில் கிடக்கும் எருமையைத் தூக்குவானா

3.சோறும் துணியும் தவிர மற்றத்துக்கெல்லாம் குறைவில்லை.

4.சோற்றால் அடித்த பிண்டம்

5.சோற்றுக்குக் கேடு பூமிக்கு பாரம்

6.சோற்றுக்கும் கறுப்புண்டு , சொல்லுக்கும் பழுது உண்டு

7.சோற்றுக்குத் தாளம் போடுகிறான்

TAGS– சோறு ,சுவர்க்கம் , பழமொழி

–subham–

எது சொர்க்கம்? எது நரகம்?

12_11_17_heaven_hell

Part 14 of History of Zen Buddhism in Tamil by Santanam Nagarajan

Part 14. அப்படியா?! By ச.நாகராஜன்

ஹகுயின் வாழ்க்கை சுவாரசியம் ததும்பிய ஒன்று. அதில் ஏராளமான சுவையான சம்பவங்களைப் பார்க்க முடியும். மிகவும் பிரபலமான இரு சம்பவங்களைப் பார்க்கலாம்:

ஜப்பானிய இளம் பெண் ஒருத்தியின் பெற்றோர்கள் ஹகுயின் வாழ்ந்த இடத்திற்கு அருகில் ஒரு உணவு விடுதியை நடத்தி வந்தனர். ஒரு நாள் தனது பெண் கர்ப்பமாக இருப்பதைக் கண்டு அவர்கள் திகைத்தனர். தங்கள் பெண்ணிடம் அவளது கர்ப்பத்திற்குக் காரணமானவன் யார் என்று கேட்டுக் குடைந்தனர். அவளோ லேசில் பதில் சொல்வதாயில்லை. பெரும் முயற்சிக்குப் பின்னர் அவள் ஹகுயினே இதற்குக் காரணம் என்று சொன்னாள். பெரும் கோபம் அடைந்த பெற்றோர் ஹகுயினிடம் வந்து நடந்ததைச் சொல்லிக் கத்தினர்.

“அப்படியா?” என்று மட்டும் சொன்னார் ஹகுயின்!

அவளுக்குக் குழந்தை பிறந்தது.அந்தக் குழந்தையை எடுத்து வந்த இளம் பெண்ணின் பெற்றோர் ஹகுயினிடம் தந்தனர். அதைச் செல்லமாகச் சீராட்டிப் பாராட்டி வளர்க்க ஆரம்பித்தார் ஹகுயின். இதற்குள் இந்தச் சம்பவம் ஊரெல்லாம் பரவி ஹகுயினின் பெயர் மிகவும் கெட்டு விட்டது. ஒரு வருடம் கழிந்தது. அந்தப் பெண்ணால் இனியும் பொறுக்க முடியவில்லை.தனது பெற்றோரிடம் அவள் உண்மையைக் கூறினாள்.அந்தக் குழந்தையின் நிஜமான தந்தை மீன் சந்தையில் இருக்கும் ஒரு இளைஞன் தான் என்று! உடனே அவளது பெற்றோர் ஹகுயினிடம் ஓடி வந்தனர். நடந்ததைச் சொல்லி மன்னிப்புக் கேட்டனர். குழந்தையைத் தங்களிடம் திருப்பித் தருமாறு வேண்டினர்.

எல்லாவற்றையும் கேட்ட ஹகுயின் “அப்படியா?” என்று மட்டும் சொன்னார். குழந்தையை அவர்களிடம் மனமுவந்து திருப்பிக் கொடுத்தார். இதனால் அவர் புகழ் எல்லா இடங்களிலும் பரவி எப்படிப்பட்ட உன்னதமான குரு அவர் என்று அவரைப் போற்றி அனைவரும் பேச ஆரம்பித்தனர்.

heaven-hell

இன்னொரு சம்பவம்:
ஒரு நாள் போர்வீரன் ஒருவன் ஹகுயினிடம் வந்தான். “உண்மையிலேயே நரகமும் சுவர்க்கமும் இருக்கிறதா?” என்று கேட்டான்.
“நீ யார்?” என்று கேட்டார் ஹகுயின்.
“நான் ஒரு சாமுராய்” என்றான் அந்தப் போர்வீரன்.
“நீ ஒரு சாமுராயா” என்று வியந்து கூவினார் ஹகுயின்.
“உன்னைக் காவலனாக எந்த மன்னன் தான் வைத்திருக்கிறானோ! உன்னுடைய முகம் பிச்சைக்காரன் போலத் தோற்றமளிக்கிறதே!” என்றார் ஹகுயின்.

இதைக் கேட்டு வெகுண்ட அவன் தன் வாளை உருவினான். ஆனால் ஹகுயினோ பயப்படவில்லை.தொடர்ந்து பேசலானார்.”ஓ! உன்னிடம் ஒரு கத்தி இருக்கிறதா! உன்னுடைய ஆயுதம் உன் புத்தியைப் போலவே மழுங்கி இருக்கிறது!”

அந்தப் போர்வீரன் வாளை ஓங்கவே, “இதோ நரகத்தின் வாயில் திறக்கிறது” என்று ஹகுயின் கூவினார்.

இதைக் கேட்ட மாத்திரத்தில் அவரது பெருமையையும் அவர் போதிக்கும் விதத்தையும் உணர்ந்த அந்த வீரன் தன் வாளை இடையில் செருகினான்.

“இதோ சொர்க்கத்தின் கதவு திறக்கிறது” என்று ஹகுயின் கூவினார்.
அந்த வீரனுக்கு எது சொர்க்கம், எது நரகம் என்று இப்போது புரிந்து விட்டது!ஹகுயினுக்குத் தலை வணங்கி அவன் விடை பெற்றுச் சென்றான்.

ஹகுயின் அதிகம் பேச மாட்டார்.சில சொற்களிலேயே சொல்ல வேண்டியதைச் சொல்லி விடுவார். மௌனமாக இருப்பதே அவரது இயல்பு. இதை விளக்கி ஓஷோ (முன்னாளில் ஆசார்ய ரஜனீஷ்) ஹகுயின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை விளக்கியுள்ளார்.

hell-heaven

ஒரு முறை ஜப்பானிய மன்னன் ஹகுயினை ஒரு உபதேச உரை நிகழ்த்துவதற்காக அழைத்தான். ராணி, மன்னன், ராஜ குரு,மந்திரிகள் உள்ளிட்ட அனைவரும் அரசவையில் அவர் பேச்சைக் கேட்பதற்காக ஆவலுடன் குழுமினர். ஹகுயின் அங்கு வந்தார். ஒரு நிமிடம் நின்றார்.சபையிலிருந்தோரை சுற்றிப் பார்த்தார். பின்னர் சபா மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

மன்னன் மந்திரியிடம், “ இது என்ன? நாம் இவர் சொல்லப் போவதைக் கேட்பதற்காக வந்திருக்கிறோம். ஒன்றுமே பேசாமல் போகிறாரே!” என்றான்.

மந்திரி கூறினார்-””அரசே! நான் இதுவரை கேட்ட பிரசங்கங்களிலேயே இது தான் அற்புதமானது! நீங்கள் உபதேச உரை கேட்டீர்கள். அவர் அதைச் செய்து காண்பித்து விட்டார். அவர் மௌனமாக சில விநாடிகள் நின்றார். அவரே மௌனமாக ஆனார். ஒரே மௌனம்! உபதேசித்ததை விட்டு விட்டீர்கள். ஒன்றுமே சொல்லவில்லை என்கிறீர்களே”

மௌனத்தை எப்படி விளக்க முடியும்! மௌனத்தினாலே தான் விளக்க முடியும்!
அரசன் புரிந்து கொண்டான். எதையும் ஹகுயின் வாழ்ந்து காட்டிப் புரிய வைப்பார்.

பல்வேறு இடங்களுக்கும் பயணப்பட்ட ஹகுயின் 31ஆம் வயதில் ஷோயின்-ஜி மடாலயத்திற்குத் திரும்பி வந்தார். அங்கே தலைமை குருவாக ஆனார். முதல் குரு என்று பொருள் படும் தாய்-இசிஸா என்ற வார்த்தையால் அவர் மரியாதையுடன் அழைக்கப்பட்டார். ஹகுயின் என்ற அவரது பெயருக்கான அர்த்தம் ‘வெண்மையில் ஒளிக்கப்பட்டது’ என்பதாகும். 1768ஆம் ஆண்டுஜனவரி 18ஆம் தேதியன்று 83ஆம் வயதில் அவர் நிர்வாணம் அடைந்தார். பக்குவ நிலையுடன் ஞானம் அடைந்த 90 வாரிசுகளை அவர் உருவாக்கியது ஒன்றே அவர் எப்படிப்பட்ட மாபெரும் குருவாகத் திகழ்ந்தார் என்பதை உணர்த்தும்.

சின்ன உண்மை
ஹகுயின் தியானப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். மிகவும் பிரபலமான அந்தப் பாடலில் நீங்கள் ‘முழுமை’ அடைந்து விட்டால் கடவுளின் அருள் கிடைக்கும்.கடவுள் அங்கு இருப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதைப் பாடியே ஜென் பிரிவினர் தியானத்தைச் செய்தல் மரபு.
-தொடரும்

சுவர்க்கத்துக்கு நேரடி விமான சர்வீஸ்!!

Pictures are taken from other sites vaimanika.com and Bharat Gyan.Thanks.

 

சுவர்க்கத்துக்கு நேரடி விமான சர்வீஸ்!!

(This article is posted in English as well)

இந்து மத நூல்களிலும் சங்க இலக்கியத்திலும் சிலப்பதிகாரத்திலும் விமானம் பற்றிய குறிப்புகள் உள்ளன. உண்மையிலேயே காற்றடைத்த பலூன் விமானம் செய்வது பற்றிய சம்ஸ்கிருத நூல்களும் (வைமானிக சாஸ்திரம்) இருக்கின்றன. ஆனால் இக்கட்டுரையில் வரும் விமானங்கள், —-தேவலோக விமானங்கள்!

புறநானூற்றில் உள்ள செய்தியும் திருஞான சம்பந்தர் தேவாரப் படலில் உள்ள செய்தியும் சுவையான செய்திகள். சிவ பக்தர்களை தேவலோக விமானங்கள் ஏற்றிச் செல்லும் என்றும் அங்கு சென்றபின் அவர்கள் அரசர் போல ஆட்சி செலுத்தலாமென்றும் பாடுகிறார். ஆனால் ஒரு நிபந்தனை உண்டு; பக்தி சிரத்தையுடன் ஆடல் பாடலுடன் மனம் உருகிப் பாடுவோருக்கே இந்த விமானம் வரும். இதோ அவருடைய பாடல்:

 

“விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான்

வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரை

நண்ணிய நூலன் ஞான சம்பந்தன்

நவின்ற இவ்வாய்மொழி நலமிகு பத்தும்

பண்ணியல்பாகப் பத்திமையாலே

பாடியும் ஆடியும் பயில வல்லோர்கள்

விண்ணவர் விமானம் கொடுவர ஏறி

வியனுலகாண்டு வீற்றிருப்பாரே” (முதல் திருமுறை/ சம்பந்தர்)

வெங்குருவில் (சீர்காழியில்) பாடிய தேவாரம் இது.

சிலப்பதிகார காவியம் தோன்றுவதற்கு காரணம் கானக மாக்கள் கண்ட ஒரு அதிசய நிகழ்ச்சியாகும். மரத்துக்கு அடியில் ஒருமுலை இழந்த நிலையில் நின்றிருந்த கண்ணகியை அவர் கணவன் கோவலன் வந்து அழைத்துச் சென்ற காட்சியைப் பார்த்தவுடன் அவர்கள் அசந்து போய்விட்டனர். அப்போழுது காட்டுப் பகுதிகளில் இயற்கை அழகை கண்டு ரசிக்க வந்த செங்குட்டுவனிடம் இதைக் கூறியபோது அவருக்கும் வியப்பு மேலிடுகிறது. அருகே இருந்த தண் தமிழ்ப் புலவன் சாத்தனார் ஆதியோடு அந்தமாக நடந்த நிகழ்ச்சிகளைச் சுருக்கமாக கூறுகிறார். பின்னர் இளங்கோ அடிகளின் அழியாச் சொற்களில் அற்புதமாக உருவெடுத்தது சிலம்பு. இதோ மலர்மாரி பொழிய கண்ணகி விண்ணுலகம் சென்றதை இளங்கோவின் சொற்களில் படியுங்கள்:

 

“ என்றலும் இறைஞ்சி, அஞ்சி,

இணை வளைக்கை எதிர்கூப்பி,

நின்ற எல்லையுள் வானவரும்

நெடுமாரி மலர் பொழிந்து,

குன்றவரும் கண்டு நிற்பக்,

கொழுநனொடு கொண்டுபோயினார்;

இவள் போலும் நங்குலக்கோர்

இருந்தெய்வம் இல்லை;

(பெரிய தெய்வம், குன்றக் குறவை, சிலப்பதிகாரம்)

புறநானூறு கூறும் புதுச் செய்தி

சங்க இலக்கியத்தில் பழமையான நூல் புறநானூறு. 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர் வாழ்ந்த நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நூல்.

“புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான ஊர்தி

எய்துப, என்ப, தம் செய்வினை முடித்து எனக்

கேட்பல் எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி (புறம்.27, மு.க.சாத்தனார்)

சோழன் நலங் கிள்ளி மீது முதுகண்ணன் சாத்தனார் பாடிய பாடலில் நல்வினை செய்வோரை வான ஊர்தி ஏற்றி செல்லும் என்றும் அந்த விமானம் விமானி இல்லாமல் தானாக ஓடும் விமானம் என்றும் கூறுகிறார். வலவன் ஏவா என்று அடைமொழி கொடுத்ததில் இருந்து வலவன் ஓட்டிய விமானங்களும் அக்காலத்தில் இருந்தது சொல்லாமல் விளங்கும். இது போன்ற விமானத்தில் செல்லும் பேறு பெற்றோர் புலவர் பாடும் புகழ்மிகும் செயல்களைச் செய்தவர்கள் என்றும் சாத்தனார் பாடுகிறார்.

ராமர்—ராவணன்- குபேர விமானம்

ராமாயணத்தில் வரும் புஷ்பக விமானம் முதலில் குபேரனிடம் இருந்தது. அதை ராவனன் அபகரித்தான். ராமர், இலங்கையை வென்றவுடன் அது அவர் கைக்கு வந்தது. அதில் இலங்கையில் இருந்து அவர் அயோத்தி வரை விரைவாகச் சென்ரறதை நாம் அறிவோம்.

வால்மீகி ராமாயண யுத்த காண்டத்தில் (அத்தியாய 121) தசரத மன்னன் ராமருக்குக் காட்சி கொடுத்த சம்பவத்திலும் தசரதர் விமானத்தில் வந்ததைப் படிக்கிறோம். ஆனால் 5000 ஆண்டுக் கால நூல்களில் மொத்தம் மூன்று நான்கு இடங்களில் மட்டுமே வருவதால் இது உண்மை என்றும் அபூர்வமானது என்றும் அறிகிறோம். சீவக சிந்தாமணி போன்ற நூல்களில் பறக்கும் வாகனங்கள் வந்தாலும் அவை கதைக்குச் சுவையூட்ட எழுந்த கற்பனையா உண்மையா என்று அறிய முடிவதில்லை.

(Two articles on Subbaraya Shastry, author of Vaimanika Shastra, written by my brother S Nagarajan have been posted in this blog last year.)

contact swami_48@yahoo.com