ஜோதிடம் உண்மையா?-2; சுவையான சம்பவங்கள்- 1(Post.9298)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9298

Date uploaded in London – –23 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

PLEASE WRITE TO US IF U NEED THE WORD FORMAT OF THIS AARTICLE.

லண்டனிலிருந்து திங்கள் கிழமை தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 22-2-2021 அன்று ஒளிபரப்பான உரை!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். ஜோதிடம் உண்மையா, பொய்யா? அறிவியல் ஜோதிடத்தை ஆமோதிக்கிறதா? ஏராளமானோருக்குத் தோன்றும் இந்த சந்தேகங்களுக்கு சற்று விடை காண முயன்று அறிவியல் காரணங்களையும் ஜோதிடம் பலித்த சில சம்பவங்களையும் பார்த்தோம். ஜோதிடம் உண்மையா என்ற எனது தொடருடன் மஞ்சுளா ரமேஷ் அவர்களின் ஞான ஆலயம் குழும இதழான   ஸ்ரீ ஜோஸியம் இதழில் ஜோதிட மேதைகள் பற்றியும் நட்சத்திர மர்மங்கள் பற்றியும் இரு தொடர்களை எழுதினேன். அவற்றின் அடிப்படையில் இன்று இன்னும் சில சம்பவங்களையும் வேதத்தின் அடிப்படையிலான ஜோதிடம் மற்றும் ஜோதிட மேதைகள் பற்றியும் பார்ப்போம்.

முதலில் சில சுவையான சம்பவங்கள்.இவாஞ்ஜலின் ஆடம்ஸ் என்பவர் ஒரு அமெரிக்கப் பெண்மணி. ஜோதிட

டாக்டர் யோகன் ஜோன்ஸ் என்பவர் கம்யூனிஸ நாடான செக்கோஸ்லேவோகியாவைச் சேர்ந்தவர். அவர் ஒரு பெண்ணுக்குப் பிறக்கப் போவது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதைச் சொல்வதில் வல்லவர். ‘ப்ரீடிடர்மினிங் தி செக்ஸ் ஆஃப் எ சைல்ட் என்ற அவரது புத்தகம் மிகவும் பிரபலமான ஒன்று. ஆறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல லட்சக் கணக்கில் அது விற்பனையானது.

மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரடீஸின் பெயரைச் சொல்லித் தான் இன்றளவும் டாக்டர்கள் பிரமாணம் செய்து வருகின்றனர். அந்த ஹிப்போகிரடீஸே,  ‘ஜோதிடத்தை அறிந்து கொள்ளாத ஒருவனை டாக்டர் என்று சொல்வதை விட முட்டாள் என்று சொல்வதே பொருத்தமானது என்று கூறுகிறார்.

PLEASE WRITE TO US IF U NEED THE WORD FORMAT OF THIS AARTICLE.

tags- ஜோதிடம் , சுவையான சம்பவங்கள், 

அக்பர் பற்றிய 3 சுவையான சம்பவங்கள் (Post No.3989)

Translated by London Swaminathan

Date: 10 June 2017

Time uploaded in London- 14-58

Post No. 3989

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

contact: swami_48@yahoo.com

ரெவரெண்ட் ஆஸ்பார்ன் மார்டின் என்பவர் 1914 ஆண்டில் ‘இந்தியாவின் கடவுள்கள்’ என்று ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார். அதில் ஆங்கிலத்தில் தந்துள்ள மூன்று சம்பவங்களைத் தமிழில் தருகிறேன்.

All the three stories are summarised from ‘The Gods of India’ by Rev E Osborn Martin, London, year 1914.

 

 

அக்பர் பூர்வ ஜன்மத்தில் இந்து சந்யாசி!

ஆக்ரா கோட்டையில் முகுந்தா என்பவரின் சிலை உள்ளது. இந்த முகுந்தனின் கதை என்ன வென்றால் அவர் முன் ஜன்மத்தில் ஒரு இந்து சந்யாசி. ஒரு நாள் அவர் பசும்பால் குடிக்கையில் பசுவின் ஒரு முடி (ரோமம்) அவர் வயிற்றுக்குள் சென்றுவிட்டது; பாலை வடிகட்டாமல் குடித்ததால் நேரிட்ட தவறு இது. ஆகவே பிராயச்சித்தமாக ஆக்ரா கோட்டையினை ஒட்டி ஓடும் யமுனை நதியில் குதித்து தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்தார். எவ்வளவோ பெயர்கள் தடுத்தும் தனது தவறுக்கு தனக்குத் தானே தண்டனையும் கொடுத்துக்கொண்டார்.

 

இவர் எவ்வளவுதான் தண்டனை கொடுத்துக் கொண்டாலும், யமனின் கணக்குப்படி, அது போதவில்லை. ஆனாலும் இவர் தவம் செய்த நல்ல சந்யாசி. ஆகவே இவரை அடுத்த ஜன்மத்தில் மொகலாயப் பேரரசின் சக்ரவர்த்தியாக– அக்பர் சக்ரவர்த்தியாகப் பிறக்கச் செய்தார்.

அக்பரிடம் வந்த இந்துப் பேய்!

காலரா, அம்மை முதலிய நோய்கள்  தெய்வக் குற்றங்களால்தான்   வருகின்றன என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆகவே நோய் வரும் பருவத்தில், அதைத் தடுக்க பிரார்த்தனை, விழாக்கள் ஆகியன செய்வர். ஆனால், சாதாரண மனிதனை கும்பிடும் வழக்கம் அபூர்வமே; அப்படிப்பட்ட ஒரு சம்பவம் இது.

 

பண்டல்கண்ட் பகுதியில் ஒரு ராஜா இருந்தார். அவர் பெயர் வீர சிம்ம தேவன். அவருக்கு இரண்டு புதல்வர்கள்; அவர்களுடைய பெயர்கள் ஹரதர், ஜாஜர். அகபரின் மகன் ஜஹாங்கீர்,  ஹரகரரைக் கொண்டு அபுல் பாசல் என்ற பெரிய இலக்கிய கர்த்தாவைக் கொலை செய்யச் செய்தார். அபுல் பாசல் அக்பரின் அரசவையை அலங்கரித்த எழுத்தாளர். அயினி அக்பரி என்ற பெயரில் அக்பரின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதியவர்.

 

காலம் உருண்டோடியது; வீர சிம்மன் இறந்தான்; உடனே இரு புதல்வரில் ஒருவரான ஜாஜர் பதவிக்கு வந்தான். தனது சகோதரன் தன் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்தான். உடனே தன் மனைவியைக் கட்டாயப்படுத்தி ஹரதருக்கும் அவனது தோழர்களுக்கும் ஒரு விருந்து வைத்து அதில் விஷத்தைக் கலக்கச் செய்து கொன்று விட்டான். இது நடந்தது கி.பி.1627ல்.

இதற்குச் சில காலத்துக்குப் பின்னர் ஜாஜரின் சகோதரி, இளவரசி கம்சவதிக்குத் திருமணம் நிச்சயமாகியது. அவரது தாய் எல்லோருக்கும் பத்திரிக்கை அனுப்பிக் கொண்டிருந்தாள்;

“அட! செத்துப் போன சகோதரனுக்கும் ஒரு பத்திரிக்கை வைக்க மறந்துவிடாதே”– என்று கிண்டல் தொனியில் சொன்னான் ஜாஜர்.

ஆனால் கம்சவதி உண்மையிலேயே ஒரு பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு ஹரதரின் சமாதிக்குப் போய் புலம்பினாள்

திடீரென்று கல்லறைக்குள்ளிருந்து ஒரு கை நீட்டி அந்தத் திருமணப்  பத்திரிக்கையை வாங்கிக் கொண்டு கல்யாணத்துக்கு வருவதாக உறுதியும் கூறியது.

திருமண நாளில் ஹரதர் (பேய்) வந்த அடையாளங்களும் தெரிந்தன. தக்க மரியாதைகளுடன் ஹரதர் வரவேற்கப்பாட்டார். அன்று இரவு அந்தப் பேய் அக்பரின் படுக்கை அறைக்குச் சென்று “எனக்கு ஊர் தோறும் சின்னம் ஏற்படுத்து. உனது நாட்டில் இயற்கை சேதம் ஏதும் வராமல் காப்பேன்” என்று ((பேய்)) உறுதி கூறியது. அதன்படி அக்பர் சாம்ராஜ்யத்தில் பல இடங்களிலும் ஹரதர் ( பேய்க்கு) நினைவுச் சின்னங்கள் எழுப்பபட்டன. இன்றும் கிராம மக்கள் பலரும் அந்த சின்னங்களை வழிபட்டு வருகின்றனர்.

இந்தக் கதையில் கொஞ்சம் உதைப்பது கால வழுவமைதி ஆகும். அதாவது ஹரதர் இறந்தது 1627 ஆம் ஆண்டில். ஆனால் அக்பரோ அவருக்கு முன்னதாக 1605 ஆண்டில் இறந்தார். ஆகவே பேய் வந்தது அக்பரின் படுக்கை அறையாக இருக்க முடியாது. ஒரு வேளை  ஜஹாங்கீரின் படுக்கை அறையாக இருக்கலாம்.

சூர்ய நமஸ்காரப் பிரியன்!

அக்பரின் மனைவியரில் பலர் இந்துக்கள்; அவருக்கு சர்வ சமய ஒற்றுமையில் ஆர்வம் ஏற்பட இதுவும் ஒரு காரணம். அவருக்கு சூரிய நமஸ்காரத்தில் ஆர்வம் ஏற்படவே சூரியனின் 1001 பெயர்களை எழுதி தினமும் படித்து வந்தார் (சூர்ய சஹஸ்ரநாமம்)

 

காலை, நன்பகல், மாலை நள்ளிரவு ஆகியவற்றில் சூரிய தேவனை வழிபட்டார். மக்களும் கும்பிடுவதற்கு வசதியாக 4 காலங்களில் பாண்டு வாத்ய இசையை முழங்கச் செய்தார். அவர் எப்படி தலையில் குட்டிக் கொண்டார், காதைப் பிடித்துக் கொண்டார் என்ற விவரங்களையும் சேர்த்து அபுல்பாசல், தனது அயினி அக்பரி புத்தகத்தில் எழுதியுள்ளார். அக்பர் 1605ஆம் ஆண்டில் இறந்தார்.

 

-சுபம்–

‘சட்டை பட்டன் ரகசியம்’ – சர் வால்டர் ஸ்காட்டுக்குத் தெரியும்! (Post No 2742)

walter-scott-portrait

Written by London swaminathan

Date: 20 April 2016

 

Post No. 2742

 

Time uploaded in London :– 15-25

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

scott on stamp

புகழ்பெற்ற ஆங்கிலப் புலவரும் கதாசிரியருமான சர் வால்ட்டர் ஸ்காட் வாழ்வில் நடந்த சில சுவையான சம்பவங்கள்:–

துரியோதணன் உயிர் தொடையில் இருந்தது. அதை கண்ணன் சுட்டிக் காட்டவே, பீமன் கதையால் அடித்து வீழ்த்தினான். சில மாணவர்களின் “உயிர்” எங்கே இருக்கிறது என்பது ஒரு சுவையான விஷயம். ஸ்காட் அப்படி ஒன்றும் பெரிய புத்திசாலி இல்லை. இவர் பள்ளிக்கூடத்தில் படிக்கையில் வாத்தியார் கேட்கும் கேள்விக்கு யார் முதலில் பதில் சொல்கிறாரோ அவருக்குத்தான் முதல் வரிசையில், முதல் பெஞ்ச்சில் இடம்.

 

ஸ்காட்டை விட புத்திசலியான ஒரு மாணவன், எல்லா கேள்விகளுக்கும், முந்திரிக்கொட்டை போல முந்திக்கொண்டு பதில் சொல்லி வந்தான். ஆனால் அவனை உற்று நோக்கி வந்த ஸ்காட், ஒரு ரஹசியத்தைக் கண்டு பிடித்தார். அவன் ஒவ்வொரு முறை பதில் சொல்லும்போதும், சட்டையிலுள்ள பட்டனை (பொத்தானை) தடவிக்கொண்டெ பதில் சொன்னான். ஸ்காட் நினைத்தார்- இவன் உயிர் இதில்தான் இருக்கிறது என்று எண்ணி, ஒரு நாள் பள்ளிக்கு வந்தவுடனே அவனது பட்டனை கூரான கத்தி கொண்டு கத்தரித்துவிட்டார். இது அந்த மாணவனுக்குத் தெரியாது.

 

வகுப்பறையில் கேள்வி நேரமும் வந்தது. ஆசிரியர் கேள்வி கேட்டார். அந்தப் பையனுக்கு விடை தெரியும். உடனே பொத்தானைத் தடவ முயற்சித்தான். அங்கே பட்டன் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தான். உடனே ஸ்காட் எழுந்து பதில் தந்தார். ஸ்காட்டுக்கு பரம சந்தோஷம் – தனது சதித்திட்டம் வெற்றி பெற்றதில்-

scott 2

ஸ்காட் மிகவும் இளகிய மனமுடையவர்.ஒரு முறை அவரது வீட்டில் திருடிய ஒருவனை அவர் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.

ஸ்காட்: ஏய், நீ திருடினாயா?

பிடிபட்ட ஆள்: ஆமாங்க சாமி! நான் திருடியது உண்மைதான். என் குடும்பம் பட்டினியால் வாடுகிறது. நான் திருடிப் பணம் கொடுக்காவிடில், சோற்றுக்கு வழி இல்லாமல் நாங்கள் இறக்க நேரிடும்” என்றான். அவன் உண்மையைச் சொன்னதில் ஸ்காட்டுக்கு மகிழ்ச்சி. அவனுக்கு தனது ஆடு மாடுகளை மேய்க்கும் வேலையை கொடுத்தார். அவன் மிக விசுவாசமாக, ஸ்காட் வீட்டில் 20 ஆண்டுகளுக்கு வேலை செய்தான்! அவன் இறந்த அன்றைக்கு ஸ்காட் கண்ணீர் விட்டு அழுதார். நல்லவனாக மாறிய திருடன் மீது அவ்வளவு பாசம்!

 

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதுபோல, ஸ்காட் சிறு வயதிலேயே எதையும் ஊன்றிப் படிப்பார். படித்த விசயத்தில் ஆழ்ந்து ஐக்கியமாகி விடுவார். ஒரு முறை கப்பல் மூழ்குவது பற்றிப் படித்துக் கொண்டிருந்தார். அதிலுள்ளவர்கள் தப்பிக்க முயல்வது போல தாமும் தப்பிக்கும் கூச்சலை இட்டார். வீட்டிலுள்ள எல்லோரும் அதை வேடிக்கை பார்த்தனர்.

 

ஸ்காட் எழுதிய வேவர்லி கதை, “எழுதியவர் பெயரில்லாமல்” வெளியிடப்பட்டது. ஆசிரியர் பெயர் இல்லாத புத்தகம் என்றவுடன் அதற்கு நிறைய ஆதரவு கிடைத்தது. ஆயிரக் கணக்கில் விற்றது. ஆனால் எழுத்து நடையை வைத்தே, அது ஸ்காட்டினுடைய படைப்பே என்று ரசிகர்கள், கண்டு பிடித்துவிட்டனர்.

 

சிறு வயது முதல் ஸ்காட்டுக்குக் கவிதைகளும் பாடல்களும் பிடிக்கும். தனது ஸ்காட்லாந்து பற்றிய பாடல்களைப் படித்துக்கொண்டே இருப்பார்; பாடவும் செய்வார்; யார் குறுக்கிட்டாலும் நிறுத்த மாட்டார். பாடி முடித்த பின்னரே பதில் சொல்லுவார்.

novel scottnovel scott

ஸ்காட் எழுதிய புகழ் பெற்ற நூல்கள்:–

பிறந்த தேதி:-15-8-1771

இறந்த தேதி:- 21-9-1832

நிறைய கவிதைகளையும் கீழ்கண்ட புகழ்பெற்ற நாவல்களையும் எழுதினார்:–

Guy Mannering, Kenilworth, Ivanhoe, Waverly, Rob Roy, The Pirate, The Antiquary, The Black Dwarf, Woodstock, The Fortunes of Nigel, The Heart of Midloathian etc.

–சுபம்–

 

உதவும் குணம், உதார குணம் பற்றிய சுவையான சம்பவங்கள், பொன்மொழிகள்

Brahms (1)

Article No. 2003

Compiled  by London swaminathan

Date 19 July 2015

Time uploaded in London: 10-19

அரிஸ்டாடில்

கிரேக்க நாட்டு தத்துவவித்தகர் அரிஸ்டாடில், ஒரு கெட்ட மனிதனுக்குப் பிச்சை போட்டார்.

“அரிஸ்டாடில்! அவன் ஒரு அயோக்கியன், அவனுக்கு ஏன் பிச்சை போட்டீர்கள்?” என்று நண்பர்கள் கேட்டனர்.

அரிஸ்டாடில் சொன்னார்,

அட! நான் அவனுக்காகவா போட்டேன்? மனிதகுலத்துக்காகப் போட்டேன்” – என்றார்.

(தமிழில் ஒரு பழமொழி உண்டு: சித்தம் போக்கு சிவன் போக்கு, ஆண்டி போக்கு, அதே போக்கு! அறிஞர்களின் உதார குணம் ஆழமானது; பொருளுடைத்து!)

haystack

நிலத்தை எரித்த சீன விவசாயி!

ஒரு சீன விவசாயி மலைப் பகுதியில், நெல் வயலில், வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது பூமி அதிர்சி ஏற்பட்டு, கடல் உள்வாங்கி, திடீரென்று பின்னுக்குச் செல்வதைக் கண்டார். மாபெரும் சுனாமி பேரலைகள் வந்து, தாழ்வான இடம் முழுதும் வெள்ளக்காடாகப் போகிறது என்று உணர்ந்தார்.

தாழ்வான பகுதியில் தனது சொந்த கிராம மக்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று துடியாய்த் துடித்தார். என்ன செய்வது? உரக்க கூக்குரல் போட்டாலும் காதில் விழாது; தான் கீழே போனால் எல்லோரும் “கூண்டோடு கைலாசம் போவோம்” — என்பது அவருக்குத் தெரியும்.

அவருடைய சமயோஜித புத்தி அவருக்கு உதவியது; பக்கத்தில் தனக்குச் சொந்தமான பெரிய வைக்கல்போர் (குவியல்) இருந்தது. அதற்குத் தீ வைத்தார். அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று கோவில் மணியைத் தொடர்ந்து அடித்தார். கோவில் மணியால் ஈர்க்கப்பட்ட கிராம மக்கள் மலை உச்சியைப் பார்த்தனர். அங்கே வயலில் எரியும் தீயைக் கண்ணால் கண்டனர். ஒஹோ! வயல் எரிகிறது. அதற்கு உதவி கோரி கோவில் மணியை அடித்து இருக்கிறார்கள் என்று எண்ணி கிராம மக்கள் அனைவரும் மலை உச்சிக்கு ஏறினர்.

சுனாமிப் பேரலைகள் வந்து அவர்கள் இதுவரை வேலை செய்த்த தாழ்வான பகுதிகளை மூழ்கடித்ததைக் கண்டனர்.

மலைக்கு மேலிருந்த விவசாயியின் சமயோசித புத்தி தங்கள் உயிர்களை எப்படிக் காப்பாற்றியது என்று எண்ணி அவருக்கு நன்றி கூறினர். அதுமட்டுமல்ல அவரை எந்த ஒரு சக்தி இப்படிச் செய்ய ஊக்குவித்ததோ அதை வணங்குவோம் என்று கருதி ஆண்டுதோறும் அந்த சக்தி தேவதையை இன்றும் வழிபட்டு வருகின்றனர்! அதாவது அவர் உயிருடனிருக்கும்போதே, அந்த தனி மனிதனை வழிபாடாமல், அவனுடைய நற்குணத்தை வழிபடத் துவங்கிவிட்டனர்.

(நம் நாட்டில் தனிமனிதனுக்குச் சிலைகளை வைத்துவிட்டு, அவர்கள் சொன்ன தத்துவங்களை மறந்து விடுகிறோம். காந்திஜியின் தத்துவங்களைக் காங்கிரஸ் கட்சி கொன்றது; திருவள்ளுவர் தத்துவங்களைத் திராவிடக் கட்சிகள் குழிதோண்டிப் புதைத்தன!)

தமிழர் நடுகற்கள்

சீனர்களைப் போல, தமிழ் நாட்டில் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் கொடிய காட்டு மிருகங்களுடனோ, கொள்ளையர்களுடனுடனோ சண்டையிட்டு ஊரைக் காத்து உயிர்நீத்த வீரர்களுக்கு நடுகல் நட்டு இன்றும் அவரது சக்திக்கு படைப்புகள் கொடுப்பதைக் காண்கிறோம். சில வீரர்கள் காலப் போக்கில் கிராம தேவதைகளாக்கப்பட்டு கோவில்களும் கட்டப்பட்டுவிட்டன!

WALNUT

மரம் நட்ட மாமனிதன்!

அமெரிக்காவில் டெக்ஸாஸ் என்னும் ஒரு மாநிலம் உள்ளது. அதன் புகழ்மிகு கவர்னர் ஹாக். அவர் இறக்கும் தருவாயில் சொன்னார். “நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச் சின்னம் எழுப்பி காசு, பணத்தை வீணடிக்காதீர்கள்; என் கல்லறையின் தலை மாட்டில் பெக்கன் கொட்டை மரத்தை நடுங்கள்; என் கால் மாட்டில் வால்நட் மரக் கொட்டைகளை நடுங்கள்; இரண்டும் மரமாகி விதைகளைத் தள்ளும் போது என் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய டெக்ஸாஸ் மக்களிடையே அவைகளை விநியோகிங்கள். அவர்கள் அதைப் பயிர் செய்து அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் செழிக்கட்டும்” — என்றார்.

அதுபோலவே 1926 ஆம் ஆண்டுமுதல் அந்த மரங்களிலிருந்து கிடைத்த விதைகளை அருகிலேயே வரிசையாக நட்டு பெரிய மரச் சோலையை வளர்த்தனர். அவை பெரிதாகி விலையுயர்ந்த வால்நட், பெக்கன் பருப்பு விதைகளைக் கொடுக்கின்றன. அவைகளை நட்டு, மரக் கன்று வந்தவுடன் அவைகளைப் பக்கத்து ஊர்ப் பள்ளிக்கூடங்களுக்கு விநியோகிக்கின்றனர்.

என்ன அருமையான யோஜனை பாருங்கள்! தன்னுடைய நினைவையும் தக்க வைத்தார்: தன் நாட்டையும் செழிக்கச் செய்தார்!!

செத்தும் கொடுத்தான் சீதக்காதி

இதே போல தமிழ் நாட்டிலும் சீதக்காதி என்னும் பெருந்தகையின் புகழ் இன்றும் இருக்கிறது. செத்தும் கொடுத்தான் சீதக்காதி ! என்னும் கதையை முன்னரே எழுதிவிட்டேன். படித்தறிக!

pope, book

போப்பும் ஸ்விFப்டும்

ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்கு அலெக்ஸாண்டர் போப் என்ற கவிஞரையும் ‘கல்லிவர்ஸ் ட்ராவல்’ முதலிய படைப்புகளைப் படைத்த ஜோனதன் ஸ்விப்ட் என்ற எழுத்தாளரையும் நன்கு தெரியும். கல்லிவரின் லில்லிபுட் யாத்திரை தமிழிலும் இருக்கிறது. இதுபற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். நமது ‘விரலான்’ கதையை அவர் அரசியல் அங்கதமாக எழுதினார் என்பதை விளக்கி இருக்கிறேன் முன்னொரு கட்டுரையில்.

ஸ்விப்டிடம் போப் என்ன சொன்னார் தெரியுமா?

“என்னிடம் நிறைய பணம் இருக்கிறது; ஆண்டுக்கு நூறு பவுண்டுகள் வரை நன்கொடை கொடுக்க இயலும் (அந்தக் கலத்தில் 100 பவுண்ட் என்பது இப்பொழுது மில்லியன் போல); இந்தப் பூவுலகில் ஏதேனும் நல்லது செய்வேன்; புழுப்போல நெளிய மாட்டேன். உயிருடன் இருக்கும் போதே மற்றவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து அவர்கள் சந்தோஷப்படுவதைப் பார்த்து நான் பேரானந்தம் அடைவேன். நான் இறந்த பிறகு என்னிடம் எனக்கு கல்லறை எழுப்பக்கூட பணம் மிச்சம் இருக்கக் கூடாது. என் கல்லறைக்கு வெளியே யாராவது ஒருவன் காசு வேண்டி நிற்பானாகில் நான் நாணித் தலை குனிவேன்!”

(எவ்வளவு உயரிய சிந்தனை! ‘தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’, ‘இல்லை என்பதை இல்லை ஆக்குவேன்” – என்று முழக்கமிட்ட புரட்சிக் கவிஞன் பாரதியை இது நினைவுபடுத்தும்).

1967Swift

இசைமேதை பிராம்ஸ்

இசைமேதை பிராம்ஸ் அவர்களுக்கு ஒரு ஆங்கிலேயர் 1000 பவுண்ட் (இப்போது கோடி பணத்துக்குச் சமம்) உயில் எழுதிவிட்டு இறந்து விட்டார். இந்தச் செய்தியை பிராம்ஸிடம் சொன்னார்கள். அவர் சொன்னார்: “இதைவிட பேரானந்தம் தரும் அனுபவம் உண்டா? இதைவிட நல்ல செய்தி என்ன இருக்க முடியும். என்னை அறியாத ஒருவன் – எனக்கு கடிதமே எழுதாத ஒருவன் – இப்படி என்னை நினைவிற் வைத்துக் கொண்டது என் இதயத்தின் ஆழத்தைத் தொட்டுவிட்டது. முன்னைப் போல, மீண்டும் ஒரு முறை அளவிட முடியாத ஆனந்தம் பெற்றேன். வெளியே எனக்குக் கிடைத்த பெரிய விருதுகளுக்கும் பட்டங்களுக்கும் எல்லாம் மேலானது இது! எனக்கு இந்தப் பணத்தை ‘முதலீடு’ செய்து எனக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை.அவரைப் போலவே நானும் இதை மற்றவர்களுக்குக் கொடுத்து பெரு மகிழ்ச்சி அடைவேனாக”

இந்த சம்பவங்களைப் படித்துவிட்டு கீழேயுள்ள மேற்கோள்களைப் படியுங்கள். பொருள் தெள்ளிதின் விளங்கும்!

brahms

“கைம்மாறு வேண்டா கடப்பாடு” – குறள் 211

பலனை எதிர்பாராமல் உதவி செய்

“ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப்படும்” – குறள் 214

மற்றவனுக்கு உதவுபனே உயிர் வாழ்பவன்; மற்றவர்கள் நடமாடும் பிணங்கள்!

“ஊருணி நீர் நிறைந்தற்றே பேரறிவாளன் திரு” -215

நல்லோரிடமுள்ள செல்வம் ஊற்றுத் தண்ணீர் போல எல்லோருக்கும் பயன்படும்.

வறியார்க்கொன்று ஈவதே ஈகை – 221

தேவைப்பட்டவருக்கு காசு கொடுப்பதே தானம்.

மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று 222

தானம் செய்தால் மறு ஜன்மத்தில் பலன் என்று நினைக்காதீர்கள்! சொர்க்கம் என்று ஒன்று இல்லாவிடினும் கொடுப்போம்!

“ஈத்துவக்கும் இன்பம் அறியார் வறியார்” – 228

கொடுக்கும் போது ஏற்படும் ஆனந்தத்தை அறியாதோர்தான் ஏழைகள்!

சம்ஸ்கிருதப் பொன் மொழிகள்

“பெருந்தன்மை கொண்டோருக்கு உலகமே ஒரே குடும்பம்” – பஞ்சதந்திரக் கதைகள்

உதார குணம் படைத்தவன் கொடுப்பான்; கொடுத்துக் கொண்டே இருப்பான். கருமியோ கொடான்,கொடான்; கூனிக் குறுகி குமுறுவான்! –கஹாவத் ரத்னாகர்

தனக்கே உடையில்லாத பிச்சைக்காரன் கூட, தானம் செய்து மகிழ்வான்  — கஹாவத் ரத்னாகர்

-சுபம்-

டாக்டர்களும் வழக்கறிஞர்களும் — சில சுவையான சம்பவங்கள்!

intl_court_stamp

Article No.1993

Compiled by London swaminathan

Date 14th July 2015

Time uploaded in London:  காலை 9–36

டாக்டர்களையும் நீதித்துறை நிபுணர்களையும் மனுவும் வள்ளுவனும் கண்ட முறையை நாளைக்குச் சொல்லுகிறேன். இன்று மேலை நாட்டினர் அவர்களை எப்படி நோக்கினார்கள் என்பதைக் காண்போம்.

அன்புடையீர்,

ஆங்கிலக் கட்டுரையில் 15 சம்பவங்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறேன். அத்தனையும் கொடுத்தால் இடம் போதா, நேரம் போதா! ஆக ஒரு சில மட்டும் இங்கே:–

டயோஜெனிஸ் (Diogenes)  எனவர் 2300 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஒரு தத்துவ மேதை. ஒரு டாக்டரும் வழக்கறிஞரும் அவரிடம் சென்று எங்களிடையே ஒரு வாக்குவாதம், சர்ச்சை! யாருக்கு முதல் மரியாதை? வரிசையில் யார் முதலில் செல்ல வேண்டும்?

தத்துவ வித்தகர் சொன்னார்:

திருடன் (Thief) முதலில் போகட்டும்; அவன் பின்னால் மரணதண்டனையை நிறை வேற்றுபவன் (executioner) செல்லட்டும்!

உடனே வக்கீல் சந்தோஷத்துடன் முதலில் சென்றார். அவரைப் பின் தொடர்ந்தார் டாக்டர்!

Xxxx

அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் ஒரு ஏழை வழக்கறிஞர் இறந்து போனார்.

எல்லா சட்டத்தரணிகளும் சேர்ந்து ஆளுக்கு ஒரு ஷில்லிங் வசூல் செய்து சவ அடக்கம் செய்ய முன் வந்தனர்.

வழக்கறிஞர் குழு ஒன்று, அந்த ஊரின் தலைமை நீதிபதியிடம் போய், “ஐயன்மீர்! நீவீர் ஒரு ஷில்லிங் கொடுத்தால் நன்றிக் கடற்பாட்டுடையராய் இருப்போம்” என்று நவின்றனர்

அதற்கு அவர் மறுமொழி கொடுத்தார்:

ஒரு ஷில்லிங்! ஒரே ஷில்லிங் தானா? ஒரு வழக்கறிஞரைப் புதைக்க ஒரே ஷில்லிங் என்றால் இந்தாருங்கள் ஒரு ‘கினி’ தருகிறேன். இன்னும் 20 வழக்கறிஞர்களை அடக்கம் செய்யுங்கள்.”

ஒரு கினி = 21 ஷில்லிங்

ஷில்லிங், கினி என்பதெல்லாம் பழைய பிரிட்டிஷ் நாணயங்கள். நம்மூர் அணா, தம்பிடி போன்றவை

Xxxx

ஒரு வழக்கறிஞர் தன்னுடைய படத்தை வரையச் சொல்லி பணம் கொடுத்தார். அவர் தனது ஒரு கையை ‘பேண்ட் பாக்கெட்’டுக்குள் வைத்துக் கொண்டு நிற்பது போல ‘போஸ்’ கொடுத்தார். படம் தத்ரூபமாக வந்தது. அதைப் பார்த்த aவரது நண்பர்கள் புகழ்ந்தனர்:

ஐயா, படத்தைப் பார்த்தால் உங்களைப் பார்ப்பது போலவே இருக்கிறது. அதே ‘ஸ்டைல்”! அதே தோற்றம்! என்று புகழ்ந்து தள்ளினர்.

பக்கத்தில் ஒரு வயதான விவசாயி நின்று கொண்டிருந்தார்.அவர் சொன்னார்;

“எல்லாம் தத்ரூபமாக, அச்சடித்த மாதிரி அப்படியே இருக்கிறது. ஆனால் அந்த வழக்கறிஞரின் கை, மற்றொருவர் பாக்கெட்டில் இருப்பது போல வரைந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்குமே!”

Xxxxxx

அமெரிக்காவில், ஒரு நகரத்தில், ஊரிலேயே மிகவும் பிரபலமான ஒரு செல்வந்தர் ஒரு படுகொலை செய்துவிட்டார். சாட்சியங்கள் எல்லாம் அவருக்கு எதிராகவே இருந்தன. கட்டாயம் மின்சார நாற்காலியிலிருந்து (மரண தண்டணை) தப்பிக்கமுடியாது என்று தெரிந்துவிட்டது. அவரே தான் கொலைகாரன் என்று ஒப்புக் கொண்டார். ஆனால் அவருக்கோ ஏராளமான நண்பர்கள். அவரை எப்படியும் காப்பாற்றுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டனர்.

மேலை நாடுகளில் இதுபோன்ற வழக்குகளில் ஜூரர் எனப்படும் நடுவர் பன்னிருவர் இருப்பர். அவர்களே ஒருவர், குற்றம் இழைத்தாரா அல்லது இல்லையா என்பதை தீர ஆராய்ந்து முடிவு செய்வர். பின்னர் நீதிபதி தண்டனை என்ன என்பதை அறிவிப்பார்.

விவாதம் முடிந்து ஜூரிகளின் அறிவிப்பு வெளியாகும் நாள் வந்தது. அவர்கள் ஒருமித்த முடிவு எடுத்து குழுத்தலைவர் மூலம் அறிவித்தனர்:

“அவர் குற்றவாளி அல்ல!”

நீதிபதிக்கு வியப்பு ஒரு புறம்; ஆத்திரம் மறுபுறம்!

அட! பாவிப்பயல்களா! குற்றவாளியே தான் கொலைகாரன் என்று ஒப்புக் கொண்டுவிட்டானே! எப்படியப்பா, இப்படிப்பட்ட முடிவை எடுத்தீர்கள்? என்று கேட்டார்.

“கனம் நீதிபதி அவர்களே! இந்தக் குற்றவாளி இருக்கிறானே, அவன் மஹா பொய்யன். அவன் உண்மை பேசியதே இல்லை. அவன் கொலைகாரன் என்று சொல்வதை நாங்கள் நம்பமுடியாது!”

நீதிபதியும் வாய் பேசாது அந்த செல்வந்தரை விடுதலை செய்து, வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

Xxxx

Dumas1970FR

இதோ டாக்டர்கள் பற்றி………………

ஆபரேஷன் தியேட்டருக்குள் செல்வதற்குத் தயாராக ஒரு நோயாளி காத்திருந்தார். அவர் படுக்கை வண்டி அருகே மற்றொரு அழகிய இளம் பெண் நின்று கொண்டிருந்தாள். அவளை நோக்கி நோயாளி:

“எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. உடம்பெல்லாம் நடுங்குகிறது. ஏனெனில் என் வாழ்க்கையில் இதுதான் முதல் ஆபரேஷன்@.

அந்த இளம் பெண் சொன்னாள்:

“எனக்கும் மிகவும் பயமாக இருக்கிறது. உடம்பெல்லாம் நடுங்குகிறது. என் கணவர்தான் இன்று ஆபரேஷன் செய்யும் டாக்டர். அவருக்கும் இதுதான் முதல் ஆபரேஷன் கேஸ்!”

Xxxx

அலெக்ஸாண்டர் டுமா (Alexander Dumas) என்பவர் பிரபல பிரெஞ்சு நாவலாசிரியர். அவருடைய ஊரான (Marseilles) மார்செய்க்கு பிரபல டாக்டர் (Dr.Gistal) ஒருவர் வந்து குடியேறினார். ஒருநாள் நாவலாசிரியரை விருந்துக்கு அழைத்தார். விருந்தும் முடிந்தது. அந்த டாக்டர் பெருமையாக தனது புகைப்படத் தொகுப்பை எடுத்து மேஜையில் வைத்தார். டுமாவும் அதை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

டாக்டர் சொன்னார்

அன்பரே! உங்கள் எழுத்துகளும் படைப்புகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். நகைச் சுவையாக எழுதுவதில் கைதேர்ந்தவர் நீவீர்! எங்கே என் புகைப்படத்தில் ஏதாவது எழுதுங்கள் பார்ப்போம்?

நாவலாசிரியர் பேனாவைக் கையில் எடுத்தார்; எழுதினார்:–

“டாக்டர் கிஸ்டார் ஊருக்கு வந்தார்

நோய்களை எல்லாம் தீர்க்க ஆசை!

மருத்துவ மனைக்கு தேவையே இல்லை!

தரைமட்டம் ஆக்கிவிட்டோம்”

இபடி ஒரு கவிதையை அவர் எழுதியவுடன் டாக்டருக்கு மிகவும் மகிழ்ச்சி!

“எழுத்தாளர்களுக்கு மற்றவர்களைப் புகழ்வது ஒன்றே தொழில்” என்று டாக்டர் பாராட்டி முடிவதற்குள் டுமா, இன்னும் ஒருவரியைச் சேர்த்தார்:

ஆனால் இடுகாடு (cemetery) எல்லாம் பெரிதாப்போச்சு!

ஆக, டயோஜெனிஸ் காலம் முதல் டாக்டர்கள் என்றால் யம தர்மன்கள், வக்கீல்கள் என்றால் கொள்ளைக்காரன்கள் என்ற கருத்து மேலை நாடுகளில் இருந்து வருகிறது. நாளைக்கு நமது பண்பாட்டில் எப்படி? என்பதைப் பகிர்வோம்.