வேதத்தில் விளையாட்டுகள் ! (Post No.8866)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8866

Date uploaded in London – –28 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேதகாலத்தில் மக்கள் இன்பமாக வாழ்ந்தனர். பெண்களும் பொது இடங்களுக்குச் சென்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பாணினி 2700  ஆண்டுகளுக்கு முன் எழுதிய இலக்கண நூலிலும் அதன் உரைகளிலும் பல புதிய — அதாவது இப்போது வழக்கொழிந்த — விளையாட்டுகளைக்  காண்கிறோம் .

வேத கால மக்களின் முக்கியத் தொழில் விவசாயம், தேர்கள் செய்யும் தச்சசு வேலை, கால்நடை- குதிரை வளர்ப்பு, போர்த் தொழில், ஆயுத உற்பத்தி முதலியன ஆகும்.

அவர்கள் பொழுது போக்கச் செய்தவை – சூதாட்டம், ஆடல், பாடல், இன்னிசைக் கருவிகள் வாசித்தல், தேர் ஓட்டல், தேர் பந்தயம்/ ரதம் ஓட்டும் போட்டி, BOARDS GAMES போர்டு/ அட்டை விளையாட்டுகள்– அதாவது சொர்க்கப்படம் — பாம்பு-ஏணி SNAKES AND LADDER படம் உள்ள அட்டைப்பட விளையாட்டுகள், பல்லாங்குழி முதலியன.

சூதாட்டத்தின் தாக்கத்தை மஹாபாரதம்  வரை காண்கிறோம். நள- தமயந்தி சரிதத்தில் படிக்கிறோம். புறநானுற்றில்  பிராமணனும் மன்னனும் ஆடிய வட்டு ஆட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் பகடைக் காய்களை எரிந்து கோபம் அடைந்த பாடல் உளது. திருவள்ளுவரோ பத்து குறள்களில்  சூதாட்டம் பற்றி எச்சரிக்கிறார் ;ஆக, இமயம் முதல் குமரி வரை சூதாட்டம் ஆதிக்கம் செலுத்தியது.

உலகின் மிகப்பழமையான புஸ்தகம் ரிக்வேதம்; ஜெர்மானிய ஹெர்மன் ஜாகோபியும் இந்திய சுதந்திர சிற்பி பாலகங்காதர திலகரும் 6000 முதல் 8000 ஆண்டுப் பழமையானது என்று நிரூபித்துள்ளனர்; அதில் சூதாட்டத்தில் பணம் இழந்த ஒரு மனிதன் புலம்பு, புலம்பு என்று புலம்பி, உலகில் சிறந்தது வேளாண்மையே என்று விவசாயத்துக்குத் திரும்பி  வந்ததை ரிக்வேத 10-34-13 சூதாட்டப் பாடல் காட்டுகிறது; உலகின் முதல் சொற்பிறப்பியல் புஸ்தகம் (ETYMOLOGY எடிமோலஜி )எழுதியவர் யாஸ்கர். உலகில் கிரேக்கர்கள்  புஸ்தகம் எழுதுவதற்கு முன்னால் , அவர் சொற்பிறப்பியல் அகராதிக்கே போய்விட்டார். அவ்வளவு பழமையானது சம்ஸ்கிருதம். அவரும் சூதாட்டம்  ஒழிக , விவசாயம் வாழ்க என்று நிருக்தம் 8-3 ல் கதைக்கிறார்.

வள்ளுவனும் உலகிற்கு ஆணி, வேளாண்மை என்று சொல்லி பத்து பாக்களில் விவசாயம் ஜிந்தாபாத் என்று சொல்லிவிட்டு, மேலும் 10 குறட் பாக்களில் சூதாட்டம் மர்தாபாத் என்று வசை பாடுகிறார். ஆக, சூதாட்டம் என்னும் விளையாட்டு இந்துக்களின் வாழ்வில் கொடிகட்டிப் பறந்ததைப்  பார்க்கிறோம் .

இதற்கு அடுத்த படியாக வரும் விளையாட்டுகள் குதிரைப் பந்தயம், தேரோட்டும் பந்தயம். 

குதிரைப் பந்தயம் சென்னை கிண்டி முதல் உலகின் மிகப்பெரிய  நாடுகள் வரை நடைபெற்றது. இப்பொழுது சூதாட்ட பெட்டிங் BETTING — பந்தயப்பணம் கட்டும் – கடைகள் உலகின் மிகப்பெரிய நகரங்களில் பேட்டைதோரும் உளது. இதைத் துவக்கி வைத்தவர்களும் இந்துக்களே. ‘இம்’ என்னும் முன்னே 700 காதம் சென்ற SUPER FAST சூப்பர் பாஸ்ட் ரதங்களை , நள   தமயந்தி சரிதத்தில் படிக்கிறோம். ‘வைகலும் எண் தேர் செய்த தச்சர்’கள் பற்றி புறநானுற்றில் பயில்கிறோம்.; தச்சர் என்பது ஸம்ஸ்க்ருதச் சொல்..

அகநாநூற்றில் காதலியைக் காணவரும் காதலர்கள் SUPER FAST SPEED சூப்பர் பாஸ்ட் ஸ்பீடில் வண்டியை ஒட்டும்படி டிரைவர்களுக்கு கட்டளை இடுவதையும் எழுதி வைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் — காந்தார- கேகய — வீராங்கனை கைகேயி, தசரதன் ரதத்துக்கு சாரதியாக இருந்து வெற்றிவாகை சூடி , இரண்டு வரம் பெற்று, அதை ‘மிஸ்யூஸ்’ MISUSE  பண்ணி ராமாயணக் கதையை எழுதச் செய்ததையும் நாம் அறிவோம்.  ஆக இமயம் முதல் குமரி வரை ‘பக்கா’ ரோடுகள் இருந்ததும் அதில் ஜப்பானிய BULLET TRAIN புல்லட் ட்ரையினை விட அதி வேகத்தில் நம்மூர்க்கார்கள் சென்றதையும் உலகிற்கே சொன்னோம். அப்பொழுது எகிப்தியர்களும், பாபிலோனியர்களுக்கும் குதிரைக்கும் ரதத்துக்கும் ஸ்பெல்லிங் SPELLING  கூடத் தெரியாது என்பதை சரித்திர வல்லுநர்கள் புகல்வர் . மாயா நாகரீக மக்களுக்கோ சக்கரம்/WHEEL என்பதே தெரியாது என்றும் பகர்வர்.

ரிக்வேதம் 10-102 பாடலில் ‘ரேக்ளா ரேஸ்’ போல அதிவேக மாட்டுவண்டி CHASE சேஸ் ஒன்றைப் படிக்கலாம். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வரும் CAR CHASE கார் சேஸ் போன்றவற்றை விட அதிவேகத்தில் மாட்டு வண்டி பறந்ததையும் அந்த வீரனின் மனைவியும் வண்டி யி ல் சென்றதால் காற்றில் அவளுடைய ஆடை பறந்ததையும் படித்து மகிழலாம் ;

இது பற்றி வேதங்களுக்கு விளக்க உரை எழுதிய சாயனர் ஒரு கதை சொல்கிறார். முத்கலன் என்பவருடைய பசு, காளை மாடுகளைத் திருடர்கள் திருடிச் சென்றனர். அவனது  மனைவி முத்கலானி  வேகமாக காளை  வண்டியை ஓட்டி ச் சென்றாள் . முதக்கலன் தன்னுடைய  ‘கதை’–யைத் தூக்கி எறிந்து  திருடர்களை விரட்டினான். அக்காலத்தில் இந்து தம்பதியர்கள் எவ்வளவு வீரர்களாகத் திகழ் ந் தனர் என்பதற்கு இப்பாட்டு எடுத்துக்காட்டு. வண்டி ஓட்டுதல் , ரதம் ஓட்டுதல் முதலியனவும் ஆண் பெண் பங்கேற்புடன் நடைபெற்றன.

அந்தக்  காலத்தில் க்ஷத்ரியர்களாகப் பிறந்தால் வீரத்தை நிரூபித்தால்தான் பெண் கொடுப்பார்கள். கிருஷ்ணன், ஜல்லிக்கட்டில் பங்கு கொண்டு ஏழு காளைகளை அடக்கி நப்பின்னையை கல்யாணம் கட்டினான். அதைத் தொடர்ந்து யாதவ குல மாதர் அனைவரும் காளையை அடக்கியவரை மக்க  விரும்பியதை கலித்தொகைப் பாடல்கள் காட்டுகின்றன. இது போல குதிரைப் பந்தயத்தில் வெற்றி பெறுவோருக்கே பெண் கொடுத்தனர் வடக்கத்திய இந்துக்கள். சில நேரங்களில் யாரும் தூக்க முடியாத சிவன் வில்லைத் தூக்கி நாண்  ஏற்றிய ராமனுக்கு சீதையைக் கொடுத்ததையும் டில்லியில் நடந்த உலகத்தின் முதல் ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற அர்ஜுனனுக்கு திரவுபதி கிடைத்ததையும் பார்க்கலாம். வில்வித்தை முதலிய விளையாட்டுகள் அடங்கிய ஒலிம்பிக் போட்டியை நாம் 5200 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தியதை மஹாபாரதம், பாகவதம் முதலிய நூல்கள் காட்டும்.

குதிரைப் பந்தயத்தில் எல்லைக் கம்பம் ஒன்று இருக்கும் அதன் பெயர் கார்ஸ்ம என்று சாயனர் விளக்குகிறார் — RV. 1-116- 17

சவித் புதல்வியின் பெயர் சவிதா அல்லது சூர்யா . ரத போட்டியில் யார் வெல்வரோ அவருக்கே சவிதா/ சூர்யா கிடைப்பாள் என்று அறிவிக்கப்படுகிறது; எல்லாக் கடவுளரும் போட்டியில் பங்கேற்றனர். இறுதியில் அஸ்வினி தேவர்கள் வெற்றி பெற்றனர். உடனே எல்லோரும் சூர்யாவை தேரில் ஏற்றிச் சென்று அஸ்வினி தேவர்களுக்கு அளித்தனர் – காண்க ரிக்/ RV 1-119-5

ராஜசூய யாகத்தின்போது குதிரைப் பந்தயம், ரதம்  ஓட்டும் பந்தயம் நடைபெறும். சோழன் ராஜசூய யாகம் செய்ததை புறநாநூறு பாடுகிறது. அதற்கு சேர, பாண்டிய மன்னர்களும் அவ்வையாரும் வந்தனர். அப்போதும் இந்தப் பந்தயங்கள் நடந்திருக்கவேண்டும்.

ரிக் வேதம் RV.1-116 பாடலில் இன்னும் ஒரு சம்பவம் உளது. விமதன் என்பவன்  கல்யாணம் கட்டிமுடித்த பின்னர் புது மனைவியை ரதத்தில் அழைத்து வந்தான் . அப்போது அவனை எதிரிகளோ திருடர்களோ தாக்கினர். அஸ்வினி தேவர்கள் விரைந்து வந்து அந்த புதுமணத் தம்பதிகளுக்கு உதவுகின்றனர்.

இதே பாடலில் மேலும் சில வியப்பான செய்திகள் உள .

அஸ்வினி தேவர்கள் தங்கள் பலத்தைக் காட்ட — திறமையைக் காட்ட – ஒரு காளை மாட்டையும் காட்டுப் பன்றியையும் ரதத்தில் கட்டி இருந்தனர்.

100 சக்கரங்கள் 6 குதிரைகள் பூட்டிய ரதம் பற்றியும்  இதே பாடல் பாடுகிறது 1-116-ரிக்.

இந்தப் பாடல் அதிசயங்களின் பட்டியல் ; விளையாட்டுக்குத் தொடர்பில்லாத அதிசயங்களை தனியே காண்போம்.

கேலா (Khela)என்ற மன்னனுடன்  அவன் மனைவி விஸ்பலா(Vispala) வும் சென்றாள் . போரில் அவள் கால்களை இழந்தாள் . அஸ்வினி தேவர்கள் அவளுக்கு செயற்கைக் காலை பொருத்தினர். அந்த அளவுக்கு மருத்துவத் துறையில் இந்துக்கள் முன்னேறி இருந்தனர். தமிழ் நாட்டில் கீரந்தை  என்ற பிரமணனுக்காக கைகளை வெட்டிக்கொண்ட பாண்டிய மன்னனுக்கு மருத்துவர்கள் தங்கக் கைகளைப் பொருத்தியதால் பொற்கைப் பாண்டியன் என அவன் பெயர்பெற்றான்

ஆக தேர்கள், தேர் விளையாட்டுகள் பற்றி சங்க இலக்கியத்திலும் ரிக் வேதத்திலும் நிறைய செய்திகள் கிடைக்கின்றன.

–SUBHAM–

tags– வேத காலம், சங்க காலம், விளையாட்டுகள், சூது , குதிரை, ரதம், பந்தயம்

சூதாட்டத்துக்கு ரிக்வேதமும் தமிழ் வேதமும் எதிர்ப்பு (Post No.4905)

Picture posted by Lalgudi Veda

சூதாட்டத்துக்கு ரிக்வேதமும் தமிழ் வேதமும் எதிர்ப்பு (Post No.4905)

 


Written by London Swaminathan 

 

Date: 11 April 2018

 

Time uploaded in London –  21-20  (British Summer Time)

 

Post No. 4905

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

தமிழ் வேதம் என்று திருவள்ளுவ மாலையில் புகழப்பட்ட திருக்குறளும், அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடப்பட்ட ரிக் வேதமும் சூதாட்டத்தின் கொடுமைகளை ஏசுகின்றன. சூதாட்டம் இன்றும் உலகெங்கிலும் இருக்கிறது. பல லட்சம் பேர் தினமும் லாட்டரி டிக்கெட் வாங்கி ஏமாறுகின்றனர். எங்கள் லண்டனுக்கு வந்தால் ஒவ்வொரு தெருவிலும் சூதாட்டக் கடைகள் (betting shops) இரண்டு மூன்று இருக்கும். பெட்’ bet கட்டி ஏமாறுவதற்கு ‘முன் காலத்தில் குதிரைப் பந்தயம் பின்னர் நாய் பந்தயம் என்று இருந்தன. இன்றோ பனி மழை பெய்யுமா, கால்பந்தில் யார் முதல் ‘கோல்’ போடுவார்கள் கிரிக்கெட்டில் எத்தனை ‘ரன்’களில் ஒரு அணி ஜெயிக்கும், தேர்தலில் யார் வெல்லுவார்கள்? என்று பல நூறு விஷயங்கள் சம்பந்தமாக பெட் BET கட்டி ஏமாறலாம்!

 

மஹாபாரதக் கதையின் அடிப்படையே சூதாட்டம்தான் என்பதை நாம் அறிவோம். மனு ஸ்ம்ருதியும் சூதாட்டத்தைக் கண்டிக்கிறது. இது போல திருவள்ளுவரும் ரிக்வேத ரிஷிகளும் சூதாட்டத்தைக் கண்டிக்கின்றனர்.

 

சூது என்ற தமிழ் சொல்லே ‘த்யூத’ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லில் இருந்து வந்தது என்று மொழியியல் வல்லுநர்கள் மொழிவர். ஆனால் நானோ தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒரே குடும்ப மொழிகள் என்றும் அவை கிளைவிட்டுப் பிரிந்து சில ஆயிரம் ஆண்டுகள் உருண்டு ஓடியதால் இரண்டும் வேறு மொழிகள் போல தோன்றுகின்றன என்றும் பல நூறு சொற்கள், சந்தி இலக்கணம், வேற்றுமை உருபுகள் மூலம் நிரூபித்து வருகிறேன். நிற்க.

 

 

சூது என்னும் தலைப்பில் வள்ளுவன் பத்து குறள் பாடி வசை பாடி இருக்கிறான். ஆகையால் மஹா பாரத காலத்துக்குப் பின்ன ரும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக சூதாட்டம் நடைபெற்று வருவதை  அறிகிறோம். அந்தக் காலத்தில் இப்போது போல betting shop பெட்டிங் ஷாப் இல்லாவிடினும் மன்றம், கழகம், சபா (அவை) என்ற இடங்களில் சூதாட்டக்காரகள் சந்தித்து விளையாடியதை அறிகிறோம்.

குறள் 931 முதல் 940 வரை சூதாட்டக் கொடுமைகளைப் பகரும். ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலம் 34 ஆவது பாடல் கவச ஐலூஷன் பாடியது. அதிலுள்ள கருத்துகளை வள்ளுவனும் பிற்காலத்தில் சொல்லி இருக்கிறான்.

சூதாட்டத்தால்  உடை, செல்வம், உணவு, புகழ், கல்வி என்ற ஐந்தும் ஒருவன்  இடத்தில் வராது (939) என்பான் வள்ளுவன்.

 

ரிக் வேத சூதாட்ட துதியோ இதை நன்கு விளக்குகிறது: இதோ ரிக் வேத துதியின் சாராம்சம்:

 

1.சூதாட்டமும் சோம பானம் போல இன்பம் தருகிறது.

 

2.என் மனைவி என்னிடத்திலும் நண்பர்கள் இடத்திலும் அன்பாகவே இருந்தாள்; கோபித்ததே இல்லை; ஆனால் சூதாட்டம் காரணமாக நான் அவளை இழந்தேன்.

 

3.என் மாமியார் என்னை வசை பாடுகிறாள் என் மனைவி என்னை எதிர்க்கிறாள்; கிழட்டு குதிரை போல நான் உள்ளேன்.

4.சூதாட்டக் காரனை மனைவி முதல் எல்லோரும் ஏசுகின்றனர். தந்தையும் சகோதரரும் திட்டுகின்றனர்.

 

5.இனிமேல் ஆடக்கூடாது என்று நினைப்பேன் அந்த தாயக்கட்ட காயுருட்டும் சப்தம் என்னை இழுக்கிறது . நான் காதலியைச் சந்திக்கும் இடத்துக்கு ஓடுவதுபோல ஓடுகிறேன்.

6.காய் உருட்டுவதைப் பார்த்த உடனே ஆர்வம் வந்து விடுகிறது.

7.சூதாட்டக்காரனை காய்கள் வருத்துகின்றன.

8.எவருடைய கோபமும் சூதாட்டக் காய்களைப் பாதிப்பதில்லை. அரசனும் அதை வணங்குகிறான்.

 

9.இதோ காய்கள் மேலேயும் கீழேயும் உருண்டு போகின்றன. அவை இதயத் துடிப்பை அதிகரிக்கின்றன.

 

10.மனைவியும் மகனும் வருந்துகின்றனர். சூதாட்டக்காரன் கடன்பட்டதால் திருடவும் செய்கிறான்.

11.மற்றவர்களுடைய மனைவி மக்களைப் பார்த்து வருந்துகிறான்

 

12.இறுதியில் ஒரு புத்திமதியுடன் கவிதை முடிகிறது:

நான் சொல்லுவதை நம்பு;  சூதாட்டம் ஆடாதே; நிலத்தைப் பண்படுத்தி பயிர் செய்; இதனால் செல்வம் கிட்டும்; இன்பம் வரும்; பசுக்கள் அதிகரிக்கும்; மனைவியும் உடன் இருப்பாள்!

 

13.தானியங்களே! எங்களிடத்தில் நட்புடன் இருங்கள். உங்கள் கோபத்தை என் எதிரிமேல் திருப்பி விடுங்கள் எங்கள் எதிரிகள் உங்களிடம் மாட்டிக்கொள்ளட்டும்

 

பத்து குறள்களையும் ரிக் வேத தாயக்கட்டத் துதியையும் ஒப்பிட்டால் இரண்டிலும் ஒரே கருத்தைக் காணலாம்!!

எண் 53

1.இந்தப் பாடலில் வேறு சில சுவையான விஷயங்களும் வருகின்றன. ‘விபிதகா’ என்ற மரத்தின் விதைகள் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்பட்டன.

 

2.மௌஜவம் என்ற மலையில் சோமரசச் செடிகள் வளருகின்றன.

 

3.பகடை ஆட்டத்தில் 53 காய்கள் உள்ளன. இதை லுட்விக் என்பவர் 15 காய்கள் என்று மொழி பெயர்த்துள்ளார். சம்ஸ்க்ருதத்தில் ‘த்ரி பஞ்ச’ என்ற சொல் உளது.

 

4.’மகத்தான படையின் சேனாபதி’ என்பதற்கு ‘பகடைக் காயின் மிக உயர்ந்த எண்ணிக்கை’ என்று மொழி பெயர்க்கின்றனர்.

 

5.ஒன்றுமில்லை என்று கையை விரிப்பதற்குப் ‘பத்து விரல்கள்’ என்ற சொற்றொடர் உள்ளது. சாயனருடைய பாஷ்யம் கொடுக்கும் தகவலை வைத்தே நாம் இப்படி மொழி பெயர்க்கிறோம்.

 

–சுபம்–

 

சாணக்கியனின் புதிர்க் கவிதை! காலையில் சூது, மதியம் மாது, இரவில் களவு! (Post No.4557)

சாணக்கியனின் புதிர்க் கவிதை! காலையில் சூது, மதியம் மாது, இரவில் களவு! (Post No.4557)

 

Written by London Swaminathan 

 

Date: 28 DECEMBER 2017 

 

Time uploaded in London- 6-46 am

 

 

Post No. 4557

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

சாணக்கியன்  ராஜ தந்திரி மட்டும் அல்ல; பொருளாதார நிபுணன் மட்டும் அல்ல; கவிஞனும் கூட! அவனது சாணக்கிய நீதியில் ஆங்காங்கு சில புதிர்க் கவிதைகளையும் பாடியுள்ளான்.

 

காலையில் சூதாடுங்கள்!

மதியம் பெண்களிடம் போங்கள்!

இரவில் திருடுங்கள்!

நல்ல போதனை ஐயா! போதையில் சொன்ன போதனையோ என்று எண்ணத் தோன்றுகிறதல்லாவா? மேலும் பார்ப்போம்.

 

சாணக்கிய நீதி, அத்தியாயம் 9, ஸ்லோகம் 11

ப்ராதர் த்யூதப்ரசங்கேன மத்யாஹ்னே ஸ்த்ரீ ப்ரசங்கதஹ

ராத்ரௌ சௌர்யப்ரசங்கேன  காலோ கச்சதி தீமதாம்

 

பொருள்

புத்திசாலிகள்/ அறிஞர்கள் காலையில் சூதிலும் மதியத்தில் மாது (மகளிர்) இடத்திலும், இரவில் திருட்டிலும் பொழுதைக் கழிக்கின்றனர்.

 

இதன் பொருள் வியாக்கியானக்காரர்களின்றி நமக்கு விளங்காது. இதோ அவர்கள் பகரும் உண்மைப் பொருள்:-

 

 

த்யூதப் ப்ரசங்க என்பது சூதாட்டம்– காலையில் அறிஞர்கள் மஹாபாரதம் படிப்பார்கள்

 

*தமிழில் நாம் வழங்கும் சூது என்ற சொல் சம்ஸ்கிருத ‘த்யூத’ என்பதுடன் தொடர்புடையது. இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து வந்ததைக் காட்டும் ஆயிரக் கணக் கான சொற்களில் இதுவும் ஒன்று)

 

ஸ்த்ரீ ப்ரசங்க– என்பது பெண் பற்றியது; இங்கே பெண் என்பது உலக மஹா உத்தமி சீதையின் சரிதமான — ராமாயணத்தைக் குறிக்கும்; ஆகவே அறிஞர்கள் மதியத்தில் ராமாயணம் படிப்பார்கள் என்பது இதன் உண்மைப் பொருள்; ‘’ஸீதாயாஸ் சரிதம் மஹத்’’– என்பது ஆன்றோர் வாக்கு.

சௌர்ய ப்ரசங்க– என்பது திருட்டு பற்றியது; இது பாகவத புராணத்தைக் குறிக்கும். கிருஷ்ணனைவிட பெரிய திருடன் உண்டா? வீட்டில் வெண்ணை திருடினான்; காட்டில் கோபியர்களின் சேலைகளைத் திருடினான்; கும்பிடும் இடங்களில் எல்லாம் பக்தர்களின் உள்ளத்தைத் திருடினான்; மனம் கவர் கள்வன் அவன்; உள்ளம் கவர் செல்வன் அவன். ஆக, அறிஞர்கள் இரவு நேரத்தில் பாகவத புராணத்தைப் படித்து, போகும் வழிக்குப் புண்ணியம் தேடிக் கொள்வர்.

 

சாணக்கியனின் கற்பனையும் சொல்லும் நயமும் எல்லோர் மனதையும் வெல்லும்!

 

என்  சொந்தக் கருத்து:–

 

கண்ணன் திருடிய கோபியர்களின் சேலைகள் எல்லாம் எங்கே போயிற்று? அவன் ஏன் அப்படித் திருடினான்? என்றால் எதிர்காலத்தில்

திரவுபதிக்கு உதவத்தான்! நூற்றுக் கணக்கானோர் முன்னிலையில் துச்சாதனன் அவிழ்க்கப் போகும் நேரத்தில் அவன் கை ஓயும் அளவுக்கு சேலை மழை பொழியவே கண்ணபிரான் திருடினான்!

வாழ்க சாணக்கியன் புகழ்; வளர்க கண்ணன் புகழ்!!

 

-சுபம்–

கழகத்தில் சேராதே: தமிழர்களுக்கு எச்சரிக்கை!!

mahabharata-game-of-dice

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1229 ; தேதி 12 ஆகஸ்ட் 2014.

1500 அண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த பேரறிஞன் திருவள்ளுவன் தமிழர்களைக் கடுமையாக எச்சரிக்கிறார்:

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலைப் புகின் (குறள் 937)

கழகத்தில் காலத்தைக் கழித்தால் பரம்பரையாக அவனுக்குக் கிடைத்த செல்வமும் தொலையும். அவனிடமுள்ள எல்லா நல்ல குணங்களும் அழிந்து போகும்!
கழகம்= சூதடும் இடம்.

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார் ( குறள் 935)

கழகத்தை நம்பி பொருள் எல்லாவற்றையும் கோட்டை விட்டவர் பலர் உண்டு! காரணம்? சூதாடும் இடம் (கழகம்), சூதாடும் கருவி, தனது சூதாட்டத் திறமை —- இவற்றை எல்லாம் நம்பி, ‘’இல்லாமல்’’ போனவர்கள் பலர்!

சுருக்கமாகச் சொன்னால் கழகத்தில் சேராதே, கழகத்துக்குப் போகாதே, போனால் நீ அழிந்து போவாய்!
வாழ்க வள்ளுவன்! வளர்க அவன் அறிவுரை!!

இதற்கு முன்னும் பின்னும் உள்ள எட்டு குறள்களில் முத்து முத்தாய் உதிர்க்கிறான் வள்ளுவன்:

sokkattan

புல்லட் பாயிண்ட் 1:
மீனைப் பார்த்தாயா? தூண்டிலைப் பார்த்தாயா? என்ன தெரிந்தது. உன் கதியும் அதே கதிதான் (குறள் 931)

புல்லட் பாயிண்ட் 2
நேற்று லட்டரியில் பத்து ரூபாய் விழுந்ததா? இனிமேல் உனக்கு நூறு முறை தோல்விதான், நீ ஒரு ஏமாளி (குறள் 932)

புல்லட் பாயிண்ட் 3
காயை உருட்டினால் பொருள் கிடைக்கும் என்று சொன்னாயா? உன் கிட்ட நல்ல வழியில் வந்த பொருளும் உருளப் போகுது! (குறள் 933)

புல்லட் பாயிண்ட் 4
டேய்! மண்டு! ‘பெட்’ கட்டினாயா? ரேசுக்குப் போனாயா? லாட்டரி சீட்டாய் வாங்கிக் குவிக்கிறாயா? இனிமேல் உனக்கு வறுமை, சிறுமை ஒன்றுக்கும் குறைவே இல்லை, போ! (குறள் 934)

புல்லட் பாயிண்ட் 5
சூதாட்டத்துக்கு இன்னொரு பெயர் முகடி (மூதேவி). அவள் உன்னை விழுங்கினால் சோற்றுக்கே லாட்டரிதான் (குறள் 936)

புல்லட் பாயிண்ட் 6
சூதாடினாயா? இனிமேல் உன் வாயில் பொய் நிறையவே வரும், அருள் எல்லாம் ஓடிப்போகும் (குறள் 938)

புல்லட் பாயிண்ட் 7
உனக்கு இனிமேல் —- “ரோடி, கப்டா அவ்ர் மகான்” — கிடைக்காது. அதாவது உணவு, புகழ், கல்வி, உடை, செல்வம் ஆகிய ஐந்தும் ‘அவுட்’! (குறள் 939)

புல்லட் பாயிண்ட் 8
நோய் வந்தவுடன் உடம்பின் மேலே கூடுதல் காதல் வருது இல்ல! அதே போல சூதாட்டத்தில் பொருளை இழக்க இழக்க அதன் மேல உனக்கு “லவ்” அதிகரிக்கும், ஜாக்கிரதை! (குறள் 940)

banu karnan 2

ரிக்வேதம் என்ன சொல்கிறது?

சூதாடாதே, நிலத்துக்குப் போய் சோளம் விதை!
கொஞ்சம் ஜெயித்தவுடன் அதைப் பற்றி உயர்வாக எண்ணி விடாதே!
உன்னுடைய ஆடு மாடுகளை எண்ணிப் பார், உனக்கு மனைவியும் உண்டு!
இதுதான் சாவித்ரியே என் கிட்ட சொன்னாள்!
(மண்டலம் 10-34-13)

உலகின் மிகப் பழைய சமய நூல் கூறிய அறிவுரை இது!
கவச ஐலூசர் என்ற முனிவர் காதில் ஒலித்த மந்திரம் இது. வேத மந்திரங்களை சங்க காலப் புலவர்கள் ‘’கேள்வி’’ (காதில் விழுந்தது) என்றும் ‘’மறை’’ (ரகசியம்) பாடுகின்றனர்.

கம்பன் என்ன சொன்னான்?

வள்ளுவனுக்கு சளைத்தவனா கம்பன்? அவன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்?

சூது முந்துறச் சொல்லிய மாத்துயர்
நீதி மைந்த! நினக்கிலை ஆயினும்
ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு
ஓதும் மூலம் அவையென ஓர்தியே (கம்ப ராமாயணம், மந்தரை-2)
ஒப்பிடுக : குறள் 934

banu karnan

அறநெறிச்சாரம் (147) என்ன சொல்கிறது?

ஓதலும் ஓதி உணர்தலும் சான்றோரால்
மேதை எனப்படும் மேன்மையும் – சூது
பொருமென்னும் சொல்லினால் புல்லப்படுமேல்
இருளாம் ஒருங்கே இவை
ஒப்பிடுக: குறள் 939.

பாரதி என்ன சொன்னான்?

“கோயிற் பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலும்
வாயில் காத்து நிற்பான் வீட்டை வைத்து இழத்தல் போலும்
ஆயிரங்களான நீதி அவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்து இழந்தான் — சீச்சீ! சிறியர் செய்த செய்கை செய்தான்”
என்ற பாரதியாரின் பாஞ்சாலி சபதப் பாடல் சூதாடிய தர்மபுத்திரனைச் சாடுகிறது!

வள்ளுவன் வாழ்க ! (சூதாட்டக்) கழகங்கள் அழிக !!