சோம லதையின் அபூர்வ மருத்துவ குணங்கள்! (Post No.7070)

WRITTEN by London swaminathan
swami_48@yahoo.com

Date: 8 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 8-33 am
Post No. 7070

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Jambunathan’s Translation
Griffith’s Tanslation

சோம பானம் பருகுவோம் வாரீர்! (Post No.4018)

Written by London Swaminathan
Date: 20 June 2017
Time uploaded in London- 17-14
Post No. 4018
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

 

இந்துக்கள் இழந்த சொத்துகள், பொக்கிஷங்கள் ஏராளம்.

அக்ஷய பாத்திரம் போச்சு;

அமுத சுரபியும் போச்சு;

சங்கப் பலகையைக் காணோம்;

கோஹினூர் பிரிட்டனுக்குப் போச்சு;

மயிலாசனம் ஈரானுக்கு போச்சு;

கொலைகார சியமந்தக மணி அமெரீக்காவுக்குப் போச்சு;

உலவாக் கிழியைக் காணோம்.

 

இதை எல்லாம் விட அரிய, பெரிய பொக்கிஷம் சோம லதை என்பட்டும் அரிய அதிசய மூலிகை.

 

இந்துக்கள் மனது வைத்தால் இப்பொழுதும் அதைத் தேடிக் கண்டுபிடித்துவிடலாம்.

 

இதைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியது இந்துக்களின் கடமை. ஏனெனில் இந்த மூலிகைக்கு அபூர்வ சக்தி உண்டு. இதைப் பற்றிய ரிக் வேதப் பாடல்களின் முக்கிய அம்சங்களை மட்டும் சொல்கிறேன்.

 

உலகின் பழமையான நூல் ரிக் வேதம்; சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் இந்த நூல் 6000 ஆண்டுகளுக்கு (கி.மு.4500) முந்தையது என்று வேதத்தில் குறிப்பிடப்பட்ட நட்சத்திரங்களின் நிலையை வைத்து புத்தகம் வெளியிட்டுள்ளனர். விட்னி (Whitney) போன்ற அறிஞர்கள் கி.மு 2000 க்கு முந்தையது என்பர். மாக்ஸ்முல்லர் இந்த வேதத்தை  கி.மு.1200-க்கும், கி.மு 3000 க்கும் இடையே வைப்பர். எப்படியாகிலும் எகிப்திலோ, பாபிலோனியாவிலோ, சீனாவிலோ இதையும் விட பழைய புத்தகம் இல்லை. கிரேக்கத்தில் கி.மு 800 முதல் ஹோமர் முதலானோர் எழுதிய நூல்கள் உண்டு. லத்தீனிலும் தமிழிலும் கி.மு. 200 முதல் நூல்கள் உண்டு.

இவ்வளவு பழமையான ரிக்வேதத்தில் ஒரு மண்டலம் முழுதும் சோமபானம், சோம ரஸம் பற்றிப் பாடியுள்ளனர்.

 

சோமம் என்னும் மூலிகை குறித்து வெளிநாட்டினர் நிறையவே பிதற்றி உள்ளனர். காரணம் என்னவெனில் இதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டு பிடித்திருந்தால் அதைப் பயிரிட்டு, சோம ரசத்தைப் புட்டியில் அடைத்து கோடி கோடியாகச் சம்பாதித்திருப்பர். ஆகையால் காளான் என்பர்; கொடி என்பர்; இல்லை செடி என்பர்; உளறலுக்கு அளவே இல்லை.

 

ஒரு மண்டலம் முழுதும் ரிக் வேதம் பாடியும் , வேதத்தை யாரும் படிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் வெள்ளைக்கார்கள் வெட்டி முழக்கியுள்ளனர்.

 

 

இந்தியாவில் இருந்து ஈரானுக்குச் சென்று பார்ஸி மாதத்தை ஸ்தாபித்த ஜொராஸ்தரும் இதைப் புகழ்ந்து பேசியுள்ளார் பழங்கால உலகில் இவ்வளவு கீர்த்தி பெற்ற செடி கொடி வேறு எதுவும் இல்லை. தென் புற ஆந்திரம், தமிழ் நாடு, கீழ்ப்புற கங்கைச் சமவெளி முதல் ஈரான் வரை இதன் புகழ் பரவியது

 

 

சோம பானத்தின் நன்மைகளை தமிழ்க் கல்வெட்டிலும் காணலாம். ஒருவரை “மனோ சுத்த சோம யாஜி” என்று அழைக்கிறது.

இதன் பொருள் மனதைச் சுத்தப்படுத்தும் சோம யாகம் செய்தவர்.

 

வேதம் சொல்வதாவது

  1. சோம பானம் ஆயுளைக் கூட்டும்

2.மனதைச் சுத்தப்படுத்தும்

3.உற்சாகத்தைத் தரும்

4.இது ஒரு தெய்வீக மூலிகை

 

  1. இதைக் கருடன் கொண்டு வந்து கொடுக்கும்
  2. இது முஜாவத் பர்வதத்தில் விளையும்

 

சோம பானம் பற்றிய 114 துதிகளையும் படித்தவர்களுக்கு ஒன்று தெளிவாகத் தெரியும்; இது போதைப் பொருள் அல்ல என்பது விளங்கும்

 

உலகில் போதைப் பொருளைப் போற்றி ஆயிரம் ஆண்டுகள் குடித்து/ சாப்பிட்டு வளர்ந்த எந்த இனமும் கிடையாது. இது போதை தரும் குடியாக இருந்தால் இந்துக்களும் அவர்கள் பாடிய வேதமும் அழிந்து போய் இருக்கும். மேலும் கள் போன்ற சுரா பானத்தையும் சோம ரசத்தையும் ஒரு பாடல் ஒப்பிட்டுவேறு காட்டுகிறது.

 

((சோம பானமும் சுரா பானமும் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/சோம-பானமும்-சுரா…

 

10 May 2013 – குடிகாரர்கள் அருந்துவது சுரா பானம், அதாவது, கள் மது பான வகைகள். வேதத்தை ஆராய்ச்சி செய்த வெளிநாட்டு “அறிஞர்கள்” இவ் …))

 

 

தேனுக்கும் மது என்று பெயர்; மது பானத்துக்கும் மது என்று பெயர்; ஆயினும் இந்தச் சொற்கள் சம்ஸ்கிருத அறிஞர்களையோ தமிழ்   அறிஞர்களையோ குழப்பாது.

“மது நமக்கு, மது நமக்கு

மதுரம் மிக்க தமிழ் நமக்கு”– என்று பாரதியார் பாடிக் கூத்தாடுவார்

 

வெள்ளையர்களோவெனில் பரம்பரைக் குடிகாரர்கள்; போதை மருந்து மன்னர்கள் அடிமைகள்; பாவம் அவர்களுக்கு வேறு பொருள் தெரியவில்லை.அவ்வளவு துதிகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டு அவர்களே வேண்டிய ஒன்றிரண்டை எடுத்துக்கொண்டு மனம்போன போக்கில் வியாக்கியானம் செய்வர்.

சோமம் என்பது சந்திரனையும் குறிக்கும். காலையில் சூரியன் உதவுவது போலத் தாவரங்களுக்கு இரவில் சந்திரன் உதவுகிறான் என்று வேதம் பாடுகிறது. இது வெள்ளைக்காரர்களுக்கு விளங்கவில்லை.. ஏன் ஒரே சொல் ஒரு மூலிகையையும்  நிலவையும் குறிக்கிறது என்பது விளங்காததால் அதைத் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் விட்டு விடுவர். நிலவுக்கும் தாவரங்களுக்கும் உள்ள தொடர்பை இதுவரை எந்த விஞ்ஞானிகளும் கண்டுபிடிக்கவில்லை. இந்துக்கள் மட்டும் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றனர்.

 

7.சோம லதை களைப்பை நீக்கும்

8.மனத் தொய்வை நீக்கும்

 

9.இது சாவின்மையை—மரணமில்லாப் பெருவாழ்வை நல்கும்

 

இதை மூன்று காலங்களில் மந்திரம் சொல்லிப் பிழிய வேண்டும்

மந்திரம் சொல்லி யாகத்தில் விட வேண்டும்; மந்திரம் சொல்லி சாப்பிடவேண்டும்

 

இதெல்லாம் குடிகாரர்களோ, போதை மருந்து அடிமைகளோ செய்வதில்லை.

10.சோம மந்திரம் ஒன்று சொல்கிறது:

“எல்லா சக்திகளும் அவனுடையதே

நிர்வாணமாக உள்ளோருக்கு ஆடை அணிவிப்பான்

நோயாளிகளைக் குணப்படுத்துவான்

கண் பார்வையற்றோருக்கு கண் பார்வை அளிப்பான்

ஆண்மை குறைந்தோருக்கு ஆண்மை தருவான்

தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் முக்தி தருவான்”

 

11.”ஓ, பவமான, அழியாத, என்றுமுள உலகில் என்னை வைப்பாயாக. எந்த இடத்தில் அழியாத ஒளியும், புகழும் உள்ளதோ அந்த இடத்தில் என்னை வைப்பாயக.”

பிரார்த்தனை முழுதும் பாஸிட்டிவ் எண்ணங்களுடன் கூடியது.

 

லண்டனிலும் நியூயார்க்கிலும் ரோடுகளில் புரளும் போதை அடிமைகளும், பெரிய பணக்கார நடிகர் நடிகையர், பாடகர்கள் ஆகீயோரும் மாட மாளிகைகளில் கூட கோபுரங்களில் வாயில் நுரைகக்கி இறக்கும் செய்திகளை நாம் வாரம் தோறும் படிக்கிறோம். வேதத்திலோ, வேறு எந்த இந்து மத நூல்களிலோ இப்படி ஒரு இழிவுதரும் பரிதாபக் காட்சி இல்லை. ஆக வெள்ளையர்கள் சொல்லுவது வெள்ளைப் பொய் என்பதும் நமக்கு விளங்குகிறது.

சோம லதை பற்றி பல “மறை” பொருளுடைய கதைகளும் உள. இதுவும் வெள்ளைகளுக்கு விளங்காமல் பேந்தப் பேந்த முழிக்கின்றன.

பிரம்மாவின் மனைவியான காயத்ரீ ஒரு பறவை வடிவத்தில் சென்று அதைக் கொண்டுவரச் சென்றாள். ஆனால் அதைக் காக்கும் கந்தர்வர்கள் தடுத்து விட்டனர். பின்னர் “வாக்” தேவதை சென்றாள் கந்தர்வர்களுக்கு பெண்கள் மீது ஆசை உண்டென்பதால் தாம் செல்வதாக வாக்கு தேவதை சொன்னாள். நீ எப்படி திரும்பி வருவாய் என்று தேவர்கள் கேட்டதற்கு நீங்கள் அழைத்தால் நான் வருவேன் என்றாள் வாக் (சொல்) தேவதை.

 

இதெல்லாம் அடையா பூர்வ கதைகள்

 

சோமக் கொடியை முதலில் பார்த்தபோது யார் முதலில் சாப்பிடலாம் என்று போட்டி ஏற்பட்டது. ஒரு பந்தயம் வைப்போம்; முதலில் யார் ஓடிச் செல்கிறார்களோ அவருக்கே என்று முடிவு செய்தனர். வாயுதேவன் முதலிலும் இந்திரன் இரண்டாவதாகவும் வந்தான். முதலில் இந்திரன், நிறைய பங்கு கேட்டான். வாயு மூன்றில் இரண்டு பங்கைச் சாப்பிட்டது. இந்திரனுக்கு நாலில் ஒரு பங்கு கிடைத்தது.

 

இப்படிப் பல அடையாள பூர்வ கதைகள்.

எங்கு எங்கு விளங்கவில்லையோ அங்கு எல்லாம் விநோத வியாக்கியானம் செய்வர் வெள்ளையர்.

 

சங்கத் தமிழ் நூல்களில் அமிர்தம் பல இடங்களில் வருகிறது. அருந்ததி, இந்திரன், வருணன் முதலியோரைக் குறிப்பிடுகிறது. ஆனால் சோம லதை பற்றிய பேச்சே இல்லை. ஆக 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் அதைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். அதற்குப் பின் எழுந்த சங்கத் தமிழ் நூல்களில் சோம லதை பற்றி எதுவும் சொல்லவில்லை. வேள்வி தொடர்பான வேறு பல சொற்கள் காணப்படுகின்றன.

 

இந்து இளைஞர்கள் இந்த சோம லதையைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்க வேண்டும்; இதன் மூலம் உய்வும் பெறலாம்; பணமும் கிடைக்கும்.

 

–Subham–

சோமபான ரஹசியங்கள் (Post No.3962)

Research Article Written by London Swaminathan

 

Date: 1 June 2017

 

Time uploaded in London- 22-10

 

Post No. 3962

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

சோம லதா என்று அழைக்கப்படும் அதிசயமான அற்புதமான குளிகை பற்றி ரிக் வேதம், யஜூர் வேதம்,அதர்வண வேதம் ஆகிய மூன்றிலும் பல வியப்பான விஷயங்கள் உள்ளன. மூன்று ஆங்கிலக் கட்டுரைகளில் நிறைய விஷயங்களைத் தந்துள்ளேன். இங்கே சுருக்கமாக சில விஷயங்களைத் தருவன்.

 

சோம பானம் என்பது ஒரு போதை தரும் பானம் என்றும் இது ஒரு வகைக் காளான் அல்லது கள்ளிச்செடி போன்ற தோற்றமுள்ள ஒரு செடி என்றும் அந்தக்காலத்தில் வெள்ளைக்காரர்கள் புத்தகம் எழுதினர்.

 

நம்ம ஊர்க்கார்களுக்கு ஆட்சியில் இருக்கும் வெள்ளைகளை எதிர்க்கும் துணிவும் இல்லை; ஆங்கிலத்தில் எழுதும் அறிவும் இல்லை; மூன்று வேதங்களை ஆராய்ச்சி கோணத்தில் படித்தவர்களும் இல்லை. ஆங்கிலத்தில் எழுதும் வல்லமை படைத்தவர்களோ ஜால்ரா கேஸுகள்!

நல்ல சிந்தனை படைத்தவர்களுக்கு மனதில் சில கேள்விகள் எழும்.

1.உண்மையில் வெள்ளையன் சொன்னது போல போதை தரும் தாவரமானால் அதை ஆப்கனிஸ்தான் முஸ்லீம்கள் கஞ்சா பயிரிட்டு உலகம் முழுதும் ஏற்றுமதி செய்து பில்லியன் கணக்கில் (நூறு கோடி) சம்பாதிப்பது போல அவர்களும் சம்பாதித்திருப்பர். முதலில் பேடன்ட் (Patent) வாங்கி இருப்பர்.

அவர்கள் அப்படிச் செய்யாததிலிருந்தே இந்தத் தாவரம் என்ன என்று தெரியவில்லை என்பதைக் காட்டுகிறது. இன்று தெரிந்தால் கூட அவர்கள் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கலாம்.

 

2.மாதா என்பது மதர் (mother) என்றும் பிராதா என்பது பிரதர் (brother) என்றும் ஹோரா என்பது ஹவர் (hour) என்பதும் ஆங்கிலத்தில் இருப்பதால் ஆரியர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தனர் என்று வில்லியம் ஜோன்ஸ் (William Jones) முதலியோர் சொன்னவுடன் எல்லா அரை வேக்காடுகளும் ஆமாம் என்றன. ஆனால் வேதத்தில் கூறப்படும் நூற்றுக் கணக்கான வழக்கங்களும் சொற்களும் ஏன் ஐ ரோப்பாவில் இல்லை என்று கேட்டால் பேந்தப் பேந்த முழித்து அரைகுறை பதில்களை வெள்ளையர் தந்தனர்

முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன் செய்த அஸ்வமேத யாகமோ, பெஉநற்கிள்ளி செய்த ராஜசூய யாகமோ, கரிகாற் சோழன் செய்த பருந்துவடிவ யாக குண்டமோ புற நானூற்றில் கூட இருக்கிறதே ஏன் வெளி நாட்டில் இல்லை. ஜாதி முறை பற்றி சங்க இலக்கியம் முழுதும் இருக்கிறதே இது ஏன் வெளிநாட்டில் இல்லை, சுயம்வரம் என்பது ராமயண மஹாபாரதம் ஆகியவற்றில்  கூட இருக்கிறதே, ஏன் வெளி நாட்டில் இல்லை என்று நம்மவர்.கேட்கவில்லை. உண்மையில் வேத கால இந்துக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று காலாசாரத்தைப் பரப்பினர், அவர்கள் வெளி நாட்டிலிருந்து வரவில்லை என்பதே உண்மை

 

3.இரானில் சொராஸ்தர்  (Zoroaster) கூட அவர்களது வேதப் புத்தகத்தில் (Zend Avesta) சோம லதையைப் புகழ்ந்து பேசியுள்ளாரே, அதில் அவர் 4 முக்கிய விஷயங்களைச் சொல்லி இருக்கிறாரே. கங்கைச் சமவெளி முதல் ஈரான் வரை பல்லாயிரக் கணக்கான சதுர மைல் பரப்பில் மூவாயிரமாண்டுகளுக்கும் மேலாக சோம லதை இருக்கிறதே! ஏன் ஐரோப்பாவில் ஒரு வரி கூட இல்லை? ஆரியர்கள் அங்கிருந்து அல்லது மத்திய ஆசியவிலிருந்து வந்தால் அங்கும் இது பற்றிப் பேச்சு இருக்குமே? மேலும் சோம ரசம் ஆயுளைக் கூட்டும், குழந்தை பெற உதவும், சக்தியைக் கூட்டும், நோய்களை விரட்டும் என்று சொராஸ்தர் சொல்கிறாரே. மூன்று வேதங்களும் இதைச் செப்புகின்றனவே. இது போதை மருந்தாக இருந்தால் இப்படிப் பேசியிருப்பரா?

 

4.ரிக் வேதத்தின் ஒன்பதாவது மண்டலம் முழுதும் சோமபானம் புகழ் பாடுகிறதே. இதை 3000 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சரிப்பு மாறாமல் பாடி வருகின்றனரே. உலகில் எவனாவது இப்படி போதை மருந்து புகழ்ந்து பாடுவானா அப்படி போதை மருந்தைப் றா போற்றி இருந்தால் அந்த இனமே அடியோடு அழிந்திருக்குமே.ஆனால் வேத கால இந்து மதமோ சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய, சீன, கிரேக்க நாகரீகங்களை மியூசியத்துக்கு அனுப்பிவிட்டு இன்றும் உயிர்த்துடி ப்புடன் இருக்கிறதே இது எப்படி முடியும்?

5.சோம யாகம்செய்ததால் மனோசுத்தம் ஏற்பட்டதாகத் தமிழ் கல்வெட்டு கூ றுகிறதே. எங்கள் லண்டன் மாநகரில் டிரக் DRUG – போதைப் பொருள் விஷயத்தால் வாரத்துக்கு ஒரு கொலை நடக்கிறதே; உலகம் முழுதும் போதைப் பொருள் சாப்பிட்டவர்கள்

ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்வர் என்பதை மெக்ஸிகோ, பிரேஸில், லண்டன் வன்செயல்கள் காட்டுகின்றனவே. ஆனால் வேதத்திலோ இதிஹாசத்திலோ இப்படி போதை தொடர்பான வன்முறைகளும் இல்லை; மேலும் பாராட்டுரைகள் அல்லவா இருக்கின்றன?

 

  1. சோமயாகம் பற்றிய வியப்பான விஷயங்களுக்கு விளக்கம் கிடைக்காமல் வெளி நாட்டினர் திணறி, தத்துப் பித்து என்று உளறுகின்றனரே. 12 ஆண்டுகளுக்கு சோம யாகம் நடந்ததாக யஜூர் வேத தைத்திரீய சம்ஹிதை சொல்கிரதே; அதே வேதம் ஆயிரம் ஆண்டும் சோம யாஹம் பற்றிப் பேசுகிறதே; உலகில் எவனாவது யாக குண்டத்தைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு 12 ஆண்டு முதல் ஆயிரம் ஆண்டுவரை போதை மருது சாப்பிட்டானா? ஆகவே இதுவும் சோம லதை என்பது ஒரு அரிய குளிகை, போதை மருந்து அல்ல என்பதைக் காட்டுகிறது அல்லவா?
  2. சோமலதையைக் கழுகு கொண்டு வந்ததாகச் சொல்கிறதே. இதற்கு விளக்கம் சொல்ல முடியாமல் உளறுகின்றனரே. ஏன்?

  1. சோமலதை என்பதை விலைக்கு வாங்கும் சடங்கு விநோதமாக இருக்கிறதே. அதாவது சோமலதையை மலையில் இருந்து எடுத்து வருபவனுக்கு ஒரு கன்றுக்குட்டியைக் கொடுத்துவிட்டு அதை அவனிடமிருந்து பிடுங்கிக் கொள்ளும் மந்திரம் உள்ளதே. எந்த வியாபாரியாவது ஒரு முறை இப்படி அடிபட்டவுடன் மீண்டும் அதே ஆளுக்கு சோமலதை விற்பா னா?. அவன் தனது சஹ வியாபாரிகளிடமும் சொல்லி சோம லதையை விற்காமல் அல்லவா செய்திருப்பான். இந்த வழக்கமும் வேத மந்திரம் மறை பொருளாகச் சொல்ல வந்ததது வேறு என்பது தெரியாமல் உளறுகின்றீரே. உலகில் இப்படி யாராவது போதைப் பொருள் விற்பனை செய்தது உண்டா?

9.சோமலதையை ‘அரசன்’ என்றும் ‘விருந்தாளி’ என்றும் வேத மந்திரம் சொல்கிறதே; விலைக்கு வாங்கிய சோம லதையை ஒரு வண்டியில் வைத்து அதை ராஜ உபசாரத்துடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லும் வேத மந்திரங்கள் உள்ளதே. உலகில் எவனாவது போதை மருந்தையோ, கஞ்சா, அபினியையோ இப்படி ஊர்வலம் விட்டு ராஜ உபசாரம் செய்தானா? அப்படிச் செய்திருந்தால் முதலில் அந்த இனத்தைச் சேர்ந்த பெண்களே அவர்களை ஓட ஓட விரட்டி இருப்பார்களே.

  1. சோம யாகம் செய்தோர் சோமரசத்தை மந்திரம் சொல்லிப் பிழிந்தெடுத்து யாகத் தீயில் கடவுளுக்கும் அர்ப்பணம் செய்துவிட்டுக் குடித்ததாக தம் சொல்கிறதே. எவனாவது போதை பொருளைத் தீயில் போட்டு “வீண்” அடிப்பானா? உண்மையில் போதைப் பொருளானால் அவர்களுக்குள் அடிதடி அல்லவா ஏற்பட்டிருக்கும்? மேலும் ஒவ்வொரு கோப்பைக்கும் ஒரு பெயர் கொடுத்து அதை யாகத்தில் பயன்படுத்தினரே. இதெல்லாம் இது போதைப் பொருள் அல்ல; ஒரு அபூர்வ குளிகை என்பதைக் காட்டவில்லையா?

சமீப காலம் வரை சோம யாகம் நடந்தது. ஆனால் உண்மையில் சோமலதைக் கிடக்கததால் மாற்றுப் பொருள் பயன்படுத்தப்பட்டது. அந்த மாற்றுப் பொருள் கூட போதை மருத்து இல்லையே.

 

அப்படியானால் உண்மை என்ன?

வேத கால இந்துக்கள் ‘மண்ணின் மைந்தர்கள்’ (Sons of the soil). அதனால்தான் வேத கலாசாரம் பரவிய ஈரான் வரை இது பரவியது.

 

மேலும் சோமபானம் சக்தி, ஆயுள், இன விருத்தி, நோய் நீக்கம் ஆகியவற்றைத் தந்த அபூர்வ குளிகையாகும்

இது மூஜாவத் என்ற மலையில் இருந்து கிடைத்தது.

நீண்டகாலத்துக்கு முன்னரே இது அழிந்துவிட்டது. வேதகாலத்திலும் கூட இதைக் கஷ்டப்பட்டே பெற்றனர்.

 

என்றாவது ஒரு நாள் சோம லதையைக் கண்டுபிடிப்போம்; அது வரை ரிக்வேதத்தின் ஒன்பதாவது மண்டலத்தைப் பாடி வருவோம்!

 

Confusion about Vedic Soma Plant | Tamil and Vedas

https://tamilandvedas.com/2013/05/05/confusion-about-vedic-soma-plant/

5 May 2013 – Confusion about Vedic Soma Plant Soma was the famous plant used by the Vedic priests to make juice for the fire sacrifice. The whole of Ninth …

 

Madurai Temple Tunnel and Soma Plant of Vedas … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/madurai-temple-tunnel-and-soma-pla…

23 Apr 2017 – Madurai Temple Tunnel and Soma Plant of Vedas (Post No. 3844) … Soma Plant. I read your “Confusion about Vedic Soma Plant” article.

 

MYSTERY AND MIRACLE OF SOMA PLANT, SOMA RASA! (Post No …

https://tamilandvedas.com/…/mystery-and-miracle-of-soma-plant-soma-rasa-post-no-3…

1 day ago – Anjaneya appears in Sacrificial Fire Research Article Written by London Swaminathan Date: 31 May 2017 Time uploaded in London- 18-13 …

 

–SUBHAM–