சுவாமியின் பொன்மொழி காலண்டர் – ஜனவரி 2015
மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள்
Compiled by London Swaminathan
Post No.1525; Dated 29 December 2014.
Important Days: Ekathasi Jan.1 (Vaikunda Ekathasi), 16, 30; Amavasya 20, Pournami- Jan.4
Festivals: Arudra Darsana 5; Bogi Festival 14; Pongal/Makara Sankaranti 15; Republic Day of India 26; Ratha saptami 26; Bhishmashtami 27.
ஆருத்ரா தரிசனம்-ஜனவரி 5, போகி 14, பொங்கல் 15, குடியரசு தினம் 26, ரத சப்தமி 26
ஜனவரி 1 வியாழக் கிழமை
பூட்டைத் திறப்பது கையாலே நல்ல
மனம் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே – இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே – பாரதியார்
ஜனவரி 2 வெள்ளிக் கிழமை
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள் 595
ஜனவரி 3 சனிக் கிழமை
மணி வெளுக்கச் சாணையுண்டு – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி!
மனம் வெளுக்க வழியில்லை – எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி! – பாரதியார்
ஜனவரி 4 ஞாயிற்றுக் கிழமை
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – குறள் 596
ஜனவரி 5 திங்கட் கிழமை
உத்தரேத் ஆத்மனாத்மானம் – பகவத் கீதை (6-5)
ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும்
ஜனவரி 6 செவ்வாய்க் கிழமை
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் – தமிழ் பழமொழி
ஜனவரி 7 புதன் கிழமை
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் – பாரதியார்
ஜனவரி 8 வியாழக் கிழமை
மனம் போல மாங்கல்யம் — தமிழ் பழமொழி
ஜனவரி 9 வெள்ளிக் கிழமை
மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிம வேண்டும் — பாரதியார்
ஜனவரி 10 சனிக் கிழமை
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியராகப் பெறின் — திருக்குறள் 666
ஜனவரி 11 ஞாயிற்றுக் கிழமை
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே – புறநானூறு 206
ஜனவரி 12 திங்கட் கிழமை
சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம். – பாரதியார்
ஜனவரி 13 செவ்வாய்க் கிழமை
மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம் – உலக நீதி
ஜனவரி 14 புதன் கிழமை
தம்மபதத்தில் புத்தர் சொல்கிறார்:
மனம் அலை பாயக்கூடியது; நிலையற்றது. அது இஷ்டப் பட்ட இடத்திற்குச் சிறகடித்துப் பறக்கும். மனதைக் கட்டுப்படுத்துவது கடினம். ஆனால் அப்படிக் கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. கட்டுப்படுத்தப்பட்ட மனதானது, இன்பத்தில் உறைவிடம் ஆகும்.(35)
ஜனவரி 15 வியாழக் கிழமை
“அஸம்சயம் மஹாபாஹோ மனோ துர்நிர்க்ரஹம் சலம்
அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேன் ச க்ருஹ்யதே” (6—35)
“தோள்வலி படைத்த அர்ஜுனா! மனம் அடக்குதற்கரியது; இதில் சந்தேகம் இல்லை. பயிற்சியாலும் வைராக்யத்தாலு (திட உறுதி) அடக்கமுடியும்”.
ஜனவரி 16 வெள்ளிக் கிழமை
மனதுக்கு மனதே சாட்சி; மனச் சாட்சியைவிட மறு சாட்சி வேண்டாம்- தமிழ் பழமொழிகள்
ஜனவரி 17 சனிக் கிழமை
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும் – பாரதியார்
ஜனவரி 18 ஞாயிற்றுக் கிழமை
மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி – திருக்குறள் 453
(மனத்தின் காரணமாகவே மாந்தர்க்கு அறிவு உண்டாகும்)
ஜனவரி 19 திங்கட் கிழமை
மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் — திருக்குறள் 457
(மனத்தின் தூய்மை உரி இனத்துக்கு எல்லாம் நன்மையும் இனிமையும் தரும்)
ஜனவரி 20 செவ்வாய்க் கிழமை
மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும் — திருக்குறள் 456
(தூய மனம் உடையாருக்கு நல்ல பிள்ளைகளும் புகழும் எஞ்சும்)
ஜனவரி 21 புதன் கிழமை
நினைமின் மனனே நினைமின் மனனே
சிவபெருமானைச் செம்பொன் அம்பலவனை
நினைமின் மனனே நினைமின் மனனே —-பட்டினத்தடிகள்
ஜனவரி 22 வியாழக் கிழமை
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறும்கையும் வருமே
அதனால் உயர்ந்த தேட்டத்து உயர்ந்தசினோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும் – புறநானூறு 214
ஜனவரி 23 வெள்ளிக் கிழமை
மன நலத்தின் ஆகும் மறுமை — திருக்குறள் 459
(நல்ல மனம் உடையாருக்கு மறுமையிலும் இன்பம் கிட்டும்)
ஜனவரி 24 சனிக் கிழமை
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது சத்தாகி என்
சித்தமிசை குடி கொண்ட தேசோ மயானந்தமே. — தாயுமானவர்
ஜனவரி 25 ஞாயிற்றுக் கிழமை
மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனம் தூய்மை தூவா வரும் — திருக்குறள் 455
ஜனவரி 26 திங்கட் கிழமை
வாய்கொண்டு உரைத்தல்அரிது என் செய்கேன்
என்செய்கேன் வள்ளல்உன் சேவடிக்கண்
மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
வாய்ந்துழலும் எனதுமனது
பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு
பித்துண்ட வன்குரங்கோ
பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
பேதைவிளை யாடுபந்தோ – வள்ளலார் பாடல்
ஜனவரி 27 செவ்வாய்க் கிழமை
“மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
ஒன்றையே பற்றி ஊசல் ஆடுவாய்
அடுத்ததை நோக்கி அடுதடுத்து உலாவுவாய்
.நன்றையே கொள் எனில் சோர்ந்து கை நழுவுவாய்
விட்டுவிடு என்றதை விடாது போய் விழுவாய்
தொட்டதை மீள மீளவும் தொடுவாய் – பாரதியார்
ஜனவரி 28 புதன் கிழமை
காடும் கரையும் மனக்குரங்கு கால் விட்டோட அதன்பிறகு
ஓடும் தொழிலால் பயனுளதோ ஒன்றாய் பலவாய் உயிர்க்குயிராய்
ஆடும் கருணைப் பரஞ்ஜோதி அருளைப் பெறுதற்கு அன்புநிறை
தேடும் பருவம் இதுகண்டீர் சேரவாரும் ஜெகத்தீரே! – தாயுமானவர் பாடல்
ஜனவரி 29 வியாழக் கிழமை
மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி
சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது
மதன் எனும் பாறை தாக்கி மறியும் போது, அறிய ஒண்ணாது
உனை உனும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே
–அப்பர் தேவாரம் 4-46
ஜனவரி 30 வெள்ளிக் கிழமை
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் — தமிழ் பழமொழி
ஜனவரி 31 சனிக்கிழமை
சிந்தா நாஸ்தி கில – தேஷாம் சிந்தா சிந்தா நாஸ்தி கில
சமதம கருணா சம்பூர்ணாணாம்
சாது சமாகம சங்கீர்ணானாம் – சதாசிவ பிரம்மேந்திரர்
(நல்ல குணங்கள், சாதுக்களின் தொட்ர்புடையோருக்கு மனக்கவலை இல்லை)
Contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.