ஆகஸ்ட் 2016 காலண்டர் (Post 3023)

yasotha feeding krishna,fb

உலக அறிவு பற்றி 31 பொன் மொழிகள்

Compiled by london swaminathan

Date: 31 July 2016

Post No. 3023

Time uploaded in London :–  16-38

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஆகஸ்ட் மாத (துன்முகி ஆடி-  ஆவணி) காலண்டர், 2016

 

திருவிழா நாட்கள்:– ஆகஸ்ட் 2-ஆடிப் பெருக்கு/ஆடி அமாவாசை;

5 -ஆடிப்பூரம்; 7- நாக பஞ்சமி; 12-வரலட்சுமி விரதம்; 15-சுதந்திர தினம்

18-ஆவணி அவிட்டம்/யஜூர் உபாகர்மா/ரக்ஷா பந்தன்;

25-ஜன்மாஷ்டமி/கோகுலாஷ்டமி

 

அமாவாசை – 2

பௌர்ணமி – 18

ஏகாதசி – 14, 28

ஆகஸ்ட் முகூர்த்த நாட்கள் – 21, 22, 29

when_is_Nag-Panchami_in_2016

ஆகஸ்ட் 1 திங்கட்கிழமை

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலாதார் – குறள் 140 (உலக மக்கள் செய்வதைப் பின்பற்றாதவன் முட்டாள்)

 

ஆகஸ்ட் 2 செவ்வாய்க்கிழமை

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான்  வையத்து அலகையா வைக்கப்படும்– குறள் 850 (கடவுள் இல்லை என்று சொல்பவன் பேய்)

 

ஆகஸ்ட் 3 புதன்கிழமை

ஊரோடு ஒத்து வாழ்

 

ஆகஸ்ட் 4 வியாழக்கிழமை

காணாதான் காட்டுவான் தான் காணான் –குறள் 849 (முட்டாளுக்கு உபதேசம் செய்பவன் முட்டாள் ஆகி விடுவான்)

 

ஆகஸ்ட் 5 வெள்ளிக் கிழமை

ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை.

 

ஆகஸ்ட் 6 சனிக்கிழமை

ஆடை இல்லாதவன் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்

 

ஆகஸ்ட் 7 ஞாயிற்றுக்கிழமை

தனியாகச் சிரிக்காதே (ந கல்வேகாகின்யா ஹஸிதவ்யம்)

krishna flute, fb

ஆகஸ்ட் 8 திங்கட்கிழமை

பூனை இல்லாத போது, எலிகள் விளையாடும் ( ந பிடாலோ பவேத்யத்ர  தத்ர க்ரீடந்தி மூஷகா:)

 

ஆகஸ்ட் 9 செவ்வாய்க்கிழமை

தெரியாத இடத்தில் தனிமையில் சுற்றாதே (நைகாகீ சஞ்சரேத்வீபினம்)

 

ஆகஸ்ட் 10 புதன்கிழமை

அவரவர்கள் தங்களுக்குப் பிடித்தவற்றைப் புகழ்வர் (சேஷ்டிதம் சகலை: சர்வம் ச்வானுரூபம் ப்ரசஸ்யதே)

 

ஆகஸ்ட் 11 வியாழக்கிழமை

ஆடு போல தின்னு, யானை போல குளி ( அஜவச்சவர்ணம் குர்யாத்கஜவத் ஸ்நானமாசரேத்)

 

ஆகஸ்ட் 12 வெள்ளிக் கிழமை

குருடர்களின் ராஜ்யத்தில், ஒற்றைக்கண் உடையோன் ராஜா ( அந்தகானாம் காணோ ராஜா)

 

ஆகஸ்ட் 13 சனிக்கிழமை

மரியாதை தெரியவனுக்கு மரியாதை காட்டினால் சோபிக்காது ( அமர்யாதேஷு மர்யாதா க்ரியமாணா ந சோபதே)

 

ஆகஸ்ட் 14 ஞாயிற்றுக்கிழமை

மேற்பார்வையிடாத விவசாயம் நஷ்டமடையும்  (அவஸ்யம் விபலா யாதி க்ருஷி: ஸ்வேனானவேக்ஷிதா)

RAKSHABANDAN1

ஆகஸ்ட் 15 திங்கட்கிழமை

மருந்துக்குதவாத வேரும் இல்லை, மந்திரத்தில் பயன்படாத எழுத்தும் இல்லை (உருப்படாதவன் என்று எவனும் இல்லை)

அமந்த்ரம் அக்ஷரம் நாஸ்தி நாஸ்தி மூலம் ஔஷதம்

 

ஆகஸ்ட் 16 செவ்வாய்க்கிழமை

தெய்வீக செயல்களையும், முன்னோர் செய்ததையும் கேள்வியால் துளைக்காதே (திவ்யானுபாவம் பூர்வேஷாமவிசார்யம் ஹி சேஷ்டினாம்)

 

ஆகஸ்ட் 17 புதன்கிழமை

நிலவு வானில் வலம் வந்தால், நட்சத்திரங்கள் அவைகளை தானாகப் பின்பற்றும் (ஆகதே சந்த்ரே சமாகதானி சர்வ நக்ஷத்ராணி)

 

ஆகஸ்ட் 18 வியாழக்கிழமை

கட்டளையிட்டாலும் தனது கழுதை மீது ஏறமாட்டான் வண்ணான் ( ஆக்ஞாபிதஸ்து ரஜகோ நைவாரோஹதி கர்தபம்)

 

ஆகஸ்ட் 19 வெள்ளிக் கிழமை

காற்றடிக்காலத்தில் இடி இடித்தாலும் மின்னல் வெட்டினாலும் மழை பெய்யாது ( உச்சை: சரத்ஸு கர்ஜந்தோ நைவ வர்ஷந்தி வாரிதா:)

 

ஆகஸ்ட் 20 சனிக்கிழமை

முள்ளை முள்ளால் எடு; வைரத்தை வைரத்தால் அறு

 

ஆகஸ்ட் 21 ஞாயிற்றுக்கிழமை

ஒரு முள்ளால் மற்றொரு முள்ளை எடு ( கண்டகேநைவ கண்டகம்)

upa2005_2

ஆகஸ்ட் 22 திங்கட்கிழமை

அழைக்காத இடங்களுக்குப் போகாதே (க்வாபி ந கச்சேத் அனாஹூத:)

 

ஆகஸ்ட் 23 செவ்வாய்க்கிழமை

ராஜ பாட்டையில் நடை போடு (கந்தவ்யம் ராஜ பதே)

 

ஆகஸ்ட் 24 புதன்கிழமை

நீரில் குதிக்காமல் நீந்தக் கற்க முடியாது (ஜலாவகாஹனம் த்யக்த்வா ந கோபி தரணக்ஷம:)

 

ஆகஸ்ட் 25 வியாழக்கிழமை

ஜாதியின் பேரில் யாரையாவது மதிக்க முடியுமா? மிதிக்க முடியுமா? (ஜாதிமாத்ரேன கிம் கசித்தன்யதே பூஜ்யதே க்வசித்)

 

ஆகஸ்ட் 26 வெள்ளிக் கிழமை

இரண்டு கட்சிகளும் அவன் சமரசம் செய்வதை ஏற்கவில்லை; அவனோ தீர்ப்பு சொல்லத் துடிக்கிறான் (அஸ்வீக்ருதோபி பக்ஷாப்யாம் ந்யாயம் கர்தும் சமுத்யத:)

 

ஆகஸ்ட் 27 சனிக்கிழமை

அடடா! மரத்தின் உச்சியில் பலாப்பழம்; நாவில் நீர் சுரக்கிறது(ஓஷ்டே தைலம் தரௌ சாஸ்தே சுபக்வம் பனசம் பலம்)

krishna in sky

ஆகஸ்ட் 28 ஞாயிற்றுக்கிழமை

கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்

 

ஆகஸ்ட் 29 திங்கட்கிழமை

(கழுத்தைச் சுற்றி தங்கச் சங்கிலி; கோவில் மாடத்தில் போய்த் தேடுகிறார்கள் (கண்டே ஹிரண்மயீ மாலா ம்ருக்யதே மந்திரே தரே)

 

ஆகஸ்ட் 30 செவ்வாய்க்கிழமை

படத்திலுள்ள சிங்கம், நிஜ சிங்கம் செய்யும் வேலையைச் செய்யுமா? (கிம் சித்ரோ லிகித: சிம்ஹ: சத்ய சிம்ஹ க்ரியாம் ஸ்ப்ருசேத்)

 

ஆகஸ்ட் 31 புதன்கிழமை

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது.

 

–Subham–

 

 

 

கண்ணன் எத்தனை கண்ணனடி!

krishna unjal ,sivaramn

2015 செப்டம்பர் 5 ஜன்மாஷ்டமி. அதையொட்டிய சிறப்புக் கட்டுரை!

ச.நாகராஜன்

Written by S NAGARAJAN

Date : 5 September  2015

Post No. 2126

Time uploaded in London : 6-16 am

காலம் காலமாக கோடிக் கணக்கானோருக்கு கோடானு கோடி விதத்தில் ஒரு அவதாரம் அருள் செய்து வருவது மனித குலத்தின் சிறப்பான ஒரு அதிசய அம்சம்.

கண்ணன்! எத்தனை கண்ணனடி!

குழந்தைகளுக்கு அவன் வெண்ணெய்திருடி. தமாஷ்வாலா!

யசோதைகளுக்கு வாயில் அண்ட பிரபஞ்சத்தையேக் காண்பிக்கும் அதிசய மாயாவி!

யௌவன ருக்மிணிகளுக்கு தன்னைப் போன்ற சரியான ஒருவனுக்குக் காதல் கடிதம் எழுத உத்வேகமூட்டும் அற்புத சுந்தரன்!

அர்ஜுனனுக்குத் தன்னை மறைத்துக் கொண்டு தேர் ஓட்டிய பார்த்தசாரதியான அற்புத நண்பன்

ஆனால் அவனை நிமித்தமாக வைத்து குருக்ஷேத்திரத்தில் உலகிற்கே கீதையை உபதேசம் செய்த லோக குரு!

cute krishna, fb

காந்தாரிக்கோ தர்மம்.

சகாதேவனுக்கு மனதால் பற்றும் பற்றற்றான்!

பீஷ்மருக்கோ இச்சாமரணியாக இருந்த போதும் மரணத்தின் போது கண்ணுக்கு நேரே வந்து அருள் பாலிக்கும் கடவுள்.

துரியோதனனுக்கு அவனது சுடுசரங்களை எதிர்கொள்ளும் காலாக்னி.

குந்திக்கு கஷ்டகாலத்தில் உன்னை நினைக்க வரம் தா என்று கஷ்டத்தை வரவேற்கத் தூண்டும் கர்த்தா!

திரௌபதிக்கோ சகல கஷ்டங்களையும் அரை நொடியில் போக்கும் ஹ்ருதய கமல வாஸன்.

தர்ம பீம நகுலருக்கோ ராஜ தந்திரி!

வியாஸருக்கு புவனத்ரய வாஸுதேவன்

சஞ்சயனுக்கோ யோகேஸ்வரன்.

krishna dance by sivaraman fb

கண்ணன் இன்னும் எத்தனை பேருக்கு என்னென்னவாக இருக்கிறானோ, யார் அறிவார்?

பாரதிக்கு அவன் தீராத விளையாட்டுப் பிள்ளை.

நம்மாழ்வாருக்கு உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்!

பொய்கையாழ்வாருக்கு வினைச்சுடரை நந்துவிக்கும் ஓங்கோதவண்ணன்!

அவன் லீலைகளைக் கேட்டவண்ணமும் சொன்ன வண்ணமும் இருக்கும் லீலாசுகருக்குச் செவிக்கு அமிர்தமாக இருப்பவன் (கிருஷ்ணகர்ணாம்ருதம் இயற்றியது அதனால் தான்!)

சைதன்யருக்குத் தன்  நாமம் சொல்லி நாட்டியமாட வைக்கும் நர்த்தன நாயகன்!

சூர்தாஸுக்கு அவனை மட்டும் பார்க்க கண்ணொளி தரும் ஞான சூரியன்!

யோகினியாக கண்ணனைத் துதிக்கும் மீராவுக்கோ அவன் கோவர்த்தன கிரிதாரி!

ஆண்டாளுக்கோ எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோனாக ஆகும் ஆழிமழைக்கண்ணன்!

வேங்கடசுப்பையருக்கு ஈரேழு புவனமும் அசைந்தாட, குழல் ஆடி வரும் அழகன்.

தமிழ்நாட்டின் தீய சக்திகளுக்கோ கால சக்தி!

இந்திய நாட்டிற்கோவெனில் பாரதத்தை மையமாக வைத்து உலக நாடுகளை வழி நடத்திச் செல்லும் ஒளி விளக்கு!

இத்தனையும் அவன்!

இதற்கு மேலும் அவன்!!

இதெல்லாம் இல்லாமல் தன்னை மறைத்துக் கொள்பவனும் அவனே!

சொல்லுரைக்க மாட்டா விந்தையிலும் விந்தையான கண்ணனைப் பற்றிச் சொல்ல நூலாயிரம் வேண்டும். நாளாயிரமும் நாவாயிரமும் போதா!

அவனைப் போற்றி வணங்கும் இந்த ஜன்மாஷ்டமியில்,

அவனை மனம் பற்றித் துதிப்போம்! மகிழ்வோம்!! உயர்வோம்!!!

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே I

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே II***************

((Photos are from my face book friends Mr Sivaraman and others; thanks:swami))

————–xxxxxxxxxxxxx—————