புலவர்களின் தமிழைப் பார்த்தார்கள்; ஜாதியைப் பார்க்கவில்லை! (Post No.5202)

Written by S NAGARAJAN

 

Date: 10 JULY 2018

 

Time uploaded in London –   6-32 AM (British Summer Time)

 

Post No. 5202

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சங்க காலம் பொற்காலம்

 

புலவர்களின் தமிழைப் பார்த்தார்கள்; ஜாதியைப் பார்க்கவில்லை!

 

ச.நாகராஜன்

 

 

சங்க காலத்தில் ஜாதி பேதம் இன்றைய திராவிட கண்களின் விஷப்பார்வை போல பார்க்கப்படவில்லை என்பது ஒரு அருமையான செய்தி.

 

அந்தக்காலத் தமிழர்கள் தமிழைப் பார்த்தார்கள்; தமிழ் கூறும் கருத்துக்களைப் பார்த்தார்கள்.

 

பாடியவர் அந்தணரா, அரசரா, இடையரா, எயினரா, கூத்தரா, தட்டாரா, வணிகரா, வேளாளரா என்று பார்க்கவில்லை.

அனைவரையும் மதித்தார்கள் – தமிழுக்காக, தமிழில் அவர்கள் தந்த கருத்துக்களுக்காக.

எடுத்துக்காட்டாக அகநானூற்றில் வரும் புலவர்கள் சிலரின் ஜாதியை இங்கு சுட்டிக் காட்டலாம்- இன்றைய திராவிட இயக்கங்கள் தீய நோக்கில் பரப்பும் விஷ பிரசாரத்தைத் தடுக்கவே இது தரப்படுகிறது.

 

ஜாதி மட்டுமல்ல, ஆண், பெண் என்ற பாலின பேதம் கூட அந்த காலத்தில் பார்க்கப்படவில்லை. பெண்பாற் புலவர்களும் உண்டு.

தமிழின் முன்னால் அனைவரும் சமம் என்ற உயர் நோக்கைச் சங்க காலம் கொண்டிருந்தது என்பதை இதன் மூலம் உணரலாம்.

பாடிய புலவர்களின் ஒரு பட்டியல் இதோ:

 

அந்தணர்:

ஆமூர்க் கௌதமன் சாதேவனார்

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

கபிலர்

கோடிமங்கலம் வாதுளி நற் சேந்தனார்

செல்லூர்க் கோசிகன் கண்ணனார்

நக்கீரனார்

மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்

மதுரை இளங்கௌசிகனார்

மதுரைக் கணக்காயனார்

மதுரைக் கௌணியன் தத்தனார்

மாமூலனார்

இந்தப் பெயர்கள் மூலம் பொதுவாக ஊர்ப் பெயர்களை புலவர்கள் தம் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதைக் காணலாம்.

எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். கவுண்டின்ய கோத்திரம், கௌசிக கோத்திரம், வாதூல கோத்திரம் என்று இப்படிப் பல கோத்திரங்களை அவர்கள் பெயருடன் இணைத்துக் கொண்டிருந்தனர்.

 

அரசர்

அண்டர்மகன் குறுவழுதியார்

அதியன் விண்ணத்தனார்

ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன்

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்

சேரமான் இளங்குட்டுவன்

பாண்டியன் அறிவுடைநம்பி

பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

பாலை பாடிய பெருங்கடுங்கோ

மருதம் பாடிய இளங்கடுங்கோ

முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

வீரைவெளியன் தித்தனார்

 

 

இடையர்

இடைக்காடனார்

இடையன் சேந்தன் கொற்றனார்

இடையன் நெடுங்கீரனார்

இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்

எயினர்

எயினந்தைமகன் இளங்கீரனார்

விற்றூற்று மூதெயினனார்

 

கூத்தர்

உறையூர் முதுகூத்தனார்

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன்கூத்தனார்

மதுரைக் கூத்தனார்

மதுரைத் தமிழ்க்கூத்தன் கடுவன்மள்ளனார்

மதுரைத் தமிழ்க்கூத்தன் நாகன்றேவனார்

 

தட்டார்

தங்காற் பொற்கொல்லனார்

மதுரை பொன்செய்கொல்லன் வெண்ணாகனார்

 

மந்திரத்தலைவர்

ஏனாதி நெடுங்கண்ணனார்

 

வண்ணக்கர்

வடமவண்ணக்கன் டேரிசாத்தனார்

 

வணிகர்

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

மதுரை அறுவைவாணிகன் இள வேட்டனார்

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்

வேளாளர்

ஆர்க்காடுகிழார்மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்

ஆவூர்கிழார் மகனார் கண்ணத்தனார்

ஆவூர் மூலங்கிழார்

மேற்படியார் மகனார் பெருந்தலைச்சாத்தனார்

உமட்டூர்கிழார்மகனார் பரங்கொற்றனார்

காட்டூர்கிழார்மகனார் கண்ணனார்

கோடியூர்கிழார்மகனார் நெய்தற்றனார்

செல்லூர்கிழார்மகனார் பெரும்பூதங்கொற்றனார்

நல்லாவூர்கிழார்

நெய்தற்சாய்த்துய்ந்த ஆவூர் கிழார்

நொச்சியமங்கிழார்

பொதும்பில்கிழார் வெண்கண்ணனார்

மதுரைக் காஞ்சிப் புலவர்

மதுரை மருதங்கிழார்மகனார் பெருங்கண்ணனார்

மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்

மாற்றூர்கிழார்மகனார் கொற்றங்கொற்றனார்

வடமோதங்கிழார்

 

அருந்தொடரால் பெயர் பெற்றோர்

அந்தியிளங்கீரனார்

இம்மென்கீரனார்

ஊட்டியார்

நோய்பாடியார்

வண்ணப்புறக்கந்தரத்தனார்

பெண்பாற்புலவர்

அஞ்சில் ஆந்தைமகள் நாகையார்

அள்ளூர் நன்முல்லையார்

ஒக்கூர் மாசாத்தியார்

ஔவையார்

கழார்க் கீரனெயிற்றியார்

குமிழிஞாழார் நப்பசலையார்

நக்கண்ணையார்

போந்தைப் பசலையார்

மதுரை நல்வெள்ளியார்

முள்ளியூர்ப் பூதியார்

வெள்ளிவீதியார்

வெறிபாடியகாமக்கண்ணியார்

 

75 புலவர்களின் பெயர்களை மேலே காணலாம். இந்தப் புலவர்கள் வெவ்வேறு ஜாதியினரைச் சேர்ந்தவராய் இருப்பினும் தமிழால் ஒன்றுபட்டவர்கள். சமமானவர்கள். மதிப்பைப் பெற்றவர்கள். ஆண், பெண் என்ற வேறுபாடும் சங்க காலத்தில் பார்க்கப்படவில்லை என்பதற்கும் இந்தப் பட்டியலே சான்று!

***

 

கிருத யுகத்தில் மனிதனுக்கு 400 வயது! மநு நீதி நூல்-6 (Post No.4458)

Written by London Swaminathan 

 

Date: 4 DECEMBER 2017 

 

Time uploaded in London-  12-34

 

 

Post No. 4458

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

இதற்கு முந்தைய ஐந்து பகுதிகளைப் படித்துவிட்டு இதையும் படிப்பது பொருள் விளங்க உதவும்.

எனது விமர்சனத்தை இறுதியில் கொடுத்துள்ளேன்.

 

ஸ்லோகம் 71: தேவர்களுக்கு ஒரு யுகம் என்பது 12,000 தேவ வருடங்கள்; அதாவது நாலு யுகங்கள்.

 

72.தேவர்களின் ஆயிரம் யுகம் பிரம்மனின் ஒரு நாள். இதே போல இரவும் ஆயிரம் யுகம்.

 

73.பிரம்மனுடைய பகல் புண்ணிய காலம்; இரவு சொப்பன காலம். ஆயிரம் யுகங்களுப் பின்னர் பிரம்மனின் ஆயுள் முடிகிறது.

74.பிரம்மா விழித்துக்கொண்டவுடன் பூர், புவ, சுவர் லோகங்களை மீண்டும் படைக்கிறார். ஏனெனில் தினப் பிரளயத்தில் அழிவது இந்த மூன்று உலகங்கள் மட்டும்தான். இதுவே சத், அசத் (நல்லது, கெட்டது).

75.பிரம்மாவின் மனதில் தோன்றிய ஆசை முதலில் ஆகாயத்தைப் படைக்கிறது; அதன் குணம் சப்தம் (ஒலி)

76.அந்த ஆகாயத்திலிருந்து நறுமணம் நிரம்பியதும், தூய்மையுமானதும், வலிமை நிரம்பியதாகவும் காற்று உண்டாகிறது. இதன் குணம் ஸ்பரிசம்; அதாவது தொடும் உணர்ச்சி.

 

  1. அந்த வாயு என்னும் காற்றிலிருந்து ஒளிமிகுந்த தேயு, அதாவது தீ உண்டாகிறது. அதன் குணம் உருவம் (ரூப). அது இருளைப் போக்கும்

 

78.தேயு எனப்படும் தீயிலிருந்து அப்பு எனப்படும் தண்ணீர் உண்டாகிறது. அதன் குணம் ருசி (சுவை). அதிலிருந்து பிருதுவி என்பப்படும் பூமி தோன்றுகிறது; அதன் குணம் (இயல்பு) வாசனை (கந்தம்).

இதுதான் தினப் பிரளயம் என்பது; அதாவது பிரம்மாவின் ஒரு நாள்

 

  1. பன்னீராயிரம் தேவ வருஷம் ஒரு தேவ யுகம் என்று சொல்லப்பட்டதல்லவா? அது போல 71 முறை நடந்தால் ஒரு மனுவின் அதிகாரம் முடிந்ததாகிவிடும்; அதைத்தான் மன்வந்தரம் என்கிறோம்.

 

80.இவ்வாறு அளவற்றதான மன்வந்தரங்களின் சிருஷ்டியும் சம்ஹாரமும் (படைப்பும் அழிப்பும்) பரம்பொருளின் விளையாட்டு போல நிகழ்கிறது’

 

  1. (முதல் யுகமான) கிருத யுகத்தில் தருமமும் சத்தியமும் நான்கு கால்களுடன் நிற்பதால் மனிதர்களுக்குத் துன்பம் என்பதே கிடையாது.

82.மற்ற யுகங்களில் களவு, பொய், வஞ்சகம் ஆகியவற்றால், அறவழியில்லாத வகையில் சம்பாதிக்கப்பட்ட பொருள், கல்வி அறிவால், தர்மம் என்பது ஒவ்வொரு காலாக (பகுதியாகக் ) குறைகிறது.

 

83.கிருத யுகத்தில் மனிதனின் ஆயுள் 400 வருஷம். நோய் நொடிகள், துன்பம் இராது. அவர்கள நினைத்தது நடக்கும்; கிடைக்கும்; தவ வலிமையால் ஆயுளை அதிகரிக்கவும் இயலும்.இதற்கு அடுத்தடுத்த யுகங்களில் வயது நூறு நூறாகக் குறைந்து கொண்டே வரும்

 

84.மனிதர்களுக்குச் சொல்லப்பட்ட ஆயுளும், நினைத்ததை முடிக்கும் வல்லமையும், பிராமணர்களின் சாபங்களும் அனுக்கிரகங்களும் யுகத்திற்கேற்றவாறு பலன் தரும்

  1. .கிருத யுகத்தின் தர்மம் வேறாகவும் திரேதா யுகத்தின் தர்மம் வேறாகவும் துவாபர யுகத்தின் தர்மம் வேறாகவும் கலி யுகத்தின் தர்மம் வேறாகவும், யுகத்திற்குத் தக்கவாறு குறைவாக வரும்.

 

86.கிருத யுகத்துக்குத் தவமும், திரேதா யுகத்துக்கு ஆத்ம ஞானமும், துவாபர யுகத்துக்கு யக்ஞம் எனப்படும் வேள்வியும், கலியுகத்துக்கு தானம் எனப்படும் கொடுத்து உதவுதலும் முக்கிய தர்மமாக இருக்கும்

 

87.அந்த பிரம்மாவானவர், இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக,  தனது முகம், தோள், தொடை, கால் ஆகியவற்றிலிருந்து முறையே பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்ர வருணத்தாரைப் படைத்து அவரவர்களுக்கு உரிய தொழில்களை தனித் தனியாக வகுத்தார்.

 

88.பிராமணர்களுக்கு ஆறு தொழில்களைக் கொடுத்தார்; வேதம் கற்றல், கற்பித்தல், தானம் வாங்குதல், தானம் கொடுத்தல், வேள்விகளைச் செய்தல், செய்வித்தல்

 

89.க்ஷத்ரியர்களுக்கு வேதம் ஓதுதல், குடிமக்களைக் காத்தல், தானம் கொடுத்தல், வேள்விகள் இயற்றல் முதலிய கருமங்களைக் கொடுத்தார். அத்தோடு பாட்டு, கூத்து, பெண்கள் ஆகியவற்றில் ஈடுபடவும் தடை போட்டார் (கேட்பதற்கோ காண்பதற்கோ, ஆதரவு தருவதற்கோ தடை இலை. தானே அந்தத் தொழிகளில் ஈடுபடுவதற்கே தடை)

 

90.வஸ்யர்களுக்குப் பசுவைக் காத்தல், தானம் கொடுத்தல், வேதம் ஓதுதல், பூமியிலுண்டான இரத்தினம், நெல் தானியங்களில் வியாபாரம் செய்தல், வட்டி வாங்குதல், பயிரிடுதல் ஆகியவற்றை ஏற்படுத்தினார்.

 

 

  1. சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணி செய்யும் தொழிலை ஏற்படுத்தினார்.

xxxx

 

எனது கருத்து

 

மனு நீதி நூலைக் குறை கூறுவோர் அதிலுள்ள எல்லா விஷயங்களையும் ஏற்பதானால்தான் அதைக் குறை கூற  முடியும். மனு தன்னுடைய நீதி த்ருஷத் வதி– சரஸ்வதி நதி தீரத்துக்கு இடைப்பட்ட நீதிகள் என்று சொல்கிறார். மற்றவர்கள் ஏன் அதைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்? அதாவது வேண்டாத வம்பை விலை கொடுத்து வாங்குவது இதுதான்

 

மனு, கிருத யுகத்தில் 400 ஆண்டுகள் மக்களின் வயது என்றும் ஒவ்வொரு யுகத்திலும் 100 வயது வீதம் குறைந்து கொண்டே வரும் என்றும் சொல்கிறார். மற்ற விஷயங்களில் மனுவின் சொற்களை அப்படியே எடுத்துக் கொள்வோர் இது பற்றி இயம்புவது யாதோ?

 

குறை கூறுவோரை ஒதுக்கிவிட்டு நாம் இதை (400 ஆண்டுகள் மக்களின் வயது) ஆராயப் புகுந்தால், இதுவரை அதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால் சண்டை சச்சரவு, நோய் நொடியில்லாத அமைதியான வாழ்க்கை வாழ்வோர் 120 முதல் 150 ஆண்டுவரை வாழ்ந்ததற்கு சான்று உண்டு.

 

மனு தர்மமோ, பகவத் கீதையோ வர்ண ஆஸ்ரமம் பற்றிப் பேசும்போது அது தொழில் முறைப் பகுப்பு என்றே சொல்கின்றன. ஆயினும்  புரோகிதர் மகன் புரோகிதனாகவும் மன்னர் மகன் மன்னனாகவும் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

 

ஐயர் மகன், ஐயராக இருப்பது தப்பு என்று சொல்லுவோர்,  உ லகம் முழுதும் மன்னன் மகன் மன்னனாக — பரம்பரைத் தொழிலாக — இருந்ததை ஏன் குறை கூறுவதே இல்லை. அது சரி என்றால் புரோகிதர் மகன் புரோகிதனாக இருந்ததைப் பற்றிக் கவலைப் படவோ ஆதங்கப்படவோ உரிமை இல்லை.

 

 

இப்போது அரசியல்வாதி மகன் அரசியல்வாதியாகவும், சினிமா நடிகர் மகன் சினிமா நடிகராகவும் இருப்பதை ஏன் குறை கூறுவதில்லை; ஒவ்வொரு து றையிலும் இப்படிப் பார்க்கிறோம். ஆகவே, அந்தக் காலத்தில் இப்படி இருந்ததில் என்ன வியப்பு? என்ன குறை?

 

யாரும் யாரையும் முன்னேற விட முடியாமல் தடுத்தால் தவறு. அப்படி ஒரு சான்றும் இல்லாமல் பிராமணர்களும் கூட மன்னனாகவும், மன்னர்களும் கூட பிராமணனாகவும் மாறியதை புராண, இதிஹாசங்களில் படிக்கிறோம்.

 

பெரும்பாலும் குலத்தொழில் முறைதான் இருந்தது. தமிழ் மன்னரின் மகன்தான் தமிழ் மன்னரானான். பாமரன் ஆகவில்லை! இதில் ஏன் குறை காண்பது இல்லை?

பிராமணர்- சூத்திரர் என்ற இரண்டே பிரிவுகள் மட்டுமே இருப்பதாக திராவிட அரசியல்வாதிகள் கிளப்பியதும் பொய்; ஆரியர்- திராவிடர் என்ற இரண்டே இனங்கள்தான் உண்டு என்று வெளிநாட்டினர் பரப்பியதும் பொய்; பிறப்பு மட்டுமே ஜாதியை நிர்மாணிக்கும் என்பதும் தவறு என்பதை புராண, இதிஹாசங்களைப் படிப்போருக்கு நன்கு விளங்கும்.

நான் ஐந்தாம் பகுதியில் சொன்னது போலவே வெவ்வேறு காலக் கணக்கீடு உள்ள பல வெளி உலகங்கள் இருப்பதும் மேற்கூறிய ஸ்லோகங்கள் மூலம் தெரிகிறது.

யுகங்களைப் பற்றிய மநுவின் வர்ணனை மிகவும் அழகானது. கிருதயுகத்தை ஒரு பசுமாடாக கற்பனை செய்தால் அதற்கு 4 கால்கள்; அடுத்தது த்ரேதா யுகம் அதற்கு மூன்றே கால்கள்; அடுத்தது த்வாபர யுகம் அதற்கு இரண்டே கால்கள்; அடுத்தது கலியுகம்; அதற்கு ஒரே கால்; நாம் வாழும் காலம்!

 

யுகங்கள் இறங்கு வரிசையில் பெயர் இடப்பட்டதும் இந்த பசு அல்லது ஒரு டேபிள் (Table or Chair) என்ற கற்பனையில்தான் போலும்! த்ரே=3, த்வா=2; பின்னர் கலியுகம்.

 

நான்கு வருணத்தாரும் உண்டான விதம் ரிக் வேதத்தில் புருஷ சூக்த துதியில் (10-90) வருகிறது. அருமையான கற்பனை; பிராமணன் வாயினால் பிழைப்பதால் (வேதம் ஓதி) முகத்திலிருந்து வந்தான் என்றும் போர்வீரன் தோள் பலத்தால் பிழைப்பதால் தோளிலிருந்து க்ஷத்ரியன் வந்தான் என்றும் உழுதும் வியாபாரம் செய்தும் பிழைப்பதால் வைஸ்யன் தொடையில் இருந்து வந்தான் என்றும் உடல் உழைப்பால் பிழைப்பதால் சூத்திரன் காலில் இருந்து வந்தான் என்றும் சொல்லும்; இந்த உடலில் எந்த உறுப்பு இல்லாவிடிலும் அது மனிதன் இல்லை. அது போல சமுதாயத்தில் இந்த நான்கு உறுப்புகள் இல்லாவிடில் அது சமுதாயம் இல்லை. இன்றும் கூட இந்த நான்கு தொழில்கள்தான் உலகின் மிகப்பெரிய தொழில்கள்: கல்வி; படைகள், வணிகம், உடலுழைப்பு வேலைகள்.

2600-க்கும் மேலான பாடல்கள் அடங்கிய மனுநீதியில் இப்போதுதான் 91 ஸ்லோகங்களை முடித்துள்ளோம்.

 

தொடரும்—————-

 

ஜாதி வேறு, வர்ணம் வேறு- Part 1

pyramid_of_caste_system_in_india

Written by London swaminathan

Date: 15 September 2016

Time uploaded in London: 7-38 AM

Post No.3155

Pictures are taken from various sources; thanks.

 

 

ஜாதிகள் என்பன பிற்காலத்தில் தோன்றியன. வர்ணம் என்பது வேத காலத்தில் தோன்றின. நால் வர்ணம் என்பது பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்திரர்களைக் குறிப்பதாகும். இன்றோ பல்லாயிரம் ஜாதிகள் உள்ளன. இது எப்படிப் பல்கிப் பெருகின என்பது உலகிலேயே மிகவும் அதிசயமான ஒரு விஷயம். யாரும் தீவிரமாக ஆராய்ந்து எழுதவில்லை. வெள்ளைக்காரர் காலத்தில் தர்ஸ்டன் முதலியோர் பட்டியலிட்டு, அவர்களின் பழக்க வழக்கங்களை பல தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர். ஆனால் அவை ஏன் இப்படிப் பிரிந்தன, தோற்றம் என்ன? என்பதெல்லாம் இன்று வரை கேள்விக்குறியாகவே தொக்கி நிற்கின்றன.

 

தமிழ் இலக்கியத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து பகு திகளிலும் இருந்த மேற்குடிகள், கீழ்க்குடிகள், புற நானூற்றில் குறிப்பிடப்படும் ஜாதிகள் பற்றி முன்னரே ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளேன்.

 

வேத காலத்தில் வர்ணம் என்று சொன்னது தோலின் நிறத்தை வைத்து அல்ல. வர்ணம் என்ற உடனே பலரும் கலர் = நிறம் = வர்ணம் என்றே நினைப்பர். வர்ணம் என்பது “வ்ரு” என்ற சம்ஸ்கிருத வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. “வ்ரு” என்றால் “தேர்ந்தெடு” என்று பொருள். ஒவ்வொருவரும் சில தொழில்களைத் தேர்ந்தெடுக்கலாம். அந்தத் தொழி லின் அடிப்படையில் அவர்கள் வர்ணம் நியமிக்கப்பட்டது. ஆனால் இந்தக் காலத்தில் நடிகர் மகள் நடிகை யாவது போலும், அரசியல்வாதி மகன் அரசியல் தலைவர் ஆவது போலவும் அந்தக் காலத்திலும் இயற்கையாக, இயல்பாக அவரவர் குடும்பத் தொழில்களைப் பின்பற்றினர். ஆயினும் விஸ்வாமித்திரர், தேவாபி போன்ற வேதகால அரசர்கள் பிராமண ர்களாக மாறியதும் மஹாபாரதத்தில் உள்ளது.

 

வெள்ளைக்கார்கள் அடிக்கடி சுட்டிக்காட்டும் வர்ணம் பற்றிய மந்திரம்:-

 

ப்ராஹ்மணோஸ்ய முகமாசீத் பாஹு ராஜன்ய: க்ருத:

ஊரு ததஸ்ய  யத்வைஸ்ய: பத்ப்யாஹும் சூத்ரோ அஜாயத

–ரிக் வேதம் 10-90-12

the-caste-system-during-vedic-civilisation

பிராமணர்கள் வாயிலிருந்தும் (முகம்), அரசர்கள் தோள்களிலிருந்தும் வைசியர்கள் தொடையிலிருந்தும், சூத்திரர்கள் கால்களில் இருந்தும் வந்தனர் என்பது புருஷ சூக்த மந்திரம் ஆகும். இந்த மந்திரம் இவர்கள் அனைவரும் கடவுளின் விராட ஸ்வரூபத்திலுந்து தோன்றினர் என்று சொல்வதிலிருந்து அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பது தெளிவாகிறது. அது மட்டுமல்ல. வாய் மூலம் வேதம் சொல்லிப் பிழைப்பு நடத்துவோர் பிராமணர், தோள்வலி மூலம் அரசாட்சி செய்வோர் க்ஷத்திரியர்கள், தொடைகள், வயிற்றுப் பகுதிக்கு வாழ்வளிப்போர் வணிகர்கள், கால் உழைப்பினால் பணி புரிவோர் சூத்திரர்கள் என்பதும் தெளிவாகும். இந்த உடல் உறுப்பில் ஒன்று இல்லாவிடிலும் ஒருவன் முழு மனிதன் இல்லை. சமுதாயத்தில் இந்த 4 வகையான தொழில் புரிவோர் இல்லாவிடில் அந்த சமுதாயம் இயங்கா து என்பதையும் அறியலாம்.

 

மனுவும் தனது மானவ தர்ம சாஸ்திரத்தில்,

ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே என்பார். அதாவது பிறப் பினால் எல்லோரும் சூத்திரர் களே, தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின்றனர். இரு பிறப்பாளர் என்பது வேத  காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது . பின்னர் “கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல” பிராமணர்களை மட்டுமே குறித்து நின்றது!

 

கிருஷ்ண பரமாத்மாவும், பகவத் கீதையில் “சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச: ( 4-13) என்கிறார். அதாவது நான்கு வர்ணம் என்பது குணங்களின் அடிப்படையில் என்னால் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறார். இதற்கு இந்தியாவிலுள்ள அறிஞர்கள் பலரும் விரிவான விளக்க உரைகள் எழுதியுள்ளனர். அத்தனையும் தொகுத்தால் அதுவே தனி புத்தகமாகிவிடும். மஹாத்மா காந்தி முதலியோரும் இதை நியாயப்படுத்தி விளக்கம் அளித்துள்ளனர்.

 

ஜாதிகள் பற்றி மஹாபாரதம் முதல் பாரதியார் வரை என்ன சொல்லுகின்றனர் என்பதை இரண்டாவது பகுதியில் காண்போம்.

 

–சுபம்—

My old articles on the same subject:–

Caste Divisions in Ancient Tamil Nadu

Posted on July 4, 2014

 

Eighteen groups of Indians!

Research paper written by London Swaminathan
Research article No.1390; Dated 4 November 2014.

 

 

To be continued……………………………..

திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532)

IMG_3156 (2)

Written by london swaminathan

 

Post No. 2532

Date: 12th February 2016

 

Time uploaded in London  காலை 8-48

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

IMG_3147

 

IMG_3154 (2)

IMG_3157 (2)

 

புத்த மதம் பற்றிய ஒரு நூலின் பின்னட்டையில் இந்த புத்தக விளம்பரம் வெளியாகியுள்ளது. இதை பிரிட்டிஷ் லைப்ரரியில் நேற்று புகைப்படமெடுத்தேன். வருங்கால ஆராய்ச்சியாளர்களுக்கு  உதவும் என்பதால் இங்கே பதிவு செய்கிறேன்.

 

சுமார் நூறு ஆண்டுகளுக்கு  முன் வெளியான எல்லா, தமிழ் ஆங்கிலப் புத்தகங்களிலும் திருவள்ளுவர் பற்றிப் பல தகவல்கள் உள்ளன. ஆனால் சமீப காலத்தில் வெளிவரும் நூல்களில் அவை இருட்டடிப்புச் செய்யப்பட்டுவருகின்றன. இதே போல திருக்குறள் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு நூல் என்ற உண்மையும் மறைக்கப்பட்டு வருகிறது.

 

நாங்கள் லண்டனில் பல்கலைக் கழக வளாகத்தில் வள்ளுவர் சிலை நிறுவியபோது, இவர் ஐந்தாம் நூற்றாண்டுப் புலவர் என்றே எழுதி அழைப்பிதழ் வெளியிட்டோம். வள்ளுவர் ஆண்டை கி.மு.31 என்று நிர்ணயித்த மகநாட்டில், கடும் எதிர்ப்பு, வெளிநடப்புகள் நடந்த விஷயங்களை தமிழ்கூறு நல்லுக அறிஞர்கள் அறிவர். அதிகாரம் என்ற சொல்லும், ஒவ்வொரு அதிகாரத்திலும் சம்ஸ்கிருதச் சொல்லும் இருப்பதால் வள்ளுவனின் காலத்தை மொழியியல் ரீதியில் ஐந்தாம் நூற்றாண்டிலேயே வைக்கமுடியும்.

 

இன்றுள்ள நிலையில் தொல்காப்பியம் (குறிப்பாகப் பொருளதிகாரம்), சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய மூன்றும் தமிழ்நாட்டின் வரலாற்றில் இருண்ட காலம் என்று கருதப்படும் 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டிலேயே தோன்றின. தொல்காப்பிய காலம் பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இதை விரிவாக எழுதியுள்ளேன்.

எனது வேறு சில பழைய கட்டுரைகள்:

Who was Tiruvalluvar? written and posted by me on 24 July 2013

 

Abert Einstein and Tiruvalluvar, posted on 17 December 2013

Tamil Merchant who dumped god into sea, posted on 17 August 2014

Elelasingan Kathai (Tamil), posted on 17 August 2014

 

வள்ளுவனும் வன்முறையும் (ஜூலை 24, 2013)

 

வள்ளுவன்  ஒரு  சம்ஸ்கிருத  அறிஞன் (நவம்பர் 5, 2012)

 

வள்ளுவான் சொன்ன புராண, இதிஹாசக் கதைகள் (ஜூலை 30, 2013)

 

வள்ளுவன் காமெடி ( 5 ஜனவரி, 2015)

தொல்காப்பியம் பற்றி சுமார் பத்து கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

 

–சுபம்–

“இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப”: சங்ககால ஜாதிகள்

The Caste System During Vedic Civilisation

ஆய்வுக் காட்டுரை எழுதியவர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1149; தேதி 5 ஜூலை 2014.

“கேட்டியோ வாழி பாண பாசரைப்
பூக்கோள் இன்றென்றறையும்
மடிவாய்த் தண்ணூமை இழிசினன் குரலே – புறம்.289

இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப
வலிதுறந்து இலைக்கும் வன்கண் கடுந்துடி – புறம் 170

துடி எறியும் புலைய
எறிகோள் கொள்ளும் இழிசின – புறம் 287

புல்லகத் திட்ட சில்லவிழ் வல்சி
புலையனேவப் புல்மேல் அமர்ந்துண்டு – புறம் 360

சங்க இலக்கியத்தில் உள்ள 18 மேல் கணக்கு நூல்களில் ‘புறநானூறு’ – என்னும் நூல் தமிழ் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. ஆகையால் அப்புத்தகத்தில் இருந்து மட்டும் சில மேற்கோள்களைத் தந்தேன்.

இவற்றின் ஒட்டுமொத்த பொருள்: புலையன் ஜாதி, பிறப்பால் அமைந்தது. புலையர்கள் சுடுகாட்டு வேலைகளைச் செய்வர். அவர்கள் பறை கொட்டுவது —(பறையர் என்பது இந்த வாத்தியத்தில் இருந்து பிறந்த சொல்) — முதலிய தொழில்களைச் செய்வர். அவர்கள் கீழ்ஜாதி மக்கள். “கட்டில் நிணக்கும் இழிசினன் (புறம் 82) என்றும் பேசப்படுகிறான் (கட்டில் செய்ய தோல் வாரில் வேகமாக ஊசியைச் செலுத்தும் புலைமகன் என்பது பழைய உரை)

‘’துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று
இந்நான்கல்லது குடியும் இல்லை’’— புறம்.335 (மாங்குடிக் கிழார்)

– என்று நான்கு குடிகளை ஒருச்சேரப்படுவதில் இருந்து இந்த நாலு குடிகளும் கீழ்மட்டத்தில் இருந்த குடிகள் என்பதும் தெரிகிறது.

சங்க கால ஜாதிப் பிரிவுகள் பற்றி ஏராளமான பாடல்களில் குறிப்புகள் வருகின்றன. ஆனால் அவை அன்றாட நடைமுறைகளைப் பாதித்ததாகவோ மோதல்களை உண்டாக்கியதவோ சான்று எதுவும் இல்லை. பாடல்களை இயற்றியோரிலும் பல வகுப்பினர் இருந்தனர். ஆனால் ஜாதிச் சண்டை இல்லை. சங்க காலத்துக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த தேவார, திவ்யப் பிரபந்த காலத்தில் சிவ, விஷ்ணு பக்தர்கள் இடையே எவ்வளவு சமரசம் நிலவியது என்பதை பெரிய புராணத்தில் இருந்தும் ஆழ்வார் சரிதங்களில் இருந்தும் அறிகிறோம்.
caste-system-in-hinduism

ஆவுரித்துத் தின்னும் புலையரேனும் — என்று அப்பர் பாடுகிறார். மாடு தின்னும் புலையா, உனக்கு மார்கழித் திரு நாளோ—என்று நந்தனார் நாடகத்தில் கேட்கிறோம். இது சங்க காலத்தில் இருந்து தோன்றிய ஜாதிப் பகுப்பு.

நாநிலப் பிரிவுகளில் என்ன என்ன சிறிய ஜாதிகள் இருந்தன என்பதும் தெரிகிறது. சில சொற்கள் சங்க இலக்கியத்திலேயே பயிலப்படாததால் அவைகளின் பொருள் கூட இன்று தெரியவில்லை.

வெளிநாட்டு இந்து அல்லாத “அறிஞர்கள்” (?!?!) எழுதிய புத்தகங்களில் இந்தப் பட்டியலை வெளியிடாமல் மறைத்திருப்பதைக் காணலாம். தமிழர்கள் இடையே “நல்ல பிள்ளை” பட்டம் வாங்கி உலகத் தமிழ் நாட்டில் பொன்னாடை போர்த்திக் கொள்ள இப்படி ஒரு வேஷம்!!! பழங்காலத்தில் மதத்தைப் பரப்பவும், பிரிட்டிஷ் ஆட்சியை நிலை நாட்டவும், கேளிர் பிரித்து பகச் சொல்லி பகைமை வளர்கவும் இருந்த ஒரு கூட்டமும் இப்படி மறைத்தது. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க யாரே வல்லார்? பழந்தமிழ் நூல்கள், உரைகள் எல்லாவற்றிலும் உண்மை மறைக்கப்படவில்லை.

அந்தக் காலத்தில் ராஜா மகன் ராஜாதான், குயவன் மகன் குயவன் தான். ராமாயண, மஹாபாரத காலம் போலவே சில விதி விலக்குகளும் உண்டு. இது உலகம் முழுதும் இன்றும் இருக்கிறது. அரசியல்வாதிகள் மகன்கள், அரசியலில் பெரிய பதவிகளைப் பிடிப்பது போல, செல்வாக்கு உடையவர்கள் மகன்கள் டெலிவிசன் போன்ற மக்கள் தொடர்பு சாதனங்களில் பெரிய நிலைக்கு உயர்வது போல இது — இங்கு லண்டனிலும் கூட இதைக் காண்கிறோம்.

இதோ நாநிலப் பகுப்பில் (பாலை நிலத்தையும் சேர்த்து 5 நிலங்கள்) குறிப்பிடப்படும் உயர்ந்த, தாழ்ந்த ஜாதிகள்:

குறிஞ்சி
உயர்ந்தோர்: பொருப்பன், வெற்பன், சிலம்பன், கொடிச்சி
தாழ்ந்தோர்: குறவர், குறத்தியர், கானவர்

முல்லை
உயர்ந்தோர்: நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி
தாழ்ந்தோர்: இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்

மருதம்
உயர்ந்தோர்: ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி
தாழ்ந்தோர்: உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்

நெய்தல்
உயர்ந்தோர்: சேர்ப்பன், துறைவன், புலம்பன், பரத்தி, நுளைச்சி
தாழ்ந்தோர்: நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்

பாலை
உயர்ந்தோர்: விடலை, இகுளை, மீளி, எயிற்றி
தாழ்ந்தோர்: மறவர், எயினர், எயிற்றியர், மறத்தியர்
(உதவிய நூல்: ஐங்குறு நூறு, எம்.நாராயண வேலுப்பிள்ளை).

அந்தணர்கள் (பிராமணர்கள்) பற்றிய குறிப்புகள்தான் அதிகம். இதற்குக் காரணம் அந்தணர் பாடிய பாடல்கள்தான் சங்க இலக்கியத்தில் அதிகம். கபிலர், பரணர், நக்கீரர், மாமூலனார் ஆகிய பிராமண புலவர்கள் கொடிகட்டிப் பரந்தனர்.

egyptian-social-structure
Caste System in Ancient Egypt.

காஞ்சி சுவாமிகள் உரை
ஜாதி, வர்ணாஸ்ரமம், பிராமணர், வேதம் என்பதெல்லாம் “ வட நாட்டு இறக்குமதிச் சரக்கு”, “ஆரிய மாயை” — என்று சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றுவோருக்கு காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அழகாகப் பதில் கொடுத்துள்ளார். வேள்வி, மறை (யாகம், வேதம்) என்பதெலால்ம் பழந்தமிழ் சொற்கள் மட்டுமல்ல, அவை எல்லாம் தமிழ் வேர்ச் சொற்களில் இருந்து பிறந்தவை, மொழி பெயர்ப்பு அல்ல என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) சுட்டிக்காட்டினார்.

தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாதைய்யர், ஆரிய-திராவிட இனவெறி மாயையில் சிக்காமல் உள்ளதை உள்ளபடி எழுதி வைத்துவிட்டுச் சென்றார். பாரதி “ஆரிய” என்ற சொல்லை ஏராளமான பாடல்களில் பாடிப் புகழ்ந்து, போற்றி, பாராட்டி ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கையை நிராகரித்தார். (ஆரிய= பண்பாடு உடையோன்; இனவெறிப் பொருளைக் கொடுத்தவர்கள் கால்டுவெல் முதலிய வெளி நாட்டுச் சழக்கர்கள்).

ரிக் வேதத்தில் உள்ள புருஷசூக்தத்தில் இறைவனுடைய நாலு அங்கங்கள் நாலு ஜாதிகள் என்று கூறப்பட்டுள்ளன. கௌடில்யர் அர்த்த சாஸ்திரத்திலும் (3-70) நான்கு ஜாதிகளை ஆரியர்களின் 4 பிரிவுகள் என்றே எழுதியுள்ளார். ஆனால் வெளிநாட்டு, ‘இந்து’வல்லாத “ அறிஞர்கள்” (?!?!?) சூத்திரர்கள் என்பவர்கள் ஆரியர் அல்லாதோர் என்று புரளி கிளப்பி யுள்ளனர்.

வேத காலம் போலவே அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால் வருணப் பகுப்பு இருந்தது — குடி என்ற சொல் ஜாதி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது.

முதல் முதலாக ‘சாதி’, ‘வருணம்’ என்ற சொற்கள் சிலப்பதிகாரத்தில்தான் பயன்படுத்தப்பட்டன. சிலப்பதிகாரக் கதை இரண்டாம் நூற்றாண்டில் நடந்தபோதும், காவியம் உருவானது ஐந்தாம் நூற்றாண்டு என்பதை மொழி நடையே காட்டிவிடுகிறது. நால்வேறு மக்கள் அவரவர்களுக்கான தெருக்களில் வசித்ததை மதுரைக் காஞ்சி (522) காட்டுகிறது.

சிலப். 6-164, 14-183, 8-41, 14-212, 22-10; 8-41

மிலேச்சன் போன்ற தீண்டத்தகாத யவனர்களையும் மஹாபாரதம் முதல் முல்லைப் பாட்டுவரை காண்கிறோம் — (முல்லை 65-66).

Maya-society-Castes-as-in India
Caste System in Ancient Mayan Civilization, South America.

மனுநீதியும் புறநானூறும்

மனுஸ்மிருதியில் மனு என்ன சொன்னாரோ அதை அப்படியே புறநானூற்றுப் (1,2,3 ஆம் நூற்றாண்டு) புலவரும் திருவள்ளுவரும் (ஐந்தாம் நூற்றாண்டு) சொல்லி இருக்கிறார்கள்:

புறம் 183 (ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்)

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

கீழ்ஜாதியில் ஒருவன் கற்றுத் தேர்ந்தான் ஆனால் அவனை மேல்ஜாதிக்காரர்களும் வாழ்த்தி வணங்குவர்.

வள்ளுவனும் இதையே சொன்னான்:

மேற்பிறந்தாராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு (குறள் 409)

பொருள்:- உயர் குடியில் (ஜாதியில்) ஒருவர் பிறந்து படிக்காவிட்டால், கீழ்க்குடியில் பிறந்து படித்துப் பட்டம் பெற்றவரை விட ஒருபடி தாழ்வே.

மனுவும் இதையே கூறியிருக்கிறார்:–

மேலான அறிவை நாலாம் வருணத்தினிடம் இருந்தும் கொள்ளலாம் ( மனு 2-238)
அறம், ஒழுக்கம், நன்மொழி, பற்பல கலைகள் முதலியவற்றை எவ்விடத்தில் இருந்தும் அறியலாம் ( மனு 2-240)

வேற்று இனத்தாரிடமும் வேதம் கற்கலாம். அப்படிக் கற்கும் காலையில் அவரை குருவாக மதித்து கைகட்டி வாய் புதைத்து அவர் பின்னே செல்ல வேண்டும் என்றும் மனு பகர்வார் (2-242).

மஹாபாரதத்தில் இதற்குக் கசாப்புக்கடை தர்ம வியாதன் முதல் வியாசர் வரை பல கதைகள் கிடைக்கும். வேடனாக இருந்து ரிஷியாக மாறிய வால்மீகி இன்னும் ஒரு எடுத்துக் காட்டு. வேத கலத்தில் கவச ஐலுசர் போன்ற அறிஞர்களும் இவ்வகையினரே.

Pyramid_of_Caste_system_in_India

ஜாதிகள் ஒழிக!

ஜாதிப் பிரிவினைகளை ஆதரிக்கும் கட்டுரை அல்ல இது. ஆனால் சங்க காலத்தில் ஜாதிகள் உண்டு, பழந் தமிழினத்திலும் பிரிவினைகள் உண்டு. அவை தொழில் முறையில் மட்டும் அமைந்தது அல்ல, பிறப்பினாலும் அமைந்தவை என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உண்டு.

ஆனால் உடை, உணவு, உறைவிடம் ஆகிய மூன்று அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் கிடைத்தன. புலவர்கள, பாணர்கள் முதலியோர் வறுமையில் வாடினாலும் அதற்கு அவர்களின் ஜாதி காரணம் அல்ல. மொத்தத்தில் மக்கள் அவரவர் உறைவிடங்களில், வரையறுக் கப்பட்ட பகுதிகளில் இன்ப வாழ்வு வாழ்ந்தனர்.

தேர்தலில் ஜாதி, கல்வி நிறுவன அனுமதியில் ஜாதி, வேலை ஒதுக்கீட்டில் ஜாதி – இப்படி எல்லாவற்றிலும் ஜாதியை வேண்டும் தமிழர்கள் — அம்பேத்கர் என்னும் பெருமகன் சொன்ன 25 ஆண்டு எல்லைக்குப் பின்னரும் ஜாதிச் சலுகைகளை விரும்பும் தமிழர்கள் — ஜாதிச் சமரசம் பற்றிப் பேச அருகதை அற்றவர்களே!! அப்படிப் பேசினால் அவர்களது மனச் சாட்சியே அவர்களைப் பார்த்து நகைக்கும்!!!!

அகநானூற்றில் வரும் ஜாதிகள்/தொழில் முறைப் பிரிவுகள்:–
அகநானூற்றில் உள்ள சாதிகள்: அண்டர்/ இடையர், அத்தக் கள்வர், அந்தணர், உமணர், உழவர், குயவர், கொல்லர், தட்டார், பரதவர், பழையர், பானர், யானைப்பாகர், வேளாப் பார்ப்பார்,

குறவர் குடி–அகம் 13, உழவர் குடி— அகம் 30, பரவர் குடி –அகம் 10, நுளையர்- அகம் 366, எயினர்— அகம்.79, மறவர்- அகம்.35, வேட்டுவர்— அகம்.65.

–சுபம்–

Caste Divisions in Ancient Tamil Nadu

Pyramid_of_Caste_system_in_India

Research article written by London Swaminathan
Post No. 1148; 4th July 2014.

Caste divisions existed in ancient Tamil Nadu like other parts of India. Tamils were divided on the basis of four castes and on the basis of work they did. There were references about ‘high born’ and ‘low born’ in the Sangam Tamil Literature.

There were mentions about four types of soldiers: Chariot, Elephant Brigade, Cavalry and Foot soldiers (Ratha,Gaja,Thuraga,Pathathi) as well. When we look at the whole picture with such divisions of castes, soldiers, Eight Types of Marriages, Nava Rasa, Six Seasons and so on in the Sangam literature, we have to accept that there was no difference between Tamils and other communities 2000 years ago.

There was a mischievous propaganda by people with vested interests that all these divisions were “imported” from the “Aryan North” into Tamil Nadu. But great saints like Kanchi Paramacharya, Aurobindo and great Tamil scholars like U V Saminathaiyer have pointed out that pure Tamil words coined from Tamil roots were used for Yaga, Veda and Castes from the days of the oldest Tamil book Tolkappaiam. It shows that they were part and parcel of Tamil society and nothing was brought into Tamil Nadu from outside.

The surprising thing about the ancient Tamil community of Sangam period is each of the five landscape divisions had Upper Castes and Lower castes. Even the poets of Sangam and Post Sangam period did not hesitate to call them “Hey, Ye Low Born!”

Following are the five landscape divisions according to ancient commentators:

1.Kurinchi (Mountainous Areas)
Higher castes: Poruppan, Verpan, Silamban, Kodichy
Lower castes: Kuravar, Kurathiyar, Kanavar

2.Mullai (Forest regions)
Higher castes: Nadan, Thonral, Manaivi, Kizathi
Lower castes: Idaiyar, Idaichiyar, Ayar, Aychiyar

3.Marutam (Countryside
Higher castes:Uran, Makiznan, Manaivi, Kizathi
Lower castes: uzavar, Uzaththiyar, Kadaiyar, Kadaichiyar
4.Neytal (Seashore)
Higher castes:Serppan, Thuraivan, Pulamban, Parathi, Nulaichi
Lower castes: Nulaiyar, Nulaichiyar, Parathar, Parathiar, Alavar, Alathiyar

5.Palai (Wasteland/arid lands)
Higher castes:Vidalai, Igulai, Meeli, Eyitri
Lower castes:Maravar, Eyinar, Eyitriar, Marathiyar

Nobody now knows what these caste names meant. We have explanations for some words.

The Caste System During Vedic Civilisation

Foreign “scholars” have mischievously deleted them from the table of Five Landscapes in English books. They have mentioned only such things that suited their wishful thinking. But the ancient list is still available in all the old Tamil commentaries. Old Tamil commentators have clearly mentioned them as “low and high” castes and explained them in their commentaries.

There are many more names like Kuyavar,Kollan, Thachan, Kuthan,Vanikan which are based on the work they did. But Tamils did not hesitate to use Sanskrit words such as Thachan, Vanikan etc.

The word for Brahmin occurs in hundreds of places with different epithets. Brahmins had the highest number of references. Too many to list here! (I have given in my post “No Brahmin! No Tamil!!” all the contributions made by great Brahmin poets like Kabilar, Paranar, Nakkirar and Mamulanar.

Maya-society-Castes-as-in India
Caste System in the Mayan Civilization of South America.

Manu Sloka in Purananauru!!

Pandya King Nedunchezian has composed a beautiful (Purananuru 183) verse about the value of education 2000 years ago. He says even if a person of the lowest caste among the four castes is educated, the high caste person would salute (pay respects to) him. Even a mother would show more affection towards the educated son than the illiterate one.

Manu said the same in the Manu Smriti:–

“A man who has faith may receive good learning even from a man who is lower, the ultimate law even from a man of the lowest castes, and a jewel of a woman even from a bad family”–2-239

“Ambrosia may be extracted even from poison,
And good advice even from a child,
Good behaviour even from enemy
And gold even from something impure “– 2-240

“Women, jewels, learning, law, purification, good advice and various crafts may be acquired from anybody” – 2-241

“In extremity, it is permissible to learn Veda from someone who is not a priest and to walk behind him and obey him like a Guru as long as the instruction lasts”- 2-242

Tiruvalluvar also said the same in Tamil Veda Tirukkural (409)
“Though high born, an unlettered man is deemed lower than a learned man of lower birth. “—Kural 409.
During Krita Yuga (Golden Age), there was only one caste i.e. Brahmins, according to Santi Parva chapter 186 of Mahabharata.

Non Hindu foreign “scholars” deliberately spread a lie that Shudras are non-Aryans. But Vedas clearly say that they are part of the same Mahapurusha in the Purushasuktam of Rig Veda.

Chanakya of Arthashastra (3rd century BCE) treats all the four Varna as Aryans (not a word with racial meaning as foreigners used, but meaning ‘cultured’).

Those who read Rig Veda, Manu and Arthashastra would know that all the four castes were part of one community. Untouchability and modern caste differences were unknown in the Vedic period.

egyptian-social-structure

Caste System in Egyptian Civilization.

Hey! Ye Low Born! In Purananuru

Tudiyan caste is addressed as low born (Izisina in Tamil) in the verses 82 and 287 of Purananuru by poet Sathanthaiyar.

Poet Damodaran of verse 170 and Kazathalaiyar of verse 289 also used this word “low born” (Izisina).
Mangudi Kizar of verse 335 mentioned all the four lower castes :Tudiyam Panan, Paraiyan and Kadampan.
Lowest caste Pulaiyas did all the works at crematorium, according to verse 360.
Since Purananuru is considered the oldest section in the Sangam literature, I have quoted above verses from the same. Other sections of Sangam literature have a lot of references. Silappadikarm, Tamil epic of fifth century CE, mentioned the caste system and in which part of the city each and every caste lived etc.
In short it was the same caste system throughout India. But no one was discriminated against on the basis of caste in Tamil Nadu. In a vast geographical region each and every community lived in their own sphere happily with all the basic needs like food, shelter and clothing. If at all there was poverty, it had nothing to do with the caste system.

Oldest Tamil book Tolkappaiam also refer to the caste system in several places.
The word “Four Varna” is used in Tamil epic Silappadikaram: 6-164, 14-183, 14-212, 22-10; Manimekalai 6-56.

caste-system-in-hinduism

Silappadikaram 8-41 used the word “Jathi” (Saathi).
Words Varna and Jathi are used in Silappadikaram for the first time.

Maduraikanchi of Sangam Literature mentioned the “four different streets” for four different castes.
Brahmin streets known as Agraharam existed till 75 years ago in Tamil Nadu. Brahmins only lived in that area. Whole villages given to Brahmins by the kings were mentioned in thousands of Tamil inscriptions.
Some people who study the constructions and structures in the Indus Valley Cities believe that the caste system originated there. It is debatable.

Contact swami_48@yahoo.com