ஜூலை 2021 இல் வெளியான ச.நாகராஜன் கட்டுரைகள் (Post.9916)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9916

Date uploaded in London –  1 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜூலை 2021 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

2021

July

1-7-21    9798   ராஜ்வேதம் கூறுகிறார்: இந்திய சரித்திரம் திருப்பி எழுதப்பட  

            வேண்டும் என்று!

2-7-21    9802   ஜூன் 2021இல் வெளியாகியுள்ள S.நாகராஜன் கட்டுரைகள்

3-7-21    9807    புராணத் துளிகள் 3ஆம் பாகம் அத்-11 (30-33) ஓம் தோன்றியது    

           எப்படி,ஓம் எனும் பிரணவத்தின் மஹிமை, ஓம் உச்சரிப்பால்  

           ஏற்படும் நன்மைகள்,அருணாசல மஹிமை

4-7-21    9811  பகவான் ரமண மஹரிஷி வாழ்வில் அற்புத சம்பவங்கள்!

4-7-21    9813    உலகத்தோரின் துன்பத்தைக் கண்டு உருகி அழுத உத்தமர்! 

5-7-21    9816   நடந்தவை தான் நம்புங்கள் – 18 – விதவிதமான பதில்கள்!        

6-7-21    9819/B  சைதன்ய மஹா பிரபு – 5-7-2021 ஞானமயம் உரை

7-7-21    9824   பிறரிடமும் தன்னைப் போன்ற குணங்கள் இருப்பதைக் கண்டு

           மகிழ்பவன் அரிது!

8-7-21    9827   தரித்திரமே, இன்று  மட்டும் என்னோடு இரு! (தொண்டை

            மண்டல சதகம் பாடல் 6)

9-7-21    9831    கொரானா பற்றி அறிய வேண்டிய சில உண்மைகள்!  – 

            ஹெல்த்கேர் ஜூலை 2021 கட்டுரை

10-7-21  9834   நடிகையின் காலில் சுட்ட பின்னர் கூறப்பட்டது – இது இந்தியா

            இல்லை!

11-7-21  9837   எதிர்க் கட்சிகள் தேவையே, எதிரிக் கட்சிகள் கூடாது!

12-7-21  9841    புராணத் துளிகள் 3ம் பாகம் அத் 12 (34 – 40)

13-7-21  9845     பகவந் நாம போதேந்திராள் – ஞானமயம் 12-7-21 உரை

14-7-21  9849   திருவாசகம் என்னும் தேன் – 1 13-7-21 சிவஞான சிந்தனை

              மணிவாசகர் குருபூஜை விழாவில் உரை

15-7-21  9852    திருவாசகம் என்னும் தேன் – 2 13-7-21 சிவஞான சிந்தனை

              மணிவாசகர் குருபூஜை விழாவில் உரை

16-7-21  9855   பிருகதீஸ்வர மாஹாத்மியம் நூல் தரும் 16 சோழ மன்னரிகளின்   

             விவரம்

17-7-21  9859  செப்புமொழி பத்து : பொன்னொளிர் பாரதம்!

18-7-21 9862   எவன் உண்மையான சாது?(சுபாஷிதம் T S கௌரி சாஸ்திரி 16-20)

18-7-21 9867   காஷ்மீர், நமது காஷ்மீர், நடப்பது என்ன? நல்லவை தான்

            நடக்கிறது!

19-7-21 9869    காடுகளைப் பாதுகாப்போம் – AIR உரை எண் 1 16-7-21 உரை

20-7-21 9873     சமர்த்த ராமதாஸர் – 1 19-7-21 ஞானமயம் உரை

21-7-21 9877     சமர்த்த ராமதாஸர் – 2 19-7-21 ஞானமயம் உரை

22-7-21 9880    பாகிஸ்தான் பற்றி மஹாத்மா காந்திஜியும் மஹரிஷி

             அரவிந்தரும்!

23-7-21 9883    தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடு!

                              AIR உரை எண் 2 17-7-21 உரை

24-7-21 9887     சுற்றுப்புறத்தைக் காக்கும் வழிகள் AIR உரை எண் 3 18-7-21 உரை

25-7-21  9890  உத்வேகமூட்டும் தகவல்கள்! AIR உரை எண் 4 19-7-21 உரை

26-7-21  9894    சூரிய சக்தியைப் பயன்படுத்துவோம் – AIR உரை எண் 5 20-7-21

27-7-21  9899    பகவான் ‘ஸ்ரீ ரமண மஹரிஷி – 1 ஞானமயம் 26-7-21 உரை

28-7-21  9902    பகவான் ‘ஸ்ரீ ரமண மஹரிஷி – 2 ஞானமயம் 26-7-21 உரை

29-7-21 9905    கழிவுப் பொருள்களைக் குறைப்போம்! AIR உரை எண் 6 21-7-21

30-7-21  9909     ’ஸ்வச்ச பாரத்’ உருவாக்குவோம் – AIR உரை எண் 7 22-7-21

31-7-21  9913    மஹரிஷி உதங்கர்!  

***

tags- ஜூலை 2021, .நாகராஜன்,  கட்டுரைகள்

31 ரிக் வேதப் பொன்மொழிகள்– ஜூலை 2021 நற்சிந்தனை காலண்டர் (Post.9797)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9797

Date uploaded in London – 30 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பண்டிகை நாட்கள் – ஜூலை 4- சுவாமி விவேகானந்தர் நினைவு தினம், 15-ஆனி  உத்தரம் , 17-தக்ஷிணாயன புண்யகாலம், 23-குரு  பூர்ணிமா.

சுப முகூர்த்த நாட்கள் – ஜூலை 7, 16

அமாவாசை – ஜூலை 9பவுர்ணமி – ஜூலை 23,

ஏகாதசி விரத நாட்கள் – ஜூலை 5, 20

ரிக்வேதத்தில் உள்ள முதல் எண் (Number) மண்டலத்தையும், இரண்டாவது எண் துதியையும் மூன்றாவது எண் அந்தத் துதியில் உள்ள மந்திரத்தையும் குறிக்கும் .

Xxxx

ஜூலை 1 வியாழக்கிழமை

அக்கினியே! உன்னை தினமும் அதிகாலையில் உஷா துயில் எழுப்புகிறாள் 10 தோழிகள் (5+5 விரல்கள் )அவிர் பலி கொடுக்கின்றனர். ஈட்டி முனை போலும், கோடரி முனை போலும் கூரான முனையுடையாய் ; மநு வம்சம் வந்த மக்களிடையே நீ உலவுகிறாய்  4-6-8

Xxx

ஜூலை  2 வெள்ளிக்கிழமை

அக்னீ , நீ பள்ளத்காக்கை நோக்கிப் பறக்கும் பருந்துகளைப் (Falcons) போலவும், குதிரைகளைப் போலவும், மருத் தேவர்களின் படையைப் போலும் உன் சுவாலைகளை பரப்புகிறாய் 4-6-10

xxx

ஜூலை  3 சனிக்கிழமை

இந்த செல்வத்தின் மதிப்பு என்ன?  லாபம் என்ன ? நீ அறிவாய், சொல், இந்த ரகசியமான வழியில் நாங்கள் குற்றம் இல்லாமல் செல்ல வழிகாட்டுவாயாக 4-5-9

Xxx

ஜூலை  4 ஞாயிற்றுக்கிழமை

அக்னியே , நீ சத்தியவான், பேரறிஞன், நட்சத்திரங்கள் போல பிரகாசமானவன், வேள்விகளைக் காப்பவன்; உன்னை ஒவ்வொரு வீட்டிலும் தியானம் செய்கிறார்கள் 4-7-3

xxx

ஜூலை  5 திங்கட்கிழமை

அக்னியே , நீ விறகில் தீயினன் (அப்பர் தேவாரம்) , அற்புதன், அணுக முடியாதவன், வனங்களில் வசிப்பவன், அறிவுள்ளவன், தாய் போன்ற நதி நீரில் இருப்பவன் , குகையில் மறைந்திருப்பவன் (குகன்=முருகன்) 4-7-6

xxx

ஜூலை  6 செவ்வாய்க்கிழமை

பறவை, பூமியின்  பிரியமான, மேலான இடத்தைக் காக்கிறது  4-5-8

xxx

ஜூலை  7 புதன் கிழமை

அக்னி பகவானுக்கு தேவர்களை எப்படி வணங்க வேண்டும் என்பது தெரியும். அவன் நாம் விரும்பும் செல்வங்களைத் தருகிறான் 4-8-3

xxx

ஜூலை 8 வியாழக்கிழமை

அக்னீ, மர்மத்தில் வைக்கப்பட்டிருக்கும் மகத்தான ஞானத்தை, உண்மையை , தோத்திரத்தை அறிவான். பசுவின் காலடி போல மறைந்திருந்த அறிவை எனக்குப் புலப்படுத்தினான் 4-5-2

ஜூலை  9 வெள்ளிக்கிழமை

அக்கினியே , அருகிலும் தூரத்திலும் உள்ள , பல விதமாகத் தூற்றும் இருவிதத் தீயோர்களை விலக்கவும் ; எங்கள் விருப்பங்களைக் கிரமமாய் நிறைவேற்றவும் – 4-3-14

xxx

ஜூலை  10 சனிக்கிழமை

அக்நியே , வேடர்கள் வலையைப் பரத்துவது போல உன் பலத்தைப் பரப்பு.  யானை மீது செல்லும் அரசனைப் போல பவனி வா ; உன்னுடைய உக்கிர சுவாலையால் அரக்கர்களை எரிக்கவும் 4-4-1

xxx

ஜூலை  11 ஞாயிற்றுக்கிழமை

எங்கள் பகைவர்களை, உறவினர் ஆனாலும் உறவினர் இல்லாவிட்டாலும் அழித்து விடு 4-4-5

xxx

ஜூலை  12 திங்கட்கிழமை

அக்நியே , உன்னுடைய பார்வையானது மமதாவின் குருட்டுப் புதல்வனை  – தீர்க்கதமஸை – துர்பாக்கியத்திலிருந்து காத்தது அவனை அழிக்க விரும்பியவர்கள் தீமை செயலற்றுப்போனது 4-4-13

xxx

ஜூலை  13 செவ்வாய்க்கிழமை

அக்நி தேவனே , கணவனின் பொருட்டு தன்னை அழகிய ஆடைகளால் அலங்காரம் செய்து கொள்ளும் மனைவியைப் போல இந்த வேதியை / அக்கினி குண்டத்தை உனக்காக அலங்கரித்து உள்ளோம் – 4-3-2

xxx

ஜூலை  14  புதன் கிழமை

கறப்பவர்கள் நீர் போல கறக்கும் பால், மர்மத்தில் வைக்கப்பட்டிடிருக்கிறது (விறகில் தீயினன் , பாலில் படு நெய் போல் பரவியவன்- அப்பர் தேவாரம்) 4 -5-8

xxx

ஜூலை 15 வியாழக்கிழமை

பசு கருப்பாக இருந்தாலும் பிரகாசமான, வெண்மையான , சத்துள்ள பாலால் மனிதர்களைக் காக்கிறது. வேள்விக்கு வேண்டிய பாலை அருளுக 4-3-9

xxx

ஜூலை  16 வெள்ளிக்கிழமை

அங்கீரசர்கள் ருதத்தால் / சத்தியத்தால் மலையைப் பிளந்தார்கள் பசுக்களோடு சேர்ந்து போற்றுகிறர்ர்கள் 4-3-11

xxx

ஜூலை  17 சனிக்கிழமை

அக்நி தேவனே, தேவியர் போன்ற நதிகள் , குதிரைகளைப்  போல , பாய்ந்து ஓடுகின்றன இதற்கும் ருதமே/ சாத்தியமே காரணம் – 4-3-12

xxxx

ஜூலை  18 ஞாயிற்றுக்கிழமை

அக்நி தேவனே, நீ எங்களைத் துன்புறுத்துவோரின் வேள்விக்கோ, அல்லது பக்கத்தில் வசிக்கும் வேள்விக்கோ போகாதே -3-13

xxx

ஜூலை  19 திங்கட்கிழமை

அக்நி தேவனே, நேர்மையற்ற என் உறவினர் வீடுகளுக்குப் போகாதே . கபடமுள்ள சகோதரனிடம் எதையும் விரும்பாதே. நாங்கள் நண்பனுடைய, பகைவனுடைய செல்வத்தை அனுபவிக்காமல் இருப்போமாகுக  4-3-13

xxxx

ஜூலை  20 செவ்வாய்க்கிழமை

பொன் மேனி அம்மானை , சத்தியவானை, பூமிக்கும் ஆகாசத்துக்கும் பரவி இருப்பவனை, ருத்திரனை புத்தி தடுமாறி இறப்பதற்குள் போற்றித் துதியுங்கள்  4-3-1

xxxx

ஜூலை  21  புதன் கிழமை

அக்கினியே, நீ அசுரன்!  மிக்க ஆற்றலுள்ளவன். பசுக்களையும் ஆடுகளையும், குதிரைகளையும் இந்த வேள்வி தோற்றுவிப்பதாகுக -4-2-5

xxx

ஜூலை 22 வியாழக்கிழமை

மித்திரனே , வருணனே , கடமையைச் செய்ப்பவனுக்கு சத்தியம் தோன்றுக (அவர்கள் பிரார்த்தனைகள் பலிக்கட்டும்) 4-1-18

xxx

ஜூலை 23 வெள்ளிக்கிழமை

இந்த உலகத்திலே எங்களுடைய முன்னோர்கள் மலையில் பாறைகள் இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த பால்தரும் பசுக்களை வெளிப்படுத்தினார்கள் . இதற்காக இருட்டை அழிக்கும் உஷா தேவியை அழைத்துச் சென்றனர் (காலைப்பொழுதில் பிரார்த்தனை மூலம் உண்மைப் பொருளை  அறிந்தார்கள்)

(பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்து உண்டு – திருமூலர் 4-1-13

xxx

ஜூலை 24 சனிக்கிழமை

அவர்கள் (எங்களுடைய முன்னோர்கள்) மலைகளைப் பிளந்து அக்கினியைப் போற்றினார்கள் ; மற்ற அறிஞர்கள் அவர்களுடைய வீரச் செயல்களை எங்கும் அறிவித்தார்கள்  4-1-14

xxx

ஜூலை 25 ஞாயிற்றுக்கிழமை

பசுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த  மலை அடைப்பை தெய்வ வாக்கால் பலாத்காரமாகத் திறந்தார்கள் 4-1-15

xxxx

ஜூலை 26 திங்கட்கிழமை

அக்கினியே! தட்சனின் புதல்வியான இளை-யால் உலகத்தின் தந்தையாக ஏற்கப்பட்டாய்.3-27-9

xxx

ஜூலை 27 செவ்வாய்க்கிழமை

அவர்கள் பாற்பசுவின் பூர்வமான நாமத்தை அறிந்தார்கள் அவர்கள் தாயின் மூவேழு உத்தமச் சந் தங்களையும் அறிந்தார்கள் .பின்னர் உஷா தேவியைப் போற்றினார்கள். அவள் சூரியனோடு  புகழுடன்  தோன்றினாள் 4-1-16 (புறநானூறு 166, திருமூலர் திருமந்திரம்)

xxx

ஜூலை  28  புதன் கிழமை

வேள்விக்காக தன்  தலையில்  விறகுக் குச்சிகளைச் சுமந்து வந்து, வியர்வை சிந்த உழைக்கிறானே

 அவனுக்குத்தான் நீ செல்வம் தருகிறாய். அவனுக்குத் தீமை செய்ய விரும்பும் ஒவ்வொருவனிடமிருந்தும் அவனைக் காப்பாயாக 4-2-6

xxx

ஜூலை 29 வியாழக்கிழமை

இரும்பை நெருப்பால் சுத்தப்படுத்தும் கருமானைப்போல கடவுளை வழிபடும் தூயவர்கள் வேள்வித் தீயால் தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டார்கள் 4-1-17

xxx

ஜூலை  30 வெள்ளிக்கிழமை

ஏழு  ரிஷிகளான நாங்கள் உஷத் காலத்தில் வேள்வித் தீயை உருவாக்குவோம்.அங்கீரசர்களான நாங்கள் ஒளி மயம் ஆவோம். நீர் நிறைந்திருக்கும் மேகத்தைப் பிளப்போம் 4-1-15

xxx

ஜூலை  31 சனிக்கிழமை

காலையிலும் மாலையிலும் உன்னைப்போற்றி உனக்கு அவிர் பலி கொடுப்பவனை தங்கக் கச்சை அணிந்த குதிரை போலுள்ள நீ துன்பத்திலிருந்து மீட்பாயாக .4-2-8

–subham–

tags – ரிக் வேத, பொன்மொழிகள், ஜூலை 2021,  காலண்டர்,