ஜெர்மானிய நாவலாசிரியர் தாமஸ் மான் (Post No.9657)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9657

Date uploaded in London – –28 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

THOMAS MANN

(1875 – 195)

தாமஸ் மான் ஜெர்மனியைச் சேர்ந்த நாவலாசிரியர். சிறுகதை எழுத்தாளர்.

ஜெர்மனியிலுள்ள லூபெக் (LUBECK) நகரில் பிறந்தார். அவருடைய தந்தை பெரும் பணக்காரர். ஆகவே மானின் இளமைக்காலம் மகிழ்ச்சியான பருவமாகக் கழிந்தது.  இளம் வயதில் தந்தை திடீரென்று இறக்கவே குடும்பத்தின் சூழ்நிலை தலைகீழாக மாறியது. வறுமை வாட்டியது.

தனது தந்தை எப்படி பணக்காரர் ஆனார் என்பதை அடிப்படையாக வைத்து அவர் முதல் நாவலை BUDDEN BROOKS எழுதினார். மானுக்கு 25 வயதானபோது இந்தப் புதினம் வெளியானது. இது ஜெர்மானிய மொழியில் ஒரு சிறந்த நாவல். இதற்கடுத்த நாவலை அவர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் எழுதினார். அந்த நாவலின் பெயர் THE MAGIC MOUNTAIN ஆனால் இடைப்பட்ட காலத்தில் அவர் சிறுகதைகளை எழுதினார்.

மாயாஜால மலை (THE MAGIC MOUNTAIN) என்ற புதினம் இவருக்கு அக்காலத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய நாவலாசிரியர் என்ற புகழைத் தந்தது. ஒரு மலைமீதுள்ள மனநோய் மருத்துவமனையில் வாழ்பவர்கள் உலகத்தை எப்படி கண்ணோட்டமிட்டார்கள் என்பதை விளக்கும் கதையாகும். இந்த உலகில் வாழ்பவர்களை அவர்கள் கடவுள்களாகக் காண்கிறார்கள்.

இந்த நாவல் எழுதிப் புகழ் பெற்றவுடன் 1929-இல் மானுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.

1933ஆம் ஆண்டில் இவர் இன்னுமொரு நாவலை எழுதினார். பழங்கால எகிப்தை கதை நடைபெறும் இடமாக வைத்து எழுதப்பட்டாலும் இக்கால மனிதர்களின் வாழ்க்கை குறித்த எதிரொலியாக இருந்தது இந்த நாவல். இந்த நாவலின் தலைப்பு JOSEPH AND HIS BRETHEREN

மானின் எழுத்துக்களுக்களிடையே இழையோடிய ஒரு கருத்து – தனிமனிதனின் சுதந்திரத்திற்கும் அரசின் கொடுகோன்மைக்கும் இடைப்பட்ட மோதலாகும். நாஜி (NAZI) இயக்கத்தின் போக்கை அவர் முன்கூட்டியே உணர்ந்திருந்தார். அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஜெர்மனியிலிருந்து அமெரிக்கவுக்கு குடியேறினார். அங்குதான் அவரது முக்கிய படைப்பான DR FAUSTUS உருவானது. இந்த நாவல், ஜெர்மனியைப் பிடித்த பைத்தியத்தையும் அது எப்படிப் போரில் நுழைந்தது என்பதையும் விளக்கும் உருவகமாக (ALLEGORICAL) அமைக்கப் பட்டிருந்தது. போர் முடிந்த பின் ஜெர்மனிக்குத் திரும்பிய MANN இறுதிநாட்களை சுவிட்சர்லாந்தில்  (SWITZERLAND) கழித்தார்.

–subham—

tags — ஜெர்மனி,  நாவலாசிரியர்,  தாமஸ் மான்

ஜெர்மானிய நாடக ஆசிரியர் பிரெடெரிக் ஷில்லர் (Post No.9636)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9636

Date uploaded in London – –23 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிரெடெரிக் ஷில்லர்

FRIEDRICK SCHILLER

(1759 – 1805)

பிரெடெரிக் ஷில்லர் FRIEDRICK SCHILLER ஒரு ஜெர்மானிய நாடக ஆசிரியர். ஏழாண்டுப் போர் (SEVEN YEARS WAR) காலத்தில் அவர் WüRTTEMBERG-இல் பிறந்தார்.

      அவருடைய தந்தை ராணுவத்தில் மருத்துவராக (SURGEON) பணிபுரிந்ததால் படைகள் செல்லுமிடத்திற்கு அவரும் செல்ல வேண்டியிருந்தது. இதனால் பிரெடெரிக் ஷில்லர் அவர்களுக்கு நிரந்தர வீடு என்று எதுவுமில்லை.

      அவர் பெரியவராகியவுடன் சமய பரப்புரையாளராக வேண்டும் என்பது ஆசை. ஆனால் அவருடைய நகரில் வாழ்ந்த இளைஞர்கள் அனைவரைப் போலவே இவரையும் ராணுவத்தில் சேரக் கட்டாயப்படுத்தினர். ராணுவக் கழகத்தில் சேர்ந்த அவர் சட்டம் பயில அனுப்பப்பட்டார். ஆனால் சட்டக்கல்வி அவருக்குப் பிடிக்கவில்லை. பின்னர் வேறொரு ராணுவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயின்றார்.

அவர் 22 வயதில் முதல் நாடகத்தை வெளியிட்டார். ஜெர்மனியில் இதுவரை தோன்றாத புதுப்பாணியில் நாடகம் இருந்ததால் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் வூர்ட்டன்பர்க் (WüRTTEMBERG) ஆட்சியாளருக்கு அது பிடிக்காததால் இனி நாடகம் எழுதக்கூடாதென்று பிரெடெரிக் ஷில்லர்க்கு தடைவிதிக்கப்பட்டது.

உடனே அவர் ஊரைக்காலி செய்து பல நகரங்களுக்குச் சென்றுவந்தார். பின்னர் ஜெர்மனியின் கலைக்கேந்திரமான WEIMARக்குச் சென்றார். அங்கு புகழ் பெற்ற கவிஞர் கெதே (GOETHE)யைச் சந்தித்து அவரது நட்பைப் பெற்றார். அவர் மூலமாக அருகிலுள்ள JENA பல்கலைகழகத்தில் பேராசிரியர் வேலை கிடைத்தது.

வெய்மார் (WEIMAR) அரசவையில் பணிபுரிந்த ஒரு பெண்ணை மணம் முடித்தார். இதற்கு ஓராண்டுக்குப் பிறகு கடும் நோய்வாய்பட்டதால் பேராசிரியர் பணியை துறக்க நேரிட்டது. டேனிஷ் ஆதரவாளர் (DANISH ADMIRERS) அவருக்கு ஓய்வூதியம் அளிக்கவே முப்பதாண்டுப் போர் (THIRTY YEARS WAR) என்ற நூலை எழுதி முடித்தார்.

      அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவரது சிறந்த நாடகங்கள் வெளிவரத் துவங்கின. அதில் முதல் நாடகம் WALLEN STEIN இதனைத் தொடர்ந்து எழுதப்பட்டது MARIA STUART. இது ஸ்காட்லாந்து மஹாராணி மேரியை பற்றிய நாடகம். அவர் கடைசியாக எழுதிய WILHELM TELL அவருடைய மிகச்சிறந்த நாடகமாகும்.

xxxxxxxx subham xxxx

 tags – ஜெர்மனி, நாடக ஆசிரியர், பிரெடெரிக் ஷில்லர் , schiller

கரி என்னும் அற்புத மூலகம்- Part 1 (Post No.9517)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9517

Date uploaded in London – –21 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

இதுவரை அலுமினியம் முதல் நியான் வரை 31 மூலகங்களின் (elements) — தனிமங்களின் – சுவையான கதையைக் கண்டோம். இன்று கரி என்று இளப்பமாகவும் — வைரம் என்று உயர்வாகவும் அறியப்படும் கரியின் – கார்பனின்(Carbon) – கதையைக் கேளுங்கள்.

இதனால் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி (Organic Chemistry) என்ற புத்தகம் 

tags- கரி , கார்பன், வைரம், ஜெர்மனி, வைர நகரம் , நார்ட்லிங்கன்

ஆரிய ஹிட்லரும் ஹிந்து ஸ்வஸ்திகாவும்

Swastik_on_head

 

Brahmin boy with Swastika on head.

எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்

 

‘’சாதிகள் இல்லையடி பாப்பா!—குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!’’ (பாரதி)

 

6 கோடி பேரைக் கொன்ற ஆரிய இனவெறிக் கொள்கை:

இந்து மதத்தினரின் புனிதச் சின்னம் ஸ்வஸ்திகா. ‘’ஸ்வஸ்தி’’ என்றால் மங்களம் உண்டாகட்டும் என்பது பொருள். ஆயிரக் கணக்கான தமிழ் கல்வெட்டுகள் ஸ்வஸ்தி என்ற மங்களச் சொல்லுடன் தான் துவங்கும். சிந்து சமவெளியில் நிறைய ஸ்வஸ்திகா முத்திரைகள் கிடைத்துள்ளன. வட இந்திய பிராமணர்கள் பூணுல் போடுகையில் சிறு பிள்ளைகளின் தலையை மொட்டை அடித்து தலையில் இந்த சின்னத்தை வரைவார்கள். வணிகர்கள் கடையில் லாபம் தரும் இந்த சின்னத்தை வரைவார்கள்.( இந்தியன் எக்ஸ்பிரஸ் உரிமையாளர் ராம்நாத் கோயங்கா, அவருடைய பெண் கல்யாணத்துக்கு அடித்த பத்திரிகையில் பெரிய ஸ்வஸ்திகா சின்னம் இருந்தது. அவர், எனது தந்தைக்கு அனுப்பியதை வெகு காலம் வரை நான் பாதுகாத்து வைத்திருந்தேன்).

 

ஸ்வஸ்திகாவை ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் தனது கொடியில் பயன்படுத்தும் வரை, மேலை நாட்டிலும் இதற்கு நல்ல பெயரே இருந்தது. ஐரோப்பாவில் 10,000 ஆண்டுப் பழமையான தொல் பொருட் துறை சின்னங்களிலும் இந்த சின்னம் காணப்படுகிறது. இதை சூரியனைக் குறிக்கும் சின்னம் என்று மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளனர்.

swastika stamps

Swastika stamps issued by Germany under Hitler

ஆரிய திராவிடக் கொள்கை என்னும் விஷப் பாம்பை வளர்த்தவர்கள் வெள்ளைக்காரகள். அந்த விஷப் பாம்புக்கு பால் ஊற்றி வளர்த்தவர்களை அதுவே கொன்றது என்றால் மிகையல்ல. ஆறு கோடிப் பேரை பலிவாங்கிய இரண்டாவது உலகப் போருக்கு ஆரிய இனவாதக் கொள்கைதான் காரணம் என்பதை உலகம் அறியும். ஆறு லட்சம் யூதர்களும், ஐந்து லட்சம் ‘’ஹிந்து ஜிப்சி’’ இனத்தவர்களும், பல்லாயிரகணக்கான இந்திய சிப்பாய்களும் இந்த ஆறு கோடித் தியாகிகளில் அடங்குவர்.

 

 

ஹிட்லர் தான் எழுதிய ‘’மெயின் காம்ப்’’ என்னும் சுய சரிதை டயரியில் ஆரிய இன வெறிக் கொள்கையை விளக்கி, உலகில் தூய ஆரியர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்றும் அவர்கள் மற்றவர்களுடன் கலந்து பிள்ளைகளைப் பெற்றதே ஜெர்மானிய வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் எழுதியுள்ளார். (ஆங்கிலக் கட்டுரையில் ஹிட்லரின் சொற்களை அப்படியே கொடுத்துள்ளேன்).

 

அவர் யூத மதத்தினரை வெறுத்ததற்குப் பல காரணங்கள் உண்டு. முதல் உலக யுத்தத்தில் ஜெர்மனியின் வீழ்ச்சிக்கும், பொருளாதாரச் சுரண்டலுக்கும் அவர்களே காரணம் என்றும் நினைத்ததோடு அவர்கள் ஆரியரால்லாத தாழ்ந்த இனத்தினர் என்றும் கருதினார். வெள்ளைக்கார்கள் இந்தியாவில் விதைத்த அதே விஷ வித்தை ஐரோப்பாவிலும் விதைத்தனர். ஆறு கோடிப் பேரை அந்த இன வெறிக் கொள்கை பலி வாங்கிய பின்னர், அந்த கொள்கையைப் புதைத்து அதன் மேல் கல்லறை கட்டி விட்டனர். ஆனால் இந்தியாவில் இதை அரசியல்வாதிகள் இன்னும் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவேளை இங்கும் ஆறு கோடிப் பேரை இது பலி வாங்கினால்தான் கல்லரை கட்டுவார்களோ என்னவோ!

 

ஹிட்லரின் தீப்பொறி கக்கும் பேச்சுகளும் ,நாஜி கட்சியினரின் துண்டுப் பிரசுரங்களும் இந்த ஆரிய இனவெறிக் கொகையையும் யூத மத எதிர்ப்புக் கொள்கைகளையும் வரி வரியாக விளக்குகின்றன. ஹிட்லர் எழுதிய ‘’மெயின் காம்ப்’’ புத்தகத்தில் ‘’ஆரிய இனம்’’ என்ற ஒரு தனி அத்தியாயமே இருக்கிறது.

 

IndusValleySeals_swastikas

Indus Seals with Swastika

 

 

தமிழ்ச் சங்க இலக்கியத்திலும் வேத இதிஹாச புராணங்களிலும் இல்லாத, வெள்ளைதோல்—கருப்புத் தோல் இனக் கொள்கை இந்தியாவை மெதுவாகக் கொல்லும் விஷம் என்பது வெள்ளைகாரனுக்குத் தெரியும். நெப்போலியனை தனித் தீவில் வைத்து உணவில் ஆர்சனிக் என்னும் ரசாயனத்தைக் கலந்து, பிரிட்டிஷ்காரகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றனர். இப்போது நெப்போலியன் தலைமுடியை ஆராய்ந்ததில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. அதுபோல ஆரிய திராவிட இனவெறிக் கொள்கை மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இந்து மதத்தை ஒழித்துகட்டவும் இந்தியாவைத் தகர்த்து அழிக்கவும் அவர்கள் திட்டம் போட்டதை இப்பொது மக்கள் உணரத் துவங்கிவிட்டனர்.

 

சிந்து சமவெளி நாகரீகம் இந்து மத நாகரீகம் என்பதையும் அது அழிந்ததற்கு சரஸ்வதி நதியின் போக்கே காரணம் என்பதும் விஞ்ஞானிகளால் நிரூபிக்கப் பட்டுவிட்டது. கிருஷ்ணரின் துவாரகை ‘சுனாமி’-யில் அழிந்தது பற்றி மஹா பாரதமும் புராணாங்களும் கூறியது உண்மைதான் என்பதும் கடலடித் தொல் பொருட் துறை அறிஞர்களால் உறுதி செய்யப்பட்டுவிட்டது.

 

திராவிடர்களை சிந்து சமவெளியிலிருந்து ஓடிவந்த ‘’கோழைகள்’’ என்றும் மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து வந்த ‘’வந்தேறு குடியினர்’’ என்றும் வெள்ளைகாரன் எழுதிய சரித்திரம் எல்லாம் பொய்யாய் பழங்கதையாய்ப் போய்விட்டன. சங்க இலக்கியமும் புராணங்களும் கூறும் 18 குடிகளே இந்தியாவின் பூர்வீகக் குடிகள் என்பதும் அது தோலின் நிறத்தின் அடிப்படையிலன்றி மக்களின் வாழ்க்கை முறை, குணங்களின்  அடிப்படையில் அமைந்தது என்றும் எனது 600–க்கும் மேலான ஆய்வுக் கட்டுரைகளில் விளக்கி வந்துள்ளேன். மேலும் வரும்……..

 

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)

 

Hitler about SWASTIKA

In 1920, Adolf Hitler decided that the Nazi Party needed its own insignia and flag. For Hitler, the new flag had to be “a symbol of our own struggle” as well as “highly effective as a poster.” (Mein Kampf, pg. 495)

On August 7, 1920, at the Salzburg Congress, the red flag with a white circle and black swastika became the official emblem of the Nazi Party.

In Mein Kampf, Hitler described the Nazis’ new flag: “In red we see the social idea of the movement, in white the nationalistic idea, in the swastika the mission of the struggle for the victory of the Aryan man, and, by the same token, the victory of the idea of creative work, which as such always has been and always will be anti-Semitic.” (pg. 496-497)

Because of the Nazis’ flag, the swastika soon became a symbol of hate, anti semitism, violence, death, and murder.

4x4HitlerStamps

The Aryan Race

 

Extracted from Mein Kampf, volume 1, chapter 11, Race and People

 

‘’If we divide mankind into three categories – founders of culture, bearers of culture, and destroyers of culture – the Aryan alone can be considered as representing the first category.’’

‘’Every manifestation of human culture, every product of art, science and technical skill, which we see before our eyes to-day, is almost exclusively the product of the Aryan creative power’’.

‘’The readiness to sacrifice one’s personal work and, if necessary, even one’s life for others shows its most highly developed form in the Aryan race. The greatness of the Aryan is not based on his intellectual powers, but rather on his willingness to devote all his faculties to the service of the community.’’

Contact swami_48@yahoo.com

Pictures are taken from Wikipedia and other sites; thanks.

swastika in Berlin May PoleSwastika raised in Berlin during Hitler’s rule.