பெண்களை மடக்க ஆங்கில அரசன் செய்த தந்திரம் (Post No.5254)

Written by London swaminathan

Date: 24 JULY 2018

 

Time uploaded in London – 18-46  (British Summer Time)

 

Post No. 5254

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஆங்கில நாட்டை ஆண்ட அரசர்கள் பலர்; ‘பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்’ என்பது போல மன்னர்களும் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!

நாலாவது ஹென்றி (1367- 1413) ஒரு உத்தரவு போட்டார். ‘’இது என்ன கோரம்! பெண்கள் கன்னா பின்னா என்று நகை அணிந்து வருகிறார்கள்; பொது நிகழ்ச்சிகளில் இப்படி அவர்கள் அணிவது நன்றாக இல்லையே’’ என்று  போட்டார் ஒரு சட்டம்.

 

‘’இனிமேல் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் பெண்கள் ஆடம்பரமாக நகை அணிந்து வரக்கூடாது’’ என்று போட்டார் ஒரு சட்டம்.

 

பெண்களோடு உடன் பிறந்தது நகைகள் அதைப் பிரிக்க முடியுமா? அவர்கள் மன்னன் உத்தரவை மதிக்கவில்லை; நன்றாக மிதித்தார்கள்.

 

மன்னனுக்கோ அதிக கோபம்; நான் போட்ட உத்தரவை மதிக்காத குடி மக்களை மடக்குவேன்; புது சட்டம் போட்டு அடக்குவேன் என்றார்.

 

போட்டார் ஒரு சட்ட திருத்தம்!

நான் போட்ட சட்டத்துக்கு முக்கிய திருத்தம்– விபசாரிகளும் பிக்பாக்கெட்டுகளும் , நகை அணியக்கூடாது என்ற சட்டத்திலிருந்து விலக்குப் பெறுவார்கள்.

 

(அதாவது வேசி மகள்களும் பிக்பாக்கெட்டுகளும் தாராளமாக நகை அணியலாம்)

 

அவ்வளவுதான் எல்லா பெண்களும் நகைப் பெட்டிக்குள் பகட்டான அணிகளை முடக்கி வைத்தார்கள்!

 

அட்டஹாசமான மன்னன் நாலாம் ஹென்றி!

 

XXXX

என்னப்பனே! பொன்னப்பனே!

அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் ஒரு தான்தோன்றித் தத்துவராயர். உலகே தன்னைச் சுற்றி நடக்கிறது என்பவர். அவரது மகனே, அப்பனை நன்கு அளந்து வைத்திருந்தான். அழகாகச் சொன்னான்:-

 

“என் தந்தை கல்யாணத்துக்குப் போனால் அவர்தான் மணமகன் என்று நினைத்து அத்தனை கௌரவங்களையும் எதிர் பார்ப்பார். அது மட்டுமல்ல. அவர் மரண ஊர்வலக் கூட்டங்களுக்குச் சென்றால், சவப் பெட்டீக்குள் இருக்கும் சவமாகத் தன்னை கருதி அத்தனை மரியாதைகளையும் எதிர்பார்ப்பார்!”

 

XXX

 

டிஸ்ரேலி ஐடியா!

 

டிஸ்ரேலி, பிரிட்டிஷ் பிரதமர்; அவரிடம் ஒருவர் வந்து அனத்தினார்; “ஐயா எனக்கும் ஒரு பட்டம் கொடுங்கள்; டிஸ்ரேலிக்குத் தெரியும் அந்த ஆள் அவர் எதிர் பார்க்கும் பட்டத்துக்கு அருகதை அற்றவர்” என்று.

 

 

“இந்தோ பாருங்கள்; எவ்வளவுதான் கெஞ்சினாலும் உங்களுக்கு நான் பட்டம் கொடுக்க முடியாது. ஒரு ஐடியா (idea) சொல்லுகிறேன்; பிரிட்டிஷ் பிரதமர் என்னைக் கூப்பிட்டு உங்களுக்குப் பட்டம் தரப்போகிறேன் என்று சொன்னார். உங்கள் பட்டம் எதையும் ஏற்க மாட்டேன் என்று சொல்லி நான் வெளியே வந்துவிட்டேன்; என்று தம்பட்டம் அடியுங்கள்.

 

நானும் ‘கம்’மென்று  இருந்து விடுகிறேன். நான் கொடுக்கும் பட்டத்தைவிட அது இன்னும் புகழ் கூட்டும்- என்றார்.

வந்தவருக்கு பரம திருப்தி: வெறும் சர்க்கரை கேட்கப் போன இடத்தில் கோதுமை அல்வா கிடைத்த திருப்தியுடன் வீட்டுக்குத் திரும்பினார்.

 

xxx

சாவதற்கு முன் மரண அறிவித்தல்!

பி.டி பர்னம் (P T Barnum) என்பவர் புகழ்பெற்ற அரசியல்வாதி; அமெரிக்க வர்த்தகர்; ஒரு சர்கஸ் கம்பெனி துவங்கியவர். எப்போதும் தன்னைப் பற்றியே சிந்திப்பார். தற்பெருமை அதிகம். அவர் சாகக் கிடந்தார். இவரது தற்பெருமை பத்திரிக்கையாளர்களுக்கும் தெரியும். ஒரு பத்திரிக்கையாளர் பி டி பர்னமின் காரியதரிசியை அணுகி, “ஐயா, உங்கள் தலைவரைப் புகழந்து நாலு பத்தி எழுதியுள்ளோம் அவர் இறந்தவுடன் காலமானார் (மரண அறிவித்தல்) பத்தியில் போட எழுதியுள்ளோம். அவர் உயிருடன் இருக்கும்போதே அதை வெளியிட்டால் அவரும் அதைப் படித்துவிட்டுச் சாகலாமே” என்றனர்.

 

காரியதரிசி சொன்னார்; தயவு செய்து மரண அறிவித்தலை அவர் சாவதற்கு முன் வெளியிடுங்கள்; அவர் அதைப் படிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவார் என்றார்.

 

பத்திரிக்கையாளர்களும் அதை அவர்  இறப்பதற்கு முன்னர் நாலு பத்தி வெளியிட்டனர். பி டி. பர்னமுக்கு ஒரே சந்தோஷம்; அடடா. என்ன அருமை; நான் எவ்வளவு பெரியவன் என்று மகிழ்ச்சியுடன் செத்தார்.

 

–subham–

 

ஷெரிடன் கொடுத்த சூடான பதில் (Post No. 3057)

sheridan novel

Compiled by london swaminathan

Date: 13th    August 2016

Post No. 3057

Time uploaded in London :– 11-55 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஐரிஷ் கவிஞர்,  நாடக ஆசிரியர்,  அங்கத எழுத்தாளரான ஷெரிடன் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி:–

 

ஒரு முறை ஷெரிடன் ஒரு வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் மாட்டிக்கொண்டார். ஒரு பெண்மணி அவருடன் உலாப் போக வேண்டும் (வாக்கிங்) என்று நச்சரித்தார். என்ன சாக்கு சொல்லலாம் என்று யோசித்தார் ஷெரிடன்.

 

“அம்மையாரே! வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது. எந்த நேரமும் மழை கொட்டலாம்”  என்றார் ஷெரிடன்.

 

அந்தப் பெண்மணி வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்த போது ஷெரிடன் பின்புறக் கதவு வழியாக நழுவினார்.

 

ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த அந்ததப் பெண்மணி ஓடோடி வந்தார்.

 

“மிஸ்டர் (ஷெரிடன்), வானம் வெளிறிவிட்டது போல இருக்கிறதே” என்றார் அந்த மாது.

 

நீங்கள் என்னுடன் வரக்கூடாது என்று சொல்ல விரும்பாத ஷெரிடன், மறைமுகமாக அதைச் சொன்னார்:

“ஆமாம், ஆமாம், வானம் தெளிந்துவிட்டது. ஆனால் ஒருவர் செல்லும் அளவுக்குதான்!”

 

–என்று சொல்லிவிட்டு விறு விறு என்று நடந்தார்.

xxxx

தாமஸ் கில்லிக்ரூ கொடுத்த சூடான பதில்

jeses thieves

கில்லிக்ரூ இங்கிலாந்தின் இரண்டாவது சார்லஸ் மன்னரின் அரசவையில் இருந்த நாடக ஆசிரியர்,  நகைச்சுவை மன்னன்.

 

ஒரு முறை பாரிஸில் பிரெஞ்சு மன்னன் 14ஆவது லூயியை பார்க்கச் சென்றார். அவர் அரண்மனையைச்  சுற்றிக் காண்பித்தார். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட   ஒரு படத்தைக் காட்டினார். இதோ பாருங்கள் அதற்கு வலது புறம் இருக்கும் படம் போப்பாண்டவருடையது. இட து புறம் இருக்கும் படம் என்னுடையது என்று பெருமையாக சொன்னார்.

 

உடனே தமாஷ் பேர்வழியான கில்லிக்ரூ சொன்னார்:

அட! ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தபோது அவர் கூடவே இரு புறமும் இரண்டு திருடர்களையும்  சிலுவையில் அடித்ததாகப் படித்திருக்கி றேன். இப்போதுதான் தெரிகிறது யார் அந்தத் திருடர்கள் என்று!

220px-Disraeli

டிஸ்ரேலியின் சூடான பதில்

 

டிஸ்ரேலி என்பவர் பிரிட்டனில் இரண்டு முறை பிரதமராகப்  பதவி வகித்தவர்.

 

அவருடைய அரசியல் எதிரி கிளாட்ஸ்டோன்.

 

ஒருமுறை “துரதிருஷ்டம்” என்ற சொல்லுக்கும் “பேராபத்து” என்ற சொல்லுக்கும் என்ன வித்தியாசம் என்று யாரோ ஒருவர் கேட்டார்.

 

நான் உடனே சொல்கிறேன்; நன்றாகக் கேளுங்கள்:

 

கிளாட்ஸ்டோன், தேம்ஸ் நதியில் விழுந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அது துரதிருஷ்டம்.

அவரை யாராவது காப்பாற்றி விட்டார் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  அது “பேராபத்து!” — என்றார் டிஸ்ரேலி

 

–Subham–

 

நல்ல பதில்கள்! (Post No.2698)

disraeli book

Written by S NAGARAJAN
Date: 6 April 2016

 

Post No. 2698

 

Time uploaded in London :–  6-00  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சமயோஜிதம்

 

நல்ல பதில்கள்!

 

ச.நாகராஜன்

 

சிக்கலான தருணங்களில் தக்க பதில்களை உடனடியாகத் தருவது ஒரு கலை.

 

மேதைகளிடம் இதை சர்வ சாதாரணமாகக் காணலாம்.

பிரிட்டனில் எதிரும் புதிருமாக இருந்த பெஞ்சமின் டிஸ்ரேலியும் வில்லியம் க்ளாட்ஸ்டோனும் ஒருவருக்கொருவர் சூடான பதிலைக் கொடுப்பது வழக்கம்.

 

ஒரு முறை டிஸ்ரேலியிடம் ஒருவர் misfortune க்கும்  calamity க்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டார்.

சந்தர்ப்பம் கிடைத்தால் விடுவாரா டிஸ்ரேலி!

 

“தேம்ஸ் நதியில் டிஸ்ரேலி விழுந்து விட்டால் அது துரதிர்ஷ்டம். (Misfortune) அவரை யாராவது காப்பாற்றி மீட்டு விட்டால் அது பெரும் அபாயம்(calamity)” என்று பதில் சொன்னார் அவர்.

 

ஆப்ரஹாம்  லிங்கனைச் சந்தித்த ஒரு குழுவினர் உடனடியாக அடிமைகளை மீட்கும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கான காலம் கனியவில்லை என்று நினைத்தார் லிங்கன்.

 

வந்தவர்களோ பிடிவாதமாக இருந்தனர்.

 

லிங்கன் அவர்களைப் பார்த்துக் கேட்டார்” “ ஒரு ஆட்டின் வாலையும் கால் என்று நீங்கள் வைத்துக் கொண்டால் அதற்கு மொத்தம் எத்தனை கால்கள்?”

 

உடனே அவர்கள், “ஐந்து” என்று பதில் சொன்னார்கள்.

உடனே லிங்கன், “அது தான் இல்லை. வாலைக் கால் என்று சொன்னால் அது கால் ஆகி விடாது. அது வால் தான்!” என்றார்.

ஒரு கொள்கையை எப்படி மாற்றிச் சொன்னாலும் உள்ளது உள்ளபடி தான் இருக்கும்.

 

இங்கிலாந்தின் பிர்பல பாடலாசிரியரான தாமஸ் டிப்டின் தன்னைச் சந்தித்த இளைஞர் ஜெரால்டிடம் கேட்டார் இப்படி:”

அன்புள்ள இளைஞனே!   என் மீது உனக்குத் தான் அளப்பரிய நம்பிக்கை இருக்கிறதே! எனக்கு ஒரு கினி ( லண்டனில் புழக்கத்தில் இருந்த நாணயம்) கடன் தருவாயா?” என்றார்.

இளைஞனோ விவரமானவன்.

 

“ ஆஹா! அபாரமான நம்பிக்கை உங்கள் மீது இருக்கிறது. ஆனால் கினியா தான் என்னிடம் இல்லை!” என்றான் அவன்.

மனம் புண்படாமல் சமயோஜிதமாகப் பேசுவது ஒரு கலை!

பழகினால் வருவது அது!

 

**************

ரோமானிய சக்ரவர்த்தியின் ‘வில்லன்’ சிரிப்பு! (Post No 2579)

caligula

Compiled  by London swaminathan

 

Date: 27 February 2016

 

Post No. 2579

 

Time uploaded in London :– 6-01  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Please go to swamiindology.blogspot.com

OR

tamilandvedas.com

 

 

ரோமானிய சக்ரவர்த்தியின் ‘வில்லன்’ சிரிப்பு!

ரோமானிய அரசன் காலிகுலா, ஒரு விருந்து கொடுத்தான். நிறைய அதிகரிகளும், அமமைச்சர்களும் அரச குலத்தினரும் அமர்ந்திருந்தனர். திடீரென்று காலிகுலா வெடிச் சிரிப்பு சிரித்தார். அது வில்லன் சிரிப்பாக மாறியது. நிற்கவே இல்லை. எல்லோரும் சேர்ந்து சிரித்தனர். எதற்காக? சிரிக்காவிட்டால் அவர்கள் தலையே போய்விடும். அப்பேற்பட்ட ஹிரண்யகசிபு அவன்!

 

கொஞ்ச நேரம் ஆயிற்று, சிரித்து சிரித்துக் களைப்பானவுடன் சிம்மாசனத்தில் ‘அப்பாடா’ என்று சாய்ந்தார். அருகிலுள்ள, ஒருவர் மட்டும் பய பக்தியுடன் மன்னர் சிரித்ததன் காரணத்தை வினவினார்.

 

“ஒன்றுமில்லை, நான் மட்டும் தலை அசைத்திருந்தால், உங்கள் குரல்வளைகளெல்லாம் வெட்டப்பட்டு நீங்கள் அனைவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்திருப்பீர்கள்” – என்று தன்னுடைய பருத்த கையினால் அங்கு வந்திருந்த அத்தனை பேரையும் சுட்டிக்காட்டினான். கேட்டவருக்கு ரத்தமே உறைந்து போயிருக்கும்.

 

இதை பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்துள்ளனர்!

 

Xxxx

 

george 5

குழந்தாய்! என்ன படிக்கிறாய்?

இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், ஒரு நாள் அரண்மனைக்குள் சுற்றிவரும்போது, பேரப்பிள்ளை மிகவும் உன்னிப்பாக, கவனமாக எதையோ படித்துக்கொண்டிருந்தான்.

மன்னர், அவனிடம் போனார். அன்பாக தலையை வருடினார். அது என்ன? இவ்வளவு ஆர்வத்தோடு படிக்கிறாயே! என்ன விஷயம் என்று உசாவினார்.

பேரன் சொன்னான்:

“ஒன்றுமில்லை, தாத்தா! பீட்டர் வார்பெக் பற்றிப் படித்தேன்.

 

மன்னர் கேட்டார், “ பீட்டர்…. வார்பெக்……… அது யாரு எனக்கே தெரியாதே!

பேரன் சொன்னான்,

“தாத்தா, அவன் ஒரு மன்னரின் மகன் போல நடித்தான். ஆனால் உண்மையில் அவன் அப்படிப்பட்ட பேர்வழி இல்லை; மிகவும் நல்ல ஒரு குடும்பத்தில் பிறந்தவன்!”

 

மன்னருக்கு ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது!

 

Xxx

red-clock

இரண்டு கடிகாரம்!

 

ஐந்தாம் சார்லஸ் மன்னன், அரச பதவியைத் துறந்து ஒரு கிறிஸ்தவ மடாலயத்தில் அமைதியாகக் காலம் கழித்து வந்தார். ஆனால் பொழுது போவதற்காக கடிகாரங்களைச் சேகரிப்பது, சுத்தம் செய்வது, அவைகளைச் செப்பனிடுவது ஆகியவற்றைச் செய்துவந்தார். ஒரு முறை இரண்டு சரியாக ஓடாத கடிகாரங்களைச் செப்பனிட்டு, இரண்டிலும் சரியான நேரத்தைக் காட்ட முயன்றார். ஆனால் இரண்டு கடிகாரங்களும் ஒத்துழைக்க மறுத்தன.

இரண்டு கடிகாரங்கள் ஒரே மாதிரி நேரம் காட்டாது – என்ற ஆங்கிலப் பொன்மொழிக்கேற்ப அவை இரண்டும் தனக்கு இஷ்டப்பட்ட நேரங்களைக் காட்டின.

 

உடனே அருகில் நின்ற உதவியாளரிடம், மன்னர் சொன்னார், “ என்ன மடமை! இரண்டு கடிகாரங்களைக்கூட ஒன்றாக ஓடச் செய்யமுடியாத நான், ஆட்சி செய்த காலத்தில் ஆயிரக் கணக்கானோரை ஒரே மாதிரி நினைக்கவும், செயல்படவும் வேண்டுமென்று  எதிர்பார்த்தேனே!” – என்றார்.

 

Xxx

 

disraeli stamp

மஹாராணியை மயக்கிய பிரதமர்

பிரிட்டிஷ் பிரதமராக இருந்த டிஸ்ரேலி என்பவர், விக்டோரியா மஹாராணியின் நன்மதிப்பை பெற்றிருந்தார். எல்லோருக்கும் வியப்பு. எப்படி ஒரு பிரதமர், ஒரு மஹாராணியிடம் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்று. அவரிடமே இதற்கான காரணத்தையும் கேட்டுவிட்டனர்.

அவர் சொன்னார், “ அட, மற்ற அரசியல்வாதிகள் எல்லாம், அவரை மஹாராணியாக நினைத்து, பயபக்தியுடன், அரசு செயல்பாடுபற்றி மட்டும், இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு வந்து விடுவர். நான் அவரும் ஒரு பெண்மணிதானே என்று கருதி பெண்களுக்குப் பிடித்தமான விஷயங்களைப் பேசுவேன்; அது மட்டுமல்ல அவர் என்ன சொன்னாலும் ஆமாம்சாமி போடுவேன், எதையும் மறுத்துரைக்க மாட்டேன். அவர் பேசும் விஷயங்களை மறந்துகூட விடுவேன்” – என்றார். (ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்: லண்டன் சுவாமிநாதன்)

-சுபம்-