ஐன்ஸ்டைன் சொன்னது தப்பு:நம்மாழ்வாரும் சொல்கிறார்! (Post 8687)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8687

Date uploaded in London – –15 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஐன்ஸ்டைன் சொன்னது தப்பு :நம்மாழ்வாரும் சொல்கிறார்

3107 இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா
      
உலகும் கழிய
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற
      
திண் தேர் கடவி
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
      
வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி
      
ஒன்றும் துயர் இலனே (5)
Top of Form Bottom of Form
 

இடர் இன்றியே, ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா

உலகும் கழிய

படர்ப்புகர்ப்  பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற 

திண் – தேர்க் தடவி

சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்

வைதிகன்  பிள்ளைகளை

உடலோடும் கேட்டுக்கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே

திருவாய்மொழி , நம்மாழ்வார், 3224

பொருள்

அர்ஜுனனையும் வைதீக அந்தணனையும் கண்ணன் தன்னுடைய தேரில் ஏற்றிக்கொண்டு வைகுண்டம் சென்றான்.. ஒரு நாளில், ஒரு முகூர்த்த நேரத்துக்குள்ளாகவே தேரைச் செலுத்தி  பரமபதம் சென்று , அங்குள்ள அந்தணன் பிள்ளைகளை உடலோடு பூமிக்கு கொண்டுவந்து கொடுத்தான் . இப்படிப்பட்ட ஆற்றல் படைத்த எம்பெருமானை நான் அடைக்கலமாகப் பற்றிவிட்டதால் எனக்கு கொஞ்சமும் துயர் இல்லை — என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

நம்மாழ்வார் திருவாய் மொழியில் ஒரு அற்புதமான கதை சொல்கிறார்

என்ன கதை ?

YOU CAN TRAVEL BACK AND FORTH IN TIME; YOU CAN INTERFERE IN THE PAST EPISODES

நம்மாழ்வார் நமக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். இந்த சம்பவம் நடந்ததோ 5125 ஆண்டுகளுக்கு முன்னர். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் தெளிவான அண்ட  வெளிப் பயணம் –  பற்றி விவரம் உளது

இது பாகவத புராணத்தில் தசமஸ்கந்தத்திலும், மஹாபாரத பிற்சேர்க்கையான ஹரி வம்சத்திலும் உளது .

ஒரு நல்ல பிராமணனின் 10 குழந்தைகளும் அகால மரணம் (UNTIMELY DEATH OF TEN CHILDREN)  அடைந்தன. அவரை ஏற்றிக்கொண்டு ,அர்ஜுனனை துணைக்கு அழைத்துக் கொண்டு கண்ணன் ஸ்பேஸ் ஷட்டிலில் SPACE SHUTTLE — விண்வெளி ஓடத்தில் – புறப்படுகிறார். ஒரே முகூர்த்தத்துக்குள் — அதாவது 48 நிமிடத்துக்குள் பரமபதம் சென்று ஜோதி ரூபத்தில் இருந்த விஷ்ணுவை தரிசித்து அங்கு இருந்த பத்து பிள்ளைகளையும் உடலோடு பூமிக்கு கொண்டு வந்து கொடுத்தார்.

இதில் ஐன்ஸ்டைன் சித்தாந்தத்தைப் பொடிப்பொடியாக்கும் பல சொற்கள் உள்ளன  48 நிமிடங்களுக்குள் பரம பதம் சென்று மதியத்துக்குள் திரும்பி பூமிக்கு வந்தனர். உடலோடு பத்து பிள்ளைகளும் பூமிக்கு வந்தனர். பரமபதத்தில் ஜோதி ரூபமாக கடவுள் இருந்தார்.

ஸ்பேஸ் ஷாட்டிலில் 13 பேர் திரும்பி வந்தனர் .

பரம பதம் எங்கே உள்ளது?

திருவோண நட்சத்திரம் முதல் வேகா என்னும் அபிஜித் நட்சத்திரம் வரை பல நட்சத்திரங்கள் விஷ்ணுவுடன் தொடர்பு படுத்தப் படுகின்றன. அவை அனைத்தும் 25 ஒளி ஆண்டு முதல் 50 ஆண்டு (Light years) தொலைவில் உள்ளன. ஐன்ஸ்டன் சொல்லும் ஒளிவேகத்தில் சென்றாலே 25 முதல் 50 ஆண்டுகள் பிடிக்கும். இவர்களோ 48 நிமிடத்துக்குள் போய்விட்டனர்.

முடிவுரை என்ன?

YOU CAN TRAVEL FASTER THAN LIGHT !

ஒளியை மிஞ்சும் வேகத்தில் செல்லும் ஸ்பேஸ் ஷட்டில்களை இந்துக்கள் அறிவர்.

அதில் 13 பேர் வரை செல்லலாம்.

உடலுடன் பூமிக்குத் திரும்பிவரலாம்.

இறந்த பிள்ளைகள் பூமியில் இறந்தார்களே  தவிர வேறு இடத்தில் உடலுடன் வசித்தனர் .

இந்தக் கதை எப்படி முடிகிறதென்றால் வைகுண்டத்தைக் காணட்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே பிள்ளைகளின் உயிரை வாங்கியதாக விஷ்ணு சொல்கிறார்.

இனி இதன் பின்னுள்ள சித்தாந்தங்களை மீண்டும் காண்போம்

ஐன்ஸ்டைன் (Albert Einstein)  என்னும் விஞ்ஞானி  சில புதிய தத்துவங்களை உலகிற்கு உரைத்தார். இவற்றை சார்பியல் கொள்கை (THEORY OF RELATIVITY)  என்பர். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இந்தப் பிரபஞ்ச்சத்தில் ஒளிதான்  அதிக வேகத்தில் செல்கிறது. அதாவது ஒரு வினாடிக்கு 1,86,000 மைல்கள் . இந்த வேகத்தில் செல்லவும் முடியாது. இதை மிஞ்சவும் முடியாது என்பது அவர்தம் கொள்கை . இதுவரை மனிதர்கள் கண்டுபிடித்த விண்கலம் கூட மணிக்கு 2 லட்சம் மைல் வேகத்தில் தான் செல்கிறது. இது சூரியனை நோக்கிச் செல்லும் அமெரிக்க விண்கலம் . ஒரு மணி என்பதில் 3600 நொடிகள் இருப்பதை நம் நினைத்துப் பார்த்தால் மணிக்கு 2 லட்சம் மைல் என்பது இமயமலைக்கும் கொசுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பது புலப்படும்  .

ஆக அறிவியல் சொல்லும் விஷயங்களுக்கு மேலே, நாம்  பல படிகள் நம் மேலே ஏறிவிட்டோம்.

*****

ஐன்ஸ்டைன் இன்னும் இரண்டு வியப்பான விஷயங்களையும் சொன்னார்

ஒளிவேகத்தில் செல்லும் ராக்கெட்டைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதில் உங்கள் வீட்டுக் கடிகாரத்தை வையுங்கள் . அதை விட  மிகவும் மெதுவாகச் செல்லும் இன்னொரு ராக்கெட்டில் உங்கள் வீட்டிலுள்ள இன்னொரு கடிகாரத்தை வையுங்கள் . காலை 10 மணி காட்டும் பொழுது இரண்டு விண்கலத்தையும் ஏவினால் ஒளிவேக ராக்கெட்டில் கடிகாரம் அதே மணியைக் காட்டும். ஆனால் இன்னொரு ராக்கெட்டில் கடிகாரம் வேகமாகச் செல்லும் (TIME DILATION) . அதாவது ஒளிவேக ராக்கெட்டில் போனால் நீங்கள் என்றும் 16. மார்க்கண்டேயன் போல எப்போதும் வாழலாம்.

ஐன்ஸ்டைன் கொள்கையை விவாதிப்போர் இன்று வரை ஒளிவேகத்தில் செல்ல முடியுமா அல்லது சுருக்கப் பாதை ஏதேனும் உண்ட என்று சொல்ல முடியவில்லை. சுவையான அறிவியல் புனைக்கதைகளை SCIENCE FICTION NOVELS  மட்டும் எழுதி வருகின்றனர்.

ஐன்ஸ்டைன் மறறொரு சார்பியல் கொள்கையையும் வெளியிட்டார். ஈர்ப்பு விசையானது ஒளியையும் பாதிக்கும் அதிக ஈர்ப்பு விசை இருந்தால் அது ஒளியைக்கூட வெளியே செல்லவிடாமல் பிடித்துவிடும் என்றார். இதை வைத்து இப்பொழுது கருந்துளைகள்BLACK HOLE SECRETS  ரகசியங்களை ஆராய்ந்துவருகிறார்கள்

இந்துக்களின் நூல்களில் ஐன்ஸ்டைன் கொள்கைப் பிடிப்பாளர்களின் வாதங்களைத் தகர்க்கின்றனர்.

அது எப்படி?

ஐன்ஸ்டைன் ஆதரவாளர் கூற்றுப்படி “காலத்தில் பின்னோக்கி வேண்டுமானால் செல்லலாம். ஆனால் அதில் தலையிட முடியாது.”

என்ன அர்த்தம்?

 நான் வேகமாகச் செல்லும் கால யந்திரத்தைக் கண்டுபிடித்து அதில் போய் என் நண்பனின் தாத்தாவைக் கொன்றுவிடுகிறேன் என்று கற்பனை செய்யுங்கள் அப்படிச் செய்யமுடியுமானால் எனக்கு முன்னே நிற்கும் என் நண்பன் எப்படிப் பிறக்க முடியும்? நான்தான்  அவனது தாத்தா எல்லோரும் இல்லாமல் செய்துவிட்டடேனே !!!.

ஆனால் இந்துக்கள் சொல்கிறார்கள் ; காலத்தில் பின்னோக்கிப் பயணிக்கவும் முடியும். அதில் தலையிடவும் முடியும் . நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இரண்டு சைவப் பெரியார்கள் காலப்பயணம் செய்ததைக் காட்டினேன் TIME TRAVEL BY TWO TAMIL SAINTS IN 2012 IN THIS BLOG.

இறந்துபோன ஒருவரை, திரு ஞான சம்பந்தர்,  கொண்டுவந்தபோது அவர் இன்று எந்த வயதில் இருப்பாரோ அதே வயதில் கொண்டுவருகிறார். பூம்பாவை என்னும் சென்னை நகரச் சிறுமி இறந்து போன சாம்பலை அவர் தந்தை கொண்டுவந்து காட்ட , அதன் மீது சம்பந்தர் ஒரு பதிகம் பாட , அந்தப் பெண் உயிருடன் வந்தாள் .

எப்படி வந்தாள் ?

13 ஆண்டுக்கு முன்னர் செத்துப் போன சிறுமியாக வரவில்லை. டீன் ஏஜ் கேர்ளாக TEEN AGE GIRL — பருவக் குமரியாக வந்தாள் .

இதில் காலப் பயணம் பற்றிய இரண்டு விஷயங்கள் தவிடு பொடியாகின்றன .

1.காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்ய முடியும் ; ளியின் வேகத்தை மிஞ்சி எங்கோ மேலுலகத்தில் இருந்த ஒருவரைக் கொண்டுவரமுடியும்.

2.முன்னர் நடந்த மரணத்தில் தலையிடவும், அதை மாற்றவும் முடியும்.

ஆக விஞ்ஞானிகளின் கொள்கை தவிடு பொடி!!! . இது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது!!!

இதே போல சுந்தர மூர்த்தி நாயனார் செய்த அற்புதத்தையும் விளக்கி இருந்தேன் . அவர் என்ன செய்தார?. ஒரு தெரு வழியாக நடந்து போனார். ஒரு வீட்டில் மேளதாள முழக்கம். எதிர் வீட்டில் ஒரே அழுகை. என்னப்பா இது அநியாயம்? என்று அவர் கேட்க ஒரு வீட்டில் ஒரு பிராமணப் பையனுக்கு பூணுல் கல்யாணம் என்றும் அவனுடைய நண்பன் இதே வயது என்றும் ஆனால் இதே பையனுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நதியில் குளி க்கச் சென்ற போது அவனை முதலை விழுங்கி விட்டதாகவும் அதை நினைத்து அவன் தாயார் அழு வதாகவும் மக்கள் சொன்னார்கள். உடனே சுந்தர மூர்த்தி சுவாமிகள் , நதிக்கரைக்குச் சென்று பதிகம் பாடவும் முதலை அந்தப் பையனை கொண்டு வந்து கொடுத்தது என்றும் அவன் வளர்ச்ச்சி இரண்டு ஆண்டுக்கான  வளர்ச்சி அடைந்திருந்தது என்றும்  கதை போகிறது!

இந்த இரண்டு சம்பவங்கள் இதைக் காட்டுகின்றன?

காலத்தில் பின்னோக்கிச் செல்லலாம். முன்பு நடந்ததை மாற்றலாம். அப்படியானால் நம் உயிர்கள் வேறு ஒரு இடத்தில் உருப்படியாக இருக்கின்றன. இங்கு நாம் கண்டதெல்லாம் காலம் என்னும் மாயப்   (TIME IS AN ILLUSION ) புகைதான்.

இதோ இன்னொரு கொள்கை தவிடு பொடியாவதைக் காண்போம்

அர்ஜுனன் போர் செய்ய மறுக்கிறான். என் குருவையும் உறவினர்களையும் எப்படிக்கொல்லுவேன் என்று மயக்கம் உறுகிறான்

“டேய் மச்சான!!! ; நீ ஒன்றும் அவர்களைக் கொல்லப்போவத்தில்லை. இதோ பார் ! என்று விஸ்வரூப தரிசனம் காட்டுகிறார் . அதில் ஏற்கனவே துர்யோதனாதிகள் கொல்லப்பட்டதை காண்கிறான் அர்ஜுனன். அந்த உருவத்தில் இறந்த, நிகழ், வருங்காலம் ஆகிய மூன்று நிலைகளையும் காட்டுகிறான் ஆக கண்ணன் போன்றோர் வருங்காலத்துக்கும் செல்ல முடியும் என்று காட்டுகின்றனர்.(YOU CAN TRAVEL TO FUTURE AND SEE THE PAST)

இதிலும் அறிவியல் கொள்கை தவிடு பொடியாகிறது. இது போன்றதே நம்மாழ்வார் சொல்லும் கதையும்.

இந்துக்களின் கொள்கைப்படி வேகமான வஸ்து  ஒளி அல்ல . மனம்தான் வேகமானது. மனோ வேகமே பெரிது என்று மஹாபாரத எக்ஸப் ப்ரச்னத்தில் காண்கிறோம்.

இது தவிர நாரதர் நொடிப்பொழுதில் மூன்று உலகங்களுக்கும் சஞ்சரிப்பதையும் INTER GALACTIC TRAVEL OF NARADA  , வன பர்வத்தில் அர்ஜுனன் , மாதலி செலுத்தும் –ஸ்பேஸ் ஷட்டிலில் — இந்திர லோகம் சென்று  வந்ததையும்  அறிகிறோம்.

******

TIME DILATION IS HOUSEHOLD STORY IN INDIA

ஐன்ஸ்டைன் சித்தாந்தம் அத்தைப் பாட்டி கதை

இந்து மதத்தில் ஐன்ஸ்டைன் சித்தாந்தம் ஒரு அத்தைப் பாட்டி கதை யாகும்!! சின்னப் பேரப்பிள்ளைகளுக்கு , பள்ளிக்கூடமே போகாத பாட்டி சொல்லும் கதையில் ஐன்ஸ்டைனின் YHEORY OF TIME DILATION டைம் டைலேஷன் தியரி உள்ளது. நமக்கும் தேவர்களுக்கும் காலம் வேறு. பிரம்மாவுக்கு அதை  வீட வேறு. நம்மைப் பொறுத்த வரை அவர்கள் காலம் பெரிய எண் . விரிவடைந்த எண் DILATED . அவர்களுக்கு அது ஒரு சாதாரண நாள். ஒரு பொருள் வேகமாகச் செல்லச் செல்ல அது குறைவான காலத்தைக் காட்டும் நமக்கு அது பெரிதாகிக் கொண்டே போகும்.

எல்லாப் புராணங்களிலும் உள்ள இந்தக்கதையை,  பாட்டிமார்களும் பவுராணிகர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சொல்லி வருகின்றனர்.

60 விநாழிகை = 1 நாழிகை
60 நாழிகை (24 மணி நேரம்) = 1 நாள்
30 நாள் = 1 மாதம்
12 மாதங்கள் = 1வருடம்
60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)
3000 சுழற்சிகள் = 1 யுகம்
4 யுகங்கள் = 1 சதுர்யுகம்
71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்
14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்

43,20,000 வருடங்கள் = 1 சதுர் யுகம்
18 சதுர் யுகம் = 1 மனு
இந்த பிளாக்கிலுள்ள ரேவதி நட்சத்திரக் கதை இதை உண்மை என்றும் காட்டுகிறது. கீழே LINK லிங்க் கொடுத்துள்ளேன்.

*******

ENERGY CAN NEITHER BE CREATED NOR DESTROYED

பெரிய பெரிய கொள்கைகளை எல்லாம் 100 ஆண்டு பழமையான பழமொழி அகராதி புத்தகத்திலும் காணலாம்

உள்ளது போகாது, இல்லது வாராது .

அதாவது சக்தி, ஆன்மா போன்றன எ   போதும் உள்ளன. அவை அழியாது. தோற்றத்தில் வேண்டுமானால் மாறுபடலாம். மெய்கண்ட சிவனாரின் சிவ ஞான போதத்தின் மூன்றாவது சூத்திரமும் இதை விளக்கும்..

பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயம் இதை விரிவாக விளக்கும்.

TAGS-  ஐன்ஸ்டைன், தப்பு, நம்மாழ்வார் ,  காலப் பயணம், உள்ளது போகாது,

3116:THIRU VAY MOZI OF NAMMALVAR 

idar inRiyE oru naaLoru pOzthil* ellaa ulakum kaziya,*

padar_pugazp paartthanum vaithikaNnum* udan  ERath thiNdhErkadavi,*

sudaroLiyaay _ninRa thannudaic sOthiyil*  vaithikan piLLaigaLai,*

udalodum koNdu kodutthavaNnaip paRRi*  onRum thuyarilanE.    3.10.5

5. Once, Sri KrishNan took arjun and a Brahmin in His chariot to Parama Padham.

Within a day and in one muhUrtha nEram, He drove the chariot to Sri Vaikuntam

and brought the brahmin’s sons from there in their physical bodies back to the

earth. Such Sarva shakthan- Emperumaan Sri KrishNan – since, I have taken Him

as my refuge, I have become “No-Problem” man.


TIME TRAVEL by TWO TAMIL SAINTS | Tamil and Vedas

tamilandvedas.com › 2012/02/14 › time-travel-by-two-…

  1.  
  2.  

14 Feb 2012 – Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. TIME TRAVEL by TWO TAMIL SAINTS.


காலப் பயணம் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › காலப…

  1.  

24 Sep 2012 – Pisces constellation that includes REVATHI star. நட்சத்திர அதிசயங்கள். இந்த கட்டுரை தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம்.27 …


காலம் (Concept of Time) | Tamil and Vedas

tamilandvedas.com › tag › காலம…

30 Apr 2018 – 15 Mar 2018 – நமக்கு ஒரு காலம், பித்ருக்களுக்கு ஒரு காலக் கணக்கு, … காலப் பயணம் | Tamil and Vedas · https://tamilandvedas.com/tag/காலப்பயணம்/.


வெளி உலகவாசிகள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › வெள…

  1.  

T

https://tamilandvedas.com/tag/காலப்பயணம்/. Pisces constellation that includes REVATHI star. நட்சத்திர அதிசயங்கள். இந்த கட்டுரை தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து …


காலமென்பது என்ன? | Tamil and Vedas

tamilandvedas.com › tag › கால…

  1.  

19 May 2015 – சம்பந்தரும் சுந்தரரும் காலப் பயணம் செய்து எப்போதோ இறந்த இருவரை உயிர்ப்பித்தனர் என்று முன்னரே ஒரு கட்டுரையில் …


வேத கால மக்களுக்கு வெளி …

tamilandvedas.com › 2020/06/23

  1.  

23 Jun 2020 – வேத கால மக்களுக்கு வெளி உலகவாசிகள் பற்றித் தெரியும்? … மாதலி தேரில் அர்ஜுனன் விண்வெளிப் பயணம் செய்தபோது … 30 Apr 2018 – வெளி உலகவாசிகள் (E.T.), காலம் (Concept of Time) பற்றி கம்பன்! … https://tamilandvedas.com/tag/வெளி-உலகவாசிகள்/ …


சேவலிடம் பாடம் கற்போம்! POST No. 2339 …

tamilandvedas.com › 2015/11/18

  1.  

18 Nov 2015 – … சம்ஹிதையில் ஸ்லோகம் இருக்கிறது; ஊழல் பற்றி கௌடில்யர் அர்த்தசாஸ்திரத்தில் ஸ்லோகம் இருக்கிறது; காலப் பயணம் பற்றி …


மஹாபாரதம் உண்மையே | Tamil and Vedas

tamilandvedas.com › tag › மஹா…

– 

23 May 2017 – காலப் பயணம் (Time Travel), சோதனைக் குழாய் குழந்தை, ஒட்டிப் பிறந்த சயாமிய … ஆனால் காலப் போக்கில் அவை மறைந்துவிட்டன. Amy and Chris …


A blog exploring themes in Tamil and vedic … – Tamil and Vedas

tamilandvedas.com › page › archives…

30 Apr 2018 – கால நேரம் பற்றிய அற்புத அறிவு … 15 Mar 2018 – நமக்கு ஒரு காலம், பித்ருக்களுக்கு ஒரு காலக் … https://tamilandvedas.com/tag/காலப்பயணம்/.


கருந்துளைகள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › கருந்…

  1.  

9 Aug 2016 – (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … காலப் பயணம் சாத்தியமே; காலத்தில் முன்னும் பின்னும் பயணம் செய்த செய்திகள் …


தமிழ் பண்பாடு | Tamil and Vedas | Page 113

tamilandvedas.com › https: › category

5 May 2018 – 15 Mar 2018 – நமக்கு ஒரு காலம், பித்ருக்களுக்கு ஒரு காலக் கணக்கு, … காலப் பயணம் | Tamil and Vedas · https://tamilandvedas.com/tag/காலப்பயணம்/.

—subham—