

Compiled by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 3 SEPTEMBER 2019
British Summer Time uploaded in London –19-43
Post No. 6974
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
இந்து மதக் கதைகளை எல்லாம் ‘காப்பி‘ அடித்து, ஜாதகக் கதைகளில் புத்த மதக் கதைகளாக்கிவிட்டனர். அதில் ராமாயணம், மஹாபாரதம் கூடப் போதிசத்துவ அவதாரத்தில் வந்ததாகக் கூறப்படும். இதே போல விஷ்ணு பத்து முதல் 24 அவதாரங்கள் எடுத்ததாக நமது புராணங்கள் கூறுவதற்குப் போட்டியாக போதிசத்துவர் நூற்றுக்கணக்கான அவதாரங்கள் எடுத்ததாக எழுதிவிட்டனர். இது போல மற்றொரு ‘காப்பி‘ அடித்த விஷயம் மஹாபாரதத்திலுள்ள யக்ஷப் பிரஸ்னம் ஆகும். தண்ணீர் எடுக்க குளத்துக்குப் போன 4 பாண்டவர்கள் இறந்துபோனவுடன், ஐந்தாவதாகப் போன தர்மபுத்திரன் (யுதிஷ்டிரன்) யக்ஷனின் கேள்விகளுக்குச் சரியான பதில்களைக் கூறுகிறான். இது மிக நீண்ட கேள்வி-பதில் பகுதி. இது மஹா பாரதத்தில் மிகவும் புகழ்பெற்ற சம்பவம். ஒவ்வொரு பதிலும் ஒரு பொன்மொழி.
இந்த மஹாபாரத யக்ஷப் பிரஸ்னத்துக்குப் போட்டியாக உள்ள பகுதியில் புத்தரை ஒரு தேவதை கேள்வி கேட்டதாகவும் அதற்கு அவர் பதில் சொன்னதாகவும் எழுதிவிட்டனர். புத்தர் உயிர்வாழ்ந்தவரை இப்படிச் செய்யவில்லை. அவர் இறந்தபின்னர் இப்படிக் கதை கட்டிவிட்டனர்.
இதோ புத்த மத யக்ஷப் பிரஸ்னம். இது மலேயாவில் இருந்து 1958ம் ஆண்டு வெளியான நவரசம் பகுதியில் வெளியானது-

xxx
பாரதியாரும் தமிழ் இசையும்
தமிழிசை இயக்காத்தை 1940களில் செட்டி நாட்டரசர் அண்ணாமலை செட்டியார் முறையாகத் துவக்கிவைத்தார். அதற்கு முன்னதாகவே இது பற்றி கல்கி ரா கிருஷ்ணமூர்த்தி எழுதி வந்தார். ஆனால் அவர்களுக்கும் முன்னதாக பாரதியார் தமிழில் கீர்த்தனைகள் பாடுவது பற்றியும், மற்ற மொழி பாட்டுகளைப் பொருள் தெரிந்து பாடுவதையும் ஆதரித்து எழுதி வாந்தார். புத்தரின் கேள்வி பதிலுக்குக் கீழே (1958ல்) பாரதியாரின் மேற்கோளைப் படியுங்கள்.

Tags- புத்தரின் கேள்வி-பதில்
பாரதி, தமிழிசை

–subham–