ஆரிய பாரதி வாழ்க!

mahakavi

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1279; தேதி: 10 செப்டம்பர் 2014

தமிழுக்கு உயிர் கொடுத்த, தமிழால் உயிர்பெற்ற பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் 11. அந்தக் கவிஞன் பெயரைச் சொன்னாலேயே போதும். நம் நாவில் தமிழ் பொங்கித் ததும்பும். உடல் முழுதும் சக்தி பாயும்.

சீரிய சிந்தனை!
நேரிய பார்வை!
வீரிய உணர்வு!
பாரிய நோக்கு!
கூரிய மதி படைத்த பாரதியின்
ஆரியப் பாடல்களைக் காண்போமா?

ஆரிய என்றால் ‘பண்பாடுமிக்கவர்’ என்று பொருள். இது பிராக்ருதத்தில் ‘அஜ்ஜ’ என்று மருவி தமிழில் ‘ஐயர்’ என்று புழங்கியது. ஐயர் என்றால் குணத்தால், ஒழுக்கத்தால் உயர்ந்தவர் என்பது ‘பழம் பொருள்’.

தேசிய கவி சுப்பிரமணிய பாரதி 1921 ஆம் ஆண்டிலேயே இறந்து விட்டார். அப்பொழுதுதான் சிந்து சமவெளி நாகரீக அகழ்வாராய்ச்சி துவங்கியது. உலகிற்கு ஹரப்பா நாகரீகம் என்று ஒன்று இருப்பதே அப்போது தெரியாது. ஆனால் ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கையை அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளைக்காரர்கள் புகுத்திவிட்டனர். சுவாமி விவேகாநந்தர் போன்றோர் இந்தக் கொள்கையை எள்ளி நகை ஆடியதே இதற்குச் சான்று.

பாரதிக்கு இதில் நம்பிக்கை இல்லை என்பதை அவர் பாடல்கள் மூலம் காட்டிவிட்டார். இக்கொள்கையைப் பற்றிப் பாடாமல், பரிகசிக்காமல் நாசசூக்காக — வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல — ஆரிய என்ற சொல்லை ஏராளமான பாடல்களில் பயன்படுத்தி அதன் உண்மைப் பொருளைக் காட்டிவிட்டார். அவர் பாடல்களில் எங்கு எங்கெல்லாம் ஆரிய என்ற சொல் வருகிறதோ அதுதான் வேதத்திலும், இதிஹாசத்திலும் கையாளப்பட்ட பொருள். வடமொழி நூல்களில் கணவனை, மனைவி “ஏ ஆர்ய!” என்று அழைப்பார். “ஐயா, மதிப்புக்குரியவரே, உயர் குணச் செம்மலே” என்பது அதன் பொருள். இன வெறிப் பொருளைப் புகுத்தியது வெள்ளைத்தோல் “அறிஞர்”களே.

mahakavi2

இதோ சில பாரதி பாடல்கள்:
1.தமிழ்த் தாய் பாடலில்……………..
ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தெ – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்

2.ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்

ஆரிய நாடு எது?
3.பாரத தேவியின் திருத் தசாங்கம் பாடலில்…….
பேரிமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும்
ஆரிய நாடென்றே அறி

ஆரியர் யார்?

4.சங்கு என்ற பாடலில்………………
பொய்யுறு மாயையை பொய்யெனக் கொண்டு
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுறவின்றிக் களித்திருப்பவராவர்
ஆரியராம் என்று இங்கூதேடா சங்கம்!

5.பாஞ்சாலி சபதப் பாடலில்…………………
ஆரிய வேல் மறவர் – புவி
யாளுமோர் கடுந்தொழில் இனிதுணர்ந்தோர்
சீரியல் மதிமுகத்தார் – மணித்
தேனிதழ் அமுதென நுகர்ந்திடுவார்

6.வாழிய செந்தமிழ் பாடலில்…………………..
அறம் வளர்ந்திடுக ! மறம் மடிவுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!

maha3

பாரத மாதா= ஆரிய மாதா
7.பாரத மாதா என்ற பாடலில்…………………….
முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருட வில்? – எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்

சித்தமயம் இவ்வுலகம் உறுதி நம்
சித்தத்தில் ஓங்கிவிட்டால் – துன்பம்
அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல்
ஆரிய ராணியின் சொல்

8.தாயின் மணிக்கொடி என்ற பாடலில்………………….
அணி அணியாயவர் நிற்கும் – இந்த
ஆரியக் காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ?

bharathy and Chelamma

9.சத்ரபதி சிவாஜி என்ற பாடலில்…………… (மொகலாயர் பற்றி)
பாரதப் பெரும்பெயர் பழிப்பெயராக்கினர்
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக்கு அடிமைகளாயினர்

ஆரிய! நீதி நீ அறிகிலை போலும்!
பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்
பெரும்பதத் தடையுமாம் பெண்மை எங்கெய்தினை?
பேடிமை அகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
ஈடிலாப் புகழினோய் எழுகவோ எழுக
(பகவத் கீதையில் கண்ணன் சொன்ன பகுதி)

bharati kutty

10.லாஜபதிராயின் பிரலாபம் என்ற பாடலில்………………..
சீக்கரெனும் எங்கள் விறற் சிங்கங்கள் வாழ்தருநல்
ஆக்கமுயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன்னாடு
ஆரியர் பாழாகா தருமறையின் உண்மை தந்த
சீரியர் மெய்ஞான தயானந்தர் திருநாடு

(சீக்கியரை சிங்கங்கள் என்றும், பஞ்சாபில் ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதி வேதத்தின் உண்மைப் பொருளை தந்தார் என்பதையும் பாராட்டும் பாடல் இது)

இவ்வாறு பாரதி பாடல் முழுதும் ‘ஆரிய’ என்ற சொல்லை அதன் உண்மையான ,மேன்மைப் பொருளில் பயன் படுத்தியுள்ளார். ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கைக்கு பாரதி கொடுத்த சரியான அடி இது என்றால் எதிர்ப்பொரும் உளரோ?

மேன்மை கொள் ஆரிய நீதி விளங்குக உலகமெலாம்!!

kutti bharathi

என்னுடைய முந்தைய பாரதி பற்றிய கட்டுரைகள்:
1.மனம் ஒரு பெண், மனம் ஒரு புலி (Posted on 17-2-2014)
2.Quotes from the Greatest Tamil Poet Bharati (11-12-2013)
3.வாழ்க்கையில் வெற்றி பெற பாரதி அட்வைஸ் 10-12-2013
4.பாரதியுடன் 60 வினாடி பேட்டி (16-1-2012 & 10-9-2014)
5.பாரதியின் பேராசை (Posted on 27-12-2012)
6.பாரதி பாட்டில் பகவத் கீதை (Posted on 10-12-2012)
7.பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர் (Posted on 29-11- 2012)
8.சொல்லில் உயர்வு தமிச் சொல்லே (Posted on 10-9-2012)
9.பாரதி பாட்டில் பழமொழிகள் (Posted on 25-6-2012)
10.உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா? (27-3-2014)
11.காலா என் காலருகே வாடா! ஞானிகளின் ஞானத் திமிர் (23-3-2014)

எனது சகோதரர் ச.நாகராஜன் எழுதியவை
1.பாரதி தரிசனம் (Posted on 10-12-2013)
2.பாரதி தரிசனம்– பகுதி 2 ( Posted on 12-12-2013)

சிலப்பதிகாரப் பொன் மொழிகள் – Part 2

16DFR_KANNAKI3_1894936g

தொகுத்தவர் – லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்—1197; தேதி ஜூலை 27, 2014

ஆகஸ்ட் மாத (சிந்தனைச் சிற்பிகள்) காலண்டரில் —முக்கிய “சிலப்பதிகாரப் பபாடல்கள் 31” — என்று முதல் பகுதி ஜூலை 26ம் தேதி வெளி வந்துள்ளது. இது இரண்டாவது பகுதி. சில பாடல்கள் இதில் மீண்டும் முழு வடிவத்தில் இருக்கும்.

32.சிலப்பதிகாரத்தின் 3 முக்கிய கருத்துக்கள்:–
அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதூஉம் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்’ என
–சிலப்பதிகாரப் பதிகம்

33.இளங்கோ அடிகளின் அறிவுரை:–
“பரிவும் இடுக்கணும், பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்
செய்நன்றி கொல்லன்மின், தீ நட்பு இகழ்மின்
பொய்க்கரி போகன்மின், பொருள்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்தும் பெயர்மின்
பிறமனை அஞ்சுமின், பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின், அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்
மல்லன் மாஞாலத்து வாழ்வீர் ஈங்கென்”
(வரந்தரு காதை)

34.கண்ணகி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வந்த மன்னர்கள்:–
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்
எந்நாட்டு ஆங்கண் இமைய வரம்பனின்
நன்னாள் செய்த நாளனி வேள்வியில் –(வரந்தரு காதை)

35.நல்லது செய்தால் சுவர்க்கம்:–
நற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்
அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்
அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்
பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்
புதுவதன்றே ————(வரந்தரு காதை)

36.தமிழர் போற்றும் இமயமும் கங்கையும்
முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ
வடபேர் இமய மலையிற் பிறந்து
கடுவரல் கங்கைப் புனலாடிப் போந்த —- (வாழ்த்துக் காதை)

37.நல்லாட்சி இருந்தால் கற்பு நிலைக்கும்:–
அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது,
பெரும்பெயர்ப் பெண்டிற்குக் கற்புச் சிறவாது என
பண்டையோர் உரைத்த தண்தமிழ் நல்லுரை —- (நடுநற் காதை)

tm_hindu-indian-jain-sculpture

38.ஒன்றே செய்க, நன்றே செய்க, இன்றே செய்க:–
“நாளைச் செய்குவம் அறம் எனின், இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்” — (நடுநற் காதை)

39.யவனர் நாடு வரை சேரன் ஆட்சி
வன்சொல் யவனர் வளநாடு ஆண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோ ஆயினும் — (நடுநற் காதை)

40.மறுபிறப்பில் விலங்காகவும் வாய்ப்பு!!!
விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்;
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய்; விலங்கின் எய்தினும் எய்தும்— (நடுநற் காதை)

41.ஆயிரம் பொற்கொல்லர் பலி !! கண்ணகிக்கு காணிக்கை!!!
கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன்
பொன் தொழில் கொல்லர் ஈர் ஐஞ் ஞூற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு
ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி
உரை செல வெறுத்த மதுரை மூதூர் – நீர்ப்படைக் காதை

42.சூரியனின் ஒரு சக்கரத்தேர்
ஒருதனி ஆழிக் கடவுள் தேர்மிசைக்
காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன் என
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன் – நீர்ப்படைக் காதை

silambu_for_dance

43.தமிழைத் திட்டிய கனக விசயன் கைது!!
வாய்வாள் ஆண்மையின், வண்தமிழ் இகழ்ந்த
காய்வேல் தடக்கைக் கனகனும் விசயனும்
ஐம்பத்திருவர் கடுந்தேராளரொடு
செங்குட்டுவன் தன் சினவலைப் படுதலும் – கால்கோட்காதை

44.தமிழர்களை எதிர்த்த சில்லறைப் பயல்கள்
உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன்
சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன்
வடதிசை மருங்கின் மன்னவர் எல்லாம்
தென் தமிழ் ஆற்றல் காண்குதும் யாமென– கால்கோட்காதை

45.தமிழ் வீரம் அறியாமல் உளறிய கனக விசயர்கள்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு என – கால்கோட்காதை

46.ஜம்பூத்வீபத்தில் எங்கும் ஒற்றர் படை !!
நாவலம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா; — காட்சிக் காதை

47.சேரன் ஆட்சியில் நாடே அடக்கம்
கொங்கணர், கலிங்கர், கொடுங் கருநாடர்,
பங்களர், கங்கர், பல்வேற்கட்டியர்,
வட ஆரியரொடு வண்தமிழ் மயக்கத்து, உன்
கடமலை வேடம் என் கட்புலம் பிரியாது — காட்சிக் காதை

48.நீ நினைத்தால் உன்னை எதிர்ப்பவர் யார்?
இமிழ் கடல் வேலியைத் தமிழ் நாடாக்கிய
இது நீ கருதினை ஆயின், ஏற்பவர்
முது நீர் உலகின் முழுதும் இல்லை;
இமயமால்வரைக்கு எம்கோன் செல்வது
கடவுள் எழுதவோர் கற்கே; — காட்சிக் காதை

49.சேரன் மனைவியுடன் இயற்கைச் சுற்றுலா (பிக்னிக்)
துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் மலை காண்குவம் என
பைந்தொடி ஆயமொடு பரந்தொருங்கு ஈண்டி
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன் — காட்சிக் காதை

anklets

50.மதுரைக்கு தீ வைத்த கண்னகியைப் பாடுவோம்:–
பாடுகம் வா, வாழி, தோழி! யாம் பாடுகம்
கோமுறை நீங்கக் கொடி மாடக் கூடலைத்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம் – குன்றக் குறவை
51.அறுபடை வீடு கொண்ட திரு முருகா!!
சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே —- குன்றக் குறவை

52.கண்ணகிக்கும், கோவலனுக்கும் ஸ்பெஷல் பிளேன்
நின்ற எல்லையுள், வானவரும்
நெடுமாரி மலர் பொழிந்து,
குன்றவரும் கண்டு நிற்பக்
கொழுநனொடு கொண்டு போயினார் ——- குன்றக் குறவை

53.விதி பலமானால் பழைய புண்யமும் உதவாது
உம்மை வினை வந்து உருத்த காலைச்
செம்மையிலோர்க்குச் செய்தவம் உதவாது — கட்டுரைக் காதை

54.மதுரை தீக்கிரையாகும் என்பது முன்னரே கூறப்பட்ட ஆருடம்
ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து
அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி உண்ண
உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும் — கட்டுரைக் காதை

55.சிபியும், மனு நீதிச் சோழனும் என் முன்னோர்
புறவு நிறை புக்கோன், கறவை முறை செய்தோன்
பூம்புனல் பழனப் புகார் நகர் வேந்தன் — கட்டுரைக் காதை

56.பாண்டிய நாட்டில் வேதம் மட்டுமே ஒலிக்கும்
மறை நா ஓசை அல்லது; யாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே— கட்டுரைக் காதை

57.அலைமகள்,மலைமகள்,கலைமகள்= மதுராபதி தெய்வம்
மா மகளும் நா மகளும் மா மயிலுடன் செற்றுகந்த
கோ மகளும் தான் படைத்த கொற்றத்தாள் நாம
முதிரா முலை குறைத்தாள்; முன்னரே வந்தாள்
மதுரா பதி என்னும் மாது —– அழற்படு காதை

58) 64 கலை தெரிந்தோர் வீதியும் எரிந்தது!
எண் நான்கு இரட்டி இருங்கலை பயின்ற
பண் இயல் மடந்தையர் பயங் கெழு வீதி—– அழற்படு காதை

59.ஒரு முலையால் மதுரை எரிந்தது!
இடமுலை கையால் திருகி, மதுரை
வலமுறை மும்முறை வாரா, அலமந்து,
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்– வஞ்சின மாலை

29frSilappadikaram__736602g

60.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் காண்குறூ உம் பெற்றிய – காண்– வஞ்சின மாலை

61.பெண்கள் பேதைகள்: கண்ணகி
விழுமிய
பெண்ணறிவு என்பது பேதைமைத்தே என்றுரைத்த
நுண்ணறிவினோர் நோக்கம்; நொக்காதே எண்ணிலேன்– வஞ்சின மாலை

62.நான் தப்பு செய்துவிட்டேன்
பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்— வழக்குரை காதை

63.பாண்டிமாதேவி வருத்தம்!
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று
இணையடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி— வழக்குரை காதை

64.மதுரையில் தெய்வம் இருக்கிறதா? கண்ணகி கேள்வி
தெய்வமும் உண்டு கொல்? தெய்வமும் உண்டு கொல்?
வைவாளின் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டு கொல்? தெய்வமும் உண்டு கொல்? — ஊர் சூழ் வரி

65.இது என்ன? புது தெய்வம்?
செம்பொற் சிலம்பு ஒன்று கை ஏந்தி, நம் பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்தது! இதுவென் கொல்? – ஊர் சூழ் வரி

66.யாதவ மகளிர் பாடிய கண்னன் பாட்டு
கொல்லையெம் சாரல் குருந்தொசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
முல்லையன் தீங்குழல் கேளாமோ, தோழீ
தொழுநைத் துறைவனோடு ஆடிய பின்னை –
அணி நிரம் பாடுகேம் யாம் — ஆய்ச்சியர் குரவை

Puhar-ILango
Image of Ilango

67.திருடர்களுக்கு தெரிந்த எட்டு விஷயங்கள்
மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம்,
தந்திரம், இடனே, காலம், கருவி, என்று
எட்டுடன் அன்றே – இழுக்கு உடை மரபின்
கட்டுண் மாக்கள் துணை எனத் திரிவது? (கொலைக்களக் காதை)

68.கற்றறிந்தோர் வினைப்பயன் பற்றி கவலைப்படார்
ஒய்யா வினைப் பயன் உண்ணுங் காலை
கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள் – ஊர்காண் காதை
69.மாதவியின் மன்னிப்புக் கடிதம்
அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனங் கொளல் வேண்டும்
குரவர் பணி அன்றியும், குலப் பிறப்பு ஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி — புறஞ்சேரி இறுத்த காதை

70.கோவலன் போன புகார் = ராமன் வெளியேரிய அயோத்தி
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல
பெரும்பெயர் மூதூர் பெரும்பேது உற்றதும் — புறஞ்சேரி இறுத்த காதை

71.மறவரின் துர்க்கை வழிபாடு
வம்பலர் பல்கி, வழியும் வளம்பட;
அம்புடை வல்வில் எயின் கடன் உண்குவாய் –
சங்கரி, அந்தரி, நீலி, சடைமுடிச்
எங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்! – வேட்டுவ வரி

72.சூரியனுடன் சுற்றும் குள்ள வாலகீய முனிவர்
சுடர்தரு திரிதரு முனிவரும் அமரரும்
இடர்கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்’
அடல்வலி எயினர் நினடிதொடு
மிடறுகு குருதி; கொள்விறல்தரு விலையே — வேட்டுவ வரி

73.வேடர்களின் மஹிஷாசுரமர்த்தனி வழிபாடு
ஆனித்தோல் போர்த்துப் புலியின் உரிஉடுத்துத்
கானத்து எருமைக் கருந்தலை மேல் நின்றாயால் –
வானோர் வணங்க, மறைமேல் மறையாகி,
ஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்!

74.சமணப் பெண்மணியுடன் துர்க்கை கோவிலில் அடைக்கலம்
கழிபோர் ஆண்மைக் கடன் பார்த்து இருக்கும்
விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை
மையறு சிறப்பின் வான நாடி
ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் – காடுகாண் காதை

75.கணிகையர் என்றால் எல்லோருக்கும் வெறுப்பா?
மேலோர் ஆயினும் நூலோர் ஆயினும்
பால்வகை தெரிந்த பகுதியோர் ஆயினும்
பிணி எனக் கொண்டு, பிறக்கிட்டு ஒழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போனும் என– காடுகாண் காதை

pumpukar

76.எட்டெழுத்து, ஐந்தெழுத்து மந்திரம்
அருமறை மருங்கின், ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்
ஒருமுறையாக உளம் கொண்டு ஓதி — காடுகாண் காதை

77.தெய்வக் காவிரி
தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்,
பொய்யா வானம்புதுப்புனல் பொழிதலும் — நாடுகாண் காதை

78.சமண நாமாவளி
தரும முதல்வன், தலைவன், தருமன்
பொருளன், புனிதன், புராணன், புலவன்,
சினவரன், தேவன், சிவகதி நாயகன்— நாடுகாண் காதை

79.சமணர் பிரார்த்தனை
மொழிப் பொருள் தெய்வம் வழித்துணை ஆக எனப்
பழிப்புஅரும் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர் — நாடுகாண் காதை

80.மதுரைக்கு போக ஆசை: கோவலன்
தென் தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்
போதுவால் யானும்;போதுமின்— நாடுகாண் காதை

81.திருவரங்கநாதன் வலம் வந்து
அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம் செயக் கழிந்து –— நாடுகாண் காதை

82.தீய கனவு: கண்ணகிக்கு அருகம் புல் பரிகாரம்
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி;
அறுகு, சிறு பூளை, நெல்லொடு தூஉய்ச் சென்று;
பெறுக கணவனோடு என்றாள் – கனாத்திறம் உரைத்த காதை

Riverkaveri

83.கங்கைக்கும் மேலான காவிரி
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் — அது ஒச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி – கானல் வரி

84.நாரதன் வீணை, இந்திரன், ஊர்வசி சாபம்
நாரதன் வீணை நயம் தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய
நாடகம் உருப்பசி நல்காள் ஆகி
மங்கலம் இழப்ப வீணை– கடல் ஆடு காதை

85.பாவம் செய்வோர் பட்டியல்; பூதம் நையப் புடைக்கும்
தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம் மறைந்து ஒழுகும் அலவற் பெண்டிர்
அறைபோகு அமைச்சர், பிறர்மனை நயப்போர்
பொய்க்கரியாளர், புறங்கூற்றாளர், என்
கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் எனக்– இந்திர விழவு ஊரெடுத்த காதை

86) 1008 பவுன் தங்க மாலை வாங்கினால் மாதவி பரிசு!!
நூறு பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த
வீறு உயர் பசும்பொன் பெறுவது இம்மாலை
மாலி வங்குநர் சாலும் நம் கொடிக்கு என – அரங்கேற்றுக் காதை

silambu tamil book

87.தமிழகம்
இமிழ்கடல் வரைப்பின் தமிழகம் அறியத்
தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி
வேத்து இயல், பொது இயல் , என்று இரு திறத்தின்
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து–அரங்கேற்றுக் காதை

88.அகத்தியன் சாபம்
தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தனத்து, சாபம் நீங்கிய
மலைப்பு – அருஞ் சிறப்பின் வானவர் மகளிர் — அரங்கேற்றுக் காதை

89.கண்ணகிக்கு கோவலன் புகழ்மாலை
மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே ! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வணிகன் பெரு மட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ் இருங் கூந்தல் தையல்! நின்னை! – மனையறம்படுத்தகாதை

90.பூம்புகார் மக்கள்= உத்தரகுரு புண்யவாசிகள்
அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்
உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய
கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும்
மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடிநிலத்து, இருந்துழி –மனையறம்படுத்தகாதை

91.திருமண வயது: கண்ணகி 12, கோவலன் 16 !!!
ஈறு ஆறு ஆண்டு அகைவையாள் (கண்ணகி)
ஈர் எட்டு ஆண்டு அகவையான் (கோவலன்) –மங்கல வாழ்த்துப் பாடல்

silambu book1

92.சந்திரன், சூரியன், வருணன் வாழ்க!!!
திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!
கொங்கு அலர்தார்ச் சென்னி வெண்குடை போன்று இவ்
அம் கண் உலகு அளித்தலான்

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு
மேரு வலந்திரிதலான்

மாமழை போற்றுதும் ! மாமழை போற்றுதும் !
நாம நீர் வேலி உலகிற்கு, அவன் அளி போல்
மேல் நின்று தான் சுரத்தலான் –மங்கல வாழ்த்துப் பாடல்

93.கண்ணாடியில் மலையையே காட்டலாம், சிலம்பில் எல்லாம் தெரியும்
ஆடிநல் நிழலின் நீடு இருங்குன்றம்
காட்டுவாற் போல் கருத்து வெளிப்படுத்து (நூற் கட்டுரை)

வாழ்க இளங்கோ !! வளர்க சிலம்பின் புகழ் !!!

–சுபம்–

அருமையான 54 புறநானூற்றுப் பொன்மொழிகள்!

tamil kurathi

Compiled by London Swaminathan
Post No.1088; Dated 6th June 2014.

TAMIL TREASURE TROVE: 54 GOLDEN SAYINGS FROM PURANANURU
1.வீரம்
மரப்புலி உடலின், மான்கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? ( மன்னன் வீரம்; ஔவையார், புறம் 90)

2.எலி போல திருடும் குணம் உடையாருடன் சேராதே
எலிமுயன்றனையராகி உள்ளதம்
வளன்வலியுறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லாகியரோ ! –(எலி போன்றோருடன் சேராதே; நல்லுருத்திரன், புறம் 190)

3.வழுதியின் ஆற்றல்: கடலுக்கு அணை போட முடியுமா?

நீர்மிகின் சிறையும் இல்லை; தீ மிகின்
மன்னுயிர் நிழற்றும் இலை;
வளிமிகின் வலியும் இல்லை! – (வழுதியின் ஆற்றல்; ஐயூர் முடவனார், புறம் 51)

4.முடிந்தால் சொல்லு, சொல்லியபின் செய்யாமல் இராதே
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல்லென மறுத்தலும், இரண்டும் வல்லே; – (முடிந்ததைச் சொல்லு; ஆவூர் மூலங்கிழார், புறம் 196

5.சான்றோர் சன்றோருடன் சேருவர்
என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே ! – (இனம் இனத்தோடு சேரும்; கண்ணகனார், புறம் 218)

6.மனைவி இறந்தாள், இன்னும் வாழ்கிறேனே! சீ,சீ!!
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என் இதன் பண்பே! –(மனைவி போயும் இன்னும் உயிர் இருக்கிறதே! சேரமான் மாக்கோதை, புறம் 245)

7.கணவனுடன் இறப்பதே மேல்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென, அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே! – ( கணவன் சிதைத்தீயில் குதிப்பது குளத்தில் குளிப்பது போல; பெருங்கோப்பெண்டு, புறம் 245)

tamil kottil

8.சீ! உன்னை விட்டால் கதி இல்லை என்று எண்ணாதே!
பெரிதே உலகம் பேணுநர் பலரே
மீளிமுன்பின் ஆளிபோல
உள்ளம் உள்ளவிந்தடங்காது வெள்ளென
நோவா தோன்வயின் திரங்கி
வாயா வன்கனிக்கு உலமருவாரே – ( உலகில் கொடுப்போர் அதிகம்; பெருஞ்சித்திரனார், புறம் 207)

9.நீ இருக்கும் வரை இனி நான் கூலிக்கு மாரடிக்கத் தேவை இல்லை
பீடில் மன்னர்ப் புகழ்ழ்ச்சி வேண்டி
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யாதாகின்று எம்சிறு செந்நாவே! – (வாரி வழங்குகிறாய் மற்றவர்களைப் பொய்யாகப் புகழத்தேவையே இல்லை; வன் பரணர், புறம் 148)

10. பார்! மற்றவன் கொடுத்த யானை!
இரவலர் புரவலர் நீயும் அல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையுமல்லர்
இரவலர் உண்மையும் காணினி இரவலர்க்கு
ஈவோருண்மையும் காணினி நின்னூர்க்
கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
நெடுநல் யானையெம் பரிசில்
கடுமான் தோன்றல் செல்வல் யானே- – (உலகில் கொடுப்போர் அதிகம்; பெருஞ்சித்திரனார், புறம் 162)

11.காசுக்காகப் பாடும் பரதேசி நான் அல்ல!
காணாது ஈத்தவிப் பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
தினையனைத்தாயினும் இனிதவர்
துணை யளவறிந்து நல்கினர் விடினே – (காசுக்காகப் பாடும் ஆள் அல்ல; பெருஞ்சித்திரனார், புறம் 208

12..உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே –
( உன்னை விடக் கொடுப்போர் உண்டு; அவ்வையார், புறம் 206)

13.பிச்சை எடுப்பது இழிந்ததுதான்
ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயெனென்றல் அதனினுமிழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேனென்றல் அதனினும் உயர்ந்தன்று – ( தா என்பது இழிந்தது; வன்பரணர், புறம் 204)

tamil curiosity

14.நல்லவரை மட்டுமே பாடுவேன்
பெரியவோதினும் சிறியவுணராப்
பீடின்று பெருகிய திருவிற்
பாடின் மன்னரைப் பாடன்மார் எமரே – (தகுதியற்றவரைப் பாடமாட்டோம்; மோசிகீரனார், புறம் 375)

15.புலவரைப் போய் உளவாளி என்று மடக்கிவிட்டாயே!
பெற்றது கொண்டு சுற்றமருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந்தன்றோ இன்றே – ( புலவர் வாழ்க்கை;கோவூர்க் கிழார் புறம் 47)

16.வரி விதிக்கும் போது அளவாக வரி விதி
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடியாத்து நாடு பெரிது நந்தும் – (வரி விதிப்பு; பிசிராந்தையார், புறம் 184)

17.கோள் சொல்பவரை நம்பாதே
வழிபடுவோரை வல்லறிதி நீயே
பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே
நீமெய்கண்ட குற்றம் காணின்
ஒப்ப நாடி அத்தகவொறுத்தி – (கோள் சொல்பவரை ஒதுக்கி, குற்றவாளிகளை தண்டிப்பாய்; ஊன்பொதி பசுங்குடையார், புறம் 10

18.உழவர்களைப் போற்று
நொதுமலாளர் பொது மொழி கொள்ளாது
பகடு புறந்தருநர் பாரமோம்பிக்
குடிபுறந் தருவை யாயினின்
அடிபுறந் தருகுவர் அடங்காதோரே – (உழவரை ஆதரி; வெள்ளைக்குடி நாகனார், புறம் 35)

19.பரித்ராணாய சாதூனாம் விநாசாய துஷ்க்ருதாம் (தீயோரைப் பொசுக்கு)
கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க் களித்தலும்
ஒடியா மரபின் மடிவிலையாகி
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லையென்பார்க்கு இனனாகிலியர்—( கொடியோரை அழி; நாத்திகரை நம்பாதே; முதுகண்ணன் சாத்தனார், புறம் 29)

20.இன்று போல் என்றும் ஒன்றுபட்டு வாழ்க
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும்
உடநிலை திரியீராயின் இமிழ்திரைப்
பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யாகாதே – (ஒற்றுமை வாழ்க; காரிக்கண்ணனார், புறம் 58)

21.நினைத்தேன், வந்தாய்! என்ன அதிசயம்!
வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுதின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே – பொத்தியார், புறம் 217

22.குழல் இனிது, யாழ் இனிது என்பர், குழந்தை இல்லார்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறுமக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே! – (குழந்தைகள் இல்லாத வாழ்வு இன்பம் தராது; அறிவுடைநம்பி, புறம் 188).

tamil lovers

23.ஈமக்கடன் நிகழ்த்த புதல்வன் பெற்ற பின் என்னிடம் வா!
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென
என்னிவணொழித்த அன்பிலாள
எண்ணாதிருக்குவை யல்லை
என்னிடம் யாதுமற் றிசைவெய் யோயே பொத்தியார், புறம் 222

24.தைரியம் இருந்தால் போர் செய் அல்லது கோட்டையைத் திற
அறவையாயின் நினதெனத் திறத்தல்
மறவையாயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லையாகி
திறவா தடைத்த திண்ணிலைக் கதவின்
நீண்மதில் ஒருசிறை யொடுங்குதல்
நாணுத் தகவுடைத்துக் காணுங்காலே – புறம் 44, கோவூர்க் கிழார்

kannaki cooking

Following Thirty Golden sayings were already posted under June Calendar in Tamil

புறநானூற்றுப்பாடல்களில் இருந்து எடுக்கப்பட்ட 30 அருமையான மேற்கோள்கள் இந்த மாத காலண்டரை அலங்கரிக்கின்றன. சுருக்கமான பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1 ஞாயிற்றுக் கிழமை
நிலம் பெயரினும் நின்சொற் பெயரல் (உண்மையே கொள்கை – இரும்பிடர்த்தலையார், புறம் 3).

ஜூன் 2 திங்கட்கிழமை
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா
நிரயம் கொள்பவரோடு ஒன்றாது, காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
– — (கெட்டவருடன் சேராதே; நரிவெரூஉத் தலையார், புறம் 5)

ஜூன் 3 செவ்வாய்க் கிழமை
நீரின்றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – (அன்னதானமே சிறந்தது; குடபுலவியனார், புறம் 18).

ஜூன் 4 புதன் கிழமை
இகழுநர் இசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே – (உன்னை மதியாதோர் வீழ்க; நீ வாழ்க; ஐயூர் மூலங்கிழார். புறம் 21.)

ஜூன் 5 வியாழக் கிழமை
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப – (வல்லவரே வாழ்வர்; மாங்குடி கிழார், புறம் 24)

ஜூன் 6 வெள்ளிக்கிழமை
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வானவூர்தி
எய்துப,என்ப (புகழுடையோர் சுவர்க்கம் புகுவர்; முதுகண்ணன் சாத்தனார், புறம் 27)

ஜூன் 7 சனிக்கிழமை
தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் , பிறத்தல் உண்மையும்
அறியாதோரை அறியக்காட்டி – (ஜனன,மரண சுழற்சியை விளக்குவாய்; முதுகண்ணன் சாத்தனார் புறம் 27)

bow 3
Chera Emblem

ஜூன் 8
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகுமதி — (எவர் வந்தாலும் உபசரி; உறையூர் முதுகண்ணன் சாத்தனார், புறம் 27)

ஜூன் 9
அதனால் அறமும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம் – (தர்ம, அர்த்த, காம ஆகிய மூன்றில் நிற்பவன் நீ; முதுகண்ணன் சாத்தனார், புறம் 28)

ஜூன் 10
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் – (தர்ம, அர்த்த, காம ஆகிய மூன்றில் தர்மமே பெரிது; கோவூர் கிழார், புறம் 31)

ஜூன் 11
நிலம்புடை பெயர்வதாயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் – (நன்றி மறக்காதே; ஆலத்தூர் கிழார், புறம் 34)

ஜூன் 12
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே! – (உழவே பெரிது; வெள்ளைக்குடி நாகனார், புறம் 35)

ஜூன் 13
என்றும் இன்சொல் எண்பதத்தை ஆகுமதி! – (இன்சொல் பேசு; ஆவூர் மூலங்கிழார் புறம் 40)

fish 1
Pandya Emblem

ஜூன் 14
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே –( நன்றே செய்க; நரிவெரூஉத் தலையார், புறம் 195)

ஜூன் 15
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
அதனால் நமரெனக் கோல் கோடாது
பிறரெனக் குணங்கொல்லாது – – (தர்மமே முக்கியம்; மருதன் இளநாகனார், புறம் 55)

ஜூன் 16
புலிசேர்ந்து போகிய கள்ளலை போல
ஈன்ற வயிரோ இதுவே,
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே! – (நான் வீரத் தாய்; காவற்பெண்டு, புறம் 86)

ஜூன் 17
—-தந்தயர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை! – (குழந்தை மழலை கடவுள் அருளியது; ஔவையார், புறம் 92)

ஜூன் 18
புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா – (பத்ரம், புஷ்பம் எதையும் கடவுள் ஏற்பார்; கபிலர், புறம் 106)
tiger drawing 1
Choza Emblem

ஜூன் 19
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறநிலை வாணிகன் ஆய் அல்லன்! – ( மறு ஜன்மத்தில் பலனை எதிர்பார்த்து அல்ல; முடமோசியார், புறம் 134)

ஜூன் 20
வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன்; மெய் கூறுவல்! – (சோற்றுக்காக பொய் சொல்லேன்; மருதன் இளநாகனார், புறம் 139)

ஜூன் 21
‘எத்துணை ஆயினும் ஈதல் நன்று’ என,
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர் வறுமை நோக்கின்று, அவன் கைவண்மையே—
(மறு ஜன்மத்தில் பலனை எதிர்பார்த்து அல்ல; பரணர், புறம் 141)

ஜூன் 22
யாதும் ஊரே, யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே !
(- எல்லோரும் சகோதரர்; கணியன் பூங்குன்றனார், புறம் 192)

ஜூன் 23
உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே;
– (இந்திர லோக அமிர்தம் கிடைத்தாலும் பகுத்து உண்பர்; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

bow and arrow

ஜூன் 24
–பிறர் அஞ்சுவதஞ்சிப்
புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்
–( பழி என்றால் அதை வெறுப்பர்; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

ஜூன் 25
அன்ன மாட்சி அனையராகித்
தமக்கென முயலா நோந்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே !
–( பிறருக்காக் உழைப்பவர் உள்ளதால் உலகம் நிலைத்து இருக்கிறது; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

ஜூன் 26
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
– (கல்வி கற்பது மிக முக்கியம்; ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், – புறம் 183).

thathrupam pen

ஜூன் 27
நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்! – (நல்லாட்சி மிகவும் முக்கியம்; மோசிகீரனார், புறம் 186).

ஜூன் 28
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்;
அவ்வழி நல்லை வாழிய நிலனே! – (ராமன் இருக்கும் இடம் அயோத்தி; அவ்வையார், புறம் 187)

ஜூன் 29
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே ! (அடிப்படைத் தேவை; நக்கீரர், புறம் 189)

ஜூன் 30
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே – (தானமே சிறந்தது; நக்கீரர், புறம் 189).

Contact swami_48@yahoo.com

சிந்தனைச் சிற்பிகள் காலண்டர் (ஜய- ஜூன் 2014)

tamil puu parithal

Post No. 1073; Date: 30 May 2014.
தயாரித்தவர்: லண்டன் சுவாமிநாதன் (C)

புறநானூற்றுப்பாடல்களில் இருந்து எடுக்கப்பட்ட 30 அருமையான மேற்கோள்கள் இந்த மாத காலண்டரை அலங்கரிக்கின்றன. சுருக்கமான பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாத முக்கிய நாட்கள்: ஜூன் 11 (புதன்) —வைகாசி விசாகம்;
பௌர்ணமி:– 13, ஏகாதசி:–9 & 23, அமாவாசை:– 26 சுபமுகூர்த்த நாட்கள்:– 2,8,18,30.

ஜூன் 1 ஞாயிற்றுக் கிழமை
நிலம் பெயரினும் நின்சொற் பெயரல் (உண்மையே கொள்கை – இரும்பிடர்த்தலையார், புறம் 3).

ஜூன் 2 திங்கட்கிழமை
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா
நிரயம் கொள்பவரோடு ஒன்றாது, காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
– — (கெட்டவருடன் சேராதே; நரிவெரூஉத் தலையார், புறம் 5)

ஜூன் 3 செவ்வாய்க் கிழமை
நீரின்றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – (அன்னதானமே சிறந்தது; குடபுலவியனார், புறம் 18).

ஜூன் 4 புதன் கிழமை
இகழுநர் இசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே – (ஊனை மதியாதோர் வீழ்க; நீ வாழ்க; ஐயூர் மூலங்கிழார். புறம் 21.)

ஜூன் 5 வியாழக் கிழமை
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப – (வல்லவரே வாழ்வர்; மாங்குடி கிழார், புறம் 24)

ஜூன் 6 வெள்ளிக்கிழமை
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வானவூர்தி
எய்துப,என்ப (புகழுடையோர் சுவர்க்கம் புகுவர்; முதுகண்ணன் சாத்தனார், புறம் 27)

ஜூன் 7 சனிக்கிழமை
தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் , பிறத்தல் உண்மையும்
அறியாதோரை அறியக்காட்டி – (ஜனன,மரண சுழற்சியை விளக்குவாய்; முதுகண்ணன் சாத்தனார் புறம் 27)
karikalan

ஜூன் 8
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகுமதி — (எவர் வந்தாலும் உபசரி; உறையூர் முதுகண்ணன் சாத்தனார், புறம் 27)

ஜூன் 9
அதனால் அறமும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம் – (தர்ம, அர்த்த, காம ஆகிய மூன்றில் நிற்பவன் நீ; முதுகண்ணன் சாத்தனார், புறம் 28)

ஜூன் 10
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் – (தர்ம, அர்த்த, காம ஆகிய மூன்றில் தர்மமே பெரிது; கோவூர் கிழார், புறம் 31)

ஜூன் 11
நிலம்புடை பெயர்வதாயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் – (நன்றி மறக்காதே; ஆலத்தூர் கிழார், புறம் 34)

ஜூன் 12
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே! – (உழவே பெரிது; வெள்ளைக்குடி நாகனார், புறம் 35)

ஜூன் 13
என்றும் இன்சொல் எண்பதத்தை ஆகுமதி! – (இன்சொல் பேசு; ஆவூர் மூலங்கிழார் புறம் 40)

ஜூன் 14
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே –( நன்றே செய்க; நரிவெரூஉத் தலையார், புறம் 195)

ஜூன் 15
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
அதனால் நமரெனக் கோல் கோடாது
பிறரெனக் குணங்கொல்லாது – – (தர்மமே முக்கியம்; மருதன் இளநாகனார், புறம் 55)

tamil veeran

ஜூன் 16
புலிசேர்ந்து போகிய கள்ளலை போல
ஈன்ற வயிரோ இதுவே,
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே! – (நான் வீரத் தாய்; காவற்பெண்டு, புறம் 86)

ஜூன் 17
—-தந்தயர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை! – (குழந்தை மழலை கடவுள் அருளியது; ஔவையார், புறம் 92)

ஜூன் 18
புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா – (பத்ரம், புஷ்பம் எதையும் கடவுள் ஏற்பார்; கபிலர், புறம் 106)

ஜூன் 19
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறநிலை வாணிகன் ஆய் அல்லன்! – ( மறு ஜன்மத்தில் பலனை எதிர்பார்த்து அல்ல; முடமோசியார், புறம் 134)

ஜூன் 20
வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன்; மெய் கூறுவல்! – (சோற்றுக்காக பொய் சொல்லேன்; மருதன் இளநாகனார், புறம் 139)

ஜூன் 21
‘எத்துணை ஆயினும் ஈதல் நன்று’ என,
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர் வறுமை நோக்கின்று, அவன் கைவண்மையே—
(மறு ஜன்மத்தில் பலனை எதிர்பார்த்து அல்ல; பரணர், புறம் 141)

ஜூன் 22
யாதும் ஊரே, யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
பெரியோரை விஅய்த்தும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே !
– எல்லோரும் சகோதரர்; கணியன் பூங்குன்றனார், புறம் 192

tamil curiosity

ஜூன் 23
உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே;
– (இந்திர லோக அமிர்தம் கிடைத்தாலும் பகுத்து உண்பர்; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

ஜூன் 24
–பிறர் அஞ்சுவதஞ்சிப்
புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்
–( பழி என்றால் அதை வெறுப்பர்; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

ஜூன் 25
அன்ன மாட்சி அனையராகித்
தமக்கென முயலா நோந்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே !
–( பிறருக்காக் உழைப்பவர் உள்ளதால் உலகம் நிலைத்து இருக்கிறது; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

ஜூன் 26
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
– (கல்வி கற்பது மிக முக்கியம்; ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், – புறம் 183).

ஜூன் 27
நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்! – (நல்லாட்சி மிகவும் முக்கியம்; மோசிகீரனார், புறம் 186).

ஜூன் 28
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்;
அவ்வழி நல்லை வாழிய நிலனே! – (ராமன் இருக்கும் இடம் அயோத்தி; அவ்வையார், புறம் 187)

ஜூன் 29
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே ! (அடிப்படைத் தேவை; நக்கீரர், புறம் 189)

ஜூன் 30
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே – (தானமே சிறந்தது; நக்கீரர், புறம் 189).

contact swami _ 48@yahoo.com