பிப்ரவரி 2016 (மன்மத தை-மாசி) காலண்டர்
Compiled by london swaminathan
Date: 31 January 2016
Post No. 2494
Time uploaded in London :– 12-31
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
இந்த மாதக் காலண்டரில் தமிழ் பற்றிய 29 மேற்கோள்கள் இடம்பெறுகின்றன.
திருவிழா நாட்கள்: 8-தை அமாவாசை, சீனப்புத்தாண்டு, 14-ரத சப்தமி, காதலர் தினம், 15-பீஷ்மாஷ்டமி, 22-மாசிமகம், கும்பகோணத்தில் மஹாமகம், பல கோவில்களில் தெப்பத் திருவிழா
அமாவாசை:8
பவுர்ணமி- 22
ஏகாதசி: 4, 18
சுபமுஹூர்த்த நாட்கள்- 3,5, 10, 12, 17, 19, 26.
பிப்ரவரி 1 திங்கட் கிழமை
மாண்ட வரதன் சரண் வணங்க எதிர்வந்தான்
நீண்ட தமிழால் உலகை நேமியில் அளந்தான் (கம்பன்)
பிப்ரவரி 2 செவ்வாய்க் கிழமை
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்
தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் (கம்பன்)
பிப்ரவரி 3 புதன் கிழமை
நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான்
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசைகொண்டான் (கம்பன்)
பிப்ரவரி 4 வியாழக் கிழமை
வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்- தொல்காப்பிய பாயிரம்-பன்பாரனார்
பிப்ரவரி 5 வெள்ளிக் கிழமை
சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம் – பாரதியார்
பிப்ரவரி 6 சனிக் கிழமை
ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்- பாரதியார்
பிப்ரவரி 7 ஞாயிற்றுக் கிழமை
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்- பாரதியார்
பிப்ரவரி 8 திங்கட் கிழமை
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே — பாரதியார்
பிப்ரவரி 9 செவ்வாய்க் கிழமை
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்- பாரதியார்
பிப்ரவரி 10 புதன் கிழமை
தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்
பிப்ரவரி 11 வியாழக் கிழமை
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திருநாடு– பாரதியார்
பிப்ரவரி 12 வெள்ளிக் கிழமை
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே- அதைத்
தொழுது படித்திடடி பாப்பா- – பாரதியார்
பிப்ரவரி 13 சனிக் கிழமை
இறவாய் தமிழோடிருப்பாய் நீ (பாரதியார்)
பிப்ரவரி 14 ஞாயிற்றுக் கிழமை
தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத் தமிழ் இன்பதமிழ் எங்கள் உயிருக்கு நேர் –பாரதிதாசன்
பிப்ரவரி 15 திங்கட் கிழமை
சென்றணைந்து மதுரையினில் திருந்திய நூற் சங்கத்துள்
அன்றிருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில் – – பெரியபுராணம்
பிப்ரவரி 16 செவ்வாய்க் கிழமை
தெள்ளித் தெளிக்கும் தமிழ்க் கடலின் அன்பினைந்திணை என எடுத்த இறைநூல்—மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
பிப்ரவரி 17 புதன் கிழமை
சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழறியும் பெருமாளே! தன்னைச் சேர்ந்தோர் நன்னிதியே! திருவாலவாயுடைய நாயகனே!—திருவிளையாடல் புராணம்
பிப்ரவரி 18 வியாழக் கிழமை
அறைகடல் வரைப்பில் பாடை அனைத்தும் வென்று ஆரியத்தொடு
உறழ்தரு தமிழ் தெய்வத்தை உள்நினைந்து ஏத்தல் செய்வாம்- சீகாளத்திப் புராணம்
பிப்ரவரி 19 வெள்ளிக் கிழமை
கடல் அமுது எடுத்துக் கரையில் வைத்ததுபோல்
பரப்பின் தமிழ்ச் சுவை திரட்டி மற்றவர்க்குத்
தெளிதரக் கொடுத்த தெந்தமிழ்க் கடவுள்- கல்லாடம்
பிப்ரவரி 20 சனிக் கிழமை
உலகு அளித்தனை தமிழ் தெளித்தனை
ஒன்றும் ஆயினை, பலவும் ஆயினை – காசிக் கலம்பகம்
பிப்ரவரி 21 ஞாயிற்றுக் கிழமை
தமிழால் வைதாரையும் வாழவைப்போன் – கந்தரலங்காரம்
பிப்ரவரி 22 திங்கட் கிழமை
பொழிந்து ஒழுகு முதுமறையின் சுவை கண்டும் புத்தமுதம்
வழிந்து ஒழுகும் தீந்தமிழின் மழலை செவி மடுத்தனையே – மதுரைக் கலம்பகம்
பிப்ரவரி 23 செவ்வாய்க் கிழமை
செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை
முத்தமிழும் நான் மறையும் ஆனான் — தேவாரம்
பிப்ரவரி 24 புதன் கிழமை
தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானை—திருவாசகம்
பிப்ரவரி 25 வியாழக் கிழமை
சாறு சுவைஎனக் கூறநின்று இட்ட
ஆரியம் தீந்தமிழ் என்மனார் அவையே
ஓரிருமகாரின் பேறுகண்டு அவற்றுள்
கன்னியந்தமிழின் செவ்வியைப் புணர்ந்தோய் – பொய்கையார்
பிப்ரவரி 26 வெள்ளிக் கிழமை
ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத்து இருள் அகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏணையது
தன்னேர் இலாத தமிழ் – தொல்லியல்
பிப்ரவரி 27 சனிக் கிழமை
இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்- பிங்கலந்தை
பிப்ரவரி 28 ஞாயிற்றுக் கிழமை
தமிழ் தழிய சாயலவர் – சிந்தாமணி
பிப்ரவரி 29 திங்கட் கிழமை
பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே இங்கு பரிசுரைப்பார்…………..திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்—ஆண்டாள்
–சுபம்–
You must be logged in to post a comment.