அவை, சட்டை, சட்ட – தமிழ் சொற்கள் இல்லை; சட்ட மேலவை என்பது ஸம்ஸ்க்ருதம் (Post.10656)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,656

Date uploaded in London – –    13 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 17

அதர்வண வேதத்தில் உள்ள 63 மந்திரங்கள் உடைய பூமி சூக்தத்தின் மேலும் சுவையான பகுதிகளைக் காண்போம்:-

பாடல்/ மந்திரம் 55

அதோ யத் தேவி ப்ரதமானா புரஸ்தாத் தேவைருக்தாத் வ்ய ஸர்போ மஹித்வம்

ஆத்வா ஸு பூதமவிசத்ததா நீம கல்பயதாஹா ப்ரதிசஸ்சதஸ்ரஹ -55

பாடல் 55 பொருள்

முன்னேறிச் செல்லும் தேவிய!  உன்னை தேவர்கள் போற்றி, உன் புகழை விரிவாக்கியுள்ளனர்.அதனால் உன்னுள் பெரும் புகழ் நுழைந்துவிட்டது நீயே நான்கு திசைகளையும் உனதாக்கிக் கொண்டுவிட்டாய் .

இதன் விளக்கம் – பூமாதேவியை தேவர்களும் புகழ்ந்து போற்றுகின்றனர். அதனால் அவள் புகழ் மேலோங்கி அவள் நாலு திசைகளிலும் கொடிகட்டிப் பறக்கிறாள் .

இதை பாரதியாரும் சத்ரபதி  சிவாஜி பாடலில் சொல்கிறார் ,

தேவர்கள் வாழ்விடம் திறலுயர் முனிவர்

ஆவலோ டடை யும் அரும்புகழ் நாடு

ஊனமொன்றறியா ஞான மெய்ப் பூமி

வானவர் விழையும் மாட்சியார் தேயம்

பூமி சூக்தப் புலவன்  பூமா தேவி பற்றிப் பகன்றதை, பாரதியார், பாரத தேவி மீது ஏற்றிப் பாடிவிட்டார்!

XXX

பாடல்/ மந்திரம் 56

யே க்ராமா யதரண்யம் யாஹா ஸபா அதி பூம்யாம்

யே ஸம் க்ராமா ஸமிதயஸ் தேஷு சாரு வதேம தே -56

பாடல் 56ன் பொருள்

கிராமங்களில், காடுகளில், பாரிலுள்ள அனைத்து சபைகளில் , மக்கள் கூடும் கூட்டங்களில் , சமிதிகளில் உன் புகழ் படுவோம்; இனிமையானதையே சொல்லுவோம்

இது மிகவும் பொருள் பொதிந்த பாடல். கிராம சபை முதல் ஐ.நா . சபை வரை பூமியை — பாரத பூமியைப் புகழ்வோம் ; காதுக்கு இனிமையானதைப் பேசுவோம்.

என்ன பக்தி பாருங்கள் !!!

இதில் இரண்டு முக்கியமான மொழியியல் LINGUISTIC FACTS விஷயங்கள் வருகின்றன.

சபை SABHA என்ற சொல்லை திருவள்ளுவரும் அவருக்கு முந்தைய சங்கப் புலவர்களும் அவை என்று மாற்றிப் பாடியுள்ளனர். அதாவது தமிழில் ச- என்னும் எழுத்தில் சொற்கள் வரக்கூடாது என்று பிராமண தொல்காப்பியன் — த்ருண தூமாக்கினி – தடை போட்டுவிட்டான்; ஏனெனில் ஸம்ஸ்க்ருதத்தில் , டஸ் புஸ் என்று ஸ – வில் துவங்கும் சொற்களே அதிகம். ஆகையால் வடக்கிலிருந்து சிவன் அனுப்பிய அகஸ்தியர் — தொல்காப்பியரின் குருநாதர் — ஸ -வுக்குத் தடை விதித்தார் போலும். வியாஸ மகரிஷிக்கு ஸ -கார குக்ஷி என்று பெயர்; நினைத்த இடங்களில் எல்லாம் ஸ – எழுத்தை அள்ளி வீசி விட்டார்.

“ச” வரும் இடமெல்லாம் ஒரு உயிர் எழுத்தைப் போட்டு அவை ஆக்கிவிட்டனர் தமிழர்கள்  .

இந்த ஸபா என்னும் சொல் ரிக்வேதத்தில் வரும் சொல். இன்றும் லோக் ஸபா, ராஜ்ய ஸபா, தமிழ்நாடு சட்ட மேலவையில் உள்ளது. ஆக தமிழர் பயன்படுத்தும் சட்டை, சட்டம், அவை எல்லாம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்.

ச – வில் துவங்கும் எல்லா சொற்களும்) ஸம்ஸ்க்ருதச் சொற்கள் என்பதை 18 மேல் கணக்கு நூல்களிலும் (சங்க இலக்கியம்) 18 கீழ்க் கணக்கு நூல்களிலும் (திருக்குறள், பழமொழி, நாலடியார் முதலியன) காணலாம்.

XXXX

இதையும்விட இரண்டு முக்கிய அதிசயங்கள் உள்ளன.

ஸபா எப்படி அவை ஆனது ?

‘ப = வ’ ஆக மாறி ‘பை = வை’ ஆகிவிட்டது. (B=V; V=B)

இன்றும் வங்கத்தை பெங்கால் BENGAL என்று வ=ப மாற்றத்தைக் காண்கிறோம்.

இந்த ப= வ B= V மாற்றம் 3000 ஆண்டுப் பழமை உடைய ஈரானிய – பாரசீக இலக்கியத்திலும் உளது. அஸ்வ என்பதை அஸ்ப ASVA = ASBA என்பர். ஈரான் என்ற பெயரோ ஆர்ய ARYA = IRAN என்பதன் திரிபு, மரூஉ என்பதை உலகமே ஒப்புக்கொள்கிறது. எப்படித் தமிழிலும் ப- வ ஆனது.??

ஆக லண்டன் சாமிநாதன் சொல்லும் THEORY/HYPOTHESIS  தியரியே சரி; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் வெவ்வேறு குடும்பம் என்று சொல்லும் BISHOP CALDWELL கால்டுவெல் கும்பலுக்கு வேட்டு வைக்கும் சொல் இது.

இதை விடப் பெரிய அதிசயம் ரிக் வேத, அதர்வண வேத “சமிதி” என்னும் சொல்;  கமிதி COMMITTEE  என்று உலக மொழிகளில் புழங்குகிறது ; பிரெஞ்சு மொழி செய்த குழப்பத்தால் ச = க C= K ஆக மாறுகிறது; சமிதி என்பதை SAMITI = COMMITTEE இன்றும் நாம் ஆங்கிலத்தில் கமிட்டி என்று பயன்படுத்துகிறோம். சமிதி என்று எழுதிவிட்டு அதை கமிட்டி என்று உச்சரிக்கிறோம் !!!

காடுகளிலும் கூட புகழ் பரப்புவோம் என்று அதர்வண வேத புலவன் செப்புவது நோக்கற்பாலது. என்ன சிம்பிள் SIMPLE LANGUAGE மொழி பாருங்கள்!! இந்த மந்திரத்தில் உள்ள கிராமம், ஸபா, சமிதி, ஆரண்யம் பூமி – எல்லாம் கிராமத் தமிழனுக்கும் கூடப் புரியும்; தெரியும்

COMMITTEE = SAMITI

SABHA = AVAI; LOK SABHA, RAJYA SABHA

ARANYAM, GRAMA, BHUMI

CHARU = SWEET ; CHARU LATHA

XXX

பாடல்/ மந்திரம் 57

அஸ்வ இவ ரஜோ துதுவே வி தான் ஜனான் ய ஆக்ஷியன் ப்ருதிவீம் யாத ஜாயத

மந்த்ரா க்ரேத் வரீ புவனஸ்ய கோபா வனஸ்பதீனாம் க்ருபிரோஷதீனாம் –

57

பாடல் 57-ன் பொருள்

பூமாதேவி ஆனவள், குதிரை தன்  கால் தூசியை உதறித் தள்ளுவது போல இதுவரை தோன்றியவர்களை எல்லாம் தான் பிறந்த நாளிலிருந்து உதறிவிட்டாள் ; அவள் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கிறாள்; இந்த ப்  பூமியிலுள்ள  தாவரங்களையும் மரம் செடி கொடிகளையும் காப்பவள் அவளே.

நல்ல கருத்து ; தோன்றிய மனிதர்களை உதறித்தள்ளிய போதும் தொடர்ந்து மரம் செடி கொடி கானகங்களை உதறவில்லை ; பசுமை என்னும் ஆடையுடன், நீலத் திரை கடல் சூழ வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

மனிதர்களின் நிலையாமை பற்றிப் பாடிய புறநானூற்றுப் புலவர் பாடல்களை இது நினைவுபடுத்தும்.

பருதி சூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம்

ஒருபகல் எழுவர் எய்தியற்றே!

வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு

ஐயவி அனைத்தும் ஆற்றாது; ஆகலின்

கைவிட்டனரே காதலர்; அதனால்

விட்டோரை விடா அள்திருவே;

விடாஅதோர் இவள் விடப்பட்டாரே

வான்மீகியார், புறம் 358

பொருள்:

கதிரவன் சுற்றும் இந்த வளம் செறிந்த பூமிக்கு ஒரே நாளில் 7 பேர் அரசனானதும் உண்டு. இல்லறத்தையும், துறவறத்தையும் ஒப்பிட்டால் துறவறமே சிறந்தது. தவம் மலை என்றால், இல்லறம் சிறு வெண்கடுகு (ஐயவி) போன்றதாகும். தவம் செய்ய முடியாததால்தான், காதலர்கள் இல்லறத்துக்கு வந்தனர். வீடு பேற்றை விரும்பியோர் இல்லறத்தைக் கைவிட்டனர். யார் வருந்தி வருந்தி அழைக்கவில்லையோ அவளிடம் லெட்சுமி போய் ஒட்டிக்கொள்வாள். இல்வாழ்வில் அழுந்தியோரிடம் தங்க மாட்டாள்.

–தொடரும் ……………………………

tags– அவை, சட்டை, சட்டம் , தமிழ் , மேலவை,  ஸம்ஸ்க்ருதம், சபை

வெளிநாட்டில் தமிழ் கற்பது தேவையா? (Post No.10096)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,096

Date uploaded in London – 15 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Written by London Swaminathan for a magazine recently; (Former BBC Broadcaster, University Tamil Tutor & Dinamani Senior Sub Editor)

ஆங்கில  மொழியோ வேறு ஐரோப்பிய மொழியோ பேசும் நாட்டில் வாழும் நாமும் நம் குழந்தைகளும் தமிழ் மொழி கற்பது அவசியமா? வீட்டில் தமிழ் பேசுவது தேவையா? தமிழ் பண்பாட்டைக்  காப்பதற்காக நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ‘டிக்கெட்’ வாங்கிப் போக வேண்டுமா ? தமிழ் மொழியைக் கற்கும் நேரத்தில்  வேறு மொழியையோ, புதிய தொழில்களையோ  கற்றால் பணமும் சம்பாதிக்கலாம், புதிய வேலைகளையும் செய்யலாமே! — இவ்வாறு பல வாதப் பிரதிவாதங்கள் நடப்பதை நாம் அறிவோம்.

London University Tamil Department (SOAS)- dr Stuart Blacckburn, Dr John Marrin the Centre, London Swaminathan (Far right) Dr Singvi, High Commissioner (far left). Year 1996

முதலில் ஒரு சுவையான செய்தியைச் சொல்லிவிடுகிறேன். இந்தக் கட்டுரையாளர் 43 ஆண்டுகளுக்கு தமிழ் தொடர்பான வேலைகளை மட்டுமே செய்திருக்கிறார். வேடிக்கை என்னவென்றால் வேறு வேலைகளுக்கு மனுப்போட்டும் கிடைக்கவில்லை!! ஆனால் தமிழ் வேலைகள் மட்டும் தேடித் தேடி வந்தன.(பத்திரிகை ஆசிரியர், பல்கலைக்கழக ஆசிரியர், பி.பி.சி ஒலிபரப்பாளர் ,தமிழ் சங்க மானேஜர், தமிழ் மொழி பெயர்ப்பாளர்…… என்று) சுருக்கமாகச் சொன்னால் எனக்கும் என் குடும்பத்துக்கும், ‘தமிழ் சோறு போட்டது’. அதுவும் லண்டனில்!!

இது எல்லோர் வாழ்விலும் நடக்க முடியாதல்லவா? ஆகவே பொதுவாக விவாதிப்போம் .

ஒருவர் பிறந்த நாட்டையும், பிறந்த மதத்தையும், பேசும் மொழியையும், சேர்த்த புட் பால் (Foot Ball Club)  அணியையும், கிரிக்கெட் அணியையும் ஆதரிப்பதை எல்லா கலாசாரங்களிலும் பார்க்கிறோம் . நாம் மட்டும் ஏன் நமது மொழியையும் பண்பாட்டையும் விடவேண்டும்?

அது சரி, ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி ,கீட்ஸ் முதலிய உலகப் புகழ் பெற்றவர்கள் இருக்கிறார்கள். தமிழில் என்ன இருக்கிறது? என்று சிலர் நினைக்கலாம்.

தமிழ் ஒரு கடல். இன்று நாம் படிக்கத் தொடங்கி 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் எல்லாவற்றையும் படித்து முடிக்க முடியாது. அதில் பெரும்பகுதி ஆங்கில இலக்கியம்  தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவை! தமிழ் பண்பாடோ மற்றவர்கள் முழு அளவு ஆடையின்றி நாகரீகம் இல்லாமல் திரிந்த காலத்தில் இந்தோனேஷியாவரை கொடிகட்டிப் பறந்து இருக்கிறது.

மேலும், எல்லா மரங்களுக்கும் வேர் இருப்பது போல ஒவ்வொருவருக்கும்- ஒவ்வொரு சமுதாயத்துக்கும் – ஒரு வேர் இருக்க வேண்டும். அதற் காகவும் நம் மூலத்தை (மூலம்= வேர்)ப் பிடித்துக் கொண்டு இருக்கவேண்டும்.

சிறு பிள்ளை ஆக இருக்கும்போது விளையாட்டில் கவனம்; இளம் வயதில் வாழ்க்கைத் துணையில் கவனம்; வயதானபோது உடல் நலனில் கவனம்- இப்படி வாழ்நாள் ஓடிவிடுகிறது. இடையே அலுப்பு சலிப்பு தட்டும். அப்போது ஏதாவது ஒரு பொழுது போக்கு தேவைப்படுகிறது அதற்கும் தமிழில் ஆடல், பாடல் என்று நிறைய இருக்கின்றன. பயனுள்ள விஷயங்களை அறிய தமிழில் எல்லாத் துறைகளிலும் கடல் அளவு செய்திகள் இருக்கின்றன. அற்புதங்கள் செய்ய வேண்டுமானாலும் கூட 18 சித்தர்கள் வழிகாட்டுவார்கள்.

பல திகில் திரைப்படங்களில் சங்கேத மொழியில் செய்தி அனுப்பி வில்லனை மடக்குவதை பார்த்திருப்பீர்கள்; நமக்கோ சங்கேத மொழியே தேவை இல்லை. நமக்குள் ரகசியமாக செய்திகளைப் பரிமாறிக்கொள்ள தமிழ் உதவும். அதாவது ஆங்கிலம் போன்ற மொழி புழங்கும் இடங்களில்!

வேலை வாய்ப்புக்கும் தமிழ் உதவும். நேரடியாக இல்லாவிடினும் மறைமுகமாக . இதன் மூலம் கற்கும் கலைகள் நமக்கு பல இடங்களில் சிறப்பான வரவேற்பைத் தருகிறது. சொல்லுவது புரிகிறதா?

தமிழ் இட்டிலி , தோசை, வடை, பொங்கல், சாம்பார், ரசம் பிடிக்காத வெள்ளைக்காரர்கூட இல்லையே. அந்தக் காலத்திலேயே தமிழ் மிளகு ரசமும், கட்டுமரமும் ஆக்ஸ்போர்ட் அகராதியில் நுழைந்துவிட்டதே!.

ஒவ்வொரு ஆண்டும் நான் லண்டன் பல்கலைக் கழகத்தில், தமிழ் வகுப்பில்,  எல்லோரையும்  அறிமுகம் செய்துகொள்ளும்படி சொல்லிவிட்டு ஏன் தமிழ் படிக்க வந்தீர்கள்? என்றும் சொல்லும்படி கேட்பேன். பெரும்பாலோர் தமிழ் பேசும் ஒருவரைக் கல்யாணம் கட்டியதால் தமிழ் தேவைப்பட்டது என்பர். இன்னும் சிலர் மாமியார், மாமனார் பேசுவது (திட்டுவது??) புரியவில்லை என்பதற்காக வந்தேன் என்பர். இன்னும் சிலர் தமிழ் சினிமா, கலை மூலம் ஈர்க்கப்பட்டதாகச் சொல்லுவார்கள். பலர் தமிழ் நாடு, இலங்கை தொடர்பான ஆராய்ச்சியில் உதவும் என்று  எண்ணி வந்ததாக இயம்புவர். ஒரு வெள்ளைக்காரர் துணிச்சலாக ஆண்டு தோறும் இட்லி, தோசை சாப்பிடுவதற்காகவே தமிழ் நாட்டுக்குச் செல்வதாகவும் ஹோட்டல்காரக்ளுடன் நன்கு உரையாட தமிழ் படிப்பதாகவும் சொன்னார். அது பொய்யல்ல என்பது அவர் பல ஆண்டுகளுக்கு என்னிடம் தமிழ் படித்ததிலிருந்து தெரிந்தது. இட்டிலி தோசைக்கு அவ்வளவு மஹிமை!

குறைந்தது தமிழ் திரைப்படங்களில் வரும் நகைச் சுவை காட்சிகளையும் பாடல்களையும் ரசிப்பதற்காகவாது தமிழ் கற்க வேண்டும்.

ஆயினும் பழம் பெருமை மட்டும் பேசுவதோடு நில்லாமல் ஆங்கிலம், இந்தி போல பிறமொழிச் சொற்களையும், நமது மொழியின் அடிப்படை கெடாத அளவுக்கு, ஏற்க வேண்டும். ‘தமிழ் வாழ்க’ என்று உரத்த குரலில் தமிழர்கள் கோஷமிடுவது காதில் கேட்கிறது. உலகிலுள்ள புகழ் பெற்ற பிற மொழி இலக்கியங்களோ, அறிவியல் விஷயங்களோ இன்னும் தமிழில் கால்வாசி கூட மொழிபெயர்க்கப்படவில்லை. வெளிநாட்டில் வாழும் நமக்குக் கிடைக்கும் வசதிகள் தமிழ் மொழி வழங்கும் இடங்களில் கிடைப்பதில்லை. அந்த மொழிபெயர்ப்புப் பணியையும் நம்மில் சிலர் செய்யலாம். அதனால்தான் பாரதியும் ‘சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்’ என்றார் . அத்தோடு ‘பிறநாட்டு சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்றார் மேலும் ஒருபடி போய் ‘இறவாத புது நூல்கள் இயற்றல் வேண்டும்’ என்றார் .இந்த மூன்று பணிகளில் முடிந்ததை நாம் செய்யலாமே.

முயற்சி திருவினை ஆக்கும்!

–subham–

tags –வெளிநாட்டில், தமிழ், கற்பது, தேவை, 

உமாபதி சிவம் இயற்றிய தமிழ், சம்ஸ்கிருத நூல்கள்! (Post.9078)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9078

Date uploaded in London – –26 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உமாபதி சிவம் – 4

இயற்றியுள்ள தமிழ் மட்டும் சம்ஸ்கிருத நூல்கள்!

ச.நாகராஜன்

ஸ்ரீ உமாபதி சிவாசாரியர் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் சிறந்த விற்பன்னர்.

தமிழ் நூல்கள்

சைவ சித்தாந்தத்தை விளக்கும் மெய்கண்ட சாத்திர நூல்கள் மொத்தம் 14.

அவற்றில் உமாபதி சிவாசாரியர் அருளிய நூல்கள் 8.

அவையாவன :-

சிவப்பிரகாசம்

திருவருட்பயன்

வினாவெண்பா

போற்றிப் பஃறொடை

உண்மை நெறி விளக்கம்

கொடிக்கவி

நெஞ்சு விடு தூது

சங்கற்ப நிராகரணம்

மெய்கண்ட சாத்திர நூல்கள் தவிர பல்வேறு நூல்களையும் இவர் இயற்றியுள்ளார்.

சேக்கிழார் பெருமான் அருளிச் செய்த பெரிய புராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணத்தைச் சுருக்கி திருத்தொண்டர் புராணசாரம் என்ற நூலை இவர் யாத்துள்ளார்.

அடுத்து சேக்கிழாரின் வரலாற்றை சேக்கிழார் புராணம் என்ற நூலில் கூறியுள்ளார்.

அடுத்து சிதம்பரம் கோயிலின் வரலாற்றை அற்புதமாக கோயிற் புராணம் என்று எழுதியுள்ளார். இதில் மொத்தம் 100 பாடல்கள் உள்ளன.

மேலும் திருமுறை கண்ட புராணம்,திருத்தொண்டர் புராண வரலாறு, திருப்பதிகக் கோவை, தேவார அருள்முறைத் திரட்டு, ஞான ஆசார சாத்திர பஞ்சகம் உள்ளிட்ட நூல்களையும் இவர் இயற்றி அருளியுள்ளார்.

சம்ஸ்கிருத நூல்கள்

சம்ஸ்கிருத விற்பன்னர் என்பதால் இவரது சம்ஸ்கிருத நூல்களும் பெரும் புகழைப் பெற்றுள்ளன.

பௌஷ்கராகமத்திக்குப் பௌஷ்கர சங்கிதா பாஷ்யம் என்ற பெயரில் விளக்கவுரையை இவர் எழுதியுள்ளார்.

தில்லையில் நடனமாடும் நடராஜரின் தாண்டவத்தைக் கண்டு பிரமித்து அவர் நடராஜ த்வனி மந்த்ர ஸ்தவம் என்ற நூலையும் குஞ்சிதாக்ரி ஸ்தவம் என்ற நூலையும் படைத்துள்ளார்.

ஸ்ரீ உமாபதி சிவாசாரியார்  காலம்

சங்கற்ப நிராகரணம் என்ற இவரது நூலின் அடிப்படையில் இவரது காலம் பதினான்காம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறதி.

ஸ்ரீ உமாபதி சிவாசாரியார் ஸ்துதி

இவ்வளவு பெருமை வாய்ந்த உமாபதி சிவாசாரியரைப் போற்றித் துதி செய்யும் துதிப்பாடல் இது:-

அடியார்க் கெளியன் எனத்தில்லை

    யண்ணல் அருளுந் திருமுகத்தின்

படியே பெற்றான் சாம்பாற்குப்

    பரம முத்தி அப்பொழுதே

உடலுங் கரைவுற் றடைந்திடுவான்

   உயர்தீக் கையினை அருள் நோக்காற்

கடிதிற் புரிகொற் றங்குடியார்

    கமல மலரின் கழல் போற்றி.

லண்டன் ஸ்ரீ கல்யாணசுந்தர சிவாசாரியாரின் அரும் பணி!

லண்டனில் இன்று வேத அடிப்படையிலான அனைத்து நல்ல காரியங்களையும் முன்னிட்டு நடத்துபவர் லண்டன் ஸ்ரீ கல்யாணசுந்தர சிவாசாரியார்.

கந்தபுராண பாராயணம், அதைப் பதித்தல் உள்ளிட்ட அரும் பணியை அவர் ஆற்றி அனைவராலும் மதிக்கப்படுபவர் அவர்.

உமாபதி சிவாசாரியாரின் நூல்களை ஆழக் கற்று அவற்றின் பால் தீராக் காதல் கொண்ட அவர் பல பழம் பெரும் ஓலைச் சுவடிகளை ஒப்பு நோக்கி வருகையில்  ஒரு அரிய செல்வத்தைக் கண்டார். satatatnasangraham நூலில் 100 பாடல்கள் இருக்க வேண்டிய சத சங்க்ரஹத்தில் இதுவரை கிடைக்கப் பெற்றவை 93 மட்டும் தான். ஸ்ரீ கல்யாணசுந்தர சிவாசாரியார் இது வரை கிடைக்காதிருந்த 7 ஸ்லோகங்களையும் ஒரு ஓலைச் சுவடியில் கண்டு அவற்றின் மூலம் நூலை முழுமையாக்கியுள்ளார்.

இவர் செய்யும் அனைத்துப் பணிகளும் பிரம்மாண்டமானவை; பொருளுதவி தேவைப்படுபவை. இந்த அரும் பணியில் தங்கள் பங்கையும் செய்ய விழைவோர் இவரைத் தொடர்பு கொள்ளலாம்.

tags– உமாபதி சிவம், தமிழ், சம்ஸ்கிருத நூல்கள்

***

TAMIL WORDS IN ENGLISH – PART 3 (Post No.8822)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8822

Date uploaded in London – –17 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கில மொழியில் ஆயிரம் தமிழ் சொற்கள்– part 3

More and more evidence are coming through the list of ‘TAMIL WORDS IN ENGLISH’ to support my pet theory that ‘Indian language’ is the mother of all languages in the world. Indian language consists words from TAMIL AND SANSKRIT languages.  Both came from same source. It shows that a language can branch out in two ways. Even linguists agree the branching out of SATAM (100) AND CENTUM(100) languages. Tamil and Sanskrit are closer than any two languages in the world. The language map of the world is NOT drawn to scale. When the Periodic Tablewas drawn by the Russian chemist Dmitri Mendeleev and Theory of Evolution Tree was drawn by Charles Darwin they did it scientifically. But Family of Languages map is NOT drawn to scales. All encyclopaedias mislead the world. Yesterday’s languages without literature and grammar and script is given top positions and Sanskrit, the oldest language with the oldest book and the oldest grammar book is at the bottom. They should have at least written, ‘it is not done to scale’ (Chronologically).

Old linguists took one word from unknown scriptless, grammarless, literatureless, rootless languages and compared it with the oldest language Sanskrit. For Sanskrit, we have archaeological evidence from at least 1500 BCE  in the form of Mitannian names, Bogazkhoi clay tablet inscription of Turkey and  Dasaratha letters of Egypt. Thank God all these are available in encyclopaedias, but English writers hid all these evidences from Indian History books.

So please ignore all the Family of Languages Maps or diagrams and redraw it chronologically. But you can have good laugh by reading the books of Caldwell gangs and Max Muller gangs. Best jokes are available in

Bow – wow theory

Kluck- kluck theory

Pooh- pooh theory

Ding- dong theory

Onomatopoeic theory of very famous half baked oldies.

And it doesn’t stop there. Even the classification and chronological order  of ‘Isolating languages, Agglutinative languages and Inflexional languages are wrong. When you look at 750 +++++ New Guinean languages and 200 ++++Australian aborigine’s languages you can laugh and laugh at those oldies. In my recent article on ‘barking of the dogs’ I have shown dogs bark with different sounds in different parts of the world!! Crows and cocks make different sounds as well!!

Last but not the least, William Jones misled the entire world by citing Matha=Mother, Pita=Father, Bratha=Brother, Hora= Hour etc and made us to believe that Aryans came from outside. All the quotes are later than Sanskrit Vedas. Lakhs of words in Sanskrit are missing in the western languages. All words regarding Yaga Yajna, and education are not found in European languages. Very important words like Guru, Manava/student, Vyakarana/grammar are not seen in their languages, because they were uncivilised, uneducated, illiterate , nomadic, barbarians at the time. Only upto number ten of Sanskrit will be found in their languages. Their bird brains couldn’t digest more than that.  If anyone compares the languages in chronological order they will agree with me.

In short, when you compare two languages see whether they have scripts, literature, and grammar books, otherwise reject all the theories. Arrange them chronologically and compare them. Nothing can come nearer to Rig Veda and its Pratisakhyas, oldest grammar in the world. Several hundreds year later came Homer’s Illiad and Odyssey. Just hundred years before that came FEW chapters of the Old Testament of Bible. Here and there we find some Persian and Chinese stuff. Latin and Tamil came very late (literature wise).

Now let me continue with my Third Part :–

‘C’ is the most misleading letter. It has the sound value of ‘ch’ and ‘kh’ as in Charles and Character. And it has also the value of ‘Q’. Because of this Chaturth, ¼ ,is written as Quarter. ‘Q spelt words’ are very misleading.

Please remember that Tamil Grammarian banned all ‘Cha,Sa’ beginning words. No sibilant is available in Tamil.

Also note that French used ‘C’ for ‘K’. Tamil town Kadalur (koodalur) has the spelling of Cuddalore even today because of the French rule.

C List:–

C.1. Conch – Sangu ; சங்கு it  is a Sanskrit word Sankha, commonly used in Tamil.

C.2. Cord – Saradu, Kodi , கொடி, சரடு,

C.3. Cowrie – Sozi (Soli) சோழி

C.4. Chiro / Cheir (Greek) – Kai/hand, it is also cognate to Kara/hand in Sanskrit, கை , கரம்,

C.5. Crime ,Critic ,Criticise – Kutram / Kurai sollu குற்றம், குறை சொல்லு

C .6. Camphor – Karpuura ; கற்பூரம், Sanskrit as well; see how the letters interchange in English ; ‘m’ is lost; r goes into middle

C.7. Congress , Committee – Sangam, Samiti; க/சமிட்டி , கா/ஸங்க்ரஸ் = சங்கம் both are Sanskrit words; but Tamils boast that they had Three Sangams to foster their language for 10,000 years. So the word SANGAM, banned by Tolkappiyan, is vital for Tamils!!

C.8.Ceres, Goddess – this branched out into Seer/Serivu/ sirappu (Wealth and Prosperity) செரீஸ் – சீர் , செறிவு, சிறப்பு, ஸ்ரீ , ஸர் பட்டம் (பிரிட்டனில்) in Tamil and Sri in Sanskrit ; that gave birth to ‘Sir title’ in English and ‘Thiru/Mr’. in Tamil (T=S; you can see it in all English words with TION=SION) திரு; டியன்=ஷன்

C .9.Crest – Ketu in Sanskrit , Koti in Tamil கேது/கொடி ,

C.10. Conspicuous – Kaanpikka; Kannil patum காண்பிக்க, கண்ணில் படும்,

C.11. Coiffure – Sowry, soli சவுரி ,சோலி ,

C.12 . Chaff -Saavi (in paddy) சாவி

C 13. Copper – Cuprum  in Latin, Seppu in Tamil செப்பு 

C 14. Collar – Kazuthu (Kaluththu)/neck; Kanda in Sanskrit கழுத்து

C 15. Crore – Koti; though a Sanskrit word used in Old Tamil (Tamils use only Sanskrit names for big numbers which is in Taittiriya Samhita; oldest mega numbers in the world) கோடி

C 16. Chit – Seettu, Chittai ஸீட்டு சிட்டை 

C 17 – Cheroot – Suruttu/Cigar; சுருட்டு it may sound like a modern word; but it is an old verb Suruttu- Roll (to make a cigar)

C 18. – Cauldron – Kalam, Kalayam கலம் /கலசம்/கலயம், கங்காளம் (In Sanskrit Kalasam); also Kangaalam

C 19. Chowder – Kutam (pot, vessel) குடம்

C 20. Cal – Kal/stone with which they calculated in olden days ‘கல்’ வைத்து கணக்கிடு

C 21. ‘Cal’culate – ‘Kal’- culate/count with the help of stones கல் வைத்து கணக்கிடு

C 22. Compute / Count – see the root above ‘Kal’ கல் வைத்து கணக்கிடு

C 23. Cunnus – Sunni/ Penis, Male genital organ சுண்ணி

C 24. Cunt – Kundi/ anus குண்டி (in European it means the other side)

C .25 Cash – Kaasu (coin, currency); காசு, /பணம்=கார்ஷ பண

 is from Sanskrit Karsha pana; used in old Sangam Tamil

C 26.Clay – Kali (man), kalimpu/paste like clayகளி , களிம்பு

C 27. Cotta – Sutta/ burnt ; சுட்ட தரை, சுடு மண் சிற்பம் in Terra Cotta it is Tharai Sutta / burnt sand in reverse order

C .28. Car/ Charred – Karuppu, Kari (burnt to blackness) கரி, கரி ஆக்கு

C 29.  Curry – Kary (in food) கறி ,

C .30. Copra – Kopparai (dry coconut) , கொப்பரை

C 31. Coir – Kayiru (as well Saradu; see Cord above) கயிறு, க/சரடு

C 32. Choultry – Chattiram ( traveller’s inn, free loges on roadside) சத்திரம்

C 32 . Colon – Kutal; Kuzal/pipe like, குழல், குழாய்

tube like organ ; Kuzaai= tap as in water tap

C.33. Cock – குக்குட கொக்கரக்கோ Kukkuda in Sanskrit but when it comes to its sound it ‘Kokkara Kokkara Ko’ (‘Cock’ ara, ‘’Cock ara Co)

In English Cock-a- doodle- do; So it branched out into Kukkuda- Kokkara.

C .34. Carp/ Core – Karu in Tamil; it means Foetus, Carp/fruit; in Sanskrit ‘Garba’ கரு

C .35. Cuckoo/ Kuyil – Koel/ Kokila in Sanskrit குயில், கோயல், கோகில

C .36. Correct – Sari ( right, yes, accurate) க/சரி

C is a long list …………………….more tomorrow

To be continued……….

tags — ஆங்கில மொழி, தமிழ் , Tamil words-3, in English

தமிழ், சம்ஸ்கிருத ஆங்கில இலக்கண அகராதி -1 (Post.8708)

Tolkappiar

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8708

Date uploaded in London – –19 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இலக்கணம் கற்போரும் பிற மொழி இலக்கணத்தை தமிழ் மொழியுடன் ஒப்பிடும் கட்டுரைகளைப்  படிப்போரும்  பல இலக்கண சொற்களைக் காண்பார்கள். அவற்றைத்  தமிழ்- ஆங்கிலம் – சம்ஸ்க்ருதத்தில் – என்ன சொற்களால் அழைக்கிறார்கள் என்பதை அறிந்தால் இன்னும் எளிதாக, விரைவாக விளங்கிக் கொள்ள முடியும். அதற்காக பல  நூல்களில் இருந்து சொற்களைத் தொகுத்து ஒரு அகராதியை வெளியிட முயற்சி செய்கிறேன். இது முழுமை பெற சில காலம் ஆகும்.

தமிழ் மொழிக்கும் சம்ஸ்கிருத மொழிக்கும் பொதுவான எழுத்துக்கள் இல்லாத சில ஒலிகள் , சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இந்த சம்ஸ்கிருதச் சொற்களை அப்படியே உச்சரிப்பதா அல்லது தமிழ் முறைப்படி மாற்றி  உச்சரிப்பதா என்பதற்கு இரண்டு விதிகள் உள்ளன. அதைத் தற்சமம் , தற்பவம் என்று சொல்லுவார்கள் .

தற்சமம்

இருமொழியிலும் காணப்படும் பொது எழுத்துக்கள் ஒரு சம்ஸ்கிருதத் சொல்லில் இருந்தால் அதை அப்படியே எழுதுவதோ ஒலிப்பதோ தற்சமம்.

உதாரணம்/எடுத்துக் காட்டு

கமலம், காரணம்

தற்பவம்

சம்ஸ்கிருதத்தில் மட்டுமே உள்ள சிறப்பு எழுத்துக்களைக் கொண்ட சொற்களை எழுதுகையில் அதைத் தமிழ் ஒலிக்கேற்ப மாற்றுவது  தற்பவம் .

உதாரணம்/ எடுத்துக் காட்டு

பங்கஜம் – பங்கயம்

வருஷம் – வருடம்

ஸபா – சபை, அவை

*****

விருத்தி

உதாரணம் – தொல்காப்பிய விருத்தி உரை , நன்நூல் விருத்தி, யாப்பருங்கல விருத்தி, பெளட்கர விருத்தி

உரையின் பொது இலக்கணங்களோடு , சூத்திர பொருளை விளக்கலளவில்  நில்லாது, அங்கு இன்றியமையாத கருத்துக்கள் யாவும் விளங்கத் தன்னுரையானும் ஆசிரிய வசனங்களானும் ஐயமற உண்மைப்பொருளை விரித்து உரைப்பது .

உரையின் பொது இலக்கணங்கள் 14

அவை – படம், கருத்து, சொல்வகை , சொற்பொருள், தொகுத்துரை , உதாரணம், வினா, விடை, விசேடம், விரிவு, அதிகாரம், துணிவு, பயன், ஆசிரிய வசனம்  என்ற பதினான்குமான்.

சூத்திரத்துட் பொருளன்றியும்  ஆண்டைக்கு

இன்றியமையாவையும் விளங்கத்

தன்னுரையானும் பிறநூலானும்

ஐயமகல ஐங்காண்டிகை யுறுப்பொடு

மெய்யினை எஞ்சாது  இசைப்பது விருத்தி.

இதனை அகலவுரை என்பர் இளம்பூரணர்  .

From Dandapani Desikar’s Introduction to Tolkappia Sutra Vrddhi

*****

சூத்திரம்

சூத்திரம் என்பது கண்ணாடியில் விளங்கும் நிழல்போல , ஆசிரியன் கருதிய பொருள் தெள்ளிதின் விளங்கச் சில சொற்களால் திட்பமும் நுட்பமும் பொருந்த யாக்கப்பெற்ற நூல்யாப்பு என்க .

அவற்றுட் சூத்திரந் தானே

ஆடி நிழலின் அறியத் தோன்றி

நாடுதலின்றி ப் பொருள் நனி விளங்க

யாப்பினுள் தோன்ற யாத்தமைப்பதுவே

–தொல்காப்பியம்- பொருளதிகாரம் 482

சூத்திரம் 656-ல் மேலும் விளக்கமாகச்  சொல்கிறார் .

இளம்பூரணர் சொல்வதையும் காண்போம்

நுட்பம் ஒட்பம் திட்பம் சொல்லில்

சுருக்கங்கருத்து பகுதியொடு தொகை இ

வருத்தமில் பொருட்பயன் நிகழ்ச்சி சூத்திரம்

இளம்பூரணரும் இதை மேலும் விளக்குகிறார் . அவர் உரையில் காண்க.

From Dandapani Desikar’s Introduction to Tolkappia Sutra Vrddhi

ஆடி நிழலின் அறியத்  தோன்றி — என்ற தொல்காப்பிய வரிக்கு ஒரு அறிஞர் நல்ல விளக்கம் கூறியுள்ளார்.

கண்ணாடியில் ஒருவர் தன முகத்தைப் பார்க்கையில் அவர் முகம் மட்டுமின்றி அவர் பின்னாலுள்ள பொருள்களும் தென்படும். யாராவது அவரைக் கொல்ல  வந்தாலோ , (கிஸ்/ Kiss)  முத்தம் தர வந்தாலோ அதையும் காட்டும். அதாவது வருங்கலத்தைக் காட்டும். சுற்றுமுள்ள பொருட்களைக் கொண்டு அதன் சூழ்நிலை, நிகழ் காலம், கடந்த காலத்தையும் உய்த்துணரலாம். ஆக கண்ணாடியின் பயன்கள்  பல. இது போல சுருங்க உரைத்தாலும் சூத்திரம் விளக்கும் பொருட்கள் பல..

பாணினியின் சம்ஸ்கிருத சூத்திரங்களையும் அதன்மேல் எழுந்த காத்யாயனரின் வார்த்திகத்தையும் அதற்குப் பின்னார் எழுந்த பதஞ்சலி முனிவரின் மஹா பாஷ்யத்தையும் படிப்போருக்கு இது நன்கு விளங்கும்

****

அணிகள் – FIGURES OF SPEECH

ALLEGORY, FABLE, PARABLE -மற்றொறு பொருள் தோற்றும் கதை , ஒட்டுவமை

ALLITERATION – முற்றுமோனை

ALLUSIONS – மேற்கோள்கள்

ANTI CLIMAX, BATHOS, ANTI THESIS – முரண்தொடை

APHORISMS – பழமொழி/  சூத்திரம்

APOSTROPHE – விளி

ASYNDETON- உம்மைத் தொகை

CIRCUMLOCUTION, OR PHERIPHRASIS  – சுற்றுச் சுழற்சி , மீமிசை

CLIMAX- வீறு கோளணி , ஏற்றவணி

EPIGRAM- சுருங்கச் சொல்லல்

EUPHEMISM –  இடக்கரடக்கல், மரியாதை வாசகம்

HYPERBOLE, EXAGGERATION – உயர்வு நவிற்சி அணி

EXCLAMATION – வியப்புச் சொல்

HISTORIC PRESENT — கால வழுவமைதி

HYSTERON PROTERON – மொழி மாற்றுப் பொருள்கோள்

INTERROGATION -வினா

IRONY OR SARCASM -வஞ்சப் புகழ்ச்சி

LITOTES — பிற குறிப்பு, , எதிர்மறை இலக்கணை

METAPHOR – உருவகம் , உருவக அலங்காரம்

METAPHOR-CONTINUED-  முற்றுருவகம்

METONYMY – ஆகுபெயர் — பண்பு

ONOMATOPEIA — ஒலிக்குறிப்பு

PATHETIC FALLACY — இயற்கைப் பொருளுக்கு மக்கட்பண்பபை ஏற்றிச் சொல்லுதல்

PROVERB –பழமொழி

PUN — இரட்டுற மொழிதல் , சிலேடை

SIMILE –உவமை

SUGGESTION – குறிப்பு

SYNEEDOCHE —  ஆகுபெயர் — சினை – பிரித்து மொழிதல், முதலாகுபெயர் இலக்கணை ,

இனவாகுப் பெயர் இலக்கணை

-from Lifco Dictionary

tags – தமிழ், சம்ஸ்கிருத ஆங்கில,  இலக்கண அகராதி -1 

to be continued………………………………….

தினகர, ருசிகர, சஸிகர, கடகர, ரதகர, மதுகர: –சம்ஸ்கிருத மொழி அழகு (Post No.2856)

papanasam sivan 1

Compiled by london swaminathan

 

Date: 31 May 2016

 

Post No. 2856

 

Time uploaded in London :– 8-25 AM

 

(Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact : swami_48@yahoo.com

 

சம்ஸ்கிருதம் என்பது செம்மை செய்யப்பட்ட மொழி; சம்ஸ்கிருதம் என்றாலே நன்கு செய்யப்பட்டது எனப் பொருள்; 2700 ஆண்டுகளுக்கு முன்னரே பாணினியால் இலக்கணம் பெற்ற மொழி. அவருக்கு முன்னால் இருந்த இலக்கண கர்த்தாக்களின் நீண்ட பட்டியலும் உள்ளது. அப்படியானால் எவ்வளவு பழமை என்று தெரிந்து கொள்ளலாம்.அதற்கும் முன்பாக இருந்த பழைய மொழி வேத கால சம்ஸ்கிருதம்.

இன்று சங்க காலத் தமிழ் மொழியை நாம் புரிந்துகொள்ள உரைகாரர்களின் உரை தேவைப்படுகிறது. 2000 ஆண்டுகளில் நம் தமிழ் மொழி மாற்றம் அடைந்தது போல, பாணினி காலத்துக்குள் வேதகால சம்ஸ்கிருதம் புத்துருப் பெற்றுவிட்டது.

 

சம்ஸ்கிருதம் பழைய மொழி மட்டுமல்ல. அழகான மொழியும் கூட. சொல்லாக்க முறையைத் தெரிந்துகொண்டு விட்டால் புதிய சொற்களை நாமே உருவாக்கலாம். வேர்ச் சொல்லின் பொருளும் வினைச் சொற்களின் வடிவமும் தெரிந்துவிட்டால், அகராதி தேவையே இல்லை. பொருளை நாமே கண்டுபிடித்து விடலாம்.

p sivan 2

தமிழ் இசை மன்னன் பாபநாசம் சிவன் அவர்கள் வடமொழிச் சொற்கடல் என்ற ஒரு நூலில் சம்ஸ்கிருதச் சொற்களை புதிய முறையில் அழகு படத் தொகுத்துள்ளார். அந்த மொழியின் அழகை விளக்க சில சொற்களை மட்டும் காண்போம்:–

கரம் என்றால் கை; கையால் செய்யப்படுவது காரியம். கர என்ற விகுதியைக் கொண்டு முடியும் சொற்களின் அழகைப் பாருங்கள்:–

சுககர:= இன்புறச் செய்பவன்

ருசிகர:= இனிமை அளிப்பது

சுசிகர:= சுத்தம் செய்பவன்

கஜகர:= துதிக்கை, விக்னேச்வரன்

கடகர:= குயவன் (கடம்/பானை செய்பவன்)

ஹிதகர: = நன்மைசெய்பவன்

ரதிகர: = பிரியத்தை அளிப்பவன்

ரதகர: = தேர் செய்பவன் (ரதகாரன்)

மதுகர: = தேனீ (மதுவைச் செய்வது)

தினகர:= சூரியன் (பத்திரிக்கையின் பெயர்)

அனுகர: = உதவி செய்பவன்

லிபிகர:= கணக்குப் பிள்ளை

சுபகர:= க்ஷேமம் தருபவன் (ஜோதிடத்தில் சுபகாரன் யார் என்று சொல்லுவர்)

ஹிமகர: = சந்திரன் (குளிர்ச்சி தருபவன்)

பரிகர:= பரிவாரம், கட்டில், கூட்டம்

அவகர: = குப்பை

சவிகர: = சோபை/அழகு தருவது

சசிகர:= சந்திர கிரணம்

அஸிகர: = வாள் பிடித்தவன்

ரவிகர: = சூரிய கிரணம் (ரவி= சூரியன்)

வசிகர= ஆகர்ஷண சக்தி (வசீகரம்)

நிசிகர:= நிலவு

அசுகர: = செயற்கரிய செயல்

பசுகர:= செல்வம் தருவது

பஹுகர:= பல கை உடையான்; நகர சுத்தி செய்பவன்

அஜகர: = பெரிய பாம்பு

 

 

ஜலதர, ஹலதர, சசிதர, விஷதர

இதே போல ‘தர’ என்பது தரிப்பவன், தாங்குபவன் எனப்பொருள்படும்:-

நகதர:= கண்ணன்; ம்ருகதர:= சந்திரன் ( மானைத் தாங்குபவன்); ஜலதர: = மேகம் (நீரைத் தாங்குபவன்); ஹலதர:= பலராமன் (கலப்பையைத் தாங்குபவன்); சசதர: = சந்திரன் (முயல் தாங்கி); சசிதர: = சிவன் (பிறை அணிந்தவன்); விஷதர: = பாம்பு (விஷம் தாங்கி); மஹிதர: = மலை.

 

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

மடாதிபதி, ஜனாதிபதி போன்ற சொற்களை நாம் தமிழிலும் பயன்படுத்துகிறோம். அதிபர், அதிப என்பதெல்லாம் தலைவன் என்ற பொருளில் வரும்; இதோ சில எடுத்துக் காட்டுகள்:-

அகாதிப:, நகாதிப:= இமயமலை; ககாதிப: = கருடன்; ம்ருகாதிப: = சிங்கம்; மடாதிப: = மடாதிபதி; கணாதிப: = கணபதி (கணங்களின் தலைவன்); மதாதிப: = மதத்தின் தலவன்; ஜனாதிப: = அரசன்; தினாதிப: = சூரியன்; தனாதிப:= குபேரன் (தனத்திற்கு அதிபதி);தராதிப:, நராதிப: = ராஜா (நரர்களுக்குத் தலைவன்); சுராதிப:= சுரர்களுக்கு/ தேவர்களுக்குத் தலைவன் இந்திரன்); தசாதிப:=ஒன்பது கிரகங்கள்; திசாதிப; = திக்குகளின் தலைவன்; நிசாதிப: = நிசி/ ரவின் தலைவன்/சந்திரன்.

ஆதாரம்:- வடமொழிச் சொற்கடல், தொகுத்தவர்- பிரும்ம ஸ்ரீ பாபநாசம் சிவன், வெளியீடு—டாக்டர் ருக்மிணி ரமணி, 30, கிருபா சங்கரி தெரு, சென்னை- 600 033, விலை ரூ 150; வருடம்- 2000 (முதல் பதிப்பு 1954)

(வடமொழி பயில விரும்புவோர் வாங்க வேண்டிய நூல்)

 

எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகள்

சம்ஸ்கிருதத்தைக் கண்டு உலகமே வியப்பது ஏன்? (ஜூலை 4, 2015)

பாணினி மாஜிக்!! Panini Magic!! ( 7-4-2015)

பாரதியை வியக்கச் செய்த சிவபக்தன் – உலக மஹா அறிஞன் பாணினி! (19-2-2015)

கடவுள் தந்த இரண்டு மொழிகள் (13 நவம்பர் 2014)

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்! (20-12-2014)

 

p sivan 3

–சுபம்—

 

 

 

அப்பாய் செட்டியாரின் அற்புத தமிழ் அகராதி

Compiled by London swaminathan

Article No.1840 Date: 1 May  2015

Uploaded at London time: 18-26

தமிழில் மேலும் ஒரு அதிசயம்

எதுகைத் தமிழ் அகராதி

தமிழ் இலக்கியத்தில் எவ்வளவோ அதிசயங்கள் உள்ளன. இது வரை எனது ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகளில் அவைகளைக் கொடுத்து வந்துள்ளேன். லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ள ஒவ்வொரு தமிழ் புத்தகமாகப் புரட்டிப் பார்த்து வருகையில் ஊத்தங்கரை பி ஆர் அப்பாய் செட்டியார் 1938 ஆம் ஆண்டில் வெளியிட்ட எதுகை அகராதியைக் கண்டேன். அது ஒரு அற்புதமான நூலாகும். தர்மபுரி ஸ்ரீ ராமலிங்கா பிரிண்டிங் ஒர்க்ஸில் அது அச்சிடப்பது. (தற்பொழுது சில பதிப்பகங்கள் இதை மறுபதிப்பு செய்துள்ளன).

“பல அகராதிகள் ஏற்கனவே இருந்தபோதிலும் தமிழ்க் கலைக்கு என்னாலியன்ற தொண்டாற்ற வெண்ணங்கொண்டு நூதன முறையில் அகர முதலாகவும் கடையெழுத்தொன்றியும் வார்த்தை களைத் தொகுத்து எதுகை அகராதி என்ற பெயரால்  இதனை வெளியிடலாயினேன்” – என்று செட்டியார் முன்னுரையில் எழுதியுள்ளார்.

தமிழில் ஓரெழுத்துக்கு உள்ள அர்த்தங்களைப் படிக்கையில் வியப்பு மேலிடும். ஆனால் முன் காலத்தவர் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு விழிகள் போல எண்ணியதால், செட்டியார் தமிழ் சொற்கள் போலவே சம்ஸ்கிருதச் சொற்களையும் அகராதியில் சேர்த்துக் கொடுத்துள்ளார். 70 க்கும் மேல் ஓரெழுத்துக்கள் அகராதியில் உள்ளன.

எல்லாப் பொருட்களையும் கொடுக்காமல் ஒவ்வொரு எழுத்துக்கும் சில பொருளைத் தருகிறேன்.

தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்து, சிவன், விஷ்ணு, பிரமன், பெயர், வினை முற்று விகுதி, சுட்டிடைச் சொல், அன்மை, இன்மை, மறுதலை, குறைவு, சம்மதி, சுட்டு, தடை, பிறிது, வியப்பு,  ஆறாம் வேற்றுமை யுருப்பிடைச் சொல், சாரியை இடைச் சொல், சுக்கு, திப்பிலி, எட்டு

ஆகாயம், பிரமன், தலை, ஓரெழுத்து, அரசன், ஆன்மா, உடல், கந்தருவ சாதி, காமன், காற்று, சூரியன், செல்வன், திருமால், தீ, தொனி, நமன் மயில், மணம், விநாயகன், ஒன்று எண்ணும் எண், சரீரம், சுகம், நீர், நனைத்தல், பொருத்து, மேகம், விட்டுணு, மயிர், வியாதி, வாயு, பட்சி

குருணிக்குறி

கூடிய (உதாரணம்- சோமாக்கந்தர், சோமன்)

பிரான்ஸ் வெளியிட்ட பிரம்மா  தபால் தலை

குபேரன், பிரமன்

இன்மை, அன்மை, எதிர்மறை (உதாரணம்- அரூபம், அத்துவிதம், அதன்மம்)

இருபதிலோர் பாகத்தைக் காட்டும் ஓர் கீழ்வாய் இலக்கக் குறி, ஆற்று, சாபம், காவல் செய்தல், குடித்தல்

இயமன் இறந்தகால இடை நிலை (உ.ம்.-என்மர், ஒரு மந்திரம், காலம், சந்திரன், சிவன், நஞ்சு, நேரம், பிரமன், விட்டுணு

இறந்தகால இடை நிலை (உ.ம்.போயது)

இறந்தகால இடை நிலை

ஆச்சாமரம், இசை, இரக்கம், பெண் பசு, வினா விடைச் சொல், அந்தம், ஆக என்பதன் குறுக்கம்,இச்சை, ஆத்மா,வியப்பு, விலங்கின் பெண் பொது, ஆவது, பெண் எருமை

கா

அசைச் சொல், காத்தல் , காவடி, சோலை, துலை, பூந்தோட்டம், வருத்தம், வலி, பாதுகாப்பு, நிறை, சரசுவதி, கள், காலடித் தண்டு

சா

சாதல், சாவெனல், பேய், மரணம், தேயிலைச் செடி, இற, காய்ந்து போ

ஞா

கட்டு, பொருந்து

தா

கேடு, தாண்டுதல், கொடு, பகை, வருத்தம், வலி, அழிவு, கொடியன், பாய்தல், பிரமன், தாண்டு, படை

நா

நடு, நாக்கு, அயலார், சுவாலை, திறப்பு, மணி முதலியவற்றின் நா, அயலார், சுவாலை, பொலிவு, பூட்டின் தாள், வார்த்தை, தாரை, நாதசுரத்தின் ஊதுவாய்

பா

வெண்பா முதலிய பாட்டு, பஞ்சு நூல், பிரபை, நெசவு பா, அழகு, கடிகார ஊசி, கிழங்குப்பா, நிழல், பரப்பு, பஞ்சி நூல், பருகுதல், பாம்பு, தமிழ், தூக்கு, யாப்பு, காத்தல், சுத்தம், கப்பு, கை மரம்

மா

ஆண் குதிரை, அழகு, ஆண் பன்றி ஆண் யானை, இலக்குமி, கறுப்பு, சீலை, செல்வம், பெருமை, மாமரம், வண்டு, வயல், அறிவு, ஆணி, மாவு, நிறம், பரி, பிரபை, கட்டு, பெருமை, சரசுவதி, வலி, விலங்கின் பொது, வெறுப்பு, அருப்பம், மிகுதி, பிட்டம், பிண்டி, நுவனை

யா

ஒரு வகை மரம், வினாச்சொல், சந்தேகம், இல்லை

ரா

இராப் பொழுது, இரவு

வா

வருக எனல்

ஆண்பால், பெண்பால் பெயர் விகுதி (உ.ம்.பிறைசூடி, கண்ணி), முன்னிலை ஒருமை வினைமுற்று, அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி, அரை என்னும் எண்ணின் குறி

நி

அதிகம், இன்மை, உறுதி, எதிர்மறை, ஐயம், அமீபம், நிச்சயம், நிலை, பேறு, பூரணம், மிகுதி, வன்மை, விருப்பம்

பி

அழகு, பிரிவினை விகுதி

ஈ, கள், இலக்குமி, தேனீ, குகை, தாமரை இதழ், பாம்பு, அம்பு, அரை நாண், பார்வதி, தேனீ, சிறகு

கீ

கிளிக்குரல்

சீ

இகழ்ச்சிக் குறிப்பு, அடக்கம், பெண்,இலக்குமி, வியப்பு,சரஸ்வதி, பார்வதி, நித்திரை, பிரகாசம், விடம், விந்து, சளி, ஒளி, சிரீ, சிகரம், சீகம், தமரத்தை, புனல், திரை, கவிரி, சீதல், காந்தி, சம்பத்து

நீ

நீ என்னும் முன்னிலைப் பெயர், நீங்குதல், விடு, உலகத்தை மறு, தள்ளு

தீ

நெருப்பு, தீமை,அறிவு, நரகம், இனிமை, கோபம், விடம், ஞானம், விளக்கு, அங்காரகன், ஆரல், ஒளி, முளரி, வசு, வடவை, சிகி

பீ

அச்சம், மலம், தொண்டி, பெருமாரம்பவ்வி

மீ

ஆகாயம், உயர்வு, மேல், மகிமை, மேற்புரம்

வீ

விருப்பம், கர்ப்பந்தரித்தல், பறவை, பூ, சிவன், நீக்கம், கேடு, ஒழிவு

அகச் சுட்டு, புறச்சுட்டு, ஆச்சரியம், உருக்கம், கட்டளை, கோபம், சின, பிரமன், சிவ சக்தி பிள்ளையார் சுழி, எண் 2

கு

பூமி,குற்றம், சாரியை, சிறுமை, தடை, தொனி, நான்காம் உருபு, நிந்தை, பாவம், இனமை, நீக்க, நிறம்

சு

நன்மை (சுபுத்தி), சொந்தம் (சுதேசம்), அதட்டும் ஓசை, சுவ, சுய, வியப்புக் குறிப்பு

து

துவ்வென்னேவல், அசைத்தல், அனுபவம்,எரித்தல், கெடுத்தல், கசத்தல், பிரிவு, சுத்தம்

நு

தியானம், தோணி, நிந்தை, நேரம், புகழ்

ஊன், உணவு,சந்திர, சதை, தசை, சிவன், சமாக்கிய கலை, இறைச்சி

கூ

பூமி, கூக்குரல், மலங்கழித்தல், கூவுதல், கூச்சல்

சூ

விலங்குகளையோட்டும் குறிப்பு, சுளுந்து, வியப்புச் சொல்

தூ

சுத்தம், தூவென்னேவல், பகை,பற்றுக்கோடு, புள்ளிறகு, வெண்மை, தசை, மாமிசம், வலிமை, தூவு, இகழ்ச்சிக் குறிப்பு

நூ

ஆபரணம்,எள், யானை

பூ

மலர், அழகு, இடம், இந்துப்பு, இருக்குத்ல், இலை, ஓமாக்கினி, கண்ணோய், நரகம், தாமரை, தீப்பொறி, பிறப்பு, பூமி, நீலநிறம், மென்மை, தேங்காய்த் துருவல், நுண்பொடி, அரைக்கால், மகளிர் சூதகம், நிரம், பூப்பு, மூப்பு, அலரி, இணர், குசுமம், தாமம், போது, வீ

எழு, வினாவெழுத்து

சிவன், விஷ்ணு, செலுத்துதல், அடே, அம்பு, எண்ணின் குறிப்பு, அடுக்கு, பாணம், இகழ்ச்சிக் குறிப்பு, பெருக்கம், இறுமாப்பு, உயர்ச்சி, வலியுறுத்தல் (உ.ம்.அவனே வந்தான், நானே செய்தேன்)

சே

அழிஞ்சில் மரம், இடப ராசி, சிவப்பு, சேரான் மரம், காளை, வெருட்டுங் குறி, வெறுப்புக் குறி, புல்வாய், குதிரை, சேரான்

தே

கடவுள், கிருபை, கொள்ளுகை,நாயகன், மாடு துரத்தும் குறிப்பு

நே

அன்பு, ஈரம், நேசம்,உழை, நெகு

பே

நுரை, மேகம், பேகடம்- ஒருவகை மீன், இல்லை, பேகம்-தவளை, முகில்

மே

அன்பு

வே

வேவு

குலோத்துங்க சோழன்

அரசன், அழகு, ஆசான், இரண்டாம் வேற்றுமை உருபு, கடவுள், கோழை, சாரியை, சுவாமி, நுண்மை, யானையைப் பாகன் ஓட்டும் ஓசை, கடுகு, கடவுள், குரு, வியப்பு, வீரம், கணவன், சுவாமி, பிதா, யசமானன்

சை

சீ, கைப்பொருள்

நை

நொந்து போ, இகழ்ழ்சிக் உறிப்பு, நையென்னேவல்

அழைத்தல், வியப்பு, அனந்தம், கடித்தல், பூமி

கௌ

கொள்ளு, தீங்கு, மனஸ்தாபம், கிருத்தியம், கௌவென்னேவல்

கை

ஒப்பனை, ஒழுக்கம், கை, சிறுமை, வகுப்பு, இடம், உடனே, கட்சி, கைமரம், சேனை, ஆள், காந்தப்பூ, தங்கை, ஊட்டு, அலங்கரி, தோள், பாணி, சயம், விற்பிடி, முகுளம், சதுரம், இலதை, மான் தலை, சங்கு, வண்டு, அஞ்சலி, கற்கடகம், மகரம், கபோதம், விற்பிடி

தை

மாதம், பூச நாள்

பை

அழகு, பச்சை நிறம், பாம்பின் படம்

மை

அஞ்சனம், கருப்பு, பூமி, திசை, மலை, வச்சிராயுதம்

வை

கூர்மை, வைக்கோல், கீழெ வை என்னேவல்

ஒற்றுமையுடன் இரு, ஒன்றுபடு, ஒழிதல், ஒவ்வுதல்

இழிவு சிறப்பு, அடிசயவிரக்கச் சொல், எதிர்மறை, ஒழிபிசை, , வினா, நீக்க, மதகு நீர் தாங்கும் பலகை, மகிழ்ச்சிக் குறிப்பு, இரக்கக் குறிப்பு,  மடையடைக்கும் கதவு

நொ

துன்பப்படு, நோய், வருத்தம், நொய்ம்மை

அதிசய விரக்கச் சொல், இரக்கம், வினா விடைச் சொல் (உ.ம்.சாத்தனோ)

கொ

ஒலிக்குறிப்பு

கோ

அம்பு, அரசன், ஆண்மகன், எருது, ஆகாயம், கண், கிரணம், சந்திரன், சூரியன், பசு, மலை, மாதா, மேன்மை, வாணி, குசவன், சுவர்க்கம், வெந்நீர், தொடு, தறி, தடு, பொறி, தேவலோகம், கோமேத யாகம்,வச்சிராயுதம்

சோ

அரண், வியப்புச் சொல், வாணாசுரன் நகர்,உமை

நோதல், துக்கம், துன்பம், பலஹீனம், வியாதி

தோ

தோ- நாயைக் கூப்பிடும் ஒலி

நோ

இன்னம், சிதைவு, துக்கம், துன்பம், பலவீனம், வியாதி, வலி, வேதனைப் படு, நொந்து பேசு, துக்கப்படு, இன்மை

போ

அசைநிலை, போவென்னுதல்

சௌ

சௌபாக்கியவதி என்பதன் சுருக்கம், சிறுமி, சுமங்கலி

நௌ

மரக்கலம்

ஸ்ரீ

லெட்சுமி, பாக்கியம்

அப்பாய் செட்டியார் நிறைய சம்ஸ்கிருதச் சொற்களையும் சேர்த்திருக்கிறார். அதை நினைவிற் கொள்ளல் வேண்டும். அவர் மட்டுமின்றி அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும் வெளியாகும் எல்லா அகராதிகளிலும், நிகண்டுகளிலும் சம்ஸ்கிருதச் சொற்களையும் சேர்த்து தமிழாகக் கொடுத்திருப்பதிலிருந்து இரு மொழிகளையும் அவர்கள் இரு கண்கள் போல பாவித்ததும், இரு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்று அவர்கள் நம்பினர் என்பதும் வெள்ளிடை மலை. சுருங்கச் சொல்லின் வெள்ளைக்காரன் புகுத்திய ஆரிய-திராவிட இனவெறி வாதம் என்னும் விஷம் கலக்கும் வரை, தொல்காப்பியன் முதல் பாரதியார் வரை எல்லாக் கவிஞர்களும் அச்சமின்றி, கூச்சமின்றி சம்ஸ்கிருதத்தைக் கலந்தே எழுதினர். திரைப்படப் பாடல்களில் பிற மொழிக் கலப்பில்லாத படல்களைக் காண்பதும் அரிதே.

பாபநாசம் சிவன் எதுகை அகராதி

பாபநாசம் சிவன் சம்ஸ்கிருத எதுகை அகராதி ஒன்று தயாரித்து வெளியிட்டுள்ளார் அதைப்பற்றி தனி கட்டுரையில் தருகிறேன். அதைத் தயாரிக்க அவருக்கு ஆகிய காலம் எட்டு ஆண்டுகள். இதே போல அப்பாய் செட்டியார், அபிதான சிந்தாமணி வெளியிட்ட சிங்காரவேலு முதலியார் ஆகியோரும் பல்லாண்டுக் காலம் உழைத்ததன் பேரிலேயே நமக்கு அற்புத அகராதிகள், கலைக் களஞ்சியங்கள் கிடைத்தன.

–சுபம்–

கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம்

சங்கத் தமிழ் நூல்கள் சங்க கால மன்னர்கள் செய்த பல அபூர்வ யாகங்கள் குறித்து பல அதிசயமான செய்திகளைத் தெரிவிக்கின்றன. ஒரு யாகம் முடிந்தவுடன் ஒரு பார்ப்பனரும் அவர் மனைவியும் மாயமாக மறைந்துவிட்டார்கள். இதைப் பாடிய புலவரின் பெயர் பாலைக் கவுதமனார். அவர் வேண்டுகோளின் பேரில் சேர மன்னன் 10 யாகங்களைச் செய்து முடித்தவுடன் இந்த அதிசயம் நடந்தது.(காண்க: செல்வக் கடுங் கோ வாழியாதனைப் பாலைகவுதமனார் பாடிய மூன்றாம் பத்து– பதிற்றுப் பத்து)

வேளிர் என்னும் குறுநில மன்னர்கள் தாங்கள் யாகத் தீயிலிருந்து உதித்ததாகக் கூறுகின்றனர். பஞ்ச பாண்டவர் மனைவியான திரவுபதி இப்படி யாகத்தீயில் உருவானவர். பல ராஜஸ்தானியர்கள் ,குஜராத்திகள், பஞ்சாபியர் ஆகீயோரும் இப்படிக் கூறுவது வியப்பான ஒற்றுமையாகும். கபிலரும் கூட இதே செய்தியைக் கூறுகிறார் (புறம் 201).

கரிகால் சோழன் வேத நெறி தவறாது ஆண்டவன். 2000 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட இவன் சோழ மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவன். இவன் பருந்து வடிவ யாக குண்டம் அமைத்து அதில் யூபம் (கம்பம்) நட்டான் என்று புறநானூற்றுப் புலவர் பாடுகிறார்.

தூவியற் கொள்கை துகளறு மகளிரொடு

பருதி உருவிற் பல்படைப் புரிசை

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்

வேத வேள்வி தொழில் முடித்த தூஉம்

புறம் 224 (கருங் குழலாதனார்)

 

கரிகாலனின் எல்லா மனைவியரும் அப்போது உடன் இருந்தனர். மனைவி உடன் இல்லாமல் வேள்வி செய்ய முடியாது. அவர்களை வேள்விக் கிழத்தியர் என்றே தமிழ் நூல்கள் கூறும்.

1008 அல்லது 10008 செங்கற்களை சுத்தி செய்து மந்திரம் கூறி ஒவ்வொரு செங்கல்லாக அடுக்குவர். சமீபத்தில் கேரளத்தில் கழுகு வடிவ யாக குண்டம் அமைத்து பெரிய யாகம் செய்தனர். கலிபோர்னியா பலகலைக் கழக ஆசிரியரகள், அறிவியல் வல்லுனர்கள் புடைசூழ இந்த யாகம் நிறைவேறியது.

தமிழ் மன்னர்கள் வேத நெறியை தங்கள் வாழ்வியல் நெறியாகக் கொண்டனர். காஞ்சி மகா சுவாமிகளும் தனது உரையில் வேதம், யாகம், பிராமணர்கள் ஆகியவற்றுக்கு சங்க காலத்தில் வழங்கும் தமிழ் சொற்களைப் பார்க்கையில் இந்தப் பண்பாடு எவ்வளவு காலத்துக்கு முன் எவ்வளவு ஆழ வேரூன்றியிருக்க வேண்டும் என்கிறார்.

வெளி நாட்டுக் காமாலைக் கண்ணர்கள் பொய்யான ஆரிய திராவிட வாதத்தை அவர்களுடைய மதத்தைப் புகுத்த நம் முன் வைத்ததால் நாம் மதி மயங்கிக் குழம்பிவிட்டோம்.

கல்யாண மந்திரங்களில் சப்தபதி என்னும் ஏழடி நடக்கும் மந்திரம் முக்கியமான மந்திரமாகும். மணப் பெண்ணும் மண மகனும் கையைப் பிடித்துக் கொண்டு தீயை வலம் வருவார்கள். இந்த மந்திரங்களின் அர்த்தம் தமிழ் திரைப் பட காதல் பாடல்களை எல்லாம் மிஞ்சிவிடும். கண்ணகியும் கோவலனும் தீயை வலம் வந்து ஐயர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டதை சிலப்பதிகாரம் பத்திரிக்கை நிருபர் தோற்றுப் போகும் அளவுக்கு அழகாக வருணிக்கிறது.

ஏழடிகள் ஒருவருடன் நடந்து சென்றால் பந்தமும் பாசமும் உறுதி பெற்றுவிடும் என்று ரிக்வேதம் சொல்லுகிறது. கரிகாலன் தன்னைப் பார்க்க வந்தவர்களை வழி அனுப்புகையில் வேத நெறிப்படி ஏழு அடிகள் கூடவே நடந்து சென்று வழி அனுப்புவானாம்.

 

பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்

காலின் ஏழடிப் பின் சென்று கோலின்

தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு

–பொருநர் ஆற்றுப்படை வரிகள் 165-167

 

மதுரைக் காஞ்சி எழுதிய மாங்குடிக் கிழார் இன்னும் ஒரு அதிசிய விஷயத்தைச் சொல்லுகிறார். மற்ற எல்லா நாட்டு மன்னர்களும் சேவல் கூவும் சத்தத்தைக் கேட்டு எழுந்திருப்பான். அனால் மதுரைப் பாண்டிய மன்னனோவெனில் ஐயர்கள் முழங்கும் வேத ஒலியைக் கேட்டு எழுந்திருப்பான் என்று.

சிறுபாண் ஆற்றுப் படை எழுதிய புலவர் இன்னும் ஒரு வியப்பான விஷயத்தைச் சொல்லுகிறார். பிராமணர்கள், பாணர்கள் போன்றோர் நல்லியக்கோடன் அரண்மனையில் 24 மணி நேரமும் அனுமதியின்றி உள்ளே போகலாம் என்கிறார்.

 

பொருனர்க் காயினும் புலவர்க் காயினும்

அருமறை நாவின் அந்தணர்க்காயினும்

அடையா வாயில் (சிறு பாண்—வரிகள் 203-206)

 

பாண்டிய மன்னர்களில் மிகவும் பழைய மன்னர்களில் ஒருவன் முதுகுடுமிப் பெருவழுதி. அவனுக்கு அடைமொழியே பல் யாக சாலை முது குடுமிப் பெரு வழுதி என்பதாகும். நாடு முழுதும் யாகத் தூண்கள் இருக்குமாம் (புறம் 6,15). அவன் தலை தாழ்வது இரண்டே முறைதானாம். ஒன்று சிவன் கோவிலில், இரண்டு நாலு வேதம் படித்த அந்தணர் முன்பு (புறம் 6).

அவ்வையாருக்கு ஒரே மகிழ்ச்சி. ஏன் தெரியுமா? உலகில் 1500 ஆண்டுகளுக்குக் குடுமி பிடிச் சண்டை போட்ட ஒரே இனம் தமிழ் இனம் தான். உள் சண்டையினாலேயே அழிந்த ஒரே இனம் என்ற பெருமை உடைத்து. அப்பேற்பட்ட மூன்று தமிழ் மன்னர்களும் ஒரே மேடையில் வீற்றிருந்ததைப் பார்தவுடன் அவ்வைப் பாட்டிப் பூரித்துப் போய்விட்டார். எப்போது தெரியுமா? சோழ மன்னன் பெரு நற் கிள்ளி ராஜசூய யாகம் செய்தபோது –ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களை விட நீங்கள் நிறைய நாட்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று பாடினார் (புறம் 367)

அப்போது பெருநற் கிள்ளியுடன் சேரமான் மாரி வெண்கோவும் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர்.

ஒவ்வொரு மன்னனும் என்ன யாகம் செய்தான் என்பதை தொல்பொருட்துறை அறிஞரும் வரலாற்று நிபுணருமான டாக்டர் நாகசாமி அவர்கள் கல்வெட்டு இலக்கியச் சான்றுகளுடன் யாவரும் கேளிர் என்னும் அவரது நூலில் பட்டியல் இட்டிருக்கிறார். ஒவ்வொரு மன்னரின் கோத்திரம் என்ன என்பதையும் செப்பேட்டுச் சான்றுகளுடன் எழுதி இருக்கிறார். சிம்மவர்மன் என்ற பல்லவ மன்னன் பத்து அஸ்வமேத யாகங்களைச் செய்ததாக சிவன் வாயில் கல்வெட்டு கூறுகிறது.

 

புதிய விஷயம்: அஸ்வமேத பாண்டியன்

குப்தர்கள் அஸ்வமேத யாகம் செய்தவுடன் குதிரைப் படத்துடன் தங்க நாணயங்களை வெளியிட்டார்கள். அப்படி தமிழ் மன்னர்களின் தங்க நாணயம் கிடைக்க வில்லை. ஆனால் ஒரு பாண்டிய மன்னனின் செப்பு நாணயம் குதிரைப் படத்துடன் கிடைத்துள்ளது. இது முதுகுடுமிப் பெருவழுதியாக இருக்கலாம். ஏனெனில் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த உலகின் மாபெரும் கவிஞர்களில் ஒருவரான காளிதாசன் அவனது ரகுவம்ச காவியத்தில் பாண்டிய மன்னர்கள் அவப்ருத ஸ்நானத்தால் நனைந்ததாக எழுதி இருக்கிறார். அவரது காலத்தில் வாழ்ந்த முதுகுடுமிப் பெருவழுதியையே இது குறிக்கிறது. யாகம் செய்யும்போது குளிப்பதை அவப்ருத ஸ்நானம் என்று அழைப்பர். காளிதாசனின் காலம் கி.மு முதல் நூற்றாண்டு என்பதற்கு சங்கத் தமிழில் 200க்கும் மேலான சான்றுகள் இருக்கின்றன. (இதை எனது காளிதாசனின் காலம் என்ற கட்டுரையில் காண்க).

‘பொய்யா நாவிற் புகழ்’ உடைய கபிலர் தரும் இன்னொரு வியப்பான தகவல் (புறம்122): மலையமான் திருமுடிக்காரியின் நாட்டை யாரும் வெல்லவும் முடியாது, படை எடுக்கவும் முடியாதாம். ஏனேனில் நாடு முழுதையும் அவன் ஏற்கனவே அந்தணர்க்கு தானமாகக் கொடுத்துவிட்டானாம்!

 

கடல் கொளப்படா அது, உடலுநர் ஊக்கார்,

கழல் புனை திருந்து அடிக் காரி! நின் நாடே;

அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே;( புறம் 122—கபிலர்)

 

வேதங்களை ஏற்றுப் போற்றும் தமிழ் இலக்கியங்கள் என்ற நூலில் திரு கே சி இலக்குமிநாராயணன் , ஒரு கலைக் களஞ்சியம் கொள்ளும் அளவுக்கு தகவல்கள் தந்துள்ளார் என்பதையும் இங்கே குறிப்பது பொருத்தமாக இருக்கும்.

***********************

அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

 

(கேள்விகள் கற்பனை, பதில்கள் திருப்புகழ் பாடல்களிலிருந்து; —ச. சுவாமிநாதன்)

அன்பரே, வணக்கம். நீர் ஒவ்வொரு திருப்புகழிலும் முருகப் பெருமானை வெவ்வேறு விதமாக வேண்டுவது என்ன?

 

“வாராய் மனக் கவலை தீராய் நினைத் தொழுது

வாரேன் எனக்கெதிர் முன் வரவேணும்”

“இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன்னோடி வரவேணும்”

“உன் புகழே பாடி நான் இனி

அன்புடன் ஆசார பூசை செய்து

உய்ந்திட வீணால் படாது அருள் புரிவாயே”

“அறிவாகமும் பெருக இடரானதும் தொலைய

அருள் ஞான இன்பமது புரிவாயே”

 

நீங்கள் இந்துஸ்தானி உருது மொழி சொற்களைக் கூட

பயன்படுத்த அஞ்சுவதில்லையாமே?

அவமாயை கொண்டு உலகில் விருதா அலைந்து உழலும்

அடியேனை அஞ்சல் என வரவேணும்”

நீங்கள் ஒரு மருத்துவரா?அழகாக எல்லா வியாதிகள் பெயர்களையும் பாடலில் அடுக்கி விட்டீர்களே?

“ இருமலும் ரோக முயலகன் வாத

எரிகுண நாசி        விடமே நீ

நீரிழிவு விடாத தலை வலி சோகை

எழு கள மாலை         இவையோடே

பெரு வயிறு ஈளை எரி குலை சூலை

பெரு வலி வேறு உள நோய்கள்

 

சரி தேனினும் இனிய தமிழ் பற்றி என்ன பாடினீர்கள்?

இரவு பகல் பல காலும் இயல் இசை முத்தமிழ் கூறித்

திரம் அதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே”

“அரு மறை தமிழ் நூல் அடைவே

தெரிந்துரைக்கும் புலவோனே”

“வளமொடு செந்தமிழ் உரை செய அன்பரும்

மகிழ வரங்களும் அருள்வாயே”

 

நான் காவி உடை அணிந்து ஒரு மடத்தில் சேரலாம் என்று யோசித்து வருகிறேன். உங்கள் அறிவுரை என்ன? –மழித்தலும் நீட்டலும் வேண்டா என்று வள்ளுவர் கூறுகிறாரே.

காவி உடுத்தும் தாழ் சடை வைத்தும்

காடுகள் புக்கும் தடுமாறிக்

காய் கனி துய்த்தும் காயம் ஒறுத்தும்

காசினி முற்றும் திரியாதே.

 

அதிசயம் அநேகமுற்ற பழனி மலை” என்று ஒரு அடை மொழி போட்டீர்கள். அங்கே என்ன அதிசயம் இருக்கிறது?

செபமாலை தந்த சற்குணநாதா

திரு ஆவினன் குடி பெருமாளே.

 

ஓஹோ, அங்குதான் முருகன் உங்கள் கையில் உமக்கு சபமாலை தந்தாரா? நீர் அதிர்ஷ்ட சாலிதான். திருப்புகழைப் பழித்தால்………..

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்

 

ஒரு பாட்டில் நேர்மையில்லாதோர் யார் யார் என்று நீங்கள் சொன்னதாக ஞாபகம்?

“பஞ்ச பாதகன் பாவி மூடன் வெகு

வஞ்ச லோபியன் சூது கொலைகாரன்

பண்கொளாதவன் பாவ கடல் ஊடு நுழை பவுஷாசை

பங்கன் மோதியம் பாழ் நரகில் வீணின் விழ

பெண்டிர், வீடு பொன் தேடி நொடி மீதில் மறை

பஞ்ச மாமலம் பாசமொடு கூடி வெகு சதிகாரர்”

முலை குலுக்கிகள் கபடிகள் வடி புழுக்கைகள் அசடிகள்

முறை மசக்கிகள் திருடிகள் மத வேணூல்

மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள் தகு நகை

முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ்

கலை நெகிழ்த்திகள் இளைஞர்கள் பொருள் பறித்த மளியின் மிசை

கனி இதழ்ச் சுருள் ஒரு பாதி”

 

அப்பப்பா, திருப்புகழில் இப்படி வசை மாரி இருக்கும் என்று யாரும் எண்ணிக் கூட பார்க்கமாட்டார்கள்.

முருகனைத் திட்டினாலும் தமிழில் திட்டினால் பலன் உண்டாமே?

தமிழால் வைதாரையும் வாழவைப்பவன் (கந்தர் அலங்காரம் 22)

 

திருஞான சம்பந்தரைப் பல பாடல்களில் புகழ்ந்துள்ளீர்களே?

கதிர்காம திருப்புகழில் அவரை முருகன் என்றும் கூறீனீர்களா?

“வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே”

 “புமியதனிற் ப்ரபுவான

புகலியில் வித்தகர் போல

அமிர்த கவித் தொடை பாட

அடிமைதனக்கு அருள்வாயே”

 

குழந்தைச் செல்வம் பெற ஒரு திருப்புகழ் இருக்கிறதாமே. முதல் சில அடிகளை மட்டும் சொல்லுங்களேன்

செகமாயை உற்றென் அகவாழ்வில் வைத்த

திரு மாது கெர்ப்பம் உடலூறித்

தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில்

திரமாய் அளித்த பொருளாகி

 

கடைசியாக ஒரு கேள்வி. தேவியர் பெயர்களை எல்லாம் அடுக்கி ஒரு பாடல் பாடினீர்களா?

குமரி காளி வராகி மகேசுரி

கவுரி மோடி சுராரி நிராபரி

கொடிய சூலி சுடாரணி யாமளி      மகமாயி

குறளுரூப முராரி சகோதரி

உலகதாரி உதாரி பராபரி

குரு பராரி விகாரி நமோகரி         அபிராமி

சமர நீலி புராரி தனாயகி

மலை குமாரி கபாலின னாரணி

சலில மாரி  சிவாய மனோகரி    பரையோகி

சவுரி வீரி முநீர் விட போஜனி

திகிரி மேவுகை யாளி செயாளொரு

சகல வேதமுமாயினை தாய் உமை அருள் பாலா.

 

சந்தக் கவி புலவரே, நன்றி, நன்றி.