எள், தர்ப்பையின் முக்கியத்துவம் என்ன? புராணத்துளிகள் : 3-ம் பாகம் (9166)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9166

Date uploaded in London – –20 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புராணத் துளிகள் இரு பாகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. மிகப் பரந்து விரிந்து கிடக்கும் 18 புராணங்களில் உள்ள சில சிறந்த பகுதிகளைத் தொகுத்துத் தருவதே நமது நோக்கம். அந்த வகையில் மூன்றாம் பாகத் தொகுப்பு இப்போது தொடர்கிறது.

புராணத்துளிகள் மூன்றாம் பாகம் அத்தியாயம் 1 : கட்டுரை எண் 9119 வெளியான தேதி 9-1-2021; அத்தியாயம் 2 கட்டுரை எண் 9123 வெளியான தேதி 9-1-2021

புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 3

ச.நாகராஜன்

7. எள், தர்ப்பையின் முக்கியத்துவம் என்ன?

கருடனை நோக்கி திருமால் கூறுவது : “எள் என்பது எனது வியர்வையிலிருந்து தோன்றியது. ஆகவே அந்த தானியம் மிகவும் பரிசுத்தமானது. எள் இரு வகைப்படும். ஒன்று கறுப்பு நிறமுள்ள எள். இன்னொன்று வெள்ளை நிறமுள்ள எள். இதில் எதை தானங்களோடு சேர்த்துக் கொடுத்தாலும் அது சிறப்புடையதே. சிரார்த்த காலத்தில் கறுப்பு எள்ளைச் சேர்த்தால் பிதிருக்கள் மிகவும் திருப்தி அடைவார்கள். தர்ப்பைப் புல்லானது ஆதியில் ஆகாயத்தில் உருவாயிற்று. அந்த தர்ப்பைப் புல்லின் இரு கோடிகளில் பிரமனும் சிவனும் வாசம் செய்ய நடுவில்  ஸ்ரீ ஹரியானவர் வாசம் செய்கிறார். தர்ப்பை இல்லாமல் சிரார்த்தம் உள்ளிட்ட கர்மங்கள் செய்யலாகாது. பிராமணருக்கும், மந்திரத்திற்கும், தர்ப்பைக்கும், அக்னிக்கும், திருத்துழாய்க்கும் நிர்மால்ய தோஷம் என்பது கிடையாது.

                                              – கருட புராணம்

8. பரீக்ஷித் என்று ஏன் பெயர் ஏற்பட்டது?

ஸ்ரீமத் பாகவம் முதலாம் ஸ்கந்தத்தில் பரீக்ஷித் மஹாராஜாவின் ஜனனம் பற்றிய 12ஆம் அத்தியாயத்தில் வருவது இது.

அந்தணர்கள் பலர் தர்மபுத்திரரைச் சந்தித்து பரீக்ஷித்தின் ஜாதகத்தை ஆராய்ந்து பல விசேஷ பலன்களைக் கூறி விட்டு வெகுமதி பெற்றுத் தம் தம் வீடுகளுக்குச் சென்றனர்.

அந்த அந்தணர்களால் பல்வேறு குணங்கள் எல்லாம் கூறப்பட்ட உத்தரையின் புதல்வன், பரீக்ஷித் என்று உலகில் புகழ் பெற்றான், ஏனெனில், திறமையெல்லாம் அமைந்த பிரபுவாகிய அவன், தாய் வயிற்றில் இருக்கும் போது, தான் கண்ட பரம புருஷனை (ஸ்ரீ  கிருஷ்ணரை) தியானம் செய்து கொண்டு இவ்வுலகத்தில் மனிதர்களுக்குள்  அந்த பரம புருஷன் இருக்கிறானா என்று தேடிக் கொண்டே இருந்தான். அங்ஙனம் தேடிப் பார்த்து  ஸ்ரீ கிருஷ்ணரே அந்த பரம புருஷன் என்று நிச்சயித்தான். ஆகவே இவன் பரீக்ஷித் என்று உலகமெங்கும் புகழ் பெற்றான்,

(அதாவது தான் கருப்பையில் இருக்கும் போது கண்ட புருஷன் எவனாய் இருப்பான் என்று பரீக்ஷை செய்து கொண்டே இருந்ததால் அவன் பரீக்ஷித் என்ற பெயரைப் பெற்றான் என்பது பெறப்படுகிறது.)

9) திருதராஷ்டிரனுக்கு விதுரன் கூறிய இறுதி அறிவுரை என்ன?

ஸ்ரீமத் பாகவதம் முதலாம் ஸ்கந்தத்தில் 13ஆம் அத்தியாயத்தில் வருவது இது.

விதுரன் ஹஸ்தினாபுரத்திற்கு வந்து திருதராஷ்டிரனுக்குக் கூறிய இறுதி அறிவுரை :-

“ராஜனே! இந்த இடத்திலிருந்து சீக்கிரம் நீர் புறப்படுவீராக. நமக்குச் சமீபத்தில் நெருங்கி வந்திருக்கும் பயத்தைப் பற்றி ஆலோசிப்பீராக. எவ்வகைக் காரணத்தினாலும் எப்பொழுதும் எதற்குத் தடை செய்ய முடியாதோ அப்படிப்பட்டதும், பகவானுடைய ஆக்ஞைப்படி மாறாமல் நடப்பதும் ஆகிய மரண காலம் நம் எல்லோருக்கும் இதோ சமீபத்து வந்திருக்கிறது. இதோ, தோன்றுகின்ற உயிர்கள் எல்லாம் மரண காலம் நெருங்கி வரப் பெறின் மிகுதியும் பிரியத்திற்குரிய உயிரை விட்டுப் பிரிந்து போகப் பெறுமென்றால், உயிரைத் தொடர்ந்து மற்ற செல்வம் உள்ளிட்ட அனைத்தும் விடுபட்டுவிடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அப்படிப்பட்ட காலம் நமக்கு இப்போது வெகு அருகில் வந்துள்ளது. உமது தந்தை, உமது உடன் தோன்றல், நண்பர்கள், புதல்வர்கள் ஆகிய இவ்வனைவரும் மரணம் அடைந்தார்கள். வாலிப வயதும் போய் விட்டது. சரீரமும், கிழத்தனத்தால் மூடப்பெற்று விட்டது. ஆயினும் உயிர் வாழ்வதற்காக எதிரியின் வீட்டை அடுத்திருக்கின்றீர்! ஆ! என்ன ஆச்சரியம் இது!! உயிர்களுக்கு உயிர் வாழ வேண்டும் என்ற  விருப்பம் மென் மேலும் எல்லையில்லாமல் வளர்ந்து வரும் தன்மையது. நீர் அந்த ஆசையினால் அல்லவோ, பீமன் அவமதித்துக் கொடுத்த பிண்டத்தையும் வாங்கிப் புசித்து விட்டு, வீட்டைக் காக்கும் நாய் போல விழுந்து கிடக்கிறீர்!̀…

எவன் ஒருவன் தன் புத்தியினால் இந்த சம்சாரத்தின் மீது வைராக்கியம் உண்டாகப் பெற்று இந்திரியங்களை ஜெயித்து தன்னையே பற்றி இருப்பவரது சம்சார பந்தத்தைப் போக்கும் தன்மையுள்ள பகவானை மனதில் நிலை நிறுத்திக் கொண்டு பிள்ளை, பெண்டிரது வீட்டை விட்டுப் போவானோ அவனே மனிதர்களுள் சிறந்தவன். ஆகவே, நீர் வடதிசையை நோக்கிச் செல்வீராக!”

***

tags– எள், தர்ப்பை, புராணத்துளிகள்

இந்துக்களின் அதி நவீன, அதி பயங்கர ஆயுதங்கள்!

D-128

Written by London swaminathan

Research Article no. 1705; dated 10 March 2015

uploaded at  காலை 11-10  London time லண்டன் நேரம்

கர தூஷணர்கள் என்னும் ஏழு கோடி அவுணர்களை ஸ்ரீ ராமர் அம்புகளின் மூலம் எளிதில் கொன்றார். ஆனால் ஏன் ராவணனை அப்படிக் கொல்ல முடியவில்லை?

 

அர்ஜுனன், துரியோதனன் போன்றோருக்கு ரஹசிய ஆயுதக் கலையைச் சொல்லிக் கொடுத்த துரோணர், அதை ஏன் ஏகலைவனுக்கு சொல்லிக் கொடுக்க மறுத்தார்?

 

பிரம்மாஸ்திரம் போன்ற அஸ்திரங்களை ஏன் “ஒரே ஒரு முறை” மட்டும் பிரயோகிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டது?

இவை எல்லாவற்றிற்கும் ஒரே விடைதான்.

பழங்கால இந்துக்களிடம் ஒலி (சப்த) ஆயுதங்கள் இருந்தன. அவை அதிர்வு அலைகளைப் பரப்பி, பிரம்மாண்டமான அழிவுகளை உண்டாக்கும். இதை இன்னும் மேலை நாடுகள் கண்டு பிடிக்கவில்லை. எதிர்காலத்தில் கண்டுபிடிக்கக் கூடும். நம்  நாட்டில் அந்தக் கலை அறவே மறைந்துவிட்டது. இவைகளை மிக, மிக அரிதாகவே பயன்படுத்துவர்.

தர்ப்பைப் புல், தண்ணீர், மந்திர சக்தி மூன்றையும் இணத்து அவர்கள் செயற்கரிய செயல்களைச் செய்தனர். வரம் கொடுத்தனர், சாபம் கொடுத்தனர், அஸ்திரங்களைப் பிரயோகித்தனர்.

தற்போது இந்தியா உள்பட உலகில் ஏழு நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால் அவைகளை எல்லா யுத்தங்களிலும் பிரயோகிப்பதில்லை. இதுவரை அமெரிக்கா மட்டும் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுகளைப் போட்டு பல்லாயிரக் கணக்கான மக்களை ஒரே நொடியில் கொன்றது. இந்தியப் பிரதமர், அமெரிக்க- ரஷிய ஜனாதிபதிகள் ஆகியோரிடம் அணுகுண்டு உபயோகிக்கும் ரகசிய சங்கேதச் சொல் – கோட் – உள்ளது. இது போல துரோணர், கிருபர் ஆகியோரிடம் இருந்த ‘பாஸ்வோர்ட்’ – அர்ஜுனன், கர்ணன் போன்றோருக்கு மட்டுமே தெரியும். எப்படி இந்திய—அமெரிக்க—ரஷிய அதிபர்கள் இதை அரிதாகவே பயன்படுத்துவார்களோ அதே போலத்தான் அக்காலத்திலும் அஸ்திரங்களை அரிதாகப் பயன்படுத்தினர்.

தற்காலத்தில் புற்றுநோயைக் கொல்லும் அரிய அணுசக்தி ஐசடோப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை உடலுக்குள் செலுத்தப்பட்டவுடன், புற்று நோய் செல்களை மட்டும் தாக்கி அழிக்கும். நல்ல செல்களை விட்டுவிடும். இதே போல இந்துக்களின் ஒலி ஆயுதங்கள், யார் மீது எய்யப்படுகிறதோ அவர்களை மட்டும் கொல்லும். ஆயினும் இவைகள் பேரழிவையும், பக்க விளைவு களையும் ஏற்படுத்தும் என்பதால் முதலிலேயே சத்தியம் வாங்கி விடுவார்கள்  — “ஒரே முறைதான் பிரயோகிப்பேன்” என்று.

அணுசக்திக்கு நல்ல, கெட்ட உபயோகம் இருப்பதைப் போலவே இவைகளுக்கும் நல்ல, கெட்ட பயன்பாடுகள் உண்டு. ஆகையால்தான் இவ்வளவு முன் எச்சரிக்கை.

pavithram

மரப்பாச்சி பொம்மை மர்மம்

பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா? – என்ற ஆங்கிலக் கட்டுரையை லண்டனில் அச்சிட்ட சவுத் இந்தியன் சொசைட்டியின் 2005-ஆம் ஆண்டு மலரில் எழுதி இருந்தேன். அதே கட்டுரையை இந்த பிளாக்-கில் 2011ல் போட்டேன். இதுவரை தினமும் புதுப் புது நேயர்கள் அதைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் உத்திரையின் கருவைக் கூட பிரம்மாஸ்திரம் பாதிக்கும் என்பதை அறிந்து கிருஷ்ண பரமாத்மா காப்பாற்றிய விதத்தையும் எழுதி இருக்கிறேன். இக்காலத்திலும் அணுக்கதிரியக்கத்தில் இருந்து பாதுகாக்க ஈயமும், செஞ்சந்தன மரங்களும் பயன்படுவதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இதனால் இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு செஞ் சந்தன மரக் கட்டைகள் ஏராளமாக ஏற்றூமதியாகின்றன. இதனால்தான் அக்காலத்தில் மரப்பாச்சி என்னும் பொம்மைகளை செஞ் சந்தன மரக் கட்டைகளில் செய்து கொடுத்தார்கள்

அதர்வ வேதத்தில் நிறைய ரஹசியங்கள் இருக்கின்றன. அதில் தர்ப்பை பற்றிய மந்திரங்கள் அவற்றின் சக்தியை விளக்குகின்றன. ஆனால் தர்ப்பை என்பது “டெலிவரி வெஹிக்கிள்” போன்றவை —அதாவது ஆணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வாஹனங்கள் – உண்மையான அணுகுண்டு என்பவை  துரோணர், கிருபர் போன்றோர் மட்டும் அறிந்த அரிய மந்திரங்களாகும். எப்படி இன்று அணு ஆயுத ரஹசியங்களையும், அவற்றுக்கான சங்கேதக் குறியீடுகளையும் ஆட்சியில் உள்ள ஒரு சிலர் மட்டும் ரஹசியமாகப் பாதுகாக்கிறார்களோ அப்படி அக்காலத்தில் ராஜசபையில் உள்ள பெரியோர்கள் மட்டுமே அறிந்து வைத்திருந்தனர். வள்ளுவருக்கும் கூட இவ்விஷயம் தெரியும்:

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு

ஆற்றாதார் இன்னா செயல் – (குறள் 894)

பெரியவர்களுக்கு தீமை செய்வது, எமனை தானே கைதட்டி வா என்று கூப்பிடுவதற்குச் சமம் என்கிறார் வள்ளுவர். அதற்குக் கீழே இன்னும் ஒரு குறளில் ஆட்சியைக் கூடக் கவிழ்க்கும் வல்லமை பெரியோருக்கு உண்டு என்கிறார். ஆனால் பெரியோர்கள் எல்லோரையும் ஆசீர்வாதிபார்களேயன்றி அழிக்க மாட்டார்கள்.

நாட்டில் தர்மம் முற்றிலும் அழியும் ஆபத்து வரும்போது மட்டும், வித்தியாரண்யர், சமர்த்த ராமதாசர் போன்றோர் மந்திர சக்தியுள்ள வாட்களை (பவானி வாள்) கம்பண்ண உடையார், வீர சிவாஜி போன்றோர் கையில் கொடுத்து காரியத்தை நிறைவேற்றுவர். அடுத்த கல்கி அவதாரத்தில் உலகம் வியக்கும் இந்து ஆயுதங்களைக் காணலாம்.

ராமன் கூட இதை ராவணன் விஷயத்தில் பயன்படுத்தவில்லை. ராவணன் வேதம் அறிந்தவன் – முறையான யுத்தம் செய்ய வல்லவன். ஆகையால் ராமனும் கூட அவன் போர்க்களத்தில் நிராயுத பாணியாக ராவணன் நின்றபோது, “இன்று போய் நாளை வா” என்று அனுப்பினன். கரதூஷணர்கள் தர்மயுத்தம் செய்பவர்கள் அல்ல.

ஏகலைவன் ஒரு சாமான்யன். அவனிடம் அணு ஆயுத ரஹசியங்களைச் சொல்ல முடியாது. ரஹசியமாக அறிந்த விஷயங்களையும் கூட அவன் பயன்படுத்த இயலாதவாறு அவனுடைய கட்டைவிரல் வெட்டப்பட்டது. அக்கால மக்கள் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்!

pavitra

அதர்வண  வேத தர்ப்பை மந்திரங்கள்

யத்தே தர்பே ஜரா ம்ருத்யு சதம் வர்ஷசு வர்ம தே

தேனேமம் வர்மிணம் க்ருத்வா சபத்னாஞ்ஜஹி வீர்யை :

 

சதம் தே தர்ப வர்,மணி சஹஸ்ரம் வீர்யா மணிதே

தமஸ்மை விஸ்வே த்வாம் தேவா ஜரஸே பர்தவா அது:

—-அதர்வ.19-30

ஏ தர்ப்பையே! மரணத்தை நீக்கி நீண்ட ஆயுளைத் தருபவன் நீ. எல்லா கவசங்களையும் விட நீ உயர்ந்தவன். உலகில் உள்ள எல்லா ஆயுதங்கலையும் விடச் சிறந்தவன் நீ. அரசனைக் காத்து, அவனது எதிரிகளை வீழ்த்துவாயாக.

ஓ தர்ப்பையே! நீ நூற்றுக் கணக்கான கேடயங்களை உடையாய். ஆயிரக் கணக்கான வழிகளில் சக்த்தியை வெளியிடுக்றாய். நீண்ட காலத்துக்கு அரசனுக்கு ஆயுள் தர பெரியோர்கள் உன்னை அவனிடம் தந்துள்ளனர்.–அதர்வம், 19-31

சதகாண்டோ த்ஸ்ச்யவன: சஹஸ்ரபர்ண உத்திர:

தர்போ ய உக்ர ஔஷதிஸ்தம் தே பந்தாம்யாயுஷே –19-31

ஓ, மனிதனே! நான் (மருத்துவன்) உன் கையில் குஷ புல்லைக் கட்டுகிறேன். இது சக்தி வாய்ந்தது நூற்றுக் கணக்கான தண்டுகளையும், ஆயிரக்கணக்கான இலைகளையும் உடையது. ஏனைய  மூலிகைகளை விட இது வலிமை வாய்ந்தது. உன்னுடை வாழ் நாள் அதிகரிக்கும்.

தர்ப்பைப் புல்லுக்கு ‘குசம்’ என்ற பெயரும் உண்டு. உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதம் முதல் நான்கு வேதங்களிலும் தர்ப்பை வருகிறது. இதை சங்க காலத் தமிழர்களும் பயன்படுத்தியதைப் புறநானூற்றுப் பாடல்கள் காட்டுகின்றன. விழுப் புண் இல்லாமல் மன்னர்கள் இறந்தால் அவர்களை தர்ப்பைப் புல்லின் மீது கிடத்தி வாளால் வெட்டி பின்னர் புதைப்பர்.

தர்ப்பைப் புல் ஆசனங்களில் அமர்ந்து தியானம் செய்வது அபூர்வ சக்திகள் பெற உதவும் . அக்காலத்தில் இந்து மத யோகிகள் மான் தோல், புலித்தோல், தர்ப்பைப் புல் ஆசனங்களைப் பயன்படுத்தினர். இவைகளில் தர்ப்பாசனங்கள்- புறச் சூழலுக்கு தீங்கு பயக்காதவை.

darbha02

பிராமணர்களின் ஆயுதம் !

(இங்கே குறிப்பிடப்படும் பிராமணர்கள் பிறப்பினால் அந்தஸ்து பெற்ற பிராமணர்கள் அல்ல. ஒழுக்கத்தாலும், தபோ சக்தியினாலும் பிராமணத்துவம் எய்தியவர்களே இங்கே பிராMஅனர்கள் எனப்படுவர்)

பிராமண புரோகிதர்கள் கையில் தர்ப்பைக் கட்டுடன் தான் வீட்டை விட்டுப் புறப்படுவர். அஃதன்றி அவர்கள் தொழில் செய்ய முடியாது.

இதோ பிராமணர்களின் சக்தி பற்றி:–

வஜ்ரோ யதா சுரேந்த்ரஸ்ய சூலம் ஹஸ்த ஹரஸ்ய ச

சக்ராயுதம் யதா விஷ்ணோ: ஏவம் விப்ரகரே குச:

இந்திரன் கையில் உள்ள வஜ்ராயுதம், சிவன் கையில் உள்ள சூலாயுதம், விஷ்ணு கையில் உள்ள சக்ராயுதம் ஆகியனவற்றுக்கு எவ்வளவு சக்தி உண்டோ அவ்வளவு சக்தி பிராமணன் கையில் உள்ள தர்ப்பைப் புல்லுக்கு உண்டு

பூதப் பிரேத பிசாசாஸ்ச யே சான்யே  ப்ரம்மராக்ஷசா:

விப்ராங்குலிகுசான் த்ருஷ்ட்வா தூரம் கச்ச அதோ முகா:

பிராமணன் விரலில் உள்ள (விப்ர+அங்குலி+குசான்) தர்ப்பையைப் பார்த்தவுடன் பூதங்கள், ஆவிகள், பிசாசுகள், பிரம்ம ராக்கதர்கள் ஆகியோர் பயந்துகொண்டு தலை குனிந்தவாறு (அதோ முகா:) ஓடிப் போய்விடுவார்கள்!

 

குசபாணி சதா திஷ்டேத் பிராம்மணோ டம்பவர்ஜித:

ச நித்யம் ஹந்தி பாபானி தூல ராசிமிவாநல:

 

கையில் தர்ப்பைப் புல்லுடன் உள்ள பிராம்மணன் அஹம்காரம் இல்லாமல் இருப்பானாகில், அக்னியைக் கண்ட பனி ஒழிவது போல அவன் பாபங்களை அழிப்பான் ( சூரியனைக் கண்ட பனி போல பாவங்கள் மறையும்)

அபவித்ரகர: கஸ்சித் ப்ராம்மணே ய உபஸ்ப்ருசேத்

அபூதந்தஸ்ய தத்சர்வம் பவத்யாசமனம் ததா

சுத்தம் இல்லாத கையை உடையவன் பவித்ரம் அணிந்து தொட்ட மாத்திரத்தில் எல்லாம் புனிதம் ஆகிவிடுகின்றன.

அங்குஷ்டானாமனாமிகாப்யாம் து சின்னம் பைதாமஹம் சிர:

ருத்ரேன து த: காலாத் சமாரப்ய கரோ அசுசி:

 

கட்டை விரலையும் மோதிரவிரலையும் சேர்த்து பிரம்மனின் தலையைக் கொய்த அசுத்தமடைந்த சிவனின் கையும் கையில் தர்ப்பை அணிந்தவுடன் சுத்தமானது.

A23_M51_Pontoon_r13d

பாவனார்த்தம் ததோ ஹஸ்தேகச காஞ்சன தாரணம்

புஞ்சானஸ்து விஷேசேன நான்யதோதேன லிப்யதே

கையில் தங்கத்தையும் தர்ப்பையையும் அணிந்து ஒருவன் எதைச் சாப்பிட்டாலும் அவனை எந்த தோஷமும் பீடிக்காது.

குசானோ உபவிஷ்டஸ்ய சித்யதே யோக உத்தம:

தர்ப்பைபுல் ஆசனத்தில் அமர்ந்தவனுக்கு உத்தமமான யோகங்கள் கிடைக்கின்றன.

ஆதாரம்–தர்ப்பைகளின் பிரசம்ஸை – கோபிலர்

(இந்தக் கட்டுரையை வேறு இடங்களில் பயன் படுத்துவோர் எழுதியோர் பெயர், பிளாக்–கின் பெயர் இல்லாமல் வெளியிடக் கூடாது. வர,வர இலக்கியத் திருடர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மனதுக்கு வேதனை தருகிறது. இத்தகையோர் தமிழையும் இந்து மதத்தையும் அழிக்கப் பிரந்த இராக்கதர்கள் ஆவர். தமிழ்த் தாயும், மும்மூர்த்திகளும் அவர்களைச் சபிப்பர்)

வைரம், தர்ப்பை பற்றி புராணம் என்ன சொல்கிறது?

dharba

Written by S Nagarajan
Post No. 1162; Dated:- 10th July 2014.

This is the seventh part of S Nagarajan’ article on the Puranas. First five parts were published in the past few days.

தர்ப்பம் ஏன் புனிதமானது?

தர்ப்பத்தை மிகவும் புனிதமாகக் கருதுகிறோம். தர்ப்பம் ஏன் புனிதமானது என்பதை ஸ்ரீமத் பாகவதம் விளக்குகிறது.

மன்னனாகிய மனுவின் பட்டணம் பர்ஹிஷ்மதி என்ற பெயர் பூண்டு புகழ் பெற்றது. அந்நகரம் அனைத்து ஸம்பத்துகளினாலும் நிறைந்திருக்கும். யஜ்ஞ ஸ்வரூபியாகிய ஆதி வராஹ பகவான் தன் சரீரத்தை உதறும் காலத்தில் அந்தச் சரீரத்திலுள்ள ரோமங்கள் எந்த இடத்தில் உதிர்ந்தனவோ அந்த இடத்தில் இந்த பர்ஹிஷ்மதி நகரம் உருவானது. அங்ஙனம் உதிர்ந்த ரோமங்களே பச்சை நிறமுடைய தர்ப்பங்களாகவும் நாணல்களாகவும் விளைந்தன. அந்த தர்ப்பங்களாலும் நாணல்களாலும் யஜ்ஞங்களுக்கு விரோதிகளான ராக்ஷஸர்களை அழித்து ரிஷிகள் யஜ்ஞங்களால் பகவானை ஆராதித்தார்கள். ஆகவே தான் அவைகள் பகவானுடைய ஆராதனத்திற்கு உபயோகப்படுகின்றன.

மஹானுபாவனாகிய அந்த மனு சக்கரவர்த்தி பாதாளத்தில் மூழ்கிக் கிடந்த பூமியை இந்த ஆதி வராஹன் மேலே எடுத்து அதைத் தன் சக்தியால் ஜலத்தின் மீது நிலை நிற்கச் செய்த காரணத்தினால் அந்த உதவியை நினைத்து பர்ஹிஸ் என்று கூறப்படுகின்ற தர்ப்பங்களையும் நாணல்களையும் பரப்பி அந்த யஜ்ஞ புருஷனை யாகங்களால் ஆராதித்தான். ஆகவே அந்த நகரம் பர்ஹிஷ்மதி என்று பெயர் பெற்றது.
ஸ்ரீ மைத்ரேயர் விதுரனிடம் கூறியது,
– ஸ்ரீமத் பாகவதம் மூன்றாம் ஸ்கந்தம் 22ஆம் அத்தியாயம்

diamonds

வைரத்தைப் பரிசோதித்த பின்னரே அணிய வேண்டும்?

வைரத்தைச் சேகரிப்பதோ அல்லது அணிவதோ நன்கு பரிசோதித்த பின்னரே வளத்தை விரும்பும் ஒரு மன்னனால் செய்யப்பட வேண்டும்.

அதைப் பற்றிய தொழில்நுட்ப அறிவு உள்ளவரும் அதில் நன்கு பரிச்சயம் உள்ளவரும் ஆகிய ஒருவரே அதன் விலை மற்றும் தரம் பற்றி அறிந்தவராக இருக்கும் தகுதி வாய்ந்தவர் ஆவர்.
நிபுணர்கள் வைரத்தை மிகவும் செல்வாக்கு படைத்தது என்று கூறுகின்றனர். ஆகவே நமது விவரங்களும் வைரம் பற்றிய விவரமான விவரணத்துடன் ஆரம்பிக்கப்படுகிறது.

-கருட புராணம் 68ஆம் அத்தியாயம்

வைரத்தை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை உரைக்கும் அத்தியாயத்தில் வருவது. இதைத் தொடர்ந்து வைரம் கிடைக்கும் இடங்கள், அதன் குணாதிசயங்கள், தரத்தைச் சோதிக்கும் முறைகள் விளக்கப்படுகின்றன.

yanai4

வாஹனம் – 2

ஒவ்வொரு தெய்வத்திற்கும் உள்ள வாஹனம் பற்றிய தொடர்ச்சி:-

ஷீதளா தேவியின் வாஹனம் கழுதை – ஸ்கந்த புராணம் ,ருத்ர
யாமளம்
(ஷீதளா தேவி வட இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் சக்தியின் அம்சம்)
கேதுவின் வாஹனம் புறா (மத்ஸ்ய புராணம் கேதுவின் வாஹனம் ராஜாளி என்று குறிப்பிடுகிறது)
ப்ரம்மாவின் வாஹனம் ஹம்ஸம் – நாரதீய புராணம், ஸ்ரீமத் பாகவதம்
ராகுவின் வாஹனம் புலி
செவ்வாயின் வாஹனம் குதிரை
அக்னியின் வாஹனம் ஆடு – நாரதீய புராணம்
குபேரனின் வாஹனம் நரன் – நாரதீய புராணம் (மனிதனே குபேரனுக்கு வாஹனம். சில நூல்கள் மனிதனின் ஆவி அல்லது ப்ரேதம் என்றும் குறிப்பிடுகின்றன. ஆனால் பொதுவாக அவன் நர வாஹனன் என்றே குறிப்பிடப்படுகிறான்)
சந்திரனின் வாஹனம் மான் – நாரதீய புராணம் (மத்ஸ்ய புராணத்தில் சந்திரனின் வாஹனமாக வெண்குதிரை குறிப்பிடப்படுகிறது)
வருணனின் வாஹனம் மகரம் – விதி மார்க்க ப்ரபா

MERCURY_1991356g

நவ கிரகங்கள்

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், ப்ருஹஸ்பதி, சுக்ரன், சனி, ராகு,கேது ஆகிய இவைகள் உலகத்தினருக்கு இதம் செய்யும் நவ கிரகங்கள்.
-வாமன புராணம்,மார்க்கண்டேய புராணம், நாரத புராணம்,மத்ஸ்ய புராணம்,அக்னி புராணம், விஷ்ணு தர்மோத்தர புராணம், மஹாபாரதம், யாக்ஞவல்ய ஸ்மிருதி,வைகானஸ ஸ்மிருதி சூத்ரம்

சூரியனின் அதி தேவதை – சிவன்
சந்திரனின் அதி தேவதை – பார்வதி
செவ்வாயின் அதி தேவதை – ஸ்கந்தன்
புதனின் அதி தேவதை – விஷ்ணு
குருவின் அதி தேவதை – ப்ரஹ்மா
சுக்ரனின் அதி தேவதை – இந்திரன்
சனியின் அதி தேவதை – யமன்
ராகுவின் அதி தேவதை – பசு அல்லது காலம்
கேதுவின் அதி தேவதை – சித்ரகுப்தன்
-மத்ஸ்ய புராணம்

அழகாபுரியின் வர்ணனை!

குபேரனுடைய பட்டணமான அழகாபுரியைப் பற்றிய ஒரு சிறிய வர்ணனை இது:

ஸ்ரீ மைத்ரேயர் விதுரனிடம் கூறியது:-

அந்த அழகாபுரிக்கு வெளியில், தீர்த்தபாதனான ஸ்ரீ மஹாவிஷ்ணு வின் பாதாரவிந்தங்களில் படிந்ததனால் மிகவும் பரிசுத்தமான நந்தை என்றும் அலக்நந்தை என்றும் இரண்டு நதிகள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

வாராய்! விதுரனே! தேவஸ்தீரிகள் தமது விமானங்களிலிருந்து இறங்கி மன்மத க்ரீடைகளால் இளைப்புற்றவராகி இந்நதிகளுக்கு வந்து தமது காதலர்களை ஜலங்களால் நனைத்துக் கொண்டு ஜலக்ரீடை செய்வார்கள். அந்த தேவ ஸ்த்ரீகள் ஸ்நானம் செய்யும் போது அவர்களது தேகங்களிலிருந்து நழுவிய புதிய குங்குமங்கள் பட்டு, பொன்னிறம் உடையதான இந்நதிகளின் ஜலத்தைக் கண்ட யானைகள் தண்ணீர் குடிக்க வேண்டுமென்னும் விருப்பம் இல்லாதிருப்பினும் அந்த ஜலத்தைத் தாமும் குடித்துத் தமது பெண் யானைகளையும் குடிக்கச் செய்கின்றன. அந்த அழகாபுரியில் வெள்ளியாலும் பொன்னாலும் விலையுயர்ந்த ரத்தினங்களாலும் செய்த பற்பல விமானங்கள் ஆங்காங்கு நிறைந்திருக்கும். புண்ய ஜனங்களும் அவர்களது பெண்மணிகளும் அந்நகரில் உலவிக் கொண்டிருப்பார்கள். அத்தைகையதான அந்த நகரம் மின்னல்களும் மேகங்களும் சூழப்பெற்ற ஆகாயம் போல விளங்கும்.

-ஸ்ரீமத் பாகவதம் நான்காம் ஸ்கந்தம் ஏழாம் அத்தியாயம்

தொடரும்…………………………………………………

pictures are taken from face book and other websites for non commercial use;thanks.

contact swami_48@yahoo.com