தாயுமானவர்! – 1 (Post No.10,496)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,496
Date uploaded in London – – 28 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 27-12-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

தாயுமானவர்! – 1
ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

என்றுமுள செந்தமிழில் அழகிய வேதாந்தக் கருத்துக்களையும் இறைவனின் இயல்புகளையும் அனைவருக்கும் புரியும்படி எளிய இனிய சொற்களால் பாக்களைப் பாடியவர் தாயுமானவர். மாபெரும் வேதாந்தி அவர்.

சோழ நாட்டின் தென் கோடியில் அமைந்துள்ள வேதாரண்யம் என்னும் திருமறைக்காடு தலத்திலே அவர், வேளாளர் குலத்திலே கேடிலியிப்ப பிள்ளை- கெஜவல்லி தம்பதியினருக்குப் பிறந்தார்.
கேடிலியப்ப பிள்ளை சிவத்தல விசாரணைக் கர்த்தராக இருந்தார். அச்சமயம் 1704ஆம் ஆண்டு முதல் 1731 முடிய திருச்சியை ஆண்ட முத்து விஜய ரகுநாத சொக்கலிங்க நாயகர் கேடிலியப்ப பிள்ளையின் அருமை பெருமைகளை அறிந்து அவரைத் தன்னிடம் பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தார். அதை அவரும் ஏற்றார்.

அவருக்கு சிவ சிதம்பரம் என்ற அருமைக் குமரன் பிறந்தான். ஆனால் அந்தக் குமாரனை சந்ததியின்றி இருந்த தனது தமையனாருக்கு சுவீகாரமாகக் கொடுத்து விட்டார்.
தனக்கு ஒரு பிள்ளை இல்லையே என்று வருந்திய அவர் திருச்சி தாயுமானவரை வேண்ட அவர் அருளால் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

குழந்தையின் ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள் வியந்தனர். ஐந்து கிரகங்கள் உச்சமாய் இருப்பதையும் அவை சுப ஹோரையில் இருப்பதையும் கண்ட அவர்கள் தேவாம்சமாகப் பிறந்த இந்தக் குழந்தை உலகை ஆளும் நரேந்திரனாக நிலவும் என்று கூறினர்.

திருச்சி தாயுமானேஸ்வரரின் அருளால் பிறந்த அந்தக் குழந்தைக்கு தாயுமானவர் என்ற பெயர் சூட்டப்பட்டது.
குழந்தை அறிவில் சிறந்து விளங்கியதோடு தமிழையும் வடமொழியையும் கற்றுத் தேர்ந்தது.

தாயுமானவருக்கு இலக்கிய இலக்கணம், இதிஹாஸ புராணம், சிவாகமம், உபநிடதம், பன்னிரு திருமுறை, மெய்கண்ட சாஸ்திரம், அருணகிரிநாதரின் திருப்புகழ் உள்ளிட்ட சகலமும் அத்துபடியாயின.

அரசன், தந்தைக்கு வயதானதையொட்டி மகன் தாயுமானவரை அரசுக் கணக்கராகப் பணி புரிய அழைத்தான். பதினான்கு வயதே ஆன தாயுமானவர் அந்தப் பொறுப்பை ஏற்றார்.

அப்போது ஒரு நாள் அரசவையில் முக்கியமான ஆவணம் ஒன்றை அனைவருக்கும் முன்பாக, இறைவனுடன் இறை தியானத்தில் ஒன்றி இருந்த நிலையில், கசக்கித் தூக்கி எறிந்தார்.
இதைப் பார்த்துத் திடுக்கிட்ட அவையினர் இது அரசனை அவமதித்த செயலாகும் என்று கூறினர்.

ஆனால் அதே சமயத்தில் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோவிலில் அம்பாளின் ஆடையில் நெருப்புப் பிடிக்க, சிவாசாரியர்கள் அதைக் கவனிப்பதற்குள் தாயுமானவர் அங்கே நுழைந்து ஆடையைத் தன் கையால் கசக்கி நெருப்பை அணைத்தார். இதைக் கண்ணுற்ற அவர்கள் அதிசயித்து நடந்ததை மன்னரிடம் தெரிவிக்க அனைவரும் வியப்படைந்தனர். தாயுமானவரின் சக்தியையும் உணர்ந்தனர்.

ஒரு நாள் அவர் அரசனைக் காண்பதற்காக வந்தார். அப்போது அரண்மனையில் புதிய மணல் கொட்டப்பட்டிருந்தது. அதில் தாயுமானவரது காலடிச் சுவடுகள் பதிந்தன. அரசனும் இதர முக்கியஸ்தர்களும் அந்த வழியே வந்த போது அந்தக் காலடிச் சுவடுகளைக் கண்டனர். பத்ம ரேகை படிந்து காணப்பட்ட அந்தச் சுவடுகள் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின.
“யார் இவ்வழியில் வந்தது?” என்று அவர்கள் கேட்க, “தாயுமானவர்” என்று பதில் வந்தது.

உடனே அவரை அழைத்து அது உண்மை தானா என்பதை அவர் காலடிகளுடன் ஒப்பிட்டு அரசன் ஐயம் தீர்ந்தான்.
சங்கப்பாட்டியியலில் கூறப்பட்ட சாமுத்திரிகா லக்ஷணங்கள் இவை:

அகவடி யுகிர்விரல் புறவடி கரடே
கழலே கணைக்கான் முழந்தாள் குறங்கே
கடிதங் கொப்பூழ் வயிறதின் வரையே
யிடையே மயிரி னொழுக்கே முலையுகிர்
விரலே முன் கை யங்கை தோளிணை
கழுத்தே முக நகை செவ்வாய் மூக்குக்
கண்ணே காது புருவ நுதலெனு
மாறைந் துறுப்பு யனிரண்டும் பாதம்

ஆக இப்படி முப்பத்திரண்டு உறுப்புகளும் தெய்வத்தன்மை சிறந்து விளங்க அமைந்திருப்பதை அனைவரும் கண்டு வியந்தனர்.
இதனால் அரசனுக்கு அவர் மேல் பெரு மதிப்பும் மிகுந்த அன்பும் ஏற்பட்டது.

அரசனிடத்தில் கவிஞர், கவி ராயர், கவிச் சக்கரவர்த்தி, பண்டிதர், பாவலர், பாரதி, நாவலர், வித்துவான், மகா வித்துவான் , வித்வ சிரோமணி, புலவர் உள்ளிட்ட பல பட்டங்களைத் தரித்து வருவோரிடம் தாயுமானவர் யதார்த்தமாக வாதம் செய்து அவர்களைத் தோற்க அடிப்பார். பின்னர், “உண்மையைக் காண்பீர்களாக” என்று உரைத்து அவர்களை அனுப்புவார்.

TAMIL FILM ON THAAYUMAANAVAR


**

தொடரும்

TAGS- தாயுமானவர்

ஆனந்த விகடனும் தாயுமானவ கவசமும்!

1947 vikatan

 

Don’t Reblog it for at least a week; don’t use pictures.

 

Article written by S NAGARAJAN

Date: 18th  September 2015

Post No: 2168

Time uploaded in London :– காலை 8-18

(Thanks  for the pictures) 

 

 

.நாகராஜன்

தாயுமானவர், கவசம் ஏதாவது பாடியிருக்கிறாரா என்ன, தெரியாமல் போய் விட்டதே என்று நினைப்பவர்களுக்கு முதலிலேயே சில வார்த்தைகள்.

தாயுமானவர் கவசம் ஒன்றையும் பாடவில்லை; அவரது அருமையான தமிழ்ப் பாக்களையே தாயுமானவ கவசம் என்று இங்கு குறிப்பிடுகிறோம்.

விஷயத்திற்கு வருவோம்.

 

 

சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் அநேகமாக பெரும்பாலான குடும்பங்களில் வாரந்தோறும் ஒரு குறிப்பிட்ட நாளில் தவறாமல் சண்டை நடக்கும்.

சகோதரனுக்கும் சகோதரிக்கும். சகோதரர்கள், சகோதரிகளுக்குள். சில சமயம் குடும்பத் தலைவி, தலைவரும் இதில் பங்கு கொள்வார்கள். கடைசியில்பெரிய தலஒன்று அனைவரையும் சமாதானப் படுத்திபங்கீடுசெய்து வைக்கும்.

 

சண்டைக்குக் காரணம்: வாரம் தோறும் வரும் ஆனந்தவிகடன் பத்திரிகை.

அதை யார் முதலில் படிப்பது என்பதில் தான் சண்டை! சில சமயம் விகடனே கிழிந்து முழிக்கும். இந்த சண்டையைக் கொஞ்சம் ஈடுகட்டபசையுள்ளகுடும்பங்கள் விகடனின் இரண்டு பிரதிகளைக் கூட வாங்கிச் சமாளிக்கப் பார்க்கும்.

 

ஆனந்தவிகடனை 1928 பிப்ரவரியில் பூதூர் வைத்தியநாத ஐயரிடமிருந்து வாங்கி அதன் உரிமையாளராக அதைத் தன் பொறுப்பில் எடுத்தவுடன் வாசன் அவர்கள், பிரிண்ட் செய்த காப்பிகளை சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்று பீச்சில் விற்பாராம். மெல்ல மெல்ல விகடனை தமிழ் மக்களின் உள்ளங்களில் நிலை நிறுத்தினார்.

கல்கி, தேவன், மாலி என ஒரு பிரம்மாண்டமான பட்டாளம் விகடனைத் தூக்கி நிறுத்தியது.

 

ஆனால் தமிழ் மக்கள் மனதில் இது நிரந்தரமான இடத்தைப் பிடித்தது எப்படி?

இந்த மேதைகளின் படைப்புகளுக்கெல்லாம் மேலாக ஒரு கவசத்தை அது அணிந்திருந்ததால் தான்!

தாயுமானவ கவசத்தை அது அணிந்து கொண்டிருந்தது.

 

1928_vikatan

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!

வாசன் அவர்கள் தன் பொறுப்பில் ஆனந்தவிகடனை ஏற்றவுடன் இந்த பராபரக் கண்ணியை விகடனின் குறிக்கோளாக ஆக்கி அதை விகடனில் வெளியிட ஆரம்பித்தார்.

தாயுமானவரின் இந்தஉலக நலப் பாட்டிற்குஈடு இணை ஏதுமில்லை.

 

அனவருக்கும் இன்பம் என்ற அற்புத மந்திரத்தை அது அணிந்து வாரந்தோறும் அதை முகப்பில் ஏந்தி பல்லாயிரக்கணக்கானோருக்குப் பறை சாற்றி வந்ததால் அது தமிழர்களின் நல்ல உள்ளங்களில் இடத்தைப் பிடித்தது.

 

ஆனால் லட்சோபலட்சம் உள்ளங்களில் இடம் பெற்று பெரிய சக்தியாக அது மாறியவுடன் சில வருடங்களுக்கு முன்னர் தீயசக்திகளின் பார்வை அதன் மீது சுயலாபத்திற்காகத் திரும்பியதாக செய்திகள் கசியவே நல்ல உள்ளங்கள் பதைபதைத்தன.

 

பாழாய்ப்போன அந்தப் பாப்பாரப் பத்திரிகைஅனைத்து உள்ளங்களிலும் குடி கொண்டு செல்வாக்கு மிக்க சக்தியாக விளங்கியதைக் கண்ட தீயசக்திகள் அதைலபக்என்று விழுங்கி ஏப்பம் விட்டு முடிந்த அளவு அந்த செல்வாக்கில் கிடைக்கும் ஆதாயத்தைப் பெறத் தீர்மானித்த போது விகடனைக் காப்பாற்றியது எது?

 

தாயுமானவ கவசம் தான்! எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்தவாறே இருந்த போது அந்த எல்லோரிலும் நல்ல உள்ளங்கள் ஏராளம் இருந்தன அல்லவா! அந்த உள்ளங்களின் ஆசீர்வாதம் தொடர்ந்து அதற்கு இருந்து வந்ததல்லவா! அந்த தெய்வ சக்தி தீய சக்திகளைத் துரத்தி விட்டது; விகடன் பிழைத்தது!

விகடனை வாழ வைத்த அந்த தாயுமானவ கவசம் தன்னை அணிந்து கொள்ளும் தமிழர்களையும்  காப்பாற்றும் என்பதில் சந்தேகம் என்ன?

 

 தாயு

திருப்பராய்த்துறை சுவாமி சித்பவானந்தர் தாயுமானவர் பாடல்களை அருமையாகத் தனது நூல்களில் விளக்கியுள்ளார். அவர் நடத்தி வந்த அந்தர்யோகத்திலும் தாயுமானவரின் பாடலின் விளக்கவுரை தவறாமல் இடம் பெறும்.

தாயுமானவரின் சிந்தனை உயரிய சிந்தனை; அதன் அகலமும் நீளமும் ஆழமும் தொடர்ந்து படித்தால் மட்டுமே புரியும்; உணர முடியும். அதன் பயன் எல்லையற்றது!

பொருளில்லா அடுக்கு மொழிகளில் தடுக்கி விழுந்து ஏமாறும் தமிழர்களுக்குப் பொருளுடன் கூடிய அடுக்கு மொழிகள் ஏராளம் தாயுமானவ கவசத்தில் உண்டு.

 

 

லைகடலென ர்ப்பரித்து வரக் கூவும் தமிழர்களுக்கான அடுக்குமொழி இன்றி மைதியுடன் னந்தமாக வாழ வழி கூறும் அடுக்குமொழி தாயுமானவர் பாடல்களில் நிறையவே உண்டு.

 

அவரது பாடல்களில் சில முக்கிய வரிகள் / வார்த்தைகள் இதோ இங்கே: (உத்வேகம் பெற்று அனுதினமும் ஒதிப் பயனடைவதற்காக):-

கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே

மார்க்கண்டர்க்காக மறலி பட்ட பாட்டை உன்னிப் பார்க்கின் அன்பர்க்கென்ன பயம் காண் பராபரமே

 

அன்பர் பணி செய்ய என்னை ஆளக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே

வாக்கும் மனமும் மவுனமுற எந்தை நின்னை நோக்கும் மவுனமிந்த நூல் அறிவில் உண்டாமோ?

நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே

 

அருளால் எவையும் பாரென்றான் அத்தை                                                

யறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன்                                                                         

இருளான பொருள் கண்டதல்லால் கண்ட                                       

வென்னையுங் கண்டிலனென்னேடி தோழி  சங்கர சங்கர சம்பு

வாழி சோபனம் வாழி நல்லன்பர்கள்                                                

சூழ வந்தருள் தோற்றமும் சோபனம்

 

 

அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது எது?

சமயகோடிகள் எல்லாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றது எது?

அது கருத்திற்கிசைந்ததுவே கண்டனவெலாம் மோன உருவெளியதாகவுங் கருதி அஞ்சலி செய்குவாம்!

 

நாதவடிவென்பர் சிலர் விந்துமயமென்பர் சிலர் நட்ட நடுவே இருந்த நாமென்பர் சிலர் உருவமாமென்பர் சிலர் கருதி நாடில் அருள் என்பர் .. இவையால் பாதரசமாய் மனது சஞ்சலப் படுமலாற் பரம சுக நிட்டை பெறுமோ பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே!

ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதினிலே ஆணை செலவே நினைவர்

இந்திரசாலம் கனவு கானல் நீர் என உலகம் எமக்குத் தோன்றச் சந்ததமும் சிற்பரத்தால் அழியாத தற்பரத்தைச் சார்ந்து வாழ்க

 

 

பட்டப் பகல் பொழுதை இருள் என்ற மருளர் தம் பக்ஷமோ என் பக்ஷம்?

பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி

எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவி தான் யாதினும் அரிதரிது காண்

கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்; கற்றும் அறிவில்லாத என் கன்மத்தை என் சொல்வேன்!

பேதித்த சமயமோ ஒன்று சொனபடி ஒன்று பேசாது

 

 

காகமானவை கோடி கூடி நின்றாலும் ஒரு கல்லின் முன் எதிர் நிற்குமோ! கர்மமானவை கோடி முன்னே செய்தாலும்  நின் கருணை ப்ரவாக அருளைத் தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ?

பாகத்தினாற் கவிதைப் பாடிப் படிக்கவோ பத்தி நெறியில்லை வேத பாராயணப் பனுவல் மூவர் செய் பனுவல் அது பகரவோ விசையுமில்லை

 

 

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்; கரடி வெம்புலி வாயையும் கட்டலாம் ; ஒரு சிங்க முதுகின் மேற்கொள்ளலாம்; கட்செவி எடுத்தாட்டலாம்; வெந்தழலிலிரதம் வைத்து ஐந்து உலோகத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்; வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்; விண்ணவரை ஏவல் கொளலாம்; சந்ததமும் இளமையோடிருக்கலாம்; மற்றொரு சரீரத்தினும் புகுதலாம்; சலமேல் நடக்கலாம்; கனல் மேல் இருக்கலாம்; தன் நிகரில் சித்தி பெறலாம்; சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது; சத்தாகி என் சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே! தேஜோமயானந்தமே!!

 

 

எனக்கெனச் செயல் வேறிலைமனத்தகத்துள அழுக்கெலாம் மாற்றி எம்பிரான் நீ நினைத்தது எப்படி அப்படி அருளுதல் நீதம்

 

காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டாகார சிவ,                            

போகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமா                  

ஏக உருவாய்க் கிடக்குதையோ, இன்புற்றிட நாம் இனி எடுத்த                         

தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் செகத்தீரே!

 

*************